தேவி மாஹாத்மியம் : 03 / 13 – மஹிஷாசுர சைன்ய வதம்

தேவி மஹாமித்யம் சொல்லும் முதல் பகுதி மகா காளிக்கானது, அடுத்த பகுதி மஹா லட்சுமிக்கானது, அந்த மஹாலட்சுமிதான் மகிஷாவர்த்தினியாக அவதரித்து மகிஷனை சங்காரம் செய்தாள்

அவள் ஆவேசமான நிலையில் துர்க்கை,அமைதியான நிலையில் மஹாலஷ்மி, அவள் சிந்திக்கும் நிலையில் சரஸ்வதி என அவளுக்கு பல வடிவங்கள் உண்டு

அமைதியாக இருக்கும் மஹாலட்சுமி எப்படி ஆவேசமாக உருவாகி மகிஷ படைகளோடு மோதினாள் என்பதை மகாமித்தியத்தின் இரண்டாம் பகுதி சொல்கின்றது

இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் எல்லா தேவர்களும் தங்கள் சக்தியினை வழங்கி அவளை உருவாக்கினார்கள் என்பதல்ல, எல்லா தேவரின் வடிவமாக அவர்களுக்கு தன் சக்தியினை கொடுத்த அன்னை அவர்கள் செயலற்றுபோகும் போது அவற்றை தன்னுள் ஏற்று வந்து மகிஷனை அழித்து அவர்களை விடுவித்தாள் என்பது

அன்னை எல்லா சக்தியாகவும் இருக்கின்றாள், அதர்மம் தலைவிரித்தாடும் போது எல்லா சக்தியினையும் ஒன்றாக்கி ஒரே உருவாக்கி வந்து அதர்மத்தை அழிக்கின்றாள்

மகிஷன் ஒரு பெண்ணால் தனக்கு அழிவுவரவேண்டுமென வரம் வாங்கியவன், ஒரு பெண் தன்னை கொல்லமுடியும் என எதிர்பார்க்கவுமில்லை

அன்னை எல்லா சக்தியின் வடிவமானவள், எல்லா சக்தியும் அவளே என்பதை கடைசியில் உணர்ந்து மகிஷன் அழிந்து போகின்றான், அவனின் ஆக்ரோஷ அகங்காரமும் அதர்மமும் அவனோடு அழிந்தது

தானே எல்லோரையும் படைக்கின்றேன், தானே காக்கின்றேன் தானே அழிக்கின்றேன், தன்னை விட பெரும் சக்தி எங்கும் இல்லை என காட்டிநின்றாள் அன்னை

அந்த “தேவி மகாத்மியம்” நூலின் இரண்டாம் பாகத்தின் முதல் பாதி அன்னை மகிஷனின் சேனையினை வதம் செய்யும் காட்சி இதோ

“முன்னொரு காலத்தில் மஹிஷாசுரன் அசுரர்க்கரசனாயும், இந்திரன் தேவர்களுக்கு அரசனாயும் இருக்கையில் நூறு வருஷகாலம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒரு யுத்தம் நிகழ்ந்தது.

அப்போது மகாவீரியம் படைத்த அசுரர்களால் தேவசைன்னியம் தோற்கடிக்கப்பட்டது. எல்லா தேவர்களையும் ஜயித்து, மஹிஷாசுரன் இந்திரப்பதவி யெய்தினான்.

பின்னர், தோல்வியுற்ற தேவர்கள் பிரம்மாவை முன் னிட்டுக்கொண்டு பரமசிவனும் மகாவிஷ்ணுவும் எங்கு கூடி யிருந்தனரோ அங்கு சென்றனர்.

மஹிஷாசுரனுடைய சேஷ்டையையும் தேவர்களுக் கேற்பட்ட அவமானத்தையும் நடந்தது நடந்த பிரகாரம் விரிவாகத் தேவர்கள் அவர்களிடம் கூறினர்.

சூரியன், இந்திரன், அக்கினி, வாயு, சந்திரன், யமன், வருணன், இன்னும் மற்ற எல்லா தேவதைகளுடைய அதிகாரங்களையும் நடத்திக்கொண்டு அவன் ஒருவனே வீற்றிருக்கிறான். அந்த துராத்மாவான மஹிஷனால் சொர்க்கத் திலிருந்து துரத்தப்பட்டு தேவகணங்களெல்லாம் மனிதர்க ளைப்போல் பூலோகத்தில் அலைந்து திரிகின்றனர்.

தேவசத்துருவின் சேஷ்டையாகிய இது எல்லாம் உங்களிடம் விஞ்ஞாபனம் செய்து கொண்டோம். எங்களுக்கு புகலிடம் நீங்கள். நாங்கள் சரணாகதர்கள். அவனுடைய வதத்திற்குரிய வழியைச் சிந்தித்தருள வேண்டும்.

தேவர்களுடைய இவ்வார்த்தைகளைக் கேட்டு விஷ் ணுவும் சம்புவும் புருவங்கள் நெரிந்து முகங்களில் கடுகடுப்புத் தோன்றக் கோபங் கொண்டனர்.

அப்போது கடுங்கோபம் நிறைந்த சக்ரபாணியின் முகத்தினின்றும், பிரம்மாவின் முகத்தினின்றும் சங்கரர் முகத் தினின்றும் அவ்வாறே வெளிக்கிளம்பிய அந்த மகத்தான ஒளி யொன்று வெளிப்போந்தது.

இந்திரன் முதலிய மற்ற தேவர்களுடைய சரீரங் களினின்றும் அவ்வாறே வெளிக்கிளம்பிய அந்த மகத்தான ஒளி யெல்லாம் ஒன்றாகச் சேர்ந்தது.

அந்தப் பேரொளியின் பிழம்பு மலைபோல் ஜ்வலிக்கவும் திக்கு திசைகளெல்லாம் அதன் ஜ்வாலைகள் வியாபிக்கவும் தேவர்கள் கண்டனர்.

எல்லா தேவ சரீரங்களினின்றும் அங்கு தோன்றிய அவ்வொளி உவமையற்றதாய் விளங்கிற்று. ஒன்று சேர்ந்த அது முவ்வுலகையும் தன் காந்தியால் வியாபிக்கும் ஒரு பெண்ணுருக் கொண்டது.

சம்புவினிடமிருந்து வந்த ஒளி எதுவோ அதனால் அவளுடைய முகம் தோன்றிற்று. யமனுடையதால் கேசமும் விஷ்ணுவின் ஒளியால் புஜங்களும் தோன்றின.

சந்திரனுடைய காந்தியால் இரண்டு ஸ்தனங்களும், இந்திரனுடைய காந்தியால் இடையும் தோன்றின. வருண னுடையதால் துடைகளும் முழங்கால்களும், பூமியின் காந்தி யால் பிருஷ்டபாகமும் தோன்றின.

பிரம்மாவின் ஒளியால் இருபாதங்களும் சூரிய ஒளி யால் கால் விரல்களும், வசுக்களின் ஒளியால் கைவிரல் களும், குபேரன் ஒளியால் மூக்கும் தோன்றின.

பிரஜாபதியின் ஒளியால் அவளுடைய பல்வரிசை கள் உண்டாயின. அவ்வாறே அக்கினியின் ஒளியால் மூன்று கண்கள் உண்டாயின.

ஸந்தியைகளின் ஒளியால் இரு புருவங்களும், வாயு வின் ஒளியால் இருகாதுகளும் உண்டாயின. இவ்வாறாக மற்ற தேவர்களுடைய ஒளியாலும் மங்கள வடிவினளான தேவியின் ஆவிர்ப்பாவம் ஏற்பட்டது.

எல்லா தேவர்களுடைய தேஜஸ்ஸும் ஒருங்கே சேர்ந்து தோன்றிய அவளைக் காணப்பெற்ற அப்போது மஹி ஷனிடம் துன்புற்ற தேவர்கள் ஆனந்தமடைந்தனர்.

பிநாகபாணியான பரமசிவன் தனது சூலத்தினின்று ஒரு சூலத்தைத் தோற்றுவித்து அதை அவளுக்குக் கொடுத் தார். கரியதிருமால் தன் சக்கரத்தினின்று ஒரு சக்கரத்தை உண்டாக்கி யளித்தார்.

