பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பன்னிரு ஆழ்வார்கள் 12 : திருமங்கை ஆழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் 12 : திருமங்கை ஆழ்வார். ஆழ்வார்களில் வித்தியாசமானவரும், ஏதோ ஒரு வகையில் கடைசிவரை பகவானுக்கு கைங்கரியம் செய்வேன், ஏதோ ஒருவழியில் செய்வேன் என செய்து நின்றவரும் அப்படியே வைகுண்ட பாக்கியம் பெற்றவருமான அந்த திருமங்கை ஆழ்வாரின் வாழ்வு சுவாரஸ்யமானது. பெரும் மன்னனாக வாழ்ந்திருக்க வேண்டிய அவர் வாழ்வு எப்படி ஒரு ஆழ்வாராக, பெருமாளின் அதிதீவிர பக்தனாக வாழ்ந்து பாசுரங்களை கொட்டிச் சென்ற பெருவாழ்வாக, எக்காலமும் ஆழ்வார்களில் மகா முக்கியமானவராக இடம்பெற்றது என்பது ஒவ்வொரு இந்துவும் […]

பன்னிரு ஆழ்வார்கள் : 11 திருப்பாண் ஆழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் : 11 திருப்பாண் ஆழ்வார். இந்துமதம் ஒரு காலமும் சாதி ரீதியான இழிவுகளைச் செய்தது அன்று. அப்படிச் சிலர் சொன்னால் அது அறியாமை. இந்துமதமோ அதன் போதனையோ சாதியினை ஒரு காலமும் வலியுறுத்தியதில்லை. தொழில்கள் அடிப்படையில் சில நோய்பரப்பும் விஷயங்கள், சில மனரீதியான விஷயங்களுக்காக அவர்களை தள்ளி இருக்க சொன்னதே தவிர, ஒரு காலமும் அது சாதி எனும் அடையாளத்தை வலியுறுத்தியதில்லை. எல்லா ஆத்மாவும் ஒன்றே என்பதும், எல்லாமே இறைவடிவம் ஒன்றே என்பதும் இந்துமத […]

பன்னிரு ஆழ்வார்கள் 10 : தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் 10 : தொண்டரடிப்பொடி ஆழ்வார். சோழவள நாட்டின் பிரதான திருப்பதியில் ஒன்று பூதங்குடி அருகே உள்ள திருமண்டங்குடி. அந்த ஊரில் வேத விசாரதர் என்றொரு முன்குடுமி பார்ப்பனர் இருந்தார். முன்குடுமி பார்ப்பனர் என்பது சேரநாட்டு தொடர்புடைய பாரம்பரியம், பகவான் கைங்கர்யங்களில் இளமை முதலாய் பெரும் ஈடுபாட்டோடு முழு பக்தியோடு இருந்தார். வேத சாஸ்திரங்களில் கரைகண்டவர் அவர். அவரின் பக்திக்கு பரமன் பெரும் பரிசளிக்க விருப்பம் கொண்டார். ஒருவன் வாழ்ந்த வாழ்வெல்லாம் அவன் வாரிசுமூலமே அறியப்படும் […]

பன்னிரு ஆழ்வார்கள் 09 : ஆண்டாள்.

பன்னிரு ஆழ்வார்கள் 09 :ஆண்டாள். பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்குமான பந்தத்தை மானுட உணர்ச்சியின் ஒவ்வொரு உணர்ச்சியுடன் போதித்த மதம் இந்துமதம். அது குரு சிஷ்ய பாவமாக ரிஷிகள் வாழ்வினைச் சொல்லி போதித்தது. நண்பர்கள் எனும்வகையில் கண்ணனையும் அர்ஜூனனையும் சொல்லிப் போதித்தது. தகப்பன் பாசம் என ராமபிரான், பரசுராமனைக் காட்டிப் போதித்தது, விசுவாசம் என அனுமனை காட்டிச் சொன்னது. வாழ்க்கை துணை ராமன் சீதையினைக் காட்டிச் சொன்னது. குடும்பம், தாய், தந்தை, நட்பு என எல்லா மானிட உணர்வுகளிலும் ஆன்மீகத்தைச் […]

பன்னிரு ஆழ்வார்கள் 08 : பெரியாழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் 08 : பெரியாழ்வார். இந்துஸ்தானம் எனும் பாரத கண்டத்தில் ஒவ்வொரு பாகமும் ஞான பூமி, அது இந்துக்களின் பூமி. கலைகளில் இருந்து செல்வம் வரை இந்துமதத்துக்காக கொடுத்த பூமி. அவர்களின் அபூர்வமான கல்சிலையும் கல் ஆலயமும் தெய்வத்துக்காய்க் கொடுக்கபட்டன, அவர்களின் நகை செய்யும் கலையும் இன்னும் நவமணிகளைக் கொண்டு உருவாக்கும் பொருளும் தெய்வத்துக்கே கொடுக்கப்பட்டன. அரண்மனை கூட இல்லாமல் பிரமாண்ட ஆலயங்களை இந்து தெய்வங்களுக்கே அக்கால மன்னர்கள் கட்டினார்கள், சிற்ப கலையில் சிறந்த அந்த […]

