சப்த ரங்கம்

மார்கழி மாதம் பகவான் விஷ்ணுவுக்குரியது, பகவானுக்குரிய மாதமான அந்த தனுர் மாதத்தில் திருப்பாவை பாடுவதும், அதிகாலை கோலமிட்டு வழிபாடுகளை செய்வதும் இன்னும் ஏராளமான விரதம் நோன்புகள் இதர வழிகளில் பகவானை இடையறாமல் வணங்குவதும் நல்லது
அதே நேரம் அந்த பகவானுக்குரிய, விஷ்ணு பகவானுக்குரிய ஆலயங்களை தேடி வணங்கி நின்றது சாலசிறந்தது
முன்னோர்கள் கார்த்திகையில் சிவனை வழிபட சொன்னது போலவே மார்கழியில் விஷ்ணுவினை தவறாமல் வழிபட சொன்னார்கள், இந்த காலகட்டத்தில் சப்த ரங்க ஆலயங்கள் எனும் காவேரியின் இடையில் இருக்கும் ஏழு ஆலயங்கள் மகா முக்கியமானவை
காவேரி என்பது வெறும் நதியல்ல அது தேவியின் அம்சம், அதன் வரலாறும் பாரம்பரியமும் அதன் தனித்துவமும் கங்கைக்கு ஈடானது, யமுனை போலவே அதற்கு தனி சிறப்பு உண்டு
காவேரியின் சிறப்பு கொஞ்சமல்ல, அது பகவானின் வரலாற்றோடு இடையறாமல் கலந்தது, பெருமாளுக்கும் காவேரிக்குமான பந்தம் காலம் காலமாய் தொடர்வது பிரிக்க முடியாதது
” கவேரகன்யே காவேரி, சமுத்ர மகிஷிப் பிரியேதேகிமே பக்தி முக்தி தவம் சர்வ தீர்த்த ஸ்வரூபிணி ” என்பது காவேரிக்கான ஸ்லோகம்
காவேரியினை சிலப்பதிகாரம் அப்படி சொன்னது, மணிமேகலை இப்படி சொன்னது என்பது விஷயம் அல்ல. சிலப்பதிகாரம் பவுத்த வழி இளங்கோவினால் பாடபட்டதால் காவேரியின் சிறப்புகள் லவுகீகமாக மடைமாற்றபட்டன
உண்மையில் காவேரியின் சிறப்பு “காவேரி மகாத்மியம்” எனும் நூலில் சொல்லபட்டிருக்கின்றது
கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து , நர்மதா என்பவை பாரம்பரியமான புண்ணிய நதிகள், இந்த வரிசையில் முக்கியமானது காவேரி
அதன் சிறப்பினை “காவேரி மகாத்மியம்” நிறைய சொல்கின்றது, அதனை சுருக்கமாக பார்க்கலாம்
ஆதியில் உமாதேவிக்கு ஸ்ரீ பரமேஸ்வரன் சொன்ன காவேரி மகாத்மியத்தை , தேவ வன்மன் என்ற அரசனுக்கு சுமத்திரங்கி என்ற ரிஷி உரைத்த காட்சியின் தொகுப்பு
அங்கே “கங்கைக்கு நிகரான காவிரியில் நீராடினாலும்,தரிசித்தாலும், அதனை பக்தியுடன் தொட்டாலும் அதன் கரையில் தானம்,தர்ப்பணம் செய்தாலும் எல்லா பாவங்களும் விலகி, புண்ணியம் கிட்டும். இதன் கரைகளில் காசிக்கு சமமான ஸ்தலங்களும் இருக்கின்றன. நினைத்ததைத் தரும் சிந்தாமணியான காவேரியின் பெருமமை ஏகபட்டது உண்டு” என்கின்றார் சிவபெருமான்
அரிசந்திரன் த்ன அஸ்வமேத யாகத்தை தொடங்குனுன் முனிவர்கள் ரிஷிகள் ஆலோசனைபடி காவேரியில் நீராடிவிட்டு வநதே தொடங்கினான்
நாத சர்மா தன் மனைவி அனவிதையுடன் மோட்சம்ம் வேண்டி காவேரி ஸ்நானம் செய்ய வருகின்றான், கௌரி மாயூர ஷேத்திரத்தை நோக்கி வந்தவன் அந்த மோட்சபுரியில் தங்கியிருக்கின்றான்
அங்கே தர்பணங்களும், ஹோம அக்னியும் இன்னும் பலவும் நடப்பதை காணும் அவன் மனைவி காவேரியின் சிறப்புக்களை பற்றி கேட்க அவன் சொல்கின்றான்
காவேரியின் வரலாறு அவனால அங்கே சொல்லபடுகின்றது
கவேரன் என்ற அரசன், தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாததால் பிரம்மாவைக் குறித்துத் தவம் செய்தான். பிரம்மா அவனுக்கோர் பெண் குழந்தையினை அளித்தார்
காவேரி என்ற பெயரில் அவனிடம் வளர்ந்த அப்பெண் உரிய காலத்தில் தனக்கான கணவனை தேடி துணையினை தேடி தவமிருந்தாள் , நெடுங்கால தவத்துக்கு பின் அகஸ்த்திய முனிவரைக் கண்ட காவேரியானவள் அவரை கண்டு மகிழ்ந்து சுற்றிவர அகத்திய முனி அவளைதன் கமண்டலத்தில் அடைத்து கொண்டார்
பின் அவள் பூமிக்கு சேவகம் செய்யும் பொருட்டு அவளை நதி உருவமாக்கி பிற நதிகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்பட்ட பாவங்களை நீக்கவும், மோட்சத்தை அருளவும் அகத்தியர் அருள்புரிந்தார்
இப்படி காவேரியின் வரலாற்றை சொல்லும் நாதசர்மா துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்யும் முறைகளை விளக்குகின்றார்
துலா மாதம் உதய காலத்தில் நியமத்துடன் எழுந்தும், சிவபூஜை செய்தும் தீய பழக்கங்களை நீக்கியும், விரதத்துடனும் பரமேஸ்வர தியானத்துடன் இருக்க வேண்டும். மூன்றரைக்கோடி தீர்த்தங்கள் துலா மாதத்தில் காவிரியில் வந்து சேருவதால், இதில் ஸ்நானம் செய்வதன் மூலம், அழகு,ஆயுள், ஆரோக்கியம், செல்வம்,கல்வி, வலிமை, மாங்கல்ய பாக்கியம். புத்திர பாக்கியம் முதலியவை சித்திக்கும். இதைக் காட்டிலும் புண்ணியச் செயல் எவ்வுலகிலும் இல்லை.
எனவே, ஜன்மத்தில் ஒரு முறையாவது, துலா ஸ்நானம் செய்ய வேண்டும் என்கின்றார், அப்படியே இருவரும் மாயூரத்தில் நீராடி மோட்சம் பெற்றனர்
அப்படியே நதி தேவதைகளிடம் பிரம்ம தேவர் காவேரி பெருமையினை சொல்லும் இடம் ஒன்று உண்டு
“காவேரி மகிமையை கேட்டாலோ நினைத்தாலோ பாவங்கள் அகலும். மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவனும் துலா மாதத்தில் கௌரி மாயூரத்தைஅடைந்து காவிரியில் ஸ்நானம் செய்ய வேண்டும் . ஒரு சமயம் , அத்திரியின் மகனாகப் பிறந்த எனக்கும் ஊர்வசிக்கும் காவேரி மகளாகப் பிறந்தாள்அவளைத்தான் காவேர ராஜனுக்கு மகளாகக் கொடுத்தேன்.
அவளே இப்பொழுது நதியாக வந்துள்ளாள். நீங்கள் துலா ஸ்நானம் செய்து உங்களிடம் படிந்துள்ள பாவங்களை நீங்கப் பெறுவீர்களாக” என நதிகளுக்கு உரைக்கின்றார் பிரம்ம தேவன்
அந்த நூல் இன்னும் சொல்கின்றது, காவேரியில் நீராடிய வேதியர்கள் எதிரில் பேயாக வந்த பெண்ணுக்கு நற்கதி கொடுத்த புண்ணியத்தை சொல்கின்றது
மகிமையைக் கேட்டவாறே உயிர் நீத்த சந்திரகாந்தை என்ற மகா பாவிக்கும் மோட்சம் கிடைத்த கதையினை சொல்கின்றது
வேதராசி எனும் அந்தணன் காவேரியில் நீராடி வழிபட்ட புண்ணியபலனால் பாவிகள் நிறைந்த எமலோகத்தை புண்ணிய சொர்க்கமாக மாற்றிய அதிசயத்தை சொல்கின்றது
பாரத்வாஜ மகரிஷியின் அருளால் அவரது ஆசிரமத்தில் இருந்த கிளியும் பூனையும் காவேரியில் வழிபட்டு சொர்க்கத்தை அடைந்தன
அகத்திய முனிவரின் சாபத்தால் பாம்பாகிய நகுஷன் என்பவன், கிருஷ்ணனின் அருளால் காவேரிக்கு சென்று ஸ்நானம் செய்து பழைய உருவம் பெற்றான்.
சாபத்தால் குதிரையாக பிறந்த ஒருவனை காவேரியில் நீராட சொல்லி அவன் சாபம் தீர்த்தார் வசிஷ்டர்
முற்பிறவியில் கொலை செய்த பாவத்தினால் குள்ள நரியாகவும் , முனிவர்களின் ஆசிரமத்திலிருந்து பழங்களைத் திருடித் தின்றதால் குரங்காகவும் மாறியவர்களைக் கண்ட காசிப முனிவர் அவர்களைத் துலா காவேரியில் ஸ்நானம் செய்யும்படி சொல்லி அவர்களின் சாபம நீக்கினார்
சிங்கத்துவஜன் என்ற வேடர் குல அரசன் சாபத்தால் கழுதையாக மாறியபோது காசிப முனிவர் அவனை காவேரியில் நீராட செய்து மனிதனாக்கினார்
ஸ்ரீ ராமனிடம் வசிஷ்டர் சொல்கின்றார் சுதர்சனன் என்ற அந்தணன் பெரும் பாவியாக இருந்தபோதிலும் விதிவசத்தால் துலா காவேரி ஸ்நானம் செய்து, கௌரி மாயூர நாதரையும், அபயாம்பிகையையும் தரிசித்து, இறுதியில் சிவலோகம் பெற்றதை சொல்கின்றார்
அப்படியே விஸ்வாமித்திரர் ரம்பையை கல்லாக்கியதும், பிறகு அக்கல்லை வியாழ பகவான் காவேரியில் இட்டவுடன் பழைய உருவம் பெற்றதையும் சொல்கின்றார்
மந்திரன் என்ற பிரம்மச்சாரியின் சாபத்தால் பேய் உருவம் கொண்ட மனோக்யை என்ற பெண் , சுசிதன் என்ற முனிவரின் கட்டளைப்படி, அறுபது கோடி தீர்த்தங்களும் தங்களது பாவத்தைப் போக்கிக்கொள்ளும் காவேரி நதியில் ஸ்நானம் செய்து, பழைய உருவம் பெற்றதோடு, தன விருப்பப்படி, மந்திரனையே மணாளனாகப் பெற்றாள்.
முறையாக காவேரி ஸ்நானம் செய்துவந்த ச்வேதவதி என்ற பதிவ்ரதையின் கால் மாண்டவ்ய முனிவரின் மேல் படவே, அவர் கோபப்பட்டு, “சூரியன் உதயமாவதற்குள் உயிர் நீப்பாய்” என்று சாபமிட்டார்.
கற்புக்கரசியான ச்வேதவதி, “அப்படியானால் சூரியனே உதிக்காமல் போகட்டும்” என்று சபிக்கவே, சூரிய உதயம் ஆகாமல் உலகம் ஸ்தம்பித்தது பின் தேவர்களுக்காக அவள் அதனை மீண்டும் இயக்கினாள்
காவேரி வழிபாட்டின் பலம் அப்படியானது
சரியான ஆச்சார வாழ்வு வாழாத பிரம்ம சர்மா என்ற வேதியர் , தனது தர்ம பத்தினியான சுசீலையின் வாக்குப்படி, அவளோடு காவேரி தீரத்தை அடைந்து, அரசமர பிரதிஷ்டை செய்தும்,காவேரி ஸ்நானம் செய்தும் சிவ பூஜை செய்து கொண்டிருந்த காலத்தில், அவரது ஆயுட்காலம் முடிந்ததால் ,அவரது உயிரைக் கொண்டுபோக யமதூதர்கள் வந்தனர்.
தன் காவேரி வழிபாட்டின் பலத்தால் அவர்களை விரட்டி யமனிடமிருந்து கணவனை மீட்டாள் சுசீலை
திலீபனின் மகன் ரகு அயோத்தியை ஆண்டு வந்த காலத்தில் ஒரு நாள் நகர சோதனைக்காகப் போய்க்கொண்டு இருந்தபோது, வழியில் ஒரு ராக்ஷசனால் துரத்தப்பட்ட வேதியன் அடைக்கலம் வேண்டி, அவனது காலில் வந்து விழுந்தான்.
சிறிது நேரத்தில், பசியுடன் வந்த ராக்ஷசன், அவனை விட்டுவிடும்படி கேட்கவே, ஒருவன் செய்த பாவங்கள் காவேரி ஸ்நானம் செய்தால் நீங்கும். ஆனால் அடைக்கலம் புகுந்தவனைக் கைவிட்ட பாவத்திற்குப் பிராயச்சித்தமே இல்லை. “
என்று சொல்லிய அரசன் ரகு பரமேஸ்வரனை வேண்டினான், அவரும் ஒரு வழிப்போக்கனைப்போல் எதிரில் வந்து, “அரக்கனே, நீ இதற்குமுன் சதத்துய்மன் என்ற பெயருடன் வாழ்ந்திருந்தாய்.வசிஷ்ட முனிவரை ஏளனம் செய்ததால் அரக்கனாக மாறினாய்.
ஒரு அரசனைக் கண்டவுடன் பழைய உருவம் பெறுவாய்” என்று வசிஷ்டர் கூறியபடி, இப்போது அரசனைக் கண்டாய். உனது பழைய உருவம் வந்துவிடும்.” என்று கூறி மறைந்தார்.
பழைய வடிவம் பெற்ற அரக்கனும் காவேரி ஸ்நானம் செய்து நற்கதி பெற்றான்.
சித்திர வர்மன் என்ற கொடுங்கோல் மன்னன், அகஸ்திய முனிவரின் சொற்படி உதய காலத்தில் காவேரி ஸ்நானம் செய்து வந்தான். அதைக் கண்டு மகிழ்ந்த முனிவர், ” எந்த வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அனைத்துப் பாவங்களும் இங்கே ஸ்நானம் செய்வதால் நீங்கிவிடுகின்றன.எத்தனையோ தர்மங்கள் செய்வதால் அடையும் பலன்களை ஒரு முறை காவரி ஸ்நானம் செய்தவன் பெறுவான் என்பது நிச்சயம். ” என்றார்.
சோம பூஷணன் என்ற வேதியன் மிகவும் வறுமை நிலையிலும் காவேரி ஸ்நானம் செய்து வந்தான். இதனால் மகிழ்ந்த பிரம்ம தேவன் , அவன் முன் தோன்றி, “காவேரி ஸ்நான விசேஷத்தால், செல்வந்தன் ஆவாய். ஆனால் , அதைக்கொண்டு தான தர்மங்கள் செய்து வர வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் ஏழை ஆகிவிடுவாய்.” என்று அருளினார்.
சோம பூஷணன் அதன்படி நடந்துவந்த போதிலும் அவன் மனைவி அதற்கு மாறாக நடந்ததோடு, கணவனையும் தான – தர்மங்கள் செய்யாமலும் ,காவேரி ஸ்நானம் செய்யாமலும் இருக்கும்படி மாற்றவே, அவர்கள் வீட்டில் திருடர்கள் புகுந்து, செல்வத்தைக் கொள்ளை அடித்துச் சென்றனர்.
அதன் பிறகு, இருவரும் நல்ல புத்தி வந்தவர்களாய், காவேரி ஸ்நானமும் பூஜையும் செய்து, மீண்டும் ஐச்வர்யங்கள் அனைத்தும் பெற்று, நீண்ட நாட்கள் தான -தர்மங்கள் செய்து வாழ்ந்தனர். இக் கதையை அகஸ்தியரிடம் கேட்ட சித்திரவர்மனும் அதன்படியே நடந்து, இறுதியில் மோட்சம் பெற்றான்.
ப்ருகு முனிவரின் புத்திரியாகத் தோன்றிய மகா லக்ஷ்மி , காவேரி ஸ்நானம் செய்து, தன சுய வடிவம் பெற்று, மகாவிஷ்ணுவை அடைந்தாள் .
காவேரி ஸ்நானம் செய்த பூமா தேவி, யம தர்மனிடம், ” தான தர்மங்கள் செய்யாமலும், பித்ரு கார்யங்களைச் செய்யாமலும் பாவங்களைச் சுமப்பவர்களை உன் உலகத்திற்கு அழைத்துக்கொள். காவேரி ஸ்நானம் செய்தவர்களையும் அதன் மகிமையைக் கேட்டவர்களையும் என்னிடம் விட்டுவிடு.” என்று சொன்னவுடன் எமனும் அதன் படியே செய்வதாக வாக்களித்தான்.
தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்று கங்கைக்கும் காவேரிக்கும் வாக்கு வாதம் வந்தபோது, காவிரியே சிறந்தவள் என்று பிரம்ம தேவர் தீர்ப்புக் கூறினார்.
