காளிதாசனின் மேகதூதம் : 05
நான்காம் பத்து ஸ்லோகங்கள்
“மேகமே உஜ்ஜைனியினை நீ நெருங்கும்போது சிப்ரா என்ற நதியினை காண்பாய், அதிகாலை வேளையில் அந்த நதியின் குளிர்காற்று நகரை நோக்கிவீசும், கரையோரம் உள்ள மரங்களில் இருந்தும், நதிமேல் ஆடி திரியும் நீர்பறவைகளின் சத்தங்களையும் அந்த ஈரம் நிறைந்த கனமான காற்று நீண்ட தூரம் எடுத்து செல்லும்
நதியோரம் மலர்ந்த தாமரை உள்ளிட்ட மலர்களின் மணம் கலந்த அந்த காற்று நகரத்தையே மணம் கமழசெய்யும்
உஜ்ஜைனி நகரில் மறுபடியும் மறுபடியும் தன் காதலியோடு கூட விளையும் காதலன், தளர்ந்துவிட்ட தன் தலியின் தளர்ச்சியினை போக்க அவளிடம் கெஞ்சிகொண்டிருக்கும் அந்த காலைபொழுதில் , அவன் தவியாய் தவிக்கும் நேர்த்தில் அக்காதலனுக்கு அக்காற்று பெரும் உதவி செய்யும்
அன்று பூத்த பூக்களின் மணமும், இதமான குளிரும், பறவைகள் பாடும் இனிய ஒலியும் கொண்ட அக்காற்று உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியினை கொடுக்கும், அந்த காற்றால் தளர்ச்சி நீங்கும் காதலியர் தங்கள் துணைவனை மகிழ்வோடு மீண்டும் தழுவிகொள்வார்கள்
அப்படியான சுகந்தமான காற்றுவீசும் சிப்ரா நதியினை நீ கண்டு அந்த காற்றினால் புத்துணர்ச்சி கொள்வாய்
மேகமே உஜ்ஜைனியின் செல்வ செழிப்பு என்ன என்பதை நீ அந்நகரின் கடைதெருவில் அறியலாம், பெரிய பெரிய முத்துக்களால் ஆன மாலைகள், நடுவில் ஜொலிக்கும் ரத்தினத்துடன் அமைக்கபட்ட மாலைகள் கோடிகணக்கில் குவிக்கபட்டிருக்கும்
வெண்மை நிற சங்குகளும் முத்துசிப்பிகளும் இன்னொருபுறம் குவிந்திருக்கும், பசும்புல் நிறத்தினால மரகத நகைகளும் பவளமும் இன்னும் கோடி கோடியாய் குவிந்திருக்கும், இப்படி கடலின் செல்வம் அனைத்தையும் கடைதெருவிலே காணுமக்களெல்லாம் இப்படி கடலின் மொத்த செல்வங்களை வாரிவந்தபின் “இனி கடல் வெறும் உப்புதண்ணீர் மட்டும் கொண்டதல்லவா?” என பேசிகொள்வார்கள், அந்த காட்சியினை நீ காண்பாய்
மேகமே, உஜ்ஜைனி மக்கள் தங்கள் பெருமைக்குரிய அடையாளமான உதயண்ணன் கதையினை எப்போதும் பேசிகொண்டே இருப்பார்கள்
இந்த இடத்தில்தான் அவன் சண்டமஹேஸ்வனின் மகள் வாஸ்வத்யயை என்பவளை சாசகமாக கவர்ந்து சென்றான், இங்குதான் அவனின் தங்கபமைமரகாடு இருந்தது, இங்குதான் அவனின் மலைபோன்ற நளகிரி எனும் யானை இருந்தது அதுதான் பெரும்தூண்களையம் மண்டபத்தையும் சாய்த்தது என அவன் கதையினை பெருமையாக பேசுவார்கள்
உதயண்ணன் அவர்களுக்கு அவ்வளவு பெருமையானவன், அவன் வீரமும் சாகசமும் அவர்களை சிலிர்க்கசெய்த விஷயங்கள் என்பதால் நிறைய அவனைபற்றி பேசிகொண்டே இருப்பார்கள், நீ அதனை கேட்டபடியே செல்வாய்
மேகமே, உஜ்ஜைனியின் குதிரைகள் நிறத்தால் மட்டுமல்ல வேகத்தாலும் சூரியனின் தேரை இழுக்கும் குதிரைகளுக்கு சவால்விடுபவை, அங்குள்ள யானைகள் வளர்ந்து மலைபோல் நிற்பவை, அவற்றின் கன்னத்தில் இருந்து ஒழுகும் மதநீர் நீ மழைபெய்வதை போல வெள்ளமென ஓடும்
அந்த உஜ்ஜைனியின் வீரர்கள் எப்படிபட்டவர்கள் என்றால் முன்பு ராவணனுடனே போரிட்டவர்கள், ராவணின் பலமான வாளான சந்திரஹாசம் எனும் வாளால் வெட்ட்பட்ட அடையாளத்தை கொண்டவர்கள், அந்த பெருமை மிக்க வடு மறைந்துவிடும் என்பதால் நகைகூட அணியாதவர்கள், அந்த காயத்தையே பெரிய அணிகலனாக கருதிய வ்சம்சத்தில் வந்தவர்கள்
உஜ்ஜைனி வீரர்களும் தங்கள் முன்னோர்களை போல விழுப்புண்களைத்தான் ஆபரணமாக காட்டுவார்களே தவிர, அதனை நகைகள் அணிந்து மறைக்கமாட்டார்கள் அப்படி வீரசிந்தனை பெருமை மிக்கவர்கள். அந்த பெரும் பலமும் வீரமுமிக்க சேனையினை நீ காண்பாய்
மேகமே, உஜ்ஜைனி பெண்கள் கருத்த பெருத்த நீண்ட கூந்தலை கொண்டவர்கள். சந்தணமும் அகிலும் எரித்து எழும் புகையால் அந்த அழகிய கூந்தலை மணமாக்குவார்கள், அப்போது வீட்டில் எழும் புகை சாரள வழியாக வெளிவந்து தெருவெல்லாம் நிறைந்து வான் நோக்கி எழும் , அந்த மணமிக்க புகை உன்னை அடைந்து உன்னையும் மணமும் பலமும் பெறவைக்கும் அதை ஏற்றுகொள்வாய்
வீட்டு தோட்டத்தில் வளர்க்கபடும் மயில்கள் உன்னை கண்ட மகிழ்வில் தோகைவிரித்து ஆடி உன்னை வரவேற்கும்
மேகமே அந்த இனிய புகையின் வாசனையும் அது கொடுக்கும் ஆரோக்கியமும் பெற்று மகிழ்ந்து தளர்ச்சி போக்குவாயாக, மழைபெயது இளைத்த நீ அந்த அழகான உஜ்ஜையியின் மாட மாளிகையின் சிகரத்தில் சற்று தங்கி இருந்து இளைப்பாறலாம், நறுமண மிக்க திரவியமும் மலர்களும் சூடிய பெண்களின் சிவந்த பாதம் பட்ட அந்த தெருக்களையும் மாளிகைகளையும் பார்க்கும் போது உன் களைப்பு நீங்கி புத்துணர்ச்சி வரும், அந்த உற்சாகத்தில் இனிதே உன் பயணத்தை தொடர்வாய்
மேகமே அந்நகரை அடுத்துதான் மஹா காளம் எனும் சிவாலயம் வரும், அது பிரசித்தியானது. அந்த கோபுரத்தில் இருக்கும் சிவசேகர கணங்கள், சிவனின் நஞ்சுண்ட கழுத்து கருநீல நீறத்தில் இருப்பதை போல நீயும் கருநீல நிறத்தில் இருப்பதை கண்டு ஓடிவந்து உன்னை பணிந்து வரவேற்கும்
அந்த சிவாலயம் பக்கம் கந்தவதி என்றொரு ஆறு ஓடும், அந்த ஆறு அந்நதியில் பூத்த கருங்குவளை மலர்களின் மணம் கொண்டது, இன்னும் அங்கு நீராட வரும் மங்கையர் பூசும் வாசனை பொடிகளால் அந்நதி இன்னும் மணமாகும்
அந்த இனியமணத்தை எடுத்து செல்லும் காற்று அதனை அக்கோவில் முழுக்கவும் அருகிருக்கும் நந்தவனத்தின் செடி கொடிகளிலும் பூசிவைக்கும், அப்படி மணம் பூசிய செடி கொடிகளை மெல்ல அந்த மணமான காற்று ஆட்டியும் வைக்கும், அந்த அழகான காட்சிகளை நீ காண்பாய்
மேகமே, நீ மாலைக்கு முன்பே அந்த மஹா காளாய சிவாலயத்தை அடைந்துவிட்டால் உடனே நகர்ந்துவிடாதே, மாலை வரை காத்திரு, காரணம் அந்த சிவாலயத்தின் மாலை பூஜை அவ்வளவு அழகானது
சூரியன் மறையும் அந்த அந்திமாலையில் செய்யபடும் அந்த வழிபாட்டில் இனிய பாடல்களை பாடுவார்கள், மிருதங்கம் போன்ற இசைகளும் முழங்கும்
மேகமே, நீயும் உன் இடியோசையால் அந்த வழிபாட்டினை அழகு செய்வாய், அந்த பாடல்களின் இசையோடு, இசைகருவிகள் ஒலிக்கும் போது நீயும் இடி இசைத்து சிவனை வணங்குவாய், சிவனின் அருள் உனக்கும் கிடைக்கும், இடி இசைத்து சிவனின் பூஜையில் பங்குபெறும் உன்னை எல்லோரும் வாழ்த்துவார்கள்
மேகமே, உனக்கு இன்னொரு விஷயமும் சொல்வேன், அந்த மஹா காளய ஆலய வளாகத்தின் முன்னால் கனிகையர் சிவனை போற்றி ஆடிபாடுவார்கள்
அவர்கள் சாமரம் வீசி ஆடிபாடி நர்த்தனமிடும் கணிகையர், அப்படி அவர்கள் தாளத்துக்கு ஏற்ப காலை வைக்கும் போது அவர்கள் இடையில் கட்டியிருக்கும் மேகலையின் ஒலி அழகாக மெல்லிய இனிமையுடன் கேட்கும்
அவர்கள் சாமரம் வீசும் போது கைகளை உயர்த்துவார்கள் அப்போது அவர்கள் அணிந்திருக்கும் ஆபரணத்தின் ஒளி சாமரத்தின் பிடிகளில் பட்டு மின்னி ஜொலிக்கும் , இப்படி மேகலை இசைக்கும் ஒலியும், சாமரபிடி பின்னும் ஒளியுமாக அவர்கள் அழகாக நர்த்தன நடனமிடுவார்கள்
அப்படி நர்த்தனமிடுவதால் அவர்கள் களைப்பார்கள், இன்னும் அவர்கள் காதலனால் வந்த நககுறி அவர்கள் கழுத்தோரமும் இன்னும் சில இடங்களிலும் அவர்களுக்கு வேதனை கொடுக்கும்
அப்போது நீ முதன் முதலாக அங்கு மெல்லிய நீர் துளிகளை தூறலாய் தூவுவாய், அவர்கள் மேல் விழும் அந்த துளி, நககீறல்களால் பட்ட காயங்களுக்கு ஆறுதலாய் இருக்கும், அந்த மகிழ்வில் அந்த கணிகையர் உன்னை தேடுவர்
ஆனால் அவர்கள் சிவன் முன்னால் ஆடுபவர்கள் அல்லவா? அதனால் முகத்தை திருப்பி அந்நேரம் உன்னை காணமுடியாது, அதனால் வண்டுபோன்ற கண்களை மட்டும் நீ இருக்கும் திசைநோக்கி திருப்பி கடைக்கண்பார்வையினை நன்றியோடு பார்ப்பார்கள்
அப்படி அப்பெண்களின் கண்கள் ஒரே வரிசையில் உன்னை தங்கள் நீண்ட விழியால் உன்னை நோக்கும், அது கருத்து நீண்டிருக்கும் மாலையினை சூட்டி, வெள்ளியில் பதித்த கருமணி மாலையினை சூட்டி உனக்கு நன்றி சொல்வது போலிருக்கும்
