அட்ட வீரட்டானத் தலங்கள் 5
திருவிற்குடி – ஏலவார் குழலி சமேத ஜலந்தரவத மூர்த்தி
அட்ட வீராட்டன தலங்களில் ஐந்தாம் தலம் திருவிற்குடி ஆலயம், இது நாகப்பட்டினம் அருகே அமைந்துள்ளது. தேவாரம் பாடப்பெற்ற மிக மிகப் பழமையான ஆலயம் இது.


சம்பந்தர் இப்படி முதல் பாடலைத் தொடங்கி ஒரு பதிகமே பாடினார்.
“வடிகொள் மேனியர் வானமா மதியினர் நதியினர் மதுவார்ந்த
கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர் உடைபுலி யதளார்ப்பர்
விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை விற்குடி வீரட்டம்
அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை அருவினை யடையாவே.”
அப்பர் பெருமான் ஆறாம் திருமுறையில் ஒரு பாடலை பாடுகின்றார்.
“மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார்
வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்
கறைக்காட்டுங் கண்டனார் காபா லியார்
கற்குடியார் விற்குடியார் கானப் பேரார்
பறைக்காட்டுங் குழிவிழிகட் பல்பேய் சூழப்
பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோர்
மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்
வீழி மிழலையே மேவி னாரே”
இப்படி பல ஞானியராலும் அடியார்களாலும் பாடப்பட்ட அந்த தலம் காலத்தால் தொன்மையானது வழி வழி வந்த சோழர்களும் இதர மன்னர்களும் திருபணி செய்த ஆலயம் அது
இந்த ஆலயத்தின் வரலாறும் மூலமும் ஜலந்திரன் எனும் அசுரனை பகவான் ஆட்கொண்ட வரலாற்றிலிருந்து தொடங்குகின்றது, இந்த தலப்புராணம் அந்த ஜலந்திரன் கதைதான்
ஜலேந்திரன் கதை சிவபுராணத்தில் உண்டு இன்னும் பல புராணங்களில் உண்டு, இன்னும் பல இந்து நூல்களில் உண்டு
அவனின் கதை இதோ
தேவாதி தேவர்களின் அரசனான இந்திரனுக்கு தான் எனும் அகம்பாவம் எப்போதும் உண்டு, அவனின் அகந்தையின் உணர்ந்த சிவபெருமான் அவனை அழிக்க ஒரு நாடகமாடினார்
ஒருமுறை அவன் கயிலாயம் வந்தபோது காவலாளி போல அவன் பாதையினை மறித்து கொண்டவர் அவனை மேற்கொண்டு அனுமதிக்கவில்லை, “என்னையே தடுக்கின்றாயா?” என தாக்க தொடங்கினான் இந்திரன்
சிவபெருமான் காவலாளி வேடத்தில் தாக்க பெரும் யுத்தம் மூண்டது, ஒரு கட்டத்தில் தன் வஜ்ராயுதத்தை வீசினான் இந்திரன், சிவன் அதை எளிதாக முறியடித்தாலும் அவருக்கு கடும் ஆத்திரம் வந்து அவனை விரட்டினார்
அவனோ அன்னை சக்தியிடம் சரணடைதான் சக்தி சிவனிடம் இருந்து அவனுக்கு மன்னிப்பு பெற்றுகொடுத்தாள்
சிவன் சமாதனமாகி தன் வியர்வையினை துடைத்து வீசினார் அதில் ஒருதுளி சமுத்திரத்தை அடைந்து ஒரு குழந்தையாயிற்று
நீரினால் உருவான அக்குழந்தை , ஜலத்திலிருந்து உருவான அக்குழந்தை ஜலேந்திரன் என்றாயிற்ற்று
ஜலேந்திரன் வளர்ந்தான் அவனோடு அசுர குணமும் வளர்ந்தது, பிரம்மனிடமிருந்து பல வரங்களை பெற்று கொணடவன் எல்லாவற்றையும் கைபற்ற கிளம்பினான்
அவனின் பெரும் பலம் அவன் மனைவி பிருந்தை, அந்த பிருந்தை கணவனை மட்டும் தொழும் நாயகி, அவனை தவிர வேறோருவனை மனதால் ஏற்று என்று அவள் பணிவிடை செய்வாளோ அன்று இவன் பலம் குறையும் என்பது அவனுக்குள்ள சாபம்
இந்த மனைவியின் பலமும் இன்னும் பிரம்மன் கொடுத்த சிறப்பு வரமும் அவனை காத்து கொண்டிருந்தது
