அட்ட வீரட்டானத் தலங்கள் 2
திருக்கோவிலூர் – பெரியநாயகி சமேத அந்தகாசுவர மூர்த்தி
சிவபெருமானின் அட்ட வீரட்டானத் தலங்களில் இரண்டாம் தலம் திருக்கோவிலூர்.

அந்த தலம் விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றோரம் அமைந்திருக்கும் தலம், அங்கிருக்கும் சிவன் பெயர் அந்தகாசுவர மூர்த்தி
இது தேவாரம் பாடபட்ட தலம், அட்ட வீரட்டானம் எனும் வீரபத்ர ருத்ரகோல சிவனின் இரண்டாம் முக்கியத் தலம், மகா சிறப்பானது.
“கரவலாளர் தம்மனைக் கடைகள் தோறுங் கால்நிமிர்த்
திரவலாழி நெஞ்சமே இனியதெய்த வேண்டில் நீ
குரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர்
விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே. “
என்பது சம்பந்தப்பெருமான் பாடிய வரி.
“பிச்சிலேன் பிறவி தன்னைப் பேதையேன் பிணக்க மென்னுந்
துச்சுளே அழுந்தி வீழ்ந்து துயரமே இடும்பை தன்னுள்
அச்சனாய் ஆதி மூர்த்திக் கன்பனாய் வாழ மாட்டாக்
கொச்சையேன் செய்வ தென்னே கோவல்வீ ரட்ட னீரே”
என்பது அப்பர் வாக்கு.
“வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்
கூழை ஏறுகந் தானிடங் கொண்டதுங் கோவலூர்
தாழையூர் தகட்டூர் தக்களூர் தருமபுரம்
வாழை காய்க் கும்வளர் மருகல் நாட்டு மருகலே.”
என்பது சுந்தரர் வாக்கு.
“கொடிக்குல வும்மதிற் கோவலூர் வீரட்டக் கோளரவம்
பிடிக்கில அம்முடிப் பூணலை யத்தொடு மால்விடையின்
இடிக்குரல் கேட்டிடி என்றிறு கக்கடி வாளெயிற்றால்
கடிக்க லுறும்அஞ்சி நஞ்சம்இருந்தநின் கண்டத்தையே”
என்பது கபிலதேவ முனியின் பாடல்.
இந்த தலமானது அந்தகாசுரன் எனும் அசுரனை சிவன் வதம்செய்து பின் தன்னோடு சேர்த்துகொண்ட மிக முக்கிய புராணத்தின் சாட்சியாக, சிவன் அந்த அந்தகாசுரனை வதம் செய்த இடமாக அறியபட்டு அங்கு இந்த மகா புண்ணிய க்ஷேத்திரம் எழுந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகின்றது.
பொதுவாக விஷ்ணுவும் அம்மனுமே அசுரர்களை வதம் செய்பவர்கள், சிவன் பெரும்பாலும் அப்படி செய்வதில்லை ஆனால் எட்டு இடங்களில் அவர் இப்படி அகங்காரிகளின் அகந்தையினை ஒழித்து அவர்களை தன்னோடு சேர்த்திருக்கின்றார்
அதில் ஒருவன் இந்த அந்தகாசூரன்
இந்த அந்தகாசூரன் கதை லிங்கபுராணத்தில் உண்டு, சிவபுராணத்தில் உண்டு இன்னும் மச்சபுராணம் என பல இடங்களில் உண்டு
இது அப்படியே இன்று வானியல் ஆய்வு சொல்லும் வான்வெளி பிரபஞ்சவெளி அறிவியல் காட்சிக்கு மிக மிக அழகாக பொருந்துதல் இன்னும் சிறப்பு, இந்துக்களின் புராணம் இன்றைய அறிவியல் ஆய்வுகளால் மெய்பிக்கபட்டு அவை எல்லாம் பொய் அல்ல, அவை எல்லாம் கற்பனை அல்ல
