அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 07 /21

1857 முதல் நீதிமன்ற வழக்குப் போராட்டம்

1857 முதல் பிரிட்டிஷ் அரச ஆட்சிக்கு எதிராக அயோத்தி ஆலய மீட்பு போராட்டம் மூன்றாம் கட்டமாக தொடங்கிற்று

அதுவரை நடந்த போர்கள் அப்போதும் தொடர்ந்தது ஆனால் எல்லாவற்றையுமே வார்த்தை ஜாலத்தில் மாற்றும் தந்திரசாலிகளான பிரிட்டிசார் அந்த போராட்டத்தை கலவரம் என மாற்றினார்கள்

நிச்சயம் பிரிட்டிசார் நினைத்திருந்தால் 1857லே ராமர்கோவிலை முழுக்க ஒப்படைத்திருக்கலாம், இஸ்லாமியரும் இந்துக்களோடு இணக்கபாட்டுக்கு வந்துவிட்ட நேரம் இனி பழையபடி ஆப்கானியர் ஆளமுடியாது இந்துக்களோடு இணங்கி இருப்பதுதான் வழி என அவர்களே விட்டுகொடுத நேரம் பிரிட்டிசாரின் கொடும் சதி அரங்கேறிற்று

உண்மையில் தங்கள் தலையில் மண் அள்ளிபோட்டு கொண்டது யாரென்றால் இந்துக்கள் அல்ல பிரிட்டிசாரேதான், வரலாறு அதைத்தான் சொல்கின்றது

அது பிரிட்டன் அரசு உலகை ஆட்சி செய்த நேரம் ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் அவர்கள் கையினை விட்டு சென்றன, அந்நேரம் இந்தியா அவர்களின் மிகபெரிய வருமானமாக இருந்தது

இந்துக்களை அனுசரித்து அவர்கள் குறைகளை கேட்டு ஆப்கானியர் செய்யாத நன்மைகளை நியாங்களை இந்துக்களுக்கு பிரிடிட்சார் செய்திருந்தால் இந்துக்கள் போராடியிருக்கமாட்டார்கள்

அப்படி ஒன்று நடந்திருந்தால் பிரிட்டிசாருக்கு இங்கு எதிர்ப்பே வந்திருக்காது அது நிஜம்

இந்துக்களின் மனபான்மை அப்படி அவர்களுக்கு அரசோ, அதிகாரமோ, பணமோ, சுகவாழ்வோ ஆடம்பரமோ முக்கியம் அல்ல, அரசைபற்றி அவர்கள் கவலைபட்டவர்களும் அல்ல, யாரும் ஆளட்டும் எதுவும் எப்படியும் போகட்டும் ஆனால் இந்து ஆலயம் முக்கியம்,வழிபாடு முக்கியம் மதம் மகா முக்கியம் என்பது அவர்களுக்குள் கலந்துவிட்ட ஆத்மார்த்தம்

பிரிட்டிசார் அப்படி செய்திருந்தால் இந்துஸ்தானம் அவர்களின் நிரந்தர ஆட்சிபீடமாக இருந்திருக்கும்

ஆனால் தங்களை பெரிய அறிவாளியாக எண்ணிகொண்ட பிரிட்டிசார் இங்கு ஆப்கானியருக்கு எதிரான போர் நாளை தங்களுக்கும் நடக்கும் என்பதை கணித்து இங்கு குழப்பம் இருந்தால்தான் தாங்கள் ஆளமுடியும் என வேறுவகையில் சிந்தித்தனர்

ஒருவகையில் பிரிட்டிசாரின் வரவு இங்கு ஆப்கானியரை ஒடுக்கி அப்படியே இந்திய செல்வத்தால் பலம் பெற்று மேற்கே துருக்கியிரை ஒடுக்கிபோட வேண்டும் என்பது காலத்தின் கணக்கு

அதுதான் நடக்கவும் செய்தது இதனால் காலம் அவர்களை அனுமதித்தது

ஆனால் காலத்தினை புரியாத பிரிட்டிசார் தாங்களே தங்கள் அறிவால் தந்திரத்தால் ஆட்சியினை பிடித்தது போல் கர்வம் கொண்டு மேலும் ஆட்சி நிலைக்க அடாதன அத்தனையும் செய்தார்கள்