அவன் இந்திரனின் அமராவதியினை கைபற்றினான் அந்த ஐராவதம் யானையினை அகபரித்தான், இன்னும் அக்னி பகவானின் ஜோதிபரத்தை பிடித்தான் வாயுபகவான் முதல் எல்லா தேவர்களையும் அடிமைபடுத்தினான்
அடுத்து குபேரனை பிடித்தான், எமதர்மன் அவனிடம் தோற்றோடினான்
இனி தன்னை எதிர்க்க யாருமில்லை என அவன் கொக்கரித்த நேரம் தேவர்களுக்கு பெரும் அச்சம் மூண்டது எல்லோரும் எதிர்க்க ஏன்ன செய்வது என திருமாலிடம் வந்து ஆலோசித்தார்கள்
திருமால் அவன் பலம் என்ன என்பதை அறிவார், அது அவள் மனைவி ஆனால் அதை தவிர அவனுக்கு சில வரங்கள் இருந்தன
அதுவும் கைகளாலும் அவனுக்கு ஆபத்து வரகூடாது இதுவரை இல்லா ஆயுதம், ஒருவராலும் ஏவாத ஆயுதம் ஒன்றால் மட்டும் அவனுக்கு அழிவு வரவேண்டும் எனும் வகையில் அது நுணுக்கமான வரமாக இருந்தது
சிவன் ஒருவரே அவனை அழிக்க வல்லவர் தன்னால் அவன் பலத்தை மட்டும் குறைக்கமுடியும் என சொன்ன விஷ்ணு, நாரதர் மூலம் அவனுக்கோர் செய்தியினை சொல்லிவிட்டு அமர்ந்திருந்தார்
நாரதரும் ஜலேந்திரனிடம் சென்று கயிலாய மலையின் அழகு, அங்கிருக்கும் மங்கையர் அழகு செல்வ செழிப்ப்பு என எல்லாம் சொல்லி, அமராவதியினைவிட கயிலாயமே சிறப்பானது அதை கைபற்றினால்தான் உனக்கு பெருமை என்றெல்லாம் தூண்டிவிட்டார்
ஜலேந்திரன் கைலாயத்தை கைபற்ற முடிவுசெய்தான், பெரும் படை அனுப்பினான் ஆனால் படை சிதறியது, இனி நானே செல்வேன் என கிளம்பி சென்றான் பெரும் பொர் வெடித்தது
அதே நேரம் விஷ்ணு அவன் மனைவி பிருந்தையினை சந்தித்தார் அவள் கவலையில் ஆழ்ந்திருந்தாள், அடிப்படையில் அவள் விஷ்ணுபக்தை
விஷ்ணுவினை கண்டதும் அவள் கலங்கி சொன்னாள், “சிவனுடன் மோத சென்ற கணவரை காணவில்லை பகவானே, நான் கலங்கியிருக்கின்றேன்” என்றாள்
விஷ்ணு ஒரு நாடகமாடினார, ஒரு மாயை உருவத்தை அவள் கணவன் போல் செய்து அதை தலைவேறு உடல் வேறாக்கி சில குரங்குகள் அதை சுமந்துவர செய்தார்
அதை கண்டதும் தன் கணவன் இறந்துவிட்டான் என அலறி ஆர்பரித்தவளை விஷ்ணு ஆறுதல் சொல்லி அந்த மாயைக்கு தலை உடல் சேர்த்து உயிர்கொடுத்து அவள் கணவன் ஜலேந்திரன் போலவே கொடுத்தார்
அவள் அந்த மாயைக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தாள், ஆனால் அது கணவன் அல்ல என்பதை உணர்ந்து கொண்டவள் தான் விஷ்ணுவால் வஞ்சிக்கபட்டதை எண்ணி வருந்தி சாபமிட்டாள்
“எந்த குரங்குகளால் நீ என்னை ஏமாற்றினாயோ அதை குரங்குகளை தேடி நீ அவற்றின் உதவிக்காய் அலைவாய், எப்படி என்னை மாயையினை கொண்டு ஏமாற்றினாயோ அப்படி உன் மனைவி பிரிந்து நீ கதறுவாய்” என சொல்லிவிட்டு தீகுளித்தாள் அவள் சாம்பலே மிஞ்சிற்று
விஷ்ணு கண்ணீருடன் அந்த சாம்பலை பார்த்துகொண்டிருந்தார்
இப்படி பிருந்தை பிரிந்ததும் ஜலேந்திரன் வலுவிழந்தான் , அவன் சேனைகள் அழிய ஆரம்பித்தன ஆனால் சுக்கிராச்சாரியாரை கொண்டு சேனைகளை உயிர்ப்பிக்க செய்து போரை நடத்தி கொண்டிருந்தான்
நீண்ட போர் தொடர்ந்து நடந்தது, அப்பக்கமே தங்கியிருந்தான் ஜலேந்திரன்
அவனை ஒழிக்க சித்தம் கொண்ட சிவன் ஒரு முனிவன் போல அமர்ந்திருந்தார், நீராட வந்தவன் ஒரு காலை நேரம் அவரை சந்தித்தவன் வழமை போல் கர்வம் பேசினான்
சிவனை எளிதில் அழிக்கபோவதாகவும் கையாலத்தை கைபற்றி தன் ஆட்சிக்கு கீழ் கொண்டுவரபோவதாகவும் கொக்கரித்தான்
அந்த முனிவன் புன்னகைத்து கேட்டான் “நீ அவ்வளவு பல்சாலியா?”
