பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பஞ்சவன சிவதலங்கள்.

பஞ்சவன சிவதலங்கள் – முன்னுரை. தென்னாடு கொண்ட சிவனே போற்றி என்பது கயிலாயத்துக்கு தெற்கே உள்ள நிலத்தினைச் சொன்னாலும் தென் பகுதியான தமிழகத்தில் சிவனுக்கான ஆலயங்கள் மிக அதிகம். அவை வகைபடுத்தப்பட்ட முறையும் அதிகம். பஞ்ச ஆரண்ய தலம், நவ கைலாயம், அட்ட வீராட்டானம், சப்த விடங்கர், நவபுலியூர், பஞ்ச சபைகள் என எத்தனையோ வகைகளில் சிவாலயங்கள் வகைபடுத்தப்பட்டன. ஒவ்வொன்றும் ஆயிரம் ஆயிரம் தத்துவங்களைக் கொண்டவை, சிவன் ஒவ்வொரு வடிவிலும் வந்து போதித்து நின்ற திருத்தலங்கள் அவை. […]

நரசிம்மர் ஆலயங்கள்.

நரசிம்மர் ஆலயங்கள் 01 : சிங்கம்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்மர் ஆலயம். ஆவணிமாதம் விஷ்ணுவிற்கானது, விஷ்ணு வழிபாடு பல வகையில் உண்டு. அது வாமன ஜெயந்தி முதல் பல வடிவில் உண்டு, தசாவதரமும் கொண்டாடப்படும் மாதமும் இதுவே. அவ்வரிசையில் நரசிம்ம வழிபாடும் பிரசித்தி, மிக மிக உக்கிரமான ஆனால் மிக‌ப் பலமான அவதாரம் அந்த நரசிம்ம அவதாரம். இந்துக்களின் ஒவ்வொரு அசைவும் ஞானமானவை. அர்த்தமுள்ளவை. அம்மதம் ஒன்பது வகையான விலங்குகளை இறைவனின் வாகனமும் வடிவமுமாக்கிற்று, அதில் ஒன்று […]

மாரியம்மன் ஆலயங்கள்.

மாரியம்மன் ஆலயங்கள் : 01புன்னை நல்லூர் மாரியம்மன். அம்பாளே இந்த உலகின் ஆதி சக்தி. நித்திய பரிபூரண சக்தி. இந்தப் பிரபஞ்சம் முழுக்க அவள் ஆட்சியே. அப்படியானவள் சில இடங்களில் தன்னை உரிய காலத்தில் உரிய வடிவில் வெளிபடுத்துவாள். அதற்குப் பூர்வ ஜென்ம பலன் அவசியம். சில கர்மத் தொடர்பு அவசியம். அப்படியானவர்களுக்குத் தன்னை வெளிபடுத்தும் அன்னை அவர்கள் பொருட்டு எல்லா மக்களுக்கும் அருள் வழங்குவாள். அப்படி அவள் அருளாட்சி நடக்குமிடம் சோழநாட்டின் புன்னை நல்லூர் மாரியம்மன் […]

பஞ்ச நரசிம்மர் ஆலயங்கள்.

பஞ்ச நரசிம்மர் ஆலயங்கள் – முன்னுரை. கார்த்திகை மாதம் என்பது கர்ம தொடர்புடையது, கர்மத்தைச் சரியாக முடிக்க ஒரு வைராக்கியம் வேண்டும், கூடவே உக்கிரமான வேகமும் வேண்டும், இதனாலேதான் கார்த்திகை மாதம் ருத்ர அம்சமெல்லாம் கொண்டாடப்பட்டது. காலபபைரவர், யமன் போன்ற தெய்வங்களெல்லாம் இம்மாதத்தில் கொண்டாடப்பட்ட ரகசியம் இதுதான், கார்த்திகை என்பது மாதங்களில் எட்டாம் மாதம், எட்டு என்பது எப்போதுமே ஒரு சமநிலை அல்லது பழையன முடிந்து புதியன பிறப்பதைச் சொல்லும், புதிய படைப்பினைச் சொல்லும் கர்கம் முடித்துப் […]

பன்னிரு ஆழ்வார்கள் 12 : திருமங்கை ஆழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் 12 : திருமங்கை ஆழ்வார். ஆழ்வார்களில் வித்தியாசமானவரும், ஏதோ ஒரு வகையில் கடைசிவரை பகவானுக்கு கைங்கரியம் செய்வேன், ஏதோ ஒருவழியில் செய்வேன் என செய்து நின்றவரும் அப்படியே வைகுண்ட பாக்கியம் பெற்றவருமான அந்த திருமங்கை ஆழ்வாரின் வாழ்வு சுவாரஸ்யமானது. பெரும் மன்னனாக வாழ்ந்திருக்க வேண்டிய அவர் வாழ்வு எப்படி ஒரு ஆழ்வாராக, பெருமாளின் அதிதீவிர பக்தனாக வாழ்ந்து பாசுரங்களை கொட்டிச் சென்ற பெருவாழ்வாக, எக்காலமும் ஆழ்வார்களில் மகா முக்கியமானவராக இடம்பெற்றது என்பது ஒவ்வொரு இந்துவும் […]

பன்னிரு ஆழ்வார்கள் : 11 திருப்பாண் ஆழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் : 11 திருப்பாண் ஆழ்வார். இந்துமதம் ஒரு காலமும் சாதி ரீதியான இழிவுகளைச் செய்தது அன்று. அப்படிச் சிலர் சொன்னால் அது அறியாமை. இந்துமதமோ அதன் போதனையோ சாதியினை ஒரு காலமும் வலியுறுத்தியதில்லை. தொழில்கள் அடிப்படையில் சில நோய்பரப்பும் விஷயங்கள், சில மனரீதியான விஷயங்களுக்காக அவர்களை தள்ளி இருக்க சொன்னதே தவிர, ஒரு காலமும் அது சாதி எனும் அடையாளத்தை வலியுறுத்தியதில்லை. எல்லா ஆத்மாவும் ஒன்றே என்பதும், எல்லாமே இறைவடிவம் ஒன்றே என்பதும் இந்துமத […]

பன்னிரு ஆழ்வார்கள் 10 : தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் 10 : தொண்டரடிப்பொடி ஆழ்வார். சோழவள நாட்டின் பிரதான திருப்பதியில் ஒன்று பூதங்குடி அருகே உள்ள திருமண்டங்குடி. அந்த ஊரில் வேத விசாரதர் என்றொரு முன்குடுமி பார்ப்பனர் இருந்தார். முன்குடுமி பார்ப்பனர் என்பது சேரநாட்டு தொடர்புடைய பாரம்பரியம், பகவான் கைங்கர்யங்களில் இளமை முதலாய் பெரும் ஈடுபாட்டோடு முழு பக்தியோடு இருந்தார். வேத சாஸ்திரங்களில் கரைகண்டவர் அவர். அவரின் பக்திக்கு பரமன் பெரும் பரிசளிக்க விருப்பம் கொண்டார். ஒருவன் வாழ்ந்த வாழ்வெல்லாம் அவன் வாரிசுமூலமே அறியப்படும் […]

பன்னிரு ஆழ்வார்கள் 09 : ஆண்டாள்.

பன்னிரு ஆழ்வார்கள் 09 :ஆண்டாள். பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்குமான பந்தத்தை மானுட உணர்ச்சியின் ஒவ்வொரு உணர்ச்சியுடன் போதித்த மதம் இந்துமதம். அது குரு சிஷ்ய பாவமாக ரிஷிகள் வாழ்வினைச் சொல்லி போதித்தது. நண்பர்கள் எனும்வகையில் கண்ணனையும் அர்ஜூனனையும் சொல்லிப் போதித்தது. தகப்பன் பாசம் என ராமபிரான், பரசுராமனைக் காட்டிப் போதித்தது, விசுவாசம் என அனுமனை காட்டிச் சொன்னது. வாழ்க்கை துணை ராமன் சீதையினைக் காட்டிச் சொன்னது. குடும்பம், தாய், தந்தை, நட்பு என எல்லா மானிட உணர்வுகளிலும் ஆன்மீகத்தைச் […]

பன்னிரு ஆழ்வார்கள் 08 : பெரியாழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் 08 : பெரியாழ்வார். இந்துஸ்தானம் எனும் பாரத கண்டத்தில் ஒவ்வொரு பாகமும் ஞான பூமி, அது இந்துக்களின் பூமி. கலைகளில் இருந்து செல்வம் வரை இந்துமதத்துக்காக கொடுத்த பூமி. அவர்களின் அபூர்வமான கல்சிலையும் கல் ஆலயமும் தெய்வத்துக்காய்க் கொடுக்கபட்டன, அவர்களின் நகை செய்யும் கலையும் இன்னும் நவமணிகளைக் கொண்டு உருவாக்கும் பொருளும் தெய்வத்துக்கே கொடுக்கப்பட்டன. அரண்மனை கூட இல்லாமல் பிரமாண்ட ஆலயங்களை இந்து தெய்வங்களுக்கே அக்கால மன்னர்கள் கட்டினார்கள், சிற்ப கலையில் சிறந்த அந்த […]

பன்னிரு ஆழ்வார்கள் 07 : குலசேகரப் பெருமாள் ஆழ்வார்

பன்னிரு ஆழ்வார்கள் 07 : குலசேகரப் பெருமாள் ஆழ்வார். அன்றைய சேர நாட்டின் மகா முக்கியமான ராஜ்ஜியங்களில் கொல்லி நகரத்தில், வஞ்சைக்களத்தில் ஒன்று அந்த அரசு, மொத்த சேர நாட்டையும் அது கட்டுப்படுத்தியது. அதனை திருவரதன் ஆண்டுவந்தான். அவன் ராஜ்ஜியத்தில் அமராவதி கோழிக்கோடு முக்கிய புண்ணிய நகரமாய் இருந்தது. எந்த அளவு முக்கிய புண்ணிய பூமியாக அது இருந்ததென்றால் பிரம்மன் ஒருமுறை தேவலோக நகரத்தையும், அமராவதி கோழிக்கோடு எனும் இந்த நகரத்தையும் நிறுத்துப்பார்க்கும் போது இந்த மன்னன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications