பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆண்டாள்.. மஸ்கோத்து… டிரம்ப்….

திரையுலகை “ஆண்டாள்”, சங்கத்தார் மனதினையும் “ஆண்டாள்”. எமக்கு தெரிந்தது இந்த “ஆண்டாள்” ஒருவர்தான். ஆளுநர் உரை மஸ்கோத் அல்வா போன்றது முக ஸ்டாலின். ஆளுநர் உரை பீமபுஷ்டி அல்வா போன்றது அதிமுக தரப்பு ஆக சட்டசபை பேக்கரி லெவலுக்கு சென்றாயிற்று , இனி வடிவேலுவின் “வீரபாகு பேக்கரி” போல கதைகள் வந்தாலும் ஆச்சரியமில்லை. இந்தியா, ரஷ்யா, சீனா உடன் அமெரிக்கா இணைந்து செயல்படுவது நல்ல விஷயம் – டொனால்ட் டிரம்ப் பின்னே, வடகொரியாவினையே அடக்க முடியவில்லை என்றால் […]

தமிழ்நாடு பொன்விழா கொண்டாட்டம்: சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு பொன்விழா கொண்டாட்டம்: சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு தனி திராவிட நாடு கேட்ட கட்சி திமுக, இதனை குறிவைத்து மொழிவாரி மாநிலமாக தென்னகத்தை குறிப்பாக சென்னை மாகாணத்த்தை குதறிபோட்டது டெல்லி காஷ்மீர் போர், சீனபோர் என இந்தியா கடும் இறுக்கத்தில் இருந்த நேரம், பிரிவினைவாதிகளை களையெடுப்போம் என மிகபெரும் நடவடிக்கைக்கு டெல்லி தயாரானது, இதனால் திமுக “தனிநாட்டு கோரிக்கையினை கைவிடுகின்றோம், ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” சொல்லி தனிநாடு கோரிக்கையினை தள்ளிபோட்டது இல்லையேல் அன்றே திமுக […]

அது எபப்டிங்க ஏத்துக்க முடியும்? இவர் தமிழர்ணு?

தமிழர் சிவன் பிள்ளை இஸ்ரோ தலைவரானார் : செய்தி அது எபப்டிங்க ஏத்துக்க முடியும்? இவர் தமிழர்ணு? ஈழத்துல கொன்று குவிச்சாரா? சக போராளிகளை கொன்றாரா? இந்திய தலைவனை சிதறடித்தாரா? சந்தனமரம் வெட்டினாரா? செம்மரம் வெட்டினாரா?இல்லை கஞ்சா விளைவித்தாரா? யானை தந்தம் எடுத்தாரா? இல்லை கூடங்குளம் மீதேன் க்கு போராடினாரா? இல்லை எம் குல‌ பெண்கலோடு ஜல்லிக்கட்டுக்கு மெரினாவில் ஆடி பாட வந்தாரா? அனிதா சாகும்பொழுது, ஒக்கிபுயல் வீசும்பொழுது எங்கே போனார் இவர்? முப்பாட்டனா? பாட்டனா? சித்தப்பனா? […]

“கொடிகாத்த குமரனை ” போற்றுவோம்

அது வெள்ளையன் சைமன் கமிஷன் எனும் கமிஷனை அமைத்திருந்த 1928ம் ஆண்டு காலம், வெள்ளையன் கமிஷன் என்பது இன்று தமிழக அரசு அமைக்கும் கமிஷனை போன்றதுதான் அன்று இருந்த கொந்தளிப்பை அடக்க இம்மாதிரி கமிஷன்களை வெள்ளையன் அமைப்பான், அப்படி அன்று வந்தது சைமன் கமிஷன் , அதாவது அந்த கமிஷனின் தலைவர் பெயர் ஜாண் சைமன் (நாம் தமிழரின் கமிஷன் சைமன் வேறு) இதனை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடந்தது, ஒருங்கிணைந்த இந்தியாவில் பஞ்சாப் சிங்கம் லாலா […]

அதான் அழுகையா வருது….

“பங்காளி நானும் தற்காலிக முதல்வராகத்தான் அமர்ந்தேன், நீங்களும் தற்காலிக முதல்வராகத்தான் அமர்ந்தீர்கள், இப்போ வரைக்கும் தற்காலிகம்தான் என தினகரன் சொல்லி இப்படி தற்காலிகமாக வந்து பின்பு அழிச்சாட்டியமாக அமர்ந்துவிட்ட நாம், தற்காலிக ஓட்டுநர்களை நியமித்திருக்கின்றோம், இனி அவங்க நாம் இருந்துவிட்டதை போல நிரந்தரமாக இருப்போம் என “தர்ம யுத்தம்” நடத்தினால் என்ன செய்வது? சும்மாவே பணமில்லை நம்ம கதை எத்தனை பேருக்கு முன் உதாரணாகிவிட்டது பார்த்தீர்களா? அதான் அழுகையா வருது”

பழனிச்சாமிக்கோர் மோடி, மோடிக்கோர் டிரம்ப் …

காங்கிரஸ் வெளிநாட்டு தொழிலதிபர்களை இங்கு சம்பாதிக்க விட்ட கட்சி, சொனியா அவர்களின் ஏஜெண்ட் என பலர் சொல்லிகொண்டிருந்தான், அவர்களை எல்லாம் கம்பத்தில் கட்டி வைத்து பாஷா ஸ்டைலில் அடித்து சொல்ல வேண்டிய செய்தி இது அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கு இந்தியரை கழுத்தை பிடித்து வைத்திருக்கின்றார், எப்பொழுது வேண்டுமானாலும் வெளிதள்ளலாம், இதற்கு மேல் அமெரிக்க பொருளை வாங்கு, அமெரிக்கனை வேலைக்கு அமர்த்து என சுதேசி கொள்கையினை ஆங்கிலத்தில் சொல்லிகொண்டிருக்கின்றார் அங்கு அமெரிக்க பொருள் மட்டும் விற்பார்களாம், ஆனால் […]

பொங்கலுக்கு 12ம் தேதி முதல் விடுமுறை

பொங்கலுக்கு 12ம் தேதி முதல் விடுமுறை அப்படியே 17ம் தேதி ராமசந்திரனுக்கு 101 வயது பிறக்கின்றது என அதற்கும் விடுமுறை விடுவார்கள் மழைக்கு விடுமுறை, தேர்தல் வந்தால் விடுமுறை, பொங்கலுக்கும் விடுமுறை அதற்கு முந்தையநாளும் விடுமுறை எப்படிபட்ட நல்ல அரசு இது?. படித்தால் இவர்கள் காலத்தில் அல்லவா தமிழக பள்ளியில் படித்திருக்க வேண்டும்? நல்ல வேளையாக பள்ளி குழந்தைகளுக்கு வோட்டு உரிமை இல்லை, இருந்திருந்தால் பழனிச்சாமி அரசினை அசைத்துகொள்ளவே முடியாது.

ஒருவழியாக பஸ் ஸ்ட்ரைக் முடியபோகுது

ஒருவழியாக பஸ் ஸ்ட்ரைக் முடியபோகுது , இதிலிருந்து நமக்கு என்ன தெரிகின்றது? இனி மருத்துவர்கள் போராட்டம் வந்தாலும், அரைகுறை மருத்துவர்கள், பெயிலான மருத்துவமாணவர்களை வைத்து மக்களுக்கு சிகிச்சை கொடுக்கலாம்” என்பது தெரிகின்றது சூப்பர் ஐடியா பாஸ், புரட்சிதலைவி வாழ்க..”

ஆண்டாள் பாடல் சர்ச்சை வந்தால், “ஐயகோ இந்து மதம் ஆபாசம், இந்து கதைகள் ஆபாசம், ச்சீ எல்லாம் சைத்தானியம்..” என சொல்பவர்களில் பாதிபேர் அழிச்சாட்டிய கிறிஸ்தவர்களாக இருக்கின்றார்கள் ஆனால் பழைய ஏற்பாட்டில் இருக்கும் ஆபாசங்களை மறைக்கின்றார்கள் இவர்களால் அசிங்கம் என சொல்லபடும் ஏகபட்ட ஆபாசங்களும், அசிங்கங்களும் அங்குதான் இருக்கின்றன, அக்கால வாழ்வுமுறை அப்படி இருந்திருக்கின்றது பைபிளில் இருந்தால் விட்டுவிடுவார்களாம், அடுத்த மதத்தில் இருந்தால் பொங்குவார்களாம் அடுத்தவன் மனைவியோடு பெறும் வாரிசு நிலைக்காது, அது சாபக்கேடு என சொல்வது […]

ராஜிவ் கொலை பற்றி புலி கோஷ்டியின் இம்சை

அந்த புலி கோஷ்டியின் இம்சை ஆரம்பித்துவிட்டது, ராஜிவ் கொலை புலிகள் செய்யவில்லை எனும் பொய்யினை என நிறுவ படாத பாடு படுகின்றார்கள் ராஜிவினை கொன்றபின் சிவராசன் ஏன் இலங்கை செல்லாமல் பெங்களூர் சென்றான் என வாதிடுகின்றார்களாம் சிவராசனுக்கும் பொட்டு அம்மானுக்கும் நடந்த வயர்லெஸ் உரையாடல்படி ராஜிவ் கொலையினை உள்ளூர் ஆட்களை வைத்து செய்யவேண்டாம், அவர்களோடு ஒரு தொடர்பும் வேண்டாம், நம் ஆட்களை மட்டுமே வைத்து செய் என்பது சிவராசனுக்கான உத்தரவு ஆனால் அவனுக்கோ அது எளிதாகபடவில்லை, பத்மநாபாவினை […]