திருமுருகாற்றுப்படை முகவுரை

முருகபெருமான் வழிபாட்டில் மிக மிக பழமையான நூல் திருமுருகாற்றுபடை.

May be an image of ‎1 person, temple and ‎text that says '‎திருமுருகாற்றுப்படை S شم‎'‎‎

தமிழ் இலக்கண மரபில் ஆற்றுபடை என்பது ஒரு மரபு, மிகுந்த துயரில் நம்பிக்கையற்று போன ஒருவனை ஆற்றுபடுத்தி அமைதிபடுத்தி நம்பிக்கை கொடுத்து நல்வழி நடத்தும் மரபில் பாடபடும் இலக்கியங்களுக்கு ஆற்றுபடை என பொருள்

இது பெருமபாணராற்றுபடை, சிறுபாணராற்றுபடை, கூத்தராற்றுபடை என பல உண்டு.

இப்படி முருகபெருமானை பாடி வழிநடத்தும் பாடல்தான் திருமுருகாற்றுபடை

ஒருவகையில் அறுபடை வீடுகள் என்பதே ஆற்றுபடுத்தும் கோவில்கள்தான், அந்த ஆற்றுபடை எனும் ஆலயங்கள்தான் அறுபடை என மாறியது என்பதும் ஒர் ஆய்வு

ஆற்றுபடுத்தல் எனும் நல்வழி கொடுக்கும் ஆலயங்களை ஆற்றுபடை வீடுகள், அறுபடை வீடுகள் என மாறிற்று என்பார்கள்

இந்த நூலை எழுதியவர் நக்கீரர், மதுரை தமிழ்சங்கத்தில் ஒளவையார் கபிலர் அகத்தியர் என பெரும் பெரும் தமிழ் வடிவங்களோடு சரிக்கு சமமாக இருந்தவர்

சிவபெருமானின் திருவிளையாடலில் பொற்றாமரை குளத்தில் தள்ளபட்டவர் இவர் என்பதும் ஓர் முடிவு

முருகபெருமானை தலைவராக கொண்ட தமிழ்சங்கத்தை இவர்தான் நடத்தினார், முருகபெருமானின் அடியார்களில் முக்கியமானவர்

சிவனை போலவே முருகபெருமானும் இவரை சோதித்தார், இவர் காசிக்கு சென்றபோது நதியோரம் ஒரு காட்சி கண்டார்

ஆலமரத்தில் இருந்து விழுந்த இலை நீர்பாதி நிலம் பாதியில் விழுந்தது, நீர்பட்ட இலைபகுதி மீனாகவும் நிலம் பட்ட இலைபகுதி பறவையாகவும் மாறி மாய்மாலம் காட்டியது

இப்படி ஒரு காட்சியில் மனம் லயித்தவர் சிவபூஜையினை தவறவிட்டார், சிவனடியார் சிவபூஜையினை தவறவிட்டால் பெரும் தண்டனை என்பதால் பூதம் ஒன்று இவரை 999 பேர் கொண்ட குகையில் அடைத்துபோட்டது

அங்கிருந்து முருகபெருமானை அவர் துதித்து பாடி மனமுருக வழிபட்டதில் முருகபெருமானே வந்து குகையில் இருந்து இவரை முன்னிட்டு எல்லோரையும் மீட்டார் என்பது புராணம்

அந்த குகையில் இருந்து இவர் பாடியதுதான் “திருமுருகாற்றுபடை”

அந்த சம்பவம் நடந்ததா இல்லையா என்பது விஷ்யம் அல்ல, இப்பாடலை மனமுருக பாடினால் மனச்சிறையில் மாய மயக்கத்தில் ஆயிரமாயிரம் ஆசைகளுடன் அடைபட்டிருக்கும் ஆத்மா விடுதலை அடையும் என்பது மறுக்கமுடியாது

அப்படி உருக்கமான பாடல்

இதன் இந்த பெரும் சிறப்பாலே சைவதிருமுறைகளில் 11ம் திருமுறையாக சேர்க்கபட்டு கொண்டாடபடுகின்றது

பத்துபாட்டு எனும் இலக்கியத்திலும், மகா புனிதமான சைவ இலக்கியத்திலும் இடம்பெறும் ஒரே நூல் இதுதான்

முருகபெருகானுக்குரிய வழிபாட்டு பாடல்களில் மிக மூத்தது தமிழில் இதுதான், கந்தபுராணம் எனும் பெரும் ஸ்லோக தொகுப்புக்கு பின் இதுதான்

காளிதாசனின் குமார சம்பவம் இதற்கு பிந்தையது

அருணகிரிநாதர், குமரகுருபரரெல்லாம் 500 வருடம் முன்புதான் வந்தார்கள்

ஆக தமிழ்மொழியின் மிக மூத்ததாக, முருகபெருமான் மேல் அழகுறபாடபட்ட முத்ல் பதிகமாக இதுதான் அமைந்துள்ளது

317 வரிகளை கொண்ட இப்பாடல் , முருகப்பெருமானின் அறுபடை வீடுகளையும் அதன் சிறப்பையும் முருகபெருமானின் அருளையும் ஆற்றலையும் வழிபாட்டு முறைகளையும் பலன்களையும் மிக துல்லியமாய் சொல்கின்றது

இந்த திருமுருகாற்றுபடையினை இனி பார்க்கலாம்

முதல் அறுபடை வீடான திருப்பரங்குற்றத்தில் இருந்து பாடல் தொடங்குகின்றது, ஒவ்வொரு வாரமும் பத்து வரிகளை காணலாம்

317 பாடலகள்தான் என்றாலும் ஒவ்வொரு வரியும் ஆழமானது மிக நுணுக்கமான பொருளை கொடுக்க கூடியது,

அந்த தமிழும் அதன் பொருளும், தளைகளும் சீரும் கொஞ்சம் கடினம் என்றாலும் , உட்பொருள் இன்னும் ஆழம் என்றாலும் முடிந்தவரை விளக்கிபார்க்க முயற்சிப்போம்..