சுப்பிரமணிய புஜங்கம் : 04 / 06
(பதினான்காம் முதல் பத்தொன்பதாம் ஸ்லோகம் முடிய)
பதினான்காம் ஸ்லோகம்
“ஸ்புரன் மந்தஹாஸை ஸஹம்ஸானி சஞ்சத்
கடாக்ஷாவலீப்ருங்க ஸங்கோ ஜ்வலானி
ஸுதாஸ்யந்தி பிம்பா தரணீச ஸூனோ
தவாலோகயே ஷண்முகாம் போரு ஹாணி”
முதல்வரி “ஸ்புரன் மந்த ஹாஸ ஸ ஹம்ஸானி சஞ்சத்”
அதாவது என்றால் மின்னுதல் / ஜொலித்தல் என பொருள், சுப்பபுரமணி என முருகனுக்கு சமஸ்கிருத பெயர் வந்தது இப்படித்தான், மணிபோல மின்னுபவன் என பொருள்
மந்த ஹாஸ என்றால் புன்முறுவல், ஸ என்றால் உடன், ஹம்ஸா என்றால் அன்னம், சஞ்சல் என்றால் சஞ்சலம் அல்லது அசைதல்
இரண்டாம் வரி “கடாக்ஷ ஆவலீ ப்ருங்க ஸங்க உஜ்வலானி”
அதாவது கடாக்ஷ என்றால் பார்வை, ஆவலீ என்றால் வரிசை (தீப ஆவலி எனும் தீபாவளி), பருங்க என்றால் வண்டுகள், ஸங்க என்றால் சங்கம் அல்லது கூட்டம், உஜ்வால என்றால் ஜுவாலை
மூன்றாம் வரி “ஸுதா ஸ்யந்தி பிம்பா தரா ஈச ஸூனோ”
சுதா அல்லது ஸூதா என்றால் தேன், ஸ்யந்தி என்றால் சிந்தி வழியும், பிம்ப தரா என்றால் பிம்ப பழம் எனும் கோவை பழம், ஈச ஸுனோ என்றால் ஈசனின் புதல்வன்
நான்காம் வரி “தவாலோகயே ஷண்முகாம் போரு ஹாணி”
அதாவது தவ என்றால் உன்னுடைய , ஆலோக என்றால் பார்வை, ஷண்முகா என்றால் ஆறு முகம்
அம்போருஹாண என்றால் நீரில் பூத்த தாமரை
சுருக்கமாக பாடலின் பொருள் இதுதான்
“முருகா அன்னப் பறவைகள் அசைவதுபோல் புன்முறுவலுடன் ஜொலிக்கும் முகமும், நீரில் பூத்த தாமரையை ஒத்த உன் முகத்தில், அத்தாமரையில் நிரம்பி வழியும் தேனைப் பருகும் வண்டுகள் கூட்டம் அசைவதைப் போல அசைந்து ஒளிரும் உன் ஆறுமுகங்களின் பன்னிரு கண்களின் வரிசையும், கோவைப்பழம் போன்ற உதடுகளை உடைய ஈசனின் புதல்வன் நீ, இப்படியான உன் தாமரைப்போன்ற முகத்தை மனதால் காண்கிறேன்”
அழகான உவமையில் உருக வைக்கின்றார் சங்கரர்
முருகப்பெருமானின் முகம் தாமரை போல் ஜொலிக்கின்றதாம், தாமரை என்றால் அந்த தடாகத்தில் அன்னம் உண்டு, அன்னம் மெல்ல நகர்வது போல அவர் முகம் புன்னகைகின்றதாம், (தாமரை மலரை அன்னம் உரசும்பபோது மெல்ல ஆடுவது என்றும் சொல்லலாம்)
மலர் என்றால் வண்டு வரும், அப்படி 12 கண்களும் வண்டுபோல் நகர்கின்றதாம், மலரில் தேன் உண்டல்லவா? அந்த தேன் கட்டி நிற்பது போல் கோவை கனி இதழ்கள் சிவந்து நிற்கின்றதாம், (தேன் போல இனிமையான மொழிகள் கோவை கனி போன்ற இதழில் இருந்து வருகின்றது என்றும் பொருள் கொள்ளலாம்
அடுத்து பதினைந்தாவது ஸ்லோகம்
“விசாலேஷு கர்ணாந்த தீர்க்கேஷ் வஜஸ்ரம்
