சிவராத்திரி சிவாலயங்கள்

சோமவார தொடக்கமான இந்த நாளின் மாலையில் இருந்து இந்த தேசம் முழுக்க சிவராத்திரி வழிபாட்டுக்குள் செல்கின்றது

இனி வரும் மூன்று இரவுகளும் மிக முக்கியமானவை, அதுவும் மகா கும்பமேளா நடக்கும் இந்த காலகட்ட சிவராத்திரி மிக மிக முக்கியமானது

இந்த மூன்று மாலைகளும் முக்கியமானவை, அதுவும் மூன்றாம் நாள் இரவு முழு விழிப்பு வழிபாடும் நான்கு சாம பூஜைகளும் அதி முக்கியமானவை

தேசம் பாரத பிரதமர் மோடி தலமையில் அவருடன் சிவராத்திரி வழிபாட்டை முன்னெடுக்கின்றது, எல்லா வகையிலும் தேசத்துக்கு பெரும் வளத்தை காவலை பலத்தை ஐஸ்வர்யத்தை அந்த மகாதேவர் அருளட்டும்

எல்லோரும் சிவராத்திரிக்கு தயாராகும் நேரமிது, இனி அந்த பெரும் விழா முடியும் வரை அந்த மகா சிவனை தவிர‌ வேறு சிந்தனைக்கு இடமே இல்லை

சிவராத்திரி விஷேஷமாக கொண்டாடபடும் காலமிது, அந்த காலகட்டத்தில் ஒரு உண்மை சரியாக விளங்கும்

அதாவது குமரி மாவட்டத்து சிவாலய ஓட்டம் தொடங்கி, சிவராத்திரி பிரசித்தியாக கொண்டாடபடும் சிவாலயங்கள் வரை காணப்படும் விஷயம் சைவ வைணவ ஒற்றுமை தாண்டி ஆறு மார்க்கங்களும் ஒரே ஆலயத்தில் காணபடும் அந்த ஒற்றுமை

அதாவது சன் மார்க்கம் எனும் சூரியவழிபாடு, முருக வழிபாடு, கணபதி வழிபாடு , சக்தி வழிபாடு, சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு எனும் ஆறுவழியும் ஒன்றாகவே தொடக்கதில் இருந்ததை அவதானிக்கலாம்

இவை எங்கே தனி தனியாக வலுவானது என்றால் இந்து மதத்துக்கு ஆபத்து இல்லாதபோது அவை தனி பிரசித்தியான வடிவமாக உருவெடுத்தது

பொதுவாக பேரரசர்களிடம் ஒரு வழமை உண்டு, அது போர் அல்லாத காலங்களில் தங்கள் படைகளை தங்களுக்குள் பிரித்து மோதவிடுவது, விளையாட விடுவது, அதாவது தங்களை தாங்களே வலுபடுத்தும் காரியம்

அதைத்தான் இந்துமதமும் செய்தது, பிரிவுகள் ஆறு என பின்னாளில் சொல்லபட்டாலும் அதன் வேற் ஒன்றே, நால்வகை வேதம், அடிப்படை தர்மம், யாக விதிகள், ஆகம விதிகள் என அடிப்படையில் எல்லாம் ஒன்றே

ஆனால் தனி பிரதான தெய்வங்களை கொண்டு தங்களுக்குள் வாதிட்டு அவை இந்துவினை ஏதோ ஒரு வகையில் இந்துவாக இருத்தின‌

பவுத்தம்,சமணம் எழுந்த போது இந்த வாத சக்தி இந்துக்களுக்கே உரிய போராட்ட சக்தி அவர்களை ஒன்றிணைத்து சனாதனவாதிகளாக நிறுத்திற்று

இந்துமதம் அதில்தான் நின்றது, அதில்தான் மீண்டெழுந்து பவுத்தத்தை சமணத்தை வேரறுத்து போட்டது

நான் சைவன், வைஷ்ணவன, கொள்மாரன், அம்மாள் உபாசகன் என எதுவாக இருந்தாலும் அடிப்படையில் சனாதனி என ஒன்று சேர்த்து அது மீண்டெழுந்தது

ஆப்கானியர் காலம் முதல் பல கொடும் காலங்களில் இவை ஒற்றுமை வந்தது, வைஷ்ணவ குருவான ராம்தாஸர் சிவபக்தரான சிவாஜியினை சீடனாக்கி பெரும் இந்துராஜ்ஜியம் அமைத்தார்

அம்பாள் உபாசகரான வித்யாரண்யர் வைஷ்ணவர்களான ஹரிகர புக்கரை கொண்டு பெரும் இந்து ராஜ்யம் அமைத்து காட்டினார்

மொழி பேதம், இனம் தாண்டி இன்னும் பல விஷயம் தாண்டி சாதி உள்ளிட்ட எல்லாமும் தாண்டி நீயும் நானும் சனாதனவாதி என இணைந்து பகையினை முடித்து இந்துமதம் மீட்டனர்

அப்படி ஒரு அடிப்படை ஒற்றுமை காலம் காலமாக இருந்திருக்கின்றது

வரலாற்றை கூர்ந்து கவனித்தால் ஆபத்தில்லா காலங்களில் இந்துமதம் ஆறுபிரிவுகளாக தங்களில் யார் பெரியவர் என மோதி தன்னை வலுபடுத்தி வந்திருக்கின்றது

பின்னாளில் ஆறு பிரிவுகள் இரண்டாயின, சைவம் வைணவம் என எல்லா பிரிவும் இரண்டில் அடங்கிவிட்டன‌

அப்போதும் நான் சைவம், நான் வைணவம் என அடிப்படையில் உறுதியாய் நின்றார்கள் ஆபத்து என்றால் சிவாஜியும், ராமதாஸரும் போல , வைஷ்ணவ‌ நாயக்கர்களும் மதுரை சிவனடியார்களும் போல ஒன்றாக சனாதனவாதியாக நின்றார்கள்

ஆக எப்போதெல்லாம் நான் சனாதனி என பொதுவாகவும், நான் சைவம், நான் வைணவம் என தனியாகவும் இந்துக்கள் நின்றவரை எல்லாம் சரியாக இருந்திருக்கின்றது

எப்போது “எம்மதமும் சம்மதம்” ,”மதமென பிரிந்தது போதும்”, “மதத்தை விட மானுடநேயம் முக்கியம்” என இந்து பேசதொடங்கினானோ

மற்ற மதத்தவரெல்லாம் அவனவன் தர்மத்தில் நிலைத்திருக்க, இவன் மட்டும் “எம்மதமும் சம்மதம்” என பேச தொடங்கினானோ அன்று தொடங்கிற்று இந்துக்களின் வீழ்ச்சி

எப்போது சைவமோ, வைணவமோ எதுவோ அடிப்படையில் நான் சனாதானி, நான் இந்து எனும் பெரும் உணர்வும் அதற்குரிய நடவடிக்கை காரியமும் அவனிடம் வருமோ அப்போது எல்லாம் சரியாகும்

அப்படி ஒரு நிலை வந்துவிட கூடாது என்பதாலே நீ தமிழன், நீ திராவிடன், நீ இந்த சாதி என அவனுக்குள் எல்லா பிரிவினைக்ளும் வகை வகையாக புகுத்தபடுகின்றன அதனை இந்துக்கள் கவனமாக தவிர்த்து தங்களை இந்துவாக உணர்ந்தால் எல்லாம் எதிர்காலத்தில் சரியாகும்

சிவராத்திரி காலத்தில் ஒவ்வொரு இந்துவும் உணரவேண்டிய , உணர்ந்து எடுக்கவேண்டிய முக்கிய தீர்மானத்தில் இது முக்கியமானது

ருத்திரகோடீஸ்வர, வேதபுரீஸ்வரர், பக்தவச்சலேஸ்வரர், தீர்த்தநாத சிவன்

எல்லாச் சிவாலயங்களும் சிவராத்திரி அன்று வழிபட வேண்டியவை என்றாலும் ருத்திர கோல சிவனை, ருத்திர அம்ச சிவனை வழிபட்டால் பலன் அதிகம் . அந்த ஆலயங்களில் தலையானது திருக்கழுக்குன்றம் ருத்ரகோடீஸ்வரர் சிவாலயம்.

காஞ்சிபுரம் அருகே செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிக மிக தொன்மையான‌ சிவாலயம் இது.

நான்கு வேதங்களும் நான்கு மலைகளாக வீற்றிருக்கும் தலம் இது. வேதங்களே சிவனை நோக்கித் தவம் செய்யும் இடம் இது. இதனால் “வேத்கிரி” என அவைகளுக்குப் பெயர், காலத்தால் மூத்த தலம் இதுதான்.

ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய பாறைகளாக இருப்பதாகவும், அவற்றுள் அதர்வணவேத பாறை உச்சியில் சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார் என்று தலபுராணம் விவரிக்கிறது.

காசி, தில்லை, திருவாரூர், திருவண்ணாமலை, காஞ்சி, காளகஸ்தி, மதுரை என மகா முக்கிய ஆலயங்கள் இறையனாரின் உடலாகவும், இந்த ருத்திரகோடீஸ்வரர் கோவில் இதயமாகவும் அமைந்துள்ளது.

சிவன் வாழும் இமயம் என்பது இமயவானுடையது. கயிலாயம் குபேரன் சிவனுக்காய் உருவாக்கியது. சிவனே தானே தேர்ந்து வேதங்கள் நடுவில் வாழும் ஆலயம் இந்த ருத்திரகோட்டீஸ்வர ஆலயம்.

இந்தத் தல வரலாறு மிக மிக தொன்மையானது. பாற்கடலை கடைந்த காலத்தினுடையது.

பாற்கடலை கடைய முதலில் மந்தார மலையினை வேகமாக முதலில் இட்டார்கள். அது கடலின் அடித்தளத்தில் மோதி பாதாளத்தில் விரிசல்களை உண்டாக்கிற்று.

பின் பகவான் விஷ்ணு மத்தாகி பாற்கடல் கடைப்பட்டாலும் இந்தப் பிளவுகள் வழியே பாதாளத்தில் அடைபட்ட அசுரர் கோடிக்கணக்கில் வெளிவந்தனர்.

இவர்கள் அந்நேரம் தேவர்களும் இன்னொருபாதி அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது காலியாக இருந்த தேவர்களின் ஆசனங்களில் அமர்ந்து அட்டகாசம் செய்தனர்.

இவர்களை அடக்க சிவன் ருத்திர கோலத்தில் மாறி ஒரு கோடி ருத்திரர்களை தோற்றுவித்தார். அவர்கள் 32 வகை ஆயுதங்கள் ஏந்தி அந்த அசுரர்களுடன் போரிட்டு அவர்களை ஒழித்து நின்றனர். பின் அவர்கள் தாங்கள் என்ன செய்வது? எனக் கேட்டனர்.

சிவன் அவர்களைத் தங்களுக்குள் அழைக்க திருவுளம் கொண்டார். அவர்களை இந்தத் தலத்தில் வந்து தன்னில் கலக்கும்படி அருள்புரிந்தார். அப்போது அந்த ஒரு கோடி ருத்திரர்களும் அவரிடம் ஒரு வரம் கேட்டார்கள்.

“எம்பெருமானே, எங்களுக்குத் இத்தலத்தில் முக்தி தந்தது போல, இங்கு வரும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் வரம் அருளி உம்மோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இங்கு ஒருமுறை வைக்கப்படும் வில்வம் கோடிவில்வமாகவும், ஒரு முறை சொல்லும் மந்திரம் கோடி முறை சொன்னதாகவும் உங்களால் ஏற்றுக்கொள்ளபடும். கோடி ருத்திரர்களாகிய எங்கள் பொருட்டு அவ்வரம் அருள வேண்டும்.

வரும் பக்தர்கள் ஒவ்வொருவரும் எங்கள் கோடிபேரின் அருளையும் பெறவேண்டும்” என்றார்கள்.

சிவன் அவர்களுக்கு அந்த வரத்தை அருளினார்.

சிவன் அங்கு ருத்திர அம்சமாய் நிற்க ருத்திரர்கள் கோடி பேரும் அவரில் கலந்துவிட்டார்கள். இதனால் அந்தச் சிவன் ருத்திரர்கோடி ஈஸ்வரர் என்றானார்.

சிவராத்திரி அன்று அக்னிப்பிழம்பாக அங்கு நின்ற சிவனிடம் ருத்திரர்கள் கோடிப் பேரும் அடைக்கலாமானர்கள். அதனால் இங்கு சிவராத்திரி விசேஷம்.

இங்கு இன்னும் இரு தலபுராணம் உண்டு.

ஒருமுறை சிவனை சந்திக்க வந்தார் திருமால். அங்கே அவர் வாகனமான கருடனுக்கும் நந்திக்கும் சண்டை வந்து கருடனை அவர் சிதைத்துப் போட்டார்.

கருடனை உயிர்பித்து அதனை மீள உயிர்கொடுத்த சிவன் ஆணவத்தால் நந்தி செய்த காரியத்தை நினைத்து தண்டனை அளித்தார்

அந்தத் தண்டனை தீர நந்தி வந்து தவமிருந்த இடம் இது. அதனால் பிரதோஷம் எக்காலமும் விசேஷம். நந்திக்கும் கருடனுக்கும் நடந்த சண்டையினைச் சொல்ல கழுத்தில்லா கருடன் இன்றும் உண்டு.

இன்னொரு தலபுராணம் சிவன் பார்வதி திருமணம். இமவான் மகளைச் சிவன் திருமணம் செய்தபோது தன் மாமனார் இடத்தில் வசிக்க விரும்பாச் சிவன், பார்வதியின் தெய்வத் திருமேனியுடன் இந்த தலத்துக்கு வந்தார், சிவனுக்கு மிக மிக பிடித்த சொந்த இடமான இங்கு வந்தாள்.

அந்தத் திரிபுர சுந்தரிதான் பக்தவச்சலலேஸ்வரர் ஆலயத்தில் குடியிருக்கின்றாள்.

இதுதான் ஆதிகால ஆலயம், இந்த ஆலயத்தில் இருந்துதான் வேதபுரி என்றும், ருத்ரகோட்டீஸ்வரம் எனும் இந்தத் தலத்தின் வரலாறு தொடங்குகின்றது, இந்த ருத்திர கோடீஸ்வரர்தான் காலத்தால் மூத்த ஆலயம்.

