எருக்கூர் நீலகண்ட பிரம்மாச்சாரி
இந்திய சுதந்திரபோராட்டம் என்பது ஆப்கானியர் காலத்திலே தொடங்கி வீரசிவாஜியால் இன்னும் தீவிரமாக்கபட்டு கடைசியில் 17ம் நூற்றாண்டில் மொகலாயம் ஒடுக்கபட்டபோதே வெற்றி அடைந்திருந்தது
ஆனால் ஆங்காங்கே சுல்தான்களை ஒடுக்க பிரிட்டிசாரை அனுமதித்த தவறில் அவர்கள் சக்திபெற்று வலுபெற்று ஆட்சியினை கைபற்றினர்
மொகலாயர்போல் அல்லாமல் பிரிட்டிசாரின் தந்திர ஆட்சி கடுமையாய் இருந்தது, இங்கே ஆயுதபோராட்டம் 700 ஆண்டுகாலம் நடந்தது என்பதால் அது தனக்கும் எதிராக திரும்ப கூடாது எனும் அச்சத்தில் முதலில் இந்தியர் ஆயுதம் வைக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தான்
இரண்டாவது ஒன்றுபட்ட இந்தியாவின் வலுவான தலமை உருவாகிவிட கூடாது என்பதில் இன்னும் கவனமாக இருந்தான்
இந்த இருவிஷயங்களையும் கொண்டுதான் அவன் ஆட்சி செய்துகொண்டிருந்தான், அப்போதும் தேசம் அடங்கவில்லை பல வகையில் போராடிகொண்டேதான் இருந்தார்கள்
எங்கே சறுக்கினார்கள் என்றால் இந்துக்களுக்கு ஒன்றுபட்ட தலமை இல்லை, ஆங்காங்கே வங்கத்தில் ஒருவன், உத்திரபிரதேசம் பஞ்சாபில் ஒருவன் தமிழகத்தில் சிலர் என ஆயுதம் தூக்கினார்களே தவிர ஒன்றுபட்ட தலமை இல்லை
இப்படி ஒரு தலமை அதாவது வலுவான தலமை வந்துவிட கூடாது, இவர்களை ஒருங்கிணைக்கும் சக்திமிக்க தலமை வந்துவிட கூடாது என்றுதான் காந்தி தென்னாப்ரிக்காவில் இருந்து கொண்டுவரபட்டார், வந்தவர் தன் நோக்கத்திற்கு ஏற்ப யாரும் ஆயுதம் ஏந்தாமல் காத்துகொண்டு பிரிட்டிசாருக்கு காவல் இருந்தார்
காந்தியினை விமர்சிக்கும் எண்ணம் இல்லை என்றாலும் அதுதான் நிஜம், காரணம் காந்திக்கு முன்பாக நடந்த வீரியமிக்க போராட்டங்கள் அவர் காலத்தில் அப்படியே நசுக்கபட்டன அல்லது செய்யமுடியாமல் தடுக்காப்ட்டன
அப்படி ஏகபட்ட தியாகிகள் காந்திக்கு முன்பு இருந்தார்கள், வாழ்வை பணயம் வைத்து போராடினார்கள் பின் விரக்தியால் சன்னியாசம் பெற்று பிரபஞ்சத்திடமே பொறுப்பை விட்டுவிட்டு துறவியாய் மடிந்தார்கள்
அவர்கள் பெயரோ புகழோ வராதபடி காந்தி பார்த்துகொண்டார், நேரு அதற்கு காவல் இருந்தார், பிரிடிசார் புன்னகைத்தார்கள்
அந்த பெரும் தியாகிகள் மறக்க கூடியவர்கள் அல்ல, அவர்கள்தான் உண்மையில் மகா ஆத்துமாக்கள், மகா மகா ஆத்துமாக்கள்
மஹாத்மா என சுட்டிகாட்டபடும் தகுதி அவர்களுக்குத்தான் உண்டு
அவர்களில் வ.வே.சு அய்யார், அரவிந்தர் என பலர் உண்டு. அந்த வரிசையில் வருபவர்தான் நீலகண்ட பிரம்மச்சாரி.
