பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அருள்மிகு முத்து வடுகநாத சித்தர்.

அருள்மிகு முத்து வடுகநாத சித்தர். வாராஹி வழிபாடு மகா சக்திமிக்கது. பலர் நினைப்பது போல் வாராஹி அந்த வராகம் எனும் பன்றிமுகம் கொண்டவள் அல்ல. அவளின் மகா சக்தியும் பலமும் தாத்பரியமும் விளக்கும்படி அவளை அந்த முகத்தில் வரைந்து மக்களுக்குப் புரியவைத்தார்கள். அவள் கையில் உலக்கையினையும் கொடுத்திருந்தார்கள். அது மானிட மனம் எனும் நெல்லை புடமிட்டு தூய்மையான அரிசியாகத் தருபவள், மனதின் மாசை நீக்கிப் பக்குவப்படுத்துபவள், மாயை எனும் உமியினை பிரித்தெடுப்பவள் என விளக்கினார்கள். அவளின் முகமும் […]

ஸ்வாமி சின்மயானந்தா

19ம் நூற்றாண்டு இந்துமதத்திற்கு சோதனைகள் அதிகம் உதித்த காலம், ஒரு பக்கம் கம்யூனிச நாத்திக கொள்கைகள் ஒருபக்கம் ஐரோப்பிய மதமாற்ற கொடுமைகள் அவர்களின் மேலாதிக்க மனப்பான்மை என இந்துமதம் மிகபெரிய சவாலை எதிர்கொண்டது ஐரோப்பியரின் மிகபெரிய ஆயுதம் கல்வி கூடங்களானது, ஆட்சி அவர்களிடம் சிக்கியது அதிகாரம் அவர்களிடம் சிக்கியது எனும் வகையில் அவர்கள் நினைத்த கல்வியினை அவர்களால் கொடுக்கமுடியும், அக்கல்வியில் இந்திய தேசபற்றோ இந்திய கலாச்சாரமோ இந்துமத பெருமைகளோ இருக்கும் என எதிர்பார்க்க முடியாது கல்வியில் மாற்றம் […]

ஞானி சதாசிவ ப்ரம்மேந்த்ராள்

இந்துஸ்தானத்தில் பெரும் அவதாரங்களும் யோகிகளும் எப்போதோ முன்பு தோன்றினார்கள் அதர்மம் களைய பாடுபட்டார்கள் என்பதல்ல விஷயம். எப்பொழுதெல்லாம் இங்கு அதர்மம் தலைவிரிக்குமோ அப்பொழுதெல்லாம் யோகிகளும் ஞானியரும் வந்து இந்து தர்மம் காப்பார்கள். அது அகத்தியர் காலம், விசுவாமித்திரர் காலம், கண்ணன் காலம் மட்டுமல்ல. பின்னாளில் சாணக்கியன், வித்யாதாரர், சமர்த்த ராமதாஸர், ராகவேந்திரர், குமரகுருபரர் என அந்த வரிசை வந்து கொண்டே இருந்தது, இன்னும் வரும் அப்படி வந்த பெரும் மஹான் ஒருவர்தான் நெரூரில் சித்தியடைந்த ப்ரம்மேந்தராள். அது […]

குரு தேஜ்பகதூர் ஜயந்தி

சீக்கியர்களின் ஒன்பதாம் குரு தேஜ்பகதூர், அவர் காலத்தில் காஷ்மீரிய இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்திருக்கின்றான் ஒளரங்கசீப், அப்போது அவரிடம் அடைக்கலாமக வந்திருக்கின்றார்கள் அந்த அபலை இந்துக்கள் ஏற்கனவே சீக்கியர்களை குறிவைத்த ஓளரங்கசீப் இந்துக்களோடு சேர்த்து அவர்களையும் மதம் மாற்ற துடித்திருக்கின்றான், அந்த குரு மதம் மாறினால் மொத்த சீக்கியரும் அவர்களோடு அடைக்கலமான இந்துக்களும் மதம் மாறியாகவேண்டும் என கணக்கிட்டிருக்கின்றான் அவன் அவையில் வாதம் நடந்திருக்கின்றது, வாதத்தில் தோற்றால் குரு மதம் மாற வேண்டும் என்ற நிபந்தனையோடு அது […]

பூந்தானம் நம்பூதிரி

தெய்வம் எப்போதும் ஒருவனின் மனதை பார்க்கும், அவன் தன்மேல் கொண்டிருக்கும் தீராத பக்தியினை பார்க்கும் . மற்றபடி ஆன்மீக விதிகளோ, ஆச்சாரமோ, மொழியோ, இதர கட்டுப்பாடுகளோ அதற்கு அடுத்த நிலைதான் அல்லது அவை அவர்களுக்கு அவசியமே இல்லை. உத்தமமான பக்தனை தெய்வம் நேரடியாக தன்னுள் ஈர்க்கின்றது. உலகுக்கு அவனை அடையாளம் காட்டி, அவன் தன்மேல் கொண்ட அன்பை ஊரறியச் செய்து அங்கீகரித்து அவனை ஏற்றுக்கொள்கின்றது. விதிகள், கட்டுப்பாடுகள் எல்லாம் பூரணமான, மனம் கசியும் பக்திமுன், முழு சரணாகதியான […]

கோயமுத்தூர் காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள்

கோயமுத்தூர் காமாட்சிபுரி ஆதீனம் பீடம் சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் காலமாகிவிட்டார் என்பது அதிர்ச்சி செய்தி . அவர் இந்துமதத்துக்கும் இந்த தேசத்துக்கும் செய்த சேவைகள் எக்காலமும் நிலைத்து நிற்கும் மகா புண்ணிய பணிகள். பொதுவாக தமிழக ஆதீனங்கள் திராவிடத்துக்கு அஞ்சும் இயல்புடையவை, இந்துமதத்துக்கும் மக்களுக்கும் நாட்டுக்கும் என்ன நடந்தாலும் தன் பணி திராவிடத்துக்கு காவல் இருப்பவை ஆதீனங்களின் ஆதார கடமையே மதத்தை காப்பதும் பரப்புவதுமே என்பதை மறந்து, தங்கள் சுயலாபத்துக்காக எல்லாவற்றையும் விட்டுகொடுத்து மவுனம் காக்கும் இயல்பு […]

அய்யா உண்டு!!!

அய்யா வைகுண்டர் அவதார நாள் – மாசி 20. இந்தப் பிரபஞ்சம் இந்த பூமிப்பந்தினை சரியாக கவனித்துக் கொண்டே இருக்கின்றது. இங்கு நடக்கும் ஒவ்வொரு அசைவுகளையும் அது கூர்ந்து நோக்குகின்றது. அந்த அசைவில் அராஜகமோ அகங்காரமோ பெருகினால் அது தானே ஏதோ ஒரு வடிவில் வந்து அதை நிர்மூலமாக்குகின்றது. அது காலம் காலமாக இங்கு நடக்கும் விஷயம். எல்லா அராஜக அக்கிரமங்களும் அது டைனோசர்களாக இருந்தாலும் சரி டைனோசரை விட பிரம்மாண்ட சக்தியும் பேராசையும் கொண்ட மானிடர்களாக […]

மாதவ சதாசிவ கோல்வால்கர்

காலத்தால் வரும் ஒரு சிலரே காலத்துக்கும் நிற்கும் அடிப்படை அஸ்திபாரங்களை இடுவார்கள், அவர்கள் வாழ்ந்த காலத்தில் செய்த போராட்டமெல்லாம் மறைக்கபடலாம், அவர்கள் முன்னெடுத்த காரியமெல்லாம் அன்று புறக்கணிக்கப் பட்டிருக்கலாம் ஆனால் அவர்கள் விதைத்த சத்தியவிதைகள் பெரும் மரமாகும் போது, அவர்கள் கட்டிவைத்த அஸ்திபாரம் பெரும் கோபுரமாகும் போது, அவர்கல் கைகாட்டிய வழிகள் பெரும் சாலைகளாகும்போது, அவர்கள் ஏற்றிய தீபம் பற்றி எரிந்து ஒளிகொடுக்கும் போது அவர்கள் எப்படியான பெரும் பிறப்பு என்பதும் அவர்கள் ஏற்றிவைத்த ஜோதி எப்படி […]

மாயம்மா

இந்துமதம் பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்த மதம். அவர்களை தெய்வமாக, அரசியாக, கவிஞர்களாக இன்னும் பலவாக உயர்த்திக் கொண்டாடிய மதம். பெண்கள் சன்னியாச கோலம் கொள்ளவும் முழு சுதந்திரம் அளித்தது. பெண்களுக்கு முழு ஆன்மீக சுதந்திரம் அளித்தமதம் இந்துமதம், அதுவே அவ்வகையில் மானுட சமூகத்துக்கே வழிகாட்டிற்று. அந்த வழியில் வந்தவள் மாயம்மா. மகா சித்திபெற்ற மாயம்மா, நாளை (10/02) அவளின் குருபூஜை நாள். பாரத தேசத்தின் மகா முக்கிய சக்தி மையம் காசி. பிரபஞ்ச பெரும் ஆற்றலும் […]

தை அமாவாசையில் அபிராமி அந்தாதி

அபிராமி பட்டரின் பக்தி தை அமாவாசையில் ஏகப்பட்ட வழிபாடுகள், பக்தி காரியங்கள் உண்டு என்றாலும் மிக முக்கியமானதும் தவிர்கக கூடாததுமானது அபிராமி அந்தாதி பாடலை பாடுவது. காரணம் ஒரு தை அமவாசையில்தான் அபிராமி பட்டருக்கு சோதனை வந்து, அவரைக் காக்க அன்னையே வந்து தன் காதில் அணிந்திருந்த தோட்டை கழற்றி வீசி அமாவாசை அன்று பவுர்ணமி வர செய்து தன் உன்னத பக்தனான பட்டரை காப்பாற்றினாள். இந்த சம்பவம் என்றோ நடந்தது அல்ல, சுமார் 400 ஆண்டுக்கு […]