இந்த அயோத்தி சிக்கல் தீர்ந்தால் இந்து இஸ்லாம் சிக்கல் தீரும், அதன் பின் தங்களை எதிர்க்க தொடங்குவார்கள் என்பதையும், இருவரும் அடித்துகொண்டே இருந்தால்தான் தனக்கு நலம் என்பதையும் கணக்கிட்டு அயோத்தியில் குழப்பத்தை செய்தார்கள்

அதே நேரம் இஸ்லாமியர் மேல் அவர்களுக்கு கொஞ்சம் அபிமானம் இருந்ததும் நிஜம், காரணம் அவர்களும் எங்கிருந்தோ வந்து ஆட்சி செய்தவர்கள், பிரிட்டிசார் இப்போது வந்தவர்கள் அதனால் சில புரிந்துணர்வுகள் இந்துக்கள் எக்காலமும் எழகூடாது எனும் அளவில் இருந்தன‌

இந்த பிரிட்டிசார் 1858ல் நடந்த இந்துக்களின் போராட்டத்தை கலவரம் என எழுதி கலவரக்காரர்கள் என இந்துக்களையும் இஸ்லாமியரையும் குபேர டீலா புளியமரத்தில் தூக்கிலிட்டார்கள்

(பின்னாளில் March 18, 1858 ல் பூஜாரி ராம்சரண்தாஸர் & அமீர் அலியை தூக்கிலிட்டு எண்பது ஆண்டுகள் கழித்து, Jan 28, 1935 ல் நிக்கோல்சன் என்ற ஆங்கிலேய அதிகாரியால் அந்த புளிய மரம் வெட்டப்பட்டது.

காரணம் அந்த மரத்தை இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றாக வணங்கினார்கள், குபேர டீலா இந்து இஸ்லாம் ஒற்றுமைதலமாக விளங்கிகொண்டிருந்தது, அதை பிரிட்டிசார் எரிச்சலுடன் பார்த்ததால் மரம் அகற்றபட்டது

பாரதப் பிரதமர் மோடி ஆகஸ்ட் 2020 ல் கோவில் அடிக்கல் நாட்டும் விழாவில், அந்த புளிய மரம் இருந்த இடத்தில் நினைவுச் சின்ன அடையாளமாக ஒரு பாரிஜாத செடியை நட்டார்)

பிரிட்டிசார் 1858ல் மிக தந்திரமாக அயோத்தியினை கலவர பூமி என வரையறுத்து அங்கே பிரிவினையினை வலுவாக்கினார்கள்

அங்கே ஒரு வேலி கட்டி மசூதி இஸ்லாமியருக்கு அதை அடுத்து இந்துக்களுக்கான பூமி என சொல்லபட்டது ஆனால் கோவில் கட்ட அனுமதி இல்லை

அப்படியே ராமர் பிறந்த இடத்துக்கு அதாவது மசூதி உள்ளே சென்று நவாப் காலத்தில் கொடுக்கபட்ட உரிமையும் பறிக்கபட்டது, அதற்கு கலவரம் காரணம் என சொல்லபட்டது

உரிமையினை மீட்க நடப்பது போராட்டம் , மாறாக குழப்பம் செய்ய நடப்பது கலவரம் எனும் வார்த்தைகளில் இந்துக்களின் போராட்டத்தை கொச்சை படுத்த தொடங்கினர் பிரிட்டிசார்

1858க்கு பின் பிரிட்டிஷார் இந்தியர்கள் ஆயுதம் வைத்திருப்பதை தடை செய்தனர், இந்துக்களிடமிருந்தும் இஸ்லாமியரிடம் இருந்தும் எல்லா ஆயுதங்களும் பறிமுதல் செய்யபட்டன‌

காவல் நிலையங்களும் நீதிமன்றங்களும் திறகக்கபட்டன, இனி நீதிமன்றங்களே நியாயம் சொல்லும் என இந்துக்களும் ஆங்கிலமெல்லாம் கற்க தொடங்கினார்கள், பிராமணர்கள் உள்ளிட்ட இந்துக்கள் அன்றே ஆங்கிலம் படித்ததில் பிரிட்டிசாருடன் வாதிட்டு இந்து உரிமையினை மீட்கும் வேகம்தான் முதலில் இருந்தது

அதற்குத்தான் படிக்கவே தொடங்கினார்கள்

அயோத்தி இருக்குமிடம் பைசாபாத் நீதிமன்றம் என அழைக்கபட்ட எல்லைக்குள் வந்தது, அந்த நீதிமன்றம் வந்தபின் நடந்த அனைத்தும் இன்றும் ஆவணங்களாக உண்டு