அந்த மாவீரன் நேதாஜிக்கு முன்னோடி, குதிராம் போஸ் வழிவந்த இளஞ்சிங்கம், பின்னாளைய பசும்பொன் தேவருக்கு அவனே வழிகாட்டி
இன்று பலம்பெற்று நிற்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அவன் சிந்தனையே, அதை உருமாற்றித்தான் பின்பு பல சங்கங்கள் வந்தன, இந்து மகா சபை எல்லாம் எழும்பிற்று
எருக்கூர் நீலகண்ட பிரம்மாச்சாரி
ஆம் 1889ம் வருடம் சீர்காழியினை அடுத்த எருக்கஞ்சேரியில் பெரிய பிராமண குடும்பத்தின் மூத்த மகனாய் பிறந்திருந்தான், திராவிட இம்சைகள் சொல்வது போல பிராமணர் எல்லாம் வசதியாக வாழவில்லை, மகா வறுமையானவர்களும் இருந்தார்கள்
வறுமை எல்லா சாதியிலும் உண்டு
அந்த பெரும் குடும்பத்தின் மூத்த மகனான அந்த நீலகண்டன் திருவனந்தபுரம் முதல் எங்கெல்லாமோ வேலை செய்து சென்னையினை அடையும் பொழுது வயது 16
அப்பொழுதுதான் கர்சன் எனும் வஞ்சக வெள்ளையன் வங்கத்ததை துண்டாக்கினான். வெள்ளையன் முதலில் கால்பதித்த இடமும் வங்கமே, சுதந்திர உணர்ச்சி பெரிதும் பொங்கிய இடமும் வங்கமே
அதை மதரீதியாக பிளந்து போட்டான் கர்சன், பாகிஸ்தான் பிரிவினைக்கு அதுதான் முதல் திட்டம்
நாடு பொங்கிற்று ஒருகாலமும் தேசம் மதரீதியாக பிரியாது என பொங்கியபொழுது பலர் போராட வந்தனர், அந்த 16 வயது நீலகண்டனும் வந்தான்
குடும்பத்தின் மூத்தமகனுக்கு வறுமை தாங்கும் கடமை தலையானது என்றாலும் நாட்டின் விடுதலை அதைவிட அவசியமாய் பட்டது
அந்த 16 வயதிலே நாடு சுதந்திரம் அடையும் வரை திருமணம் செய்யமாட்டேன் என வைராக்கியமாய் பிரம்மச்சரியம் ஏற்று நீலகண்ட பிரம்மச்சாரி என்றானான்
பிராமண அடையாளமான குடுமியினை எடுத்து ராணுவவீரனாய் மாறினான், ஆம் வெள்ளையனை அடித்துவிரட்டுவதே தன் பிறப்பின் நோக்கம் என சத்திரியனாய் நின்றான்
“சூர்யோதயம்” எனும் பத்திரிகையை தொடங்கினான். மக்களிடம் செய்தியினை கொண்டு செல்ல அது தேவை என கருதினான்
வ. உ. சிதம்பரம் பிள்ளை, பிபின் சந்திரபால், பாரதியார், வ.வே.சு அய்யர், வாஞ்சிநாதன் போன்றவர்களுடன் ஒரே அணியில் இயங்கினாலும் தனியாக ஒரு காரியம் செய்தார்
ஆம் முதல் இந்திய ராணுவம் அல்லது புரட்சி இயக்கம் என சொல்லபடும் “அபிநவ் பாரத்” போராளி இயக்கம் நடத்தினார், வெளிபார்வைக்கு ஏதோ இயக்கம் என அறியபடும் அந்த குழு ஆயுத பயிற்சியும் பெற்றிருந்தது
தமிழகத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் இருந்தார்கள், இதை நாடு முழுக்க பரப்பி மக்களை திரட்டி பெரும் போராய் தொடுத்து வெள்ளையனை விரட்ட திட்டம் வைத்திருந்தான் நீலகண்டன்
அவனுக்கு 20 வயதை நெருங்கியபொழுதுதான் வ.உ.சி கப்பல் விட்டார்,அதற்கு தன்னால் ஆன உதவி எல்லாம் செய்தான் நீலகண்டன், அந்த கப்பலுக்கான பங்குகளை திரட்டி கொடுத்ததில் அவன் கரங்களும் இருந்தன
அந்நேரம் ஆஷ்துரை வந்து மாபெரும் கொடுமைகளை செய்து வ.உ.சியினை வீழ்த்தியதும் வாஞ்சிநாதன் ஆஷ்துரையினை கொன்றான்
வாய்ப்புக்காக காத்திருந்த வெள்ளை அரசு 14 பேரை கைதுசெய்தது அந்த 14 பேரும் 21 வடதுக்கு கீழ்பட்டவர்கள், வாஞ்சிநாதனை அடுத்த முதல் குற்றவாளி நீலகண்ட பிரம்மச்சாரி
அவருக்கு கொலையில் நேரடி தொடர்பு இல்லை, அவர் இன்றைய ஆர்.எஸ்.எஸ் போல நாடெங்கும் அபினவ் பாரத் இயக்கத்துக்கு ஆள்திரட்டி கொண்டிருந்தார். கொலை நடந்தபொழுது அவர் கல்கத்தாவில் இருந்தாலும் பிடித்து நெல்லைக்கு கொண்டு வந்தார்கள்
நெல்லையில் டோமர் எனும் நீதிபதி இருந்தார், வெள்ளையரில் அவர் கருணை மிக்கவர், ஆஷ் துரையின் அட்டகாசமும் அக்கொலையில் வாஞ்சிநாதனை தவிர யாரும் தொடர்பில்லை என்பதையும் உணர்ந்திருந்தார்
அவர் நீலகண்டனை கண்டதும் அந்த ஒளிவீசும் முகத்தையும் அவனின் தெய்வீக கோலத்தையும் கண்டு அமர சொல்லித்தான் விசாரணை செய்தார்,நிச்சயம் தூக்கு தண்டனை வழக்கு அது
ஆனால் 7 ஆண்டு சிறை என தீர்பளித்தார் டோமர், நீலகண்டன் தன் தண்டனையினை சென்னையிலும் கோவையிலும் மாறி மாறி கழித்தபொழுது சிறையில் கடும் தண்டனை கொடுக்கபட்டது, விறகுவெட்டுதல் முதல் பல கட்டாய தண்டனையில் இருந்த அவர் போராடி புத்தகம் வாசிக்கும் உரிமையினை பெற்றார்
கடும் சிறைவாழ்வில் அவர் பாளையங்கோட்டை மைசூர் என்றெல்லாம் மாற்றபட்டார், அந்நேரம் முதலாம் உலகப்போர் காலம் என்பதால் தப்பி செல்ல முயன்றார், ஆனால் அவரை அடித்து பிடித்த அரசு அவர் தற்கொலை செய்ததாகவும் தாங்கள் காப்பாற்றியதாகவும் சொல்லிகொண்டது
7 வருடம் தண்டனை முடிந்து அவர் பாரதியாரை பார்க்க வந்தபொழுதுதான் பாரதி மரணித்தார், பாரதிக்கு கொள்ளிவைக்கும் உரிமை நீலகண்டனுக்குத்தான் வழங்கபட்டது
ஆனால் சுதந்திரம் வாங்கிகொடுக்காத தான் அதற்கு தகுதியில்லை என மறுத்து அழுது நின்றார்
1928ல் இரண்டாம் சுதந்திர போராட்டத்தை தன் 28ம் வயதில் தொடங்கினான் நீலகண்டன். அப்பொழுது கம்யூனிச இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்த ஆங்கிலேய அரசு அவனை அப்போதைய இந்தியாவும் இன்றைய பாகிஸ்தானுமான முல்தான் மற்றும் பர்மாவில் வைத்தது
ஆம் மிக இளம் வயதிலே மொத்தம் 12 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டு 1933ல் வெளிவந்த அவருக்கு கள சூழல் முழுக்க மாறி இருந்ததை உணரமுடிந்தது
தீவிர போராட்டக்காரர்கள் யாருமில்லை, கம்யூனிஸ்டுகளுமில்லை போராட்டம் முழுக்க காந்தி எனும் ஒரு அஹிம்சாவாதியிடம் சிக்கி மக்கள் உணர்ச்சியும் கோபமும் மறந்து ஒரு ஆட்டுமந்தை போலாகியிருந்தனர்
வெள்ளையன் நுணுக்கமாக இந்திய போராட்டத்தை தன் கைகூலி மூலம் தனக்கு ஆதாயமாக மாற்றி, தான் வீசி எறியும் எலும்புக்கான போராட்டமாக ஆக்கி வைத்திருப்பதை கண்டு மனம் வெதும்பினார்
அந்நேரம் எல்லா தீவிர போராளிகளும் மனம் வெறுத்திருந்தார்கள், சாவர்க்கர், வ.வேசு அய்யர் எல்லோருமே மனம் வெறுத்து ஒதுங்கினார்கள்
வ.வே.சு அய்யர் சேரன்மகாதேவி பக்கம் ஆசிரமம் அமைத்தது போல் நீலகண்ட பிரம்மச்சாரி மைசூர் அருகே சென்னகிரியில் ஒரு ஆசிரமம் அமைத்து தங்கினார்
ஒரு முழு துறவிகோலத்தில் மாறி தியானம் தவம் என முழுக்க இந்து துறவியாய் மாறி நின்றார், அவரை சந்திக்க காந்தியும் வந்தார்
மலைமேல் இருந்து இறங்கி வந்த நீலகண்டர் இந்து எழுச்சி ஏற்படாமல் இங்கு எதுவும் மாறாது, இந்து எழுச்சியின்றி காட்சி மாறினாலும் நிலைக்காது என சொல்லி காந்தியினை ஆசீர்வதித்துவிட்டு சென்றார்
காந்திக்கு தான் ஒரு இந்து என்பது நினைவுக்கு வந்ததும், ராமர் நினைவுக்கு வந்ததும் அப்பொழுதுதான்
நீலகண்ட பிரம்மசாரியின் பேச்சும் அவரின் செயல்பாடும் காந்திக்கு பிடித்திருந்தது அவர் நீலகண்டரை அழைத்தார், ஆனால் இது சுதந்திரத்துக்கான வழி அல்ல வெள்ளையனிடம் பிச்சை கேட்டு கொண்டிருபதன் பெயர் போராட்டம் அல்ல என சொல்லி மறுத்தார்
இந்தியா பிரிவதை பார்த்தபடிதான் இருந்தார் நீலகண்டர், காந்தி தன் இம்சை கொள்கையால் சாவதையும் அவர் பார்த்து கொண்டே இருந்தார்
தொடர்ந்து சுதந்திரம், தேசபற்றில்லா காங்கிரஸின் இந்து அடக்குமுறை எல்லாம் பார்த்து கொண்டே தனித்து தவமிருந்தார் அந்த சன்னியாசி
அவர் தவம் பெருகிகொண்டே இருந்தது, காங்கிரஸின் முகமூடி சரிந்து கொண்டே இருந்தது. காங்கிரஸ் சரிவதை பார்த்து கொண்டே இருந்தார்
ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமி என அவர் பெயர் மாறிற்று, அவரின் பழைய பெயரும் இயக்கமும் யாருக்கும் தெரியவில்லை, அவர் தியானம் வழிபாடு என யோகியாக மாறிகொண்டிருந்தார்
அவரின் அபினவ் பாரத் அமைப்புத்தான் பின்னாளில் ஆர்.எஸ்.எஸ் என வளர்ந்து வந்ததையும் அவரால் உணரமுடிந்தது, சாவர்க்கரின் கனவு நனவாவதை மெல்ல பார்த்து கொண்டே இருந்தார்
தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் திராவிட குழப்பம் அவர்களின் காட்டாட்சி, ராம்சாமியின் படுபயங்கர இந்து துவேஷம் எல்லாம் கண்டு கொண்டேதான் இருந்தார், ஒருவார்த்தையும் பேசவில்லை
ஆம் ராம்சாமி கோஷ்டி வெறும் பம்மாத்து கோஷ்டி, கருணாநிதி எல்லாம் நொடியில் நசுக்கியிருக்க வேண்டிய பிம்பம் ஆனால் சமயசார்பற்ற காங்கிரஸ் அவர்களுக்கு ரகசிய துணை இருப்பதை அவரின் ஞானகண்கள் காட்டின.
காங்கிரஸ் அழியாமல் திராவிடம் அழியாது என்பதை தன் நீண்ட நெடிய அனுபவத்தில் அவர் உணர்ந்திருந்தார்
மொழிவாரி மாநிலம் பிரிந்தபொழுது அவர் இருந்த கன்னடம் பெரும் வளர்ச்சி பெற்றது, அப்பக்கம் அணைகளெல்லாம் வந்து செழிக்க ஆரம்பித்தது மக்கள் அவரை தெய்வாம்சமாக கருதினர்.
ஆம் மிகபெரும் ஞானம் அவரிடம் குடிகொண்டிருந்தது, அவரின் தீர்த்தம் நோய் தீர்த்தது பெரும் அதிசயங்களை சித்தர் போல் செய்ய தொடங்கினார்,கூட்டம் கூடிற்று
ஆனால் அப்பொழுதும் இந்தியா விடுதலைபெறும், தன் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் என உறுதியாக சொல்லிகொண்டேதான் இருந்தார், கடவுளில் கலந்திருந்தும் பிறப்பில் கலந்திருந்த அந்த தேசபற்று அவரைவிட்டு கொஞ்சமும் நீங்கவில்லை
ஒவ்வொருவரும் சாமியாராக ஆயிரம் காரணம் உண்டு ஆனால் விசுவாமித்திரருக்கு அடுத்து நாட்டுக்காக சன்னியாசியான ஒரே ஞானி அவர்தான், இந்த கால வரலாற்றில் அவர் ஒருவர்தான்
20 வயதில் ஆயுதம் ஏந்தி நின்ற அவர் காலத்தினால் பல உண்மைகளை புரிந்து ஆன்மீக எழுச்சியே இத்தேசத்தை மாற்றும் என அதில் இறங்கி சன்னியாசியாய் பிரபஞ்சத்திடம் இந்தியாவின் எதிர்காலம் பற்றி தியானித்தே செத்தபொழுது வயது 88
தேசத்தில் ஆன்மீக எழுச்சி ஏற்படவேண்டும் என யோகியாய் அவர் வாழ்ந்து 1978ம் வருடம் மறைந்தார்
அவர் இறந்தபின்புதான் அதாவது அவரின் கடைசி காலத்தில்தான் காங்கிரஸின் அஸ்தமனம் ஆரம்பமாயிற்று, இங்கும் திராவிடத்தின் சரிவும் ஆரம்பமாயிற்று
யோகிகளும் ஞானிகளும் இறந்தபின்புதான் விஸ்வரூபம் எடுப்பார்கள் அவ்வகையில் நீலகண்ட பிரம்மச்சாரி பெரும் உருவம் எடுத்தார்
1980க்கு பின் காங்கிரஸ் வீழ்ந்து பாஜக உருவாகி வளர்ந்தது, எதெல்லாம் இத்தேசத்தின் ஆபத்தும் அச்சமுமாய் இருந்ததோ அவை எல்லாம் அகன்று அந்த நீலகண்டன் கண்ட இந்தியா இப்பொழுது எழும்பி நிற்கின்றது
ஆம் பாஜக என்பது நீலகண்ட பிரம்மச்சாரி போல வாஞ்சிநாதன் போல வ.வே.சு அய்யர் போல சுப்பிரமணியம் சிவா போல நேதாஜி போல பாரதியார் போல பல மகான்களின் ஆத்ம ஆசியால் உருவான கட்சி, அவர்களின் வழிகாட்டலால் வந்து நிற்கும் பலத்த கட்சி