வேதம் அறிந்தவனை கொன்றால் பிரம்மஹத்தி தோஷம் பீடிப்பது போல வீரனை கொன்றால் வீரஹத்தி தோஷம் பிடிக்கும், அப்படி நரகாசுரனை கொன்ற பாவம் கிருஷ்ணரை பிடித்தது
பகவான் கிருஷ்ணர் காவேரியில் நீராடியே தன் வீரஹத்தி தோஷம் போக்கினார்
இப்படியாக காவேரியின் மகா பெருமைகளெல்லாம் “காவேரி மஹாத்மியம்” எனும் நூலில் வெகுவாக சொல்லபட்டிருக்கின்றன
காவேரியும் யமுனையும் இயல்பால் ஒன்று, இரண்டுமே கர்மத்தை செய்யவைப்பவை , பாவம் போக்குபபவை
அந்த காவேரியின் கரையில்தான் சைவமும் வைணவமும் செழித்தது, காவேரி தான் தீவுகட்டிய இடங்களிலெல்லாம் பகவான விஷ்ணுவுக்கு ஆலயம் கொடுத்தது
பொதுவாக நீர் சூழ் நிலங்கள் பிரபஞ்ச சக்தியினை பெற்றுகொடுக்கும், அலையடிக்கும் நீரின் அதிர்வுகளும் இன்னும் பல விஷேஷ சூழலும் அமைதியும் தனி சக்தியினை அங்கே குவித்து கொடுக்கும்
இயல்பாக பிரபஞ்சம் பெரும் அருளை குவிக்கும் அந்த இடத்தை ரெங்கம் என்றார்கள் இந்துக்கள், அஙகே குடிகொண்ட தெய்வம் ரங்கன் என்றானார்
அப்படி சப்த ரங்கங்கள் எனும் ஏழு பிரசித்தியான கோவில்கள் காவேரி நடுவில் உண்டு
ஆதிரங்கம் எனும் ஸ்ரீரங்க பட்டினம் , மத்திய ரங்கம் எனும் கொள்ளேகால், ஸ்ரீரங்கம் , கோவிலடி என்னும் அப்பால ரங்கம், அன்பில் ரங்கம் , சாரங்கம் கும்பகோணம் சாரங்கபாணி ஸ்தலம், பரிமள ரங்கம் எனும்-மாயவரம்
பஞ்சரங்கம் என பொதுவாக சொன்னாலும் இந்த ஏழு ஸ்தலங்களே ஆதிகாலம் தொட்டு சப்த ரங்க ஸ்தலங்கள் என கொண்டாடபட்டன
மார்கழியில் இந்த ஆலயங்களை பற்றி அவ்வப்போது காணலாம்
“சோழ நாடு சோறுடைத்து” என்பாள் ஒளவை, அது வெறும் சோற்றுருண்டையினை சொன்னதல்ல மாறாக சோறு என்றால் மோட்சபதம் என பொருள்
காவேரி நடுவிலும் கரைகளிலும் நிறைந்திருக்கும் எண்ணற்ற ஆலயத்தால் அதன் மூலம் காவேரி நதி தரும் அருளால் மோட்சம் சாத்தியம் என்றாள்
அந்த மோட்ச பாக்கியம் அருளும் மகா முக்கிய இந்த ஆலயங்களை இந்த மார்கழியில் அவ்வப்போது காணலாம், அதுவும் ஒரு மார்கழி வழிபாடே

சப்த ரங்கம் 01 : ஸ்ரீரங்கப்பட்டணம்.
சப்த ரங்க ஆலயங்களில் முதல் ஆலயமாக இருப்பது கன்னட மாகாணம் மைசூர் அருகே இருக்கும் ஸ்ரீரங்கப்பட்டணம் ஆலயம். இது காவேரியின் தொடக்கத்தில் இருப்பதால் முதல் ரங்கம் என்றாகின்றது.
ஆதிரங்கம் என்றும் இந்த தலத்துக்கு பெயர் உண்டு.
காவேரி இரண்டாகப் பிரிந்து பகவானின் கழுத்தில் மாலை போல் விழும் இந்தத் தலத்தில் அந்த ரங்கநாதர் எழுந்தருளிய வரலாறு கௌதம முனிவர் காலத்தில் இருந்து தொடங்குகின்றது.
அகத்திய முனியால் மகா புனிதமான காவேரி உருவானபின் இந்த ஷேத்திரம் தவம் செய்வோர் இடமாக தொடக்கத்தில் இருந்தது; தவசிகள் வந்து அந்த அமைதியான சூழலில் பிரபஞ்ச சக்தி கொட்டிக் கிடக்கும் தீவில் தவமிருந்தார்கள்.
அப்படி தவமிருந்தவர் சப்த ரிஷிகளில் ஒருவரான கௌதம முனிவர், அகலிகையின் கணவரான அந்த முனிவர்.
எல்லாம் உணர்ந்த அந்த முனி இந்திரனை உடலெல்லாம் கண்களாகவும், அகலிகையினை ராமன் பாதம் படும் வரை கல்லாகவும் கிடக்க சபித்துவிட்டு தென்னகம் நோக்கி வந்தார்.
கோதாவரி நதி அவர் பெயரிலே உருவானது.
அகலிகை மேல் பெரும் தவறு இல்லை, நடந்தது இந்திரனின் சதி என்பதை உணர்ந்த அவர் தன் கர்ம வினையினை ஏதோ ஒரு வேதனையின் தொடர்ச்சியினை உணர்ந்து அதைப் போக்க இங்கு தவமிருந்தார்.
அப்போது பகவான் சயன கோலத்தில் இந்த இடத்தில் கௌதமமுனிக்கு காட்சியளித்தார். பகவானின் அந்தக் கோலத்தில் அறிதுயில் கோலத்தில் மனமுருகினார் கௌதமர்.
பகவான் அவரிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, எந்த கோலத்தில் தனக்கு பகவான் காட்சி தந்தாரோ அதே கோலத்தில் எல்லா பக்தருக்கும் வரமருள வேண்டும் எனக் கௌதமர் கோர அவர் வேண்டியது அருளப்பட்டது.
சாளக்கிராம கல்லில் மிகப்பெரிய வடிவமாக பகவான் சிலை சுயம்புவாக அங்கே உருவானது. ஆம். அது சுயம்பு நாதர்.
இப்படித்தான் உருவானது அந்த ஆதி திருவரங்க ஆலயம், அங்கே பின்னாளில் காவேரியும் வந்து வழிபட்டது.
எல்லா பாவங்களும் கங்கையில் சேர்ந்தபோது சூதமானாள் கங்கை; அவளின் உருவம் அலங்கோலமாயிற்று; அந்தக் கங்கையின் பாவத்தை போக்க ஈசன் அவளை காவேரியில் மூழ்க வைத்தார்.
காவேரி எல்லாப் பாவங்களையும் ஏற்றதால் அவளின் தோற்றம் பயங்கரமாயிற்று, அஞ்சிய அவள் இந்த ஆலயத்து அரங்கனிடமே தஞ்சமானாள்.
அப்படியே அவர் காலடியில் அமர்ந்திருக்கின்றாள்.
ஆம். இந்த ஸ்ரீரங்கப்பட்டணத்தின் அரங்கன் வித்தியாசமானவர், அங்கே பூதேவி, ஸ்ரீதேவி, நாபி கமலத்தில் பிரம்மன் என யாருமில்லை.
அங்கே அந்த அரங்கன் முன்னால் ஓரமாக காலடியில் கௌதம முனிவர் நின்றுக் கொண்டிருக்கின்றார், அந்த அரங்கனிடம் சரணடைந்த காவேரி அமர்ந்திருக்கின்றாள்.
இந்தக் காட்சிப்படிதான் அரங்கன் அங்கே அருள்பாலிக்கிறார். இந்தத் தலம் இப்படித்தான் அன்றிலிருந்து அருள்பாலித்து வருகின்றது.
ஆலய வாயிலில் ஒரு முற்றத்தோடு கூடிய உள்பிரகாரம், ராஜகோபுரம் தாண்டி உள்ளே வந்ததும் இன்னொரு வெளிபிரகாரம் என ஆலயம் வரவேற்கின்றது.
காலத்தால் மூத்த இந்த ஆலயம் சமணம், பௌத்தம் எனப் போராடியே மீண்டு வந்தது. ஒன்பதாம் நூற்றாண்டில் சனாதனம் மீள தழைத்தபோது ஹோய்சால மன்னர்கள் இந்த ஆலயத்தை மீள ஸ்தாபித்தார்கள்.
பின் விஜயநகர சாம்ராஜ்யம், மைசூர் உடையார்கள் என ஆளுகைக்குட்பட்ட ஆலயம் சில காலம் ஹைதர் அலி, திப்பு ஆளுகைக்குள் இருந்தது. பல மதமாற்ற கொடுமைகளை செய்த திப்பு இங்கேதான் இந்த தலம் இருக்கும் ஊரில்தான் வீழ்ந்தான்.
பின் ஆலயம் மைசூர் உடையார்கள் ஆளுகைக்குள் வந்து பழைய பொலிவினை பெற்றது, பழமையும் புதுமையும் கலந்து கிடக்கும் ஆலயம் இது.
இங்கு அரங்கர் சாளக்கிராம கல்லில் சுயம்புவாக உருவாகி படுத்திருக்கின்றார்; அவர் அருகில் கௌதம முனிவரும், காவேரியும் உண்டு.
ரங்கநாயகி தாயார் தனி சந்நதியில் அமர்ந்திருக்கின்றார்.
நரசிம்மர், சுதர்சனர், ராம சகோதரர்கள், வெங்கடாசலபதி என எல்லோரும் தனித் தனி சன்னதியில் வீற்றிருக்கின்றார்கள்.
மகான் இராமானுஜர் வாழ்ந்த காலங்களில் இந்த ஆலயம் தனி தேசம்போல் அவரிடம் ஒப்படைக்கபாபட்டிருந்தது, அவர் நிர்வகித்த ஆலயங்களில் இதுவும் ஒன்று, அவருக்கு இங்கு தனி சன்னதி உண்டு.
“விதுர் வம்சதிகம்பம்” எனும் தூணில் பகவானின் 24 வடிவங்கள் பொறிக்கபாபட்டிருப்பது அபூர்வமானது.
இந்த ஆலயத்தில் சில விஷயங்கள் வேறு சம்பிரதாயம் கொண்டவை. அதன்படி இங்கு எல்லா ஆலயம் போல மார்கழியின் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுவதில்லை.
மாறாக, மகர சங்கராந்தி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும், அன்று பகவானுக்கு வெண்ணை காப்பு விசேஷம்.
அப்படியே ரதசப்தமியும் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
இது போக வைகாசி பௌர்ணமியில் கருட சேவை, ஆனி ஊஞ்சல், ஆடிப்பூரம், கருட ஜெயந்தி, சுதர்சன நட்சத்திர பூஜை இன்னும் பல பண்டிகைகள் உற்சாகமாக கொண்டாடப்படும்.
நவராத்திரி மிக விசேஷமாக கொண்டாடப்படும் தலங்களில் இதுவும் ஒன்று.
சித்திரை மாத வளர்பிறை சப்தமி கௌதம முனிவர்க்கு பகவான் காட்சி கொடுத்த நாள் என்றும், ஆடிப்பெருக்கு காவேரியின் பாவம் தீர்த்த நாள் என்றும் விசேஷமானது.
எண்ணற்ற அற்புதங்களை கொண்டது இந்த ஆலயம்; நடந்த நடக்கும் அற்புதங்கள் ஏராளம்; பகவான் எக்காலமும் அருள்புரியும் தலம் இது.
மார்கழிமாதம் தரிசிக்க வேண்டிய அரங்கனின் ஆலயங்களில் முக்கியமானது இது.
