தச வீரட்டானம்

அட்ட வீராட்டான தலங்கள் போலவே தச வீராட்டான தலங்கள் உண்டு, இந்த பத்து ஆலயங்களும் மேற்கு நோக்கி அமைந்த சிவாலயங்கள்

மேற்கு நோக்கி அமைந்த சிவாலயங்கள் வெகு அபூர்வம், அதன் தாத்பரியம் ஆழமானது

சனியின் திசை மேற்கு திசை, ஒருவரின் கர்மவினைக்கு கர்ம வினைபடியான வாழ்வுக்கும் சனிபகவானே அதிபதி, சனி ஒருவரின் ஜாதகத்தில் அவரவர் கர்மவினைக்கு தக்கவாறே பலனை வழங்கும்

மேற்கு நோக்கி அமைந்திருக்கும் ஆலயங்கள் அந்த கர்மத்தை ஒருவன் சுமக்க வலுசேர்க்கும், அந்த கர்மத்தை சரியாக நிறைவேற்ற் தைரியமும் வலுவும் தரும்

அவ்வகையில் 40க்கும் மேற்பட்ட சிவாலயங்கள் தமிழகத்தில் உண்டு, அவற்றில் முக்கியமானவை தச வீராட்டாணம்

அட்டவீராட்டாண தலங்களில் அகங்காரிகளை வீரமாக அழித்த சிவன், இந்த தலங்களில் கர்மத்தை ஒருவன் வைராக்கியமாக செய்யவும், அதன் வழி இறைவனை அடையவும் அருள் பாலிக்கின்றார், தீயகர்மா ஒருவனை பாதிக்காத வகையிலும் கர்ம பிறப்பை சரியாக செய்து முடிக்கவும் இந்த தலங்கள் அருள் பாலிக்கின்றன‌

தெய்வீக நதியான தாமிரபரணிகரையில் நவகைலாயம் மட்டுமல்ல இந்த தச வீராட்ட தலங்களும் உண்டு இவை பிரசித்தியானவை

=தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன. அங்கே சில ஆலயங்கள்தான் இப்போது எஞ்சியிருக்கின்றன‌

அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம், சிவசைல மகாத்மியம், திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம், திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (😎, நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து ரிஷிகள் அடையாளம் காட்டினார்கள்

அவ்வகையில் தசவீராட்டானமாக அமைந்தவை இந்த ஆலயங்கள்

அது சிவசைலம் சிவசைலப்பர் திருக்கோயில் எனும் பக்த தலம் (சுயம்பு தலம்), வழுதூர் அக்னீஸ்வரர் திருக்கோயில் எனும் மகேச தலம் , கோடகநல்லூர் அவிமுக்தீஸ்வரர் திருக்கோயில் எனும் பிராண லிங்கத் தலம்

சிங்கிகுளம் கைலாசநாதர் திருக்கோயில் எனும் ஞானலிங்கத் தலம், மேலநத்தம் அக்னீஸ்வரர் திருக்கோயில் எனும் சரண தலம் , ராஜவல்லிபுரம் அக்னீஸ்வரர் திருக்கோயில் எனும் சகாய தலம்

தென்மலை திருப்பாத்தீஸ்வரமுடையார் எனும் பிரசாதி தலம் , அங்கமங்கலம் நரசிங்கஈஸ்வரமுடையார் எனும் கிரியாலிங்க தலம் , காயல்பட்டினம் மெய்கண்டேஸ்வரர் எனும் சம்பத் தலம் , திற்பரப்பு =மகாதேவர் திருக்கோயில் பஞ்சாக்ர தலம் எனும் பத்து தலங்கள்

இந்த பத்து லிங்கங்களும் 1008 சிவலிங்க வடிவங்களின் முக்கியமான பத்து வடிவங்கள்

இவை தச நாடிகளோடு தொடர்புடையவை , தச வாயுக்களோடும் தொடர்புடையவை

சூரியகலை, சந்திரகலை , சுழிமுனை ,சிங்குவை புருடன், காந்தாரி , அத்தி, அலம்புடை, சங்கினி , குரு என தசநாடிகள் பத்துடனும்

பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் எனும் முக்கியமான பத்துவகை காற்றுடனும் தொடர்புபட்ட ஆலயங்கள்

ஏன் இவை இந்த உடலின் நாடிகளுடனும் வாயுக்களுடனும் தொடர்பு பட்டிருக்கின்றன என்றால் ஒருவன் கர்மத்தை செய்யவைக்கும் உறுப்புக்கள் கர்மேந்திரியங்கள் என ஐந்தும், அந்த கர்மத்தை செய்யும் சிந்தனையினை தரும் ஞானேந்திரியங்கள் என ஐந்துமாக பத்து முக்கிய உறுப்புக்கள்

ஐம்புலன்கள் எனப்படும் ஞானேந்திரியங்களே உலகோடு ஒருவனை தொடர்புபடுத்துகின்றன, அவற்றின் மூலமே கர்ம வினை அவனுக்குள் பாய்கின்றது

கர்மேந்திரியங்கள் அதை செய்யவைக்கின்றன‌

கண் , காது, மூக்கு, நாக்கு, தோல் எனும் ஞானேந்திரியங்களும், கை, கால், வாய், கருவாய், எருவாய் எனும் ஐந்து கர்மத்தை செய்யும் கர்மேந்திரங்களுமே ஒருவனை இயக்குகின்றன‌

இந்த பத்து வகை இந்திரியங்களும் அதாவது உறுப்புக்களும் மிக சரியாக இயங்கும்படி, கர்மத்தை செய்யும்படி அருளும் ஆலயங்களே தச வீராட்டான ஆலயங்கள்

கர்மா என்பது உருவாவது இந்த பத்து இந்திரியங்கள் வழியாகதான். அதை உருவாகாமல் பார்த்துக்கொள்ளுவது மிக முக்கியம்

அதை பெற்று தருவதும் இதுவரை செய்த பாவ கர்மாக்களை அழித்து தருவதும் இந்த பத்து தலங்களே

இதற்கு தசநாடிகள் இயக்கமும் , தசவாயு இயக்கமும் இன்னும் 1008 லிங்கத்தில் சிறந்த லிங்கங்களின் தாத்பரிய சூட்சும வடிவமும் மகா அவசியம்

இந்த 10 உறுப்புக்களாலே கர்மம் சேர்கின்றது, கர்மம் கழியவும் செய்கின்றது, கர்மத்துக்கு அதிபதி சனிபகவான் என்பதால் மேற்கு நோக்கி சனி திசை நோக்கி அமர்ந்திருக்கும் சிவன் அந்த கர்மங்களை முழுக்க கழித்து அதை கடக்கவைத்து பிறவா நிலை எனும் பெரும் வரும் ஆலயங்கள் இவைகள்

அவற்றை ஒவ்வொன்றாக வரும் காலங்களில் பார்க்கலாம், அப்படியே இந்த சிவாலய தரிசனத்துடன் மஹா சிவராத்திரிக்கும் தயாராகலாம்

தச வீரட்டானம் 01 : சிவசைலம்.

தச வீரட்டானக் கோவில்களில் முதன்மையானது சிவசைலம் ஆலயம். இது இப்போதைய தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே மலையினை ஒட்டி அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தின் வரலாறு மிகத் தொன்மையானது. அகத்தியர் காலத்தினை ஒட்டியது. சிவபெருமானின் திருமணத்தை ஒட்டி தேவர்கள் எல்லாம் வடக்கே சென்று, வடக்கு நிலம் உயர்ந்து தென் நிலம் தாழ்ந்ததும் அகத்தியரை தெற்கே அனுப்பி அதைச் சரி செய்த சிவபெருமான் அவருக்கு கைலாயத்தில் இருந்தபடியே திருமணக் கோலம் காட்டினார்.

இந்தப் பாக்கியம் நமக்கு இல்லையே என வருந்தினார் அத்ரி முனிவர். அதிரி முனிவருக்கு அகத்தியர் கண்ட கல்யாணத் திருகோலத்தை தானும் காணும் பெரும் ஆவலோடு அகத்தியரின் அறிவுறுத்தலில் இந்த மலைக்கு தன் மனைவி அருந்ததி, தன் சீடர்கள் கோரக்கர், தாந்ரீகரோடு வந்தார்.

அங்கே அத்ரி முனிவர் பெரும் தவம் மேற்கொண்டார், அவரின் தவத்தை மெச்சிய சிவன் அவருக்கு தன் திருக்கல்யாண கோலத்தைக் காட்டினார். அதைக் கண்டு பெரும் உவகை அடைந்தார் அத்ரி முனிவர்.

அப்போது அவரின் தவத்தின் பயனாக என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார் சிவன். அத்ரி என்பவர் லோக மக்களின் நலனையே சிந்திப்பவர் அல்லவா? அதனால் ஒரு வரம் மக்களுக்காகக் கேட்டார்.

“ஐயனே, எமக்கு காட்சித் தந்த இந்த இடத்திலே நீர் குடிகொண்டு இங்குவரும் எல்லா மக்களுக்கும் அருள் பாலிக்க வேண்டும்” என வரம் கோரினார்.

சிவனும் அதைக் கொடுத்து மறைந்தார்.

சில நாட்களில் அங்கு ஒரு பசு பால் சொரிவதையும், அங்கே ஒரு சுயம்பு லிங்கம் இருப்பதையும் அத்ரி மகரிஷியின் சீடர்கள் கண்டனர், அத்ரி மஹரிஷி சிவனே அங்கு எழுந்தருளியிருப்பதை அறிந்தார்.

அது உளிபடாத லிங்கம் என்பதால் சிவனின் நேரடி வடிவம் என்பதையும் அவர் உணர்ந்தார். பூமிக்கு மேல் பாதியும், பூமிக்கு கீழே பாதியுமாக அமைந்திருக்கும் அந்த லிங்கமே ஆதி சுயம்புலிங்கம் எனச் சொல்லி அதனைப் பூஜித்தார் அத்ரி முனிவர்.

அத்ரி முனிவரின் சீடர் கோரக்கரே இங்கு மூல ஆலயத்தை ஸ்தாபித்து வணங்கினார்.

இது யுகங்களை தாண்டிய காலம். அத்ரி முனிவரை காணவந்த பிருங்கி முனிவருக்கும் இங்கு சிவனைக் காணும் ஆவல் ஏற்பட்டது. அப்படியே அவரும் கடும் தவத்தில் இறங்கினார், அவருக்கும் தன் மணக்கோலத்தை காட்டினார் சிவன்.

ஆனால், பிருங்கி முனிவர் சிவன் மட்டும் போதும் எனக் கருதுபவர். அதனால், ஒரு வண்டாக மாறி சிவனை மட்டும்சுற்றி வந்தார். அம்பிகையினை வழிபட அவருக்கு விருப்பமில்லை.

இதனால் பார்வதி கோபமாகத் தள்ளி நின்றார். அவரின் கோபத்தை தணிக்கும் வகையில் சிவனின் தலையில் இருந்த கங்கை கருணை நதியாக பாய்ந்து அவரைச் சூழ்ந்தது.

அந்தக் கருணை நதிதான் கடனா நதியாக இன்று அந்த ஆலயத்தின் புண்ணிய நதியாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

அதிரி முனிவர் வாழ்ந்த அந்த மலை “அத்ரிமலை” என இன்றும் அழைக்கப்படுகின்றது.

இப்படிச் சிறப்பு வாய்ந்த லிங்க வழிபாடுதான் முதலில் இருந்தது. சிறிய ஆலயமாக லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டு அத்ரி முனிவர், கோரக்கர், பிருங்கி முனி எனும் மகா முனிகளால் வழிபடப்பட்டது.

அங்கே நந்தி அமைத்து முதல் ஆலயம் கண்டது தேவலோக அரசன் இந்திரன்.

அவனுக்கு ஏற்பட்ட சாபத்தை தீர்க்க இங்கு வந்து வழிபட்டான் இந்திரன். அவனின் தவத்தால் சாபம் தீர்ந்த போது நான்கு மறைகளையும் ஓதும் ஒரு அற்புத நந்தி ஒன்று அமைக்கவேண்டும் என சிவன் அவனுக்குப் பணித்தார்.

அவன் தன் அவையின் தேவதச்சன் மயனை அழைத்து அற்புதமான நந்தி ஒன்றை செய்யச் சொன்னான்.

அதன்படி மயன் மிக அழகான தெய்வீகமான நந்தியினை செதுக்கினான். அது செதுக்கி முடிந்தபோது சிற்பகலையில் எந்த குறையுமில்லாத பரிபூரணமான ஒன்று என்பதால் லிங்கத்தை பார்க்க அதன் கண் திறந்த போது எழுந்து நிற்க முயன்றது.

மயன் அதன் முதுகில் உளியால் அடித்தான், அந்த நந்தி அங்கே பதிந்து கொண்டது.

இன்றும் அந்த நந்தி மெல்ல எழும்பிய நிலையில் இருப்பதையும், அதன் முதுகில் ஒரு வடு இருப்பதையும் இப்போதும் காணலாம்.

இந்த ஆலயத்தின் மாபெரும் சாட்சி அந்த அம்மையின் வடிவம் குடிபுகுந்த பெரும் ஆச்சரியம்.

அருகிருக்கும் ஆம்பூரில் குழந்தை இல்லாத் தம்பதியர் இருந்தார்கள். அவர்கள் பரமன் கல்யாணக் கோலத்தில் காட்சி கொடுத்த இந்த ஆலயத்தின் பரம கல்யாணியிடம் முறையிட்டு வணங்கினார்கள்.

அவர்களின் வேண்டுதல் ஏற்ற அன்னை அவர்கள் கனவில் தோன்றி அருகிருக்கும் கிணற்றில் தன் விக்ரஹம் இருப்பதாகவும் அதை இந்த ஆலயத்தில் சேர்த்து வழிபட்டால் நல்லது நடக்கும் எனவும் சொல்லி மறைந்தார்.

அப்படியே ஆம்பூரில் அன்னையின் வடிவம் கண்டெடுக்கப்பட்டு, அது விமரிசையாகக் கொண்டு செல்லப்பட்டு அந்த ஆலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.

அந்தத் தம்பதியரும் குழந்தை பாக்கியம் பெற்றார்கள்.

இன்றுவரை அந்தக் கோவிலின் அன்னை தங்கள் வீட்டுப்பெண் எனக் கருதி சித்திரை அல்லது வைகாசி மாதம் அந்த ஆம்பூரில் இருந்து பெரும் சீர்வரிசை கோவிலுக்குச் சென்று சிறப்பிக்கும் சம்பிரதாயம் இன்றும் உண்டு.

இந்தக் கோவில் பாண்டியர்களாலும், சேரர்களாலும் மாறி மாறி கொண்டாடப்பட்டது.

இந்தக் கோவிலின் மகா முக்கிய சாட்சி அல்லது அதிசயம் அந்தச் சிவன் சடைகொண்ட கோலத்தில் சடையப்பராகக் காட்சி தருவது.

அந்த அதிசயம் சுதர்சன பாண்டியன் காலத்தில் நடந்தது. அப்போது இந்த ஆலயத்தில் இருந்த பட்டர் சுவாமிக்கு சூடிய மாலையினை அன்று கோவிலில் நடனமாடும் மாதுவுக்கு வழங்கியிருந்தார்.

தெய்வத்துக்கு சூட்டிய மாலையினை விரும்பி அணிய ஆசைகொண்ட அவளுக்கு அணிவித்திருந்தார்.

ஆனால், மன்னன் திடீரென வந்துவிட்டதால் அவருக்கு வேறு வழி தெரியவில்லை, அவள் கழுத்தில் கிடந்த மாலையினை எடுத்து மன்னருக்கு கொடுக்க விரைந்தார்.

மன்னன் அதை மகிழ்வுடன் பெற்றான் ஆனால், அதில் ஒரு நீண்ட முடி இருந்ததை பட்டர் கவனிக்கவில்லை. மாறாக, மன்னன் கவனித்துவிட்டான்.

அவன் அந்த முடி எங்கிருந்து வந்தது என ஆத்திரமாகக் கேட்டான். பட்டரோ இந்த ஆலயச் சிவனுக்கு முடி உண்டு எனச் சமாளித்தார்.

அப்போது ஆலயம் திரையிடப்பட்டிருந்ததால் மன்னன் உடனே பார்க்கமுடியவில்லை. ஆனால், அவன் சந்தேகம் தீரும் பொருட்டு சோதிக்க விரும்பினான்.

மன்னனே என்றாலும் கர்ப்பகிரகத்தினுள் வரக்கூடாது என்பது நியதி. அதனால், மூன்று சுவரிலும் மூன்று துளைகள் இடப்பட்டன‌.

பின் வழிபாடு நடக்கும் நேரம் தீபாராதனை காட்டும் போது மன்னன் மூன்று பக்கமும் இருந்து அந்தத் துளைவழியே பார்க்க ஏற்பாடாயிற்று.

பட்டர் சிவனிடம் தன்னை காக்க வேண்டினார். மருகினார். சிவனே சரணம் எனச் சொல்லி தீபாராதனைக் காட்டினார்.

அங்கே மூன்று சடையுடன் சிவன் காட்சியளித்தார் மூன்று பக்கமும் இருந்து அதைக் கண்ட மன்னன் மெய்சிலிர்த்துப் போய் மன்னிப்புக் கேட்டு வணங்கினான்.

அவனுக்கு சடைமுடியுடன் காட்சியளித்ததால் அவர் சடையப்பர் என்றானார்.

இப்படி பெரும் சக்தி நிறைந்த ஆலயம் அது. அத்ரி முனிவர் காலம் முதல் இன்றுவரை சிவன் அருளாசி வழங்கும் அற்புதத்தலம் இது.

இந்தத் தலம் தேவார வைப்புத்தலம்.

ஐந்து நிலைகளைக் கொண்ட கோபுரத்துடன் கூடிய இந்தக் கோவிலில் சிவனுக்கும், அம்பாளுக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. ஈசனின் இடப்பக்கம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது.

கோவில் அமைந்துள்ள ஆற்றின் தெற்குக் கரை பகுதி சிவசைலம் என்றும், வடக்குக் கரை பகுதி அம்பாள் பெயரில் கல்யாணிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கல்யாணிபுரம்தான் பிருங்கி முனிவரின் செயலால் ஆத்திரமான அன்னை தள்ளி நின்ற இடம்.

இந்தச் சிவசைல தலத்தின் சுயம்பு லிங்கத்தின் உச்சியில் தலைமுடி இருப்பதைப் பார்க்கலாம். கடனா நதி, இந்தக் கோயில் முன்னால் மேற்கிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. அதன் கரையில், பிரம்மா தவம் இருந்த இடத்தில் மண்டபம் உண்டு.

அங்கொரு நந்தவனமும் உண்டு. இந்த நந்தவனத்தில் 27 நட்சத்திரம் மற்றும் 9 கோள்களுக்கு உரிய மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

கோவிலில் அறுபடை வீடு முருகப் பெருமான், அத்ரி மகரிஷி ஓவியங்கள் காணலாம். வலம் வந்தால், சண்டிகேஸ்வரர், அன்னபூரணி, சனி பகவான், சுரதேவர், விஷ்ணு துர்க்கை, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோருக்கு தனி தனி சன்னதிகள் உண்டு.

சிவபெருமானின் இடது புறம் தட்சிணாமூர்த்தி அருகே பூவேலை கைங்கர்யங்களை மேற்கொள்ளும் மிகப் புராதனமான கல் மேடை காணலாம். அம்பாள் சந்நதியின் வலது புறம் சப்த கன்னியர்கள் உண்டு.

சுற்று பிராகாரத்தில் 63 நாயன்மார்கள் அமர்ந்திருகின்றார்கள், பின் அம்பாள் சந்நதி வரும். அன்னையை தரிசித்துவிட்டு நால்வரையும் வணங்கலாம்.

இந்த ஆலயத்தில் உரலும் உலக்கையும் பக்தர்களுக்காக காத்திருக்கின்றன. திருமணமாகாத பெண்கள் தங்கள் கையால் மஞ்சள் இடித்து அம்மனுக்கு சாற்றினால் அவர்களுக்கு நல்ல வரன் அமையும்.

இந்த ஆலயத்தின் மாபெரும் சிறப்பு பங்குனி தேரோட்டம். அந்த நாள் தேரோட்டம் பெண்களாலே நடத்தப்படும், பெண்களே தேர் இழுக்கும் ஆலயம் இது.

அந்த‌ 11-வது நாள் தேரோட்டம் முடிந்து விடியற்காலையில் சப்தாவர்ணம் என்னும் ஆபூர்வ நிகழ்ச்சி நடக்கும். இவ்வேளையில் சிவபெருமான் மடியில் பரமகல்யாணி தனது வலது கையை மடியில் வைத்து புஷ்ப பல்லக்கில் அமர்ந்து காட்சி தருவார்.

தீர்க்க சுமங்கலிகள் இந்த தெய்வத் தம்பதியை வணங்கினால் மாங்கல்யம் நிலைக்கும் என்பது நிச்சயமான நம்பிக்கை.

பொதுவாக வண்டுகளுக்கு சதை இருக்காது. ஆனால், இங்கு வரும் வண்டுக்கு சதை உண்டு. பிருங்கிமுனிவர் தாக்கம் இன்னும் அந்த வண்டுக்கு உண்டு, அவரே வந்து வழிபடும் அதிசயம் உண்டு.

வாய்ப்பு கிடைக்கும் போது மேற்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்தை காணத் தவறாதீர்கள்.

குற்றாலம் செல்லும் போது இந்தத் தச வீராட்டான ஆலயத்தின் முதல் ஆலயத்தை விடாதீர்கள். மேற்கு நோக்கி இருந்து சிவன் அருளும் ஆலயங்கள் மிக மிக சக்தி வாய்ந்தவை.

கர்மம் தீர்ப்பவை, முழு ஞானம் அருள்பவை, எந்த சாபம் என்றாலும் முழுக்க கரைத்துவிடுபவை.

அத்ரி மகரிஷிக்காக சிவன் எழுந்து தன்னை வெளிப்படுத்தினார் என்பது அவருக்காக மட்டும் அல்ல, இந்த லோகத்தின் எல்லா மக்களுக்குமாக‌.

தன்னை யார் தேடி வந்து அங்கு பணிவார்களோ அவர்களுக்கு கர்மவினை போக்கி சிவன் பெரும் அருள் புரிவார்.

அங்குதான் இந்திரனின் கர்ம வினை தீர்ந்தது, இன்னும் பிருங்கி முனிவர்க்கு ஞானம் கிடைத்தது, இன்னும் எத்தனையோ மகான்கள் ரிஷிகள் முழு ஞானம் அடைந்த இடம் அது.

தன்னை நம்பிய பட்டரை ஜடாமுடியோடு சிவனே காத்த தலம் அது.

அங்கே செல்லுங்கள். கடனா நதியில் நீராடி சிவனையும் அம்பாளையும் வணங்கி நில்லுங்கள். மணமாகாத பெண்கள் என்றால் அந்த உரலில் மஞ்சள் இடித்து அம்மனுக்கு சாற்றுங்கள், எல்லாம் நலமாகும்.

ஆடிமாதம் கடைசி வெள்ளி அன்று அந்த நந்திக்கு சிறப்பான வழிபாடு நடத்தப்படும், “நந்தி கவளம்” எனப் பெயர். மற்ற நாட்களிலும் வழிபாடுகள் உண்டு.