வருணன் சங்கத்தையும், அக்கினி சக்தி ஆயுதத்தை யும் அவளுக்குக் கொடுத்தனர். வாயு பகவான் வில்லையும் பாணங்கள் நிறைந்த இரண்டு அம்புறாத்தூணிகளையும் அளித் தார்.

ஆயிரங் கண்களையுடையவனும் தேவராஜனுமாகிய இந்திரன் தனது குலிசத்தினின்று தோற்றுவித்த வஜ்ராயுதத் தையும், தனது யானையாகிய ஐராவதத்தினின்று தோற்று வித்த மணியையும் கொடுத்தான்.

யமன் காலதண்டத்தினின்று தண்டத்தையும், வருணன் பாசத்தையும் அளித்தனர். பிரஜாபதியாகிய பிரம்மா அக்ஷமாலையையும் கமண்டலுவையும் கொடுத்தார்.

அவளுடைய மயிர்க்கால்களில் பிரகாசிக்கும்படி சூரியன் தனது கிரணங்களைக் கொடுத்தான். காலன் கத்தியை யும் நிர்மலமான கேடயத்தையும் கொடுத்தான்,

பாற்கடலரசன் நிர்மலமான ஹாரத்தையும் என்றும் புதிதாயிருக்கும் இரு வஸ்திரங்களையும் கொடுத் தான். அவ்வாறே சூடாமணி, பிரகாசம் பொருந்திய குண்ட லங்கள், கடகங்கள், வெண்மையான

அர்த்தசந்திரப்பிரபை, எல்லாத் தோள்களுக்கும் தோள்வளைகள், நிர்மலமான நூபு ரங்கள், ஒப்புயர்வற்ற அட்டிகைகள், எல்லா விரல்களுக்கும் ரத்தின மிழைத்த மோதிரங்கள் முதலிய எல்லா ஆபரணங் களையும் பிரகாசம் பொருந்திய பரசுவையும் அநேக விதமான அஸ்திரங்களையும், பிளக்கமுடியாத கவசத்தையும் விசுவகர்மா அவளுக்குக் கொடுத்தான்.

வாடாத தாமரை மாலையைச் சிரத்திலணியவும் மிகவும் சோபையுள்ள மற்றொன்றை மார்பி லணியவும் கடலரசன் அளித்தான். ஹிமவான் சிம்ம வாக னத்தையும் பலவித ரத்தினங்களையுமளித்தான்.

குறையாத மது பாத்திரத்தைக் குபேரன் கொடுத்தான். இந்த பூமியைத் தாங்குபவனும் நாகங்களுக்கெல்லாம் அதிபனுமாகிய ஆதிசேஷன் மகாமணிகளால் அலங்கரிக்கப் பெற்ற நாகஹாரத்தைக் கொடுத்தான். மற்றுமுள்ள தேவர் களாலும் அவ்வாறே ஆயுதங்களும் ஆபரணங்களும் அளிக்கப் பெற்றாள்.

அங்ஙனம் பூஜித்துப் போற்றப்பட்ட தேவியானவள் (தேவர்களுக்கு உற்சாகமூட்டுபவளாய்) உரக்க அடிக்கடி அட்டஹாஸம் செய்தாள். அந்த பயங்கரமான சப்தத்தால் ஆகாயவெளி யெங்கும் நிறைந்தது.

அளவிடமுடியாத பெரிய எதிரொலியுங் கிளம்பிற்று. எல்லா உலகங்களும் கலங்கின ; ஸமுத்திரங்கள் கரை புரண்டன.

பூமி அசைந்தது. மலைகள் நடுங்கின. சிங்கவாஹ னத்திலெழுந்தருளிய தேவியை தேவர்கள் ஸந்தோஷத்துடன் ‘ஜய ஜய’ என்று போற்றினர்.

பக்தியின் பணிவே உருக்கொண்டவர்களான முனிவர்கள் இவளைத் துதித்தனர். முவ்வுலகும் நடுக்குற்ற தைக் கண்ட தேவ சத்துருக்கள் சேனைகளைத் திரட்டிக் கொண்டு ஆயுதபாணிகளாய்க் கிளம்பினார்கள். ஆஹா!

இது என்ன !’ என்று கோபத்தால் கூவிக்கொண்டு மஹிஷாசுரன் அசுரர்கள் சூழச் சப்தம் எழுந்த திக்கை நோக்கி விரைந்தான்.

தன் காந்தியால் மூவுலகையும் வியாபித்து நின்ற தேவியை அவன் கண்ணுற்றான்.

பாதங்களின் பாரத்தால் பூமி சலிக்கவும், கிரீடம் வானத்தின் முகட்டைத் தொடவும், வில்லின் நாணொலியால் பாதாள முட்பட எல்லாம் நடுங்கவும், ஆயிரம் புஜங்களும் திக் கெங்கும் வியாபிக்கவும் நின்ற தேவியை (அவன் கண்ணுற் றான்). பின்னர் அந்த தேவியுடன் அசுரர்களின் போர் தொடங்கிற்று.

வெகுவாக விடப்பட்ட சஸ்திரங்களாலும் அஸ் திரங்களாலும் திசைகள் ஜ்வலித்தன. சிக்ஷுரன் என்ற கொடிய அசுரன் மஹிஷாசுரனுடைய சேனாதிபதியாக இருந் தான். அவனும், வேறு சதுரங்க பலங்களுடன் சாமரனும், ஆறாயிரம் தேர்களுடன் உதக்ரன் எனும் மகாசுரனும், கோடித்தேர்களுடன் மஹாஹ்னுவும், ஐந்துகோடித் தேர்களுடன் அஸிலோமா எனும் மகாசுரனும் ஆறுலக்ஷம் தேர்களுடன் பாஷ்கலனும் போர்க் களத்தில் யுத்தம் செய்தனர்.

ஆயிரக்கணக்கான யானைப் படைகளும் குதிரைப்படைகளும் கோடித் தேர்களும் சூழ்ந்த. வனாய்ப் பரிவாரிதன் என்ற அசுரனும் யுத்தம் செய்தான். ஐம்பது கோடி ரதங்களால் சூழப்பெற்ற பிடாலன் எனும் அசுரனும் அந்தப் போரில் யுத்தம் செய்தான்.

மற்ற கணக் கற்ற மகாசுரர்களும் கணக்கற்ற தேர், யானை, குதிரைகள் சூழ, தேவியுடன் அந்தப் போரில் யுத்தம் செய்யலாயினர். ஆயிரம் கோடி கோடித்தேர் யானை, குதிரைகள் சூழ அங்கு யுத்தத்தில் மஹிஷாசுரன் தோன்றினான். தோமரம், பிந்திபாலம், சக்தி முஸலம்,கத்தி,பரசு, பட்டிசம் முதலிய ஆயுதங்களைக்கொண்டு அந்தப் போரில் தேவியுடன் அவன் யுத்தம் செய்தான். சில அசுரர்கள் சக்தி ஆயுதங்களையும், மற்றும் சிலர் பாசங்களையும், பிரயோகித்தனர்.

வாளை வீசிக் கொண்டு அவர்கள் அந்த தேவி யைக் கொல்ல முயன்றனர். அந்தச் சண்டிகா தேவி அப் போது அவ்வஸ்திர சஸ்திரங்களைத் தனது அஸ்திர சஸ்திரங் களைப் பொழிந்து விளையாட்டாகப் பரிஹரித்தாள். தேவர் களும் ரிஷிகளும் துதிக்க மீண்டும் தேவியாகிய பரமேசுவரி சற்றும் ஆயாசமின்றி அசுரர்களுடலில் சஸ்திரங்களையும் அஸ். திரங்களையும் விடுத்தாள்.

தேவியின் வாகனமாகிய அந்தச்சிங்கமும் கோபங்கொண்டு பிடரியை உதறிக்கொண்டு அசுர சேனைகளிடை காட்டுத்தீ போல் பாய்ந்தது. ரணகளத்தில் யுத்தம் செய்யும் அம்பிகை விட்ட பெருமூச்சு எதுவோ அதுவே நூறாயிரக் கணக்கில் அப்போதே சேனாபலமாக ஆயிற்று. பரசு, பிந்திபாலம், கத்தி, பட்டிசம் முதலிய ஆயுதங்களுடன் அவர்கள் போர் புரிந்தனர்.

தேவியின் சக்தியால் பூரித்த அச்சேனைகள் அசுரக் கூட்டங்களை அழிப்பவர்களாய்த் தம்பட்டங்களைக் கொட்டி னார்கள். மற்றும் சிலர் சங்குகளை முழக்கினார்கள்.

