திருப்பதி உண்டியல் பணத்திற்கு காவலர் எதற்கு? பகவானுக்கு சக்தி இல்லையா? : கனிமொழி
திருச்சியில் கனிமொழி சர்ச்சை பேச்சு பேசியிருக்கின்றார், “திருப்பதி உண்டியல் பணத்திற்கு காவலர் எதற்கு? பகவானுக்கு சக்தி இல்லையா?” என்று பேசியிருக்கின்றார் இதெல்லாம் நிச்சயம் நல்ல பலனை கொண்டுவராது, வெறும் கடவுள் மறுப்பு ஒருவோட்டு கொண்டுவராது என்றுதான் அண்ணாவே ஒன்றே குலம், ஒருவனே தேவன் என ராகத்தை மாற்றினார் கலைஞர் பிராமணர்களை சாடுவாரே அன்றி, இம்மாதிரி விஷயங்களை எல்லாம் கவனமாக கையாள்வார். என்னதான் பகுத்தறிவு பேசினாலும் திருவாரூர் தேரை எல்லாம் பழுதுபார்த்து கொடுத்து சில காரியங்களில் கவனமாக இருப்பார். […]