அது மயனால் கொடுக்கப்பட்ட நந்தி. அவ்வளவு பரிபூரண அழகு நிறைந்தது. அதனிடம் உங்கள் குறைகளைச் சொல்லுங்கள், வேதம் ஓத வந்த நந்தி உங்கள் குறைகளையும் பகவானிடம் எடுத்துச் சொல்லும். உங்கள் பிரார்த்தனை நிறைவேறும்.

இது தசவீராட்டானத்தின் முதல் ஆலயம் என்பதால் தசவாயுக்களில் முதன்மையான‌ உயிரின் ஆதாரமான பிராண வாயு சம்பந்தமான சிக்கல்கள் நீங்கும்.

சிவசைலம் அமைந்திருக்கும் அந்த மலை மூலிகைகள் நிறைந்தது. அந்தச் சுத்தமான காற்று மூச்சின் பிராணனை அதிகரிக்கும்.

சீரான மூச்சு நல்ல சிந்தனையினைக் கொடுக்கும். நல்ல ஆரோக்கியமான அந்த பிராணன் சிந்தனையில் தெளிவினைக் கொடுக்கும்.

அப்படியே தசநாடிகளில் முக்கிய நாடியான இடகலை நாடி இங்குத் துலங்கும்.

இடகலை என்பது சந்திர நாடியாகும. இது வலது கால் பெருவிரலில் தொடங்கி இடது பக்க நாசியில் முடியும், இதை சந்திர நாடி என்றும் மாத்ரு நாடி என்றும் அதாவது அம்மா நாடி என்றும் யோக தத்துவத்தில் சொல்வார்கள்.

சிவனை, சக்தி தேடி அடைந்த இடம் என்பது லௌகீகமாக சொல்லும் தத்துவம், அதே நேரம் இடது நாடி எனும் சந்திர நாடி பரிபூரணமாக துலங்கும் இடம் இது.

இந்தத் தலத்தில் இருந்து யோகம் செய்தால், தியானம் செய்தால் இடகலை நாடி பலம் அடையும்.

யோகிகளுக்கு இது முக்கியமானது. அகத்தியரும் அத்ரி முனிவரும் இன்னும் பலரும் பெரும் சித்திகளைப் பெற்றார்கள் என்றால் இப்படி நாடி துலங்கித்தான்.

அந்த இடங்கள் நாடி துலங்குமிடம், பிராண சக்தி அதிகரிக்குமிடம், மகா ஞானிகள் நடமாடிய அந்தத் தலம் பெரும் பெரும் நல்ல அதிர்வுகளைக் கொண்டது.

இந்த ஆலயம் கண்வழி கர்மங்களுக்கு தீர்வினைத் தரும். தன் கண்ணால் சிவன் வேறு, பார்வதி வேறு எனக் குழம்பிய பிருங்கி முனிவர் அப்படித்தான் ஞானம் பெற்றார்.

பாண்டிய மன்னன் தன் கண்ணாலே சடையப்பரை கண்டு தெளிந்தான், இன்னும் அத்ரிமுனிவர் சிவனைக் கண்டதும் அங்கேதான்.

ஆக, கண்வழியாக வரும் கர்மங்கள, மாயைகள் என எல்லாமும் காத்துத்தரும் ஆலயம் இது. அங்கு வணங்கினால் கண்களால் வரும் மாயைகள் விலகும். கர்ம வினைகள் ஒருவனை பாதிக்காது.

அங்குச் சென்று வழிபட்டால் வாழ்வின் எல்லாச் சிரமமும் நீங்குவதை நீங்களே உணர்வீர்கள். ஆந்திர மாகாணம் ஸ்ரீசைலம் தலத்துக்கு ஈடானதும், எல்லாச் சக்திகளும் கொண்ட அபூர்வ ஆலயம் இது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறி அனுதினமும் நன்றிக்கடன் செலுத்தும் காட்சியே அங்கு சிவன் எக்காலமும் உண்டு என்பதை சொல்லும் சத்திய சாட்சி.

மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் சிவன் உங்களுக்கு எல்லா நலமும் பலமும் அருள்வார். கர்ம வினைகள் தீர்ப்பார். அந்த பரமனும், பரமகல்யாணியும் சேர்ந்து எல்லா வரமும் உங்களுக்கு அருள்வார்கள். எல்லாமும் யோகமாக கூடிவரும். இது சத்தியம்.

தச வீரட்டானம் 02 : வழுதூர் அக்னீஸ்வரர்

தச வீரட்டான ஆலயங்கள் வரிசையில் இரண்டவாதாக வரும் ஆலயம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் இருக்கும் வழுதூர் அக்னீஸ்வரர் ஆலயம்.

இது மகா பழமையான ஆலயம். அக்னிபகவனால் ஸ்தாபிக்கப்பட்டு சித்தர்களால் உருவான ஆலயம் இது.

இந்த ஆலயத்தின் வரலாறு முருகப்பெருமான் காலத்துக்கும் முந்தையது, அவ்வளவு பழமையானது. அதாவது தட்சன் செய்த யாகத்தின் காட்சியில் இருந்து இது தொடங்குகின்றது.

தட்சன் அந்த யாகத்தில் சிவனை அழைக்காமல் அவமானப்படுத்தினான், சிவபெருமான் செல்லாத யாகத்துக்கு அவரை மீறி தேவர்களெல்லாம் சென்றார்கள். பின் தட்சன் அந்த யாகத்தால் அழிக்கப்பட்ட போது சிவனின் சக்தி அறிந்து தங்கள் தவறுக்கு மன்னிப்புக் கோரி சிவனை நோக்கி தவமிருந்தார்கள்.

அப்படி ஒவ்வொரு தேவரும் தவமிருந்து சிவனிடம் மன்னிப்புக் கேட்டு சாபம் போக்கிய தலங்கள்

அவரவர் பெயரில் அழைக்கப்படுகிறது.

பிரம்மன் தவமிருந்த இடம் பிரம்மபுரீஸ்வர் தலம், சந்திரன் வழிபட்ட இடம் சந்திரசேகர தலம், சூரியன் வழிபட்ட இடம் சூரியஸ்தலம், அக்னி வழிபட்டு அதற்கு சிவன் அருள் செய்த இடம் அக்னீஸ்வரர் தலம்.

ஆம். இது அக்னிபகவான் வழிபட்ட இடம், அவர் சிவனை வழிபட்டு தட்சனின் யாகத்தின் போது செய்த சிவநிந்தனைக்கு மன்னிப்புக் கேட்டு அருள் பெற்ற தலம்.

இது அகத்தியர் முதலான சித்தர்களால் உருவான ஆலயம், அதனால் மருத்துவ அதிசயங்கள் நிறைந்த தலம்.

திருவழுதியூர் அக்னீஸ்வரர் என கொண்டாடப்பட்ட தலம் இது. வழுதி எனும் சொல்லுக்கு ஞானம் அல்லது முழுமை எனப் பொருள். பின்னாளில் வழுதியூர் என மாறி அதன்பின் வழுதூர் என மருவிற்று.

இந்த ஆலயம் பாண்டிய மன்னர்களால் கொண்டாடப்பட்டது. பழைய நெடுஞ்செழியனில் இருந்து ஜடாவர்ம சுந்தரபாண்டியன் காலம் வரை அவனுக்கு பின் தென்காசி பாண்டியர் வரை இதனை கொண்டாடியிருக்கின்றார்கள்.

அதுபற்றிய கல்வெட்டுகள் இன்றும் உண்டு. ஏராளம் உண்டு. அவை இப்போதுதான் ஆய்வு செய்யப்படுகின்றன‌.

இன்று வழுதூர் சிறிய ஊராக சுருங்கிவிட்டதாலும், இந்த ஆலயத்தின் பெருமை வெளியில் தெரியவில்லை என்பதாலும் அதனைப் பற்றி அதிகம் பேருக்கு தெரியாது எனினும் இன்றுவரை சித்த மருத்துவத்தின் அதிசயம் அந்தத் தலமே.

இந்தத் தலம் சித்தர்களின் தனி அருள் கொண்டது, அந்த லிங்கம் அக்னிபகவனால் ஸ்தாபிக்கப்பட்டு சித்தர்களால் சக்தி கொடுக்கப்பட்டது.

இன்றுவரை சித்தர்கள் அங்கு வழிபாடு செய்வது உண்டு. அரூபமாகவோ இல்லை, பறவையாகவோ, சர்ப்பமாகவோ அவர்கள் வந்து செல்வது சாதாரண காட்சி.

அதனால் அந்த ஆலயம் நோய் தீர்க்கும் ஆலயம், எல்லா நோய்களும் அங்கு தீர்கின்றன‌.

மனம் சம்பந்தமான பிரச்சினைகள், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களெல்லாம் அங்கு தீர்கின்றன. 48 நாட்கள் தொடர்ந்து பூஜித்து அந்த ஆலய தீர்த்தம் பருகினால் எல்லா நோயும் தீரும் என்பதற்கு சாட்சிகள் ஏராளம்.

மேற்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயம் மிக மிக சூட்சுமமான முறையில் பல சங்கிலிகளைக் கொண்டது, பெரும் ரகசிய சூட்சுமங்களைக் கொண்டு மகா ஞான சித்தர்களால் அமைக்கப்பட்ட ஆலயம் இது.

இது மேற்கு பார்க்க அமைந்த ஆலயம், கர்மங்களை களையும் ஆலயம்.

இந்த ஆலயம் மகேச தலம் எனக் குறிக்கப்பட்டுள்ளது, 1008 லிங்கங்களில் மகேச லிங்கமும் ஒன்று.

மகேசம் என்பது சிவனின் ஐந்தொழில்களை குறிக்கும் ஒன்று. இது 25 வடிவமாக பிரியும். எல்லா ஆலய கருவறையின் பின்னால் இருக்கும் லிங்கோத்பவர் இந்த வடிவங்களில் ஒன்றே.

அந்த மகேசம் அல்லது மகாசதாசிவம் எனும் பெரும் தத்துவத்தின் ஐந்தொழில்களில் ஒன்று மறைத்தல், சிவனின் ஐந்து முகங்களின் ஒரு முகத்தின் தொழில் இது.

இந்த முகம் மேற்கு நோக்கி அமைந்திருக்கும் என்பது புராணம்.

ஆம். ஒருவன் பெற்றிருக்கும் கர்மாவினை மறைத்தல், அதை இல்லாமல் செய்தல் என்பது இந்த தலத்தின் தாத்பரியம்.

அதாவது, நம் கர்மா என்ன என்பதோ, யாருடன் தொடர்புடையது என்பதோ, அதன் பலன் என்ன என்பதோ, நமக்குத் தெரியாது. முன் ஜென்ம தொடர்ச்சியால் வரும் இந்தப் பிறவியில் ஏற்படும் துன்பம் எதனால் என்பதும் தெரியாது.

அந்தக் கர்மத்தால் வரும் நோய், இதர லௌகீக வடிவத் துன்பங்கள் மனதாலும் உடலாலும் வரும் துன்பங்களின் வலி மட்டுமே நமக்குத் தெரியும், அதாவது கர்மத்தின் பலன் தெரியும்.

இந்த ஆலயத்து சிவன் அந்த கர்மத்தின் கொடிய பலனை மறைத்து அருள் தருகின்றார். எல்லாக் கொடிய வினைகளும் மறைய வைக்கின்றார்.

முன் ஜென்மத்தில் செய்த எல்லாக் கர்ம வினைகளும் மேற்கு நோக்கிய இந்தத் தலத்தில் சிவனின் மறைத்தல் தொழிலில் மறைந்தே போகின்றன‌.

இதனாலே இந்த ஆலயம் நோய்களை குணமாக்கும் அற்புத ஆலயமாக, மனநோய் உடல் நோய் பெரும் பிணி நோய் என எல்லாம் களையும் ஆலயமாக அருள்வீசிக் கொண்டிருக்கின்றது.

தசவாயுவில் இந்த ஆலயம் அபானன் வாயுவினை குறிப்பது. அபானன் எனும் வாய்வுதான் உடலின் கழிவுகளை வெளியேற்றும் முக்கிய வேலையினைச் செய்கின்றது, வேண்டாதன எல்லாம் கழியப்பெற்றால் ஒரு உடலில் நோய் இராது.

இந்த ஆலயம் அந்த வகையில் உடலின் கழிவுகளை, நச்சுக்களை எல்லாம் வெளியேற்றும் அருளை வழங்கும். ஒரு உடலுக்கும் மனதுக்கும் நோய் வரக் காரணமே வேண்டாதவற்றை வெளியேற்றாமல் உள்ளே வைத்திருப்பது.

இந்த ஆலயம் அதை மாற்றும். உடல் ரீதியாக அபானன் வாயு நல்லபடியாக செயலாற்றும், அது பலமாகும், சக்தி மிக்கதாகும், அதனால் உடல் நலமடையும்.

சிவனின் அருளில், சித்தர்களின் அருளில் இந்த ஆலயம் கர்மப் பலனை மறைப்பதால் மனோபலம் அதிகரிக்கும்.

தசநாடியில் இந்த ஆலயம் பிங்கலை எனும் சூரிய கலைக்கு அதாவது வடபக்க நாசிக்கும் நாடிக்கும் வலுசேர்க்க கூடியது.

அக்னி என்றால் வெப்பம், வலதுபக்க மூச்சு வெப்பமிக்கது. இந்த ஆலயத்தில் வழிபட்டால் வலபக்க மூச்சு சீராகும். அந்த நாடி துலங்கும்.

கர்மேந்திரியங்களில் இந்த ஆலயம் வாய். அதாவது, நாக்கு சம்பந்தப்பட்டது.

நாக்குதான் கர்மாவினை சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது. வாயால் சொல்லப்படும் வார்த்தைகள்தான் கர்மாவின் பலனைச் சேர்க்கின்றன. இது வழமையான ஒன்று.

தட்சனின் யாகத்தில் நாவின் மந்திரங்களாலே யாகம் நடந்தது. அக்னி பகவானின் நாக்கு அதை வாங்கிக் கொண்டது.

அக்னியும் நாவின் தத்துவம் கொண்டது. அது ஏற்பதும் கொடுப்பதும் அதன் அக்னி நாவுகளாலே.

அந்த அக்னிக்கு கர்மம் தீர்த்த ஆலயம் எனும் வகையில் நாவினால் வந்த கர்மா, வார்த்தை பிரயோகங்களினாலும், இதர நாவின் சுவைகளாலும், இன்ப மயக்கங்களாலும் வந்த எல்லாக் கர்மமும் தீரும்.

இந்தத் தலம் வாயின் வார்த்தைகளுக்கான தலம். இங்கு வழிபட்டால் வார்த்தையின் பலம் அதிகரிக்கும். நல்ல செல்வாக்கான வார்த்தைகள் வரம்போல் கொட்டும்.

இது தசவீரட்டான ஆலயங்களில் அக்னி பகவானின் அருள் அனைத்தும் தரும்.

அக்னி பரிசுத்தமானது. தீமைகளை எரித்துவிடும் சக்தி படைத்தது. இந்த பிரபஞ்சத்தின் சக்தி மூலம் அதுதான். அக்னிதான் ஒரு உடலை இயங்க வைப்பது, ஆரோக்கியமான உடலை இயக்குவதும் அதன் ஆரோக்கியத்தை அளவிடுவதும் வெப்ப சக்தியே.

அவ்வகையில் அக்னி இன்றி மானுட உடல் இயக்கமில்லை. அதுவன்றி கர்மம் தீர்வதில்லை.

யோகத்திலும் மூல அக்னி மூலாதாரத்தில் இருந்து எழுந்து வராமல் குண்டலினி சக்தி இல்லை.

எல்லா வகையிலும் பெரும் ஆதாரம் அக்னி, அந்த அக்னியின் அருளை சிவனருளோடு சேர்த்துத் தரும் ஆலயம் இது.

குற்றாலம் தென்காசி செல்லும் போது மேற்குத் தொடர்ச்சி மலையின் பிரதான இடங்களுக்கு செல்லும் போது, அவ்வழியில் செல்லும் போது இந்த ஆலயத்தை காணத் தவறாதீர்கள்.

அக்னி பகவானே வந்து வணங்கி நலம்பெற்ற தலத்தில் வணங்கினால் உங்களுக்கு அக்னி சம்பந்தமான எல்லாப் பிரச்சினையும் தீரும்.

ஒரு உடலில் நோய் தோன்ற முதல் காரணம் வெப்பநிலை மாறுபாடு. அந்த உஷ்ண கோளாறுதான் எல்லா நோய்க்கும் அடிப்படை. நோய் உருவாகும் மூலமே இங்கு களையப்படுகின்றது.

அபானன் வாயு இங்கு சீராகும். சூரியகலை எனும் பிங்கலை வெப்பநாடி சீராகும்.

முக்கியமாக கர்மப்படி சுமக்கும் பாரங்களை அந்த வலிகளை எல்லாம் மேற்கு நோக்கிய மகேச மூர்த்தி மறைத்துவிடுகின்றார். கர்மம் மறையுமிடம், வாழ்வு சிறக்குமிடம், எல்லா இன்னலும் பறந்தோடும்.

அக்னிபகவான் சரியான இடத்தில் பிரபஞ்சம் தன் சக்தியினைக் கொட்டும் இடத்தினை தேர்வு செய்து கொடுத்த இடம் இது. அந்த மகேச லிங்கமும் அற்புதமான சக்திகளை ஈர்த்துத் தரும் தலம் இது.

நம்பிக்கையுடன் வணங்கினால் அந்த ஆலய தீர்த்தமே 48 நாள் விரத வழிபாட்டில் மனநோய் முதல் புற்றுநோய்வரை தீர்க்கும் சக்தி கொண்டது.

வார்த்தைகளால் வந்த வினை காத்து இனி வராத அளவு நல்ல காவலை அந்தத் தலம் தரும்.

இப்படியான ஆலயத்திற்குச் சென்று நலன் பெற்று வரவேண்டியது ஒவ்வொருவரின் புண்ணிய பலன்.

ஏகப்பட்ட கல்வெட்டுக்களைக் கொண்ட இந்த ஆலயம், பாண்டியர் காலத்தில் கொண்டாடப்பட்டு பின் காலத்தால் பின்னடைந்தது. அந்த கல்வெட்டுக்களை படிக்கும் பணி இப்போது நடக்கின்றது. விரைவில் பெரும் அதிசய செய்திகள் வரலாம்.

தசவீரட்டான தலமான இந்தத் தலத்தின் கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 10, 2025 அன்று அதாவது தை மாதம் 28ம் தேதி நடக்க இருக்கின்றது.

அந்த ஆலயத்தின் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் மிக மகிழ்வோடு கலந்து கொள்ளலாம். உங்கள் கர்ம வினை எல்லாம் கரைந்து உங்கள் உடலும் புதிதாகி, உங்கள் வார்த்தைக்கு தனி செல்வாக்கும் ஏற்பட்டு பெருவாழ்வு வாழ்வீர்கள், அந்தத் தலம் அதைச் செய்யும். இது சத்தியம்.

தச வீராட்டாண தலங்க்ள் 03 : அபிமுக்தீஸ்வர ஆலயம் கோடகநல்லூர்

தசவீராட்டாண ஆலயங்களில் மூன்றாம் ஆலயம் நெல்லை மாவட்டம் கோடக நல்லூரில் அமைந்திருக்கும் அபிமுக்தீஸ்வரர் ஆலயம்

இந்த கோடக நல்லூர் கார்கோடகன் எனும் நாகம் வழிபட்ட அற்புதமான ஊர், நவகைலாயங்களில் ஒன்றான கைலாசநாதர் ஆலயம் அமைந்துள்ளது அதன் அருகில்தான் இந்த அபிமுக்தீஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளது

அபி என்றால் அன்னை சக்தி தேவி என பொருள்படும், முக்தீஸ்வரர் என்றால் முக்தி கொடுக்கும் சிவன்

அன்னையோடு சேர்ந்து சிவன் முக்தி அருளும் தலம் இது, இது பிருங்கி முனிவர்க்கு சிவன் பாடம் சொன்ன தத்துவத்தை கொண்டு மேற்கு நோக்கி அமர்ந்து கர்மம் தீர்த்து முக்தி அளிக்கும் ஆலயம்

பிருங்கி முனிவர் சிவன் மட்டும் போதும், சக்தி வழிபாடு அவசியமில்லை என சிவனை மட்டும் வழிபட்டதையும் பின் சிவனால் உண்மை உணர்ந்து சக்தியின்றி சிவமில்லை சிவசக்தி எனும் இருவரும் இணைந்த நிலையே முக்தி தரும் என்பதை உணர்ந்து ஞானம் அடைந்ததை சொல்லும் தலம்

பிருங்கி முனிவர் என்றல்ல , பல முனிவர்கள் மகான்கள் இப்படி மாயையில் இருந்தார்கள், சிவன் இல்லையேல் சக்தியில்லை என்பதைத்தான் தில்லை காளி சொன்னாள், அவளால் ஞானம் பெற்றோர் பலர் உண்டு

திருவாலங்காட்டில் காரைக்கால் அம்மையார் சிவனை மட்டும் வணங்குவேன் என தேடியபோது சக்தி இல்லாமல் சிவம் இல்லை என சொல்லி தன் உருகாட்டி அன்னை நின்றதையும், அவளை வணங்கியே நாதனை அம்மையார் வழிபட்ட காட்சியும் உண்டு

இன்றும் அவள் “வழிகாட்டும் காளி” என அறியபடுகின்றாள்

திருமூலர் இந்த சிவசக்தி தத்துவத்தை பாடினார், அவரின் திருமந்திரத்தின் நான்காம் தந்திரம் மற்றும் ஏழாம் தந்திரம் முழுக்க அன்னை இன்றி முக்தி இல்லை, சிவசக்தி இணைந்து அருளின்றி முக்தி இல்லை என்பது திரும்ப திரும்ப சொல்லபடுகின்றது

“ஓங்காரி யென்பா ளவளொரு பெண்பிள்ளை

நீங்காத பச்சை நிறத்தை யுடையவள்

ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு

ரீங்காரத் துள்ளே யினித்தி ருந்தாளே”

“காணும் பொருளும் கருதிய தெய்வமும்

பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்

ஊணும் உணர்வும் உறக்கமும் தானாகக்

காணுங் கனகமும் காரிகை யாமே”

என பல பாடல்களை பாடுகின்றார் திருமூலர்

இந்த சிவசக்தி தத்துவத்தைத்தான் இங்கே அர்த்த நாரீஸ்வரராக அமர்ந்து போதித்து முக்தி வழங்கி கொண்டிருக்கின்றார் சிவன்

மேற்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயம் கர்மம் தீர்க்கும் தலம், இந்த ஆலயத்தில் ஒருவனின் கர்ம வினை எல்லாம் தீர்த்து சிவன் அன்னையோடு சேர்த்து பெரும் அருள் தரும் சக்திமிக்க தலம்

பிருங்கி முனிவர் வழிபட்ட தலம் இன்னும் பலர் வழிபட்டு முக்தி அடைந்த தலம் இது என அதன் தலபுராணம் சொல்கின்றது

கார்கோடகன் வழிபட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று

யுகங்களை கடந்த இந்த ஆலயம் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கொண்டாடபட்டது, இப்போது இருக்கும் ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முன்பாக கட்டபட்டது

இந்த ஆலயம் அழகான தத்துவத்தை சொல்வது, எந்த கோவிலிலும் காண முடியாதபடி சிவன் அமர்ந்திருக்கும் அர்த்த நாரீஸ்வரராக அருள் பாலிக்கின்றார்

எல்லா இடங்களிலும் நின்று அருள்பாலிக்கும் அவர் இங்கு அமர்ந்திருப்பதன் சூட்சுமம் சாதாரணமல்ல அது கயிலாய தத்துவம்,

கயிலாயத்தில் சிவன் அமர்ந்திருப்பார், கயிலாய பாக்கியம் அடைபவர்கள் அவரை மனமார தரித்து அவர் பெரும் அருளில் கலந்திருப்பார், அங்கு சிவசக்தி வடிவமாய் பரம்பொருள் எப்படி அமர்ந்திருப்பாரோ அப்படி அமர்ந்திருக்கும் ஆலயம் இது

இந்த ஆலயத்தின் பெருமை மகா பெரியது, 1900ம் ஆண்டு இங்கு விஜயம் செய்த‌ ஸ்ரீ நரஸிம்ஹ பாரதி எனும் சிருங்கேரி மடாதிபதி இந்த ஆலயம் “தட்ஷண சிருங்கோ” என சொல்லி அந்த சிருங்கேரி சங்கரமடத்தின் கிளை ஒன்று அமைய செய்தார்

(இப்போது அந்த கிளை உண்டா என்பது தெரியவில்லை)

அந்த அளவு இது முக்கியமானது, பெரும் மடாதிபதிகள் இந்த ஆலய பெருமை பற்றி அறிந்துவந்து பணிந்து வழிபட்டிருக்கின்றார்கள்

ஸ்ரீ சுந்தரசுவாமிகள் எனும் ஞானி இந்த ஆலயத்தில் வாழ்ந்தார், அவர் சூத முனிவர் அருளிய “சூத சம்ஹிதை” எனும் சிவசரித்திரத்தினை ஏழு நாட்கள் தொடர்ந்து பஜனையாக உபன்யாசமாக வழங்கி கொண்டிருந்தார், அடிக்கடி இது அவரால் மொழியபட்டது

சூத முனிவர் பழம்பெரும் முனிவர்களில் ஒருவர் அகத்தியர் காலத்த்வர், அவரின் தனி அருள் பெற்ற ஆலயமாக இது விளங்கிற்று

சிறிய ஆலயமான இங்கு இடதுபுறத்தில் சிவனும் சக்தியும் கலந்த அர்த்தநாரீஸ்வரர் கோலத்துடன் சிவன் மேற்குகு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கின்றார்

இன்னும் வள்ளிதெய்வானையுடன் முருகபெருமான், கால பைரவ சன்னதிகளும் உண்டு

கோவில் வெளிச்சுற்று ப்ரகாரத்தில் ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர் மூலஸ்தானத்தின் வெளிப்புற சுவரில், வடக்குப் பாகத்தில், இரண்டு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று வாலி சிவனுக்கு பூஜை செய்கின்றான் மற்றொன்று இரண்டாவது கண்ணை அம்பினால் எடுக்கும் கோலத்திலும் உண்டு

இந்த இரு சிற்பங்களும் ஆழ்ந்த தத்துவத்தை சொல்கின்றன‌

குரங்காக இருந்து தன் பராக்கிரமத்தால் பலத்தால் பெரும் அட்டகாசம் செய்தவன் வாலி, ஆனால் அவன் சிவபக்தன் சிவனாலே பெரும் வரம் பெற்றிருந்தான்

அந்த பலத்தால் அவன் பெரிய அட்டகாசத்தை செய்யும் நிலையில் பகவானே அவன் பிறவியினை ராமபிரான் மூலம் முடித்துவைத்தார்

ராமன் கையால் உயிர்நீத்த அவன் சாபம் தீர்ந்தான்

மகாபாரத வாலி முற்பிறவி பலனாய் பெரும் வரம்பெற்றிருந்தவன் அறம் மறந்து தர்மம் மறந்து அட்டகாசம் செய்தபோது ராமனின் அம்பு அவனை வீழ்த்திற்று, அவன் கடைசி நேரம் புனிதமான ராமன் மொழியால் ஞானம் பெற்று முக்தி அடைந்தான் கர்மம் முடித்தான்

கண்ணப்ப நாயனார் வேடுவனாக வாழ்ந்தவர் அவரின் முற்பிறவியின் தொடர்ச்சி சிவலிங்கம் ஒன்றை கண்டதும் அதனால் ஈர்க்கபட்டு தன் அம்பினால் தன்னை வதைத்து பகவான் அருள் பெற்று முக்தி அடைந்தார்

அம்பினால் முக்தி அடைந்தவர்கள் இருவரும், வாலி மேல் அம்பு பாய்ச்சபட்டது, இங்கு அம்பு கண்ணப்ப நாயனாரை வதைத்து முக்தி அடைய வைத்தது

இந்த இருவரும் சிவனை வணங்கி கர்மம் கழித்தவர்கள் என்பதை குறிப்பால் உணர்த்தும் காட்சிகள் சொல்வது இதுதான்

ஒருவன் குரங்காய் இருந்து தெய்வத்தை உணர்ந்து முக்தி அடைந்தான், இன்னொருவர் கொடிய வேடனாய் இருந்து சிவனை பணிந்து முக்தி அடைந்தார்

ஆக சிவனை வணங்கி சரணடைந்தால் குரங்கில் இருந்து மேலான நிலைக்கு செல்லவும் முடியும், கொடிய வேட்டுவ நிலையில் இருந்து நாயன்மார் எனும் பெரும் இடத்தை அடையவும் முடியும் என்பதை இந்த சிற்பங்கள் போதிக்கின்றன‌

சிவனை வணங்கினால் முக்தி, அர்த்த நாரீஸ்வரர் கோலம் கொண்ட அவரை வணங்கினால் முழுக்க பணிந்தால் முக்தி என்பதை போதிக்கும் ஆலயம் இது

இது 1008 லிங்கங்களில் பிராண லிங்க தலம், அதாவது முக்தி அளிக்கும் தலம்

இதுதான் ஆத்மலிங்கம் என்றும் அழைக்கபடும், ரகுவம்ச மன்னர்கள் வழிபட்ட லிங்கம் இந்த வகைதான் ராவணன் வழிபட்ட லிங்கம் இதுவே அதுதான் ஆத்மலிங்கம் என்றுமாயிற்று

இந்த வகை லிங்கம் கொண்ட எல்லா தலங்களும் முக்தி அளிக்கும் தலங்களே,கோகர்ண ஸ்தலம் உடுப்பி, கொல்லூர், சுப்ரமண்யா, கும்பஸி, கோடீஸ்வர, சங்கரநாராயண ஆறு முக்திஸ்தலங்கள் கன்னட தேசத்தில் உண்டு

அந்த ஆலய சாயலில் தாமிரபரணி கரையில் அமைந்திருக்கும் ஆலயம் இந்த அபிமுக்தீஸ்வரர் ஆலயம்

சிருங்கேரி மடாதிபதி ஏன் இங்கு ஓடிவந்து வணங்கி சங்கரமட கிளை அமைத்தார் என்றால் இது முக்தி அளிக்கும் தலம் என்பதை அவர் அறிந்திருந்தார், இந்த லிங்கத்தின் பெருமையும் அருமையும் சிறப்பும் அவருக்கு தெரிந்திருந்தது

தசநாடியில் இது சுழிமுனை நாடியினை குறிப்பது, அங்குதான் சிவசக்தி வடிவத்தை யோகத்தில் தரிசிக்க முடியும் என்பது யோக பாடம்

வாயுவில் இது பிராண வாயு, பிராணனே உடலை இயக்கும் பிராணனே இடது பக்கம் வலது பக்கம் மூச்சாக இயக்குகின்றது

இந்த இடகலை நாடி சூரியன் அதாவது சிவ தத்துவம், பிங்கலை நாடி சந்திரன் அதாவது சக்தி தத்துவம்

இந்த இரண்டும் இணைந்து சுழிமுனை நாடியினை தூண்டுகின்றது, அதுதான் சிவசக்தி தத்துவமாக மகா யோகநிலையினை, ஞான நிலையினை கொடுக்கின்றது

சிவசக்தி எனும் அர்த்தநாரீஸ்வரர் கோலமும், அதனால் முக்தி எனும் தாத்பரியமும் இதனாலே

இந்த ஆலயம் தச வீராட்டணங்களில் முக்கியமானது, இங்கு வழிபட்டால் பிராணன் எனும் மூச்சு வலுபடும், கர்மேந்திரியத்தில் நாசி எனும் மூக்கு சம்பந்தமான ஆலயம் இது

இங்கே பிராண சம்பந்தமான எல்லா சிக்கல்களும் தீரும், மூச்சு சுவாச கோளாறுகள் அகலும்

பிராண லிங்க வழிபாடு மூச்சை சீர்படுத்தும் , மூச்சு சீரானால் நாடிகள் சீராகும், நாடிகள் சீரானால், சிந்தைகள் சீராகும், மனம் ஒருமுகபடும், அந்நிலையில் அந்த யோக நிலையில் எல்லா பிரபஞ்ச சக்திகளும் அருள்மழை கொட்டும்

அப்படி பெரும் அருள்வழங்கும் ஆலயம் இது

இந்த ஆலயத்துக்கு கார்கோடகன் முதல், பிருங்கி முனிவர் தொடங்கி சிருங்கேரி மடாதிபதி, சுந்தரமூர்த்தி சுவாமிகள் என சாட்சிகள் ஏராளம் உண்டு

இப்போது இந்த ஆலயத்தை பராமரிக்கும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் என்பவரும் ஏகபட்ட அற்புதங்களை முக்தீஸ்வரரிடம் இருந்து பெற்று வாழும் அடியாராக சாட்சியாக அங்கு திருப்பணி செய்து கொண்டிருக்கின்றார்

வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கோடகநல்லூரில் இருக்கும் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள், உங்கள் பிராணன் சீராகும், யோகம் கைகூடும் அர்த்த நாரீஸ்வரரின் அருளில் எல்லா பாக்கியமும் உங்களுக்கு கிடைக்கும், முக்திக்கும் அதுவே வழிகாட்டும் இது சத்தியம்

தச வீரட்டானம் 04 : சிங்கிகுளம் கைலாசநாதர் ஆலயம்.

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே அமைந்துள்ள்ளது இந்த சிங்கிகுளம் கைலாசநாதர் ஆலயம். பச்சையாற்றின் கரையில் அமைந்துள்ள இந்த ஆலயம் தச வீரட்டன தலங்களில் இது நான்காவது ஆலயம்.

சிங்கிகுளம் என்பது மிக மிக தொன்மையான வரலாற்றை கொண்ட ஊர். மிக மிக பழமையான வரலாறு அதற்கு உண்டு.

எவ்வளவு பழமையானது என்றால் தீராக் குறை இருந்த பெரும் சக்திகளெல்லாம் தவம் இருந்த ஆலயம் இது. மகேந்திரகிரி மலையில் வசித்த இரண்யவான் எனும் முனிவரால் உருவான பஞ்ச லிங்க ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

இரண்யவானின் மகள் ஆருத்ரா என்பவளைச் சிவன் தன்னோடு ஏற்று பச்சையாறாக ஓட வைத்தார். அந்தப் பச்சையாற்றின் கரையில் உருவான பஞ்சலிங்க தலங்களில் இந்த கைலாச நாதர் ஆலயமும் ஒன்று.

மேற்கு நோக்கி அமைந்த இந்த ஆலயத்தில் தசரதன் பிள்ளை வரம் வேண்டி வழிபட்டிருக்கின்றான். தன் கர்மவினையின் கொடுமை முடிந்து நல்ல புத்திர பாக்கியத்துக்காக அவன் வழிபட்டிருக்கின்றான்.

இராமபிரான் இங்கு வழிபட்டிருக்கின்றார், இலங்கைக்கு செல்லுமுன் இங்கு வழிபட்டு தன் கர்மத்தினைச் சுமக்கும் பலத்தினைப் பெற்றிருக்கின்றார்.

அப்படியே காமதேனு இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டு தன் சாபம் தீர்ந்து நற்கதி அடைந்திருக்கின்றது.

இவை எல்லாம் திருக்குற்றால வரலாறு எனும் நூலின் கண்டசேகர சருக்கம் எனும் பிரிவில் சொல்லப்படும் புராணத் தகவல்கள்.

அவ்வளவு சிறப்பானது இந்த ஆலயம். பச்சையாறு வடக்கு நோக்கி ஓடி தாமிரபரணியில் கலப்பதால், அது உத்திர கங்கா என ஓடுவதால் இது மிகச் சிறப்பான இடத்தைக் கொண்டிருக்கின்றது.

இரண்யவான் முனிவரால் எழுப்பப்பட்ட இந்த லிங்கம், 1008 லிங்கத்தில் ஞானலிங்கம் எனும் லிங்கமாக அமைந்துள்ளது, அதன் பொருள் இந்த லிங்கம் முழு ஞானத்தை வழங்கும்.

இந்தத் தலத்தின் அன்னை பெயர் ஆவுடையம்மாள்.

இந்த ஞானலிங்கமே கைலாசநாதர் என்றானது. ஞானமே முக்திக்கு அடிப்படை, கைலாசத்திற்கு அழைத்துச் செல்வதும் அந்த ஞானமே.

அந்த ஞானத்தை முழுக்க முழுக்க வழங்கும் ஆலயம் இது. ஞானம் என்பது கர்மம் முடியுமிடம் கிடைப்பது. மேற்கு நோக்கிய இந்த ஆலயம் கர்மம் தீர்த்து ஞானம் அருளும் ஆலயம்.

பஞ்சலிங்க தலம் என்பது சிவனின் ஐந்தொழில்களைக் குறிப்பது. அப்படியே நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தின் எழுத்துக்களை கொண்டது.

அவ்வகையில் இந்த ஆலயம் படைப்பு தொழிலை கொண்டது.

நாடிகளில் இந்த ஆலயம் சிங்குவை நாடியினைக் கொண்டது

அதாவது இந்த ஆலயம் சுவாதிஸ்டானத்தை வலுப்படுத்தும். “நமசிவாய” எனும் எழுத்தில் இந்த ஆலயம் ‘ம’ எனும் எழுத்துக்கு ஆதாரமானதும், நீர் தத்துவம் கொண்டது.

இந்தச் சுவாதிஷ்டானம் என்பது அடிவயிற்றில் அமைந்துள்ளது. இது நீர் தத்துவம் கொண்ட சக்கரம் அப்படியே உடலின் நீர் சக்திகள் அதாவது சிறுநீரகம், சுக்கிலம் என நீர் சக்திகள் கொண்ட இடத்தில் இது அமைந்து கட்டுப்படுத்துகின்றது.

இந்தச் சக்கரம் சரியாக இருந்தால் நீர் சம்பந்தமான நோய்கள் உடலில் வராது. இந்தச் சக்கரம் சரியாக துலங்கவில்லை என்றால் சிறுநீரக சிக்கல் முதல் எல்லாச் சிக்கலும் உருவாகும்.

குழந்தையின்மை, பெண்களுக்கு மாதாந்திர சிக்கல் எனப் பல விஷயங்களின் காரணம் இந்த சக்கரத்தின் தன்மைதான்.

இரத்த சோகை, மலச்சிக்கல், இடுப்புப் பிரச்சினைகள், மூட்டுப் பிரச்சினைகள், மண்ணீரல் கோளாறுகள்

பித்தப்பை பிரச்சினைகள் எல்லாம் இங்கிருந்தான் உருவாகும்.

இந்தச சக்கரம் சரியாக இருந்தால் உடலின் நீர் சம்பந்தமான இயக்கமெல்லாம் மிகச் சரியாக நடக்கும். அட்ரீனல் சுரப்பி இங்கேதான் உண்டு.

இது சரியில்லை என்றால் மனோரீதியாகவும் சிக்கல் வரும். இந்தச் சக்கரத்தின் வீச்சு அப்படியானது.

இச்சக்கரமே சுயத்தை அறியவைக்கும். இச்சக்கரம் ஆழ்மனதோடு தொடர்பு உடையது. பிறருடன் ஒருவர் வைத்திருக்கும் சமூக உறவு, வாழ்க்கையை அனுபவித்து வாழ்தல், தன் பலம் மற்றும் பலவீனங்களை அறிதல் ஆகிய பண்புகள் சுவாதிஷ்டான சக்கரத்தின் செயல்பாடுகளைச் சார்ந்தே இருக்கின்றன.

எப்படிப்பட்ட எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பது சுவாதிஷ்டானத்தின் கட்டுப்பாட்டில்ததான் இருக்கிறது. உணர்ச்சி, சிற்றின்பம், மகிழ்ச்சி, நெருக்கம், உள்ளுணர்ந்து அறிதல் ஆகியவையெல்லாம் இதனால் வருவதே.

பயம், அச்ச உணர்வு, தன்னபிக்கையின்மை, பொறாமை, மூர்க்கத்தனம், கவனமின்மை, மன அழுத்தம், சமூக உறவின்மை, மிகுந்த உணர்ச்சிவசம் இதெல்லாம் இந்தச் சக்கரத்தின் குறைந்த செயல்பாட்டால் வருபவை.

இங்கேதான் இன்னொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும். உணர்வுகள் என்பது இங்கிருந்துதான் உருவாகின்றது, உணர்வுகளின் மையம் இதுதான்.

காமம் முதல் பல உணர்வுகள் இன்னும் பல்வேறு வகையான சுகங்கள் இங்கிருந்துதான் உருவாகும். அது பசியாக இருக்கலாம், காமமாக இருக்கலாம், இன்னும் பலவான சுகங்களாக இருக்கலாம்.

சுகத்தைத் தேடி செல்லும் வாழ்வு மானுடனுடையது. அதற்கு நிம்மதி, முழுமை எனப் பல பெயர்களைச் சொன்னாலும் அடிப்படையில் அவன் விரும்புவது ஒரு திருப்தி.

இந்தச் சக்கரம் சரியாக இருந்தால் மனதுக்கும் உடலுக்குமான ஒரு முழு திருப்தி கிடைக்கும். நிறைவு கிடைக்கும்.

மானுடரின் குழப்பமான சிந்தனைப்படி சக்தியினை இந்த சக்கரத்தில் இருந்து கீழே இறக்கினால் அது மனித நிலையில் இருந்து மிருக நிலைக்கு அழைத்துச் செல்லும்.

இந்தச் சக்கரத்துக்கு கீழ்தான் சுகங்களுக்கான இந்திரியங்கள் உண்டு. அந்தச் சுகங்களை நோக்கி சக்தியினைக் கீழே இறக்கினால் அவன் போகி.

இதுதான் இன்ப போகம். இந்தச் சக்கரத்தில் இருந்து சுக்கிலம் முதல் எல்லாவற்றையும் கீழே இறக்க இறக்க அவன் போகத்தில் வீழ்ந்து அதற்கு அடிமையாகி விலங்குபோல் வாழ்ந்து மடிவான்.

இந்தச் சக்தியினை அந்த இடத்தில் இருந்து மேலே ஏற்றிச் சென்றால் அவன் யோகி, அவன் ஞானத்தால் இறை நிலை அடைவான்.

ஒருவன் போகி என உணர்ச்சிக்கு அடிமையாகி அங்கே வீழ்ந்து கிடப்பதும், அவன் யோகியாகி ஞானம் அடைவதும் தெளிவு அடைவதும் இந்தச் சக்கர சக்தியினைப் பொறுத்தே.

ஆம். இந்தச் சக்கரத்தின் உணர்ச்சிதான் ஒருவனை நடத்தும், அந்த உணர்ச்சி கர்ம வினைப்படி வரும்.

இந்த உணர்வுகளை சரியாகக் கையாள்வதே ஞானம். இந்த ஆலயம் அந்த ஞானத்தை வழங்கும்.

தசவாயுக்களில் இந்த ஆலயம் அபானன் வாயுவுக்கானது. அந்த வாயு சுவாதிஷ்டானத்தை இயக்குவது. இந்த அபானன் வாயுவும் சந்ததி பெருக்க துணைபுரியும் தன்மை கொண்டது.

ஆம். இந்த ஆலயம் நல்ல புத்திர பாக்கியத்தை தரும். தசரதனுக்கு அப்படி அது நான்கு மக்களை கொடுத்தது. இராமனுக்கும் இரு மகன்களைக் கொடுத்தது.

காமதேனுவுக்கும் வாரிசு வரத்தை கொடுத்தது.

இந்த ஆலயம் மிக மிக சூட்சுமமான தத்துவங்களையும் கொண்டது. இங்கு மேற்கு நோக்கி ஞானலிங்கமாக கைலாச நாதரும் ஆவுடையநாயகியாக தேவியும் அருள் பாலிக்கும் ஆலயத்தில் நவக்கிரகங்கள் தனி தனி சந்நிதியாக உண்டு

ஒவ்வொரு கிரகமும் தனி தனி சந்நிதியில் அவைகளுக்குரிய திசை நோக்கி நின்று அருள் வழங்குகின்றன‌.

இந்த ஆலயத்தில் பாண்டியர் கால மீன் சின்னம் சிற்பமாகப் பொறிக்கபட்டுள்ளது. அந்த முத்திரையினை கைகளால் தடவிக் கொடுத்தால் நரம்பு சம்பந்தமான எல்லாச் சிக்கலும் தீர்கின்றது.

தினமும் சூரியன் மறையும் போது அதன் கதிர்கள் மாலையில் ஞானலிங்கத்தில் விழுகின்றன, அந்நேரம் செய்யப்படும் பூஜைக்கு சக்தி அதிகம்.

இடையில் காலத்தால் பழுதுபட்ட ஆலயம் இப்போது மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றது. முறையான வழிபாடுகள் தொடங்கப்பட்டபின் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கின்றது.

இந்த ஆலயம் நல்ல ஞானத்தைத் தரும். சந்ததி பாக்கியம் தரும். இன்னும் வயிற்று பகுதியின் எல்லா சிக்கல்களையும் தீர்க்கும். எவ்வித நோய்களாய் இருந்தாலும் சிவனருளில் சரியாகும்.

சிங்கி எனும் சொல்லுக்கு சிவபுண்ணியம் எனும் பொருளும் உண்டு. இந்த ஊரின் பெயரே சிவபுண்ணியத்தில் தொடங்கப்பட்டது.

ஆவுடையம்மாள் என நெல்லை மாவட்டம் பக்கம் வரும் பெயர்களெல்லாம் இந்த ஆவுடை நாயகியின் பெயராகச் சூட்டபட்டதே. அந்தப் பெயர்தான் ஆவுடையக்கா என செங்கோட்டையில் ஒரு பெண்சித்தரை பின்னாளில் கொடுத்தது.

தெற்கே செல்லும் போது இந்த ஆலயத்தை தரிசிக்க மறவாதீர்கள். இதனோடு சேர்ந்த இன்னும் நான்கு பஞ்ச லிங்க‌ தலங்கள் உண்டு.

களக்காடு சத்யவாகீசர் கோவில், பத்தமடை குலசேகரநாதர் ஆலயம், பதுமனேரி நெல்லையப்பர் கோவில், தேவநல்லூர் சோமநாதர் ஆலயம் என்பவை இதர நான்கு.

வாய்ப்பு கிடைத்தால் இந்த நான்கு ஆலயங்களையும் தரிசித்தால் பஞ்சலிங்க தலம் சந்தித்த பாக்கியமும் கிட்டும்.

இந்த ஆலயம் இரண்யவான் எனும் முனியால் அடையாளம் காட்டப்பட்டு சிவனே வந்து குடியேறிய ஆலயம். துர்வாசர் முதல் பலர் வந்து பணிந்த ஆலயம்.

தசரதனும் இராமபிரானும் வழிபட்டு பலனடைந்த ஆலயம். காம்தேனுவின் சாபம் தீர்ந்த ஆலயம்.