தயாஸ்யந்திஷுத்வாதசஸ் வீக்ஷணேஷு
மயீஷத் கடாக்ஷ ஸக்ருத் பாதித ஸ்சேத்
பவேத்தே தயாசீல கா நாமஹானி”
முதல் வரி “விசாலேஷு கர்ணாந்த தீர்க்கேஷ் வஜஸ்ரம் “
அதாவது விசாலேஷு என்றால் அகன்ற. கர்ணாந்த என்றால் காது வரை, தீர்க்கேஷ் என்றால் நீண்டு, அஜஸ்ரம் என்றால் தடையின்றி
அடுத்து இரண்டாம் வரி “தயா ஸ்யந்தி ஷுத்வாதசஸ் வீக்ஷணேஷு”
அதாவது தயா என்றால் கருணை, ஸயந்தி என்றால் நிரம்பி வழிகிறது, த்வாதசஸ் – பன்னிரெண்டு
வீக்ஷணேஷு என்றால் கண்கள்
மூன்றாம் வரி “மயீஷத் கடாக்ஷ ஸக்ருத் பாதித ஸ்சேத் “
அதாவது மயீ என்றால் என் மீது, ஈஷத் என்றால் சிறிது, கடாக்ஷ என்றால் பார்வை
ஸக்ருத் என்றால் ஒரு முறை, பதித என்றால் பதிந்துவிடுதல் அலல்து விழுதல் , சேத் என்றால் ஒருவேளை
அடுத்தவரி “பவேத் தே தயாசீல கா நாமஹானி”
அதாவது பவேத் என்றால் இருப்பதால், தே என்றால் உனக்கு, தயாசீல என்றால் தயாளனே / கருணையுருவே
கா என்றால் என்ன, நாம ஹானி என்றால் நஷ்டம்
ஆக பாடலின் பொருள் இதுதான்
“உனது அகன்று விரிந்த கண்கள், காதுவரை தடையின்றி நீண்டதாய், என்றும் கருணை நிரம்பி வழியும் பன்னிரு கண்கள். அந்த கண்களின் கடைக்கண் பார்வை என் மீதும் சிறிது ஒரு முறையேனும் விழாதோ. தயாளனே / கருணையுருவே ஒருவேளை என் மீது உன் கடைக்கண் பார்வை விழுவதால் உனக்கு என்ன நஷ்டம்?”
நான் உன் பார்வை பட அறுகதை அற்றவனாயினும், உன் கருணையால் ஒரு முறையேனும் உன் பார்வை பட, உனக்கு நஷ்டம் இல்லை. எனவே அருள் புரிவாயாக என வேண்டுகிறார் சங்கரர்
அள்ள அள்ள குறையாத அருள்கடலே எனக்கு அருள் செய்தால் உனக்கு ஒரு துளி குறையுமோ என உருகி பாடுகின்றார்
பதினாறாவது ஸ்லோகம்
“ஸுதாங்கோத் பவோ மேஸி ஜீவேதி ஷட்தா
ஜபன்மந்த்ரமீசோ முதா ஜிக்ரதே யான்
ஜகத்பாரப்ருத்யோ ஜகந்நாத தேப்ய
கிரீடோஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய’
முதல் வரி “ஸுத அங்க உத்பவோ மே அஸி ஜீவ இதி ஷட்தா”
அதாவது ஸுத – மகனே, அங்க என்றால் அங்கம் / உடலிலே, உத்பவோ என்றால் உத்பத்தி, மே என்றால் என், அஸி என்றால் ஆனவனே , ஜீவ இருக்கிறாய், ஷட் ஆறு, தா என்றால் முறை
இனி இரண்டாம் வரி “ஜபன் மந்த்ர ஈசோ முதா ஜிக்ரதே யான்”
அதாவது ஜபன் என்றால் ஜபித்தல், மந்த்ர என்றால் மந்த்ரம்,, ஈசோ என்றால் ஈசனாகிய சிவன்
முதா என்றால் ஆசையுடன், ஜிக்ரதே என்றால் உச்சி முகர்ந்த, யான் என்றால் அந்த
மூன்றாம் வரி “ஜகத் பார ப்ருத்யோ ஜகந்நாத தேப்ய”
அதாவது ஜகத் என்றால் உலக, பார என்றால் பாரத்தை, ப்ருத் என்றால் ஏற்கும், ஜகந் நாத என்றால் ஜகன்னாதன்/ உலகநாதன் , தேப்ய என்றால் அவனுக்கு
நான்காம் வரி “கிரீட உஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய”
அதாவது கிரீட என்றால் கிரீடம், உஜ்வலேப்யோ என்றால் ஜொலிக்கும், நமோ என்றால் வணங்குகிறேன்
மஸ்தகேப்ய என்றால் தலையை
ஆக பாடலின் பொருள் இதுதன்
“குழந்தாய், என் உடலிலிருந்து (என் நெற்றிகண்ணில் இருந்து) வந்தவனே வாழ்க என ஆறுமுறை ஆசையுடன் மந்திரம் சொல்லி உச்சந்தலையை முகர்ந்தார் ஈசன். ஒளி வீசும் கிரீடங்கள் அணிந்த, இவ்வுலகை ஆளும், உலகத்தின் தலைவனின், அந்தத் தலைகளை வணங்குகிறேன்”
ஈசனிடம் இருந்து உருவான முருகபெருமானே , எந்த தலைகளை ஈசன் முகர்ந்து பெருமையடைந்தாரோ அந்த தலைகளை நான் வணங்குகின்றேன் என்கின்றார் சங்கரர்
பதினேழாவது ஸ்லோகம்
“ஸ்புரத்ரத் ன கேயூரஹாராபிராம
ஸ்சலத் குண்டல ச்ரீலஸத் கண்டபாக
கடெள பீதவாஸா கரே சாருசக்தி
புரஸ்தான் மமாஸ்தாம் புராரேஸ் தனூஜ “
முதல்வரி “ஸ்புர ரத்ன கேயூர ஹாரா அபி ராம”
ஸ்புரதத் என்றால் மின்னுதல் / ஜொலித்தல், ரத்ன என்றால் ரத்தின கற்கள், கேயூரம் என்றால் தோளில் அணியும் அடையாள ஆபரணம், ஹார என்றால் நீள அட்டிகை, அபி என்றால் மிகவும், ராம என்றால் அழகான
இரண்டாம் வரி “ஸ்சலத் குண்டல ச்ரீ லஸத் கண்ட பாக”
சலத் என்றால் அசையும், குண்டல என்றால் குண்டலம் (காதணி), ச்ரீ என்றால் அழகு, லஸத் என்றால் ஒளிர்தல், கண்ட என்றால் கன்னம், பாக என்றால் பகுதி
மூன்றாம் வரி “கடெள பீதவாஸா கரே சாருசக்தி”
கடௌ என்றால் இடை, பீதவாஸா என்றால் மஞ்சள் ஆடை, கரே என்றால் கரங்க/ கைகள், சாரு என்றால் ஆச்சரியமான, சக்தி என்றால் வேல்
நான்காம் வரி “புரஸ்தான் மமா ஆஸ்தாம் புரா ஆரேஸ் தனூஜ”
அதாவது புரஸ்தான் என்றால் புராதானம் / முன்னே, மம என்றால் என், ஆஸ்தாம் என்றால் தோன்ற, புரா ஆரே என்றால் த்ரிபுரனின் எதிரியாகிய சிவன், தனூஜ என்றால் மகனே
ஆக பாடலின் பொருள் இதுதான்
“ஒளிரும் இரத்தினக் கற்கள் பதித்த தோள் வங்கியும், மிகவும் அழகான அட்டிகையும், அசைந்தாடும் காதணி குண்டலங்களும், இவ்வாபரணங்களின் ப்ரகாசத்தால் மின்னும் அழகிய கன்னங்களும், மஞ்சள் பட்டாடை அணிந்த இடையும், கையில் ஆச்சரியமான வேலும் கொண்டவனே, த்ரிபுரம் எரித்த புராரியின் மகனே! இங்ஙனம் என் முன்னே தோன்றுவாயாக”
பதினெட்டாவது ஸ்லோகம்
“இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தான் ப்ரஸார்யா
ஹவயத்யாதராச் சங்கரே மாதுரங்காத்
ஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம்
ஹராஸ்லிஷ்டகாத்ரம் பஜே பாலமூர்த்திம்”
முதல்வரி “இஹ ஆயாஹி வத்ஸ இதி ஹஸ்தான் ப்ரஸார்யா”
அதாவது இஹ என்றால் இங்கே, ஆயாஹி என்றால் வா, வத்ஸ என்றால் குழந்தாய், இதி என்றால் என
ஹஸ்தான் என்றால் கைகளை, ப்ரஸார்ய என்றால் விரித்து நீட்டி
இரண்டாம் வரி “ஆஹவய ஆதாரத் சங்கரே மாது அங்காத்”
ஆஹவய என்றால் அழைக்க, ஆதராத் என்றால் ஆசையுடன் / பாசத்துடன், சங்கரே என்றால் சங்கரர்,
மாது என்றால் மாதா / அன்னை, அங்காத் என்றால் மடியிலிருந்து
மூன்றாம் வரி “ஸம உத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம்”
ஸம உத்பத்ய என்றால் தாவி கொண்டு, தாதம் என்றால் தந்தையிடம், ச்ரயந்தம் என்றால் கட்டியணை,
குமாரம் என்றால் குழந்தை
நான்காம் வரி “ஹர ஆஸ்லிஷ்ட காத்ரம் பஜே பாலமூர்த்திம்”
ஹர என்றால் சிவன், ஆஸ்லிஷ்ட என்றால் தாங்கி தழுவி, காத்ரம் என்றால் உடலை, பஜே என்றால் பஜனை /பாடுதல், பால மூர்த்திம் என்றால் குழந்தை உருவத்தானை.
ஆக பாடலின் பொருள் இதுதான்
““இங்கே வா குழந்தாய் என சங்கரனார் (பரமசிவனார்) கை நீட்டி அழைக்க, அம்மாவின் மடிவிட்டு சட்டென தாவியெழுந்து தந்தையிடம் சென்ற, அப்படி ஹரனால் தாங்கித் தழுவப்பட்டவனே! குமரனே! இந்தக் குழந்தை உருவத்தானைப் போற்றிப் பாடுகிறேன்”
சோமஸ்கந்தன் எனும் பாலகுமார வடிவத்தை சொல்லி இங்கே பாடுகின்றார் சங்கரர்
பத்தொன்பதாவது ஸ்லோகம்
“குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த ஸேனா
பதே சக்தி பாணே மயூரா திரூட
புளிந்தாத்மஜாகாந்த பக்தார்த்தி ஹாரின்
ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம்”
முதல்வரி “குமார ஈச ஸூனோ குஹ ஸ்கந்த ஸேனா”
அதாவது குமார என்றால் குமாரனே , ஈச ஸூனோ என்றால் ஈசனின் மகனே /புதல்வனே , குஹ என்றால் குஹன் , ஸ்கந்த என்றால் கந்தா, ஸேனா என்றால் சேனை / படை
இரண்டாம் வரி “பதே சக்தி பாணே மயூரா திரூட”
பதே என்றால் தலைவனே , சக்தி என்றால் சக்தி ஆயுதத்தை, பாணே என்றால் பாணம் / கையில் ஏந்தியவனே, மயூர என்றால் மயில், அதிரூட என்றால் மீது ஏறுபவனே
மூன்றாம் வரி “புளிந்த ஆத்மஜா காந்த பக்த ஆர்த்தி ஹாரின்”
புளிந்த என்றால் புளிந்த என்ற வேடுவராஜனின், ஆத்மஜா என்றால் மகளின் , காந்தா என்றால் ஆசைநாயகனே, பக்த என்றால் பக்தர்களின், ஆர்த்தி என்றால் மனக்லேசங்களை (துக்கங்களை)
ஹாரின் என்றால் அபகரிப்பவனே
நான்காம் வரி “ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷ மாம் த்வம்”
அதாவது ப்ரபோ என்றால் வீரதீர தலைவனே, தாரக ஆரே என்றால் தாரகாசுரனின் எதிரியே, ஸதா என்றால் எப்பொழுதும், ரக்ஷ என்றால் ரக்ஷிப்பாய் / காப்பாய், மாம் என்றால் என்னை, த்வம் என்றால் நீ
பாடலின் பொருள் இதுதான்
“குமாரனே , சிவகுமாரனே, குஹனே, கந்தனே, சேனாபதியே,வேலாயுதனே, மயில்வாகனனே,வள்ளி மணாளனே, பக்தர்களின் மனக்லேசங்களை போக்குபவனே, தலைவா,தாரகாசுரனை வென்றவனே, நீ எப்பொழுதும் என்னைக் காப்பாய்”
இந்த ஆறுபாடல்களில் முருகப்பெருமான் அவதரித்து வளர்ந்து வெற்றி வீரனாய் பரிணமித்த வகையினை கவித்துவமாக உருவகமாக சொல்கின்றார் சங்கரர்
இதோ அந்த வரிகள், மீண்டும் தருகின்றோம்
“முருகா அன்னப் பறவைகள் அசைவதுபோல் புன்முறுவலுடன் ஜொலிக்கும் முகமும், நீரில் பூத்த தாமரையை ஒத்த உன் முகத்தில், அத்தாமரையில் நிரம்பி வழியும் தேனைப் பருகும் வண்டுகள் கூட்டம் அசைவதைப் போல அசைந்து ஒளிரும் உன் ஆறுமுகங்களின் பன்னிரு கண்களின் வரிசையும், கோவைப்பழம் போன்ற உதடுகளை உடைய ஈசனின் புதல்வன் நீ, இப்படியான உன் தாமரைப்போன்ற முகத்தை மனதால் காண்கிறேன்”
“உனது அகன்று விரிந்த கண்கள், காதுவரை தடையின்றி நீண்டதாய், என்றும் கருணை நிரம்பி வழியும் பன்னிரு கண்கள். அந்த கண்களின் கடைக்கண் பார்வை என் மீதும் சிறிது ஒரு முறையேனும் விழாதோ. தயாளனே, கருணையுருவே ஒருவேளை என் மீது உன் கடைக்கண் பார்வை விழுவதால் உனக்கு என்ன நஷ்டம்?”
“குமாரனே , சிவகுமாரனே, குஹனே, கந்தனே, சேனாபதியே,வேலாயுதனே, மயில்வாகனனே,வள்ளி மணாளனே, பக்தர்களின் மனக்லேசங்களை போக்குபவனே, தலைவா,தாரகாசுரனை வென்றவனே, நீ எப்பொழுதும் என்னைக் காப்பாய்”
“ஒளிரும் இரத்தினக் கற்கள் பதித்த தோள் வங்கியும், மிகவும் அழகான அட்டிகையும், அசைந்தாடும் காதணி குண்டலங்களும், இவ்வாபரணங்களின் ப்ரகாசத்தால் மின்னும் அழகிய கன்னங்களும், மஞ்சள் பட்டாடை அணிந்த இடையும், கையில் ஆச்சரியமான வேலும் கொண்டவனே, த்ரிபுரம் எரித்த புராரியின் மகனே! இங்ஙனம் என் முன்னே தோன்றுவாயாக”
“இங்கே வா குழந்தாய் என சங்கரனார் (பரமசிவனார்) கை நீட்டி அழைக்க, அம்மாவின் மடிவிட்டு சட்டென தாவியெழுந்து தந்தையிடம் சென்ற, அப்படி ஹரனால் தாங்கித் தழுவப்பட்டவனே! குமரனே! இந்தக் குழந்தை உருவத்தானைப் போற்றிப் பாடுகிறேன்”
“குமாரனே , சிவகுமாரனே, குஹனே, கந்தனே, சேனாபதியே,வேலாயுதனே, மயில்வாகனனே,வள்ளி மணாளனே, பக்தர்களின் மனக்லேசங்களை போக்குபவனே, தலைவா,தாரகாசுரனை வென்றவனே, நீ எப்பொழுதும் என்னைக் காப்பாய்” (தொடரும்..)