அவ்வாறே அந்த யுத்த மஹோத்ஸவத்தில் இன்னும் சிலர் மிருதங்கங்களை வாசித்தார்கள். அதன்மேல் தேவி திரிசூலம், கதை, சக்தி, வாள் முதலிய ஆயுதங்களைப் பொழிந்து கொடிய அசுரர்களை நூற்றுக் கணக்கில் வீழ்த்தி னாள். தனது மணியின் ஓசையாலேயே மதியிழக்கச் செய்து சிலரை வீழ்த்தினாள்.

பாசத்தால் கட்டிச் சில அசுரர்களைப் பூமியில் இழுத்தாள், வேறு சிலர் கூரிய வாள் வீச்சால் இரண்டு துண்டாக்கி வீழ்த்தப்பட்டனர்.

கதையால் தாக்குண்டு சிலர் பூமியில் வீழ்ந்தனர். ரத்தத்தைக் முஸலத்தால் நையப்புடைக்கப்பட்டுச் சிலர் கக்கினர்.

சூலத்தால் மார்பு பிளவுண்டு சிலர் பூமியில் சாய்ந்தனர். சில தேவசத்துருக்கள் அம்புக் கூட்டங்களால் உடலெங்கும் தைக்கப்பெற்று அம்பு மயமாய் (முள்ளம் பன்றி களைப் போல்) காணப்படுபவர்களாய்ப் பிராணனை விட்டனர். சிலருடைய தோள்கள் பிறர் கழுத்து வெட்டுண்டவராயினர்.

சிலருடைய தலைகள் உருண்டன ; சிலர் இடுப்பில் வெட்டுண்டனர்; கால்கள் வெட்டுண்டும் துடைகள் வெட் டுண்டும் சில கொடிய அசுரர்கள் வீழ்ந்தனர்.

ஒற்றைத் தோளும் ஒற்றைக் கண்ணும் ஒற்றைக் காலும் உடைய சிலர் தேவியால் இரண்டாக வெட்டப் பட்டனர். சிலர் தலை வெட்டுண்டு வீழ்ந்த பின்னருங்கூட, அவர்களுடைய தலையற்ற உடல்கள் மீண்டும் எழுந்து ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தேவியுடன் யுத்தம் செய்தன. மற்றும் சில கபந்தங்கள் யுத்தகளத்தில் முரசு முதலிய வாத்தி யங்களின் ஒலிக்கிசைவாகக் கூத்தாடின.

சில மகாசுரர்கள் தலையிழந்தபின்னரும், கத்தியும் ஈட்டியும் கையிலேந்திக்கொண்டு தேவியை நோக்கி “நில் நில்” என்று கூவினர்.

கொடிய யுத்தம் நடந்த இடத்தில் தேர்களும் யானை களும் குதிரைகளும் அசுரர்களும் வீழ்ந்து கிடந்தமையால் பூமி கால் வைக்க இடமில்லாமலிருந்தது.

அங்கு அசுரர்களிடமிருந்தும் யானைகளிடமிருந்தும் குதிரைகளிடமிருந்தும் பாய்ந்த ரத்த வெள்ளம் பெரிய ஆறு களைப் போல் அசுரர் சேனையின் நடுவில் பெருக்கெடுத்தது.

விறகும் புல்லும் பெரிய குவியலாயிருந்தால் எப்படி நெருப்பு எரிக்குமோ அப்படி அம்பிகையானவள் ஒருகணத் தில் அந்தப் பெரிய சேனையை நாசமாக்கினாள்.

அவளுடைய வாகனமாகிய அந்த சிங்கமும் உறக்க கர்ஜனை செய்துகொண்டும் பிடரிமயிரைச் சிலிர்த்துக் கொண்டும் தேவசத்ருக்களின் உடல்களில் உறையும் உயிர்களைத் தேடுவது போல் காணப்பட்டது.

தேவியின் கணங்களால் அசுரர்களுடன் செய்யப் பட்ட யுத்தம் எங்ஙனமிருந்ததெனின், தேவர்கள் வானிலிருந்து புஷ்பமாரி பெய்து துதிக்கும்படி இருந்தது.”