மேகமே, நீ பெரிய மிருதங்கம் வானில் இசைக்கபட்டதுபோல சிவனுக்கு இசையால் சேவை செய்வாய், அதனால் அங்கே கொஞ்ச நேரம் காத்திரு, வழிபாடும் நடனமும் முடிந்தபின் சிவன் தன் இருபது கைகளையும் உயர்த்தி நடனமாடுவது வழமை
அங்கே நீ அவருக்கு ஒரு சேவை செய், அது பாக்கியமாகும்
மேகமே, அந்த தாண்டவ நடனத்தில் சிவன் ரத்தம் சொரியும் கரிய யானைதோலை போர்த்தி ஆடுவது வழமை, அந்நேரம் நீயோ மலை நேர சிவந்த சூரியனால் செக்க சிவந்து செம்பருத்தி பூவின் நிறத்தை அடைந்திருப்பாய்
கருத்தமேகமான நீ சிகப்பு கதிர்கலின் வண்ணத்தால் ரத்தம் சொறியும் யானையின் தோலை போல பெரிதாக காணபடுவாய்
அப்படி தோற்றமளிக்கும் நீ சிவன் தாண்டவத்தினை தொடங்கும் நேரம் பெரிய காடுபோன்ற அவரின் தோளை வட்டவடிவமாக மாலைபோல் போர்வை பொல் சூழ்ந்து கொள்வாய்
ரத்தம் சொரியும் யானைதோலுக்கு பதிலாய், அந்திவான சூரியனால் கருமையும் சிகப்பும் கொண்டு உரித்த யானைதோல் போல காட்சியளிக்கும் நீ அவரை தழுவிகொள்வாய்
இதனால் வழக்கமாக யானைதோல் போர்த்திய சிவனை கண்டால் அச்சமும் அருவருப்பும் அடையும் பார்வதி நீ சிவனை தழுவிகொள்வதால் மகிழ்ந்திருப்பாள், நீ செய்யும் இந்த சிவசேவையால் மகிழ்ச்சி கொள்ளும் அவள் உன்னை வாழ்த்துவாள்
உன்னை அணிந்துகொண்ட சிவன் அதன் பின் யானை தோலை தேடமாட்டார், இதனால் பார்வதியும் மிகவும் ஆனந்தம் கொள்வாள், இதனால் உன்னை கானும் சிவனடியார்கள் மனதிலும் நீ நன்றியோடு நினைக்கபடும் பாக்கியம் பெற்றவனாவாய்
மேகமே அப்படி மஹ காளாய சிவாலயத்தில் சிவசேவை செய்தபின் நீ இரவில் மீண்டும் உஜ்ஜைனிக்கு திரும்பு வாய், அங்கே விலைமகளிர் தன்னை அழ்கு செய்துகொண்டு தன்னை எதிர்பார்ப்பவன் வீடு நோக்கி செல்ல மனமெல்லாம் வலியாக காத்திருப்பர், அவர்கள் வாழ்வே சோகமும் துயரமும் நிறைந்ததல்லவா?
வாழ்க்கையின் இருளிலே சிக்கிகொண்டு மனதால் மிதிபடும் அவர்கள் இந்த இரவில் எப்படி செல்வது என தவித்துகொண்டிருப்பர், அந்த இருள் ஊசி குத்தினாலும் ஒட்டிகொள்ளும் அளவு அடர்த்தியான இருள், அவர்களுக்கே தேடுமிடம் செல்லவெண்டும், அதுதவிர அவர்களுக்கு வருமானமுமில்லை, நீ அந்த அபலைகளுக்கு உரைகல்லில் இழைக்கபடும் தங்கத்தின் ரேகை போல மின்னும் உன் அழகான மின்னலால் வழிகாட்டு
அந்நேரம் இடியும் மழையும் கொடுத்து அவர்களை அச்சுறுத்தாதே, அவர்கள் வாழ்வே பரிதாபம். அப்படி நீ செய்தால் அவர்களின் வருமானம் கெடும், அந்த பாவத்தை செய்யாதே எல்லோர்களையும் வாழவைக்கும் நீ மனம் விரும்பாத தொழிலை விதியினால் செய்யும் அந்த பெண்களும் வாழ வழி செய்வாயாக….”
(தொடரும்…)