இந்த ஆலயம் உங்கள் கர்மம் தீர்த்து வைக்கவும், அதனால் ஞானம் கொடுக்கவும் தயாராக இருக்கின்றது. சுவாஷ்டிதானத்தை சரி செய்து சக்திமிக்கதாக்கும் இந்த ஆலயம் எல்லாக் குறைகளையும் நிவிர்த்தி செய்து வாழ்வை வளமாக்க தயாராக இருக்கின்றது.

அங்குச் சென்று பச்சையாற்றில் நீராடி இந்த கைலாசநாதரையும் ஆவுடைநாயகியினையும் தரிசித்து வணங்கினால் எல்லாப் பலனும் கிட்டும். மாலை வேளையில் சூரியன் சாயும் போது கைலாசநாதரை வணங்கினால் இன்னும் பலன்கள் விசேஷம்.

அதை அனைவரும் பெற்றுக்கொள்ளட்டும். சிவனின் எல்லா நலமும் அருளும் பலமும் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

தச வீரட்டானம் 05 : மேலநத்தம் அக்னீஸ்வரர் ஆலயம்.

தச வீரட்டானத் தலங்களில் ஐந்தாம் ஆலயமான இந்த ஆலயம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அங்கு சிவன் அக்னீஸ்வரராக அருள்பாலிக்கின்றார், அன்னை கோமதி தேவி.

இந்த ஆலயத்தின் தோற்றம் மிகத் தொன்மையானது. அகத்தியர் அத்ரி காலத்தில் உருவான ஆலயம் அது. மேற்கு பார்த்த லிங்கம் அப்போதே உருவாகியிருந்தது. அவ்வளவு பழமையானது.

இந்த ஆலயத்தின் தலவரலாறு கோரக்க முனிவரிடம் இருந்து தொடங்குகின்றது.

கோரக்க முனிவர் சிவனை நினைந்து அத்ரி மலையில் தவமிருந்தார். அவருக்கு முழு நினைவும் சிவனாக இருந்தது. சிவனின் ஒவ்வொரு அசைவையும் அவரின் ஒவ்வொரு காட்சியும் தியானித்துக் கொண்டிருந்தார்.

அகத்திய முனி சிவனின் கல்யாண கோலத்தை காண விரும்பியது போல் கோரக்கருக்கும் ஒரு ஆசை இருந்தது. அது தட்சனின் யாகத்தில் சிவன் நின்ற அந்த உக்கிரமான வடிவம்.

தன்னை மதிக்காமல் தட்சன் செய்த யாகத்தில் சிவன் எவ்வளவு ஆவேச கோலத்தில் நின்றிருப்பார் என்பதை காண விரும்பினார். சிவன் அவரின் நோக்கம் கண்டு புன்னகைத்தார்.

கோரக்கருக்கு தன்னை வெளிபடுத்த விரும்பிய சிவன், இந்த மேலநத்தம் தலத்தில் அக்னிவடிவாக எழும்பினார். பெரும் வெப்பம் அங்கே சூழ்ந்தது.

அந்த வீரியத்தின் வெம்மையினை தாங்கமுடியாத மக்கள் எல்லா உயிர்களுடனும் வாடினார்கள். நேரம் செல்ல செல்ல வெப்பம் கடுமையாக அதிகரித்தது.

அங்கே உலோகங்கள் உருகத் தொடங்கின. வீடுகளும் பொருட்களும் மெல்ல மெல்ல வெப்பத்தால் உருகின. வெப்பம் கடுமையானது.

முதலில் ஆறுதல் கொடுத்த தாமிரபரணி கொதிக்க தொடங்கிற்று. மக்கள் அஞ்சி பின்னால் செல்ல தொடங்கினார்கள். ஆனாலும், வெப்பம் விரட்டியது.

நெருப்பும் அது கொடுத்த வெம்மையும் எல்லா இடத்தையும் விழுங்கி பரவிக்கொண்டே இருந்தது. கரிக்காதோப்பு, கருங்காடு, கரிசூழ்ந்தமங்கலம் என பரவிய நெருப்பின் வேகமான வீரியம் கண்டு கலங்கிய மக்களின் கதறல் கண்டு சித்தர்கள் பலர் வந்தார்கள்.

அவர்கள் இது சிவனின் ஆட்டம் என அறிந்து, சில பரிகாரங்களை செய்யும் விதமாக கருங்காடு எனும் இடத்தில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வைத்து வழிபட்டார்கள். இதற்கு மேல் நெருப்பு பரவவேண்டாம் எனக் கெஞ்சினார்கள். சிவன் எல்லையில் நின்று காக்கவேண்டும் என மன்றாடினார்கள்.

அதனால் அந்த “பரவா எல்லை நாதர்” எனப் பெயரிட்டார்கள். அந்த லிங்கம் இன்றும் உண்டு.

ஆனாலும், தீ இன்னொரு பக்கம் அடங்கவில்லை. கொதித்த தாமிரபரணியின் இன்னொரு பக்கம் வீரியம் அதிகரித்தது.

இனி நெருப்பு மற்ற இடங்களில் பரவும் என அஞ்சிய சித்தர்கள் பெரும் சித்தரான கோரக்கரிடம் சரணடைந்தார்கள். கோரக்கர் அவர்களின் துயரம் தீர்க்க ஓடி வந்தார்.

அவர் மனமார வேண்டினார். சிவன் தனக்கு சரியான பாடம் கற்பித்ததை உணர்ந்தார். சிவனிடம் கேட்கக் கூடாத விஷயங்களை கேட்டுவிட்டோமோ எனப் பதறினார்.

சிவனிடம் பெரும் மன்னிப்பு கோரினார். இந்த லிங்கத்தின் உக்கிரம் தணிய அதன் நேர் எதிரே சற்றுத் தள்ளி ஒரு லிங்கத்தை கிழக்கு நோக்கி ஸ்தாபித்தார்.

அதற்கு “அழியாபதி ஈஸ்வரர்” எனப் பெயரிட்டார்.

இந்த லிங்கத்தை ஸ்தாபித்ததால் மேலநத்தம் அக்னீஸ்வரர், கருங்காடு “பரவா எல்லை நாதர்” இந்த “அழியாபதி ஈஸ்வரர்” என எல்லாமும் ஒரு முக்கோண வடிவில் வந்தது.

இங்கே ஒரு சூட்சும விதி வேலை செய்தது. இரு கிழக்கு நோக்கிய லிங்கம், ஒரு மேற்கு நோக்கிய லிங்கம் எனும் வடிவில் அந்த சூட்சும விதி நல்ல பலனைக் கொடுத்தது.

சிவனும் கோரக்கருக்கு தன் வடிவத்தை காட்டியபின் உக்கிரம் தணிந்தார். மேலநத்தம் அக்னீஸ்வரர் குளிர்ந்து போனார்.

அவருக்குப் பல பரிகாரங்களைச் செய்து ஆலயத்தினை உருமாற்றினார் கோரக்கர். பின், இமயத்தில் இருந்து கோமதி கல் கொண்டுவரபட்டு அங்கே அன்னை வடிவம் உருவாக்கப்பட்டு அவள் கோமதி அம்மாள் என்றானார்.

இன்று அக்னீஸ்வரரும் கோமதி அம்மாளும் அதே மேல நத்தத்தில் இருந்து அருள் பாலிக்கின்றார்கள். அதிலிருந்து இந்த ஆலய வரலாறு தொடங்குகின்றது.

இந்த ஆலயம் தட்சனின் யாக காட்சியினை அப்படியே தாங்கி நிற்கும் ஆலயம். கோரக்கர் காண விரும்பிய அந்த காட்சியினைக் காட்டி சிவன் அருள் பாலித்த ஆலயம்.

எப்படி தட்சன் யாகத்தில் சிவனை எல்லாத் தேவர்களும் பணிந்தார்களோ, எப்படி சிவனே பிரதானம் என சரணடைந்தார்களோ, அப்படி முழுக்க சரணடையும் தத்துவத்தை தரும் ஆலயம் இது.

இங்கே சிவனே சரணம். அவரே முழு சரணம் என யார் சரணடைவார்களோ, எல்லாம் வல்ல சிவனே இனி முழுக்க அடைக்கலம் என சரணடைவார்களோ அவர்கள் எல்லாக் காவலும் பெறுவார்கள்.

துன்ப நெருப்பு அவர்களை வாட்டாது. முன் ஜென்ம கர்மத்தின் பாதிப்பு அவர்களுக்கு இருக்காது. கர்மம் வெப்பமாய் எரிக்காது.

அந்த வரத்தை இந்த ஆலயம் தரும். முழுக்க தரும்.

வாழ்வின் எல்லா நெருக்கடியும் வெப்பமாய் எரிக்கும் போது இந்த ஆலயத்திற்கு வந்து சிவனை சரணடைந்தால் எல்லாமும் குளிர்ச்சியாய் மாறும்.

நெருப்பு முன் எந்த அசுத்தமும் நிற்க முடியாது, அது எல்லாவற்றையும் விழுங்கும், நெருப்பே அசுத்தங்களை சாம்பலாக்கும்.

அப்படி ஒருவனின் ஆகாத கர்மங்களை, கெட்ட கர்மங்களை எரித்துப் போட்டு முழு ஞான பக்குவம் தரும் ஆலயம் இது.

அக்னி வடிவில் சிவன் உக்கிரமாக நின்றதால் இங்கு ஆட்டுத்தலையுடன் காட்சியளிகின்றார். அக்னி பகவானின் வாகனம் ஆடு என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தி பகவான் ஆட்டுத் தலையுடன் இருக்கும் ஒரே தலைவன் இதுதான்.

அந்த மேலநத்தம் ஆலயத்துக்குள் நுழைந்தால் வலதுபுறம் பிரணவ கணபதி, அகோர கணபதி, வஸ்ய கணபதி என மூன்று கணபதிகள் வீற்றியிருக்கின்றனர்.

இந்த மூன்று கணபதியினையும் வணங்கினால் எல்லா வசீகர சக்திகளும் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி அடையும் பலம் கிடைக்க்கும்.

அதை அடுத்து மேல்பகுதியில் அனுமன் இராவணனின் சபையில் தன்னுடைய வாலையே சிம்மாசனமாக அமைத்து அதன் மேல் அமர்ந்த காட்சி உண்டு.

இந்த ஆலயத்தில் சரணடைந்து வணங்கினால், அந்த விநாயகர் மூவரையும் வணங்கினால் அனுமன் கொண்டிருக்கும் அனைத்து சித்து பலன்களும் கிடைக்கும்.

இடதுபுறம் சூரியன், அதிகார நந்தி ஆகியோர் உள்ளனர். அதனையடுத்து சந்திரன், வள்ளி-தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

பிராகாரத்தில் நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோருக்கு தனித்தனிச் சந்நிதிகள் அமைந்துள்ளன.

மற்ற கோயில்களில் தட்சிணாமூர்த்தியின் அருகே நான்கு பேர் அமர்ந்திருப்பர். நான்கு வேதங்களும் அவர் முன் அமர்ந்திருப்பதாகப் பொருள்.

இங்கு அவர் முன் ஏழு பேர் அமர்ந்திருக்கிறார்கள். இது சப்த ரிஷிகளை குறிப்பது. ஏழு ரிஷிகளும் அவர்முன் இருந்து அருள் பெரும் அற்புதமான தலம் இது.

இந்தக் கோமதி அம்பாள் சிலை இயமலமலையில் இருந்து கொண்டுவரப்பட்டது. அவளுக்கு இங்கு நடக்கும் ஆடிபூரம் வெகு விசேஷமானது. அந்த ஆடிப்பூர வளைகாப்பு இன்னும் விசேஷம்.

குழந்தைபேறு இல்லாப் பெண்கள் இந்த ஆடிப்பூரம் அன்று இந்த வழிபாட்டை செய்து குழந்தை வரம் பெற்று பின் சாட்சியாக வந்து நன்றிக்கடன் தீர்ப்பது வழமையான ஒன்று.

ஆம். இந்த அன்னை குழந்தை வரம் தருபவள்.

இத்தல தீர்த்தமாக தாமிரபரணியின் அக்னி தீர்த்தம் விளங்குகிறது. இந்தத் தீர்த்தத்தில் ஒருவர் தெற்கு நோக்கி முழ்கி எழுந்தால் அவர்களின் பாவமெல்லாம் பொசுங்கி விடும்.

சிவபெருமான் இங்கு தன் ஐந்தொழிலில் ஒன்றான அழித்தல் தொழிலை செய்கின்றார். அவரை அண்டுவோரின் எல்லா பாவகர்மாவும் இங்கு அழிக்கப்படுகின்றது, கர்மவினை எரிக்கப்படுகின்றது.

தச நாடிகளில் இது சமானன் எனும் வாயுவினைப் பலப்படுத்தும் ஆலயம்.

நெல்லைக்கு அண்மித்து இருக்கும் இந்த ஆலயத்தை சென்று தரிசியுங்கள், அக்னி தீர்த்தத்தில் நீராடி மேற்கு நோக்கி நிற்கும் அந்தச் சிவனை தரிசித்தால் கர்மம் எல்லாம் எரிந்துபோகும்.

வாழ்வின் எல்லாக் கர்மவினையும் சாபமும் எல்லாமும் அழிந்தே போகும்.

இந்த ஆலயம் முக்கோணத் தத்துவம் கொண்டது. அதனால் இங்கு வழிபட்டு அதன் பின் கருங்காடு “பரவா எல்லை நாதர்” ஆலயம், பின் கருப்பந்துறை “அழியாபதி நாதர்” ஆலயம் என மற்ற இரண்டையும் வழிபட்டால் பூரண பலன் கிடைக்கும்.

அதுவும் கருப்பந்துறை சித்தர்கள் உலாவிய இடம். இன்றும் அரூபியாய் அவர்கள் அருள்பாலிக்கும் இடம். காசியில் இருந்து வந்து நெல்லையப்பர் கோவிலில் அடியாராய் வாழ்ந்த அமாவாசை சித்தர் அங்குதான் சமாதி அடைந்திருக்கின்றார்.

அந்தச் சமாதி பெரும் சூட்சும சக்தி தலம், இன்றும் சித்தர் அரூபமாய் அமர்ந்து அருள் வழங்கும் தலம்.

இந்த மூன்று கோவில்களுமே சித்தர்களின் ஆலயங்கள். மேலநத்தம் ஆலயம் சித்தர்களால் உருவானது. கருப்பந்துறையினை கோரக்கர் ஸ்தாபனம் செய்த லிங்கம், கருங்காடு சித்தர்கள் பலரால் ஸ்தாபிக்கப்பட்டது.

ஆக, இந்த மூன்று ஆலயங்களுமே சித்தர்களின் தனி ராஜ்ஜியங்கள் அவற்றில் மஹாராஜாவாக நின்று சிவன் பெரும் அருள் பொழியும் ஆலயங்கள்.

அங்கு சென்று வழிபட்டு உங்கள் பாவவினை எல்லாம் எரித்து சிவன் அருளில் நல்ல வளங்களை, நல்ல ஒளியினை, நல்ல சக்தியினை பெற்று பெருவாழ்வு வாழவேண்டியது ஒவ்வொருவரின் கடமை.

அக்னி என்பதன் தத்துவம் சிவன் அக்னிரூபமாக நின்றதன் தத்துவம், ஆட்டுகடாவினை அக்னி பகவானுக்கு கொடுத்த தத்துவம் எளிதானது

அக்னி எப்போதும் கட்டுக்குள் இருத்தல் வேண்டும், கோவில் தீபம் புனிதமானது ஒளிகொடுப்பது ஆனால் காட்டுதீ அபாயமானது

உடலில் வெப்பம் அவசியம் ,வெப்பமில்லா உடல் பிணம். ஆனால் அதீத வெப்பம் உடலுக்கு நோய் உடலினை அழித்துவிடும்

அப்படியே மானிடர் வாழ சில தேவைகள் அவசியம், அந்த தேவைகள் பேராசையாய் பெரும் தீயாய் எழும்போது பெரும் பெரும் பாவங்களும் தீய கர்மாக்களும் அதிகரிக்கின்றன‌

இந்த பேராசைதான் ஆணவம் அகங்காரம் என விரிந்து பஞ்சமா பாதங்களில் ஒருவனை வீழ்த்தி, கர்மாவினை அதிகரித்து பிறப்பு சுழலில் தள்ளுகின்றது

இங்கே அக்னீஸ்வரராக சிவன் போதிக்கின்றார் என்பதும், கோரக்கர் ஒரு சமநிலையினை ஏற்படுத்தினார் என்பதும் மாய ஆசைகள் எப்போதும் ஆபத்தானவை, தேவைகள் மானிடர்க்கு அவசியம் ஆனால் தேவைகள் ஆசை தீயாக எழுந்தால் அது அழித்துவிடும், அந்த ஆசைகளை கட்டுபடுத்தி சமநிலை பேணுதல் நன்று, ஞானம் மிகுந்தால் ஆசைகள் கட்டுபடும் என்பது இங்கு சொல்லபடும் போதனை

அக்னிபகவானுக்கு ஆட்டுகடா வாகனம் எனும் தத்துவம் அது, ஆட்டுமந்தையின் முன்னால் செல்வது கடா. ஆட்டுமந்தை சரியாக நடதபடாவிட்டால் அவை எல்லாம் தின்று மிதித்து பெரும் அழிவினை கொடுக்கும்

அவைகளை பல வகையில் கட்டுபடுத்தி காவல் இருத்தல் அவசியம், நெருப்பு என்பது கட்டுக்குள் இருத்தல் வேண்டும் என்பதற்கே ஆட்டுகடாவினை வாகனமாக‌ கொடுத்தார்கள்

இந்த ஆசைகளை மாயைகளை கட்டுபடுத்தி உங்களுக்கு எது தேவையோ அதை மிக சரியாக தரும் ஆலயம் இது, எது அவசியமோ அதனை முழுக்க தந்து உங்களை காக்கும் அற்புத தலங்கள் இவை

அங்கு தீபமேற்றி வழிபடுன்கள், அப்போது கோரக்க சித்தரில் தொடங்கி அமாவாசை சித்தர்வரை நினைத்து வழிபடுங்கள். அதன் பின் ஞான அக்னியும், செல்வாக்கும் சொல்வாக்கும் மிக்க சக்தி அக்னியும் உங்களுள் எழும். வாழ்வே யாரும் உங்களை அசைக்கமுடியாத நெருங்கமுடியாத இடத்துக்கு மாறும். அது சத்தியம்

தச வீரட்டானத் தலங்களில் ஐந்தாம் ஆலயமான இந்த ஆலயம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அங்கு சிவன் அக்னீஸ்வரராக அருள்பாலிக்கின்றார், அன்னை கோமதி தேவி.

இந்த ஆலயத்தின் தோற்றம் மிகத் தொன்மையானது. அகத்தியர் அத்ரி காலத்தில் உருவான ஆலயம் அது. மேற்கு பார்த்த லிங்கம் அப்போதே உருவாகியிருந்தது. அவ்வளவு பழமையானது.

இந்த ஆலயத்தின் தலவரலாறு கோரக்க முனிவரிடம் இருந்து தொடங்குகின்றது.

கோரக்க முனிவர் சிவனை நினைந்து அத்ரி மலையில் தவமிருந்தார். அவருக்கு முழு நினைவும் சிவனாக இருந்தது. சிவனின் ஒவ்வொரு அசைவையும் அவரின் ஒவ்வொரு காட்சியும் தியானித்துக் கொண்டிருந்தார்.

அகத்திய முனி சிவனின் கல்யாண கோலத்தை காண விரும்பியது போல் கோரக்கருக்கும் ஒரு ஆசை இருந்தது. அது தட்சனின் யாகத்தில் சிவன் நின்ற அந்த உக்கிரமான வடிவம்.

தன்னை மதிக்காமல் தட்சன் செய்த யாகத்தில் சிவன் எவ்வளவு ஆவேச கோலத்தில் நின்றிருப்பார் என்பதை காண விரும்பினார். சிவன் அவரின் நோக்கம் கண்டு புன்னகைத்தார்.

கோரக்கருக்கு தன்னை வெளிபடுத்த விரும்பிய சிவன், இந்த மேலநத்தம் தலத்தில் அக்னிவடிவாக எழும்பினார். பெரும் வெப்பம் அங்கே சூழ்ந்தது.

அந்த வீரியத்தின் வெம்மையினை தாங்கமுடியாத மக்கள் எல்லா உயிர்களுடனும் வாடினார்கள். நேரம் செல்ல செல்ல வெப்பம் கடுமையாக அதிகரித்தது.

அங்கே உலோகங்கள் உருகத் தொடங்கின. வீடுகளும் பொருட்களும் மெல்ல மெல்ல வெப்பத்தால் உருகின. வெப்பம் கடுமையானது.

முதலில் ஆறுதல் கொடுத்த தாமிரபரணி கொதிக்க தொடங்கிற்று. மக்கள் அஞ்சி பின்னால் செல்ல தொடங்கினார்கள். ஆனாலும், வெப்பம் விரட்டியது.

நெருப்பும் அது கொடுத்த வெம்மையும் எல்லா இடத்தையும் விழுங்கி பரவிக்கொண்டே இருந்தது. கரிக்காதோப்பு, கருங்காடு, கரிசூழ்ந்தமங்கலம் என பரவிய நெருப்பின் வேகமான வீரியம் கண்டு கலங்கிய மக்களின் கதறல் கண்டு சித்தர்கள் பலர் வந்தார்கள்.

அவர்கள் இது சிவனின் ஆட்டம் என அறிந்து, சில பரிகாரங்களை செய்யும் விதமாக கருங்காடு எனும் இடத்தில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வைத்து வழிபட்டார்கள். இதற்கு மேல் நெருப்பு பரவவேண்டாம் எனக் கெஞ்சினார்கள். சிவன் எல்லையில் நின்று காக்கவேண்டும் என மன்றாடினார்கள்.

அதனால் அந்த “பரவா எல்லை நாதர்” எனப் பெயரிட்டார்கள். அந்த லிங்கம் இன்றும் உண்டு.

ஆனாலும், தீ இன்னொரு பக்கம் அடங்கவில்லை. கொதித்த தாமிரபரணியின் இன்னொரு பக்கம் வீரியம் அதிகரித்தது.

இனி நெருப்பு மற்ற இடங்களில் பரவும் என அஞ்சிய சித்தர்கள் பெரும் சித்தரான கோரக்கரிடம் சரணடைந்தார்கள். கோரக்கர் அவர்களின் துயரம் தீர்க்க ஓடி வந்தார்.

அவர் மனமார வேண்டினார். சிவன் தனக்கு சரியான பாடம் கற்பித்ததை உணர்ந்தார். சிவனிடம் கேட்கக் கூடாத விஷயங்களை கேட்டுவிட்டோமோ எனப் பதறினார்.

சிவனிடம் பெரும் மன்னிப்பு கோரினார். இந்த லிங்கத்தின் உக்கிரம் தணிய அதன் நேர் எதிரே சற்றுத் தள்ளி ஒரு லிங்கத்தை கிழக்கு நோக்கி ஸ்தாபித்தார்.

அதற்கு “அழியாபதி ஈஸ்வரர்” எனப் பெயரிட்டார்.

இந்த லிங்கத்தை ஸ்தாபித்ததால் மேலநத்தம் அக்னீஸ்வரர், கருங்காடு “பரவா எல்லை நாதர்” இந்த “அழியாபதி ஈஸ்வரர்” என எல்லாமும் ஒரு முக்கோண வடிவில் வந்தது.

இங்கே ஒரு சூட்சும விதி வேலை செய்தது. இரு கிழக்கு நோக்கிய லிங்கம், ஒரு மேற்கு நோக்கிய லிங்கம் எனும் வடிவில் அந்த சூட்சும விதி நல்ல பலனைக் கொடுத்தது.

சிவனும் கோரக்கருக்கு தன் வடிவத்தை காட்டியபின் உக்கிரம் தணிந்தார். மேலநத்தம் அக்னீஸ்வரர் குளிர்ந்து போனார்.

அவருக்குப் பல பரிகாரங்களைச் செய்து ஆலயத்தினை உருமாற்றினார் கோரக்கர். பின், இமயத்தில் இருந்து கோமதி கல் கொண்டுவரபட்டு அங்கே அன்னை வடிவம் உருவாக்கப்பட்டு அவள் கோமதி அம்மாள் என்றானார்.

இன்று அக்னீஸ்வரரும் கோமதி அம்மாளும் அதே மேல நத்தத்தில் இருந்து அருள் பாலிக்கின்றார்கள். அதிலிருந்து இந்த ஆலய வரலாறு தொடங்குகின்றது.

இந்த ஆலயம் தட்சனின் யாக காட்சியினை அப்படியே தாங்கி நிற்கும் ஆலயம். கோரக்கர் காண விரும்பிய அந்த காட்சியினைக் காட்டி சிவன் அருள் பாலித்த ஆலயம்.

எப்படி தட்சன் யாகத்தில் சிவனை எல்லாத் தேவர்களும் பணிந்தார்களோ, எப்படி சிவனே பிரதானம் என சரணடைந்தார்களோ, அப்படி முழுக்க சரணடையும் தத்துவத்தை தரும் ஆலயம் இது.

இங்கே சிவனே சரணம். அவரே முழு சரணம் என யார் சரணடைவார்களோ, எல்லாம் வல்ல சிவனே இனி முழுக்க அடைக்கலம் என சரணடைவார்களோ அவர்கள் எல்லாக் காவலும் பெறுவார்கள்.

துன்ப நெருப்பு அவர்களை வாட்டாது. முன் ஜென்ம கர்மத்தின் பாதிப்பு அவர்களுக்கு இருக்காது. கர்மம் வெப்பமாய் எரிக்காது.

அந்த வரத்தை இந்த ஆலயம் தரும். முழுக்க தரும்.

வாழ்வின் எல்லா நெருக்கடியும் வெப்பமாய் எரிக்கும் போது இந்த ஆலயத்திற்கு வந்து சிவனை சரணடைந்தால் எல்லாமும் குளிர்ச்சியாய் மாறும்.

நெருப்பு முன் எந்த அசுத்தமும் நிற்க முடியாது, அது எல்லாவற்றையும் விழுங்கும், நெருப்பே அசுத்தங்களை சாம்பலாக்கும்.

அப்படி ஒருவனின் ஆகாத கர்மங்களை, கெட்ட கர்மங்களை எரித்துப் போட்டு முழு ஞான பக்குவம் தரும் ஆலயம் இது.

அக்னி வடிவில் சிவன் உக்கிரமாக நின்றதால் இங்கு ஆட்டுத்தலையுடன் காட்சியளிகின்றார். அக்னி பகவானின் வாகனம் ஆடு என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தி பகவான் ஆட்டுத் தலையுடன் இருக்கும் ஒரே தலைவன் இதுதான்.

அந்த மேலநத்தம் ஆலயத்துக்குள் நுழைந்தால் வலதுபுறம் பிரணவ கணபதி, அகோர கணபதி, வஸ்ய கணபதி என மூன்று கணபதிகள் வீற்றியிருக்கின்றனர்.

இந்த மூன்று கணபதியினையும் வணங்கினால் எல்லா வசீகர சக்திகளும் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி அடையும் பலம் கிடைக்க்கும்.

அதை அடுத்து மேல்பகுதியில் அனுமன் இராவணனின் சபையில் தன்னுடைய வாலையே சிம்மாசனமாக அமைத்து அதன் மேல் அமர்ந்த காட்சி உண்டு.

இந்த ஆலயத்தில் சரணடைந்து வணங்கினால், அந்த விநாயகர் மூவரையும் வணங்கினால் அனுமன் கொண்டிருக்கும் அனைத்து சித்து பலன்களும் கிடைக்கும்.

இடதுபுறம் சூரியன், அதிகார நந்தி ஆகியோர் உள்ளனர். அதனையடுத்து சந்திரன், வள்ளி-தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

பிராகாரத்தில் நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோருக்கு தனித்தனிச் சந்நிதிகள் அமைந்துள்ளன.

மற்ற கோயில்களில் தட்சிணாமூர்த்தியின் அருகே நான்கு பேர் அமர்ந்திருப்பர். நான்கு வேதங்களும் அவர் முன் அமர்ந்திருப்பதாகப் பொருள்.

இங்கு அவர் முன் ஏழு பேர் அமர்ந்திருக்கிறார்கள். இது சப்த ரிஷிகளை குறிப்பது. ஏழு ரிஷிகளும் அவர்முன் இருந்து அருள் பெரும் அற்புதமான தலம் இது.

இந்தக் கோமதி அம்பாள் சிலை இயமலமலையில் இருந்து கொண்டுவரப்பட்டது. அவளுக்கு இங்கு நடக்கும் ஆடிபூரம் வெகு விசேஷமானது. அந்த ஆடிப்பூர வளைகாப்பு இன்னும் விசேஷம்.

குழந்தைபேறு இல்லாப் பெண்கள் இந்த ஆடிப்பூரம் அன்று இந்த வழிபாட்டை செய்து குழந்தை வரம் பெற்று பின் சாட்சியாக வந்து நன்றிக்கடன் தீர்ப்பது வழமையான ஒன்று.

ஆம். இந்த அன்னை குழந்தை வரம் தருபவள்.

இத்தல தீர்த்தமாக தாமிரபரணியின் அக்னி தீர்த்தம் விளங்குகிறது. இந்தத் தீர்த்தத்தில் ஒருவர் தெற்கு நோக்கி முழ்கி எழுந்தால் அவர்களின் பாவமெல்லாம் பொசுங்கி விடும்.

சிவபெருமான் இங்கு தன் ஐந்தொழிலில் ஒன்றான அழித்தல் தொழிலை செய்கின்றார். அவரை அண்டுவோரின் எல்லா பாவகர்மாவும் இங்கு அழிக்கப்படுகின்றது, கர்மவினை எரிக்கப்படுகின்றது.

தச நாடிகளில் இது சமானன் எனும் வாயுவினைப் பலப்படுத்தும் ஆலயம்.

நெல்லைக்கு அண்மித்து இருக்கும் இந்த ஆலயத்தை சென்று தரிசியுங்கள், அக்னி தீர்த்தத்தில் நீராடி மேற்கு நோக்கி நிற்கும் அந்தச் சிவனை தரிசித்தால் கர்மம் எல்லாம் எரிந்துபோகும்.

வாழ்வின் எல்லாக் கர்மவினையும் சாபமும் எல்லாமும் அழிந்தே போகும்.

இந்த ஆலயம் முக்கோணத் தத்துவம் கொண்டது. அதனால் இங்கு வழிபட்டு அதன் பின் கருங்காடு “பரவா எல்லை நாதர்” ஆலயம், பின் கருப்பந்துறை “அழியாபதி நாதர்” ஆலயம் என மற்ற இரண்டையும் வழிபட்டால் பூரண பலன் கிடைக்கும்.

அதுவும் கருப்பந்துறை சித்தர்கள் உலாவிய இடம். இன்றும் அரூபியாய் அவர்கள் அருள்பாலிக்கும் இடம். காசியில் இருந்து வந்து நெல்லையப்பர் கோவிலில் அடியாராய் வாழ்ந்த அமாவாசை சித்தர் அங்குதான் சமாதி அடைந்திருக்கின்றார்.

அந்தச் சமாதி பெரும் சூட்சும சக்தி தலம், இன்றும் சித்தர் அரூபமாய் அமர்ந்து அருள் வழங்கும் தலம்.

இந்த மூன்று கோவில்களுமே சித்தர்களின் ஆலயங்கள். மேலநத்தம் ஆலயம் சித்தர்களால் உருவானது. கருப்பந்துறையினை கோரக்கர் ஸ்தாபனம் செய்த லிங்கம், கருங்காடு சித்தர்கள் பலரால் ஸ்தாபிக்கப்பட்டது.

ஆக, இந்த மூன்று ஆலயங்களுமே சித்தர்களின் தனி ராஜ்ஜியங்கள் அவற்றில் மஹாராஜாவாக நின்று சிவன் பெரும் அருள் பொழியும் ஆலயங்கள்.

அங்கு சென்று வழிபட்டு உங்கள் பாவவினை எல்லாம் எரித்து சிவன் அருளில் நல்ல வளங்களை, நல்ல ஒளியினை, நல்ல சக்தியினை பெற்று பெருவாழ்வு வாழவேண்டியது ஒவ்வொருவரின் கடமை.

அக்னி என்பதன் தத்துவம் சிவன் அக்னிரூபமாக நின்றதன் தத்துவம், ஆட்டுகடாவினை அக்னி பகவானுக்கு கொடுத்த தத்துவம் எளிதானது

அக்னி எப்போதும் கட்டுக்குள் இருத்தல் வேண்டும், கோவில் தீபம் புனிதமானது ஒளிகொடுப்பது ஆனால் காட்டுதீ அபாயமானது

உடலில் வெப்பம் அவசியம் ,வெப்பமில்லா உடல் பிணம். ஆனால் அதீத வெப்பம் உடலுக்கு நோய் உடலினை அழித்துவிடும்

அப்படியே மானிடர் வாழ சில தேவைகள் அவசியம், அந்த தேவைகள் பேராசையாய் பெரும் தீயாய் எழும்போது பெரும் பெரும் பாவங்களும் தீய கர்மாக்களும் அதிகரிக்கின்றன‌

இந்த பேராசைதான் ஆணவம் அகங்காரம் என விரிந்து பஞ்சமா பாதங்களில் ஒருவனை வீழ்த்தி, கர்மாவினை அதிகரித்து பிறப்பு சுழலில் தள்ளுகின்றது

இங்கே அக்னீஸ்வரராக சிவன் போதிக்கின்றார் என்பதும், கோரக்கர் ஒரு சமநிலையினை ஏற்படுத்தினார் என்பதும் மாய ஆசைகள் எப்போதும் ஆபத்தானவை, தேவைகள் மானிடர்க்கு அவசியம் ஆனால் தேவைகள் ஆசை தீயாக எழுந்தால் அது அழித்துவிடும், அந்த ஆசைகளை கட்டுபடுத்தி சமநிலை பேணுதல் நன்று, ஞானம் மிகுந்தால் ஆசைகள் கட்டுபடும் என்பது இங்கு சொல்லபடும் போதனை

அக்னிபகவானுக்கு ஆட்டுகடா வாகனம் எனும் தத்துவம் அது, ஆட்டுமந்தையின் முன்னால் செல்வது கடா. ஆட்டுமந்தை சரியாக நடதபடாவிட்டால் அவை எல்லாம் தின்று மிதித்து பெரும் அழிவினை கொடுக்கும்

அவைகளை பல வகையில் கட்டுபடுத்தி காவல் இருத்தல் அவசியம், நெருப்பு என்பது கட்டுக்குள் இருத்தல் வேண்டும் என்பதற்கே ஆட்டுகடாவினை வாகனமாக‌ கொடுத்தார்கள்

இந்த ஆசைகளை மாயைகளை கட்டுபடுத்தி உங்களுக்கு எது தேவையோ அதை மிக சரியாக தரும் ஆலயம் இது, எது அவசியமோ அதனை முழுக்க தந்து உங்களை காக்கும் அற்புத தலங்கள் இவை

அங்கு தீபமேற்றி வழிபடுன்கள், அப்போது கோரக்க சித்தரில் தொடங்கி அமாவாசை சித்தர்வரை நினைத்து வழிபடுங்கள். அதன் பின் ஞான அக்னியும், செல்வாக்கும் சொல்வாக்கும் மிக்க சக்தி அக்னியும் உங்களுள் எழும். வாழ்வே யாரும் உங்களை அசைக்கமுடியாத நெருங்கமுடியாத இடத்துக்கு மாறும். அது சத்தியம்

தச வீரட்டானத் தலங்கள் 06 : ராஜவல்லிபுரம் அக்னீஸ்வரர் ஆலயம்.

நெல்லை அருகே அமைந்த சிவதலங்களில் முக்கியமானது செப்பறை அழகிய கூத்தர் ஆலயம். தாமிர சபை என அழைக்கபடும் சிறப்பு பெற்றது அந்த நடராஜர் தலம். இது இராஜவல்லிபுரம் எனும் ஊரில் அமைந்திருக்கின்றது,

இந்த ஊரில்தான் தசவீரட்டனத்தின் ஆறாம் ஆலயம் அமைந்துள்ளது.

இதுதான் அந்த ஊரின் முதல் ஆலயம், காலத்தால் மூத்தது இதுதான்.

இந்த ஆலயத்தின் வரலாறு அக்னி பகவானிடம் இருந்து தொடங்குகின்றது. இந்த அக்னி பகவான் அஷ்டதிக் பாலகர்கள் எனும் எண் திசை காவலர்களில் ஒருவர்.

எட்டு திசைக்கும் எட்டு காவலர்கள் சிவனால் நிறுத்தபட்டார்கள். இந்திரன், அக்னி தேவன், எமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன்.

எட்டு திசைகளில் தென்கிழக்கு திசைக்கு உரியவர் அக்னி பகவான். இவர்தான் யாக வேள்விகளிலும் இன்னும் பல வழிபாடுகளிலும் பிரதானம், தீபத்தின் சுடர் முதல் எல்லாம் அவர்தான்.

யாகத்தில் இடப்படும் பொருட்களைத் தெய்வங்களிடம் சேர்ப்பதும் இவர்தான். தேவர்களில் மகா முக்கியமானவர் இவர். எல்லா வழிபாடுகளின் அடிப்படை அவருடையது.

இந்த அக்னிபகவானுக்கு சிவனின் நாட்டிய கோலத்தை காணும் ஆவல் வந்தது. அப்படியே சிவனுடன் எப்போதும் கலந்திருக்கும் பெரும் விருப்பமும் இருந்தது.

அப்படியே எட்டு மூர்த்திகளில் ஒன்றாகிவிடும் விருப்பமும் இருந்தது. எட்டு மூர்த்தி என்றால் ஆகாயம், சூரியன், வாயு, காற்று, நிலா, நீர், நிலம், நெருப்பு என எட்டு, இவை எல்லாமே சிவ வடிவம்

இப்படியான அக்னி பகவான் சிவனை நோக்கி இந்த வரத்துக்காகப் பெரும் தவம் இயற்றினார். அவர் தவம் செய்த இடம் கங்கை கொண்டான் எனும் ஊர் அருகே இருந்தது. கங்கை கொண்டான் என்பது சிவபெருமானைக் குறிக்கும் பெயர்.

இது சிற்றாறின் கரையில் அமைந்துள்ளது. இந்த நதி குற்றாலத்தில் இருந்து உருவாகி வந்து தாமிரபரணியில் கலக்கும் நதி, இதன் கரையில் காமதேனு தீர்த்தத் துறையில் தவமிருந்தார் அக்னி பகவான்.

சிவன் அவர் தவத்துக்கு இறங்கி அவருக்குக் கட்டளையிட்டார். அங்கிருந்து நகர்ந்து தாருகாவனமும் சிங்சா வனமும் சந்திக்கும் இடத்துக்கு வரச் சொன்னார்.

அப்படி அவர் செல்லும் போது ஒரு இடத்தில் தங்கினார். அப்போது சிவபூஜை செய்ய விரும்பி மண்ணில் ஒரு லிங்கம் செய்து வழிபட்டார், அதற்காக ஒரு தீர்த்தமும் உருவாக்கினார்.

இந்த லிங்கம் அக்னீஸ்வரர் என்றானார், அந்த தீர்த்தம் அக்னி தீர்த்தம் என அமைந்தது.

இங்கு அவர் மனமார வழிபட்டு சிவனுக்காக ஏங்கி நின்றபோதுதான் சிவன் அவருக்கு நடராஜ கோலம் காட்டினார். அப்படியே தன் நெற்றிக்கண்ணிலும் தன் எட்டு மூர்த்தங்களிலும் ஒன்றாக அக்னி பகவானை ஏற்றும் கொண்டார். அன்று பங்குனி மாதம் மிருகசீரிஷ நட்சத்திரமாய் இருந்த நாள்.

ஆம். அக்னி சிவனோடு முழுக்க கலந்த தலம் இது.

இந்த ஊர் இராஜவல்லிபுரம் என்றாயிற்று. அந்தச் சிவன் அருளிய நடராஜர் கோலக் காட்சி செப்பறை அழகிய கூத்தர் ஆலயமாயிற்று. மூல காரணமான இந்த ஆலயம் அக்னீஸ்வரர் ஆலயம் என்றாயிற்று.

அக்னி மூலை தென்கிழக்கு என்பதால் இந்த ஆலயம் ஊரின் தென்கிழக்கில் அமைந்துள்ளது.

சிவாலயங்கள் மூவகை ஆகம விதிப்படி அமைந்திருக்கும். அவ்வகையில் இது சுதந்திரா ஆகம விதி ஆலயம், அதாவது அம்பாளுக்கும் சிவனுக்கும் தனித் தனி கொடிமரம் அமைந்திருக்கும்.

இங்கு அன்னையின் பெயர் அகிலாண்ட ஈஸ்வரி.

இந்த ஆலயம் மேற்கு நோக்கி அமைந்த ஆலயம், அதாவது அக்னி பகவான் தன் கர்மவினை தீர்ந்து சிவனோடு கலக்க வழிபட்ட ஆலயம், அதனால் மேற்கு நோக்கி இந்த லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார்.

இந்த ஆலயம் சிவஞான சுவாமிகள் திருவாவடுதுறை சுவாமிகளால் பெரும் பெயர் பெற்றது, அவரின் வரலாற்றில் அழியா இடம் கொண்டது.

நெல்லையின் மேற்கே பாபநாசம் அருகே விக்ரமசிங்கபுரத்தில் அழகிய கூத்தர் என்றொரு கல்விமான் இருந்தார். இவருக்கு குழந்தை பாக்கியமில்லை. அவர் அகத்திய மாமுனிவரிடம் வேண்டினார்.

அழகிய கூத்தர் என்பது இந்த இராஜவல்லிபுரத்தில் இருக்கும் நடராஜரின் பெயர்.

அகத்தியர் அருளால் அவருக்கு ஒரு ஆண்மகவு பிறந்தது. அதற்கு ஐந்து வயதாகும் போது பாடம் கற்பதற்காகத் திண்ணைப் பள்ளி குருவிடம் சேர்த்துவிட்டார் அழகிய கூத்தர்.

இயல்பிலே மிகக் கூரிய அறிவுள்ள அக்குழந்தை மிக அற்புதமாகப் பதிகங்களைப் பாடியது. அந்நேரம் பாபநாசம் உள்ளிட்ட இடங்களுக்கு யாத்திரை வந்த திருவாவடுதுறை ஆதீன துறவிகள் இக்குழந்தை சாதாரணம் அல்ல என்பதை உணர்ந்து அதன் பெற்றோரைத் தேடினார்கள்.

அக்குழந்தை தெய்வீகக் குழந்தை என்பதால் தங்களோடு கூட்டிச் செல்ல விரும்பினார்கள். குழந்தையும் தயக்கமின்றி பின் செல்லத் தயாரானது. பின் பத்து வயதுக்குப் பின் அனுப்பலாம் என முடிவாயிற்று.

எல்லாம் அகத்திய முனிவரின் அருள் என்பதால் அழகிய கூத்தரும் ஒப்புக் கொண்டார்.

பத்தாம் வயதில் வேலப்ப தேசிகரிடம் அக்குழந்தை ஒப்படைக்கப்பட்டது. பின், அவரின் வாரிசாகச் சிவஞான சுவாமிகள் என அந்த திருவாவடுதுறை ஆதீனமுமானது.

ஆம். சிவஞான சுவாமிகள் எனும் சிவாச்சாரிய மடாதிபதி இப்படித்தான் உருவானார். இது சுமார் 400 வருடத்துக்கு முந்தைய நிகழ்வு.

சைவ வரலாற்றில் அவர் ஓர் அதிசயம். சுமார் 29 நூல்களை அவர் எழுதித் தந்தார். அத்தனையும் சைவ பொக்கிஷங்கள்.ண

அந்த ஞானகுரு பத்து வயதில் தன் முதல் பதிகத்தை இந்த அக்னீஸ்வரர் அருகிலிருக்கும் அகிலாண்ட அன்னைக்கே பாடினார்.

அதன் பின்பே அத்தனைப் பெரிய இடத்தை அடைந்தார். அவர் வாழ்வில் மங்கா இடம் பிடித்த முக்கிய ஆலயம் இது.

இது முற்காலத்தில் பெரிதாக கொண்டாடப்பட்ட தலம். யுகம் யுகமாகச் சிறப்பிக்கப்பட்டது. சித்தர்களும் மகான்களும் வந்து வழிபட்ட ஆலயம்.

ஆனால், பின்னாளில் அந்தச் செப்பறை நடராஜர் எனும் அழகிய கூத்தர் ஆலயம் பிரதானமானது, இந்த ஆலயம் பின்னடைந்தது.

இவ்வளவுக்கும் இந்த ஆலயமே மூத்த அடித்தள ஆலயம், இந்த ஆலயத்தாலேதான் அந்த அழகிய கூத்தர் ஆலயமே அமைந்தது.

இந்த ஆலயம் கர்மம் தீர்த்து ஒரு ஆத்மாவினைச் சிவனோடு கலக்கச் செய்யும். அக்னி பகவானை சிவன் தன் மூன்றாம் கண்ணாகத் தன் அஷ்ட மூர்த்திகளில் ஒன்றாக இங்கு சேர்த்துக் கொண்டார் என்பது வெறும் நிகழ்வு அல்ல‌.

அது ஜீவாத்மா பரமாத்வோடு இரண்டறக் கலந்தது என்பதும் அப்படி கலந்த நிலையில் நடராஜ கோலம் எனும் மாபெரும் தத்துவத்தை உணர்ந்தது எனும் தாத்பரியம்.

ஆம். இந்த ஆலயம் கர்ம வினைகளை எரித்து முக்தி தரும் ஆலயம். பரமாத்வாவோடு ஜீவாத்மாவினை ஈர்த்து சேர்க்கும் ஆலயம்.

இங்கு அக்னி என்பது ஆத்ம வடிவம், அக்னி சுடர் வடிவம். அந்த ஆலயத்தில் வணங்கும் ஆத்மா இறைவனில் கலக்கும் வரம் பெறும் என்பதே இந்த ஆலயத்தின் தாத்பரியம்.

ஞானேந்திரியங்களில் இந்த ஆலயம் கண் தொடர்புடையது. காட்சிகளினால் வரும் கர்மத்தை இது அழிக்கும். நல்ல கர்மக் காட்சிகளை இறை வடிவ காட்சிகளை இது வழங்கும்.

கண் சம்பந்தமான சிக்கல்களைத் தீர்க்கும் ஆலயம் இதுவே.

தசவாயுக்களில் இது சமானன் எனும் வாயு இதுதான் உடலின் வெப்பநிலையினைக் கட்டுக்குள் வைத்திருக்கும், வெப்பநிலை மாறுபாட்டாலே உடலில் வியாதிகள் வரும், இந்த வாயு சரியாக இருந்தால் உஷ்ணம் சரியாக இருக்கும். நோய்கள் வாரா.

இந்த ஆலயம் அந்த ஆரோக்கியத்தை தரும்.

நாடிகளில் இது காந்தாரி நாடியுடன் தொடர்புடையது. அதனாலே அம்பாள் இங்குச் சக்தி மிகுந்தவளாகின்றாள்.

நெல்லை பக்கம் செல்லும் போது இந்த ஆலயத்தைக் காணத் தவறாதீர்கள். இதே இராஜவல்லிபுரத்தில்தான் செப்பறை அழகிய கூத்தர் ஆலயமும் உண்டு.

அதைத் தரிசிக்கும் முன் இந்த அக்னீஸ்வரரை தரிசியுங்கள். உங்கள் கர்ம வினை முழுக்க அகலும். சிவன் உங்களைச் சேர்த்துக் கொள்வார். அந்த ஆனந்தத்தில் அழகிய கூத்தர் நடராஜரைத் தரிசியுங்கள். அந்த நடனமும் அதன் தாத்பரியமும் முழுக்க முழுக்க முழு ஆனந்தமாக உங்களுக்குப் புரியும்.

உங்கள் ஆத்மா அங்கே பெரும் பரவசத்துடன் பிறவி எடுத்த பலனை முழுக்க நிறைவு செய்யும். எஞ்சிய வாழ்வு மிக எளிதாக நிம்மதியான இதற்கு மேல் என்ன உண்டு எனும்படி நிறைவாக செல்லும். வாழ்வு முழுமை அடையும். அதன் பின் பிறப்பில்லை. இது சத்தியம்.

தசவீராட்டாண தலம் 07 : தென்மலை திரிபுரேஸ்வரர் ஆலயம்

தசவீராட்டாண ஆலயங்களில் ஏழாம் ஆலயம் தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் அடியில் அமைந்திருக்கும் திரிபுரேஸ்வரர் ஆலயம்

திரிபுர ஈஸ்வரர் என்றால் முப்புரமும் எரித்த சிவன் என்பது எல்லோரும் அறிந்தது, அந்த புராணம் இதுதான்

தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் மூன்று பேர் உண்டு. வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூவரும் பெரும் சக்திபெற தவமிருந்தார்கள், சிவபக்தர்களான அவர்கள் சிறப்பு வரத்துக்காக பிரம்ம தேவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார்கள்.

தவத்தை மெச்சி, தரிசனம் அளித்த நான்முகனிடம், “நினைத்த இடமெங்கும் செல்லும்படியாக ஆகாய மார்க்கத்தில் பறக்கத் தக்க மூன்று கோட்டைகள் வேண்டும். நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து இருக்கும்போது மட்டுமே ஒரே கணையால்தான் எங்கள் உயிர் பிரிய வேண்டும்” என்ற அரிய வரத்தைப் பெற்றார்கள்.

அப்படி தங்கம் வெள்ளி , இரும்பாலான மூன்று பறக்கும் கோட்டைகள் அவர்களுக்கு கிடைத்தன‌

வரம் பெற்ற பின் இந்திராதி தேவர்களை துன்புறுத்தினார்கள். தேவலோகத்தை மட்டுமல்ல எல்லா லோகத்தையும் இம்சைத்துவிட்டு பறக்கும் கோட்டையில் பத்திரமாக வாழ்ந்தார்கள்

எல்லா உலகமும் இவர்களால் பெரும்பாடுபட்டது, அதே நேரம் பிரம்ம வழிபாடும் சிவவழிபாடும் மிக சரியாக செய்தார்கள், சிவலிங்க வழிபாடு எப்பொழுதும் நடந்தது

இவர்கள் தேவர்களின் கடமைகளை செய்யவிடாமல் அடிமையாக்கி பிரபஞ்சத்தையே ஆட்டுவித்ததால் நடுங்கிய தேவர்கள் விஷ்ணுவிடம் சரணடைந்தனர்

அவர்களை அழிக்க வல்லவர் சிவன் ஒருவரே ஆனால் தன் பக்தர்களை அவர் அழிக்க தயங்குவார், அவர் அவர்களை அழிக்கவேண்டுமானால் முதலில் சிவவழிபாட்டை அவர்கள் கைவிட வேண்டும் என சிந்தித்த விஷ்ணு அதற்கொரு திட்டம் வகுத்தார்

ஆதிபுத்தர் எனும் தன் அம்சத்தை நாரத முனியுடன் அவர்கள் கோட்டைக்கு அனுப்பி இம்மூவரும் பெரும் சக்தி பெற்றுவிட்டனர், சிவனுக்கு சக்தியெல்லாம் இல்லை இங்கு நடப்பதெல்லாம் இயற்கை , சிவன் சக்தியற்றவர் என நம்ப வைத்து அவர்களை கர்வமும் அகந்தையும் கொள்ள செய்தார்

அந்த மூவரும் சிவவழிபாட்டை மறந்தனர், சிவலிஙகத்தை கைவிட்டனர், விருப்படி தங்களே கடவுள் என சொல்லிகொண்டனர், பிரம்மனையும் மறந்தனர்

இப்படி அவர்கள் தன்னை மறந்து அகங்காரிகளாக ஆடும்பொழுது சிவன் அவர்களை அழிக்க திருவுளம் கொண்டார்

அந்த ஆதிபுத்திரரும் அந்த மூவரையும் தூண்டிவிட்டு நீங்களே மும்மூர்த்திகள் மூவரும் ஒன்றாக சந்தியுங்கள் என ஆசையினை தூண்டினார்

அகங்காரமிக்க மூவரும் சாபம் மறந்து ஒன்றாய் கூட விரும்பினர்

அவர்கள் கூடும் நேரம் அவர்களை அழிக்க சிவன் திருவுளம் கொண்டார், உடனே விஸ்வகர்மா, ரதம் ஒன்றை தயாரிக்கத்தான், மேருமலை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பு நாணாகவும் அமர்ந்தது

நான்கு வேதங்கள் நான்கு குதிரைகளாக்கி, விஷ்ணுவினை சக்திமிக்க ஒரே அம்பாக்கி (சக்திமிக்க அம்பால்தான் அவர்களை அழிக்க முடியும்) பிரம்மா சாரதியாக இயக்க திரிபுரங்களை எதிர்க்கப் புறப்பட்டார் சிவபெருமான்.

சிவன் ஏறியபின்னும் தேர் நகரவில்லை காரணம் தேரின் அச்சு யமனும் அக்னியுமாக இருந்தார்கள் அவர்கள் இல்லாமல் சிவன் வெல்வது முடியாது

விநாயகர் இதை கவனித்து தேர் அச்சுக்கு வேறு ஏற்பாடுகளை செய்து இருவரையும் சிவனோடு அனுப்பினார், சிவன் கிளம்ப தயாரானார்

அப்பொழுது சில தேவர்கள் தங்கள் சக்தியின்றி சிவன் வெல்லமுடியாது என கருதினர், அதை அறிந்த சிவன் ஒரு புன்னகை பூத்தார், அந்த புன்னகையிலே மூன்று தேர்களான முப்புரமும் எரிந்து சாம்பலானது, மூன்று அசுரர்களும் சிவன் காலடியில் விழுந்தனர்

முன்பு தன்னைப் பூஜித்து வந்த அந்த மூவரில் இருவரை தன் வாயில் காப்போராகவும், ஒருவரை குடமுழா எனும் முரசை முழுக்குபவராகவும் தமது அருகில் இருக்கும்படி ஆணையிட்டார் சிவன்

இதுதான் சிவன் முப்புரத்தை எரித்த கதை

இந்த புராண சம்பவத்தின் சிவனேதான் இந்த ஆலயத்தில் திரிபுரேஸ்வரராக அமர்ந்திருக்கின்றார், யுகங்களை தாண்டிய காலத்தில் சித்தர்களால் அடையாளம் காட்டபட்டு அமைக்கபட்ட ஆலயம் இது

இது ஒரு காலத்தில் முழுக்க அழிந்து போனது, பின்னாளில் பாண்டிய மன்னன் ஒருவன் இங்கே முகாமிட்டு எதிரிகளை எதிர்க்க சிவனை மன்றாடியபோது வெளிபட்ட ஆலயம் இது

பாண்டியர்கள் சிவபாத சேகரர்கள், தென்காசி பக்கம் அவர்கள் அடிக்கடி சேரர்களுடன் போரிட வேண்டி இருந்தது, சில சிற்றரசுகளின் தொல்லையும் உண்டு

அப்படி ஒருமுறை பாண்டியன் மதுரை ஆலவாயனை தொழுது விட்டு இங்கு வந்து முகாமிட்டபோது பெரும் காற்றின் நடுவே அசரீரியாய் எழுந்த சிவன் “மன்னா, நாம் திரிபுரேஸ்வரராக முப்புரம் எரித்த சிவனாக இங்கு குடிகொண்டுள்ளோம், எமக்கு ஆலயம் எழுப்பி வழிப்டு உன் பகை ஒழியும்” என கூறினார்

அப்படியே அந்த சுயம்பு லிங்கம் மீள கண்டெடுக்கபட்டு இந்த ஆலயம் பாண்டிய மன்னர்களால் ஸ்தாபிக்கபட்டது

இந்த ஆலயம் ஆந்திர மாகாண காளகஸ்திக்கு இணையான தலம், வாயு தலம்.

ஆம்,இங்கு அமைக்கபட்டிருக்கும் பஞ்ச பூத தலங்களில் இது வாயுக்கானது. அதை போல இதர பஞ்ச பூதங்களின் தலமும் அருகில் உண்டு

சங்கரன்கோயில் மண் தலமாகவும், தருகாபுரம் நீர் தலமாகவும், தேவதானம் ஆகாய தலமாகவும், கரிவலம் வந்த நல்லூர் அக்னி தலமாகவும் அமைக்கபட்டிருக்கின்றன‌

இந்த ஆலயத்தின் தத்துவம் புராண அடிப்படையில் திரிபுரம் எரித்த கதையின் லிங்கமாக அக்கால சித்தர்களால் ஸ்தாபிக்கபட்டாலும் இதன் தாத்பரியம் ஆழமானது

இந்துமதம் கண்ணாடி போன்றது எதை நாம் காண்கின்றோமோ அதை காட்டும், அது காமதேனு போன்றது எதை கேட்கின்றோமோ அதை கொடுக்கும் அவ்வளவு நுணுக்கமாக எல்லா வகை காரியங்களையும் தரும்படி அது நிறுவபட்டிருக்கும்

இந்த முப்புர ஆலயங்கள் ஒவ்வொரு தத்துவபடி பல நிறுவபட்டிருக்கும், முப்பிடாரி முப்பந்தல் முன்றுமுகம் அம்மன் என்பதெல்லாம் இந்த தத்துவங்களே

அதாவது மன்னர்கள் காலத்தில் இம்மாதிரி ஆலயங்கள் எல்லையில் காவலுக்கு நிறுத்தபட்டிருக்கும், எதிரி நாட்டு மன்னன் கல்வி, செல்வம், வீரம் என எவ்வகையில் வந்தாலும் , எதிலாவது மிகுந்து வந்து தன்னை அழிக்க வழ்ந்தாலும் தடுக்கும்படி , பகைவரை ஒழிக்கும்படி நிறுத்தியிருப்பார்கள்

இந்த ஆலயங்கள் இப்படியான காவலை கொடுக்கும், அதையே தன்னை வழிபடுவோர்க்கு நிரம்ப கொடுத்து எதிரிகளை விரட்டியடிக்கவும் வழி செய்யும்

ஆன்மீக வாழ்வில் இது முக்குணங்களையும் ஒழித்து ஞானம் தரும்

யோக வாழ்வில் இது இடகலை, பிங்கலை, சூரிய கலை எனும் மூன்று நாடிகளையும் துலங்க வைத்து மூன்றாம் கண்ணை திறக்க வைக்கும்

இப்படி எதனை கேட்கின்றோமோ அதனை தரும் ஆலயம் இது

இது சுயம்புலிங்கமாக உருவான தலம், அக்கால சித்தர்கள் இதனை திரிபுரம் எரித்த சிவனின் பெயரால் ஸ்தாபித்து தந்தார்கள்

இந்த ஆலயத்தின் அன்னை சிவபரிபூரணியம்மாள், அதாவது சிவனின் முழு அருளையும் பெற்றவள் அந்த அன்னை, சிவன் அவளில் பரிபூரணமாக கலந்திருக்கின்றார். அந்த அன்னையினை வேண்டி கேட்கும் எல்லாமும் பரிபூரணமாக கிடைக்கும்

இந்த ஆலயம் மேற்கு நோக்கி அமைந்திருக்கும் அற்புத ஆலயம், தேவர்களின் கர்மா அந்த மூன்று அசுரர்களின் கர்மா என எல்லாமும் தீர்த்த அந்த சிவன், பகைவர்களை ஒடுக்கி தேவர்களை காத்த சிவன் இங்கும் தன்னை நம்பி வரும் ஒவ்வொருவரையும் காக்க , அவர்கள் கர்மம் தீர்த்து காக்க மேற்கு நோக்கி அமர்ந்திருக்கின்றார்

ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. தென்மலை குளம் கோவிலுக்கு முன்பாக அமைந்திருக்கிறது. கோவிலுக்குள் நுழைந்தால் தீர்த்தக் கிணறு உள்ளது. அதைத் தாண்டி உள்ளே சென்றால் சிவபரிபூரணியம்மாள் கருணை முகத்துடன் காட்சி தருகிறார்.

இடது புறத்தில் சிவன் சன்னிதி உள்ளது. நந்தி அதிகார நந்திகளைக் கடந்து உள்ளே சென்றால் அங்கே லிங்க வடிவத்தில் சிவ பெருமான் உள்ளார் லிங்கநாதர் வடிவில் அவர் காட்சி தருகிறார். ஆலய பிரகாரத்தில் கன்னி மூல விநாயகர் முருகன் சனீஸ்வரன் துர்க்கை சண்டிகேஸ்வரர் தட்சிணாமூர்த்தி சண்டிகேஸ்வரி காலபைரவர் நடராஜர், சிவ‌காமியம்மாள் நவக்கிரகம் என பல சன்னதிகள் உண்டு

முருகபெருமான் சன்னதி உண்டு, சனி பகவானுக்கான சன்னதியும் உண்டு

இங்கு தட்சினாமூர்த்தி வித்தியாசமாக அதாவது நான்கு வேதங்களை தாண்டி சப்த ரிஷிகளுக்கும் போதிக்கும் கோலத்தில் அமர்ந்திருப்பார், இது ஈசனே பிரபஞ்சத்தின் அதிபதி என்பதை சொல்லும் காட்சி

இது திரிபுரம் எரித்த சிவன் என்பதால் அந்த முப்புரம் எரிக்கும் போது கடைசியில் கைகொடுத்த விநாயகருக்கு இனி இடம் கொடுக்கபட்டுள்ளது

இங்கு விநாயகர் யானை வாகனத்துடன் காட்சியளிக்கின்றார், இவர் சிவனுக்கு எதிரில் அமர்ந்திருப்பார். அணுக்கிய விநாயகர் என அவருக்கு பெயர்

இந்த ஆலயம் தசவாயுக்களில் வியானன் எனும் வாயுவினை சமபடுத்தும் சக்தி கொண்டது, உடல் முழுக்க எல்லா உறுப்பும் சீராக இயங்கவும், ஸ்பரிச உணர்வு முதல் எல்லா உணர்வும் சரியாக கிடைக்க இந்த வாயு அவசியம்

நாடிகளில் இந்த ஆலயம் திரிநாடிகள் அதாவது இடகலை பிங்கலை சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளையும் சரிபடுத்தும் சக்தி கொண்டது

இந்த ஆலயத்தில் திருமலை சித்தர் என்றொரு மகா சித்தர் தியானம் செய்து சமாதியானார், அவரின் ஜீவசமாதி இப்போதும் உண்டு

இந்த ஆலயம் பாண்டிய மன்னர் காலத்தில் மட்டுமல்ல, பிற்காலத்திலும் மன்னர்களுக்கும் தன்னை வேண்டி வருவோர்க்கும் பகை ஒழிக்கும் ஆலயமாக நின்றது, இப்போதும் பகைவர் ஒழிய வரமருளும் ஸ்தலம் அது

மதுரையினை நாயக்கர் ஆளதொடங்கியபோது சிவகிரி பாளையம் உருவானது, சிவகிரி பாளையமும் அடிக்கடி போருக்கு செல்லவேண்டிய கட்டாயம் உண்டு, அப்படி அவர்கள் போருக்கு தயாரான போது சிவனே பாளையகாரர் கனவில் தோன்றி தான் அங்கு குடிகொண்டிருப்பதையும், தன்னை வழிபட்டு செல்லும்படியும் கூறினார்

அவ்வண்ணமே அந்த சிவனை வழிபட்ட பாளையக்காரர்கள் பெரும் வெற்றி பெற்றார்கள், இன்றும் சிவகிரி பாளையத்து வம்சாவழிகள் அந்த திரிபுரேஸ்வரரை வணங்காமல் எதுவும் செய்வதில்லை

இந்த ஆலயம் வாயுதலம் என ஏன் சொல்லபடுகின்றது என்றால் அங்கு நிலவும் சூட்சுமம் அப்படி

ஆம், மெய்சிலிர்க்க வைக்கும் சாட்சி அது

பொதுவாக கருவறையில் காற்று வீசாது, தீபம் செங்குத்தாக நின்று எரியும் இது இயல்பானது. ஆனால் இங்கு வைக்கபடும் தீபம் காற்றில் ஆடும்

ஆம் அங்கே சிவன் வாயுவாக உண்டு என்பது அதன் சாட்சி, எந்த கோவில் கருவறையிலும் ஆடாத தீபம் இங்கு காற்றே இல்லா சூழலிலும் அசையும், அது சிவனின் மூச்சு

அவ்வளவுக்கு நுணுக்கமான சூட்சும ஆலயம் இது

சில காலங்களுக்கு முன் பக்தர் ஒருவர் அந்த லிங்கத்தை படமாக எடுத்தபோது பச்சை நிற சக்கரத்தில் ஓம் என்ற வார்த்தையுடன் படம் விழுந்தது, இன்றும் அந்த சாட்சி உண்டு

அந்த ஆலயத்தில் எக்காலமும் சிவன் உண்டு, வாயு வடிவில் உண்டு

மூச்சுகோளாறு , நுரையீரல் கோளாறு இன்னும் நாசி எனும் மூக்கு பிரச்சினைகள், சுவாசகுழாய் பிரச்சினைகள் என எல்லாமும் தீர்ந்து போகும் தலம் அது

தென்காசி பக்கம் செல்லும் போது இந்த ஏழாம் வீராட்டாணம் தலத்தை தரிசிக்க மறவாதீர்கள்

அந்த ஆலயம் மூவகை ஆசிகளையும் தரும், மூவகை செல்வமும் தரும், பகை ஒழித்து வாழ்வு தரும், நீங்கள் தவகோலம் கேட்பின் மூவாசைகள், முக்குணம் ஒழித்து யோக நிலை தரும்

இந்த தலம் பிரசாதி தலம் எனும் வகையில் வரும், அதாவது தூய்மையான, பரிசுத்தமான, மகா சக்தியான இறையருள் தலம் எனும் பொருள் அதற்கு உண்டு

அந்த சிவனிடம் எதை கோருவீர்களோ அதை சிவன் தருவார், பெரிய பெரிய தடை தகர்த்து பகை முடித்து நீங்கள் வேண்டிய அத்தனையும் தருவார் அதற்கு சிவகிரி பாளையம் போல் உங்கள் வாரிசுகளே சாட்சியாக நிற்கும் இது சத்தியம்

தசவீராட்டாண தலம் 08 : நரசிங்கநாதர் திருக்கோவில் அங்கமங்கலம்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுக்கா அழ்வார்த்திருநகரி வட்டத்தில் உள்ள அங்கமங்கலம் கிராமத்தில் இந்த நரசிங்க நாதர் ஆலயம் அமைந்துள்ளது அன்னை அருள்மிகு ஆவுடையம்மாள்

இந்த ஆலயத்தின் வரலாறு இரணியன் காலத்தில் இருந்து தொடங்குகின்றது, மலையாள தேசத்தில் எப்படி மகாபலி கதை பிரசித்தியானதோ அப்படி இங்கு இரணியன் வதம் பிரசித்தமானது

எல்லோரும் அறிந்த நரசிம்ம அவதாரம் வழிபட்ட கோவில் இது, இரணியன் வரலாற்றில் இருந்தே இந்த ஆலய தலபுராணம் தொடங்குகின்றது

சத்யுகத்தில் காசியப முனிவருக்கும் அதித்திக்கும் இரணியகசிபு மற்றும் இரணியாக்சன் இரு மகன்கள் பிறந்தனர், ஆகாத நேரத்தில் பிறந்ததால் அசுரகுணம் வாய்த்தது

இரணியாக்சனை வராகமாக வந்து விஷ்ணு அளித்ததால் இரணியன் விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலியவனாக்கிக் கொள்ள பிரம்மாவை நோக்கித் தவமிருந்தான்.

அப்படி அவனுக்கு பிரம்மாவும் காட்சி தந்தார், அவன் அவரிடம் வலுவான வரம் வாங்கினான்

மூன்று உலகமும் அன்று ஆடி கிடந்தது, ஒரு அசுரன் ஒரே ஒரு அசுரன் அப்படி ஆட்டிவைத்து கொண்டிருந்தான், அவனின் கடும் தவம் மூலம் பிரம்மன் அவனுக்கு கொடுத்த வரம் அப்படி. அந்த வரத்தின் பலத்தில் அவன் கடும் ஆட்டம் ஆடினான்

முதுமையாலோ, நோயலோ, மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலோ, நீரிலோ, நிலத்திலோ, அந்தரத்திலோ மரணம் சம்பவிக்கக் கூடாது. எவ்வுலகிலும் தனக்குப் போட்டியாக யாருமே இருக்கக்கூடாது என்ற வரம் அது

மிக நுணுக்கமாக எப்படி எல்லாம் மரணம் வருமோ அந்த வழிகளை எல்லாம் யோசித்து வாங்கியிருந்தான்

இதை வாங்க சொன்னவர் அவன் குரு சுக்கிராச்சாரி

ஈரேழு உலகமும் இரண்யனுக்கு அடங்கின, அவன் தேவர்களை அடக்கினான், பஞ்ச பூதங்களை விளையாட்டு பொருளாக்கினான், எல்லா உயிர்களும் உலகமும் அவனுக்க்கு ஏவல் பொருளாயினை

அக்கிரமத்தின் உச்சியில் அவன் இருந்தபொழுதுதான் அவன் மனைவி கருவுற்றாள், எல்லா அசுரனுக்கும் ஒரு பலஹீனம் இருக்கும் அல்லவா? அப்படி இரண்யனின் பலவீனம் அவன் பிள்ளை பாசம்

எல்லா அரக்கர்களும் சொந்தம், பாசம், என வகையாக சிக்கியிருப்பார்கள் அவர்களின் பலவீனம் அது, இரணிய கசிபுவும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

இதை அறிந்த பரம்பொருள் அட்டகாசமாக விளையாடியது, இரண்ய கசிபு தேவலோகத்துக்கு விளையாட்டு பார்க்க சென்றநேரம் நாரதர் அவன் கர்ப்பமான மனைவி முன் நின்று நாராயணின் பெருமைகளை சொல்லிவிட்டு ஓடிவிட்டார், கர்ப்பத்தில் இருந்த பிரகலாதனுக்கு அது ஆழபதிந்தது.

அவன் பேச தொடங்கியதில் இருந்து நாராயணன் பக்தனானான், வளர வளர அது அதிகரித்தது, குரு நாதர் சுக்கிராசாரியாரிடம் அனுப்பினால் சரியாகும் என மனதை தேற்றினான் இரணியன்

ஆம், அவன் வென்றுவைத்த ஈரேழு உலகுக்கும் அவனல்லவா? வாரிசு. நிச்சயம் இந்த இரணியன் சாகா வரம்பெற்ற, கொல்லவே முடியாத வரம்பெற்றவன் எனினும் பிள்ளைக்கு முடிசூடி பார்க்கும் ஆசையில்லாத தகப்பன் உண்டா?

அந்த பிள்ளை நாராயணன் பெயரை சொன்னால் எப்படி? தன் குல எதிரி மற்றும் ஒரே எதிரி பெயரை சொன்னால் தாங்குமா?

அசுரர்களின் பலவீனமே பிள்ளை பாசம், எல்லா அசுரர்களின் வாழ்வினையும் கவனியுங்கள் குடும்ப பந்தத்தில் சிக்கி கிடப்பார்கள், எல்லா ஆசைகளும் அளவின்றி பெருகும் அவர்களுக்கு குடும்ப பாசம் மிக பெரிதாய் இருக்கும்

சுக்கிராசாரியின் பாசறையும் பிரகலாதனை மாற்றமுடியவில்லை, நிச்சயம் அந்த குரு தன் மகன் மனதை மாற்றிவிடுவார் என நம்பி , சில நாட்கள் கழித்து “மகனே, உன் குரு என்ன சொல்லிதந்தார்?” என இரணியன் கேட்க “நாராயணன் ஒருவனே கடவுள், அவனை வழிபடுவதே பக்தி” என சொன்னான் பிரகலாதன்

சுக்கிராசாரியாரிடம் சீறினான் இரணியன்

“வணங்கதக்கவனும் வழிபட தக்கவனும் இரணியன் ஒருவரே, நாராயணன் நம் குல எதிரி” என்றுதான் சொல்லிகொடுத்தோம், எங்களிடமும் இதைத்தான் சொன்னோம், இளவரசன் என்றும் பாராமல் அடித்தும் பார்த்தோம் திருந்தவில்லை என வருந்தினார் சுக்கிராச்சாரி

எல்லா உலகையும் வென்று எதிரியும், எதிரி இருந்தாலும் கொல்ல்பட முடியாதவனுமாகிய இரணியன் நிம்மதி இழந்தான், அவனின் பாசம் அவனை கொன்று கொண்டிருந்தது

பிரகலாதனை அவனால் கொல்ல முடியவில்லை, அதே நேரம் அவன் நாராயணா என உருகுவதை சகிக்கவும் முடியவில்லை

பாலகன் அல்லவா? அவனுக்கு பாசம் காட்டினான் பலிக்கவில்லை, விளையாட்டு காட்டினான் அதில் வெற்றியில்லை

இனி அடியும் உதையும் மிரட்டலுமே இவனை திருந்த்த இயலும் என கடும் மிரட்டலில் இறங்கினான்

அவன் தங்கை ஹோலியா நெருப்பால் தீண்டமுடியா சக்தி பெற்றிருந்தாள், அவள் கையில் இவனை கொடுத்து தீயில் இறங்க சொன்னான், வீரர்களை அழைத்து பிரகலாதனை மலை உச்சிக்கு கொண்டு சென்று பயமுறுத்த சொன்னான்

படமெடுத்தாடும் நாகத்தின் முன்னால் அவனை வீசிவிடுவதாக மிரட்டினான், ஆனால் பிரகலாதன் மசிவதாக தெரியவில்லை

எவ்வளவு முடியுமோ அவ்வளவும் செய்து பார்த்தான் பிரகலாதன் கொஞ்சமும் நாராயணன் பக்தியில் இருந்து விலகுவதாக இல்லை

ஒரு நாள் அரசவை கூடியிருந்தது , இரணியனின் மந்திரிகளும் ராஜதானிகளும் சேனைகளும் கூடியிருந்தனர், அவனால் கட்டி இழுக்கபட்ட தேவர்களும், நவகிரகங்களும் அவன் முன்னால் குனிந்து நின்றனர்

மூவுலையும் அரசாள்பவனும், எதிரியே இல்லாதவனுமான அவனை எல்லோரும் வாழ்த்தி கொண்டிருந்தனர், அவனை கடவுள் என துதித்து கொண்டிருந்தனர்

ஒரே ஒரு குரல் மட்டும் “ஓம் நமோ நாராயணா..” என சொல்லிகொண்டிருந்தது

இரணியனின் அவையில் அப்படி குரல் ஒலிக்க ஒலிக்க எல்லோரும் அமைதியாயினர், அக்குரல் தனித்து ஒலித்தது, அது பிரகலாதனின் குரல்

ஆத்திரத்தாலும் அவமானத்தாலும் நிலை குலைந்த இரணியன் நிதானம் இழந்தான், பொதுவாக அசுரர்கள் அவமானபட விரும்புவதில்லை, அகங்காரம் அவர்களின் இயல்பு

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் பொங்கினான் இரனியன்

“ஏ கோடாரி காம்பே, தாழம்பூவில் வந்த பூ நாகமே. இங்கே வருவானா உன் நாராயணன், வரச்சொல் அவனை கொன்று, உன் சித்தப்பனை கொன்ற பழிக்கு பழி வாங்குகின்றேன், அவன் என்னை கண்டு ஓடி ஓழியும் பயந்தாங்கொள்ளி” என நகைத்தான் இரணியன்

“இல்லை தந்தையே, அவன் எங்கும் இருப்பான், உன்னையும் என்னையும் அறிவான்” என அமைதியாக சொன்னான் பிரகலாதன்

“ஏ பிரகலாதா அவன் எங்கே இருக்கின்றான், இங்கே ஒளிந்திருக்கின்றானா? வரச்சொல் வருவானா? வந்தால் என்னிடம் பிழைப்பானா? பகைமுடிக்காமல் விடமாட்டேன்” என சீறினான் இரணியன்

“அப்பா, அவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான். அடியவர் அவனை அழைத்தால் உடனே வருவான்” என பிரகலாதன் சொல்ல , எண்ணெய் விட்ட தீயாக எரிந்தான் இரணியன்

“என்னது தூணிலும் இருப்பானா? இதோ இந்த தூணிலும் இருப்பானா?” என தன் மாளிகையின் தூணை காட்டி கேட்டான் இரணியன்

“கொஞ்சமும் தயக்கமின்றி இருப்பான்” என சொன்னான் பிரகலாதன்

அந்த சபை அறிய, எல்லோரும் அறிய உரக்க சொன்னான் இரணியன் “பிரகலதா இத்தோடு என் பொறுமை முடிந்தது, இந்த தூணை உடைப்பேன், உன் நாராயணன் இல்லாவிட்டால் சிங்கம் மானை கொல்வது போல் உன்னை கொல்வேன்”

சொல்லிவிட்டு தூணை நோக்கி சென்றான் இரணியன், அவனின் அந்திம காலம் நெருங்கிற்று

(பிரகலாதன் சொன்ன வார்த்தைகளை கவனியுங்கள் “தூணிலும் துரும்பிலும் இருப்பான் நாராயணன்” ஆம், தூண் என்பது ஒரு கட்டடத்தை தாங்கி நிற்பது, தூண் இல்லா கட்டடம் ஒன்றை காணமுடியுமா? அது சாத்தியமா?

உலகை தூணாக தாங்கி நிற்கின்றான் பரந்தாமன் என அவன் சொன்னது இதுதான்)

தூணை உடைப்பேன் அதில் நாராயணன் இல்லையென்றால் “சிங்கம் போல்” உன்னை கொல்வேன் என இரணியன் பிரகலாதனை மிரட்டியது நாராயணனுக்கு கேட்டது, அவர் முடிவெடுத்தார்

இரணியன் அங்கார உச்சியில் தூணை உடைக்கவும் அந்த அதிசயம் நடந்தது, பேரிரைச்சலில் ஒரு தெய்வீக ஒளி தோன்ற, மாபெரும் அந்த ஒளிசுடரின் நடுவில் இருந்து அந்த மனித உடலும் சிங்க தலையும் கைவிரல் முழுக்க நகங்களுடன் அந்த உருவம் வெளிவந்தது. அதன் கண்களில் அணல் தெறித்தது

சிறிய நரசிம்ம உருவமாக வெளிவந்த அந்த அவதாரம் விஸ்வரூபமெடுத்தது, இரணியனுக்கு சகலமும் விளங்கிற்று

மனித விலங்கு கலவை, கை நிறைய நகம், ஆயுதம் எதுவுமில்லா உருவம் என கண்டவுடனே அவனுக்கு உண்மை விளங்கிற்று, ஆயினும் வாள்வீசினான்

அவன் வாளை ஈக்குச்சியினை தட்டிவிட்டது போல் தட்டிவிட்ட நரசிம்மம் அவனை இழுத்து உயர்த்தி பிடித்து வாசலுக்கு சென்றது,

ஆம், இரணியனுக்கு கிடைத்த வரப்படி அவனை மனிதனும் விலங்கும் கொல்லமுடியாது, பகலிலும் இரவிலும் கொல்லமுடியாது, நிலத்திலும் நீரிலும் அந்தரத்திலும் கொல்லமுடியாது, எந்த வகை ஆயுதத்தாலும் கொல்லமுடியாது, நோயிலும் கொல்லமுடியாது, ரத்தம் சிந்தி அவனை கொல்லமுடியாது, அவன் வீட்டுக்குள்ளும் வெளியிலும் கொல்லமுடியாது

இதனால் மனிதனும் மிருகமும் கலந்த உருவில் இரவும் பகலுமற்ற அந்தி பொழுதில் வீட்டுக்கும் வெளிக்கும் பொதுவான வாசலில், நிலத்துக்கு மேல் தன் தொடையில் வைத்து அவனை ஆயுதமல்லா கரங்களின் கூரிய‌ நகத்தால் கிழித்தெறிந்து ரத்தம் குடித்து கொன்றார்

அந்த மாபெரும் அசுரன் ஒரு விலங்கினை போல செத்து கிடந்தான்

ஆயினும் அந்த நரசிம்ம உருவம் ஆக்ரோஷம் அடங்கவில்லை அது மகா உக்கிரமாக சீறிகொண்டே இருந்தது, எல்லோரும் அருகில் செல்ல அஞ்சினர்

ஆனால் பிரகலாதன் அது நாராயணன் என உறுதியாக நின்றான், அதை நோக்கி மெல்ல சிரித்தான். யாராலும் ஒழிக்க முடியாத இரணியனை ஒழித்தது யாராக இருக்க முடியும்?

நிச்சயம் அந்த தூணில் இருந்து நரசிம்மர் வராவிட்டால் பிரகலாதனை ஒழித்திருப்பான் இரணியன், அவனை காக்க வந்தது யாராக இருக்கும்?

ஆம் நரசிம்மரை கண்டு அஞ்சி எல்லோரும் ஓடி ஒளிய, கொஞ்சமும் பதற்றமின்றி அருகே சென்று அதன் கால்களை கட்டி கொண்டான் பிரகலாதன்

இருவரும் அன்பின் பெருக்கில் பேசினர், அந்த நரசிம்மம் பார்க்க கொடியதாகவும் ரத்தம் பூசிய நிலையில் இருந்தாலும் அதை பகவான் என உணர்ந்து உருக்கமாய் பேசினான் பிரகலாதன்

ஆனாலும் அந்த நரசிம்மத்தின் கோபம் முழுக்க தீரவில்லை, அவர் கோபம் தீரவும் தன் கடமையினை தொடரவும் ஒரு ஆழ்ந்த பூஜை தேவைபட்டது

நரசிம்மமரின் தங்கை அன்னபூரணி அவர் முன் வந்தாள், அவளே ஒரு தீர்த்தம் உருவாக்கி அங்கே சிவலிங்கமும் உருவாக்கி அவரை பூஜை செய்ய சொன்னாள்

அங்கு பூஜை செய்தார் நரசிம்மர், இரணியன் அசுரன் சந்தேகமில்லை ஆனால் அவன் மாபெரும் பக்தன் பிரம்மாவிடம் வரம் எற்ற பக்தன் என்பதால் அவருக்கு தோஷம் ஏற்பட்டது

அந்த தோஷத்தை போக்கி தன் ஆவேசத்தை போக்கி இங்கு தன் அவதாரம் முடித்து அமைதியாக தன் இடம் சென்றார்

அவர் பாவம் போக்கிய தலமே அங்க மங்கலம், அன்னை உருவாக்கிய சிவலிங்கமே நரசிங்க நாதர்

இந்த ஆலயம் கிரியா தலம், அதாவது இந்த லிங்கம் கிரியா லிங்கம் என அழைக்கபடுகின்றது, அதாவது படைப்பு தத்துவம்

இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என அடிப்படை சக்திகள் மூன்று, இந்த கிரியா சக்தி என்பது படைப்பு சக்தி தன் கர்மாவினை செய்யவைக்கும் சக்தி, ஒருவன் தன் கர்மாவினை முழுக்க உணர்ந்து அதை ஏற்றுகொண்டு திறம்பட செய்யும் சக்தி

பிரம்மா படைப்பின் கடவுள், அவர் இரணியனுக்கு வெட்டியாக அல்லது அநீதியாக வரம் அருளவில்லை, அவன் தன் கர்மாவினை சரியாக செய்யட்டும் நல்ல விஷயங்களை படைக்கட்டும் என்றே வரம்ருளினார்

ஆனால் அவன் அந்த வரத்தை சரியாக பயன்படுத்தாமல் சென்றபோது அழிவு வந்தது, பகவானே அவனே அழித்துபோட்டார்

அவனை அழித்த நரசிம்மம் தன் இயல்புபடி ஆவேசத்தோடு ஆடியபோது இந்த கிரியா லிங்கமே அதற்கு சாந்தி கொடுத்தது

நரசிம்மம் தன் கர்மத்தை சரியாக செய்தது எனும் அந்த சாந்தத்தை கொடுத்து நிம்மதியும் கொடுத்தது

இந்த ஆலயம் இது, கேரளாவின் கடுக்கரை கோவில் மகாபலிக்கு என்றால் இரணியன் வதை நடந்ததை சொல்லும் ஆலயம் இது

இங்கு சிவன் நரசிங்க நாதராக மேற்கு நோக்கி வீற்றிருக்கின்றார், அன்னை ஆவுடை நாயகியாக கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கின்றாள்

இந்த ஆலயத்தின் அருகே நரசிம்ம அவதாரமெடுத்த விஷ்ணு நரசிம்ம சாஸ்தா ஆலயமாக தனித்து அமர்ந்திருக்கின்றார்

இந்த ஆலயம் நரசிம்ம நாதர் ஆலயம் , நரசிம்மர் வழிபட்ட சிவாலயம் என தனித்து நிற்கின்றது

இது காசி சிவாலயம் போல பல சம்பிரதாயங்களை கொண்டது, நரசிம்ம ஜெயந்தி அன்று காசி ஆலயம் சிறப்பிக்கபடுவது போல இங்கும் பல சிறப்பு வழிபாடுகள் உண்டு

இந்த ஆலயம் நாகன் எனும் தசவாயுவுடன் தொடர்புடையது, எது உடலுக்கு ஆபத்தோ அதை வெளியே தள்ளுவது அல்லது உள்ளூர அழித்துபோடுவது இந்த வாயுவின் செயல்

இங்கு வழிபட்டால் உடலிலும் மனதிலும் ஆகாதன ஒவ்வாதன எல்லாம் அகலும், ஆபத்தான விஷயமெல்லாம் வெளியேற்பட்டு உடலும் மனமும் சீராகும்

நாடிகளில் இது கூர்ம நாடி சம்பந்தமானது

இந்த தலத்தின் தாத்பரியம் மிக மிக ஆழமானது, நுணுக்கமானது

அதாவது ஒவ்வொரு மனிதன் மனமும் தெய்வநிலையும் மிருகநிலையும் கலந்தது, மானிட மனம் இப்படி விலங்கு நிலைக்கும் தெய்வநிலைக்கும் இடையே போராடும் குணம் கொண்டது

அம்மனம் விலங்கு நிலைக்கு சென்றால் அவன் பெரும் பாவியாகின்றான், தெய்வ நிலைக்கு சென்றால் அவன் யோகியாகின்றான் முக்தி நோக்கி செல்கின்றான்

இந்த ஆலயம் ஒருவனின் மிருக குணத்தை அழித்து அவனுக்குள் இருக்கும் தெய்வநிலையினை உயர்த்தி தரும் ஆலயமிது

ஒருவன் தன் கர்மத்தை நல்லதாக செய்தல் அவசியம், தெய்வத்தை நோக்கி செல்லும்படி புண்ணிய கர்மாவாக செய்தல் அவசியம்

அந்த வரத்தை தரும் அற்புதமான ஆலயம் இது, இங்கு வழிபட்டால் மனதின் மிருக நிலை அகலும் தீய எண்ணம் மாய ஆசைகள் அகலும், மனம் தெய்வத்தை நோக்கி மேலானதை தேடும்

அந்நிலையில் ஒருவன் செய்வதெல்லாம் நல்ல கர்மாவாக அமையும், அதை தரும் அற்புதமான ஆலயம் இது

இந்த ஆலயத்தில் வழிபட்டால் அங்கம் நலமாகும் வாழ்வு மங்கலமாகும், அதனாலே இது அங்க மங்கலமாயிற்று

கிரியா என்றால் உயிர்சக்தி, ஆதார சக்தி. அந்த சக்தியினை இந்த ஆலயம் மேம்படுத்தி தரும், நலல்ன எல்லாம் தரும்

இந்த சிவன் நல்ல கர்மாவினை செய்ய கெட்டதை அழித்து தருவார், அந்த நரசிம்ம சாஸ்தா எல்லா வகை அருளையும் தருவார், நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் , நல்ல கர்மா நல்ல சிந்தனையுடன் வந்து சேரும் எல்லோருக்கும் வழிகாட்டும், எல்லோருக்கும் பயனடையும் வெகு உயர்ந்த வாழ்வினை வாழ்ந்து தெய்வமாய் வழிகாட்டி நிற்பீர்கள் இது சத்தியம்

தச வீரட்டானம் 09 : மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில் காயல்பட்டினம்

தசவீரட்டானம் தலங்களில் ஒன்பதாம் தலம் இந்த காயல்பட்டினம் மெய்கண்டேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் பற்றி அறியுமுன் காயல்பட்டணம் பற்றி அறிதல் அவசியம்.

தாமிரபரணி இப்போது ஓடிக்கொண்டிருப்பது போல் அன்று ஓடவில்லை. அது முற்காலத்தில் அது கொற்கையினை ஒட்டி ஓடி கடலில் கலந்தது. பின்னாளைய கடல்கோள் மாறுபாட்டால் அதன் நீரோட்டம் மாறிவிட்டது.

தொடக்கத்தில் அது காயல்பட்டணம் அருகேதான் கடலில் கலந்தது. அப்போதுதான் அகத்திய முனிவர் இந்த ஆலயத்தை ஸ்தாபித்தார். மெய்கண்டேஸ்வரராக ஸ்தாபித்தார்.

தாமிரபரணியின் தொடக்கம் பாபநாசத்தில் இருந்து அதன் முடிவு வரை அகத்தியர் பெரும் சிவாலயங்களை நிறுவினார். தாமிரபரணியின் மகத்தான சக்தி அப்படியானது.

அப்படி கடைசியாக அமைக்கப்பட்டதுதான் இந்த மெய்கண்டேஸ்வரர் ஆலயம்.

காயல்பட்டணம் என்பது குலசேகர பட்டணம் வீரபாண்டியன் பட்டணம் போன்ற பாண்டியர் கால நகரங்களின் தொடர்ச்சியாக வந்த வணிகத் துறைமுக பகுதியாக வந்தபோது இந்த லிங்கமும் ஆலயமும் பிரசித்தியானது.

இந்த ஆலயத்தின் வரலாறு துர்வாச முனிவரிடம் இருந்து துவங்குகின்றது. கடுமையான தோல் சரும வியாதியினால் பாதிக்கப்பட்ட முனிவர் தன் பிணி தீர இங்கு வேண்டிக்கொண்டார். அகத்தியரின் ஆலோசனைப் பேரில் வேண்டிக் கொண்டார்

துர்வாசர் முன்கோபி, அடிக்கடி சாபங்களை இடுவது அவர் வழக்கம். அவரின் கர்மவினை கூடி அது அவரின் தவத்தை மீறிப் பிணியாய் வந்தது.

உண்மை எனும் மெய்பொருளை அறியாமல் அவர் அடிக்கடி தானே பெரியவர் எனச் சாபமிட்டதால் இந்நிலை வந்தது. அப்படியான நிலையில்தான் இங்கு அவர் சிவன் அருளில் குணமானார்.

அவரின் மெய் எனும் உடலை குணமாக்கி அப்படியே மெய்பொருளாவது சிவமே, சிவமே எக்காலமும் மெய்பொருள் தன் தவமோ வலிமையோ அல்ல என அவர் உண்மை உணரவைத்ததால் அந்தச் சிவன் மெய்கண்டேஸ்வரர் என்றானார்.

இந்த ஆலயம் முன்பு மிகப் பிரமாண்டமாய் இருந்தது. அதன் சொத்துக்களும் வருமானமும் பாண்டியர் காலத்தில் மிக மிக பெரிதாக இருந்தது.

பாண்டிய மன்னர்கள் இந்த ஆலயத்தை மிக மிக பெரிதாகக் கொண்டாடினார்கள். மூன்று பிரகாரம் கொண்டு திருசெந்தூர் கோவில் போல் அது பெரிதாக இயங்கிற்று.

தாமிரபரணி திசை மாறிச் சென்றாலும் அதன் கிளை இப்பக்கம் வந்தது. அதன் பின்னும் இந்த நகரமும் ஆலயமும் கொண்டாடபட்டேதான் இருந்தது.

13 ஆம் நூற்றாண்டில் மதுரையில் பாண்டிய வம்சம் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் தலைமையில் வலுவாக இருந்தவரை இந்த ஆலயம் சீரும் சிறப்புமாக இருந்தது.

மதுரையில் ஆப்கானிய சுல்தான்கள் ஆளும் போது இந்த பிரதேசமெல்லாம் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது முதல் சோதனை தொடங்கிற்று.

சுல்தான்களின் 40 ஆண்டுகால ஆட்சியில் பெரிய அழிவுகளும் மாற்றுமத குடியேற்றங்களும் இப்பக்கம் வந்தன.‌ பின் சுல்தான்கள் நாயக்க அரசுகளால் ஒழிக்கப்பட்டாலும் அவர்களிடம் கடல்படை இல்லை என்பதால் இந்த பக்கம் மாற்றுமத ஆதிக்கம் நீடித்தது.

பின் 16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர், டச்சுக்காரர் என வந்து பெரும் ஆக்கிரமிப்பு அழிவுகளைச் செய்தார்கள். திருசெந்தூர் ஆலயமே அப்போது பாழ் அடைந்து கிடந்தது.

அப்படியான காலக்கட்டங்களில் இந்த காயல்பட்டண மெய்கண்டேஸ்வரர் ஆலயமும் அழிய ஆரம்பித்தது.

40 ஏக்கர் கோவில், அதனைச் சுற்றி 200 ஏக்கர் நிலம் இன்னும் அதன் எதிரே ஒரு பெருமாள் கோவில் இடையில் அக்ரஹாரம் என பிரமாண்டமாக இருந்த இந்த ஆலயம் பின் மாற்றுமத காலத்தில் சிக்கி சீரழிந்து அடையாளமே இல்லாமல் போயிற்று.

சில ஆண்டுகளுக்கு முன்புதான் சில பக்தர்கள் ஒன்று கூடி அதனை ஓரளவு மீட்டு கூரையிட்டு வழிபாடுகளைத் துவக்கினார்கள். அதுவும் அவ்வப்போது நடக்கின்றது.

இப்போதைக்கு ஆலயம் அழியாமல் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றதே அன்றி முழுமையான வரலாறும் வரவில்லை, பூஜைகளுக்கும் பெரிதாக வழியில்லை. அறநிலையத்துறை ஒருகால பூஜைக்குக் கூட இங்கு ஒத்துழைக்கவில்லை.

ஆனால், இந்தச் சிவன் சக்தியுள்ளவர். கேட்ட வரத்தை கொடுப்பவர் என்பதால் மெல்ல மெல்ல அவரின் புகழ் பரவி பக்தர்களின் ஒத்துழைப்பால் இன்று அழியாமல் காக்கப்படுகின்றது.

இந்த ஆலயம் துலங்கிவிடாதபடி மர்ம சக்திகளின் நடவடிக்கைகளும் உண்டு. அதைத் தாண்டி ஆலயம் எழுகின்றது.

இது மிகப் புராதனமான ஆலயம். அகழ்வாராய்ச்சி தொல்லியல் துறையெல்லாம் ஆங்காங்கே அப்பக்கம் ஆய்வு செய்யும் போது இப்பக்கமும் வருவார்கள். இங்கே பிரமாண்ட ஆலயம் இருந்தது என்பதோடு முடித்தும் கொள்வார்கள்.

இந்த ஆலயம் எப்படியெல்லாம் திசைமாற்றப்பட்டது என்றால் அந்த ஆலய தேவியின் நிலையே சாட்சி.

இந்த ஆலயத்தின் நாதர் மெய்கண்டேஸ்வரர், அன்னை மெய்ஞானவல்லி.

அவள் முத்தாரம்மன் போல அப்பக்கம் முன்பு விசேஷம். அவள் பெயரில் மெஞ்ஞானபுரம் எனும் ஊர்களெல்லாம் இருந்தன. இன்று அவை முழு கிறிஸ்தவ ஊராக மாற்றப்பட்டிருக்கின்றது.

இந்த அன்னையின் சிலை கூட அந்த ஆலயத்தில் இல்லை. அவள் பெயரின் அடையாளமோ வேளாங்கண்ணி போல் திசைமாற்றப்பட்டுவிட்டது.

சுமார் 400 வருடங்கள் கிழக்கு கடற்கரைகள் அந்நியர்வசம் சிக்கிய சீரழிவின் சாட்சிகள் இவை.

இதையெல்லாம் மீறி இந்த ஆலயம் துலங்கி நிற்பதும் தன்னை அழிந்த நிலையில் இருந்து மீட்டெடுத்திருப்பதும் சிவனின் அருள்.

இந்தப் பகுதியில் தாமிரபரணி திசைமாறியதும் அருகில் இருக்கும் ஆத்தூரில் இதே ஆலயப் பிரதி ஒன்று அக்காலத்தில் உருவானது. அது சோமநாதர் ஆலயம்.

இந்தத் தத்துவம் ஆழமானது.

பொதுவாக கடற்கரையோர சிவாலயங்கள் சோமநாதர் பெயரைத் தாங்கி நிற்கும், அது சந்திரன் ஆதிக்கம் கொண்டிருக்கும்.

சந்திரன் மனம் சம்பந்தபட்ட கிரஹம், சோமசுந்தரர் சோமநாதர் என்பதெல்லாம் சந்திரனுடன் கூடிய சிவதலங்கள். அங்கு வழிபட்டால் மன அமைதி கிடைக்கும், மன சிக்கல்கள் தீரும், மனோபலமும் நலமும் அதிகரிக்கும்.

கடற்கரையோர சிவாலயங்களின் தத்துவம் இது. சோமநாதர் என எழுந்திருக்கும் சிவனின் தனித்துவம் இது.

இங்கு மனம் சம்பந்தமான எல்லா சிக்கலும் தீரும். சந்திரனால் உள்ள ஜாதக குறைகள் சரியாகும்.

இங்கு துர்வாசமுனி சருமநோய் தீர்ந்தது என்பதும் கடற்கரை மருத்துவம். கடலோரம் எப்போதும் உப்புக்காற்று வீசும். அந்தக் காற்று சருமநோய்களை அகற்றும். இந்த ஆலயத்தில் அந்த அற்புதம் சிவனருளால் கூடுதலாக நடக்கின்றது.

இந்தத் தலம் சம்பத் தலம் எனக் கொண்டாடப்படும். சம்பத் என்றால் வளமை, செல்வாக்கு, பெருவாழ்வு, செல்வம், அறிவு என எல்லாம் கலந்த பெரும் நிலை.

இந்த மெய்கண்டேஸ்வரர் அதனை அருள்வார். இது தசவாயுவில் வியானன் சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்க்கும். தொடு உணர்வு ஸ்பரிசம் என எல்லாமும் கட்டுபடுத்துவது இந்த வாயுதான்.

நாடிகளில் இது சங்கினி நாடியினை ஸ்திரப்படுத்தும்.

இந்த ஆலயம் சக்தி வாய்ந்தது. சுமார் 700 ஆண்டுகள் போராட்டத்திலும் மீண்டு எழுந்து தன்னை நிறுத்திக் கொண்ட ஆலயம். ஒருமுறை வழிபட்டால் மீண்டும் மீண்டும் உங்களை இழுக்கும் ஆலயம்.

இங்கு ஒரு சித்தர் வலுவாக உண்டு அவர் துர்வாசமுனியா அகத்தியர் வழியா என்பது இன்னும் அறியபடவில்லை அந்த சித்தர்தான் அவரின் சூட்சும காவல்தான் இக்கோவில் முழுக்க அழியாமல் நிற்கின்றது

இன்று அது துலங்கி நிற்க அந்த சித்தர்தான் காரணம், அந்த சித்தர் ஆறு அடி நாகமாக அங்கு உண்டு, இப்போதும் சிவனை வழிபட்டு செல்லும் நாகமாக அங்கு உண்டு

அந்த சித்தரின் அருளும் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்

மேற்கு நோக்கி வீற்றிருக்கும் இந்தச் சிவனே துர்வாசரின் கர்மவினை மட்டுமல்ல தன்னை நாடிவரும் ஒவ்வொருவர் கர்மவினையும் அகற்றுகின்றார். நல்வாழ்வு தருகின்றார்.

இந்த ஆலயம் வழிபாட்டு நேரம் தவிர இதர நேரம் பூட்டியிருக்கும். இதனால் இந்த ஆலயத்தை தரிசிக்க விரும்புவோர் ரமேஷ் ஐயர் என்பவரை 9442306662 எனும் எண்ணில், முத்து செல்வம் என்பவரை 9843999869 எனும் எண்ணில் தொடர்பு கொண்டுவிட்டு சென்றால் எளிதில் தரிசிக்கலாம்.

திருசெந்தூர் செல்லும் போது, குலசேகரபட்டணம் பக்கம் செல்லும் போது இந்த மெய்கண்டேஸ்வரரை தரிசிக்க மறவாதீர்கள்.

தச வீரட்டானம் ஆலயங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு போராட்டத்தில் மனதிற்கும் உடலுக்கும் வெற்றியினைத் தருபவை, நலம் தருபவை. நிம்மதியும் தெளிவும் தருபவை.

இந்த ஆலயம் சருமம் சம்பந்தபட்ட மேனி சம்பந்தபட்ட சிக்கல்களை உடலாலும், மனம் சம்பந்தபட்ட சிக்கல்களை சூட்சுமமாகவும் தீர்க்கும் சக்தி கொண்டது. வேண்டிய வரத்தை தரக் கூடிய சக்திமிக்க தலம்.

ஒருமுறை இந்த மெய்கண்டேஸ்வரரை தரிசித்துப் பாருங்கள். அவரே உங்களை மீட்டெடுத்து தன் ஆலயத்தின் வழமையான பக்தர்களாக சாட்சிகளாக மாற்றிக்கொள்வார். இது சத்தியம்.

தச வீரட்டானம் 10 : திற்பரப்பு மகாதேவர் ஆலயம்.

தச வீரட்டானத் தலங்களில் கடைசி தலமான பத்தாம் ஆலயம் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் அருவிக் கரையோரம் அமைந்திருக்கும் மகாதேவர் ஆலயம்.

மலையாளத் தேசத்தில் சிவனுக்கு மகாதேவர் என்பதே பெயர். எல்லாத் தேவர்களுக்கும் மேலான மகாதேவன் என்பதால் இந்த ஆலயமும் மகாதேவர் ஆலயமாயிற்று.

இந்தத் தலவரலாறு தட்சன் யாகம் முடிந்ததில் இருந்து துவங்குகின்றது.

சிவனை மதியாமல் தட்சன் யாகம் செய்து அந்த யாகத்தினால் அவமதிக்கப்பட்ட தாட்சாயினி தேவி நெருப்பில் வீழ்ந்துவிட, கடும் கோபம் கொண்ட சிவன் தன் அம்சமான வீரபத்திரரையும், சக்தி அம்சமான காளியினையும் அனுப்பி அந்த யாகத்தை அழித்துப்போட்டார்.

பெரும் ஆவேசத்தில் அந்த காளியும் வீரபத்திரரும் நின்று தட்சனின் யாக சாலையில் அகதளம் செய்து அழித்துப் போட்டடார்கள். ஆனாலும், அவர்களுக்கு அமைதி கிடைக்கவில்லை.

தங்களின் எல்லையற்ற ஆத்திரமும் கோபமும் தீர, தங்களுக்கு முழு அமைதி கிடைக்க இந்த திற்பரப்பு தலத்துக்கு வந்து தவமிருந்து மனம் குளிர்ந்து வரம்பெற்றார்கள்.

அதன்படி வீரபத்திரர் சிவனுடன் ஐக்கியமாகிவிட்டார், காளி அருகிருக்கும் குகையில் தவம் செய்ய சென்றுவிட்டார். இன்றும் அவர் அங்கே தவக்கோலத்தில் உண்டு.

அந்த காளியும், வீரபத்திரனும் வழிபட்டதில் இருந்து இந்த ஆலய வரலாறு தொன்றுதொட்டு வருகின்றது. அகத்திய முனிவர் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று.

இதன் பழைய பெயர் விசால புரம். பின்னாளில் விரிந்த இடம் என்பது பரந்த பரப்பு என்றும் திற்பரப்பு என்றும் மருவிற்று.

இந்த ஆலயம் கோதை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தாமிரபரணி உருவாகும் இடத்திலிருந்து அதன் கிளையாறாக ஓடும் கோதை ஆறே திற்பரப்பு நீர்வீழ்ச்சியாக விழுகின்றது. ஆக, இதுவும் தாமிரபரணி நதிக்கரை ஆலயத்தில் ஒன்றாகவே கருதப்படுகின்றது.

இங்கு மூலவர் வீரபத்திரர் அவர் சிவனோடு கலந்ததால் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். அவர் ‘ஜடாதரர்’, ‘மகாதேவர்’ என்றும் அழைக்கப்படுவார்.

மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் இந்த சிவலிங்கத்தின் நந்தியானது மூலவருக்கு நேர் எதிரில் இல்லாமல், சற்றே விலகி காணப்படும்.

அதாவது, வீரபத்திரரின் ஆவேசம் தாளாமல் அவர் தள்ளி நகர்ந்திருக்கின்றார் என்கின்றது தலபுராணம்.

கோயிலின் மேற்கு வாசலில் மணி மண்டபம் காணப்படுகிறது. இந்தத் தென்முனையில் சாஸ்தா வழிபாடு மிகத் தொன்மையானது என்பதால் அந்தச் சாஸ்தா மேற்கு பிரகாரத்தில் வீற்றிருக்கின்றார்.

இங்கே பூரணை- புஷ்கலை ஆகிய தேவியருடன் சாஸ்தா சுகாசனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

மகாதேவர் ஆலயம் என்றாலும் கிருஷ்ணருக்கும் சந்நிதி உண்டு. கோவிலின் உள்ளே இருக்கும் கிருஷ்ணன் கோவில் பிரகாரத்தில் நாகர் சிற்பங்கள், கிருஷ்ணன் கோவில், முருகன் கோவில், மணமேடை ஆகியவை உள்ளன.

மூலவர் கிருஷ்ணன் கையில் வெண்ணையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவரது சந்நிதிக்கு எதிரில் முருகன் கோவில் உள்ளது.

கிழக்கு வெளி பிரகாரத்தின் வாசலில் எட்டுத் தூண்களைக் கொண்ட மண்டபம் உள்ளது. தெற்குப் பிரகாரத்தில் ஆஞ்சநேயருக்கு பரிவாரக் கோவில் உள்ளது.

இது மேற்கு நோக்கிய ஆலயம் என்பதால் கிழக்கு வாசல் மூடபட்டுள்ளது, மேற்கு வாசலை மக்கள் பயன்படுத்த இந்த ஏற்பாடு.

சிற்பக்கலை வேலைப்பாடுகள் நிறைந்த இந்த கோவில் ஒரு கலைப் பொக்கிஷமாகும். அற்புதமான சிற்பங்கள் கொண்ட இந்த ஆலயம் சேரமன்னர்களால் பலநூறு வருடத்துக்கு முன் கட்டப்பட்டது. பாண்டிய கால கல்வெட்டுக்களும் அங்கு உண்டு.

இங்கு மூவாயிரத்துக்கு மேற்பட்ட சுற்று விளக்குகள் உண்டு, இந்த சுற்று விளக்குகளை ஏற்றி என்ன வேண்டினாலும் கிடைக்கும். சாட்சிகள் ஏராளம்.

இந்தக் கோவில் மன்னர்கள் காலத்தில் பெரும் செல்வமிக்கதாய் இருந்தது. முழு தங்கத்தினாலான சிலைகள், நகைகள் என நிறைய இருந்தது, தங்கச் சிலை மட்டும் ஏழு இருந்தது.

முகமதியர் படையெடுப்பு காலங்களில் இவை எல்லாம் பாதுகாப்பு கருதி திருவனந்தபுரம் பக்கம் கொண்டு செல்லப்பட்டன என்பது வரலாறு.

இன்றும் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் ஏகப்பட்டது உண்டு, அது பற்றிய தகவல்கள் நிரம்ப உண்டு.

அந்த அளவு மன்னர்களால் கொண்டாடப்பட்ட பெரும் ஆலயம் இது.

பொதுவாக அருவிக்கரையில் குகைகளின் அருகில் அமர்ந்திருக்கும் ஆலயங்கள் தேவர்கள் வழிபட்ட பகுதிகளாக இருக்கும். தேவர்களும் பெரும் சித்தர்களும் மானிட சஞ்சாரமில்லா இடங்களிலே வழிபாடுகளைச் செய்வார்கள்.

அப்படி இந்த ஆலயமும் அருகிருக்கும் குகையும் மிகச் சூட்சுமமானவை. அந்தக் குகை மிக மிக சூட்சுமமானது. அங்கு தேவர்களின் சஞ்சாரம் உண்டு.

அக்குகையின் வாயில் மிக ஒடுக்கமாக இப்போது பாயும் அருவியின் பின்னால் உண்டு.

திற்பரப்பு அருவியின் தொடக்கம் இது அல்ல, திற்பரப்பு அருவி மேற்கு நோக்கித்தான் சென்றது. பின்னாளில்தான் இப்படி அணைகட்டி சுற்றுலாவுக்காகத் திருப்பினார்கள்.

அப்போது இந்த குகையின் வாசல் அருவியால் மூடபட்டுவிட்டது.

பிரிட்டிஷ் செய்த கொடுமை இது. இந்து ஆலயங்களை எப்படியெல்லாம் குழப்ப முடியுமோ, எப்படி எல்லாம் அதன் வரலாற்றைச் சிதைக்க முடியுமோ அத்தனையும் செய்வார்கள்.

இதனால் இக்குகை பலருக்கு தெரிவதில்லை. திற்பரப்பில் நீரோட்டம் வற்றும் காலம் இதனைக் காண முடியும். இந்தக் குகையினுள்ளே காளி தவமிருப்பதால் காளியின் புடைப்பு சிற்பம் உண்டு.

இந்தக் காளிகுகை கோவிலாக இருந்ததன் அடையாளமாக அதன் முன்பு மண்டபம் உண்டு. இப்போது மாற்றிவிடப்பட்ட அருவி இந்த குகையினை மறைத்து மண்டபத்தையும் பிரிக்கின்றது.

சுற்றுலா மேம்பாடு எனும் வகையில் மிக மிக புராதனமான குகைக்கோவில் மறைக்கப்பட்ட கொடுமை திற்பரப்பில்தான் நடந்தது.

எனினும், அன்றே கோவிலையும் காளி குகையினையும் இணைக்கும் சுரங்க பாதை இருந்திருகின்றது. இன்று அது வெளிதெரியாவிட்டாலும் தரைக்கு மேல் இந்தப் பாதையினைக் குறிக்கும் வகையில் ஒரு நாகம் தவளையினைப் பிடிப்பது போல ஒரு உருவம் உண்டு.

அந்தக் குகை சூட்சுமமானது, பெரும் சக்தி கொண்டது. காளியின் முழு அருளும் நிறைந்தது என்றாலும் இப்போது அங்கு வழிபாடு இல்லை.

அந்தக் குகைகோவில் மீண்டும் மீளவேண்டும் என்பதுதான் பக்தர்களின் எதிர்பார்ப்பு, இது ஒருநாள் நிச்சயம் நடக்கும்.

இது பத்ரகாளி ஆலயம், குகைக்குள் 350 அடி நீளத்தில் அந்த ஆலயம் அமைந்துள்ளது என்பது ஆய்வில் தெரியவந்தது. உள்ளே மூன்று கட்டமாக சந்நிதிகள் உண்டு, 600 அடி அகலம் கொண்ட குகை இது.

காளியோடு அன்னை பார்வதி அங்கு ஆலயம் கொண்டிருகின்றாள்.

சிவனுக்கு இந்த மகாதேவர் ஆலயம் அங்கே வீரபத்திரரை ஆற்றுப்படுத்தி தன்னோடு வைத்திருக்கின்றார். அந்த குகைக்கோவில் பார்வதிக்கானது. அங்குக் காளியினை அவர் ஆற்றுப்படுத்தி தன்னோடு சேர்த்திருக்கின்றார்.

இவை ஒரே ஆலயங்கள். ஆனால், பிரிட்டிஷார் காலத்து சதியால் சிவாலயம் மட்டும் இருகின்றது பார்வதி தேவி குடியிருக்கும் குகை இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை, காலம் அதைச் செய்யும்.

இது பாஞ்சாக்ர தலம். அதாவது, முழுமை அடைந்து நிறைவினைத் தரும் தலம்.

காளிக்கும் வீரபத்திரருக்கும் சிவன் அமைதி கொடுத்தார் என்பது சாதாரண விஷயம் அல்ல. வீரபத்திரரும் காளியும் எதற்கு அனுப்பட்டார்களோ அதைச் செய்தார்கள். அதன் பின் அவர்கள் ஆவேசம் தணியாமல் அலைபாய்ந்தார்கள், தன்னிலை மறந்தார்கள்.

இந்த ஆலயம் இந்த மேற்குபார்த்த ஆலயம் அவர்களுக்கு அவர்கள் கர்மவினை தீர்த்து அவர்களை யார் என அவர்களுக்கே காட்டி அமைதி கொள்ள வைத்தது.

ஆம். இந்தத் தலம் இங்கு வந்து வழிபடுவோர்க்கு அவர்கள் யார் என்பதை காட்டித்தரும். முன்வினைகளை அகற்றி அவர்களின் குழப்பத்தை அகற்றி தெளிவினைக் கொடுத்து அவர்கள் யார் என்பதையும் எதற்கு வந்தார்கள் என்பதையும் அடுத்து செய்யவேண்டியது என்ன என்பதையும் காட்டி தரும் ஆலயம்.

இந்தப் பிறப்பில் ஏதேதோ செய்து அடுத்து என்ன எனத் தெரியாமல் குழம்பித் திரியும் ஆத்மா இங்கே தன்னிலை உணரும்.

தன்னை அறிதல் எனும் பெரும் ஞானத்தைத் தரும் ஆலயம் இது.

வீரட்டானம் என்பது ஒவ்வொரு போராட்டத்திலும் வெற்றிக் கொடுத்த தலம். இங்கே வீரபத்திரரும் காளியும் தட்சனை வென்றார்கள். ஆனால், தங்களுக்குள்ளான போராட்டத்தில் தவித்தார்கள்.

தட்சனை அழித்த அவர்களால் தங்களின் கோபத்தை வெல்லமுடியவில்லை, ஆத்திர வேகத்தை வெல்லமுடியவில்லை, தங்கள் உணர்வினை வெல்லமுடியவில்லை, தங்கள் மனதிடம் தோற்று சிவனைச் சரணடைந்தார்கள்.

சிவன் அவர்களை அரவணைத்து அவர்களின் கர்மவினை நீக்கி வேண்டாதன அகற்றி அவர்கள் போராட்டத்தை வெற்றியாக்கிக்கொடுத்தார்.

ஒவ்வொருவரும் நாம் யார் என நம்முடன் நம் மன உணர்வுகளுடன் ஆசை மாயைகளுடன் போராடிக் கொண்டிருக்கின்றோம். இந்தத் தலம் அந்தப் போராட்டத்தை அகற்றி நம்மை நமக்கே யாரென காட்டி பெரும் அமைதியும் சாந்தமும் தரும், பெரும் வளமும் நிம்மதியும் தரும்.

இது தசவாயுக்களில் முக்கியமான தனஞ்செயன் எனும் வாயுக்கான தலம். தசவாயுக்களில் இது முக்கியமானது. ஒருவனின் உயிர்காற்றாக முக்கியமான வாயு இது, அது சீர்படின் ஆயுள் நீளும் சிந்தனைத் தெளியும்.

இந்த ஆலயம் ஒருவனை முழுமைபடுத்தும்; அவனின் குறைகளை அகற்றி அவனின் கர்மவினை அகற்றி அவனை யார் எனப் புரியவைத்து பெரும் ஞானத்தை கொடுத்துச் சாந்தப்படுத்தும்.

திற்பரப்பு என்பது சுற்றுலா தலம் அல்ல. குற்றாலீஸ்வரர் ஆலயம் குற்றாலம் எனச் சுற்றுலாதலமாக மாற்றி வஞ்சிக்கப்பட்டிருப்பது போல திற்பரப்பு மகாதேவர் ஆலயமும் வெறும் சுற்றுலாதலமாக மடைமாற்றபட்டுள்ளது.

அப்படி ஒரு காலமும் அல்ல. இது மகாதேவர் தலம், தச வீரட்டானத்தில் மேற்குப் பார்த்து சிவன் அமர்ந்திருக்கும் பத்தாம் தலம்.

சிவராத்திரி அன்று சிவாலய ஓட்டம் நடக்கும் ஆலயங்களில் இது மூன்றாம் ஆலயம்.

கன்னியாகுமரி பக்கம் செல்லும் போது இந்தச் சிவாலயத்தைத் தேடி வணங்க மறவாதீர்கள். இந்தச் சிவன் உங்களை யாரென்று, உங்கள் பலம் என்னவென்று, நீங்கள் எதற்கு வந்தீர்கள், என்ன செய்கின்றீர்கள், அடுத்து என்ன செய்யவேண்டும் என எல்லாம் உணர்த்தி பின் தன்னோடு சேர்த்தும் கொள்வார். இது சத்தியம்.