அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 02 /21

1530 – 1556 ஹூமாயூன் கால போராட்டம்

பாபர் காலத்தில் அவன் தளபதி மீர் பாக்கியினால் எவ்வளவு கொடிய வன்முறையில் சுமார் 3 லட்சம் இந்துக்களை நசுக்கி ராமபிரான் ஆலயத்தை அகற்றி அந்த பள்ளிவாசல் கட்டபட்டது என்பதை முன்பு கண்டோம்

அது தொடர்ந்து இந்துக்களால் எதிர்க்கபட்டே வந்தது, உயிரை கொடுத்து ரத்தம் ஆறாக ஓடவிட்டு அதனை கடும் வேகத்துடன் எதிர்த்து மீட்டெடுக்க இந்துக்கள் போராடிகொண்டே இருந்தார்கள்

1530ல் அதாவது தன் நான்காண்டு இந்துஸ்தான ஆட்சியிலே பாபர் மரித்தபின் அவன் மகன் ஹூமாயுன் எனும் நஸ்ருதீன் முகமத் ஆட்சியில் போறாட்டம் மீண்டும் வெடித்தத

முன்பு அயோத்தி ஆலயம் மீட்கும் போரில் கொல்லபட்ட ஹன்ஸ்வர் சமஸ்தான ராஜா ரண்விஜய்சிங்கின் மனைவி ஜெயகுமாரி இம்முறை தானே படைநடத்தி தலமை தாங்கி வந்தாள்

ஆம், ஒரு இந்து பெண்ணரசி மொகலாயரை துணிச்சலாக எதிர்த்த வரலாறு அவளுடையது, அவள்தான் தாராபாய், வேலுநாச்சியார், அகல்யாபாய் என எல்லோருக்கும் முன்னோடி

ஹன்ஸ்வர் என்பது அயோத்தியில் 70 மைல் தொலைவில் இருக்கும் பிரதேசம், இன்று சிறிய கிராமமாக அம்பேத்கர் நகர் என அது சுருங்கிவிட்டது, அந்த அளவு அந்த மாபெரும் வீரமிக்க பெண்ணின் பெயரும் போராட்டமும் மறைக்கபட்டது, பிரிட்டிஷ் காங்கிரஸ் ஆட்சியில் அது ஒன்றும் ஆச்சரியமில்லை

(ராணி ஜெயகுமாரியினை விதவை என்பதால் இந்துமதம் முடக்கவில்லை, விதவைகளை இந்துமதம் ஒடுக்கியது என்பதெல்லாம் ஐரோப்பியர் சொல்லிகொடுத்து இங்கு விற்பனையான குழப்பமான சரக்கு

தாரபாய் வாளேந்தும்போது இந்து விதவையாகத்தான் இருந்தாள்

அகல்யா பாய் என காசியினை மீட்டு ஆலயம் கட்டிய மஹாராணியே ஒரு விதவை)

அந்த வீர இந்துபெண் ஜெயகுமாரி அதிசயிக்கதக்க வீரம் காட்டினாள், சுமார் 3000 பெண்களை கொண்டு ஒரு படையினை அமைத்தாள், பாபர் மரித்தாலும் இந்துக்கள் விடவில்லை தொடர்ந்து அடித்தார்கள்

அவளின் வீரபோர் எல்லோரையும் அதிசயிக்க வைத்தது, இந்த மூவாயிரம் பெண்களும் அதிசிறப்பு பயிற்சி பெற்றவர்கள், ராணியின் தலமையில் வாளேந்தி வில்லேந்தி உயிரை துச்சமென மதித்து கொடிய மொகலாயபடையினை எதிர்க்க தயாரானார்கள்

அவர்களுக்கு துணையாக ஸ்வாமி மஹேஸ்வரானந்தர் வந்தார் இவர் ஹன்ஸ்வர் அரசகுடும்ப ராஜகுரு, இந்த ஸ்வாமி மஹேஸ்வரானந்தர் படை திரட்டினார்