பின்னாளில் அங்கு வேதபுரீஸ்வரர் ஆலயம், பக்தவச்சலம் ஆலயம் என இரு ஆலயங்கள் வந்தன. பின்னாளில் தீர்த்தகிரி சிவன் ஆலயங்கள் வந்தன, அவை தொன்மையானவை எனச் சொல்லபட்டாலும் காலத்தால் பிந்தியவையே.

இந்த ருத்திரகோடீஸ்வரர்தான் வேதநாதன், வேதபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டார், அது இன்றும் தொடர்கின்றது.

இந்த ஆலயத்தின் சிறப்புக்கள் பல உண்டு. முதல் அதிசயம் நம்பமுடியாத ஆனால் சிலிர்ப்பூட்டும் அதிசயம் 12 ஆண்டுக்கு ஒருமுறை தீர்த்தத்தில் விளையும் சங்கு.

பொதுவாக சங்கு அதுவும் வலம்புரி சங்கு கடலில்தான் உப்புநீரில் விளையும். இங்கு 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு தானே உருவாகி கரைக்கு வரும். அந்தச் சங்கை கொண்டுதான் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படும். பழைய சங்குகள் அறையில் பத்திரமாக வைக்கப்படும்.

12 ஆண்டுகொரு முறை சங்கு தீர்த்தம் எனும் தீர்த்தத்தில் இது தவறாமல் நடக்கும். இது “சங்கு புஷ்கர விழா” என அழைக்கப்படும்.

சங்கு உருவாகும் நாளுக்கு முன் நுறை பொங்கும். தீர்த்தம் ஆர்ப்பரிக்கும். அதன் பின் ஓங்கார சத்ததுடன் சங்கு கரை ஒதுங்கும்.

இந்த அதிசயத்தை தொடங்கி வைத்தவர் மிருகண்டு முனிவரின் மகனும் சிவனால் சாகாவரம் பெற்றவருமான மார்கண்டேய மகரிஷி.

மார்கண்டேயன் 16 வயதில் சாக வேண்டும் என்பது விதி, அந்த விதியினை வெல்ல பல சிவாலயங்களில் அவர் வழிபட்டார். அப்போது இந்த ஆலயத்துக்கும் வந்தார். அங்கு சிவனுக்கு அபிஷேகம் செய்ய நினைத்த போது பாத்திரம் ஏதுமில்லை.

அவர் சிவனுக்கு அபிஷேகம் செய்ய கலன் இல்லாமல் தவித்த போது பெரிய சங்கு ஒன்று இந்த தீர்த்தத்தில் இருந்து உதித்தது, அதை கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து மனம் மகிழ்ந்தார் மார்கண்டேயர்

அந்நேரம் குருபகவான் கன்னி லக்னத்தில் வரும் நாளாய் இருந்தது. அந்நாளில் இங்கு பெரிய விழா கொண்டாடப்படும், லட்ச தீபம் ஏற்றி பிர்சித்தியாகக் கொண்டாடப்படும்.

இந்த ஏற்பாட்டின் படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தச் சுழற்சி வரும். அந்தச் சுழற்சியில் சங்கும் ஓங்காரச் சத்தத்துடன் வரும்.

இந்த அதிசயம் காலம் காலமாக உண்டு. இப்போதுவரை 12 ஆண்டுக்கு ஒருமுறை உண்டு. கடந்த ஆண்டும் சங்கு வந்தது.

இந்த மலை வேதமலை, வேதகிரி என்றே அழைக்கப்பட்டது. வேதங்கள் அழியாத் தவமிருக்கும் மலை என்பதால் அப்படிப்பெயர் பெற்றது. இது கழுங்குன்றம் திருகழுங்குன்றம் என்றானது கழுகு வடிவில் வந்த ஞானியரால்.

மறுபிறப்பு என்பதில் யார் என்ன வடிவம் எடுப்பார் என்பது தெரியாது. கழுகு வடிவம் பெற்ற சில ரிஷிகள் இங்கு வந்து பணிந்து முக்தி பெற்றதால் இது கழுங்குன்றமாகி திருக்கழுக்குன்றம் என்றுமானது.

பிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள் சாருப்ய பதவிக்காக தவம் இருந்தனர். அது அழிவற்ற நிலைக்கான ஆனால் தவத்தின் முடிவில் சாருப்ய என வரம் கேட்பதற்குப் பதில், சாயுட்சய என கேட்டதால் கழுகாக மாறிவிட்டனர் என்பது புராணம்.

எனவே நான்கு யுகத்திற்கு இருவர், என கழுகுகளாக இங்கு வரும் அவர்கள், சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் உண்டு செல்வர். கழுகு சர்க்கரைப் பொங்கல் உண்ணும் அதிசயம் இங்குதான் நடைபெறும்.

ஆம். கழுகுகள் பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் கழுகுன்றம் என்று பெயர் ஏற்பட்டது. முதல் யுகத்தில் சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகளும், இரண்டாம் யுகத்தில் சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகளும், மூன்றாம் யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகளும், நான்காம் யுகத்தில் சம்பு, ஆதி என்னும் கழுகுகளும் முறையே வழிபட்டுப் பேறு பெற்றன.

இப்போதும் பூஷா, விதாதா எனும் இரு கழுகுகள் இந்த யுகத்திலும் உண்டு. அவை இக்காலத்தில் உண்டு. அவை இங்கு உணவு பெற்று காசிக்கு சென்று வழிபட்டு திரும்பும். இந்த அதிசயம் இன்றும் உண்டு.

கழுகு வடிவில் சிவனடியார்களின் ஆன்மாக்கள் கர்மம் கழிக்கும் தலம் இது.

இந்த மலையில்தான் மாணிக்கவாசகருக்கு சிவன் குருவடிவாக காட்சியளித்தார்.

இந்த மலை வேதங்கள் வாழும் மலை என்பதால் சைவ குறவர்கள் மூவரும் இம்மலையினை மிதிக்கத் தயங்கினார்கள். ருத்திரகோடீஸ்வரரை வெளியில் இருந்தே பாடினார்கள். அவ்வகையில் இந்த ஆலயம் தேவாரம் வைப்பு தலம்.

” தோடுடை யானொரு காதில் தூய குழைதாழ

ஏடுடை யான்த லைகல னாக இரந்துண்ணும்

நாடு டையான் நள்ளிருள் ஏம நடமாடும்

காடு டையான் காதல்செய் கோயில் கழுக்குன்றே”

என்பது சம்பந்த பெருமான் பாடிய பதிகத்தின் வரி.

“கொன்று செய்த கொடுமையால் பல சொல்லவே

நின்ற பாவ வினைகள் தாம் பல நீங்கவே

சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடம்

கன்றினோடு பிடிசூழ் தண் கழுக்குன்றமே”

என்பது சுந்தரர் வரி.

“மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை

முதுபிணக்கா டுடையானை முதலா னானை

ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை

ஆலால முண்டுகந்த ஐயன் தன்னைப்

பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்

புணர்வரிய பெருமானைப் புனிதன் தன்னைக்

காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே”

என்பது அப்பர் சுவாமிகளின் இத்தலம் பற்றிய‌ பாடல் .

மாணிக்க வாசகர் தன் திருக்கழுக்குன்ற பதிகத்தில் பாடுகின்றார்

“பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார்க்

கிணக்கிலாததோர் இன்ப மேவருந் துன்ப மேதுடைத் தெம்பிரான்

உணக்கிலாததோர் வித்துமேல்விளை யாமல் என்வினை ஒத்தபின்

கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே”

இந்திரன் தன் சாபம் தீர்ந்து வழிபட்ட இடம் இது. தேவர்கள் வந்து வழிபடும் இடமும் இது. இன்றும் இந்திரன் இன்றும் அங்கு பூஜித்து வருகிறான் என்பதற்கு அறிகுறி இன்றும் உண்டு. அவ்வப்போது இம்மலைமீதுள்ள கருவறைக்கோபுரக் கலசத்தின் அருகில் உள்ள துவாரத்தின் வழியாக இடிவிழுந்து, சிவலிங்கத்தைச் சுற்றிப் பரவிப் பாய்ந்து விடும்.

மறுநாள் அங்கு வெப்பத்தை கருவறை திறக்கும்போது காணலாம். அவ்வப்போது இந்த அபூர்வம் நடக்கும்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவத்தலங்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி இங்கில்லாமல் இருப்பது மாறுபட்டதாகும்.

சுந்தரர் ஈசனிடம் பொன் பெற்ற தலம் இதுதான்.

“என்உடல் வீழும்போதும் நீதான் எனக்குத் துணை” என்று ஈசனைப் பட்டினத்தார் உருக்கமாக வழிபட்ட தலம்.

தேவர்கள் எல்லோரும் வழிபடுவதால் இது அமராவதிக்கு நிகரான தலம் என்பது அருணகிரியார் வாக்கு.

சுரகுரு மன்னனுக்கு சுயம்புவாய் சுவாமி காட்சி தந்த தலம் இது. ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று அறுபத்து மூவருடன் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி கிரிவலம் வரும் திருவிழா சிறப்பாக நடைபெறும் தலம் இது. கிரிவலம் வரும் வழக்கம் வேதங்கள் மலையாக இருக்கும் இங்கிருந்துதான் வந்தது.

இங்கு 12 தீர்த்தங்கள் உண்டு.

இந்திர தீர்ததம, சம்பு தீர்த்தம், உருத்திர தீர்த்தம், சிட்ட தீர்த்தம், மெய்ஞான தீர்த்தம், அகத்திய தீர்த்தம், மார்க்கண்ட தீர்த்தம், கோசிக தீர்த்தம், நந்தி தீர்த்தம், வருண தீர்த்தம், அகலிகை தீர்த்தம், பட்சி தீர்த்தம் என உண்டு.

இத்தலத்திற்கு அந்தகக்கவி வீரராகவப் புலவர் பாடியுள்ள தலபுராணம் உள்ளது.

இங்குள்ள திரிபுர அன்னை, இந்த அன்னை சக்திவாய்ந்தவள். ஆடிப்பூரம், நவராத்திரி கடைசி நாள், பங்குனி உத்திரம் ஆகிய ஆண்டுக்கு மூன்று நாட்கள்தான் முழு அபிஷேகம் செய்வார்கள். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும்தான் அபிஷேகம் செய்வார்கள். அம்பாளுக்கு மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ள அன்னை என்பதால் இங்கு அவள் அருள் அதிகம்.

(பார்வதி தெய்வமேனியுடன் குடியேறி நிற்கும் இடம் இதுதான். அதனாலே மிகுந்த அச்சத்துடன் அவளுக்கு பாத பூஜை மட்டும் செய்வார்கள். அன்னை திரிபுர சுந்தரியாக சிவனின் இல்லத்தில் ஆட்சி செய்யும் தலம் இது)

மகாகமம் இங்கு சிறப்பு. கும்பமேளா, கும்பகோணம் மகாமகம் போல், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ என்னும் விழா நடைபெறுகிறது.

இந்த ஆலயம் காலத்தால் மூத்தது. இதை அடுத்தே வேதபுரீஸ்வரர் ஆலயம், பக்தவத்சலம் ஆலயமெல்லாம் வந்தது.

சிவராத்திரி அன்று ருத்திர மந்திரம் சொல்லி வழிபடுவது பெரும் பலன் தரும். மகா முக்கிய கடமை அது.

அந்நாளில் ருத்திர அம்சமாக, கோடி ருத்திரர்களை தன்னில் ஏற்று நின்ற சிவனை வழிபடுதல் கோடி பலன் தரும்.

அந்த ஆலயத்தில் ருத்ர பாராயணம் செய்வது இன்னும் நல்லது

அதுவும் ஒரு வில்வம் வைத்தால் கோடி வில்வம் வைத்த பலன் அங்கே உண்டு. ஒருமுறை மந்திரம் சொன்னால் ஒருகோடி முறை மந்திரம் சொன்ன பலன் உண்டு.

அங்கே சிவனை தரிசித்தால் கோடிமுறை தரிசித்த பலன் உண்டு. சிவனருளை பெற்றால் அது கோடி மடங்குக்குச் சமம்.

அங்கே எதனை நீங்கள் செலுத்துகின்றீர்களோ அது கோடி மடங்கு திரும்ப உங்களுக்கே கிடைக்கும்.

சிவராத்திரியில் வாய்ப்பு கிடைத்தவர்கள் அந்த ருத்ரகோடீஸ்வரர் கோவிலுக்குச் செல்லுங்கள். எல்லா நலமும் உங்களை வந்தடையும்.

இந்த ஆலயத்தின் தாத்பரியம் எளிதானது. கடலலுக்கு அடியில் பாதாளத்தில் இருந்து வந்த அசுரர்கள் என்பது மானுட அடிமனதில் இருந்து எழும் ஆசைகளைக் குறிப்பது.

அடிமனதின் ஆசைகள் ஆபத்தானவை. அடக்கி வைக்கப்பட்டாலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது வெடித்தெழுந்து வந்து மானிடரை வீழ்த்தக் கூடியவை.

சிவன் கோடி ருத்திரரை தன்னில் இருந்து வெளிப்படுத்தி அவர்களை அழித்தார் என்பது சிவனை வழிபட்டால் நம் அடிமனதின் ஆசைகளெல்லாம் அழிந்துவிடும், சிவனருளால் அடிமனதில் பதுங்கியிருக்கும் ஆசைகளெல்லாம் ஒழிக்கப்படும் என்பது.

கழுகு என்பது பேராசைகான ஒரு தத்துவம். ஒவ்வொருவர் மனமும் கழுகைப் போல் சிறகை விரித்து உயர உயர செல்ல ஆசைப்படும். பெரும் ஆசைப்படும் இயல்புடையது.

இந்தத் தலம் அதனை ஒழித்து மாய ஆசைகளை ஒழித்து மனதை கட்டுப்படுத்தி முக்தியினைத் தரும் என்பதைச் சொல்லும் தத்துவம் இவை.

மனதில் பதுங்கிய மாயைகள் என்றாலும் உயர பறக்கும் மாய ஆசைகளின் போராட்டம் என்றாலும் சிவனருளால் அது அழியும். அந்த மாயைகள் அழியுமிடம் ஞானம் கிடைக்கும். ஞானம் கிடைக்குமிடம் முக்தி கிடைக்கும் என்பதுதான் இந்தத் தலத்தின் தாத்பரியம்.