பன்னிரு ஆழ்வார்கள் 07 : குலசேகரப் பெருமாள் ஆழ்வார்

பன்னிரு ஆழ்வார்கள் 07 : குலசேகரப் பெருமாள் ஆழ்வார். அன்றைய சேர நாட்டின் மகா முக்கியமான ராஜ்ஜியங்களில் கொல்லி நகரத்தில், வஞ்சைக்களத்தில் ஒன்று அந்த அரசு, மொத்த சேர நாட்டையும் அது கட்டுப்படுத்தியது. அதனை திருவரதன் ஆண்டுவந்தான். அவன் ராஜ்ஜியத்தில் அமராவதி கோழிக்கோடு முக்கிய புண்ணிய நகரமாய் இருந்தது. எந்த அளவு முக்கிய புண்ணிய பூமியாக அது இருந்ததென்றால் பிரம்மன் ஒருமுறை தேவலோக நகரத்தையும், அமராவதி கோழிக்கோடு எனும் இந்த நகரத்தையும் நிறுத்துப்பார்க்கும் போது இந்த மன்னன் […]

பன்னிரு ஆழ்வார்கள் : 06 மதுரகவியாழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் : 06மதுரகவியாழ்வார். பாண்டிய நாட்டின் திருக்கோளூர் எனும் ஊரில் துவாபர யுகத்தில் ஈஸ்வர வருடம் சித்திரை மாதம் சுக்கிலபட்சம் சித்திரை நட்சத்திரம் அன்று பிறந்தார். பகவானின் கருட அம்சமாக பிறந்த இவர், சாமவேதம் அத்யயநம் செய்யும் அந்தணக் குலத்தில் பிறந்தவர். இளம்வயதிலே வேதம் கற்றுப் பகவானைத் தேடித் திரிந்தவர், அற்புதமான கவிகளைப் பாடுவதால், இனிமையான கவிகளைக் கொட்டுவதால் அவர் மதுரகவி என்று அழைக்கப்பட்டார். ஏகப்பட்ட ஷேத்திரங்களைத் தரிசித்துவிட்டு வடநாட்டுக்கு யாத்திரை சென்றார். அயோத்தி, மதுரா,ஹரித்துவார், […]

பன்னிரு ஆழ்வார்கள் : 05 நம்மாழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் : 05 நம்மாழ்வார். “உறுபெருஞ் செல்வமுந்தந்தையுந் தாயுமுயர்குருவும்வெறிதருபூமகணாதனுமா றன் விளங்கியசீர்நெறிதருஞ் செந்தமிழாரணமேயென்றிந்நீணிலத்தோ றிதரநின்றவிரா மாநுசனெனங் காரமுதே மறைப்பாற்கடலைத் திருநாவின் மந்தரத்தாற் கடைந்துதுறைப்பாற் படுத்தித்தமிழாயிரத்தின் சுவையமீர் தங்கறைப்பாம் பணைப்பள்ளியானன் பரீட்டங்களித்தருந்தநிறைப்பான் கழலன்றிச்சன்ம விடாய்க்குநிழலில்லையே” ஆழ்வார்களில் மகா முக்கியமானவரும், தமிழில் வேதங்களின் சாரத்தை தந்துச் சென்றவரும், எக்காலமும் பாசுரங்களுக்கும், வழிபாட்டு பாடல்களுக்கு இலக்கணம் அளித்தவரும், அழியா உருக்கமான பாசுரங்களை பின்னாளில் ஆண்டாள் போல் அருளிய ஆழ்வார்களுக்கு முன்னோடியாகவும் இருந்த அந்த நம்மாழ்வாரின் வாழ்வும், அவர் ஆற்றிய மகா […]

பன்னிரு ஆழ்வார்கள் : 04 திருமழிசை ஆழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் : 04 திருமழிசை ஆழ்வார். “இடங்கொண்ட கீர்த்திமழிசைக் கிறைவனி ணையடிப்போதடங்குமி தயத்திராமா நுசனம் பொற்பாதமென்றுங்கடங்கொண்டி றைஞ்சுந்திருமுனிவர்க் கன்றிக்காதல் செய்யாதிடங்கொண்ட ஞானியர்க் கேயடியேனன்பு செய்வதுவே” ‘நாராயணன்படைத்தான் நான்முகனைநான்முசனுக் கேரார்சிவன் பிறந்தானென்னுஞ்சொல்- சீரார்மொழிசெப் பிவாழலாம் நெஞ்சமே மொய்பூமழிசைப்பரனடியேவாழ்த்து” ஆழ்வார்களில் நாலாவதாக போற்றப்படும் இந்த ஆழ்வாரின் வாழ்வும், அவர் அடைந்த மகா சித்த நிலையும், அந்த பக்தியின் சித்தநிலையால் அவர் நீண்டு வாழ்ந்து அருளிசெய்த பாசுரங்களும் மகா ஆச்சரியமானவை. திருமூலர் போலவே நீண்ட வாழ்வும் ஆயுளும் பெற்று 4700 […]

பன்னிரு ஆழ்வார்கள் : 03 பேயாழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் : 03 பேயாழ்வார். “பேயரேயென க்கியாவரும்யானு மோர்பேயனே யெவர்க்கும் மிது பேசியென்னாயனேயரங்காவென்றழைக்கின்றேன்பேயனாயொழிந்தேனெம்பிரானுக்கே” “சீராரு மாடத் திருக்கோவலூரதனுட்காரார் கருமுகிலைக் காணப்புக் – கோராத்திருக் கண்டேனென் றுரைத்த சீரான்கழலேயுரைக்கண்டாய் நெஞ்சேயுகந்து” தொண்டை நாட்டின் மிக முக்கிய ஸ்தலமாக பக்தி மிகுந்த இயற்கை செழுமை மிகுந்த நகரமாக விளங்கிய இடம் மயிலாப்பூர். இன்று சென்னை என பெருநகரமாக அந்த ஊர் ஆகிவிட்டாலும் அன்று அது ஏகப்பட்ட ஊர்களை தனித் தனியே கொண்டிருந்த பகுதியாய் இருந்தது, அதில் முக்கியமானது இந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications