பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அதிமுகவினர் மீது ஊழல் புகார் தெரிவிப்பது யாரென்றால் அவர்களேதான்

இப்பொழுதெல்லாம் அதிமுகவினர் மீது ஊழல் புகார் தெரிவிப்பது யாரென்றால் அவர்களேதான் பன்னீர் பழனி கோஷ்டி மீது தினகரன் கோஷ்டியும், தினகரன் மீது இந்த கோஷ்டியும் அள்ளிவிடும் ஊழல் புகார் ஏராளம் இப்பொழுது செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழல்புகார் தெரிவித்துள்ளார் வசமாக சிக்கிய இடத்தில் சிக்ஸர் அடிக்க வந்துவிட்டார் ராமதாஸ் “ஏம்பா நீ அமைச்சர்தானே அந்த ஆளு ஊழல் பண்ணியிருந்தா வழக்கு போடலாமே..” என களத்தில் இறங்கிவிட்டார் டாக்டர் ராமதாஸின் தற்போதைய அசைவுகளை கண்டால் அவர் […]

முருகன் ஒரு தீவிரவாதி…

https://www.facebook.com/100008505849359/videos/1795217550771756/ இந்த வீடியோவினை பார்த்துவிட்டு இன்று திருச்செந்தூரில் முப்பாட்டன் விழா நடத்தும் அங்கிள் சைமனை எதனால் அடிப்பது என நீங்களே முடிவு செய்யுங்கள் நாம் என்ன? அந்த முருகனே இவரை கட்டி வைத்து அடிப்பார். அன்று “தாயோளி” முருகன், இன்று “முப்பாட்டன்” முருகன்.  

மேற்கு ஆசியா சுற்றுபயணம் செல்கின்றார் மோடி…

இம்முறை மேற்கு ஆசியா சுற்றுபயணம் செல்கின்றார் மோடி, பாலஸ்தீனம், ஐக்கிய அரபு மற்றும் ஓமானுக்கு விசிட்டிங். பாலஸ்தீனத்தின் மேற்கு கரைக்கும், ரமல்லாவிற்கும் செல்கின்றார் மோடி, ரமல்லாவில்தான் யாசர் அராபத்தின் தற்காலிக கல்லறை உள்ளது. மோடி அங்கு அஞ்சலி செலுத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியா பாலஸ்தீன் ஆதரவு நிலைப்பாடு எடுத்தபின் மோடி செல்லும் பயணம் என்பதால் இஸ்ரேல் முறைக்கத்தான் செய்யும் பழனிச்சாமிக்கும் பன்னீருக்கும் கைகொடுத்துவிட்டு கலைஞரையும் சந்தித்த மோடிக்கு இதெல்லாம் சாதாரணம் அடுத்து அபுதாபி […]

ராஜிவிற்கு பின் இந்தியா தடுமாறுகின்றது

அண்டை நாட்டில் நடக்கும் விஷயங்களை உள்நாட்டு பிரச்சினை என விடகூடாது, எதிரி நாடுகள் கால்பதித்தால் நாட்டின் பாதுகாப்பு அவ்வளவுதான் கியூபாவில் ரஷ்யா கால்பதிக்க முயன்றபொழுது கென்னடி அப்படி சீறினார், தைவானில் அமெரிக்கா கால்வைக்க முயலும்பொழுதெல்லாம் சீனா சீறும் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா ஏவுகனைகளை நிறுவ முயன்றால் ரஷ்ய எச்சரிக்கை கடுமையாயிருக்கும் இவை எல்லாம் விழிப்பான நாடுகள் செய்வது ராஜிவிற்கு பின் இந்தியா தடுமாறுகின்றது, அதுவும் மோடி மகா தூக்கம் இலங்கை, நேபாளம் என அண்டைநாடுகளின் மீதான இந்திய‌ […]

வாஸந்தியின் “ஜெயலலிதா மனமும் மாயையும்”

ஒரு வழியாக வாஸந்தியின் “ஜெயலலிதா மனமும் மாயையும்” எனும் புத்தகம் வாசித்தாகிவிட்டது புத்தகம் சொல்வது இதுதான், தான் எதிர்பார்த்த எதுவுமே கிடைக்காத வெறுப்பில் இருந்தவருக்கு ராமசந்திரன் நானே சகலமும் என பொறுப்பெடுத்து கொள்கின்றார், ராமசந்திரனின் இரும்பு பிடியில் இருந்து அவர் முதல்வராகும் காலத்தில் தப்பி ஓட நினைக்கும் ஜெயலலிதாவினை அதன் பின்னும் ராமசந்திரன் விடவில்லை வேறுவழியே இன்றி அவரை திருமணம் செய்து அங்கீகாரத்தோடு வாழத்தான் நினைத்திருக்கின்றார் ஜெயா, ஆனால் ராமசந்திரன் பெப்பே காட்ட, இனி இழக்க ஒன்றுமில்லை […]

தமிழகத்தில் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்: ரஜினிகாந்த்

தமிழகத்தில் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்: ரஜினிகாந்த் எது வாடகை வசூலிக்கும் சிஸ்டம்தானே? இந்த நடிகர்கள் கருப்பு பணத்தில் சம்பளம் ரகசியமாக‌ வாங்கும் சிஸ்டத்தை என்ன செய்யலாம்? மிஸ்டர் ரஜினிகாந்த்m மத்திய அரசின் சிஸ்டம் எப்படி இருக்கின்றது என என்றாவது சொல்லியிருக்கின்றீரா?

சூப்பர் பங்காளி..கை கொடுய்யா…..

“பங்கு, சக்ஸஸ் .. அந்த ஜீயர் மறுபடி உண்ணாவிரதம் இருக்காராம், இனி பூரா பயலும் அந்த சண்டைக்கே கருத்து சொல்லிட்டு இருப்பான் இந்த நேரம் பார்த்து ஏதாவது கட்டணம் உயர்த்துறோம் இல்லை எதனையாவது ஏலம் விட்டுட்டு கம்மென்று இருக்கின்றோம் சரியா? சூப்பர் பங்காளி..கை கொடுய்யா. அந்த ஜீயருக்கு அரசின் அண்ணா விருது கொடுத்துரணும்யா”  

திருப்பூர் பக்கம் ஆய்வுக்கு சென்ற ஆளுநருக்கு கருப்புகொடி

திருப்பூர் பக்கம் ஆய்வுக்கு சென்ற ஆளுநருக்கு கருப்புகொடி காட்டி எதிர்ப்பு இந்த ஆளுநருக்கு என்ன சிக்கல்? வேலை இல்லாத சிக்கல் வேறு ஒன்றுமில்லை. ஜெயா இருந்தால் அனுதினமும் அமைச்சர்களை மாற்றி பட்டியலை அனுப்பிகொண்டே இருப்பார், ஆளுநருக்கு வேலை இருந்தது மாற்றபடும் அமைச்சர்கள் பட்டியலுக்கு கையெழுத்திட்டே அக்கால ஆளுநர்கள் களைத்துபோனார்கள். கலைஞர் முதல்வராக‌ இருந்தால் அவர் ஆட்சியினை ஏன் கலைக்கவில்லை என ஜெயா ஆயிரம் கேள்விகளை கேட்டுகொண்டே இருப்பார், மீறி பேசினால் சென்னா ரெட்டி நிலைதான். இதனால் ஜெயாவிற்கு […]

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரதம் சாகும்வரை ஆரம்பித்தார். ..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரதம் சாகும்வரை ஆரம்பித்தார். அந்த மார்கழி புரட்சிபடையினர் மானமுள்ளவர்கள் எனவும், இந்த ஜீயர் உண்ணவோ தண்ணீர் அருந்தவோ விடாமல் அவர் சாகும்வரை கிட்ட இருந்து பார்த்துகொள்வார்கள் எனவும் தமிழகம் வலுவாக நம்புகின்றது அப்படி இடையில் உண்ணாவிரதத்தை நிறுத்தினால் தமிழக மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்கும் நிலை வரும். ஜீயரே, சாகும்வரை உண்ணாவிரதம் என்றால் சங்கரலிங்கனார், திலீபன் , பூபதி அம்மாள் போல முடிக்க வேண்டும் இல்லாவிட்டால் விட மாட்டோம்.

அம்ம‌ணிக்கு கேக் என்றாலே அலர்ஜி போல..

அருவாள் வைத்து ரவுடிகள் கேக் வெட்டும் அளவிற்கு தமிழக நிலமை சென்றுவிட்டது அச்சமாக இருக்கின்றது : தமிழிசை அச்சமாக இருக்கிறது அல்லவா? சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என தமிழக ஆட்சியினை கலைக்க சொல்லுங்கள் பார்க்கலாம். கடப்பாரை எடுத்து மசூதியினை இடிப்பதை பார்த்தபொழுது வராத அச்சம், குஜராத்தில் கர்பிணி பெண்களெல்லாம் கொடூரமாக கொல்லபட்டபொழுது வராத அச்சம் அம்மணிக்கு ரவுடி கேக் வெட்டும்பொழுது வருகின்றதாம் அம்ம‌ணிக்கு கேக் என்றாலே அலர்ஜி போல..