என்றோ மிக பெரிய அறிவுடன் வாழ்ந்த இந்துமத ஞானியர் வானியல் நகர்வுகளை, பிரபஞ்ச அதிசயங்களை அதன் இயக்கத்தை புராண கதைகளாக சொன்னார்கள் அதையே லவுகீக தத்துவமாக சொன்னார்கள், அந்த பிரபஞ்ச பெரும் இயக்கத்தை சக்திமிக்க அலைகளாக மாற்றி ஆலயமாக ஸ்தாபித்தார்கள்
அந்தகாசூரன் வரலாற்றை தாங்கி நிற்கும் அந்த திருக்கோவிலூர் வீராட்டான ஆலயம் அதன் பெரும் சாட்சி
இனி அந்த அந்தகார அசுரன் கதையினை பார்க்கலாம்
ஈசன் கண்ணை மூடும்பொதெல்லாம் பிரபஞ்சம் இருளில் மூழ்கும் என்பது இந்துமத சாஸ்திர நம்பிக்கை, பொதுவாக தேவர்கள் இமையா விழிகளை பெற்றிருப்பர். ஒருகணம் கூட கண்மூடாது இந்த பிரபஞ்சத்தை அவர்கள் இயக்குகின்றார்கள் என்பது அதன் பொருள்
அப்படிபட்ட ஈசனின் கண்ணை மூடினால் என்னாகும் என பார்க்க விளையாட்டாக கண்ணை மூட எங்கும் அந்தகார இருள் சூழ்ந்தது, காரிருள் உண்டாயிற்று
அவள் சிலநொடிகள் மூடினாலும் பிரபஞ்சத்துக்கு அது பெரும் நீண்ட வருடம் சில ஆயிரம் வருடம் அந்த காலம் நீடிக்கும், அப்படி பெரும் இருள் சூழ்ந்தது
அந்த இருளை கண்டு பார்வதி அஞ்சினாள், அவள் வியர்வை துளி சிவன் மேல் பட்டு வீழ அதில் இருந்து ஒரு குழந்தை உருவானது, அந்தகாரம் எனும் இருளில் பிறந்த அக்குழந்தை பார்வை இல்லா குழந்தையாக இருந்தது, அதுதான் அந்தகன்
அதே நேரம் இரண்யாட்சசன் எனும் அசுரன் தனக்கொரு வாரிசுவேண்டி சிவனிடம் தவமிருந்துகொண்டிருந்தான்
பார்வதியின் கையினை தட்டிவிட்ட சிவன் கண் திறக்க எல்லாம் வழமையானது, ஆனால் கண் தெரியாததும் பிரபஞ்சம் இருண்டவேளை வந்த குழந்தையுமான அந்தகனை இரண்யாட்சனிடமே கொடுத்தார் சிவன்
சிவன் கொடுத்த குழந்தையின் ரகசியத்தை யாரிடமும் சொல்லாமல் அதனை தன் குழந்தையாக வளர்த்தான் இரண்யாட்சன், இக்குழந்தை வந்தபின் அவனுக்குமோர் குழந்தை கிடைத்தது அதன் பெயர் இரண்யகசிபு
அந்த இரண்யாட்சசன் காலத்துக்கு பின் குருடன் என்பதால் அந்தகனுக்கு பதவி கிடைக்கவில்லை இதனால் மனமுடைந்த அவன் பிரம்மனிடம் தவமிருந்தான்
சாகா வரமும் , பார்வையும் பெரும் அரச பதவியும் கேட்டு தவமிருந்தான், அப்படி தவமிருக்க சொன்னவர் அசுரகுரு சுக்கிராச்சாரி, தவமிருக்க சொன்னவர் வினோதமான வரமும் கேட்க சொன்னார்
அசுரதவம் என்பது உலகறிந்தது, அந்த கடும் தவத்துக்கு இறங்கிவந்த பிரம்மன் அவனுக்கு வரம் அருள முனைந்தான்
சாகாவரம் கேட்டான் அந்தகாசுரன், எல்லா படைப்பும் ஒருநாள் அழியும் அது விதி அதனால் வேறுவரம் கேள் என்றார் பிரம்மன்
எனக்கு பார்வை வேண்டும், அசுர குல அரசு வேண்டும் முக்கியமாக எனக்கான அழிவு நான் என் தாயினை மோகிக்கும் போதுதான் வரவேண்டும், அப்படி என் சிந்தை மாறும்போதுதான் நான் அழிக்கபடவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்
பிரம்மனும் அதற்கு இரங்கி வரம் அருளினான்