அந்த ஆவணங்கள்தான் இந்துக்கள் எந்த அளவு உணர்வோடு இருந்தார்கள் என்பதை சொல்கின்றது

அப்போது இந்துக்களுக்கு தலைவன் கிடையாது, கையில் ஆயுதம் கிடையாது, சட்டபடி வாதாட ஒரு வழக்கறிஞர் கூட கிடையாது, முழுக்க முடக்கபட்டிருந்தார்கள்

ஆனாலும் அவர்கள் உணர்வை இழக்கவில்லை, போராட்ட குணத்தை இழக்கவில்லை, முடவன் போராடுவது போல உணர்ச்சியினால் முடிந்ததை செய்து எதிர்ப்பை தெரிவித்து அயோத்தி தங்களுக்கு வேண்டும் என்பதை காட்டிகொன்டே இருந்தார்கள்

அந்த ஆவணங்களில் சுவாரஸ்யமான சம்பவம் உண்டு, எந்த அளவுக்கு அவர்கள் ஒன்றுமில்லா நிலையிலும் போராடினார்கள் எனும் குறிப்புகள் உண்டு

அயோத்தி போராட்டத்தில் இந்துக்கள் போலவே சீக்கியரின் பங்களிப்பும் மறக்கமுடியாதது, அவர்கள் ராமபிரானை தங்கள் குல முதல்வனாக கருதினார்கள்

ராமனின் மகன் லவன் வழிவந்தவர்கள் தாங்கள் என்பதில் உறுதியாய் இருந்தனர், லவபுரி என்பதே லாகூராயிற்று என்பதால் அயோத்தி தங்கள் பூர்வீக ஸ்தலம் என போராட வந்தார்கள்

சீக்கியர்கள் என்பவர்கள் தனி மதம் என சொல்லபட்டாலும் உள்ளூர தாங்கள் இந்துக்களின் சகோதரர்கள் எனும் உணர்வேதான் இருந்தது, இந்துக்களை காப்பதும் மீட்பதும் தர்மம் என உறுதிபூண்டு குருநாணக் காலத்தில் இருந்தே போராட வந்தார்கள், அதுதான் குரு கோவிந்த்சிங் காலத்திலும் வந்தது

அந்த 1858ம் ஆண்டே, ஆங்கிலேயர்களால் நிராயுதபாணிகளாக தலைவன் இல்லாத கூட்டமாக ஒருவகையில் அனாதைகளாக ஆக்கபட்டாலும் சீக்கியர்கள் அயோத்தியில் குவிந்து இந்துக்களோடு சேர்ந்து போராடி கொண்டே இருந்தார்கள்

அப்பட் சுமார் 25 சீக்கியர்கள் பல இந்துக்களை அழைத்துகொண்டு இந்துக்களுக்கு தடை செய்யபட்ட பள்ளிவாசலில் அதாவது ராமர் பிறந்த இடத்தில் நுழைந்து ஹோமம், யாகமெல்லாம் செய்து வழிபட தொடங்கினார்கள்

அத்தோடு சுவரில் “ராம ராமா” என கரிகட்டையால் எழுதியும் வைத்தார்கள், இன்னும் பலரை அழைத்து வந்து கருவறை இருந்த இடத்தில் வழிபாடு நடத்தி பிரிட்டிசார் விதித்த தடையினை எதிர்த்து நின்றார்கள்

வாளில்லா காலத்தில் கரிகட்டை மூலம் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள், இதை கண்ட பள்ளிவாசல் பொறுப்பாளன் காவலர்களை அழைத்து அது விவகாரமனது ஆவணமாக உண்டு

இது அடிக்கடி தொடர்ந்தது, காவல் நிலையம் நீதிமன்ற புகார்கள் என பல உண்டு, பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் புகார் பெற்று பிரிட்டிசார் நடவடிக்கை எடுத்த ஆவணங்கள் உண்டு

சில சமயங்களில் பள்ளிவாசல் பொறுப்பாளனுக்கு லஞ்சம் கொடுத்து இந்துக்கள் பள்ளிவாசலில் புகுந்து ராமன் கருவறையில் வழிபட்ட சம்பவங்கள் உண்டு, ராம நவமி போன்ற காலங்களில் இது நடந்தது

இதன்பின் பின் பிரிட்டிசார் காவலை அதிகபடுத்தினாலும் இந்துக்கள் புகுந்து ஏதாவது செய்வதும் திடீரென அத்து மீறி ராமா ராமா என கத்திவிட்டு ஓடுவதும் வழமையாயிற்று

எல்லாம் இழந்தாலும் இந்துக்கள் நம்பிக்கையினை மட்டும் இழக்கவே இல்லை

1860ல் வந்த நீதிமன்ற புகார் நிலமையினை கடுமையாக்கியது, உள்ளே வரமுடியாத இந்துக்கள் வெளிமுற்றத்தில் இருக்கும் ராமன் தொட்டிலை சுற்றி அனுமதியின்றி கட்டடம் கட்டுகின்றனர் இதனை இந்துக்களிடம் இருந்து மீட்டு தரவேண்டும் என இஸ்லாமிய தரப்பு புகார் அளித்தது

அத்தோடு எங்களால் பள்ளிவாசலில் தொழுகை செய்ய முடியவில்லை, நாங்கள் தொழுகை ஆரம்பித்ததும் அவர்கள் மிக உரக்க முரசு அறைந்து சங்கு ஊதுகின்றார்கள், பெரிய பெரிய சப்தம் எழுப்பி ஏதேதோ செய்கின்றார்கள்

ஒவ்வொரு தொழுகையிலும் இது நடக்கின்றது எங்களால் அங்கு தொழமுடியவில்லை , எங்களை விரட்டுகின்றாரர்கள், வெளியேற சொல்கின்றார்கள் எங்களுக்கு பாதுகாப்பில்லை என பிரிட்டிசாரிடம் கண்ணை கசக்கிய காட்சி இருந்தது

அதற்கு காரணம் இல்லாமல் இல்லை, அக்காலங்களில் நவாபுகள் வீழ்ச்சி அடைந்தனர் அதனால் இஸ்லாமியருக்கு ஆட்சியிலும் சமூகத்திலும் பெரும் வேலைவாய்ப்பு வழங்கபடவில்லை, இதனால் ஏராளமான இஸ்லமையர் பல இடங்களுக்கு பிழைக்க சென்றனர்

சிலர் இருந்தாலும் பழைய பலமில்லை வருமானமில்லை பதவியில்லை

ஒரு சமூகம் அரசாங்க தயவிருந்தால் நன்கு அதிகாரமாய் செழிப்பாய் வாழும், அரச பலம் இல்லை என்றால் சரியும் அப்படி இஸ்லாமியரும் சரிய தொடங்கியிருந்தார்கள்

இதனால் இந்துக்களை எதிர்க்க பொருளாலும் எண்ணிக்கையாலும் எதிர்க்க வலுவில்லாதவர்களாய் பிரிட்டிசாரிடம் கண்ணை கசக்கினார்கள்

அவர்களால்தான் இந்துக்களை அடக்கி தங்கள் ஆட்சியினை நிலைநிறுத்தமுடியும் என எண்ணிய பிரிட்டிசார், முன்னாள் எஜமானர்களை வைத்து இந்நாளைய எஜமானர்களான தாங்கள் ஆளமுடியும் என எண்ணிய பிரிட்டிசார் இஸ்லாமியருக்கே ஆதரவானார்கள்

இதனால் காவலை அதிகபடுத்தினார்கள் ஆனால் இந்துக்கள் அதற்கு கொஞ்சமும் அடங்கியதாக தெரியவில்லை மாறாக வலுத்தார்கள்

இந்துக்கள் ஏதாவது செய்வதும் சில நாட்கள் பிரிட்டிசார் காவல் இருப்பதும் பின் அவர்கள் சென்றபின் இந்துக்கள் திரண்டு ஏதாவது செய்வதுமாய் காலங்கள் கடந்து கொண்டிருந்தன‌

அப்போது நாடெங்கும் ஆங்காங்கே போராட்டம் வெடித்தது, பஞ்சம் வந்தது கொஞ்சம் கொஞ்சமாக சுதந்திர போராட்டம் வெடித்தது, பிரிட்டிசார் கடுமைகாட்டினார்கள்

ஆனாலும் அயோத்தியில் போராட்டம் வழமைபோல் தொடர்ந்தது

1877ல் ஆங்காங்கே நடக்கும் கலவரங்களை அடக்க பிரிட்டிசார் கவனம் செலுத்தியபோது அயோத்தி வளாக்த்தில் ராமன் தொட்டிலுக்கு அருகே ராமபாதுகை மண்டபமும் சீதை சமையல் அறையும் மீண்டும் வந்தன, இதுதான் ராமன் அரண்மனை இப்படித்தான் அக்கால கோவில் இருந்தது என கட்டிவைத்தார்கள்

அதிகாரிகள் வந்தால் கட்டிவைத்தது இருந்தது, அதை இடிக்கவும் பிரிட்டிசாருக்கு விருப்பமில்லை அது பெரும் கலவரம் எழுப்பலாம் என்பதால் தலையினை பிய்த்துகொண்டு அமர்ந்தார்கள்

ஆனால் ஒருவகையில் இந்துக்கள் ஒரு உணர்வோடு நிற்பதில் உள்ளூர மகிழ்ந்தார்கள் ஆனால் மசூதி பொறுப்பாளனுக்கு ஆதரவு என்பதுபோல் நடந்து கொண்டார்கள்

அதாவது பிரிட்டிசார் அதிகம் அங்கு தலையிடவில்லை ஆனால் முழுக்க ஒதுங்கியும் செல்லவில்லை அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு சென்றார்கள், இந்துக்கள் வழக்கம் போல செய்வதை எல்லாம் செய்து கொண்டே இருந்தார்கள்

இந்துக்களின் வருகை பல இடங்களில் இருந்து அதிகரித்தது, ஏகபட்டோர் குவிந்தார்கள் அகோரிகள், சாதுக்கள் மக்கள் என கூட்டம் அதிகரித்தது

1877ல் ராவநவமி அங்கே களைகட்டியது, பெரும் கூட்டத்தை சமாளிக்க பள்ளிவாசல் வெளிபுறத்தில் புதிய வழிபாதை சுவரை இடித்து திறக்கபட்டது, அதாவது இந்துக்களின் கை அந்த அளவு ஓங்கிற்று

அந்த வழியில் நின்றும் அமர்ந்தும் இந்துக்கள் வழிபட தொடங்கினார்கள்

1882ல் நிலமை இன்னும் அதிகரித்தது, திடீரென மசூதி பொறுப்பாளரிடம் இருந்து ஒரு விரக்தி புலம்பல் வந்தது அது எந்த அளவு இஸ்லாமிய பிடி அங்கே தளர்ந்து பிரிட்டிசாரின் தந்திரம் ஒன்றாலே அது இன்னும் பள்ளிவாசலாக இருப்பதை சொன்னது

அக்காலகட்டங்களில் இஸ்லாமியர் ஆட்சி இழப்பால் வறுமையில் தள்ளபட்டனர், அப்போது வறுமை அதிகம் என்றாலும் ஜஸிவா வரி முதல் பல கட்டி அடிமைகளாகவே வாழ்ந்த இந்துக்களுக்கு அது சிக்கலாக வில்லை

ஆனால் ஆளும் சமூகமாக இருந்து சரிந்த இஸ்லாமிய சமூகத்துக்கு அது பின்னடைவானது, அதனால் அங்கு மக்கள் தொகையிலும் குறைந்தனர் பல இடங்களுக்கு சிதறினர்

பிரிட்டிசார் ஆதரவு ஒன்றிலே மிக குறைந்த வகையில் அங்கு இஸ்லாமியர் இருந்தார்கள், அவர்கள்தான் மிக பரிதாபமாக புகார் கொண்டு வந்தார்கள்

(தொடரும்..)

(1860களில் அந்த மொத்த பள்ளிவாசல் வளாகம் இப்படித்தான் இருந்தது

1. ராமர் தொட்டில் வைத்த மேடை, 2. சீதையின் சமையலறை, 3. அன்னதான இடம் 4. ஆங்கிலேயர் கட்டிய சுவர் 5. மசூதி கூரை கட்டடம்.

இந்த காலகட்டம் பெரும் பஞ்சம் பிரிட்டிசாரின் சுரண்டலால் வந்த காலம், இந்தியாவின் தானியங்களையெல்லாம் அவர்கள் அள்ளிபோக இங்கு இந்துஸ்தானிகள் மிக கொடியவகையில் செத்து கொண்டிருந்த காலம்

அப்போதும் அந்த பஞ்சத்திலும் அயோத்த்தியில் இந்துக்கள் போராட்டத்தை கைவிடவில்லை, அப்படி ஒரு உருக்கமான காட்சி அயோத்தி தவிர எங்கும் உலகம் கண்டதில்லை)