அது ரண்வீர் சிங் பபல்லாயிரம் பேரோடு கொல்லபட்ட காலம், சுமார் 4 லட்சம் இந்து வீரர்கள் ஆண்கள் பலியான கொடுங்காலம்

எஞ்சி இருப்போரில் பெண்களே அதிகம் என்பதாலே ராணி பெண்களை கொண்டு படை அமைத்தாள், இந்துஸ்தான பெண்களின் வீரத்தை மொகலாயர் முதலில் கண்டது அப்போதுதான்

பெண்கள் படைக்கு துணையாக, ஸ்வாமி மஹேஸ்வரானந்தர் துறவிகளை அழைத்து வந்தார் ஏராளமான சாதுக்கள் ராமனுக்காய் கர்மவீரம் காட்ட வந்தார்கள்

சுமார் 24 ஆயிரம் துற்விகள் கொண்ட படையினை அவர் உருவாக்கினார், சூலம் ஏந்தியபடையாக அது நின்றது

மிக மிக குறுகிய காலத்தில் நான்கு லட்சம் இந்து ஆண்கள் இறந்தாலும் பெண்களும் துறவிகளும் அடுத்தகட்ட போரை தொடங்கினார்கள்

ராமனின் ஆலயத்தை எவ்வளவுக்கு உயிராக இந்துக்கள் கருதினார்கள் என்பதை இதனை கொண்டே புரிந்து கொள்ளலாம்

பாபர் இல்லையே தவிர அவனின் பெரும்படை ஹூமாயுனிடம் இருந்தது, அந்த பெரும் படையினை சுமார் 27 ஆயிரம் பேர் கொண்ட இந்த படை எதிர்த்து சண்டையிட்டது

பல சுற்று சண்டையில் மொகலாயர்களுக்கு சேதம் அதிகமானது, அப்படி ஒரு ஆவேச தாக்குதலை பெண்களிடமிருந்து அவர்கள் எதிர்பார்க்கவில்லை

இந்து பெண்கள் இந்து ஆண்களை விட வலிமையும் வீரமும் உறுதியானவர்கள் என்பதை அந்த யுத்தம் காட்டிற்று

10ம் மோதலில் ராணி அனாசயமாக வென்றாள், அயோத்தி அவள் கைகளுக்கு வந்தது, ராணி மாபெரும் சாதனையினை நிகழ்த்தி காட்டினாள். அந்த பள்ளிவாசல் அவள் கரங்களுக்குள் வீழ்ந்தது

( இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், அப்போது அந்த பள்ளிவாசல் போன்ற கட்டடம் பெரியதாக இல்லை என்கின்றன செய்திகள், பாபரின் தளபதி சிறிய கட்டடம் போல ஒன்றை அமைத்து இங்கே நாங்களும் வழிபடுவோம், பாபரின் உத்தரவு என்பதற்காக சிறிய அளவில்தான் கட்டிவைத்தான் என்பது ஒரு குறிப்பு

பின்னாளைய செய்திகளும் ஆங்கிலேய குறிப்புகளும் அதை உறுதிபடுத்துவது போலத்தான் உண்டு )

ஆனால் அவள் மசூதியினை இடிக்கவில்லை இந்து தர்மம் அப்படியானது இன்னொரு மதநிலையத்தை இடிக்க அவர்களுக்குள் ஒரு தயக்கம் அப்போது இருந்தது , காரணம் அதுவரை அந்நியர்கள் இந்து கோவிலை இடித்து கொள்ளையிட்டு ஓடுவார்களே தவிர பள்ளிவாசல் கட்டியதில்லை

தர்மம், அறம் என்றெல்லாம் அதிகம் பார்க்கும் இந்துக்கள் இங்கே குழம்பினார்கள், பின் அருகில் ஒரு ஆலயம் க்ட்டலாம் என முடிவெடுத்தார்கள்

அந்த வெற்றி ஒருமாதம் நிலைத்த நிலையில் இந்து பெண் அரசி மொகலாயரை துணிச்சலாக வென்றுவிட்டாள் எனும் செய்தி மிக பெரிதாக பரவி எல்லா ராஜபுத்திரர்களுக்கும் பெரும் உற்சாகத்தை கொடுத்தது

அந்த உற்சாகத்தில் ஹூமாயூனை ஒழித்துகட்டுவது என போரிட்டார்கள், போர் பல இடங்களுக்கும் பரவியது

ஹூமாயூன் அதிர்ந்தான், இந்துக்களுக்கு பெரும் எழுச்சி கொடுத்த ராணியினை எப்படியும் ஒழித்துவிடுவது என முடிவெடுத்து பெரும் படை அனுப்பினான்

அவன் அங்கே பெரும்படை அனுப்பிய நிலையில் டெல்லியினை நோக்கி ராஜபுத்திர படைகள் ஹெமு தலமையில் திரண்டன‌

ராணி ஜெயராணி அவ்வளவு பெரிய எழுச்சி கொடுத்தாள், ஆனால் அவளை பேச்சுவார்த்தை சமாதானம் என திசை திருப்பிய மொகலாயர் எதிர்பாரா நேரம் வஞ்சகமாக பிடித்தனர்

அவளும் அந்த ஸ்வாமி மஹேஸ்வரானந்தர் எனும் குருவும் தலைவெட்டி கொல்லபட்டனர், மூவாயிரம் பெண்களும் 24 ஆயிரம் துறவிகளும் கொல்லபட்டனர்

மாபெரும் அழிவுக்கு பின் அயோத்தி ஹூமாயினிடம் வீழ்ந்தது, ஆனால் ராணி கொடுத்த எழுச்சிபெரிதாய் வெடித்தது, ஹூமாயுனால் தாக்குபிடிக்க முடியவில்லை

தேசம் எங்கும் ஹூமாயுனுக்கு எதிராக பெரும் கிளரச்சியும் போரும் வெடித்த நிலையில் தெற்கே ஒருவர் எழுந்தார் அவர் ஒரு வீரகலைகள் கற்றுகொடுக்கும் மலையாள குருவாக இருந்தார்

அவர் பெயர் சுவாமி பலராமாச்சாரியர

இவர் மலையாள தேசத்தை சேர்ந்தவர், மலையாள வீரகலைகள் கற்றுகொடுக்கும் குருவாக இருந்தவர் தமிழகம் கோயம்புத்தூர் பக்கமெல்லாம் அவருக்கு பயிற்சி குருகுலங்கள் இருந்திருக்கின்றன‌

அவர் அயோத்திக்கான பெரும் போரில் பங்கு கொள்ள வடக்கு நோக்கி சென்றார், சென்றவர் கிராமம் கிராமமாக அலைந்து திரிந்து மக்களை திரட்டி பெரும் படையினை தன் வீரபோர் பயிற்சியால் உருவாக்கினார்

அவரின் படை அவர் தலமையில் ராணி ஜெயகுமாரி விட்ட போரை தொடங்கிற்று

மொகலாய படைகள் அவரின் பயிற்சி பெற்ற படைகள் முன் தடுமாறின , சிறிய படைதான் அவருடையது ஆனால் வர்மகலை முதல் எல்லா கேரள பாரம்பரிய கலைகளுடன் அவர் போரிட்டபோது மொகலாயம் பின்வாங்கியது

ராஜபுத்திரர்கள் ஹெமு தலமையில் போராட ஆப்கானிய பிரிவான ஷெர் ஷா சூரி என்பவனும் அவர்களோடு சேர்ந்து ஹுமாயுனை எதிர்க்க பெரும் பிரளயம் உண்டாயிற்று, ஹுமாயுன் தப்பி சென்றான்

1540ல் அவன் தப்பி ஆப்கானுக்க்கு ஓடினான், சுவாமி பலராமாச்சாரி அயோத்தி பள்ளிவாசல் அருகே ஒரு சிறிய ஆலயம் அமைத்து வழிபாட்டை தொடங்கினார், ராமனுக்கான வழிபாடு மீண்டும் தொடர்ந்தது

அவர் நடத்திய போர்கள் 20, இந்த 20 போர்களிலும் எல்லா கிராமங்களில் இருந்தும் ஆட்களை திரட்டி, கங்கை கரை சாதுக்களை திரட்டி இன்னும் கண்ணில்பட்ட இந்துக்களையெல்லாம் திரட்டி அவர் போராடினார்

முதல் 15 போர்களில் மெல்ல மெல்ல வென்ற அவர் 16ம் சுற்று போரில் இருந்து பெரும் வெற்றி பெற ஆரம்பித்தார், திரும்பும் இடமெல்லாம் அடிவாங்கிய ஹுமாயுனால் அதற்கு மேல் மோத முடியவில்லை

அவ்வளவு பெரும் கொந்தளிப்பான போராக அது இருந்தது, கடைசியில் பலராமாச்சாரி வென்றார்

பாபர் காலத்தில் சுமார் 4 லட்சம் இந்துக்களை கொன்று உருவான பள்ளிவாசல் அருகே ஹூமாயுன் காலத்தில் பலராமாச்சாரி சுவாமி ஒரு இந்து ஆலயத்தை எழுப்பினார்

இக்காலகட்டத்தில் ஷெர்ஷா சூரி டெல்லியில் இருந்தான், அவன் அயோத்தியில் பெரிதாக தலையிடவில்லை

ஹன்சார் ராணி கொடுத்த பெரும் எழுச்சியும், தென்னக பலராம ஆச்சாரியார் நிகழ்த்திய வீரபோரும் அங்கே இந்துக்களின் உரிமையினை மீட்டன ஆனால் பள்ளிவாசலை தொட வழக்கமான இந்து அறம் தடுத்தது

1540ல் ஓடிபோன ஹுமாயுன் பாரசீக அரசன் துணையோடு 1555ல் திரும்பி வந்தான் அப்போது இருந்த சூரி ஷா என்பவனுக்கும் அவனுக்கும் போர் மூண்டது

இக்காலகட்டத்தில் ராஜபுத்திரர் இணைந்து வங்கத்து ஹெமு எனும் விக்ரமாதித்தன் தலமையில் மொத்தமாக இருவரையும் விரட்டி அடித்து ஆட்சியிடித்தனர்

ஹெமு எனும் இந்து மன்னன் ஆளதொடங்கியபோது அயோத்தியில் இந்துக்கள் வழிபாடு ஓங்கிற்று, இஸ்லாமியர் குறைய தொடங்கினார்கள், ஆனால் பள்ளிவாசல் நிலைத்தது

1556ல் அக்பர் ஜலாலுதீன் எனும் ஹூமாயுன் மகன் தன் தாய்மாமன் பைரம்கான் தலமையில் பாரசீக அரசர் சார்வேஸின் துணையோடு டெல்லியினை பிடித்தான்

விஷயம் ஒன்றும் ரகசியமல்ல, அரபு உலக சுல்தானியங்கள் உலகெல்லாம் இஸ்லாமை பரப்ப வேண்டும் இஸ்லாமிய ராஜ்ஜியங்கள் பெருக வேண்டும் எனும் விருப்பம் கொண்டவை

அவை இந்துஸ்தானில் இஸ்லாமிய அரசுகள் நிலைக்க வேண்டும் என்பதற்காக எல்லா உதவிகளையும் இஸ்லாமிய சகோதரத்துவத்தில் செய்வார்கள்

துருக்கி ஆட்டோமான், பாரசீக ஷாக்கள், உஸ்பெக் சுல்தான்கள், ஆப்கன் முரடர்கள் என எல்லோரும் கூடி உதவுவார்கள்

அப்படி உதவிபெற்று வந்தான் அக்பர், அவனுக்கு பின்னணியில் பாரசீக அரசனே இருந்தான்

அக்பர் மகா தந்திரசாலி , ஆட்சியில் ஒரு பாடம் உண்டு, அடித்து வெல்லமுடியாதவனை அணைத்து கொன்றுவிடு என்பது

போரினால் இந்துஸ்தானத்தை பிடிக்கமுடியாது இந்துக்களை வெல்லமுடியாது என உணர்ந்தவன், தன் தாத்தாவுக்க்கும் தகப்பனுக்கும் என்ன நடந்தது என்பதை உணர்ந்தவன், அணைத்து கொல்லும் தந்திரத்தை கையில் எடுத்தான்

அவன் இந்துக்களுக்கு பல சலுகைகளை செய்தான், அதுவரை இருந்த ஜசியா வரியினை நீக்கினான், மதுரா உள்ளிட்ட இடங்களில் இடிக்கபட்டிருந்த இந்து ஆலயங்களை கட்ட உதவி செய்தான், அப்படியே பெரும் போர் நடந்த இடமும் ஹூமாயுனின் வீழ்ச்சியினை தொடங்கி வைத்த அயோத்திக்கும் வந்தான்

அவன் உண்மையினை அங்கே உணர்ந்தான், தன் தாத்தா பாபரும் தந்தை ஹூமாயுனு அயோத்தியினை தொட்டு அங்கு போரை தொடங்கியபின்பே சரிந்தார்கள் என்பதை நன்கு புரிந்துகொண்டான்

இதனால் அயோத்தி வளாகத்தில் ஒருபாதி இந்துக்களுக்கு ஒருபாதி தங்களுக்கு என ஒப்பந்தம் செய்தான்

அயோத்தியினை மீட்ட பலராமாச்சாரியார் அப்போது காவல் இருந்தார், அக்பர் இரு மத தலங்களுக்கும் இடையே சுவர்கட்டி இருவரும் அமைதியாக வழிபடவழி செய்தான்

( அதன்பின் பலராமாச்சாரி பிரக்யாகை சென்று அங்கே தன் கடைசி காலத்தை கழித்து உயிர்நீத்தார், கடைசிவரை எந்த மொகலாயனாலும் அவரை வெல்லமுடியவில்லை, அவர் பரசுராமனின் சாயலில் வாழ்ந்திருந்தார் )

இந்துக்களின் கோரிக்கை முழு இடமும் தங்களுக்கு என்றே இருந்தது, அதனை சொல்லி பார்த்தார்கள் இஸ்லாமியரே அதை அகற்றி தங்களிடம் தரவேண்டும் என கோரினார்கள்

ஆனால் தேர்ந்த தந்திரசாலியான அக்பர் அப்படி முடிவெடுப்பது தன் ஆட்சிக்கு சிக்கல் என்பதையும், ஒரு நெருப்பு அணையாமல் இருப்பது ஆட்சிக்கு நல்லது எனவும் சொல்லி அதை அப்படியே நீட்டிக்கவிட்டான்

இந்துக்கள் ஒருபக்கம் ஏமாந்தாலும் ஒருபக்கம் ராமனை வழிபட தொடங்கினார்கள், கோவிலும் கட்டி கொண்டார்கள்

ஆனாலும் உள்ளூர இது முழுக்க ராமபிரான் ஆலயம், ஆக்கிரமித்தவர்களே அதை தந்துவிடவேண்டும் எனும் ஏக்கம் இந்துக்களுக்க்கு இருந்தது, வன்முறையில் அதை அகற்றும் பலம் இருந்தும் எல்லா தெய்வத்தையும் மதிக்கும் இந்துக்கள் அதை செய்ய தயங்கினார்கள்

அக்பர் தன் ஆட்சி நிலைக்க இந்துக்களுடன் மிக மிக இறங்கிவந்தான், இந்து ராஜபுத்திர பெண்களை திருமணம் செய்தான், இந்து மரபுக்கு குந்தகம் வராமல் அயோத்தி மசூதியில் வழிபட சொன்னவன் ராமர் கோவிலுக்கும் பல சலுகைகள் செய்தான்

அது தங்களுக்கான பின்னாளைய வலை என்பதை அறியா இந்துக்கள் தற்காலிக அமைதி கொண்டார்கள்

அந்த அமைதி அக்பர் காலம் தொடங்கி ஜஹாங்கீர், ஷாஜஹான் காலம் வரை நீண்டது

இந்துக்கள் கோரிக்கை முழு வளாகத்தை மீட்பது என்றிருந்தாலும் மொகலாயரையும் விரட்டிவிட்டால் இன்னொரு ஆப்கானிய இனம் வந்து இன்னும் பெரும் போர் வெடிக்கும் என்றும், மேற்கே அலை அலையாக வரும் ஆப்கானிய கொள்ளையர்களை ஒடுக்க மொகலாய துணை அவசியம் என்பதாலும் காலம் வரும்வரை பொருத்திருப்போம் என சிறிய ராமன் ஆலயத்தில் பலராமாச்சாரி கொடுத்த ஆலயத்தில் வழிபாடுகள் நடந்தன‌

அதே நேரம் அக்பரின் தந்திரத்தில் மொகலாயம் வங்கம் வரை நீண்டது

காலம் 16ம் நூற்றாண்டை தொட்டது, மிகபெரிய பிடிவாதகாரனும் இந்துஸ்தானை இஸ்லாமிய‌ பூமியாக மாற்றுவேன் என பெரும் ரத்த வெறியாட்டம் ஆடியவனும் மதுரா,காசி உள்ளிட்ட இடங்களில் பள்ளிவாசல் கட்டி தீரா குழப்பத்தை தொடங்கியவனுமான அவுரங்கசீப் 1650களில் உடன்பிறந்தோரை ஒழித்து கட்டி அதிகார கட்டிலில் ஏறிகொண்டிருந்தான்

அதே நேரம் தெற்கே சிவாஜி வலிமையான இந்து சாம்ராஜ்யத்துக்கு அடிதளாமிட்டு கொண்டிருந்தான்

அவுரங்கசீப்பின் கைகளுக்கு அதிகாரம் வந்த நொடியில் அயோத்தி மறுபடி எரிய ஆரம்பித்தது

பாபர் ஹூமாயுன் காலத்தில் சுமர் 5 லட்டம் இந்துக்கள் ரத்தத்தால் அயோத்தியில் பெற்ற இந்துக்கள் உரிமை அவுரங்கசீப்பால் அச்சுறுத்தலுக்குள்ளானது..

நான்கு லட்சம் இந்துக்கள் கொல்லபட்டு, பின் இந்து அரசியால் இந்து பெண்களால் பெரும் போராட்டம் உருவாகி, அந்த வீரபெண்கள் கொடுத்த எழுச்சியில் மொகலாயமே அகற்றபட்டு, பின் துறவிகள் அகோரிகளால் ராமனுக்கான போராட்டம் முன்னெடுக்கபட்டு, வீரகுரு பலராமாச்சாரியால் ஆச்சரியமாக பெரு வீரத்துடன் மீட்கபட்ட உரிமை, ஓரளவு பெற்ற உரிமையில் ராமபிரான் வழிபாட்டுக்கு வந்த அயோத்தி ஆலயத்துக்கு மறுபடியும் அச்சுறுத்தல் வந்தது

பூசாரிகள், துறவிகள் ஹன்சார் அரசன், ஹன்சார் ராணி, ஏராளமான பெண்கள் அகோரிகள் என ஒரு இந்து பாக்கி இல்லாமல் சிந்திய ரத்தத்தில் உருவான ஆலயத்தை தன் வெறுப்பு கண்களோடு நோக்கினான் அவுரங்கசீப்..

(தொடரும்..)