“ஆம், என்னால் எதையும் செய்யமுடியும், இந்த மலையினையே புரட்ட முடியும் விரைவில் புரட்டுவேன்” என்றான் ஜலேந்திரன்
“மலையினை புரட்டுவது இருக்கட்டும், நான் சொல்வதை உன்னால் தூக்க முடியுமா?” என்றார் முனிவர்
“என்ன செய்யவேண்டும்?” என திருப்பி கேட்டான் ஜலேந்திரன்
புன்னகைத்த முனிவன் தன் காலால் ஒரு சக்கரம் வரைந்து, “இதனை தூக்க உன்னால் முடியுமா?” என கேட்டார்
“என்னிடமே சவாலா?” என்றவன் அந்த சக்கரம் வரையபட்ட நிலத்தை அப்படியே தூக்கினான், அதனை தலைக்க்கு மேல் அவன் தூக்க முயன்று கழுத்துக்கு கொண்டுவந்தபோது அந்த சக்கரம் உயிர்பெற்று சுழல தொடங்கிற்று
அப்படியே அவன் கழுத்தை அறுத்தும் போட்டது
அத்தோடு ஒழிந்தான் ஜலேந்திரன, எல்லோரும் கூடி சிவனை போற்றினார்கள் துதித்தார்கள் பூமழை பொழிந்து வாழ்த்தினார்கள்
ஆனால் திருமால் அந்த பிருந்தையின் சாம்பலையே வருத்தத்துடன் பார்த்துகொண்டிருந்தார், அவள் குற்றமற்றவள் என்றாலும் த்ர்மத்தை காக்க அவளை பலிகொடுத்ததை எண்ணி கலங்கினார்
அங்கே வந்த பார்வதியும் சிவனும் அவரை ஆற்றுபடுத்தினார்கள், அந்த சாம்பலில் இருந்து துளசியினை எழுப்பிய தேவி அதை மாலையாக திருமால் கழுத்தில் அணிய சொல்லி இனி இந்த துக்க நினைவில் இருந்து விடுபடவேண்டும், உம் பக்தை உம்முடனே இருப்பாள் என வரமருளினாள்
அதிலிருந்து துளசி திருமாலுக்கு உகந்ததாயிற்று
சிவபெருமானும் அந்த சக்கரத்தை விஷ்ணுவிக்கே வழங்கி மகிழ்ந்தார், திருமாலுக்கு சக்கரமும் கிடைத்தது
( திருமால் பிருந்தையிடம் பெற்ற சாபம்தான் ராமாயணமாக தொடர்ந்தது, ராவணன் எனும் சிவபக்தன் அங்கும் அகங்காரத்தால் சாய்க்கபட்டான், திருமால் ராமனாக வந்து பெரும் துன்பபட்டு அவனை அழித்தார்)
இதுதான் ஜலந்தரன் கதை
இந்த கதை புராணத்தில் விஷேஷம் இன்னும் பல கதைகளில் விஷேஷம், இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் அவன் வாழ்ந்த இடம் ஜலந்தர் என அழைக்கபட்டு இன்றுவரை அந்த ஊர் உண்டு
அந்த மண்ணும் அங்கிருக்கும் ஆலயமும் அவன் வரலற்றை சொல்கின்றன
அந்த ஜலேந்திரன் வதத்தின் சாட்சியாக எழும்பியதுதான் திருவிற்குடி ஆலயம், அந்த வீராட்டனேஸ்வரரே ஜலந்தனை வதம் செய்தவராக வ்ணங்கபடுகின்றார்
யாராலும் ஏவபடாத ஆயுதம், இல்லாத ஆயுதம், கைகளால் தொடாத ஆயுதம் என அவன் கேட்ட வரம்படி அவனை கொன்றார் சிவன்
ஜலேந்திரன் கதையும் அவன் மனைவி கதையும் ஒரு ஆழ்ந்த ஆன்மீக போதனையினை சொல்கின்றது, கதை தொடங்குமிட்மான இந்திரன் கதை இன்னும் ஆழமாக போதிக்கின்றது
