பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிவ வாக்கியார் பாடல்கள் : 41 to 49

சிவ வாக்கியார் பாடல்கள் : 41 “வாயிலே குடித்தநீரை யெச்சிலென்று சொல்லுறீர் வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ வாயினெச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள் வாயினெச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே” இப்பாடல் இப்படிப் பிரிந்து வரும். “வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுறீர் வாயிலே குதப்பும் வேதம் எனப் பட கடவதோ? வாயின் எச்சில் போகவென்று நீர்தனை குடிப்பீர்காள் வாயின் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே” மாந்தர்களே, உங்கள் வாய் பட்ட நீரை எச்சில் நீர் […]

சிவ வாக்கியார் பாடல்கள் : 31 to 40

சிவ வாக்கியார் பாடல்கள் : 31 “நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்தநித்த நீரிலே விருப்பமோடு நீர்குளிக்கும் வேதவாக்கியங் கேளுமின் நெருப்புநீரு மும்முளே நினைந்துகூர வல்லிரேல் சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூட லாகுமே” இப்பாடல் இப்படிப் பிரியும். “நெருப்பை மூட்டி நெய்யை விட்டு நித்தம் நித்தம் நீரிலே விருப்பமோடு நீர் குளிக்கும் வேத வாக்கியம் கேளுமின் நெருப்பும் நீரும் உம்முள்ளே நினைந்து கூற வல்லிரேல் சுருக்கமற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே” தினமும் நீராடி பின் யாகத்தில் நெய் ஊற்றி நெருப்பு […]

சத்ரபதி சாம்பாஜி : 11

சத்ரபதி சாம்பாஜி : 11 சாம்பாஜியின் வேகம் முகமது அக்பர் வந்தபின் வேகமானது. இனி நிச்சயம் ஔரங்கசீப் சும்மா இருக்கமாட்டான் என்பதையும் அவனின தாக்குதல் கடுமையாக இருக்கும் என்பதையும் அனுமானித்தான். ஆனால், எங்கே எப்படி அவன் தாக்குவான் என்பதை அவன் அறியமுடியவில்லை, சாம்பாஜியின் உளவுப்படைகள் களத்தில் இருந்தாலும் ஔரங்கசீப் ஊகிக்கமுடியாத ஆபத்தானவனாக இருந்தான். சாம்பாஜி எல்லாப் பக்கமும் தன் சேனையினைப் பலப்படுத்தினான். அதே நேரம் ஔரங்கசீப் மிகத் தீவிரமான ஆலோசனையில் இருந்தான். அவனிடம் பெரிய சேனை, பெரியநிதி, […]

நாச்சியார் திருமொழி : 83

நாச்சியார் திருமொழி : 83 ( பாசுரம் 11.1, 11.2) கண்ணன் மேல் கொண்ட காதலால் முழுக்க ஏங்கிப்போனாள் ஆண்டாள், அந்த ஏக்கம் உடலைப் பாதித்தது, தன் நீண்ட நாள் காதலில் அவன் இன்னும் தன்னை அவனோடு சேர்க்காதது அவளை மிகுந்த ஏக்கத்துக்குள்ளாக்கிற்று. வாழவும் விடாமல், சாகவும் விடாமல் அந்தக் காதலுடன் கண்ணன் காட்டும் பூச்சாண்டி அவளுக்குள் பெரும் சோகத்தைத் தந்தது, இனியும் தாங்கமுடியாது என்றபடி அவள் கவலையில் வீழ்ந்து அது அவள் உடலைப் பாதித்து, அதனால் […]

சிவ வாக்கியார் பாடல்கள் : 21 to 30

சிவ வாக்கியார் பாடல்கள் : 21 “சங்கிரண்டு தாரையொன்று சன்னபின்ன லாகையால்மங்கிமாளு தேயுலகில் மானிடங்க ளெத்தனைசங்கிரண்டை யுந்தவிர்ந்து தாரையூத வல்லீரேல்கொங்கைகொங்கை பங்கரோடு கூடிவாழ லாகுமே” இப்பாடல் இப்படிப் பிரிந்து வரும். “சங்கு இரண்டு தாரை ஒன்று சன்னபின்னல் ஆகையால்மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனைசங்கு இரண்டையும் தவிர்ந்து தாரைஊத வல்லீரேல்கொங்கை கொங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமே” சங்கு என்றால் வழி, காற்று செல்லும் வழி எனப் பொருள் உண்டு. கழுத்தை சங்கு எனச் சொல்வதில் அப்படியும் […]

சிவ வாக்கியார் பாடல்கள் 11 to 20

சிவ வாக்கியார் பாடல்கள் : 11 “அந்திகால முச்சிமூன்று மாடுகின்ற தீர்த்தமும்சந்திதர்ப் பணங்களுந் தபங்களுஞ் செபங்களும்சிந்தைமேவு ஞானமுந் தினஞ்செபிக்கு மந்திரம்சிந்தைராம ராமராம ராமவெனும் நாமமே’ இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும். “அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்சந்தி தர்ப்பணங்களும் தவங்களும் ஜெபங்களும்சிந்தை மேவும் ஞானமும் தினம் ஜெபிக்கும் மந்திரம்சிந்தை ராம ராம ராம என்னும் நாமமே” காலை மதியம் மாலை என பொழுதுகளில் நீராடி நியமங்கள் விதிகளின் படி இருந்து, தர்ப்பணங்கள் செய்து தவம் […]

நாச்சியார் திருமொழி : 70

நாச்சியார் திருமொழி : 70( பாசுரம் 9.1) ஆண்டாள் கண்ணன் நினைவில் மூழ்கிக் கிடந்தாள், அவன் நினைவு எனும் பெருங்கடலில் நீந்தி தத்தளித்துக் கொண்டிருந்தாள், அவனின் ஆசை முகம் ஒன்றே அவள் மனமெங்கும் வியாபித்திருந்தது. வழக்கம்போல் அதிகாலை பூஜை முடித்து குங்குமம் சூட எடுத்தவள் அதனையே உற்றுப் பார்த்துப் புன்னகைத்தாள், “எனக்கு இதனை திலகமாய் இட எப்போது வருவாய் கண்ணா?” எனக் கேட்டுக்கொண்டவள் வழக்கம் போல் குங்குமத்தைக் கண்ணன் காலடியில் இட்டு பின் தன் நெற்றியால் ஒற்றித் […]

நாச்சியார் திருமொழி : 71

நாச்சியார் திருமொழி : 71 ( பாசுரம் 9.2) அடைமழையாய் ஆண்டாள் மனதில் கண்ணன் நினைவு கொட்டிக் கொண்டிருந்தது. உள்ளூர அது சிலிர்ப்பைக் கொடுத்தது. சிலிர்ப்பு ஏக்கமுமானது, அந்த ஏக்கத்தில் பெரும் மழையில் ஒடுங்கும் சிறு பறவையென அவள் அவன் நினைவால் ஒடுங்கியவள் அந்த நந்தவனத்தில் அமர்ந்திருந்தாள். பூஜைக்காக மலர்பறிக்க வந்தவள் வேலியோரம் கொடியில் கிடந்த முல்லை கொடியினைக் கண்டாள், மெல்ல வரிசையாக மெல்ல விரிந்த முல்லைகளைக் கண்டாள். அது அவளை நோக்கிப் புன்னகைத்தன, இன்னும் சில […]

நாச்சியார் திருமொழி : 72

நாச்சியார் திருமொழி : 72 ( பாசுரம் 9.3, 9.4) காதல் கொண்ட நெஞ்சம் எப்போதும் அதே கனவிலும் தேடலிலும் இருக்கும், ஆண்டாளும் அப்படி சிக்கிக் கொண்டாள். கடலில் நீந்தும் ஓடத்தைக் காற்று இன்னும் அதிகப்படுத்துதல் போல, யாகத்தின் நெருப்பினை நெய் இன்னும் வளர்த்தல் போல கண்ணில் படும் காட்சி காதில் விழும் ஓசைகள் என எல்லாமும் அந்த நினைவினை இன்னும் பெரிதாக்கும். ஆண்டாள் அவன் நினைவிலே ஏங்கிக் கொண்டிருந்தாள், கற்பூரம் போல் அவள் மனம் அவனில் […]

நாச்சியார் திருமொழி : 73

நாச்சியார் திருமொழி : 73 ( பாசுரம் 9.5, 9.6, 9.7) ஆண்டாள் கண்ணனை வழமை போல் தேடிக் கொண்டிருந்தாள், அவளுக்குள் அவன் நினைவு எரிந்து கொண்டிருந்தது, கண்களும் மனமும் சிந்தையும் அவனைத் தேடிக் கொண்டிருந்தன, அவன்பால் ஏக்கமும் கலக்கமும் கொண்டவள் மழையினை எதிர்பார்க்கும் நாற்றுபோல் வாடிக்கிடந்தாள். அதிகாலை வானத்தை நோக்கியபடி அமர்ந்திருந்தாள், அங்கே மேகங்கள் எழுந்தன, மெல்லச் சூரியன் தன் பாதையில் மேலேழுந்தது, பறவைகள் இறகுகளை அசைத்தபடி மிதந்து சென்று கொண்டிருந்தன‌. பசுக்கள் கன்றுகளுக்குப் பால் […]

Continue in browser
To install tap Add to Home Screen
Add to Home Screen
பிரம்ம ரிஷி
Get our web app. It won't take up space on your phone.
Install
Add பிரம்ம ரிஷி to Home Screen
Close

For an optimized experience on mobile, add பிரம்ம ரிஷி shortcut to your mobile device's home screen

1) Press the share button on your browser's menu bar
2) Press 'Add to Home Screen'.
பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications