பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அருள்மிகு முத்து வடுகநாத சித்தர்.

அருள்மிகு முத்து வடுகநாத சித்தர். வாராஹி வழிபாடு மகா சக்திமிக்கது. பலர் நினைப்பது போல் வாராஹி அந்த வராகம் எனும் பன்றிமுகம் கொண்டவள் அல்ல. அவளின் மகா சக்தியும் பலமும் தாத்பரியமும் விளக்கும்படி அவளை அந்த முகத்தில் வரைந்து மக்களுக்குப் புரியவைத்தார்கள். அவள் கையில் உலக்கையினையும் கொடுத்திருந்தார்கள். அது மானிட மனம் எனும் நெல்லை புடமிட்டு தூய்மையான அரிசியாகத் தருபவள், மனதின் மாசை நீக்கிப் பக்குவப்படுத்துபவள், மாயை எனும் உமியினை பிரித்தெடுப்பவள் என விளக்கினார்கள். அவளின் முகமும் […]

ஆஷாட நவராத்திரியில் வழிபட வேண்டிய ஆலயங்கள்.

ஆஷாட நவராத்திரியில் வழிபட வேண்டிய ஆலயங்கள் 01 :திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி. வராஹி நவராத்திரி காலங்களில் வழிபட வேண்டிய முக்கிய தெய்வம் அன்னை அகிலாண்டேஸ்வரி. திருச்சி திருவானைக்கா ஆலயத்தில் நின்று அருள்பாலிக்கும் அன்னை அகிலம் ஆளும் அகிலாண்டேஸ்வரி தாய். அவள் அன்னை பார்வதியின் ரூபம், வாராஹி எனும் உக்கிர வடிவம் கொண்டு அங்கு வந்தாள். பல காரணங்களுக்காக வந்தாள். சிவனே அதர்மங்களை ஒழிக்க அனுப்பியதால் வந்தாள். வந்தவள் ஆங்கார ரூபிணியாய் உக்கிரவடிவாய் நின்றாள். ஆதிசங்கரர் காலத்தில் அவள் அருள்பாலிக்க […]

காளிதாசனிம் ரகுவம்சம் : 51 to 53

காளிதாசனிம் ரகுவம்சம் : 51 முற்றிய காமம் மூளையினைச் சிதைக்கும் என்பதுபோல காளை போன்ற ராமன் மேல் பெரும் ஆசை கொண்ட சூர்ப்பனகை தன் விருப்பத்தைதா தெரிவித்தாள், சீதை எனும் பெண் அங்கே இருந்தபோதும் அவளைத் தாண்டி தன் ஆசையினை வெளிப்படுத்தினாள், மலர் வாசமற்றது போனது போல அந்தச் சூர்ப்பனகை நாணமற்றுப் போனாள். அழகிய தோற்றமுடைய ராமன் தன்மேல் பெரும் ஆசை கொண்ட சூர்ப்பனகையினை நோக்கிப் “பெண்ணே, நான் மனைவியுடன் இங்கே இருக்கின்றேன் க்ஷ, நீ தனித்திருக்கும் […]

காளிதாசனின் ரகுவம்சம் : 46 to 50

காளிதாசனின் ரகுவம்சம் : 46 இந்த பலமான சிவனின் வில்லை வளைப்பவர்க்கே தன் மகள் சீதையினை மணமுடித்து கொடுப்பதாக ஜனகன் அறிவித்திருந்தான், அதை யாரும் தொட்டு தூக்க கூட முடியாததால் அவன் மிக கவலையுற்றிருந்தான், அப்படியான நிலையில் ராமன் வந்து வில்லை வளைத்து ஒடித்து அவனின் துயரத்தை போக்கினான் எல்லா மக்களின் கவலையினையும் போக்க வந்த அவதாரமான ராமபிரான் ஜனகனின் பெரும் கவலையினையும் போக்கினான் இதனால் மகிழ்ந்த ஜனகன் விசுவாமித்திரர் முன்னிகையிலே தன் மகளான சீதையினை அக்னி […]

காளிதாசனின் ரகுவம்சம் : 41 to 45

காளிதாசனின் ரகுவம்சம் : 41 தேவர்கள் இவ்வாறு தம்மைத் துதித்து வாழ்த்தியதன் பின் பகவான் அவர்களிடம் அவர்களின் நலன் பற்றியும் அவர்களின் தர்மவழி இயக்கம் பற்றியும் விசாரித்தார்ர், அப்போது மிகுந்த துயருடன் அவர்கள் சொன்னார்கள். “பகவானே, பிரளய காலத்தில் கடல் பொங்கி வந்து பெரும் அழிவினைத் தரும் அது விதிக்கபட்டது , ஆனால் ஒழுக்கம் எனும் கரைதாண்டி வரும் ராவணன் எனும் ராட்சனால் நாங்கள் மிகுந்த பாதிப்படைகின்றோம்” என முறையிட்டார்கள். அப்போது பகவான் சமுத்திர கரையில் உள்ள […]

சத்ரபதி சாம்பாஜி : 10

சத்ரபதி சாம்பாஜி : 10 ஔரங்கசீப் தன் மிகப்பெரிய படையுடன் தக்காணம் வந்தான் என்பதும் அதுவரை இருந்த அமைதி ஒழிந்துபோனது. எல்லா இடமும் பதற்றம் தொற்றிக் கொண்டது. பிஜப்பூர் சுல்தானியம், கோல் கொண்டா சுல்தானியம், மைசூர் உடையார்கள், தமிழக நாயக்கர்கள் என எழுந்த பதற்றம் மலையாள மன்னர்கள் வரை எட்டிற்று, அதுவரை மலையாள இந்து அரசர்கள் ஆப்கானியர் அட்டகாசங்களைச் சந்தித்ததில்லை. பாமினி காலம், மாலிக்காபூர் காலத்தில் கூட அவர்களின் அரணான மலை அவர்களுக்குக் காவல் இருந்தது. ஆனால் […]

சத்ரபதி சாம்பாஜி : 09

சத்ரபதி சாம்பாஜி : 09 சாம்பாஜிக்கு இரண்டாம் முறை விஷம் வைக்கப்பட்டது மாபெரும் பரபரப்புக்கும் பெரிய பெரிய குழப்பங்களுக்கும் வழிசெய்தது. முழுக் குற்றசாட்டும் சோயுர்பாய் மேல் விழுந்தது, அவளோ அதிர்ந்து கலங்கினாள், தான் அதைச் செய்யவில்லை, செய்ய அவசியமில்லை என மிகவும் ஒடிந்துபோனாள். சாம்பாஜி உளவியல் ரீதியாக குழம்பிப்போனான். ஒரு அரசனுக்கு எப்போதும் ஆபத்து உண்டு, அவன் தன் நிழலையும் நம்பக்கூடாது என்பது ராஜவிதி, அதே நேரம் ஒரு விஷயத்தைப் பலமுறை யோசித்துச் செய்யவேண்டும் என்பதும் அரசனுக்கான […]

சத்ரபதி சாம்பாஜி : 08

சத்ரபதி சாம்பாஜி : 08 1681 ஆம் ஆண்டு மே மாத மத்தியிலே ஔரங்கசீப்புக்கு ராஜபுத்திரருடனான போர்க்களத்தில் இருந்தபடி கடிதம் எழுதினான் முகமது அக்பர். அப்போது அவன் ஆஜ்மீர் எனும் அஜய்ன் மேரு பக்கம் இருந்து அவன் அதை எழுதினான். “உலக சக்கரவர்த்தியானவருக்கு வணக்கம், எம்மை நீங்கள் ராஜபுத்திருக்கு எதிரான கலவரங்களை அடக்கும்படி அனுப்பினீர்கள், நானும் மொகலாயச் சேனையின் உச்ச தளபதியாக நின்று இங்குக் கடமையினைச் செய்கின்றேன். ஆனால், நிலைமை இங்கு வேறுமாதிரியாக உள்ளது. எல்லா நடவடிக்கையினையும் […]

சத்ரபதி சாம்பாஜி : 07

சத்ரபதி சாம்பாஜி : 07 தன் ஆசனத்தில் தலைப்பாகையின்றி அப்படியே சரிந்துகிடந்தான் ஔரங்கசீப். சிவாஜிக்குப் பின் எளிதாக இந்துராஜ்ஜியத்தை வளைத்துவிடலாம், சாம்பாஜி பெரிய விஷயம் இல்லை என எதிர்பார்த்தவனுக்கு அந்தப் பர்ஹான்பூரில் கிடைத்த அடி இடியாக இறங்கியிருந்தது. சிவாஜி தன்னுடன் மோதும்போது அவனுக்கு 30 வயதுக்கு மேல் இருந்தது. ஆனால், 23 வயது சாம்பாஜி இவ்வளவு பெரிய அடியினை அதுவும் 300 மைல் தள்ளி வந்து தன் இதயம் போன்ற இடத்தில் அடித்த அடியினை அவனால் நம்பமுடியவில்லை. […]

சத்ரபதி சாம்பாஜி : 06

சத்ரபதி சாம்பாஜி : 06 சாம்பாஜி மொகலாயர்க்கு எதிரான தன் முதல் அடியினைச் சொல்ல சொல்ல எல்லோரும் கவனமாகக் கேட்டார்கள், அவனின் தாக்குதல் பர்கான்பூரைக் கொள்ளை அடிப்பதாக இருந்தது. அந்த நகரம் புவியியல் அமைப்பில் மிக முக்கியமானதாக இருந்ததால் இராணுவம் மற்றும் பொருளாதார அடிப்படையில் மிக மிக முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. விந்திய சாத்பூரா மலைகளுக்கிடையில் தப்தி நதி ஓரமாக அமைந்த அந்த இடமே வடக்குத் தெற்கின் இணைப்புப் புள்ளியாகவும் இருந்தது. இங்கு நீர்வளம் நிலவளம் முறையான […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications