காளிதாசனின் ரகுவம்சம் : 76-80
காளிதாசனின் ரகுவம்சம் : 76 அந்தத் தேவநீகனுக்கு அஹிகு என்றொரு மகன் பிறந்தான், அவன் தன் இனிய மொழியாலும் நடத்தையாலும் தன்னை சார்ந்தோரை மட்டுமல்லாமல் எதிரிகளையும் வசமாக்கினான். அஞ்சி ஓடும் இயல்புடைய மான்களும் இனிய மொழிக்கும் இசைக்கும் மயங்கி அருகே வருவது போல அவன் தன் இனிமையான சொற்களால் பகைவரையும் வளைத்து நல்லாட்சி செய்தான். அஹீகு எனும் அந்த அரசன் குறையாத தோள்வலிமை உடையவன், இளம்வயது ஆயினும் அவன் கீழோருடன் நட்பு கொண்டிருக்கவில்லை. அதனால் குடி சூது […]