இந்த வரம் தந்திரமானது, யாரும் தாய்மேல் ஆசைகொள்ளமாட்டார்கள் அதுவும் அசுரன் இரண்யாட்சனின் மனைவிதான் அந்தகனின் தாயாக அறியபட்டாள் அவளை தெய்வமாக வணங்கியவன் அந்தகன் எனும் வகையில் இந்த சூட்சுமமான தந்திர வரத்தை கேட்க சொன்னார் சுக்கிராச்சாரி
வரம் கிடைத்த அந்தகன் பார்வையும் பலமும் அரசும் பெற்றான், ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினான் மூவுலகை அச்சுறுத்தினான்
தேவர் உலகை கைபற்றினான், அசுர குலத்தை உச்சிக்கு உயர்த்தினான்
தேவர்களை அவன் அடிமைபடுத்தியதில் பிரபஞ்ச இயக்கமே பாதிக்கபட்டது, அந்தகனை அடக்கவேண்டி விஷ்ணுவிடம் அடைக்கலமானார்கள் தேவர்களும் எல்லா உயிர்களும்
விஷ்ணு இந்த அந்த்காசுரனை அழிக்க சிவன் ஒருவராலே முடியும், பிரம்மன் கொடுத்த வரத்தின்படி சிவனே அவனை அழிப்பார் என முடிவு செய்தார்
இதனால் சிவனிடம் சென்றார்கள் முக்கோடி தேவர்கள், சிவன் அவர்களை காக்க முடிவு செய்தார்
பிரம்மன் அவனுக்கு என்னவரம் கொடுத்தார் என்பது சிவனுக்கு தெரியும் என்பதால் பார்வதியும் சிவனும் ஒரு முனிவரும் அவன் மனைவியுமாக மாறி ஒரு கானகம் புகுந்தார்கள்
அந்தகாசுரன் பெரும் யுத்தம் எதிர்பார்த்தான், இந்த தேவர் அசுர சண்டை எக்காலமும் நடக்கும் ஏதோ ஒருவகையில் தேவர்கள் சக்திபெற்றுவருவார்கள் அப்போது சண்டை தொடர பாதுகாப்பான இடம் வேண்டும் என எண்ணினான்
அவனுக்கு அவன் வரத்தின் சக்தி தெரியும், அவனை தேவர்களால் கொல்லமுடியாது என தெரியும், அவன் தாயினை அவன் மோகிப்பதை கனவிலும் நினைப்பதில்லை என்பதால் அவன் கொல்லபட வாய்ப்பே இல்லை என்பதை அறிவான்
ஆனால் அசுரர்கள் படை அழிக்கபடலாம் அவன் ஆட்கள் கொல்லபடலாம் என்பதால் பாதுகாப்பான இடம் ஒன்றை நிர்மானித்தான்
அதை எங்கே நிர்மானித்தான் என்பதுதான் ஆச்சரியம்
அவன் எல்லோரையும் வெற்றிகொண்டதால் தேவலோக சிற்பி மயனும் அவனுக்கு அடிமையானான், அப்படி தன் அடிமையினை கொண்டு செய்தான்
ஆகாயம், மலை என தன் கோட்டையினை அமைக்காமல் நாலுபக்கமும் கடல் சூழ்ந்த இடத்தில் ஒரு மிக சிறிய தீவின் வழியில் வாசலை வைத்து கடலுக்கு அடியில் பிரமாண்ட தங்குமிடத்தை செய்தான்
யாராலும் செல்லமுடியா இடம் அது, அங்கே எந்த படையும் செல்லமுடியாதவாறு காவல் வைத்தான்
இப்படியான பாதுகாப்பில் இருந்து கொண்டு எல்லா உலகையும் தாக்கி யுத்தம் தொடர்ந்தான், அந்நேரம் கானகத்தில் ஒரு அழகிய பெண் இருப்பதையும் அவள் கணவன் முனிவன் என்பதையும் அறிந்த அவன் ஆட்கள் அந்த பேரழகி பற்றி அந்தகாசுரனிடம் தெரிவித்தனர்
அசுரகுணம் என்பது உலகின் எல்லா சிறந்த பொருளும் தனக்கானது எனும் குணம் கொண்டது, பொன் பொருள் ராஜ்ஜியத்தோடு அழகு மங்கையரும் தனக்கே எனும் பேராசை கொண்டது
அந்த குணத்தில் மிகுந்திருந்த அந்தகாசுரன் அழகான தேவலோக பெண்களை சிறைபிடித்திருந்தான், அவனிடம் இந்த பெண்பற்றி சொன்னதும் அவள் உருவை காண விரும்பினான்
தன் ஆட்கள் அவளை கண்டிருந்ததால் அவள் பிம்பம் அவர்கள் மூளையில் பதிந்திருந்தன, அவர்கள் மனகண்களில் அவள் முகம் இருந்தது
அதனை தன்விஷேச சக்தியால் உணர்ந்து அவர்கள் மூளையின் தகவல்களை கிரஹித்து, கண்கள் வழியாக கிரஹித்து அவள் அழகை கண்டவன் அப்படியே மோகத்தில் விழுந்தான்
அவள் தன் தாய் என அவன் அறியவில்லை, அவன் சாபம் அந்த இடத்தில் தொடங்கிற்று அவன் வரம் அவனை கைவிட்டது
தன் பாதுகாப்பான இடத்தில் இருந்து அப்பெண்ணை அபகரித்துவர தன் ஆட்களை அனுப்பினான் ஆனால் முனிவேடத்தில் இருந்த் சிவனின் உக்கிர தாக்குதலில் அவர்கள் தோற்றோட இன்னும் பெரும் தளபதிகளெல்லாம் தோற்றோட ஒரு முனிவன் இப்படி தன்னை அவமதிப்பதா என கர்ஜித்தவன் நேரே யுத்தம் செய்யவந்தான்
முதலில் மிரட்டினான், அற்ப முனிவனுக்கு அழகு மங்கை அவசியமில்லை அவள் தன்னிடம் இருக்கவேண்டியவள் என கொக்கரித்தான் , முனிவர் மறுக்க அவன் தாக்க தொடங்கினான்
ஆனால் முனிவேட சிவன் அவன் படைகளை நொறுக்கினார், அவனை மட்டும் அவன் பெற்ற வரம்படி கொல்லவில்லை , உயிர்பிழைத்தவன் தோற்றோடினான்
பின் பெரும் படையோடு வந்தான், முவுலகையும் கைபற்றியவனுக்கு அப்பெண் இன்னொரு உலகமாய் தெரிந்தாள் அவன் விதி அப்படி முடிவினை நோக்கி இழுத்து சென்றது
அவன் பெரும் சேனையுடன் வரவும் தேவர்கள் சிவனுக்கு துணையாக வந்தனர், யுத்தம் தேவர் அசுரர் சண்டையாக மாறிற்று
போரில் சிவன் முனிவ வேடத்தில் நிற்க அந்தகாசுரனின் படைகள் அடிவாங்கின, அவன் படைகளின் வீரர்கள் செத்துவிழுவதை கண்டவன் சுக்கிராச்சாரியாரை அழைத்து அவர்களை மீண்டும் மீண்டும் உயிர்பிக்க சொன்னான்
அசுரர்கள் அழிய அழிய அருகம்புல்லாக வந்துகொண்டே இருந்தனர், யுத்தம் நீண்டுகொண்டே சென்றது
சிவபெருமான் அவனை திசைதிருப்ப வேண்டி பார்வதியினை சப்தகன்னியரோடு ஒரு குகையில் மறைத்து வைத்து யுத்தம் தொடர்ந்தார்
ஒரு கட்டத்தில் அவன் சாபம் வேலை செய்ய ஆரம்பித்தது, சுக்கிராசாரி இருக்கும் வரை அவன் படைகள் எண்ணிக்கை குறையாது என்பதை அறிந்த இந்திரன் அவர் கொஞ்ச ஓய்வெடுக்கும் நேரம் மதுகொடுத்து உறங்கவைத்துவிட்டான்
அப்படியே அவரை அந்த அந்தகாசூரன் எழுப்பிவிடாதவாறு மறைத்தும் வைத்தனர்
அவரை காணாமல் தவித்தான் அந்தகாசுரன், மறைவாய் அவர் மயங்கி கிடக்கும்போது அசுரபடைகள் அடிவாங்க ஆரம்பித்தன, மறுபடி எழுப்பிவிட சுக்கிராச்சாரி இல்லை என்பதால் அவை வேகமாக சுருங்கதொடங்கின
விரைவாக அந்த பெண்ணை கைபற்றவேண்டும் என கருதியவன், தன் தளபதி விஸ்வன் என்பவனை பார்வதியினை கைபற்ற அனுப்பினான் அந்தகன், அந்த விஸ்வன்
அவன் பாம்பாய் மாறி பார்வதியினை சுற்றி இருந்த சப்தகன்னியரை விழுங்க முனைந்தபோது சிவனின் கனை அவனை அழித்தது
ஒருபக்க அவன் சேனை சுருங்க இன்னொருபக்கம் முக்கிய தளபதியும் வீழ்ந்ததில் அந்தகாரன் பெரும் ஆட்டம் ஆடினான்
அவன் திடீரென சிவனின் முனிவ வேடத்துக்கு மாறினான் இதனால் தேவர்படைகள் குழம்பின, பல வகையான மாயவேடங்களில் மறைவதும் தோன்றுவதுமாக வந்து பெரும் அழிவினை செய்தான்
அவனின் ஆட்டம் ஆரம்பமானதும் சிவனும் ஆரம்பித்தார் அவர் உடலில் இருந்து வீரபத்திரன் ருத்திரன் போன்ற வடிவங்கள் வந்தன
அந்த ருத்திரன் ஆவேசமாக போரிட்டார், போர் கடுமையானது
ஒரு கட்டத்தில் தன் சூலத்தால் அவர் அந்தகாரனை குத்தியதில் அவன் உடலின் ரத்தம் வீழ வீழ பல அந்தகார அசுரர்கள் உருவானார்கள்
அவர்கள் பெரும் போர் புரிந்தார்கள்
சிவன் தன் சக்திகளை பிரித்தார், அதிலிருந்து கபால பைரவரும் காளியும் வந்து அந்த ரத்தம் கீழே விழாதவாறு பார்த்து கொண்டார்கள், அவன் சக்தி பெருக்கம் தடைபட்டது
அவன் மேற்கொண்டு மாயமாக மறையாமல் இருக்க திசைக்கு எட்டாக எட்டு திசையில் எட்டு பைரவர்களை சிவன் உருவாக்கினார்
64 பைரவர்களும் இப்படி காவல் இருக்க வசமாக சிக்கினான் அந்தகாசுரன்
அவனை தன் சூலத்தில் குத்தி தூக்கினார் ருத்திரன், அவன் அப்போது ரத்தம் வழியும் நிலையிலும் சிவனை வேண்டி தொழுதான், சிவநாமத்தை தொடர்ந்து உச்சரித்தான்
தன் வரம் தன்னைவிட்டு அகன்றது எனபதையும், தான் தோல்வியுற்றுகிடப்பதால் அந்த பெண் தன் தாயாக மட்டும் இருக்கமுடியும் என்பதை அறிந்து அங்கே மனம்மாறி அகந்தை அழிந்து பணிந்தான்
சிவனும் அவனை முழுக்க அழிக்காமல் கைலாயத்தில் ஏற்றுகொண்டு அவனுக்கு “பிரிங்கீரிடன்” எனும் பெயரிட்டு தன் பூதகணத்தில் ஒன்றாக சேர்த்துகொண்டார்
இதுதான் அந்தகாசுரனின் சுருக்கமான புராணம்
இங்கு விஞ்ஞானமாக கவனிக்கதக்கது பல விஷயம் உண்டு, இன்றும் பாதுகாப்பான இடம் கடலடி சுரங்கம் என்பதுதான் விஷயம், கடலுக்கு அடியில் சுரங்கம் கட்டினால் எந்த சக்தியாலும் எளிதில் தகர்கமுடியாது என்பது வல்லரசுகள் அறிந்த உண்மை
ஆளில்லா தீவுகளின் கரையடியில் வாசல் வைத்து கடலுக்குள் சுரங்கம் கட்டி அபாய ஆயுதங்களை ஆபத்து காலத்துக்காக பதுக்கி வைப்பது இன்று நடக்கும் காட்சி
இதனை என்றோ சாத்தியம் என சொன்ன மதம் இந்துமதம்
அந்த அந்தகாசுரன் என்பவனை இன்று வானியல் விஞ்ஞானிகள் பெரும் ஆய்வு செய்யும் கருந்துளையோடு கருப்பு துளையோடு ஒப்பிடலாம்
அந்த பிளாக் ஹோல் எனும் அந்த அதிஈர்ப்பு மிக்க துளை, ஒரு நட்சத்திரம் எரிந்து முடிந்தபின் உருவாகும் துளை அதீத ஈர்ப்பு சக்தி கொண்டது
அதன் தோற்றம் பிரபஞ்சத்தில் நட்சத்திரமாக உருவானாலும் பின் இருளாகி இருட்டு துளையாகி எல்லாவற்றையும் ஈர்த்து அருகிருக்கும் கிரகங்களை ஈர்த்து பெரும் குழப்பத்தை அது செய்யும்
இந்த ஆய்வுதான் இன்று உச்சத்தில் இருக்கின்றது
இந்த கருந்துளையோடு அந்த அந்தகாசுரன் கதையினை பொருத்தினால் பல அதிசய ஒப்புமைகளை காணமுடியும்
கருந்துளையால் சூரியனை ஈர்க்கமுடியும், பல ஒளிவிடும் கோள்களை ஈர்த்து தன்னுள் வைத்து எல்லாவற்றையும் இருட்டாக்க முடியும் அதாவது ஒளி கதிர்களை கூட பிடித்துவைத்து வெளியிடாமல் இருளாக காட்சி அளிக்கும் வல்லமை கொண்டது கருந்துளை
அப்படி ஒரு பிரமாண்ட கருந்துளை ஒருகாலத்தில் பிரபஞ்சத்தில் உருவாகி பிரபஞ்ச இயக்கத்தை அசைத்திருக்கலாம் குழப்பியிருக்கலாம்
அண்ட சராசரமும் கோள்களும் குழம்பி என்னவோ நடந்திருக்கலாம்
அந்நேரம் அந்த மகா சக்தி, இந்த பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி கருந்துளையினை துண்டு துண்டாக உடைத்திருகலாம் அல்லது வேறுவழியில் அதன் சக்தியினை அகற்றியிருக்கலாம்
பெரும் போராட்டம் அப்போது நடந்திருக்கலாம், புது புது சக்திகள் வானில் தோன்றி கருந்துளையினை கட்டுபடுத்தி பிரபஞ்ச இயல்பு நிலையினை வழமையாக்கியிருக்கலாம்
இது நடந்திருக்கலாம், அதைத்தான் இந்துக்கள் அந்தகார வதம் என ஒரு புராணமாக சொன்னார்கள்
இன்றிருக்கும் விஞ்ஞானம் கருந்துளை ஆய்வில் இப்போதுதான் கால்வைக்கினது, ஒரு நாள் எதிர்காலத்தில் இந் உண்மைகளை கண்டறியும் அப்போது இந்துமதம் பெரும் புகழ் அடையும்
இது ஒருகாலம் நிச்சயம் நடக்கும்
இன்னும் வாஸ்து சாஸ்திரம் பற்றியும் இந்த புராணம் சொல்கின்றது, அந்த பைரவர்கள்தான் இன்றும் அசுரனின் கெட்ட சக்திகளை உறிஞ்ச காவல் இருக்கின்றார்கள் அதனால் வீடு கட்டும்போது வாஸ்து என அவர்களை அழைக்கவேண்டும் என்கின்றது
விஷயம் வேறு எதுவுமலல், பூமியினை தோண்டும்போது விஷ வாயுக்கள் வரலாம், துர்சக்திகள் வரலாம் அதனால் சில பாதுகாப்பு விஷயம் அவசியம், அதை என்றோ இப்படி வாஸ்து எனவும் பூஜைகள் எனவும் சொன்னது இந்துமதம்
ஆம், அது விஞ்ஞான மதம், இன்று காணும் எல்லாவற்றையும் விஞ்ஞானம் சொல்லும் அனைத்தையும் சொல்லி அதற்கு பிரபஞ்சதிடம் இருந்தே தீர்வு உண்டு என்பதையும் சொன்ன மதம் இந்துமதம்
ஆன்மீகமாக இந்த அந்தகாரன் கதை அழகான ஆத்ம தத்துவத்தை போதிக்கின்றது
அந்தகாரன் சிவகுடும்பத்தில் உதித்தவன் அதாவது தெய்வீக ஆத்மா, ஆனால் அசுரரோடு வளர்ந்து அசுர குணம் அனைத்தும் கொண்டு பெரும் அசுரபலத்தோடு வலம் வருகின்றான்
ஒருகட்டத்தில் எல்லாம் ஆளவேண்டும் எல்லாம் தனக்காக வேண்டும் எனும் பேராசையில் சிவனோடு மோதுகின்றான்
சிவன் அசுரகுலத்தில் ஊறிய அவன் ரத்தம் அனைத்தையும் வடியசெய்கின்றார் , அதாவது அவனின் அசுர அங்ககார குணத்தை போக்குகின்றார் அதன்பின் அவனுக்கு உண்மை தெரிகின்றது
அந்த அசுர வடிவம் நீங்கி தெய்வ ஆத்மாவாக அவன் இறைசக்தியிடமே சரண்டைந்தான்
அந்தகாரசுரன் கதை சொல்வது இதுதான், எல்லா ஜீவாத்வாமும் பரமாத்மாவிடம் இருந்து புண்ணிய ஆத்மாவாக மட்டும் வருகின்றது
