பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அக்னிகுல் – அக்னிபான் சிறிய ரக ராக்கெட்

ஸ்ரீநாத் ரவிசந்திரன், மோயின், சக்ரவர்த்தி மோடி நாட்டுக்கு என்ன செய்தார் என சில பதர்கள் அடிக்கடி கேட்பதுண்டு, இப்போது தேர்தல் காலம் அது மழைக்கால தவளை சத்தம் போல அதிகரித்திருக்கின்றது. மோடி ஒரு கர்மவீரர், அவர் அதிகம் பேசுவதில்லை, வாயால் பிரியாணி கிண்டும் திராவிட பரம்பரை வியாதியும் அவருக்கில்லை. அவர் எந்த சவாலையும் நாட்டுக்காக எடுக்கும் செயல்வீரர். அவரின் துணிச்சலும் சாதுர்யமும் கொஞ்சமல்ல‌. அதைத்தான் ரஷ்ய புட்டீனே ஆச்சரியமாகச் சொன்னார் “மோடி என்பவர் எப்படியான உலக அழுத்தத்தை […]

ஜெகதீஷ் சந்திரபோஸ்

ஜெகதீஷ் சந்திரபோஸ் இந்தியா கண்ட அற்புத ஞானி, விஞ்ஞானம் அவரை இந்துக்களின் ஆன்மீக கண்ணோடு நோக்க சொன்னது, ஆன்மீகமும் அதன் தேடலும் பெருகியிருந்த அன்றைய வங்கம் அவரை அப்படி வித்தியாசமான விஞ்ஞானியாக உருவாக்கியிருந்தது ஆனால் அவரின் ஒரு பக்கமும் அவரின் கோட்பாடும் மேற்குலக விஞ்ஞானத்தால் மறைக்கபட்டன அது இன்றுவரை தொடர்கின்றது போஸின் கம்பியில்லா தகவல் தொடர்பு ஆராய்ச்சி கட்டுரையே மார்கோனி ரேடியோ கண்டுபிடிக்க அடிப்படையாய் இருந்தது, சரி போஸ் ஏன் அடுத்தகட்டத்துக்கு செல்லாமல் தாவரவியலுக்கு வந்தார்? முதன் […]

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்

தமிழகத்தின் அடுத்த பெரும் திட்டமாக, அணுவுலைகள் மகேந்திர கிரி மையம், திருச்சி பெல், சென்னை ஆவடி, சூலூர் மற்றும் தாம்பரம் விமானபடைதளம், ஆவடி தொழிற்சாலை போன்ற பெரும் திட்டம் போல அடுத்த மகா முக்கிய திட்டத்தை தருகின்றார் மோடி. இதனால் தமிழக தென்மாவட்டங்கள் குறிப்பாக தேரிக்காடு என சொல்லப்படும் அந்த பின் தங்கிய வறண்ட பிரதேசங்கள் இனி வளர்ச்சியினை நோக்கி செல்லும். ஆம், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைவது உறுதியாகிவிட்டது, சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தபட்ட […]

சர் சி. வி. ராமன்

தமிழனுக்கு அறிவில்லை, அவன் முட்டாள், அவனுக்கு விஞ்ஞானம் தெரியாது என்பதெல்லாம் ஈரோட்டுக்காரர் சொல்லி காஞ்சிபுரத்தார் கூலிக்கு பேசிய பொய். அதை வைத்து அரசியல் அறுவடை செய்தவர் திருகுவளைக்காரர். அது அல்ல உண்மை. தமிழக இந்துக்கள் அவ்வளவு பெரும் அறிவோடும் தனித்துவத்தோடும் இருந்தவர்கள். எவ்வளவோ விஞ்ஞானங்களை இந்துமத போதனையாகச் சொன்னவர்கள். அங்கு கல்லணை, பெரிய கோவில் கட்டும் அளவு அறிவாளிகள். மருத்துவம் முதல் மகா ரகசியங்களை எளிதாகச் சொன்னவர்கள் இருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக கடந்த நூற்றாண்டிலும் நிறைய பேர் […]

சதீஷ் தவான்

இந்தியாவின் விண்வெளி பலம் இன்று உலகை மிரட்டிக்கொண்டிருக்கின்றது. மாபெரும் வான்வெளி பலம் பெற்றிருக்கின்றோம். உலகின் எந்த இடத்தையும் தாக்கமுடியும், நிலவுக்கும் நம்மால் செல்லமுடியும். வானில் சுற்றும் செயற்கைகோள்களை கூட நம்மால் தகர்க்க முடியும். அசையும் இலக்கு, அசையா இலக்கு என நிலத்திலும் நீரிலும் வானிலும் உள்ள இலக்கை நம்மால் அடிக்க முடியும் அவ்வளவு பெரும் வான்பலம், ஏவுகனை பலம் இந்தியா பெற்றிருக்க அவர் மகத்தான காரணம்; அவராலேதான் தேசம் இந்தளவு பெரும் வல்லமை பெற்றிருக்கின்றது. ஒவ்வொரு இந்தியனும் […]

நிலாவில் மனிதனின் காலடி

அதுவரை மானிட குலம் விண்வெளிக்கு பறந்ததில்லை, மனிதன் பறக்க ஆரம்பித்து 60 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் வளிமண்டலத்தை கூட அவனால் எட்டமுடியவில்லை ஹிட்லரின் உத்தரவுபடி ஏவுகனைகளுக்கான‌ இன்சினை வார்ன் பிரவுண் தயாரித்து அதனை சோதித்து கொண்டிருக்குந்த பொழுதே ஹிட்லரின் காலம் முடிந்தது ஹிட்லரின் விஞ்ஞானிகளை பங்குபோட்டு கொண்டனர் அமெரிக்காவும் ரஷ்யாவும், அதாவது பொது எதிரியினை ஒழித்தபின் அமெரிக்காவும் ரஷ்யாவும் எதிரியாயிருந்தன‌ இந்த விஞ்ஞானிகள் எல்லாம் போர்குற்றவாளிகள், சதாமின் கெமிக்கல் அலி தூக்கில் தொங்கியதை போல தொங்கியிருக்கவேண்டியவர்கள், ஆனால் வல்லரசுகள் […]

விக்ரம் சாராபாய்

இன்றைய இந்தியா விண்வெளியில் எவ்வளவோ சாதிக்கின்றது, வல்லரசு நாடுகளுக்கு இணையாக அதனால் வான்வெளியில் பாயமுடிகின்றது, செயற்கைகோளை நிறுத்துதல் ஏவுகனை மூலம் அதை தகர்த்தல் இன்னும் கிரகம் விட்டு கிரகம் பாய்தல் என எந்த நாட்டுக்கும் இந்நாடு போட்டியாய் நிற்கின்றது இதற்கெல்லாம் அடித்தளமிட்டவன் அந்த இயற்பியல் மனிதன், அந்ந மாபெரும் விஞ்ஞானியின் 103 பிறந்த நாள் இன்று டாக்டர் விக்ரம் சாராபாய், இந்திய அறிவியலின் தந்தை அகமதாபாத்தின் பிறப்பு அவர், அவர் குடும்பம் செல்வந்தமாயும் அதே நேரம் நாட்டுபற்று […]

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்

இன்று எல்லோர் கையிலும் போன் இருக்கின்றது, பல வேலைக்காரர்கள் செய்ய வேண்டிய வேலையினை போனில் நம்மால் செய்ய முடிகின்றது அதுவும் கணிணி யுகத்தில் பில் கட்டுவது முதல் கார் வரவழைப்பது வரை எத்தனையோ காரியங்களை செய்ய முடிகின்றது ஆம் இன்றைய போனின் ஒவ்வொரு அப்ளிகேஷன்களும் ஒரு பூதம், அலாவுதின் விளக்கினை தேய்ப்பது போல தேய்த்துவிட்டால் வந்து ஆலம்பனா என நிற்கின்றது, சொல்லும் கட்டளைகளை திறம்பட நிறைவேற்றுகின்றது இன்று அந்த அலாவுதீன் விளக்காக போனை நாம் கையிலே தூக்கி […]

வெளிகிரக வாசிகள் உண்டா

ஒரு விஷயம் உலகை புரட்டி போட்டிருக்கின்றது, அதுவும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றார்கள் இந்த விண்வெளியில் மனிதனை தவிர ஏதும் உயிரினம் உண்டா என்பது பல்லாயிர ஆண்டுகளாக கேட்கபடும் கேள்வி அது மனிதன் ராக்கெட்டில் ஏறி விண்வெளிக்கு சென்றபின் அதிகமாயிற்று வெளிகிரகத்தின் மனிதன் போன்ற உயிரினம் உண்டு என்பது நம்பிக்கை, நாத்திகர்கள் ஒருபடி மேலே போய் அவர்களைத்தான் உலகம் கடவுள் என சொல்கின்றது என சொல்வார்கள் அதாவது இந்துமத புராணங்களிலும் பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் இந்த […]

நாஸ்டர்டாமஸ் நிச்சயம் ஜோதிட உலகின் பிதாமகன்

450 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸில் நாஸ்ட்ரடோமஸ் என்றொருவர் இருந்தார், அடிப்படையில் ஜோதிடர்தான் ஆனால் அதனையும் மீறி வருங்காலத்தை மிக துல்லியமாக சொல்லும் ஆற்றல் அவரிடம் இருந்தது. அவர் யூத வம்சாவளி, என்னதான் ஒரே கடவுள் , எங்கள் சொந்த கடவுள் ஜகோவா என்றாலும் யூதர்களுக்கு கபாலா எனப்படும் அதர்வண வேத சாயலும், ஜோதிடத்தின் மேலும் அபார நம்பிக்கை உண்டு மாமன்னன் சாலமோன் அதில் கரை கண்டிருந்தார், அவர் மிகபெரும் ஜோதிட நம்பிக்கை உள்ளவர் என்பதும். இன்று இஸ்ரேலியர் […]