இந்த ஆலயம் தெளிவினைத் தரும்; தாங்கமுடியா சுமையினை இறக்கிவைக்கும் வழிவகையினைத் தரும்.
அப்படித்தான் கௌதவ முனிவர் தெளிவும் ஞானமும் பெற்று அவரின் கர்மம் கழிந்து சப்த ரிஷிகளில் ஒருவரானார்; அவரை சப்த ரிஷியாக்கிய ஆலயம் இது.
காவேரியின் பாவங்களை எல்லாம் பகவான் தன்னில் ஏற்று அவளின் கோரவடிவினை விடுவித்த ஸ்தலமும் இது.
இந்த அரங்கன் அறிதுயில் கொண்டிருக்கும் கோலம் அற்புதமான ஆன்மீக தத்துவம் கொண்டது.
பள்ளிகொண்ட பெருமாள் அல்லது அறிதுயிலில் இருக்கும் பெருமாளின் உருவம் என்ன சொல்கின்றது?
அங்கே அந்த பகவான் உறங்கிக்கொண்டிருப்பதாக அர்த்தமல்ல. அந்தப் பரம்பொருள் எல்லாம் உணர்ந்தே உறங்கிக்கொண்டிருக்கின்றான்; அந்த உறக்கத்தை “அறிதுயில்’ எனச் சொல்கின்றது வேதம்.
பகவான் எல்லாம் அறிந்தே அறியாதது போல் இருக்கின்றார் எனும் தத்துவம் அது, ஆயிரமாயிரம் அல்லல்களால் அலைக்கழிப்படும் மானிட மனம், அன்றாட லௌகீக வாழ்வினால் சஞ்சலப்படும் மனம், தெய்வம் என ஒன்று உண்டா இல்லையா என ஐயமுறும். இது மானிட இயல்பு.
அந்த இயல்பில் மானிடன் தடுமாறுவதை தடுக்கத்தான் இறைவன் உறங்குகின்றான் என எண்ணாதே; அவன் எல்லாம் அறிந்தே உறங்குவது போல் யோகத்தில் இருக்கின்றான்; உன் கவலை எல்லாம் அறிவான் என பரம்பொருளை பள்ளிகொண்ட கோலத்தில் வைத்தார்கள் இந்துக்கள்.
ஆம். பகவான் ஒவ்வொருவர் துயரம், கவலை, கண்ணீர், சிக்கல், கர்மா என எல்லாம் அறிந்தே அங்கே அறியாதது போல் பள்ளிகொண்டிருக்கின்றார்.
நடந்த தவறை கௌதம முனிவர் சொல்லுமுன்பே இறைவன் அறிந்திருந்தார், அப்படியே அவர் அறியாதது போல் அதற்கான தீர்வையும் வழங்கினார்.
காவேரி தாளமுடியா பாவத்துடன் அங்கே கதறி கோர உருவில் நின்றபோது அவள் பாவமெல்லாம் ஏற்று அவளை இயல்பாக்கியதும் அவரே.
இந்த இரு சம்பவங்களும் பெரும் உண்மையினை போதிக்கின்றன. முதலாவது, மானுடர்க்கு என்ன தேவை, அவர்கள் மனகுழப்பம் என்ன என்பதை பகவான் அறிகின்றார்; அவர் பேசுவதில்லை, கண்முன் நடமாடுவதில்லை என்றாலும் எல்லாமும் அறிந்தபடி அறியாதது போல் துயிலில் இருக்கின்றார்.
பகவான் தன்னை சரணடையும் போது அவர் அவனுக்கு பெரும் அற்புதம் நிகழ்த்தி தெளிவைத் தருகின்றார், நிம்மதி தருகின்றார்.
அப்படியே பெரும் பாவமும் மோசமான கர்மாவும் ஒருவனின் இயல்பை மாற்றிவிடும். காவேரி கோரமானாள் என்பது பாவங்களால் நிறைந்த மானுடன் கொடிய இயல்பும் அபாய சிந்தனையும் கொண்டிருப்பான் என்பதை சொல்வது.
அந்தக் கொடும் நிலையும் பகவான் மாற்றி அருள்புரிந்து, அவனையும் தன்னோடு சேர்த்துகொள்வார் என்பதே அடுத்த போதனை.
அரங்கன் என்பவர் அறிதுயில் கொண்டிருகின்றார், இரு காவேரிக்கு இடையில் அவர் பள்ளி கொண்டிருப்பது நடப்பது, நடக்க இருப்பது இரண்டையும் இணைப்பவர் பகவான் என்பதை சொல்லும் தத்துவம்.
அறிதுயில் என்பது அவர் இரு நிலைகளுக்கு இடையில் இருப்பதை, விழிப்பும் தூக்கமும், நடந்ததும் நடப்பதற்கும் இடையில் இருப்பதை சொல்லும் தத்துவம்.
லௌகீக வாழ்வு, ஆன்மீக வாழ்வு எனும் இரு நதிகளுக்கு இடையில் பகவான் அருள்பாலிகின்றார். இரு பக்கத்துக்குமே அருள்பாலிக்கின்றார் எனும் பெரும் தத்துவம்.
மார்கழி என்பது வெறும் வழிபாட்டுகாலம் மட்டுமல்ல, பாவம் கழியும் மாதமும் அதுதான்; அந்த மாதத்தில் அரங்கன் எங்கெல்லாம் உண்டோ அங்கெல்லாம் அவரை அண்டுவோர் பாவகர்மா தீரும். அதைத் தரும் ஆலயங்களில் இந்த ஸ்ரீரங்கப்பட்டணம் ஆலயமும் ஒன்று.
அங்கு இக்காலகட்டத்தில் காவேரியில் நீராடி அரங்கனை வழிபடுவோர் பாக்கியவான்கள். எல்லா பாவகர்மாவும் தீர்க்கப்பட்டு மேகம் நீங்கிய நிலவு போல் அவர்கள் வாழ்வு ஜொலிக்கும். காவேரி கரையின் வளம்போல் அவர்கள் செழித்து வாழ்வார்கள். இது சத்தியம்.


சப்த ரங்கம் 02 : சத்தியகாலம், சிவசமுத்திரம்
ஸ்ரீரங்க பட்டணத்தை அடுத்து வரும் இந்த இரண்டாம் ரங்கம் எனும் காவேரி தீவு “மத்ய ரங்கம்” என்றும் அழைக்கபடும்
காவேரியின் ஒரே ஒரு நீர்வீழ்ச்சியான சிவசமுத்திர்ம் அருகே இந்த ரங்கன் ஸ்தலம் அமைந்துள்ளது, இது
ஸ்ரீரங்கபட்டணத்தில் இருந்து 70 கல் தொலைவிலும், பெங்களூரில் இருந்து 130 தொலைவிலும் அமைந்துள்ளது
சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சியில் விழும்படி காவேரி பார்சுக்கி, ககனசுக்கி என இரண்டாக பிரிகின்றது, காவேரி இப்படி பிரியும் இடத்தில்தான் இந்த மத்திய ரங்கம் அமைந்துள்ளது
அதனை கொள்ளேகால் பகுதி என சொன்னாலும் இதன் சரியான இடம் சத்தியகாலம் என்பது
இந்த தலத்தின் வரலாறு ததீசி முனிவர் காலத்தில் இருந்து தொடங்குகின்றது, எந்த ஆயுதத்தாலும் கொல்லபட முடியாத வரத்தை விருத்தாசுரன் எனும் அசுரன் பிரம்மாவிடம் இருந்து வாங்கினான், அதை கொண்டு எல்லா உலகங்களையும் வென்று தேவலோகத்தையும் வென்று பெரும் மிரட்டலை செய்தான்
தேவர்கள் அவனுக்கு வரம்கொடுத்த பிரம்மாவினை தேடி செல்ல அவரோ விஷ்ணுவினை தேடி வந்தார்
விஷ்ணு அந்த அசுரனை அழிப்பது ததீசி முனிவரின் முதுகெலும்பு என்பதை சொல்லி, தவத்தால் தன் எலும்பினை மிக மிக சக்திவாய்ந்ததாக வைத்திருக்கும் அவராலே அவர் முதுகெலும்பாலேதான் அவனை கொல்லமுடியும் என ஆலோசனை சொன்னார்
இன்னும் முன்பு தேவர்களின் சக்திமிக்க ஆயுதம் அவரிடம் கொடுக்கபட்டிருந்தது, ஆனால் நெடுங்காலமாக யாரும் கோராததால் அந்த ஆயுதம் ஆபத்தானவர் கையில் சிக்க கூடாது என்பதற்காக அவரே அவற்றை கரைத்து குடித்திருந்தார், அந்த சக்தியும் அவர் எலும்பில் இருந்தது
ததீசியின் தந்தை அதர்வண மகரிஷி, அதர்வண வேதம் அவரால் உருவானது, அப்படியான சக்தி மிக்கவர் அம்முனிவர்
தேவேந்திரன் ததிசீ முனிவரை அணுகினான், விருத்தாசுரனால் ஏற்பட்ட கொடுமையினை சொன்னான், மனமிரங்கிய முனிவர் தானே தன்னை தியாகம் செய்து அந்த எலும்பை தருவதாக சொன்னார்
அதன்படி அவர் உடலெல்லாம் உப்பு பூசி அமர்ந்திருந்தார், ஒரு பசுவந்து அதை நக்கும்போது அவரின் சதையெல்லாம் உதிர்ந்து எலும்பு எஞ்சியது
அக்னி அவர் உடலை தொட அஞ்சியதால் ஒரு மாயபசு வந்து அவர் சதையினை அகற்றிற்று, அதை உருவாக்கியவரும் முனிவரே
அந்த முனிவரின் அதை கொண்டு விருத்தாசுரனை எளிதாக வீழ்த்தினான் இந்திரன், ஆனாலும் முனிவரை தியாகம் செய்ய தூண்டிய சாபம் அவனை பிரம்மஹத்தியாக பிடித்து கொண்டது, அந்த சாபம் தீர இந்திர்ன் வழிபட்ட தலம் இந்த சத்தியகாலம் ரங்கன் ஆலயம்
(இந்த ததிசீ முனிவர் தியாகம்தான் “அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என வள்ளுவன் எனும் இந்துஞானியால் எழுதபட்டது
இந்த ததிசீ முனிவரின் தியாகமே இன்றும் இந்திய ராணுவத்தினருக்கு வழங்கபடும் பரம்வீர் சக்ரா எனும் உயரிய விருதில் அவரின் எலும்புடன் கூடிய வகஜிராயுத முத்திரையாக உள்ளது )
இப்படி இந்திரன் பிரம்மஹத்தி சாபம் தீர்ந்த இடம்தான் இந்த சத்தியகாலம் எனும் இரண்டாம் ரங்கம், இது ஸ்ரீரங்கத்துக்கும் , ஸ்ரீரங்கபட்டினத்துக்கும் இடையில் இருப்பதால் இது மத்தியரங்கம் என்றாயிற்று
த்ரேதா யுகத்தில் இருந்து வரும் இந்த ஆலயம் காலம் காலமாக நின்று கொண்டிருக்கின்றது
இந்த ஆலய அரங்கன் ஜெகன் மோகன ரங்கநாதர்” என பெயர், காண்போரை வசீகரிக்கும் அழகான ரங்கனாகவும், உலகின் மிக அழகானவரும் , பார்த்த மாத்திரத்தில் மோகன புன்னகை சிந்தி வசீகரிப்பவருமான ரங்கனுக்கு அப்பெயர் வந்தது
மிக மிக அழகானவர் அந்த ஜெக மோகன ரங்கர். மோகன ரங்கம் எனும் பெயர் இந்த ஆலயத்தின் அரங்கனில் இருந்துதான் உருவாயிற்று