ஆனால் மாயையும் லவுகீக நெருக்கடிகளும் அதனை அசுரகுணமாக மாற்றுகின்றன, அந்த ஆத்மா தான் எங்கிருந்துவந்தோம் என்ன் செய்கின்றோம் என தெரியாமலே மாயையில் போராடுகின்றது
இறைவனை அது அண்டி பக்தியில் பணியும் போது இறைசக்தி அந்த ஆத்மாவின் அசுரகுணம், மாயகுணமெல்லாம் நீக்கி தன்னோடு சேர்த்து கொள்கின்றது
திருக்கோவிலூர் தலம் அந்த அந்தகாரனை ஆட்கொண்ட அந்தகாசுரவத மூர்த்தி எனும் சிவனின் தலமாக இப்போதும் நிற்கின்றது
அங்கு சென்று வணங்கும்போது இந்த ஆத்மாவின் அகங்காரமும் மாயையும் அகலும், இந்த ஜீவஆத்மா தான் பரமாத்மாவின் வடிவம் என்பதை அறியும், தன் மூலம் எதுவென அறியும்
அப்படி அறியும்போது பெரும் அறிவும் ஞானமும் நிம்மதியும் அதற்கு வரும், இதுகாலம் அதுகண அனைத்து சிக்கலும் களையபடும்
அந்தகார அசுரன் என்பவன் ஒவ்வொரு ஆன்மாவிலும் ஒவ்வொரு ஜீவாத்மாவிலும் இருக்கின்றான், அதனால் அந்த ஜீவாத்மா தான் யார்? தனக்கு என்னவேண்டும் என தெரியாமலே தடுமாறுகின்றது
திருக்கோவிலூர் தலத்தில் வணங்கும்போது அந்தகார அசுரனுக்கு அருள் செய்த அந்த கருணாமூர்த்தி அந்த ஆத்துமத்துக்கும் தெளிவினை கொடுக்கின்றார் அதன்பின் அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும்
தான் யார் என தேடுபவர்கள், காரணமில்லா சிக்கலினால் போராட்டத்தினால் கண்ணீர் விடுபவர்கள், ஏன் போராடுகின்றோம் எதற்கு போராடுகின்றோம் என தெரியாமலே வாழ்வில் போராட்டம் ஒன்றையே கண்டுகொண்டிருப்பவர்கள் அந்த திருகோவிலுரில் பணிந்தால் நிச்சயம் நற்பலன் உண்டு
தாங்கள் யார் என அவர்கள் அறிவார்கள், கர்மம் எது என புரிவார்கள், பெரும் அமைதியும் நிம்மதியும் அவர்களுக்குள் குடிகொள்ளும் இது சத்தியம்
அட்டவீராட்னம் என இரண்டாம் இடத்தில் இருக்கும் அந்த திருகோவ்லூர் சிவன் தன்னை நம்பிவரும் எல்லா பக்தர்களையும், அவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு பெரும் பாவிகள், கெட்டவர்கள் தீயவர்கள் இல்லை மதிமயக்கத்தால் குழம்பியவர்கள் என இருந்தாலும் அவர்களை சுத்தமாக்கி, அவர்களின் மாய தள்ளாட்டம் போக வைத்து அகந்தை நீக்கி அருள்புரிந்து தன்னோடு சேர்த்து கொள்ள காத்திருக்கின்றார்
அவரின் ஆலயம் எல்லா மக்களுக்கும் திறந்தே இருக்கின்றது, அவரை நம்பி திருகோவிலுர் செல்வோருக்கு எல்லா நலமும் கைகூடும், இழந்ததை எல்லாம் பெறுவார்கள், நிம்மதி அனைத்தும் அடைவார்கள் இது சத்தியம்
“கருத்துறை அந்தகன் தன் போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ் செய்தா னென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கை கொண்டு கொன்றானே”
என்ற திருமூலரின் பாடல் ஒலிக்க அந்த சிவன் அங்கே காத்துக் கொண்டிருக்கின்றார்.