அந்த மகான்கள் அன்று வெள்ளையனிடமும் காந்தியிடமும் தோற்றிருக்கலாம் ஆனால் அவர்கள் கனவும் உழைப்பும் இன்று பாஜக வடிவில் வந்து மின்னி கொண்டிருகின்றது
இவ்வளவு பெரும் சிறப்பு வாய்ந்த நீலகண்ட பிரம்மச்சாரிக்கு தமிழ்நாட்டில் ஏதும் நினைவிடம் உண்டா, சிவாவுக்கு உண்டா, வ.வே.சு அய்யருக்கு உண்டா என்றால் இல்லை
ஏன் இல்லை இரண்டே காரணம் முதலாவது அவர் இந்து பிராமணர் இரண்டாவது காங்கிரஸ் எதிரி
முதலானது திமுகவுக்கு பிடிக்காது இரண்டாவது காங்கிரசுக்கு பிடிக்காது
இதனால்தான் திரும்பும் இடமெல்லாம் ராம்சாமி அண்ணா பெயர்கள் பஸ்நிலையம் முதல் கல்லூரி வரை இருக்கும் தமிழகத்தில் நீலகண்டருக்கு அடையாளமில்ல்லை
யாருகெல்லாமோ பாரத ரத்னா கொடுத்த காங்கிரஸ் அவரை 1978ல் சாகும் வரையும் செத்த பின்பும் கண்டுகொள்ளவில்லை
இனியாவது அம்மகான் இங்கு கொண்டாடபட வேண்டும், நாட்டுக்காகவும் இந்து மதத்துக்காகவும் தன் இளம்வயதிலே போராட வந்து வாழ்வினையே அர்பணித்த அந்த ஞான்வீர துறவிக்கு பாரதம் இன்று தலைசாய்த்து அஞ்சலி செலுத்தி அவரின் உழைப்பும் கனவும் வீணாகவில்லை, வீணாக விடவும் மாட்டோம் என நன்றி கண்ணீரோடு சொல்லி கொண்டிருக்கின்றது
ஆம் அவர் சொன்ன முழக்கமான பாரத் மாதாவுக்கு ஜே எனும் அந்த முழக்கம், நீதிமன்றத்திலும் சிறையில் அடிவாங்கும் பொழுதும் சிறையில் வலிதாங்க அவர் சொன்ன அந்த முழக்கம்…
இப்பொழுது மறுபடி இங்கு கேட்பது அவருக்கான அஞ்சலி.
இப்பொழுது பாஜக செலுத்தி கொண்டிருக்கும் அந்த அஞ்சலி, நீலகண்ட பிரம்மச்சாரியின் கனவுபடி தேசம் வலிமையாகும் என வீரமுழக்கத்துடன் சொல்லும் அஞ்சலி
பாரத மாதாவுக்கு ஜே.
இன்று அரூபியாய் நின்று தேசத்தை காத்துகொண்டிருகின்றார் அந்த யோகி ஓங்காரனந்தா எனும் நீலகண்ட பிரம்ச்சாரி, மோடியின் கரம்பிடித்து அந்த ஞானவீரமகன் வழிநடத்தி செல்வதை ஞானகண்ணால் மட்டுமே காணமுடியும்
ஆயுதம் தூக்கி வாழ்நாளில் செய்யமுடியா காரியத்தை, ஆன்மீக யோகியாகி அரூபியாய் செய்துகொண்டிருக்கின்றார் அந்த தமிழகத்து ஆஞ்சநேயர்.
(updated on 04, February 2024)