பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கதை விடுவதில் கில்லாடி மனுஷ்யபுத்திரர்

  ஒன்றும் அறியாதவர்களிடத்தில் கதை விடுவதில் சிலர் கில்லாடிகள், அதில் மனுஷ்யபுத்திரர் என்பவர் மகா கில்லாடி “ஏய் தேவதாசி முறையினை ஆரம்பித்தது இந்துக்கள், அதனை ஒழித்தது திராவிட இயக்கம்..” என தொடங்கிவிட்டார், வைரமுத்துத்துவிற்கு ஆதரவாம் அதாவது ஒரு சொம்பு இன்னொரு சொம்பிற்கு சொம்பு தூக்கும் தருணம் தேவ தாசிகளின் வரலாறு என்ன? அக்காலத்தில் இந்துக்கள் என்று அல்ல, எல்லா ஆலயங்களிலும் பணி செய்ய பெண்களை சிறுவயதிலே நேர்ந்துவிட்டிருக்கின்றார்கள் யூத வரலாறு அதனை சொல்கின்றது, ஆனால் யூத மரபுபடி […]

தாமரை சின்னத்திற்கு பதிலாக லவுட் ஸ்பீக்கர் சின்னத்தை உடனே கொடுக்க வேண்டும்

இந்து மதத்தையும் அதன் தெய்வங்களையும் திராவிட கழகம் பழித்தது கொஞ்சமல்ல, ராமனை எழுதிவிட்டான் என்பதற்காக அற்புதமான கம்பராமாயணைத்தையே சீண்டியவர்கள் அவர்கள் பக்தி இலக்கியம் நிரம்பிய தமிழ் சங்க இலக்கியங்களை எல்லாம் மறைத்து, குறள் அகநானூறு போன்றவற்றிலே சுற்றிவந்தவர்கள். எதிலெல்லாம் இந்துமதம் இல்லையோ அதனை மட்டும்தான் கையில் எடுப்பார்கள். அப்படி இருந்தால் அதனை புறம் தள்ளுவார்கள் கம்பராமயணம் அவர்களால் அப்படி கொச்சைபடுத்தபட்டது, இன்னும் ஏராள விஷயங்கள் உண்டு இப்பொழுது அதெல்லாம் கடந்தாயிற்று, இப்பொழுது இருக்கும் திமுகவில் அப்படி எல்லாம் […]

வங்கிகளில் கடன்பெற தமிழக அரசு முயற்சி : செய்தி

போக்குவரத்து தொழிலாளர் சிக்கலை தீர்க்க வங்கிகளில் கடன்பெற தமிழக அரசு முயற்சி : செய்தி இதில் ராமசந்திரனுக்கு விழாவாம், ஜெயாவிற்கு ஊரெல்லாம் சிலையாம், வெட்கமாக இல்லை? ஏன் அந்த கொடநாடு எஸ்டேட்டையும், இன்னும் பல ஜெயா சொத்துக்களை விற்றால்தான் என்ன? ஜெயா வீட்டில் கைபற்றபட்ட நகைகள் இன்னும் கன்னட கோர்ட்டில் உண்டு, அவற்றை மீட்டு விற்றால் என்ன? இவர்கள் மேற்கொண்டு கடன் வாங்குவார்களாம், அதில் மக்கள் பணத்திலே வட்டியும் கட்டுவார்களாம் ஏற்கனவே மாநில அரசு கடன் 4 […]

மூடனை பேசவிடாதே பல சர்ச்சைகளை தவிர்க்கலாம் : மேல்நாட்டு பழமொழி

“மூடனை பேசவிடாதே பல சர்ச்சைகளை தவிர்க்கலாம்” என்கிறது மேல்நாட்டு பழமொழி அப்படி இந்த எச்.ராசா என்பவரை அடக்கி வைக்கவேண்டிய அவசியம் சம்பந்தபட்ட தரப்புகளுக்கு இருக்கின்றது, இம்மாதிரி ஆட்களை தவிர்த்தால் அன்றி இங்கு அமைதி சாத்தியமில்லை. ஆண்டாளை பற்றி வைரமுத்து எழுதியது தவறு என அவரே மன்னிப்பும் கேட்டாயிற்று, அதற்காக பேச கூடா வார்த்தைகளை பேசி ராசா தீக்கனைகளை வீசுவது, தமிழகம் ரத்த களறி ஆகவேண்டும் என்ற ஆசையே தவிர வேறு இல்லை விபச்சாரி என்பதன் வரையறை என்ன? […]

இப்பொழுதெல்லாம் புது ஸ்டைல் கிளம்பியிருக்கின்றது

இப்பொழுதெல்லாம் புது ஸ்டைல் கிளம்பியிருக்கின்றது, மன்னர்கள் கட்டிய கோட்டை, அவர்கள் ஆண்ட கோட்டையில் ஏதாவது சிலை இருந்தால் அதனை உடனே இந்துமத அடையாளமாக மாற்றிவிடுவது இப்படி பாலக்காட்டில் இருக்கும் திப்பு கோட்டை அனுமார் கோட்டை ஆகிவிட்டதாம் , காரணம அங்கு சிறிய அனுமார் சிலை இருக்கின்றதாம் இனி பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை ஜக்கம்மா கோட்டை ஆகலாம், இப்படி எல்லா கோட்டையும் சாமி கோட்டைகள் ஆகிவிடலாம் நிஜாம்களும், சுல்தானும் வாழ்ந்த அரண்மனைகளில் சாமி சிலை முளைத்து அவைகளும் அம்மன் […]

கலைஞரை வைகோ சந்தித்துவிட்டாராம்…

கலைஞரை வைகோ சந்தித்துவிட்டாராம், நலம் விசாரித்தாராம் , இதனை எல்லாம் விட சொல்லபட வேண்டிய விஷயம் வைகோ பொடாவில் இருந்தபொழுது கலைஞர் சென்று பார்த்தது அதன் பின்னும் வைகோ ஜெயா பக்கம் இருந்தது இப்படியாக கலைஞர் அணைப்பதும், வைகோ அத்துகொண்டு போவதுமாக இருந்தது. ஒரு கட்டத்தில் வைகோவின் எட்டுகட்டை பேச்சு ஜெயாவின் ரசிப்பால் 9 கட்டை ஆனது பொறுத்து பார்த்த கலைஞர் பேனாவினை எடுத்தார் “ஆங்கோர் காட்சி கண்டேன் அம்மை ஒன்று தொட்டிலாட்டி தாலாட்டு பாடியது  மதிமுக […]

ரஜினியை இலங்கை மொத்தமாக வாழ்த்தியிருக்கின்றது

ரஜினிக்கு உள்நாட்டில் ஆதரவு உண்டோ இல்லையோ, வெளிநாட்டில் இருந்து வாழ்த்துக்கள் குவிகின்றன, இன்று வாழ்த்தியிருப்பவர் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ராஜபக்சே மகன் வாழ்த்தியதை தொடர்ந்து விக்னேஸ்வரனும் வாழ்த்தியிருகின்றார், ஆக இலங்கை மொத்தமாக வாழ்த்தியிருக்கின்றது இப்படி இலங்கை ஒற்றுமையினை ஏற்படுத்திய ரஜினி வாழ்க என சொல்லிவிடலாமா என்றால் அங்குதான் இருக்கின்றது சிக்கல் இந்த விக்னேஸ்வரன் , அந்த சாமியார் பிரேமானந்தாவின் தீவிர சீடர். பிரேமானந்தாவினை விடுதலை செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை எல்லாம் விடுத்து […]

செந்தில் காமெடியினை செய்து கொண்டிருக்கின்றார்கள்

பன்னீரை ஜல்லிகட்டு நாயகன் என அவரின் ஆதரவு எம்.எல்.ஏ புகழ்ந்ததால் சர்ச்சை, என்னை புகழவேண்டாம் என கண்டித்தார் பன்னீர் செல்வம் பஸ் ஓடவில்லை, மாநிலம் ஸ்தம்பித்து கிடக்கின்றது. இவர்களோ கரகாட்டகாரன் செந்தில் காமெடியினை செய்து கொண்டிருக்கின்றார்கள், “நல்லா சொல்லு அந்த தவில்காரன் காதுல விழுறமாதிரி சொல்லுண்ணு 5 ரூவா கொடுத்தார்னே” எனும் அந்த காட்சி நினைவுக்கு வருகின்றது பன்னீர் “ஜல்லிகட்டு நாயகன்” என்றால், அந்த ஜூலி என்ன “ஜல்லிகட்டு நாயகியா”?  

நாம் தமிழர் ரஜினியை விமர்சிப்பது ஏன்?

அண்ணே ரஜினி சினிமாக்காரர் அதனால்தான் நாங்கள் கடுமையாக விமர்சிக்கின்றோம் என்கின்றார்கள் நாம் தமிழர் உங்கள் தலைவன் சீமான் என்ன தொழில் செய்தான் என கேட்டால் ஓடிவிடுகின்றார்கள், பின் திரும்பி வந்து அவர் தமிழருக்கு நல்லது செய்யணும்னு நினைச்சா எங்க கூட வரவேண்டியதானே? ஏன் தனிகட்சி என சொல்லிவிட்டு சிரிக்கின்றார்கள் சினிமாக்காரன் நாட்டை அழித்துவிடுவான் என்கின்றனர் திமுக, அதனை தொடங்கி வைத்ததே திமுகதானே என கேட்டால் நல்ல தலைவனுக்கு கீழ் பிரபல நடிகன் இருப்பது ஒன்றும் தவறில்லை என்கின்றார்கள் […]

தமிழிசை என்பவர் ராஜினாமா செய்யபோவதாக சில செய்திகள் வருகின்றன‌

தமிழிசை என்பவர் ராஜினாமா செய்யபோவதாக சில செய்திகள் வருகின்றன‌ பாஜக தமிழகத்தில் வளரவேண்டுமானால் தனித்துவம் மிக்க தலைவர் மகா அவசியம், மக்கள் அபிமானம் பெற்றோர் மகா அவசியம் இப்போதைய சூழலில் தமிழக பாஜகவின் தலைவாரக மிக பொருத்தமானவர் குஷ்புவினை தவிர யாரும் இருக்க முடியாது அரசியல் என்பது அறத்திற்கு அப்பாற்பட்டது, ஆனானபட்ட திமுகவே காங்கிரசோடு கூட்டணி வைத்த தமிழகம் இது. இதில் குஷ்பு எப்படி பாஜக பக்கம் வரலாம்? எனும் கேள்விக்கே இடமில்லை குஷ்பு பாஜக பக்கம் […]