சிவராத்திரி அன்று ருத்ரவழிபாடு பிரசித்தி. ருத்திரம் என்பது எதெல்லாம் இந்த வாழ்வில் நம்மை தடுக்குமோ? எதெல்லாம் நம்மை முடக்குமோ அதையெல்லாம் லௌகீகமகாவும் ஆன்மீகமாகவும் எரித்து ப் போடும் சிவனருளின் வடிவம்.

வேண்டாததை சிவன் எரித்துப் போடும் அம்சம்.

அந்த ருத்திரரை, கோடி ருத்திரர்கள் வழிபட்ட மகா ருத்திரரை இங்கு வழிபடுதல் கோடிப் பலன்களைத் தரும்.

கோடி என்றால் எண்ணிக்கையில் மட்டுமல்ல, கோடி என்றால் துவக்கம், கோடி என்றால் புதிது, கோடி என்றால் புதிய தொடக்கம் என்றெல்லாம் பொருள் உண்டு. இந்தச் சிவனை சிவராத்திரி அன்று ஒரு வில்வமிட்டு, ஒரு ரூபாய் தட்சணை வைத்து, ஒரு பூ இட்டு, ஒருமுறை ஓம்நமசிவாய எனச் சொன்னால் போதும்.

அது கோடி வில்வமிட்டு, கோடி ரூபாய் வைத்து, கோடி பூக்கள் கொட்டி, கோடி முறை ‘ஓம் நமசிவாய’ எனச் சொன்ன பலனைத் தரும். கோடிப் புண்ணியம் உங்களைச் சேரும்.

சிவராத்திரியின் முழுப்பலனும் உங்களுக்குக் கிடைக்கும்.

இந்த ருத்திரகோடீஸ்வரை வணங்கிவிட்டு வேதபுரீஸ்வரர், பக்தவச்சலேஸ்வரர், தீர்த்தநாத சிவன் சன்னதிகளை வணங்கி வருதல் சிவராத்திரி அன்று பெரும் பலனைக் கொடுக்கும்.

ஆனால், இந்த ருத்திரகோடீஸ்வரரை எல்லோரும் நினைத்த மாத்திரத்தில் சந்திக்கமுடியாது, யாருக்கு அவரின் அனுக்கிரஹமும் அருளும் அழைப்பும் உண்டோ அவர்களே அங்குச் செல்லமுடியும். அப்படிச் செல்பவர்கள் நிச்சயம் வரம்பெற்றவர்கள். எதுவும் அவர்களுக்குக் குறைவுபடாது.

சிவராத்திரி சிவதலங்கள் 01 : வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் திட்டை

மகா சிவராத்திரி என்பது ஒவ்வொரு இந்துவும் விரதமிருந்து விழித்திருந்து சிறப்பித்து வரம்பெற வேண்டிய மகா முக்கிய பண்டிகை, அதுவும் மகா கும்பமேளாவில் வரும் இந்த மகா சிவராத்திரி மிக அபூர்வமானது, பெரும் வரம் தர வல்லது

இந்த சிவராத்திரி அன்று வழிபட பல தலங்கள் முக்கியமானவை, அவ்வகையில் சிவராத்திரிக்கு சிறப்பான தலங்களில் நான்கு தலங்கள் தவறவிட கூடாதவை

ஊழி எனும் பிரளய காலம் முடிந்து இந்த பிரபஞ்சம் மீண்டும் ஒரு சிவராத்திரியில் தொடங்கிற்று, அப்போதுதான் ஈசன் தன் தேவியுடன் உலகை சிருஷ்டிக்க தொடங்கினார்

இந்த பிரபஞ்சம் ஈசனில் இருந்து உதித்து ஈசனிலே ஒடுங்கும்,அப்படி ஒடுங்கும் காலமே ஊழி காலம், அந்த ஈசனில் இருந்து அது மீண்டும் உருவாகி வரும் காலம் யுகம் தொடங்கும் காலம்

ஈசன் எனும் அந்த பரம்பொருளே சிவன், ஆதிபராசக்தி, ஆதிநாராயணன் எனும் மூன்றாக பிரிந்து அந்த நாராயணனில் இருந்து பிரம்மா உருவாகி வருவார்

ஈசனுக்கு உள்ள ஐந்தொழில்கள் இப்படி பிரிந்து பல சக்திகளால் செய்யபடும் அவை உதித்தது இந்த தருணத்தில்தான், சிவராத்திரியில்தான்

இன்னும் தேவர்களுக்கான வரமும் அசுரர்களுக்கான வரமும் இன்னும் யட்சர்கள் நாகர்கள் காந்தர்வர்கள் என எல்லாருக்குமான வரமும் அப்போதுதான் கொடுக்கபட்டது

மானுடர் உள்ளிட்ட உயிர்கள் அதன் பின்பே தோன்றின அவர்களுக்கும் ஞானம் அருளபட்டது

சிவராத்திரியின் முதல் சாமம் மானிடர் வழிபடுவது, இரண்டாம் சாமம் யட்சர்கள் நாகர்களுக்கானது, மூன்றாம் சாமம் அசுரர்களுக்கும், நான்காம் சாமம் தேவர்களுக்குமானது

உலகை மீளபடைத்தது தங்களையும் படைத்ததில் எல்லா படைப்புக்களும் சிவனை அந்த இரவில் தொழும் வகை இது

இந்த நான்கு சாமங்களிலும் நான்கு ஆலயங்கள் முக்கியமானவை, சிவராத்திரியோடு தொடர்பு கொண்டவை, இங்கு சிவராத்திரியில் வழிபடுவது சாலசிறந்தது, நான்கு சாமங்களும் நான்கு ஆலயங்களில் வழிபடுதல் நன்று

வாய்ப்பு கிடைத்தவர்கள் செல்லலாம் வாய்ப்பு இல்லாதவர்கள் எங்கிருந்தாலும் மனதால் வழிபடலாம் சிவனருள் நிச்சயம் உண்டு

மகாசிவராத்திரியில் முதல் காலத்தில் நடைபெற்றது எனவே மகா சிவராத்திரி முதல் காலத்தில் வழிபட வேண்டிய ஆலயம் தஞ்சை அருகில் உள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில்

“கருவினால் அன்றியே கருவெலாம் ஆயவன்

உருவினால் அன்றியே உருவுசெய் தானிடம்

பருவநாள் விழவொடும் பாடலோடு ஆடலும்

திருவினார் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே”

என சம்பந்த பெருமனானால் தேவாரம் பாடபெற்ற தலம் இது.

இதன் வரலாறு ஊழிகாலத்தின் முடிவில் புது யுகம் தொடங்கிய காலத்தில் இருந்து வருகின்றது திட்டை என்றால் மேடான என பொருள்

ஊழி காலத்தில் ஈசனுக்கு உகந்த 28 தலங்களில் 26 தலங்கள் ஊழிக்காலத்தில் மூழ்கிவிட்டன. இரண்டு தலங்கள் மட்டும் திட்டாக நின்றது. அவற்றுள் ஒன்று சீர்காழி.அது வடகிடிதிட்டை என்றானது

சீர்காழியில் ஊழிக்காலத்தில் ஓம் என்ற மந்திர ஒலி எழுந்தது போலவே திட்டையில் ஹம் என்னும் மந்திர ஒலி வெளிப்பட்டதுடன் வேறு பல மந்திர ஒலிகளும் வெளிப்பட்டன. எனவே இத்தலம் ஞானமேடு எனவும் தென்குடி திட்டை எனவும் அழைக்கபட்டது

இன்று காவிரியாறில் இருந்து கிளைகள் இடையே பிரிந்து வெட்டாறு, வெண்ணாறு இடையே இது அமைந்திருக்கின்றது, இந்த ஆறுகள் காலத்தால் பிந்தியவை இந்த தலம் அதற்கு முந்தையது

இந்த திட்டையில்தான் சிவன் தேவியோடு அமர்ந்தார் அவரும் தேவியும் அமர்ந்து உலகை மீளபடைக்க தேவர்களை இன்னும் எல்லா சக்திகளையும் படைத்தார்கள்

இந்த தலத்தின் பெருமை அறிந்து அங்கு சுயம்புவாய் தோன்றிய சிவனை வழிபட வசிஷ்ட மகரிசி வந்தார், அவர் குடில் அமைத்து வழிபட்ட சிவன் வசிஷ்டேஸ்வரர் என்றானார், சுயம்பாக தோன்றிய ஈசன் சுயம்பூதேஸ்வரர் என்றும் அழைக்கபடுகின்றார்.

காமதேனு வழிபட்டு சாபம் தீர்த்த இடம் என்பதால் இவருக்கு பசுபதீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. ரேணுகா தேவி வழிபட்டதால் இத்தலம் ரேணுகாபுரி என்றும் அழைக்கபடுகின்றது

அன்னை உலகாம்பிகை என்றும் மங்களாம்பிகை என்றும் அழைக்கபடுகின்றார்

இந்த தலத்தின் பெருமை இத்தல புராணம் சமஸ்கிருதத்தில் “தெட்சன‌ குடித்வீப மஹாத்மியம்” என்ற நூலில் உள்ளது. இந்நூல் “சுயம்பூதேஸ்வரர் புராணம்” என தமிழிலும் உண்டு, அங்கே இதன் வரலாறும் பெருமையும் முழுக்க சொல்லபட்டுள்ளன‌

உலகை இயக்குபவையும் ஆதியானவனையும் வேதங்கள் என்பதால் அவை இங்கு சிவனை வழிபட்டன, நான்கு வேதங்களும் சிவனை பணிந்த தலம் இது

பிரம்மா, மகாவிஷ்ணு, காலபைரவர், சூரிய பகவான், சனீஸ்வரர், யமதர்மன், இந்திரன் என மிக முக்கிய தேவர்கள் வழிபட்டு சக்தியினை மீள பெற்ற தலம் இது அப்படியே மகா ரிஷிகளான‌ கெளதமர், ஜமதக்னி முனிவர் முதலானோரும் ஈசனை நினைந்து தவமிருந்து வரம்பெற்ற இடம்

சக்தி வாய்ந்த இந்த ஸ்தலத்தை முறையாக ஸ்தாபித்தவர் வசிஷ்ட மாமுனி அவர் நடுவில் இந்த முக்கிய லிங்கத்தையும் நான்கு மூலைகளில் நான்கு சிவலிங்கங்களையும் ஸ்தாபித்தார்

வசிஷேடேஸ்வரரை சுற்றி நான்கு லிங்கள் உள்ள இந்த அமைப்பு “பஞ்ச லிங்க ஷேத்திரம்” என கொண்டாடபடுகின்றது, வேறு எங்கும் காணமுடியா அமைப்பு இது

பஞ்சராட்சர மந்திரத்தை விளக்கும் தத்துவமாக இது அமைந்துள்ளது

இத்தலம் யுகத்தின் தொடக்கத்தில் உருவான தலம், ஆதி தொன்மையான தலம் இந்த‌ தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பஞ்சபூத திருத்தலங்களில் வழிபட்ட பலன் கிடைக்கும்

பஞ்ச பூத தலங்களின் மொத்த பலன்களையும் ஒரே இடத்தில் தரும் ஆலயம் இது

இந்த ஆலயம் சந்திரன் வழிபட்ட தலமுமாகும், தட்சனால் சாபம் பெற்ற சந்திரன் தன் சாபத்தை போக்கிய ஈசனை இங்கேவழிபட்டார்

இதனால் இந்த கருவறையில் மேல் சந்திரகாந்த கல் பதிக்க்பட்டுள்ளது, இது காற்றில் இருந்து நீரை தானே எடுத்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும் வகையில் அமைக்கபட்டுள்ளது

இதனால் இங்கு சிவலிங்கம் மேல் நீர் தாரை இல்லை, மாறாக சந்திரகாந்த கல்லே குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை நீரை சொட்டு சொட்டாக சிவலிங்கம் மேல் பொழிகின்றது, மாபெரும் அற்புதம் இது

இறைவன் இந்த பிரபஞ்சத்தை தனியாக படைக்கவில்லை தன் சக்தி தேவியுடன் இணைந்தே படைத்தார்,அந்த சக்திக்கு உரிய இடம் இங்கு தனியாக கொடுக்கபட்டுள்ளது

எங்குமில்லா ஒரு விஷேஷ அமைப்பு இங்கு உண்டு, ஆம், அம்மன் சன்னிதிக்கு முன்புள்ள மண்டபத்தின் மேலே 12 ராசிகள் செதுக்கப்பட்டுள்ளன.

அந்தந்த ராசிக்காரர்கள், தங்களுக்கான ராசிக்கட்டத்தின் கீழ் நின்று அம்மனை வேண்டினால் வேண்டிய வரம் கிடைக்கும். திருமணத் தடை, மாங்கல்ய தோஷம் நீங்க அருள் புரிவதால், இந்த அன்னை ‘மங்களாம்பிகை’ என்றும் அழைக்கப்படுகிறார்.

ஈசனுக்கு இணையான பீடத்தில் அன்னை அமர்ந்திருக்கின்றார், பெண்களுக்கு மங்கள வாழ்வளிப்பதால் அம்பாள் மங்களாம்பிகை எனப் போற்றப்படுகிறாள்

இந்த ஆலயத்தின் விஷேஷம் அந்த‌ ராஜா தக்ஷிணாமூர்த்தி சன்னதி. இங்கு குருவுக்கு தனி சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கும் ஈஸ்வரன் சன்னதிக்கும் நடுவில் தனி சன்னதி கொண்டிருக்கிறார் குரு பகவான்

இங்கு குரு நின்ற கோலத்தில் 4 கைகளுடன் காணபடுகிறார். எல்லா தலத்திலும் அமர்ந்திருக்கும் குரு பகவான் இங்கு நின்ற நிலையில் அருள் பாலிக்கின்றார்

விநாயக பெருமானும், பைரவரும் தனி தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றார்கள்

தட்சாயண காலத்தில் சூரிய பகவான் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளிலும் இன்னும் உத்ராயண புண்ணிய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளிலும் வசிஷ்டேஸ்வர் திருமேனியில் பட்டு சூரியபூஜை செய்கிறார்.

இந்த தலத்தின் முருகபெருமானும் சிறப்பானவர், பிரபஞ்ச இயக்கம் என்பதோ படைத்தல் என்பதோ சாதாரணம் அல்ல என்பதால் அங்கு பெரும் ஞானம் அவசியம் , அந்த ஞானத்தை மும்மூர்த்திக்கும் தேவர்களுக்கும் வழங்க இங்கு முருகன் அமர்ந்திருக்கின்றார்

எல்லா தேவர்களுக்கும் ஞானத்தை வழங்குவதால் இந்த ஆலயம் ஞானமேடு, ஞான திட்டை என முருகபெருமானை முன்னிட்டு அழைக்கபடுகின்றது

இந்த ஆலயம் முழுக்க கருங்கல், ஆலய கலசம் கொடிமரம் என எல்லாமே கருங்கல் ,அந்த அளவு உறுதியாக காலத்தை வென்று நிற்கும்படி கட்டபட்ட ஆலயம் இது

இந்த ஆலயம் சிவராத்திரிக்கு ஏன் விஷேஷம் என்றால் இங்கு தேவர்கள் மட்டுமல்ல எல்லா தரப்பும் வழிபட்ட தலம், அப்படியே ராவணனின் முப்பாட்டன் தாயவழி முப்பாட்டர் சுமாலி வழிபட்ட தலம் இது

அவனின் தேர் இங்கே பதிந்து நின்றதால் இது ரதபுரி , தேருர் என்றும் அழைக்கபடும்

நாகங்களில் ஆதிசேஷன் வழிபட்ட தலம் இது , யட்சர்களில் குபேரனும் இதர லோகத்தவரும் வந்து ஈசனை வணங்கி அருள்பெற்ற தலம் இது

இங்கு ஆலயத்துக்கு வெளியே தீர்த்தம் உண்டு அதன் கரையில் தேவ கன்னியர் மல்லிகை, முல்லை என கொடிகளாக உண்டு, அப்படியே தேவர்கள் வில்வ மரங்களாக உண்டு

இந்த ஆலயத்தின் கல் முதல் மரம் செடி கொடிவரை எல்லாமே தெய்வாம்சம் கொண்டவை, ஒவ்வொன்றும் ஒரு தேவசாயலும் வரமும் கொண்டிருக்கும்

இந்த ஆலயத்தின் தாத்பரியம் புரிந்து கொள்ள எளிதானது

ஒரு விஷயத்தை படைத்து காத்துவருவது எளிதானது அல்ல அதற்கு பெரும் ஞானமும் அறிவும் வேண்டும், இங்கே சிவன் அதை அருளுகின்றார்

வசிஷ்டர் இந்த சிவனை வழிபட்டுத்தான் அயோத்தி எனும் ராமபிரானின் அரசுக்கே ராஜகுருவாக இருக்கும் பெரும் பாக்கியம் அடைந்தார், இன்றுவரை ஒரு ராஜ்ஜியத்தின் அமைப்புக்கும் ஆளுகைக்கும் ராமராஜ்ஜியமே எடுத்துகாட்டு என்றால் அந்த ஞானம் எப்படிபட்டதாக இருந்திருக்க வேண்டும்?

அந்த பெரும் ஞானத்தை , உச்ச ஞானத்தை தரும் ஆலயம் இது , அதனாலே இது குரு தலம், ராஜகுரு தலம் என்றும் அழைக்கபடும்

குரு பகவான் இங்கு வழிபட்ட்டே தேவர்களுக்கும் குருவாகும் யோகம் பெற்றார்

ராமனின் முன்னோர் மட்டுமல்ல ராவணனின் முன்னோரும் வழிபட்டு பெரும் வரம் பெற்ற ஆலயமும் இதுதான்

இந்த யுகத்தின் தொடக்கம் இந்த ஆலயத்தில் இருந்துதான் வந்தது அங்கிருந்தே எல்லா மும்மூர்த்தியும் தேவரும் அசுரரும் பலரும் வரம் வாங்கி வந்தார்கள்

இங்கு சிவராத்திரி அன்று வழிபடும் போது ஒரு மனிதன் புது பிறப்பாகின்றான், சிவராத்திரியின் முதல் வழிபாட்டை இங்கு செய்யும் போது அவன் புதுபிறப்பாக ஞானமும் அறிவும் கொண்ட பிறப்பாக மாறுகின்றான்

இதனாலே இந்த ஆலயத்தில் சிவராத்திரி மகா முக்கியம், மிக பெரிய இடம் அந்த ஆலயத்துக்கு உண்டு

வசிஷ்ர் என ரிஷிகளுக்கும், முப்பெரும் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும், நாகங்களுக்கும் இன்னும் பலருக்கும் தொடக்க ஞானமும் அறிவும் தெளிவும் வரமும் அருளிய ஆலயமிது, புது யுகத்தின் தொடக்க புள்ளி இது

வாய்ப்பு கிடைத்தவர்கள் தவறாமல் முதல் பூஜையினை இந்த் தலத்தில் செய்தல் மிக்க நன்று அது பிறப்பையே புதிதாக்கும், வாய்ப்பு இல்லாதவர்கள் முதல் சாம பூஜையில் இந்த வசிஷேஸ்டரை நினைந்து ஒரு வில்வ இலை எடுத்து வைத்து வணங்குங்கள், எல்லா அருளும் உங்களை அந்நொடி தேடிவரும்

புது பிறப்பாக முழு ஞானமும் குருவருளும் திருவருளும் சிவனின் தனி அருளும் உங்களை தேடி வரும் இது சத்தியம்

வசிஷ்டேஸ்வரர் மும்மூர்த்திகளுக்கு சக்தியையும், ஞானத்தையும் அருளியவர். கால பைரவரின், பிரம்மஹத்தி தோஷம் நீக்கியவர். குரு பகவானுக்குத் தேவகுரு என்ற பதவியை அருளியவர். நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்களின் நடுவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் அமர்ந்து பஞ்ச லிங்கேஸ்வரராக அருள்பாலிக்கின்றார்.

சிவராத்திரி சிவாலயங்கள் : 02 மச்சபுரீஸ்வரர் திருக்கோவில் திருசேலூர் (தேவராயன் பேட்டை )

சிவராத்திரி தலங்களில் அடுத்து இரண்டாம் சாம பூஜைக்குரிய தலம் திருசேலூர் மச்சபுரீஸ்வரர் ஆலய சிவாலயம், இன்று தேவரயான்பேட்டை என்றாகிவிட்ட அந்த திருசேலூர் தலமானது தஞ்சாவூர் பாபாநசம் இடையே அமைந்துள்ளது

சேல் என்றால் மீன் என்றொரு பொருள் உண்டு, இது பகவான் மீன் எனும் மச்ச அவதாரம் எடுத்த புராணத்துடன் தொடர்புடைய தலம் என்பதால் திருசேலூர் என்றாயிற்று

மச்ச அவதாரம் எல்லோரும் அறிந்த புராணம், பகவான் விஷ்ணுவின் முதல் அவதாரம் அது, அதற்கான காரணமும் அவசியம் உலக படைப்பின், இந்த பிரபஞ்ச படைப்பில் இருதே தொடங்குகின்றது

இந்த உலகையும் பிரபஞ்சத்தையும் அதன் இயக்கத்தையும் பிரம்மன் படைத்தாலும் அவற்றின் மூலம் வேதங்களே, வேதத்தை கொண்டேதான் பிரம்மன் இந்த உலகையும் உயிர்களையும் படைத்து கொண்டே இருக்கின்றான், வேதங்கள் நான்குமே எல்லாவற்றுக்கும் மூலம்

அசுரர்களுக்கு எப்போதும் பேராசை அதிகம், சுயநலம் அதைவிட அதிகம், இதனால் இந்த உலகை தாங்களே படைத்து தாங்களே ஆள பெரும் விருப்பம் கொண்டார்கள், அந்த விருப்பம் பெரும் ஏக்கமும் ஒரே முடிவுமாயிற்று

அதன்படி வேதங்கள் தங்களுக்கு கிடைத்தால் போதும், உலகை சிருஷ்டிக்கலாம் என எண்ணிய அவர்கள் ஹயகீரிவன் எனும் அசுரனை பிரம்மனிடம் இருக்கும் வேதங்களை திருட அனுப்பினார்கள்

அவன் தவமிருந்தான், சில வரங்களை பெற்றுகொண்டவன் பிரம்மனிட்ம இருந்து வேதங்களை திருடினான், மேற்கொண்டு அதை காக்க வேண்டி கடலுக்கு அடியில் ஒளிந்தும் கொண்டான்

வேதங்கள் இல்லாததால் பிரம்மனால் படைப்பு தொழிலை செய்யமுடியவில்லை , தேவர் உலகம் திகைத்து போனது, அதைவிட முக்கியமாக இனி அசுரர்கள் அதை கொண்டு என்னென்ன கொடுமையெல்லாம் செய்வார்கள் எனும் போது, புது உலகம் அவர்களால் உருவாகும் எனும் போது அதை நினைக்கையிலே நடுங்கினார்கள்

அரசுர் ஒரு உலகம் செய்தால் எப்படி இருக்கும்?

இதனால் அவர்கள் திருமாலிடம் தஞ்சமடைந்தார்கள், எல்லாம் அறிந்த அவரும் உலகை காக்க திருவுளம் கொண்டார், அவரும் சிவனும் சேர்ந்து நடத்திய நாடகம் அரங்கேறிற்று

தேவருலகம் இப்படி திகைத்தபோது பூவுலகில் குழப்பம் அரங்கேறிற்று, வேதங்கள் அசுரரிடம் சிக்கியதால் அந்த தாக்கம் பூமியிலும் இருந்தது, மக்கள் மிக குழம்பி போனார்கள்

கடல் தன் இயல்பை இழந்தது, பூமி இழந்தது, சந்திர சூரியர்கள் இழந்தார்கள், பருவகாலம் தப்பியது, பூமியின் இயக்கமே மாறி மக்கள் தத்தளித்தார்கள்

இதனால் மன்னன் சத்யவிரதன் என்பவன் நீர்மட்டும் அருந்தி பகவானை வேண்டினான், அவன் ஒருவனுக்கே மக்களை பகவான் ஒருவரே காக்க முடியும் எனும் நம்பிக்கை இருந்தது

அறமும் தரமமும் முழுக்க அற்றுபோன உலகம் அழிக்கபட்டு மீண்டும் படைக்கபடும், எப்போது இந்த மானுட இனமும் மக்களும் முழுக்க இறைவனை மறந்து தர்மம் மறந்து அறம் மறந்து திரிகின்றார்களோ அப்போது இந்த உலகம் அழிக்கபடும்

அந்த காலம் அப்படித்தான் இருந்தது, வேதங்கள் இல்லா உலகம் நிலை குலைந்தது அசுரகுணம் ஒவ்வொருவரிடமும் புகுந்து உலகை நாசமாக்கியது

மன்னன் மட்டும் திருமாலை நினைந்து விரதம் இருந்ததால் அவன் மூலம் கருணை காட்டினார் பகவான்

அவன் வழக்கம் போல் நீரை அள்ளி பருக ஆற்றில் கைகுவித்தபோது ஒரு மீன் குஞ்சு சிக்கி கொண்டது, அது அவனிடம் தன்னை மற்ற மீன்களிடம் இருந்து காக்க வேண்டி கெஞ்சிற்று

மன்னன் அதனை தன் கமண்டலத்தில் இட்டான், அது மறுநாள் மிகபெரிதானது, இடம் பற்றாமல் அதை தொட்டியில் இட்டான் மன்னன், அங்கும் அது தொட்டி அளவு பெரிதானது

பின் கிணற்றில் இட்டான் அங்கும் அது கிணறு அளவு பெரிதானது, பின் குளத்தில் இட்டான் மீன் குளம் அளவு பெரிதானது

இது சாதாரண மீன் அல்ல என்பதை எண்ணியவன் குழம்பியபடியே அதை கடலில் விட முயன்றான், காரணம் உலக இயக்கமே தலைகீழான அக்காலங்களில் இதெல்ல்லாம் அவனுக்கு பெரிதாக படவில்லை காணுமிடமெல்லாம் இந்த விசித்திரங்களே நிறைந்திருந்தன‌

கடலில் அவன் அம்மீனை இடும்போது திருமாலை நினைந்து கொண்டு வருந்தினான், பூமியில் என்ன நடக்கின்றது என்பதை எண்ணி குழம்பினான்

அப்போது அந்த மீன் வடிவில் இருந்த பெருமாள் சொன்னார்

“‘ ‘மன்னா! வருகிற ஏழாவது நாளில் பிரளயம் ஏற்பட்டு உலகமே வெள்ளத்தில் மூழ்கி போகிறது. அச்சமயம் பெரிய படகு ஒன்று இங்கே வரும். அதில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் ஏற்றிவிடு. பிரளய வெள்ளத்தில் அந்த படகு மிதக்கும். மச்ச அவதாரம் எடுத்து, நான் அந்த படகை சுமந்து கவிழ்ந்து விடாதவாறு காப்பாற்றுவேன். அப்போது நீங்கள் அதன் காரணத்தையும், என் மகிமையையும் அறிவீர்கள்” என்றார்

அப்படியே பெரும் பிரளயம் சிவனால் ஏற்படுத்தபட்டு நீரால் உலகம் மூழ்கடிக்கபட்டது, இந்த படகும் அதிலிருந்த ஜீவராசிகளும் தப்பினார்கள்

மீன் இனம் மட்டும் அழியவில்லை, காரணம் அசுரன் ஹரிகீவிவன் வாங்கியவரத்தில் கடலுக்கும் அதன் உயிர்களுக்கும் அழிவில்லை என்பதன் சாயல் இருந்தது

நிலமெல்லாம் மூழ்கி எல்லாம் அழிந்தபின் நீர் வற்ற தொடங்கி தரை உலர்ந்தது படகில் இருந்த மன்னனும் உயிர்களும் காக்கபட்டார்கள்

பகவான் அந்த மன்னனுக்கு மச்சபுராணம் எனும் பெரும் உபதேசத்தை செய்தார், பின் மீனாக மாறி அசுரனை தேடி சென்று அவனை வதம் செய்து வேதங்களை மீட்டெடுத்து பிரம்மனிடம் கொடுத்தார்

அவர் மீனாக மாறி பெரும் ஆவேசத்துடன் ஹயகிரிவ அரக்கனை வதம் செய்ததால் மிகுந்த உக்கிர நிலையில் இருந்தார் அவரால் இயல்பு நிலைக்கு வரமுடியவில்லை

என்ன இருந்தாலும் அசுரன் சிவபக்தன் என்பதால் அந்த தோஷமும் ஒட்டிகொண்டது , அந்த பாவத்தை அவர்போக்கும் அவசியம் இருந்தது

அது அப்போதுதான் நீர் வற்ற தொடங்கியிருந்தது, இந்த இடம் தரையாக மாறி இருந்தது ஆனால் நீர் கடலை ஒட்டி இருந்தது

அப்போது உலர் தரையில் சிவன் வந்து நிற்க அவரை மீனாக இருந்த பகவான் தொழுதார், அந்நேரம் அவருக்கு சிவன் தோஷ நிவர்த்தி கொடுத்தார் மீன் வடிவ பகவான் சுய உருவம் அடைந்தார்

மீன் வழிபட்ட தலம் என்பதால் அத்தலம் சேலூர் என்றாயிற்று

உலகம் மீள படைக்கபட்டபோது சிவன் வந்து அருள் கொடுத்து பகவான் விஷ்ணுவுக்கே அவரின் இயல்பை திரும்ப கொடுத்த தலம் இது

சோழநாடு என்றல்ல எல்லா தலங்களிலும் இந்த யுகத்தில் மூத்த தொன்மையான தலங்களில் இதுவும் ஒன்று

விஷ்ணு பகவான் தன் இயல்பை பெற்றபோது தேவர்களும் இன்னும் பலரும் தேவியும் வந்து சிவனை வழிபட்டதலம் இது

இதன் பின்பே படைப்புக்கள் தொடங்கின, இதனால் சிவராத்திரி அன்று இத்தலமும் முக்கியமான வழிபாட்டு தலமாயிற்று

இந்த ஆலயம் தொன்மையானது, முதலாம் ஆதித்த சோழன் இங்கு செங்கல்லாலும் மண்ணாலும் ஆலயம் எழுப்பினான், அவன் மரபில் வந்த முதலாம் பராந்தகன் காலத்தில் கற்கள் கொண்டு ஆலயம் கட்டும் வழக்கம் வரும்போது கட்டபட்டது, 1500 முதல் இரண்டாயிரம் வருடம் பழமையானது

சோழர்களுக்கு பின் நாயக்கர்கள் காலம், மராட்டியர் காலத்திலும் இது கொண்டாடபட்டது

அழகிய மண்டபம், மகா மண்டபம், நந்தவனம், பெரிய பிரகாரம் என இது அன்றே பெரிதாக வடிவமைக்கபட்டிருந்தது, அழகிய ஆலயம் இது

கோவிலின் தலபுராணமாக மகாவிஷ்ணு மச்ச அவதாரம் கொண்டு சிவனை வழிபட்ட காட்சி கோவில் முகப்பில் கருங்கல்லால் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

மீன் ஒன்று லிங்கத்தை வழிபடும் அக்காட்சியே ஆலயதின் மொத்த வரலாற்றையும் சொல்லிவிடுகின்றது

மச்சம் வழிபட்டதால் இந்த சிவன் மச்சபுரீஸ்வரர் என்றானார், இன்றுவரை அப்பெயரிலே வணங்கபடுகின்றார், அன்னை சுகந்த குந்தலாம்பிகை

இது படைப்பினை தொடங்கி வைத்த ஆலயம் என்பதால் முருகனுக்கு தனி சந்நிதி உள்ளது. முன்னால் 3 முகம், பின்னால் 3 முகம், 12 கரங்கள், வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் ஏந்தியுள்ளார் முருகபெருமான்

திருமாலுக்கு உள்ளதைப்போல இங்கு முருகனுக்கும் சங்கு, சக்கரம் உண்டு, ஆறுமுகனுடன், வள்ளி தெய்வானையும் உடன் உள்ளனர்.

இங்கு மேற்கு நோக்கிய லிங்கோற்பவராக மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் (3 அடி உயரம்) அருள்பாலிக்கிறார். அந்த மகா விஷ்ணுவினை சங்கு, சக்கர முருகன் பார்த்து புன்னகைப்பது தனி சிறப்பு

“சங்கு சக்கர சுப்பிரமணியர்” என அந்த முருகபெருமானுக்கு பெயர்

இந்த தத்துவம் வேறெங்கும் இல்லாதது, காக்கும் கடவுள்கள் முருகபெருமானும் விஷ்ணுவும் என்பதும் இருவருக்கும் தொழில் அசுரர்களை ஒடுக்கி நல்லோரை வாழவைப்பது என்பதையும் சொல்லும் தத்துவம் இது

கந்த சஷ்டி கவசம் தந்த பாலதேவராயர் இங்குதான் பிறந்து முருகபெருமான் அடியாராக வளர்ந்தார்

இந்த முருகபெருமான் சன்னதியில் இங்கு சத்ரு சம்ஹார பூஜை செய்வது நல்லது, எதிரிகளை அம்முருகன் அழித்து தருவார்

மூல கடவுளான சாஸ்தாவுக்கு இங்கு அய்யப்பனாக சன்னதி உண்டு, அப்படியே விநாயக பெருமான் சன்னதியும், சப்தமாதர் சன்னதியும் உண்டு

இங்கு கஜலட்சுமி சன்னதி, அனுமன் சன்னதியும் உண்டு, சூரியன் , சனீஸ்வரர், பைரவர், யோக பைரவர் என பல சன்னதிகள் உண்டு

தட்சினாமூர்த்தி தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றார்

அன்னை குந்தளாம்பிகை தனி சக்தி கொண்டவள், சோழர்களின் பிர்சித்தியான குந்தவை எனும் பெயர் இந்த தேவியிடம் இருந்தே சோழர்குலத்துக்கு வந்தது, அவளே குலதெய்வமாக இருந்தாள்

இந்த அம்பிகையின் முன்னால் காலடியில் கல்லால் ஆன மேரு உருவம் உண்டு, இந்த மேரு உருவமே பின்னாளில் ராஜராஜ சோழன் பெரும் ஆலயம் கட்ட ஆரம்ப கனவுமாயிற்று

சோழர்களின் வரலாற்றில் தவிர்க்கமுடியா ஆலயம் இது

மீனால் வழிபடும் தோற்றத்திலே உள்ளே அமைந்திருக்கின்றார் மூலவர் மச்ச புரீஸ்வரர். காண காண பெரும் இனம்புரியா மகிழ்வை கொடுக்கும் சிவன் அவர்

திங்கள் கிழமை அல்லது வியாழகிழமை இங்கு வந்து நீராடி சிவனுக்கு மூன்று விளக்கும் அம்பாளுக்கு இரு விளக்கும் ஏற்றி பன்னிரண்டு வாரம் வழிபட்டால் நினைத்த காரியம் நடப்பதும் பின் அவர்களுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றபடுவதும் இங்கு வாடிக்கை

தொழிலில் சிக்கல் , வாழ்வில் தடைகள், இன்னும் பெரும் பெரும் இடர்பாடுகள், எல்லாம் இழந்த நிலை, தனித்து விடபட்ட கையறு நிலை, பணியில் பிரச்சினை, பதவி உயர்வு என எல்லா சிக்கலில் இருப்பவர்களுக்கும் பெரும் அதிசயத்தோடு விடுதலை தரும் ஆலயம் இது

வேதங்கள் மீட்ட விஷ்ணுவுக்கு அருளிய இந்த மச்சபுரீஸவரர் கல்வி வரம் படிப்பு வரம் அருள்வார், இங்கு தொழுதால் கல்வியில் நல்ல முன்னேற்றமும் பெரும் ஞானமும் வாய்க்கும், அந்த சிவனின் தனி அருள் இது

இந்த ஆலயத்தின் தாத்பரியமும் எளிதானது

முதலாவது வேதங்கள் இல்லை என்றால் உலகமில்லை, வேதங்கள் இல்லா உலகம் அறம் தப்பிய உலகமாகும், அங்கே அதர்மம் ஒன்றே ஆடும் எல்லா குழப்பமும் வரும்

அந்த குழப்பத்தில் சத்ய விரதன் போல இறைவனை நாடினால் வாழலாம், அவன் பொருட்டே அவன் இறைவனை அண்டியதை பொருட்டே அந்த தனிமனிதனை பொருட்டே இந்த உலகம் மீண்டும் மீட்கபட்டது

அசுரர்களை வேதத்தை திருட அனுமதித்த சிவன் மானுடரை சோதித்தார், அந்த சோதனையில் இந்த மானுடன் மட்டுமே இறைவனை தேடினான் அவன் பொருட்டே உலகம் மீண்டது மானுட இனமும் எல்லா உயிர்களும் மீண்டன‌

இந்த யுகம் மீண்டும் துவங்கியபோது பகவான் விஷ்ணுவே மீன்வடிவில் சிவனை வணங்கி படைப்பினை தொடங்கிவைத்தார், பகவானுக்கே அவரின் இயல்பு மீட்கபட்டது

இந்த உலகம் புதிதாய் நன்மையில் பிறந்தது நல்ல இயல்பில் பிறந்தது, அறமும் தர்மமும் ஒழுங்கும் கொண்ட உலகமாக பிறந்தது

அதற்கு சோதனை வரும்போதெல்லாம் பகவான் அடுத்தடுத்த அவதாரமாக மீட்டு கொண்டே இருந்தார், அதன் தொடக்கம் இங்குதான் உருவானது

இந்த ஆலயத்தில் இரண்டாம் சாம வழிபாடு மிக முக்கியம், அது யட்சர்களும் நாகர்களும் இன்னும் பல உலகத்தவரும் சிவனை வழிபடும் காலம்.

ஆதிஷேஷன் படுக்கையில் படுத்திருப்பவர் திருமால் , அந்த நாகங்கள் வழிபடும் நேரம் எல்லா ஜீவராசிகளும் சிவனை வழிபடும் நேரம், மச்சமாக வந்த திருமால் நினைவோடு இங்கே சிவனை வழிபட எல்லா நன்மையும்ம் வந்து சேரும்

மீன் என்பது உறங்காதது, எப்போதும் விழிப்பாக இருப்பது, அசைந்து கொண்டே இருப்பது, மிக மிக சரியான விவேகமும் கொண்டது

தன்னை அண்டுவோரை மீன் போல் விழிபபாக நின்று சிவன் காப்பார், உறங்காமல் காப்பார், மிக துடிப்பாக காப்பார், மீன் நீரினை நம்பி வாழ்வது போல் அவரை நம்பி நாம் அவரில் பிரியாமல் வாழும்போது காப்பார் என்பதே ஆலயத்தின் தாத்பரியம்

இந்த யுகத்தில் இங்கிருந்துதான் மானிட இனம் உருவானது எனும் வகையிலும், இந்த சிவனையே விஷ்ணுவும் வழிபட்டார் எனும் வகையிலும் இந்த மச்சபுரீஸ்வரர்தான் குலதெய்வமுமாகின்றார்

ஆம், குலதெய்வ வழிபாட்டினை இங்கு செய்தல் நலம், மூத்த குலதெய்வ ஆலயம் எல்லா மானுடர்க்கும் இதுதான்

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என திருமூலர் பாடியவரி இந்த சிவனுக்கே சரியாக பொருந்தும்

சிவராத்திரியின் இரண்டாம் சாமத்தில் இந்த ஆலய மச்சபரிஸ்வரரை நினைந்து வில்வம் வைத்து வழிபடுங்கள், எதெல்லாம் தீமையின் பொருட்டு எதிரிகள் பொருட்டு இழந்தீர்களோ அதெல்லாம் நன்மையாக திரும்பி வரும் , புது படைப்பாக அறமும் தர்மமும் கொண்ட படைப்பாக இழந்ததை எல்லாம் திரும்பபெற்று புதுவாழ்வினை தொடங்குவீர்கள் இது சத்தியம்

சிவராத்திரி சிவாலயங்கள் 03 : 108 சிவலிங்கங்க‌ ராமலிங்க சுவாமி திருக்கோவில் பாபநாசம்

சிவராத்திரியின் மூன்றாம் சாமம் வழிபட வேண்டிய இந்த ஆலயம் தஞ்சாவூர் அருகே அமைந்துள்ளது, ராமபிரான் வாழ்வோடு தொடர்புள்ள இத்தலம் 108 லிங்கங்களுடன் சிவன் அருளை வீசி கொண்டிருக்கின்றது

108 லிங்கங்கள் மேற்கு பார்த்து அமைந்த இந்த ஆலயம் இது, அவற்று ஒரே ஒரு லிங்கம் தனித்து நிற்கின்றது

மேற்கு நோக்கிய சிவலிங்கங்கள் என்பது கர்மவினை களையும் லிங்கங்கள், சனியின் திசை மேற்கு எனும் வகையில் ஒருவனின் கர்மவினை அத்தனையும் களைந்து அந்த கர்மத்தின் பலன் முழுமையும் சிவன் ஏற்று அவனுக்கு விடுதலை தரும் சிவலிங்ககள் இவை, கர்மமத்தை தன்னுள் ஏற்பவை

அந்த தத்துவபடி ராமபிரான் கையால் அமையபெற்ற 107 லிங்கங்களும், அனுமன் கையால் ஸ்தாபிக்கபட்ட ஒரு லிங்கமுமாக 108 லிங்கங்கள் அங்கு மேற்கு நோக்கி ஸ்தாபிக்கபட்டு சிவனருளை தருகின்றன‌

இந்த தல வரலாறு ராமாபிரான் இலங்கை யுத்தம் முடித்த காட்சியில் இருந்து துவங்குகின்றது

ராமன் இலங்கையில் ராவணனை வதம் செய்துவிட்டு விபீஷ்னனிடம் ஆட்சியினை கொடுத்துவிட்டு சீதையினை மீட்டு திரும்பும் போது ராமேஸ்வரத்தில் சிவலிங்க வழிபாட்டை செய்து பிரம்மஹத்தி தோஷம் போக்கினார்

ராவணன் ஒரு பிராமணன் ஆக சிறந்த சிவபக்தன் என்பதால் அந்த வழிபாட்டை அவர் செய்யவேண்டியதாயிற்று

அதை செய்தபின் அவர் அயோத்தி நோக்கி செல்ல தொடங்கிய போதும் பிரம்மஹத்தி சாபம் இன்னும் தொடர்வதை உணர்ந்தார், அவர் மட்டுமல்ல சீதை, லட்சுமணன் என எல்லோரும் உணர்ந்தார்கள்

சில சூட்சும தொந்தரவுகள் இருப்பதையும், இனம்புரியா தொல்லைகள் தங்களை சூழ்ந்திருப்பதையும் உணர்ந்தவர்கள் ராமபிரானிடம் தெரிவித்தார்கள், ராமபிரான் மிகுந்து யோசித்தார்

ராமேஸ்வரத்தில் தான் செய்த பூஜையில் ஏதேனும் குறைகள் உண்டோ என அவர் கண்களை மூடி அகத்திய மாமுனியிடம் கேட்டார், அங்கு தோன்றிய அகத்திய முனிவர் சில விஷயங்களை உரைத்தார்

“ராமா, நீ ராவணனுக்கு மட்டுமான பிரம்மஹத்தி பரிகாரத்தை ராமேஸ்வரத்தில் செய்தாய், ஆனால் அவன் தம்பிகள் தூஷன் , ஹரன் இன்னும் சூர்ப்பநகை என ஏகபட்ட பேர் அங்கு சிவபக்தர்களாக உண்டு பிராமண குலத்தில் உண்டு

சுமாலி வழிவந்த அந்த வம்சம் சிவனை இடைவிடாமல் வணங்கி வரம்பெற்ற வம்சம் அல்லவா? அதனால் அவர்களுக்கான பூஜைகளை நீ சிவலிங்க அபிஷேகமாக செய்ய வேண்டும்

108 சிவலிங்கள் என்பது பூரணமானவை முழு சிவதத்துவத்தையும் சொல்பவை அதனால் சிவராத்திரியின் மூன்றாம் சாமத்தில் நீ 108 சிவலிங்க பூஜை செய்தால் ராவணன் குலத்துக்கு செய்த அழிவுகளுக்கான பரிகாரமகா அமையும், அத்தோடு பிரம்மஹத்தி தோஷம் அகலும்” என ஆலோசனை சொன்னார்

ராமனும் சீதை லட்சுமணனுடன் 3 வரிசை லிங்கங்களாக, ஒருவர்க்கு 36 லிங்கங்களாக கொண்டு பூஜை செய்ய தயாரானான், ஆங்காங்கே இருக்கும் லிங்கங்களை சேகரித்து கொண்டிருந்தான்

எப்போதும் அவர்களுடன் இருக்கும் அனுமன் இந்த நேரம் காசியிலிருந்து ஒரு லிங்கம் வந்தால் நல்லது, காசிதான் கர்மம் தீர்க்கும் தலம், இப்போது அங்கு செல்ல அவகாசம் இவர்களுக்கு இல்லை என்பதால் அங்கிருந்து ஒரு லிங்கம் கொண்டுவரும்பொருட்டு காசிக்கு ஏகினான்

காசியில் அன்றே ஆயிரகணக்கான சிவலிங்களும் ஆலங்களும் இருந்தன, கங்கை கரையெங்கும் லிங்கங்களாக வரிசையாக இருந்தன‌

அனுமன் அவற்றில் ஒன்றை கொண்டுவரும் பொருட்டு சென்றான் ஆனால் அவன் வர தாமதமானது, அங்கே சிற்ந்த லிங்கம் எது என தேடி எடுக்கவும் வரவும் தாமதமாயிற்று

இங்கோ சிவராத்திரியின் மூன்றாம் சாமம் தொடங்கிற்று இனி தாமதிக்க அர்த்தமில்லை என உணர்ந்த ராமன் உள்ளிட்ட மூவரும் அகத்தியரும் பூஜையினை தொடங்கினார்கள்

அபிஷேகத்துக்கான பாலை வழங்க காமதேனு வந்திருந்தது

பூஜை தொடங்கிய சற்று நேரத்துக்கெல்லாம் அனுமன் லிங்கத்தோடு வந்தான், ஆனால் பூஜை தொடங்கியது தெரியாமல் அவன் ஓரமாக இறக்கி வைத்து ராமனின் உத்தரவுக்காக காத்திருந்தான்

எல்லாவற்றையும் ஏற்கும் கனிவுள்ள ராமபிரான் அந்த லிங்கத்தையும் கொண்டுவர சொன்னார் ஆனால் அதை அனுமனால் மீள அசைக்கமுடியவில்லை அவன் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை

ராமன் அகத்தியரை நோக்கினான், அவர் அந்த லிங்கம் அங்கேயே தனித்து இருக்கட்டும் என தன் யோகசித்தியில் சொன்னார்

107 லிங்கங்களோடு 108 லிங்கத்துக்கும் அபிஷேகம் நடந்தது, அங்கே ராம, லட்சுமண சீதையின் பிரம்மஹத்தி தோஷம் அகன்றது, அனுமனுக்கும் அகன்றது

ராமன் வழிபட்ட லிங்கங்கள் ராமலிங்கங்கள் என்றானது, அனுமன் சுமந்த லிங்கம் அனுமந்த லிங்கம் என்றானது

யார் இங்கு வந்து வழிபடுகின்றார்களோ அவர்களின் அறியா பாவமெல்லாம் மன்னிக்கபடும் என அந்த இடத்தில் சொன்னார் அகத்திய முனி

அப்படி தொடங்கிய இந்த 108 லிங்க வழிபாடும் இன்றுவரை பிரசித்தி, 107 லிங்கத்தை வழிபட்டு, அனுமன் சுமந்த 108ம் லிங்கத்தை வழிபட்டு வழிபாட்டை முடிக்கும் போது பெரும் பலன் பூர்த்தியாகின்றது

இந்த 108 லிங்கங்கள் முன் நந்தியும், அன்று அபிஷேக பால் வழங்கிய காமதேனுவும் சிலையாக அமர்ந்திருக்கின்றன‌

ராமலிங்கசுவாமி சன்னதி விமானம் ராமேஸ்வரம் கோயில் அமைப்பிலும், அனுமந்தலிங்க சன்னதி விமானம் காசி விஸ்வநாதர் கோயில் அமைப்பிலும் உள்ளது. எனவே, காசி, ராமேஸ்வரம் செல்ல முடியாதோர் இங்கு வழிபடுகின்றனர்.

சிவராத்திரி விழா இங்கு விசேஷமாக நடக்கும். அன்றிரவு முழுதும் 108 லிங்கங்களுக்கும் ருத்ர மந்திரம் சொல்லி நான்கு கால பூஜை நடக்கும். ராமலிங்க சுவாமிக்கு மட்டும் ருத்ராபிஷேகம் செய்வர்.

அவ்வேளையில், பக்தர்கள் கோயிலை 108 முறை சுற்றி வருவர். இந்த வைபவம் விசேஷமாக நடக்கும். ஐப்பசி பவுர்ணமியிலும் 108 லிங்கங்களுக்கும் அன்னாபிஷேகம் நடக்கும்.

இந்த தலத்துக்கு கீழ்ராமேஸ்வரம் என்ற பெயரும் உண்டு. கோயில் முகப்பில் சூரிய தீர்த்தம் உள்ளது. அறியாமல் செய்த பாவம், பித்ருதோஷம் நீங்க இங்கு சுவாமிக்கு தேன், பால் அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

மார்கழி திருவாதிரையன்று நடராஜர் புறப்பாடு உண்டு. கோயில் வளாகத்தில் ராமர், லட்சுணர், சீதை, ஆஞ்சநேயர் ஆகியோர் சிவலிங்க பூஜை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது.

ராமாயணத்தோடு தொடர்புடைய கோயில் என்பதால், பிரகாரத்தில் ஆஞ்சநேயர், சுக்ரீவர் இருவரும் அருகருகில் வணங்கியபடி நிற்கின்றனர்.

ராமபிரான், சீதையை மீட்க உதவி செய்தவர் என்பதன் அடிப்படையில் சுக்ரீவரை பிரதிஷ்டை செய்திருக்கின்றார்கள்

பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், ஒரே சன்னதியில் காசி விசாலாட்சி, அன்னபூரணி, மற்றொரு சன்னதியில் அருகருகில் காலபைரவர், சனீஸ்வரர், சூரியபகவானும் உள்ளனர்

சனிபகவானும் சூரிய பகவானும் இங்கு வந்து அமர்ந்தற்கு காரணமும் உண்டு

இந்த 108 லிங்கங்களும் அகத்திய மாமுனியால் காவல்காக்கபடுகின்றன, ஒருமுறை ஒரு லிங்கம் காணாமல் போனது, அகத்திய முனி பகலில் அது காணாமல் போனதால் சூரியனிடம் கேட்டார்

பகலில் எது நடந்தாலும் அது சூரியனுக்கு தெரியாமல் இருக்காது அவன் கடமை அது

அவனோ அது பற்றி அறிந்திலேன் என்றான், அவனை அகத்தியர் சபித்தார்

அப்படியே கர்ம வினைக்கு காரணமான சனியிடம் இந்த கர்மத்தை செய்தது யார் என கேட்டார், அவனோ ஒரு குரங்கு லிங்கத்தை அசைத்து எடுத்து விளையாடி சென்றது என்றான்

அதை என்னிடம் ஏன் சொல்லவில்லை என அவனையும் சபித்தார் அகத்தியர்

சூரியனும், சனிபகவானும் சாபம் நீங்க இங்கு வழிபட்டனர், பின் சிவனருளால் கர்மம் நீங்கினர்

இங்கு சூரியனும், சனியும் ஏன் வழிபட்டனர் என்றால் அங்கேதான் இருக்கின்றது ஆலயத்தின் தாத்பரியம், இந்த ஆலயத்தின் சூட்சுமம் அங்கேதான் மறைந்திருக்கின்றது

சூரியனும், சனியும் கர்ம வினையோடு சம்பதபட்டவர்கள், சனி கர்மத்துக்கான கிரகம் சூரியன் அதை செய்ய சக்தி கொடுக்கும் கிரஹம்

மேற்கு நோக்கி சிவலிங்கம் அமைந்த இந்த ஆலயத்தில் கர்ம வினைகள் களையபட்டும், பிறந்த கர்மா நல்ல முறையில் செய்ய வைராக்கியமும் பலமும் தரும் சக்தி கிடைக்கும்

சூரிய குலத்தில் பிறந்த ராமபிரான் தன் கர்மாவினை இங்கு கழித்தார், புது வைராக்கியம் சக்தி பெற்று கடைசிவரை தன் கடைசி நொடி வரை கர்மத்தில் நிலைத்து நின்றார்

அனுமனும், லட்சுமணனும் சீதையும் அப்படியே கர்மம் கழித்தனர், கடைசி வரை சுதர்மத்தில் ஏற்றுகொண்ட தர்மத்தில் கடமையில் நிலைத்திருந்தனர்

அந்த வரத்தை தரும் ஆலயம் இது

நவராத்திரியில் மூன்றாம் சாமம் என்பது அசுரர்கள் வழிபடும் நேரம், அசுரர்களும் சிவபக்தர்கள் சிவன் எல்லோருக்கும் பொதுவானவர் எனும் வகையில் அவர்களும் வழிபடுவார்கள்

அந்நேரம் அசுரர்களை ஒழித்த ராமபிரான் தன் மனைவி தம்பியோடும் அனுமனோடும் வழிபட்டார் என்றால் அங்கே ஒரு தாத்பரியம் உண்டு

எல்லோர் மனதிலும் ஒரு அசுர குணம் உண்டு, அது அவதாரங்களுக்கும் உண்டு மானுடர்க்கும் உண்டு, ஒவ்வொரு மானுடனுக்குள்ளும் அசுரர்கள் மறைந்திருகின்றார்கள்

சிவராத்திரியின் மூன்றாம் சாமத்தில் வழிபாடு செய்ய செய்ய அந்த அசுர குணம் ஒழியும், அந்த அசுர குணம் விழித்திருக்கும் போது செய்யபட்ட மோசமான கர்மாக்கள் எல்லாம் ஒழியும், சிவராத்திரியின் மூன்றாம் சாம தத்துவம் அது, அதை இந்த ஆலயம் வழங்கும்

ராவணன் எனும் பெரும் அசுரனும் அவன் அரக்க குலமும் அழிந்த பின் தேவர்கள், மானுடர்கள், யட்சர்கள் என எல்லா தரப்பும் நிம்மதியாக புதுவாழ்வு வாழ்ந்தன, புதிய உலகமே மலர்ந்தது, எல்லாமும் புதிதானது

அப்படி இந்த மூன்றாம் சாம வழிபாடு உங்களில் இருக்கும் அசுர குணத்தை ஒழித்து உங்களுக்கு புதுவாழ்வினை தரும்

108 லிங்கங்கள் ஏன்? அதுவும் ஆளுக்கு 36 லிங்க வழிபாடு ஏன் என்பதிலும் நிறைய சூட்சுமங்கள் உண்டு

ஒரு மனிதன் 36 வகை உணர்வுகளுக்கு ஆட்படுகின்றான், அது அன்பு,காதல்,கோபம், ஆனந்தம்

இன்பம், துக்கம், ஆசை, பொறாமை, வெறுப்பு, விரக்தி, அமைதி, பயம், கவலை, எதிர்பார்ப்பு

ஏமாற்றம், ஆச்சரியம், வெட்கம் , பரிவு, இரக்கம்,காமம், எரிச்சல், சலிப்பு, குற்றுணர்வு, மனவுளைச்சல் அல்லது மன அழுத்தம், ஈர்ப்பு, பெருமை, உணர்வின்மை, நம்பிக்கை \

மனக்கலக்கம், தவிப்பு, பற்று, அவநம்பிக்கை ,சோம்பல் என முப்பத்தாறு

ஒருவன் தன்னை அறியாமல் குற்றம் செய்ய இந்த 36 வகை உணர்வுகளே காரணம், அறிந்தும் அறியாமலும் செயபடும் குற்றங்கள் பாவங்கள் 36 வகை

அந்த 36 பாவங்களையும் நாசம் செய்வது 36 லிங்கங்கள்

இதை அவர்கள் மூவரும் செய்தார்கள், மானிடர்கள் 108 லிங்கமும் வழிபடும் போது கடந்தகாலம் , நிகழ்காலம், எதிர்காலம் என எல்லா கால கர்மமும் அங்கே கழிகின்றது

ராமனும் சீதையும் ஆளுக்கு 36 வகை லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார்கள், லட்சுமணன் 35 லிங்கத்துக்கு செய்தான் காரணம் அவன் சகோதரனாக பல தியாகங்களை செய்திருந்ததால் தன்னலம் எனும் குற்றம் அவனிடம் இல்லை

அனுமந்த லிங்கம் எனும் அனுமன் சுமந்த லிங்கத்துக்கு அனுமன் மட்டுமே பூஜை செய்தான், அதற்கு காரணம் அவனிடம் குற்றமேதும் இல்லை அவன் நித்திய பிரமமசாரியும் ராமனை முழுக்க சரணடைந்த கர்மயோகியாக இருந்தான்

இப்படியான தத்துவங்களை சொல்வது 108 லிங்கங்கள்

இன்னும் 108 என்பது ஏகபட்ட தத்துவங்களை கொண்டது, இறை தத்துவத்தி 54 ஆண்தன்மை, 54 பெண் தன்மை உண்டு அங்கு இங்குவழிபாட்டில் பூரணமாகின்றது

சூரியனுக்கும் பூமிக்கும், பூமிக்கும் நிலவுக்கும், சூரியனின் விட்டத்துக்கும் பூமிக்குமான அளவீடுகளில் 108 மடங்கு என்பது எப்போதுமே நிரந்தரமான ஒன்று

இந்த பிரபஞ்சம் 108 எனும் ஒரு தொடர்பால் முழுமையடைந்து இயங்குகின்றது,இதனாலே மந்திரம் முதல் ஸ்லோகம் வரை 108 முறை பிரார்த்திக்க சொன்னார்கள் இந்துக்கள்

விரலளவில் 92 விரற்கடை உயரமுள்ள உடல் 108 கண்டங்களாக பிரிக்கபடுகின்றது, 108 கண்டங்களால் உடல் முழுமை அடைகின்றது

இந்த பிரபஞ்ச அண்ட எண்ணிக்கையும் அதை இயக்கும் சிவனின் இயக்கமுறையும் 108, இதனாலே பரத கலையில் 108 கர்னணங்கள் வந்தன‌

108 முறை சிவனை போற்றும் துதிகளும் இங்கிருந்தே வந்தன‌

மூன்றாம் சாமத்தில் சிவனை நினைந்து இந்த 108 லிங்கங்களை நினைந்து சொல்லும் 108 துதிகளுக்கும் சக்தி அதிகம்

அந்த மூன்றாம் சாமத்தில் இந்த ஆலயத்தை நினைந்து கொள்ளுங்கள், 108 லிங்கங்களை நினைந்து கொள்ளுங்கள்

இந்த துதிகளை சொல்லி சொல்லி 108 வில்வ இலைகளை சாற்றுங்கள்

“ஓம் சிவாய போற்றி

ஓம் மஹேஸ்வராய போற்றி

ஓம் சம்பவே போற்றி

ஓம் பினாகினே போற்றி

ஓம் சசிசேகராய போற்றி

ஓம் வாம தேவாய போற்றி

ஓம் விரூபக்ஷாய போற்றி

ஓம் கபர்தினே போற்றி

ஓம் நீலலோஹிதாய போற்றி

ஓம் சங்கராய போற்றி

ஓம் சூலபாணயே போற்றி

ஓம் கட்வாங்கினே போற்றி

ஓம் விஷ்ணுவல்லபாய போற்றி

ஓம் சிபி விஷ்டாய போற்றி

ஓம் அம்பிகா நாதாய போற்றி

ஓம் ஸ்ரீ கண்டாய போற்றி

ஓம் பக்த வத்ஸலாய போற்றி

ஓம் பவாய போற்றி

ஓம் சர்வாய போற்றி

ஓம் திரிலோகேசாய போற்றி

ஓம் சிதிகண்டாய போற்றி

ஓம் சிவாப்ரியாய போற்றி

ஓம் உக்ராய போற்றி

ஓம் கபாலினே போற்றி

ஓம் காமாரயே போற்றி

ஓம் அந்தகாஸுர ஸூதநாய போற்றி

ஓம் கங்காதராய போற்றி

ஓம் லலாடாக்ஷாய போற்றி

ஓம் காலகாளாய போற்றி

ஓம் க்ருபாநிதயே போற்றி

ஓம் பீமாய போற்றி

ஓம் பரசுஹஸ்தாய போற்றி

ஓம் ம்ருகபாணயே போற்றி

ஓம் ஜடாதராய போற்றி

ஓம் கைலாஸவாஸிநே போற்றி

ஓம் கவசிநே போற்றி

ஓம் கடோராய போற்றி

ஓம் திரிபுராந்தகாய போற்றி

ஓம் வ்ருஷாங்காய போற்றி

ஓம் வ்ருஷபாரூடாய போற்றி

ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய போற்றி

ஓம் ஸாமப்ரியாய போற்றி

ஓம் ஸ்வரமயாய போற்றி

ஓம் த்ரயீமூர்த்தயே போற்றி

ஓம் அநீச்வராய போற்றி

ஓம் ஸர்வஜ்ஞாய போற்றி

ஓம் பரமாத்மநே போற்றி

ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய போற்றி

ஓம் ஹவிஷே போற்றி

ஓம் யக்ஞ மயாய போற்றி

ஓம் ஸோமாய போற்றி

ஓம் பஞ்வக்த்ராய போற்றி

ஓம் ஸதாசிவாய போற்றி

ஓம் விச்வேச்வராய போற்றி

ஓம் வீரபத்ராய போற்றி

ஓம் கணநாதாய போற்றி

ஓம் ப்ரஜாபதயே போற்றி

ஓம் ஹிரண்ய ரேதஸே போற்றி

ஓம் துர்தர்ஷாய போற்றி

ஓம் கிரீசாய போற்றி

ஓம் கிரிசாய போற்றி

ஓம் அநகாய போற்றி

ஓம் புஜங்கபூஷணாய போற்றி

ஓம் பர்க்காய போற்றி

ஓம் கிரிதன்வநே போற்றி

ஓம் கிரிப்ரியாய போற்றி

ஓம் க்ருத்தி வாஸஸே போற்றி

ஓம் புராராதயே போற்றி

ஓம் மகவதே போற்றி

ஓம் ப்ரமதாதிபாய போற்றி

ஓம் ம்ருத்யுஞ்ஜயாய போற்றி

ஓம் ஸூக்ஷ்மதனவே போற்றி

ஓம் ஜகத்வ் யாபினே போற்றி

ஓம் ஜகத் குரவே போற்றி

ஓம் வ்யோமகேசாய போற்றி

ஓம் மஹா ஸேன ஜனகயா போற்றி

ஓம் சாருவிக்ரமாய போற்றி

ஓம் ருத்ராய போற்றி

ஓம் பூதபூதயே போற்றி

ஓம் ஸ்தாணவே போற்றி

ஓம் அஹிர் புதன்யாய போற்றி

ஓம் திகம்பராய போற்றி

ஓம் அஷ்டமூர்த்தயே போற்றி

ஓம் அநேகாத்மநே போற்றி

ஓம் ஸாத்விகாய போற்றி

ஓம் சுத்த விக்ரஹாய போற்றி

ஓம் சாச்வதாய போற்றி

ஓம் கண்டபரசவே போற்றி

ஓம் அஜாய போற்றி

ஓம் பாசவிமோசகாய போற்றி

ஓம் ம்ருடாய போற்றி

ஓம் பசுபதயே போற்றி

ஓம் தேவாய போற்றி

ஓம் மஹாதேவாய போற்றி

ஓம் அவ்யயாயே போற்றி

ஓம் ஹரயே போற்றி

ஓம் பூஷதந்தபிதே போற்றி

ஓம் அவ்யக்ராய போற்றி

ஓம் பகதேத்ரபிதே போற்றி

ஓம் தக்ஷாத்வரஹராய போற்றி

ஓம் ஹராய போற்றி

ஓம் அவ்யக்தாய போற்றி

ஓம் ஹஸஸ்ராக்ஷாய போற்றி

ஓம் ஸஹஸ்ரபதே போற்றி

ஓம் அபவர்க்கப்ரதாய போற்றி

ஓம் அனந்தாய போற்றி

ஓம் தாரகாய போற்றி

ஓம் பரமேஸ்வராய போற்றி”

இதை சொல்லி மூன்றாம் சாமத்தில் வணங்கினால் முற்பிறவி இப்பிறவி இப்பிறவி கர்மாவினை கழிக்க வரும் பிறவி என எல்லா பிறப்பிலும் 36 வகை உணர்வுகளால் வரும் பாவம், மும்மடங்காக வரும் 108 வகை கர்மமும் கழியும்

சிவராத்திரியின் மூன்றாம் சாமம் அசுரகுணங்களை ஒழிப்பது, அறியமால் விதிவசத்தால் வரும் கர்மத்தை ஒழிப்பது என மகா புனிதமான ராமபிரானே அகத்திய மாமுனியினை முன்னிட்டு நமக்கு சொல்லி தந்தார்

உதாரண புருஷனான ராமபிரான் அதை நம்க்கு தன் மனைவி தம்பி தன் சீடன் அனுமனுடன் போதித்தார்

அதை அந்த மூன்றாம் பொழுதில் சிவராத்திரி அன்று வழிபட்டு, 108 துதிகளை துதித்து , 108 வில்வ இலைகளை சாற்றுவோர்க்கு எல்லா கர்மமும் கழியும், எல்லா நலமும் ஐஸ்வர்யமும் அமைதியும் நிம்மதியும் கைகூடும் இது சத்தியம்

சிவராத்திரி சிவாலயங்கள் 04 : வில்வனேஸ்வரர் திருக்கோவில் திருவைகாவூர்

அந்த தலம் கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்கு செல்லும் சாலையில் திருவைகாவூர் எனும் ஊரில் வில்வனேஸ்வரர் தலமாக விளங்குகின்றது

திருகாளகத்தி, திருசைலம், திருகோகர்ணம் வரிசையில் இந்த திருவைகாவூர் முக்கியமான தலம்

“கோழைமிட றாககவி கோளுமில வாகஇசை கூடும்வகையால்

ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொல்மகிழும் ஈசனிடமாம்

தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை தாறுசிதறி

வாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல் சேறுசெயும் வைகாவிலே”

என சம்பந்த பெருமாரும்

“தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி

தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்

கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல்

வீரட்டங் கோகரணங் கோடி காவும்

முல்லைப் புறவம் முருகன் பூண்டி

முழையூர் பழையாறை சத்தி முற்றங்

கல்லிற் றிகழ்சீரார் காளத் தியுங்

கயிலாய நாதனையே காண லாமே”

என அப்பர் பெருமானும் பாடிய பாடிய தேவார பாடல் தலம் இது.

இந்த ஆலய வரலாறு ம்கா தொன்மையானது

பிரளய காலம் எனும் கொடும்காலம் முடிந்து மீண்டும் உலகம் படைக்கபட தொடங்கும் போது திருமாலுக்கும் பிரம்மனுக்கும் வேதங்களுக்கும் ஒரு சந்தேகம் உண்டாயிற்று, அது மறுபடியும் ஊழிகாலம் வந்தால் நமது நிலை என்னாகும் என்பது

பிரம்மனுக்கு இந்த சந்தேகம் முதலில் வந்து அவன் இந்த இடத்தில் தவம் செய்ய தொடங்கினான், அவனை தொடர்ந்து திருமால் வந்தார் அப்படியே வேதங்களும் வந்தன‌

அவர்கள் நடுவில் தோன்றிய எம்பெருமான் வேதங்களுக்கு முதலில் ஒரு உறுதிமொழி கொடுத்தார் அதன்படி வில்வமரங்கள் எந்த காலத்திலும் எந்த ஊழியிலும் அழியாது என்பதால் அவை மீண்டும் மீண்டும் வரும் என்பதால் வேதங்களை வில்வமரங்களாக நிற்கும்படி உத்தரவு கொடுத்தார்

வேதங்கள் அங்கே வில்வமரமாக நின்று சிவனை வணங்கின, அந்த வனமே வில்வவனம் என்றாயிற்று

அந்த வில்வவனத்தில் பிரம்மனுக்கும் திருமாலுக்கும் சிவன் உறுதிமொழிகளை கொடுத்ததால் அவர்களும் சிவனை போற்றி நின்றார்கள்

இப்படி சிவனை வேதங்களும், திருமாலும் பிரம்மனும் வணங்கினார்கள், இன்னும் உத்தால முனிவரால் சபிக்கபட்ட சப்தகன்னியர் வணங்கி நலம் பெற்றார்கள்

வில்வவனத்தில் ஒரு வில்வ மரத்தடியில் அந்த சிவன் சுயம்புவாய் வீற்றிருந்தார், காலங்கள் கடந்தன தேவர்களும் இதர உலகத்தாரும் வந்து வணங்கி சென்றனர், ரிஷிகளும் வந்து அந்த வனத்தில் வில்வனேஸ்வரரை வணங்கி தவமிருந்தனர்

அப்படி தவமிருந்தவர்களில் நவநிதி என்பவரும் ஒருவர், அவர் பெரும் தவம் இயற்றி கொண்டிருந்தார். அந்நேரம் அருகில் இருந்த காட்டில் நாளெல்லாம் வேட்டையாடியும் ஒன்றும் கிடைக்காத வேடன் அந்திபொழுதில் ஒரு மானை கண்டான், அதை விரட்டினான்

மான் இந்த வில்வவனத்துக்குள் வந்து முனிவரிடம் அடைக்கலாமனது, வேடனோ விரட்டி வந்தவன் மானை கண்டு வில்லை வளைத்தான்

அந்நேரம் கண்விழித்த முனிவர் மானை கண்டு இரக்கம் கொண்டு அதனை அருகில் அழைத்தார் மான் அஞ்சி நடுங்கி அவரிடம் ஒட்டி கொண்டது, அன்பான அவரிடம் சரணடைந்தது

வேடனோ முன்னேறி ஓடிவந்தான்

அதே நேரம் எமன் அவனை நோக்கி புன்னகைத்தான், காரணம் வேடனின் விதி அதிகாலை முடிவதாக இருந்தது, அவன் உயிரை பறித்து தன் கடமை செய்ய எமன் தயாரானான்

எல்லா மானுடரை போலவே இதை அறியாத வேடன் மானின் உயிர் பறிக்க முனிவர் முன் வந்து வாதிட்டான்

அக்காலத்தில் வேடுவர்க்கும் விதி இருந்தது, தவம் செய் முனிவர்கள் இருக்கும் இடத்துக்கு வரகூடாது அவர்கள் பராமரிப்பில் இருக்கும் விலங்குகளை தொட கூடாது என்பது பொது விதியாய் இருந்தது

முனிவர் அதை சொல்லி மானை காக்க முற்பட்டார் அவனோ இது ஓடிவந்த காட்டுமான் அவர் மான் அல்ல அது தனக்கு சொந்தம் என வாதிட்டான்

முனிவர் அதனை கொடுக்க மறுத்தார், அறம் மறந்து பசியிலும் வேட்டை வெறியிலும் இருந்த வேடனோ மானுக்காக அவரை கொல்லவும் துணிந்தான் மிரட்டினான்

முனிவர் கண்ணை மூடி சிவனை தியானித்தார்

அந்நேரம் ஒரு புலி உறுமிகொண்டு வந்தது, உருவிலும் வலுவிலும் மிக மிக பெரிதாக இருந்த புலியினை தன்னால் கொல்லமுடியாது என உணர்ந்த வேடன் தப்பி ஓடினான், புலி அவனை விரட்ட ஒரு மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டான்

புலிக்கு மரம் ஏற தெரியாது என்பதால் புலி மரத்தில் ஏறவில்லை மாறாக மரத்தடியில் படுத்து கொண்டது

வேடனுக்கோ கொடும் பசி பெரும் தளர்ச்சி , மரத்தின் மேல் இருந்து புலியினை நோக்கினான் அது அங்கே பழிக்காவல் கிடந்தது

ஒருவேளை உறங்கினால் கீழே விழலாம் அப்போது புலிக்கு உணவாக வேண்டும் என கருதியவன், தூக்கம் வரமால் இருக்க ஒவ்வொரு மர இலையாக பறித்து கீழே போட ஆரம்பித்தான்

இலைவிழும் மரத்தடியில் புலி படுக்காது என்பது அவனுக்கு தெரியும், அது அவ்வளவுக்கு மிக உணர்வான விலங்கு சிறு பொருளும் தன் மேல் விழ அது அனுமதிக்காது அதன் இயல்பு அப்படி

வேடன் அதனால் இலைகளை பறிந்த்து போட ஆரம்பித்தான், புலியோ அசரவில்லை, அவன் ஆச்சரியபட்டாலும் தூக்கம் வராமல் இருக்க அதை தொடர்ந்து செய்தான்

அது வில்வமரம் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை

அந்த இரவு முழுக்க அவன் இலையினை பறித்து கீழே வீசிகொண்டிருந்தான், அது மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாளாக இருந்தது

அவன் இரவு முழுக்க அப்படி வில்வ இலைகளை வீசினான், அதிகாலையில் அவன் விதிமுடியும் நேரம் எமன் அப்பக்கம் வந்தான்

ஆனால் தட்சனாமூர்த்தி வடிவில் சிவன் தோன்றினார் கையில் கம்புடன் அவனை விரட்டினார், நந்தியானவர் சீறி சென்று தன் கொம்பால் அவனை தூக்கி எறிந்தார்

எமன் அரண்டே போனான், தன் கடமையினை செய்யவந்த போது சிவன் தன்னை தடுப்பது சரியல்ல என வாதிட்டான்

அப்போதுதான் சிவன் உரைத்தார் “இவன் இரவெல்லாம் சிவராத்திரி வழிபாடு செய்ததால் அவன் கர்மா தீர்க்கபட்டு ஆயுள் அதிகரித்தாயிற்று இனி அவன் மேல் எமனுக்கு அதிகாரமில்லை” என உத்தரவிட்டார்

எமன் அந்த சிவனை பணிந்து ஒரு தீர்த்தம் உருவாக்கி கொடுத்தான் அதுவே “எம தீர்த்தம்” ஆயிற்று

நடந்ததை அறியாமல் மரத்தில் இருந்து அஞ்சியபடியே இறங்கிய வேடன் புலியினை தேடினான், அதை காணவில்லை ஆனால் அவன் பறித்துபோட்ட இலை குவிந்து கிடந்தது

ஒருவேளை புலி அதனுள் பதுங்கி இருக்கலாம் என் அஞ்சியவன் தன் கத்தியினை உருவியபடியே அந்த இலைகளை மெதுவாக ஒதுக்கினான்

உள்ளே சிவலிங்கம் இருந்தது, வேடனுக்கு கை கால் எல்லாம் ஆடிற்று அப்படியே கத்தியினை விட்டுவிட்டு கதறினான்

நவநிதி முனிவர் அவனுக்கு நடந்ததை எடுத்துரைத்தார், சிவராத்திரியின் பெருமையினை சிறப்பை எடுத்துரைத்தார், இரவெல்லாம் வில்வ இலையால் சிவனுக்கு அர்ச்சனை செய்தால் கொடிய விதி மாறும் என போதித்தார்

அங்கே கொடிய வேடன் சிவனால் ஆட்கொள்ளபட்டு முனிவரின் சீடரானான், மானிடரின் முதல் சிவராத்திரி இங்கிருந்துதான் தொடங்கிற்று

அவ்வகையில் மானிட இனம் சிவராத்திரியினை இந்த தலத்தில் இருந்துதான் தொடங்கிற்று

பின்னாளில் இங்கு கோவில் எழுந்தது, அந்த வில்வனேஸ்வரர் பெரும் ஆலயம் கொண்டார், தலபுராணபடி திருமாலும் பிரம்மனும் துவாரபாலகர்கள் என்றாகி இன்றும் நிற்கின்றார்கள்

வில்வம் அங்கே தலவிருட்சமாயிற்று

சோழர்கள் இந்த ஆலயத்தை மிக சிறப்பாக தலைமுறை தலைமுறையாக பெரிது படுத்தி கொண்டாடினார்கள், குலோதுங்க சோழன் இதனை கொண்டாடினான் அவன் பற்றிய கல்வெட்டு நிரம்ப உண்டு

தேவாரம் பாடபெற்ற 48ம் ஆலயம் இது

இங்கு இரு முருகன் சன்னதிகள் உண்டு, ஒருவர் மயில்மேல் வள்ளி தெய்வானவுடன் அமர்ந்திருப்பார், இச்சிலை எட்டுகுடி முருகனை வடிவமைத்த அந்த தெய்வீக சிற்பியால் அழகுற செதுக்கபட்டது

இன்னொரு முருகன் மயில்மேல் கால்வைத்த முத்துகுமாரசாமியாக நிற்கின்றார், இவர் சம்ஹார மூர்த்தி, அருணகிரியாரால் பாடபட்டவர் இவர்

அப்படியே சண்டிகேஸ்வரர்கள் இங்கு இருவர் உண்டு, பஞ்ச பைரவர் சன்னதி விஷேஷமானது

இந்த ஆலயத்தில் நந்தி சிவனை பார்க்காமல் வாசலை நோக்கி அமர்ந்திருப்பார், எமனை அவர் விரட்டி அடித்து மேற்கொண்டு வேடனுக்கு காவல் இருந்ததை சொல்லும் காட்சி இது

தட்சினாமூர்த்தி இங்கு கையில் கம்பு , மான் கொண்டு காட்சியளிப்பார். இது மானை தேடி வந்த வேடனை சிவன், எமனை விரட்டி ஆட்கொண்ட காட்சியினை சொல்லும்

இத்திருத்தலத்திற்கு இராஜ கோபுரம் இல்லை. அதாவது அவ்வளவுக்கு முந்தைய காலம்

கோயிலின் வெளிப்புறம் மிக நீண்ட உயரமான மதில் சுவரும், முகப்பில் வவ்வாலத்தி மண்டபமும் உண்டு

மண்டபத்தில் அந்த தலபுராணமான வேடனை, புலி விரட்டிய திருவிளையாடல் சுதை சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது.

தென்புற வாயிலில் கிழக்கு நோக்கிய சித்தி விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது.

பிரகாரத்தில், சுந்தரமூர்த்திவிநாயகர் சன்னதி, சூரிய, சந்திர பகவான், அறுபத்து மூன்று நாயன்மார்கள், சப்தகன்னியர் சன்னதி, சுப்பிரமணியர் சன்னதி, முத்துக்குமார் சன்னதி, பஞ்ச பைரவர் சன்னதி, இரண்டு சண்டிகேஷ்வரர்கள் சன்னதி மற்றும் சனீஸ்வரன் தனிச்சன்னதியும் அமைந்துள்ளது.

மகா மண்டபத்தில் விநாயகர், பிரம்மா, விஷ்ணு, நாராயணி, அகத்தியர் திரு உருவங்களும், கோஷ்டத்தில் கணபதி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

பிரகார வலம் வந்து கருவறைக்குள் நுழைந்தால் இத்தல மூலவர் அருள்மிகு வில்வவனநாதர் சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கருணைக்கடலான சிவபெருமானை தரிசித்து விட்டு வெளியேறினால்,

கருணைக்கடலான சிவபெருமானை தரிசித்து விட்டு வெளியேறினால், இடதுபுறம் வளைக்கை நாயகி அம்மன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அபய ஹஸ்தத்துடன் தனிச்சன்னதியில் அருள்புரிகிறார். அம்பாளுக்கு எதிரில் ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது.

இந்த சக்கரத்திற்கு அருகே நின்று வேண்டிக் கொண்டால் அம்பாளே நம்முடன் பேசுவது உணர முடியும் என்பதும் , பக்தர்களின் வேண்டுதல் இத்தனை நாளில் நடக்கும் என அங்கேயே அம்பாளால் சொல்லபடும் என்பதும் அவளிடம் வேண்டி பலன் பெற்ற எல்லா பக்தர்களின் சாட்சி, மெய்சிலிர்க்க வைக்கும் சாட்சி

தன்னிடம் வேண்டுவோர் குறை அனைத்தும் தீர்க்கும் தாய் என்பதால் அம்பாளுக்கு “சர்வஜன ரட்சகி” எனும் திருநாமம் உண்டு

இந்த ஆலயத்தில் அம்பாள் சன்னதியும் சுவாமி சன்னதியும் நேர்கோட்டில் ஒரே திசையில் அமைந்துள்ளது. இந்த அமைப்பினை கல்யாணத்திருக்கோவில் என்று அழைக்கப்படுகிறது.

ஈசன் கயிலாயத்தில் நடந்த கல்யாணக் காட்சியை அகத்தியர்ருக்கு காட்சிதந்து அருளிய ஆலயங்களில் ஒன்று என்பதால் இந்த அமைப்பு உண்டு

சிவராத்திரியில் நான்காம் சாமத்தில் வழிபட வேண்டிய ஆலயம் இது

இந்த ஆலயத்தின் தாத்பரியமும் போதனையும் எளிதானது, வேடன் ஒருவன் அறியாமல் தன்னை அறியாமலே என்ன செய்கின்றோம் என தெரியாமலே சிவராத்திரியில் விழித்திருந்து வில்வ இலையால் சிவனை அர்சித்து மோட்சம் பெற்ற சம்பவத்தை சொல்லும் தத்துவம் இது

ஆம், பெரிய ஞானம் வேண்டாம் , ஆத்ம தத்துவ அறிவு வேண்டாம், வேத ஞானமோ சிவனின் தாத்பரியமோ எதுவும் அறிந்திருக்க வேண்டாம்

சிவராத்திரியில் விழித்திருந்து வில்வ இலையால் சிவனை அர்சித்தாலே, சூரியன் அதிகாலையில் தானாக எழுவது போல் சிவனருள் தானாக வந்து மனதில் உதிக்கும் ஞானம் கொடுக்கும் என்பதை இந்த தலம் சொல்லி சிவராத்திரி வழிபாட்டின் நான்காம் சாம முக்கியத்துவத்தை சொல்கின்றது

சிவராத்திரியின் நான்காம் சாமத்தில் தேவர்கள் சிவனை வழிபடும் நேரம், இந்த ஆலயத்தில் திருமால், பிரம்மன் இன்னும் சூரிய சந்திரர் உள்ளிட்ட தேவர்கள், சப்த கன்னியர் என எல்லா தேவர்களும் வந்து வணங்கினார்கள்

வேதங்கள் வணங்கிற்று

இன்னும் மானிடரில் இருந்து தேவர் நிலைக்கு உயர்ந்த அகத்தியர், நவமுனி போன்றோரும் வணங்கினார்கள்

இதனால் இந்த தலம் தேவர்கள் வழிபடும் நான்காம் சாமத்தின் தலமாயிற்று, புது யுக தொடக்கத்தில் அவர்கள் அச்சமெல்லாம் போக்கி புது படைப்பாய் புது சக்தியாய் இயங்கும் வரத்தை இந்த ஆலயமே கொடுத்தது

சிவராத்திரியின் நான்கு பொழுதுகளின் தத்துவமும் அருமையானவை பெரும் ஞானம் போதிப்பவை

முதல் சாமம் மனிதன், இரண்டாம் சாமம் யட்சர்கள் நாகர்கள் , மூன்றாம் சாமம் அசுரர்கள், நான்காம் சாமம் தேவர்கள் என்பது ஒரு படிநிலை தத்துவம்

மனிதன் தன் ஞான தேடலால் குண்டலி எனும் நாகத்தால் சக்தி பெற்று யட்சன் போல் பரம்பொருளை நெருங்கி, அசுர குணத்தை ஒழித்து தேவர் நிலைக்கு உயர்தல் வேண்டும் என்பதே சிவராத்திரி தத்துவம்

முழு விழிப்பு நிலையில் ஆத்ம விழிப்பு நிலையில் அவன் மானிடரில் இருந்து தேவராக உயர்தல் வேண்டும் என்பதே அந்த அற்புதமான ஏற்பாட்டின் போதனை

மாசிமாத சுக்லபட்ச 14ம் நாள் இரவு அதற்கான பலனை வானியல் ரீதியாக தரும், நல்ல அலைகளை தரும்

அந்த இரவில் இந்த நான்கு தலங்களையும் நான்கு சாமத்தில் தரிசித்தல் நன்று சோழநாட்டு தஞ்சை கும்பகோணம் பக்கம் உள்ளவர்கள் அந்த இரவில் இதனை எளிதில் தரிக்கலாம்

முடியாதவர்கள் ஒவ்வொரு சாம வழிபாட்டிலும் இந்த ஆலயங்களையும் அந்த சிவனையும் அந்த ஆலய தத்துவத்தையும் மனதார வணங்கி வழிபடலாம், வில்வம் சாற்றி வழிபடலாம், அதை முறையே செய்தால் உங்கள் மனமும் வீடும் செழிக்கும், அந்த வீடும் குடியும் செழித்து வாழும் இது சத்தியம்