இந்திரன் அகநதையோடு சிவனிடம் மோதி வஜ்ராயுதம் எனும் தன் பலமிக்க ஆயுதத்தை எறிந்தான் ஆனால் அது வீழ்ந்ந்தது இந்திரனும் அகந்தை அழிந்தான்
அந்த இந்திரனின் அகந்தையினை அழிக்க உருவான வியர்வையில் இருந்து வந்த ஜலேந்திரன் பின் இந்திரனின் பதவியினையெ பறித்து அலையவிட்டான்
இந்திரனின் கர்வமே எல்லாவற்றுக்கும் தொடக்கம், அவன் கர்வமே அவனை பரதேசியாக்க்கி ஓடவைத்தது
இங்கு முதலில் அகந்தையினால் அழிந்து பின் அறிவுபெற்றவன் இந்திரன்
ஜலேந்திரன் சிவனின் வியர்வையில் இருந்து உருவானவன் அதாவது ஜீவாத்மா. ஆனால் அந்த ஜீவாத்மா லவுகீக மயக்கத்திலும் அற்ப உலக பலனிலும் நம்பிக்கை கொண்டு அகந்தையில் பரம்பொருளுக்கே கட்டுபட மறுத்து மோதினால் ஆடினால் நிச்சயம் ஏதோ ஒருவழியில் பரம்பொருள் ஜீவாத்மாவினை ஆட்கொள்வார்
இங்கு கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம் அந்த பிருந்தை, மாயையில் மனதை கொடுத்தவள், பந்த பாச மயக்கத்தில் தன்னிலை மறந்து மாயையிடம் சிக்கியவள் வீழ்ந்தாள்
அவள் குற்றமற்றவள் என்றாலும் பந்த பாச மயக்கம் அவளை மாயையில் விழவைத்தது
இந்த சம்பவத்தை வெறும் கற்பனை என விலக்கிவிட முடியாது, இன்றைய விஞ்ஞானம் பல ஆய்வுகளை சொல்கின்றது, அதில் ஒன்று ஒரு காலத்தில் கடலால் பூமி மூடபட்டிருந்தது, கடல் பெரும் பெரும் அழிவுகளை கொடுத்தது பின் கட்டுபாட்டுக்குள் வந்து இன்றுகாணும் உலகம் உருவானது என்கின்றது
பாகவதபுராணமும் ஊழிகாலத்தில் நிலம் முழுக்க கடல் இருந்தது சிவன் அதன் மேல் படுத்திருந்தார் பின் மது கைடவ அரக்கர் வந்தனர் அவர்களை வதம் செய்யத்தான் நிலம் மீண்டது என்கின்றது
இன்னும் ஆழமாக விஞ்ஞானம் இந்த பூமியில் ஒரு காலத்தில் நீர் இல்லை, எங்கிருந்தோ வந்த வால் நட்சத்திரத்திலோ இல்லை வேறு குறுங்கோளிலொ இருந்த நீர்துளி பெரிதாக பரவி பின் பல மாறுதலுக்க்கு உட்பட்டு பெரும் கடலாக உதித்தது என்கின்றது
இன்னும் பல ஆய்வுகளை அது செய்கின்றது
எது எப்படியாயினும் கடலும் அதன் நீரும் பெரிதாகி நிலத்தை மூடி பெரும் மிரட்டலை கொடுத்திருப்பதை மறுக்கமுடியாது, ஜலேந்திரன் கதை இந்த சமுத்திரம் உலகை அழிக்க மூடிய மிரட்டலான காலத்தின் ஒரு கதைவடிவமாக இருக்கலாம்
ஆனாலும் பகவான் எனும் பரம்பொருள்தான் அந்த அபத்தை நீக்கினார் என்பது கவனிக்கதக்கது
விஞ்ஞானபடி நீர் என்பது ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் இணைந்தது, இதை எப்படி பிரிப்பது என இன்றைய விஞ்ஞானம் தெரியாமல் இருக்கலாம் ஆனால் இரண்டும் இல்லாமல் நீர் இல்லை
பிருந்தையினை விஷ்ணு பிரித்தா என்பது இந்த மூலக்கூறுகளை பிரித்துபோட்ட நுணுக்கமான வழிகாட்டல் , முழுக்க விஞ்ஞானம்
ஆக நீரால் எழுந்த பிரபஞ்ச மிரட்டலை பரம்பொருள் அழித்து லோகத்தை காத்தார் என்பது விஞ்ஞான ரீதியாக கூட விளக்க சிரமானது அல்ல, என்றோ நடந்திருக்க கூடிய சம்பவம் இவை
இந்துமதம் அவைகளைமானிடருக்கு புரியும்படி லவுகீக வடிவத்தில் சொல்லி ஆன்மீக தத்துவத்தையும் போதிக்கின்றது
ஆக இந்த் புராண கதையின் சுருக்கமான தத்துவம் இதுதான்
இந்திரன் எந்த அகந்தையில் ஆடினானோ அதே அகந்தை ஒரு உருவமெடுத்து வந்து அவனை அலறவைத்து விரட்டியது
அப்படியே ஜலேந்திரனின் ஆணவத்தையும் அவனே எதிர்பாராபடி, ஏன் யாருமே எதிர்பாராதபடி சிவன் அழித்துபோட்டார் அவரால் முடியாதது எதுவுமில்லை பரமாத்மாவினை ஜீவாத்மா ஒருகாலமும் வெற்றிகொள்ள முடியாது என்பதை காட்டுகின்றது
பரமாத்மாவினை சரணடைதலே முழுக்க சரியானது என்கின்றது இந்த கதை
அதைத்தான் ஐந்தாம் வீராட்டணமான திருவேற்குடி ஆலயமும் சொல்கின்றது, காவேரி கரையில் இருக்கும் அந்த தலத்தில் வணங்கினால் எல்லா நலமும் கைகூடும்
ஏன் நீரை சொன்னார்கள் இந்துக்கள்?
இந்த உடலில் பெரும் பாகம் நீர், ஓடும் ரத்தம் கொழுப்பு மூளை தங்கும் திரவம், ஹார்மோன்கள் இன்னும் என்னென்ன இயக்கம் உண்டோ அவை எல்லாமே நீர்மமானவை
இந்த உடலை இயக்கும் சக்தியில் கர்வமும் ஆணவமும் வந்துவிட கூடாது, ரத்தத்தில் சிந்தையில் அகங்காரமோ கர்வமோ வரகூடாது என சூட்சுமமாக சொல்லும் ஆலயம் அது
கர்வமும் அகங்காரமும் அது கொடுக்கும் விளைவும் உடலின் ரத்தவோட்டத்தை பாதிக்கும், நீர்மைகளை பாதிக்கும் அது உட்லை கெடுக்கும்
இந்த ஆலயத்தில் வணங்கினால் கர்வம் அகலும் அகங்காரம் அகலும் அந்நேரம் உடலும் மனமும் தெளிவாகும்
அதனாலே இந்த அலயத்தை அந்த சலேந்திரன் கதையாக படைத்தார்கள் இந்துக்கள்
அக்கோவில் பல அருள்வடிவங்களை கொண்டது, அங்கு சென்றால் ஆணவம் அகலும், உடல் நலம் கூடும் இன்னும் நன்மையின் பொருட்டு எதையெல்லாம் இழந்தீர்களோ அதைவிட அதிகமாக பெறுவீர்கள்
விஷ்ணு துளசியும் சக்கரமும் பெற்றதுபோல் உங்களுக்கும் புனிதமும் பலமும் இன்னும் கூடும், எல்லா நலனும் தேடிவரும்
அட்டவீரட்டானத்தில் ஐந்தாம் தலமான இந்த தலத்தில் வீற்றிருக்கும் சிவன் ஜலந்திர வத மூர்த்தியாக நிற்கும் சிவன் அகந்தையினை அழித்து அந்த அகந்தையினால் வந்த நோய்களை அழித்து எதெல்லாம் அகந்தையால் இழந்தீர்களோ அதையெல்லாம் திருப்பி தருவதற்கு தன் ஆலய கதவுகளை திறந்துவைத்து காத்திருக்கின்றார் சென்று அருள்வாங்கி வாழவேண்டியது உங்கள் கடமை