இங்கு அரங்கநாதர், தாயார், ததிசீ முனிவர் என பல சன்னதிகள் உண்டு, அப்படியே ராமானுஜருக்கும், வேதாந்த தேசிகருக்கும் இங்கு சன்னதி உண்டு
இந்த ஆலயம் இந்து மன்னர்கள் இருந்தவரை வெகு சிறப்பாக இருந்தது, சோழமன்னர்கள் கரூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த காலங்களில் இந்த ஆலயத்துக்கு அள்ளி அள்ளி கொடுத்து வழிபட்டிருக்கின்றார்கள்
இந்த தலத்தின் வளாகத்தில் இன்னும் சோமேஸ்வர ஆலயம், பிரச்சன மீனாட்சி ஆலயம் என துணை ஆலயங்கள் உண்டு
ஆதிசங்கரர் இங்கு வந்து வழிபட்டிருக்கின்றார், அவர் பதித்த சக்கரம் இந்த வளாகத்தில் உண்டு, அவ்வளவு முக்கியமனது இந்த அரங்கநாதர் ஆலயம்
ராமானுஜர் இங்கு அடிக்கடி வந்து வழிபட்டிருக்கின்றார், ஜடாவர்ம சுந்தரபாண்டியன் ஆட்சியில் இந்த ஆலயத்துக்கு பாண்டியர்களும் திருப்பணி செய்துள்ளனர்
13ம் நூற்றாண்டில் தெற்கே மாபெரும் ஆலய கொள்ளையினை மாலிக்காபூர் செய்தபோது ஸ்ரீரங்கம் மிக பெரிய அழிவினை சந்தித்தது, வேதங்களை காக்கவும் மகா புனிதமான அபூர்வ ஏடுகளை சுவடிகளை காக்கவும் சவால் ஏறபட்டது
அந்நேரம் ஸ்ரீரங்கத்தில் இருந்து பிரம்ம சூத்திரம், இதர பாஸ்யம் என மிக பெரிய பொக்கிஷங்களை எடுத்துகொண்டு வேதாந்த தேசிகர் இங்குதான் வந்தார், மலையும் காடும் நிரம்பிய இந்த தலம் பாதுகாப்பானது என கருதி அவர் இங்குதான் வசித்தார்
அப்படி அந்த ஏடுகளை வேத விளக்கங்களை காத்து தந்த ஆலயம் இந்த மத்தியரங்க ஆலயம்
இந்த ஆலயத்தின் முதல் நெருக்கடி 15ம் நூற்றாண்டு வாக்கில் ஏற்பட்டிருக்கின்றது, தலைக்காடு சாபம்
அதாவது 15ம் நூற்றாண்டு வாக்கில் திருமலை ராஜா என்பவர் அப்பக்கம் ஆட்சி செய்தார், அவர் தன் நோயின் பொருட்டு தலைக்காடு வைத்தீஸ்வரர் கோவிலில் தங்கி இருந்து வழிபட்டார்
நோய்களை தீர்த்துவைக்கும் அந்த வைத்தீஸ்வரர் கோவிலில் தங்கி நோயாளிகள் நல்மபெறுவது வாடிக்கை என்பதால் மன்னர் சிலகாலம் அங்கே தங்கினார்
அவரை காண அவர் மனைவியும் அடிக்கடி வந்தாள் அதே நேரம் ராஜியபரிபாலனையும் பார்த்து கொண்டாள்
ஒருமுறை கொஞ்சகாலம் வைத்தீஸ்வர்ன கோவிலில் தங்க விரும்பியவள் ஸ்ரீரங்கபட்டன பொறுப்பை மைசூர் மன்னனிடம் கொடுத்துவிட்டு வைத்த்ஸ்வர்ன கோவில் சென்றாள்
மைசூர் மன்னனுக்கு பெரும் வஞ்சக ஆசை ஏற்பட்டது, ராணியின் வைர அபூர்வ மூக்கித்தியினை அவன் அபகரிக்க முயல அதிலிருந்து வந்த சர்ச்சை சண்டையாயிற்று
சண்டையில் திருமலை ராஜா கொல்லபட்டார், ஆத்திரமான ராணி அந்த வைரமூக்குத்தியினை ஆற்றில் எறிந்துவிட்ட்டு இந்த இடம் மண்மூடி போகட்டும், மைசூர் ராஜாவுக்கு ஆண்வாரிசு இல்லாமல் போகட்டும் என சபித்து அவளும் காவேரியில் குதித்து இறந்தே போனாள்
அந்த பத்தினி சாபம் பலித்து அப்பக்கம் பெரும் மண்மேடுகள் உருவாயின, இன்றும் அவற்றை காணலாம்
(அப்படியே மைசூர் அரசகுடும்பம் வாரிசு இல்லாமல் போனது, 400 ஆண்டு கழித்து இப்போதுதான் ஒரு ஆண்வாரிசு வந்தது)
இப்படி அந்த சாபம் காரணமாக அந்த பிரதேசமே மண்மூடி போகும் போது இந்த ஆலயமும் பொலிவிழந்தது
ஆனால் 17ம் நூற்றாண்டின் இந்து எழுச்சியில் இது மீண்டது, மைசூர் மன்னர்கள் சுமார் 800 முதல் ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த அரங்கனுக்கு கொடுத்தார்கள்
அது விளைச்சல் நிலம் என்பதால் வ்ருமானம் கொட்டிற்று, சுமார் 100 அந்தணர்கள் அனுதினமும் ஓதி வழிபடும்படி இந்த ஆலயம் வெகு விமரிசையாக் கொண்டாடபட்டது
ஆனால் 19ம் நூற்றாண்டில் ஆங்கில பிரிட்டிசார் ஆட்சியின் நயவஞ்சக நில அளப்பில் இந்த ஆலயத்தின் நிலம் பாதிக்கபட்டது
பின் மாகாணம் தமிழ்நாடு கன்னடம் என பிரிந்தபோது பெருவாரியான நிலங்கள் தமிழகத்துக்குள் சிக்கி அதனை தமிழக இந்து அறநிலையதுறை எடுத்துகொள்ள ஆலயத்தின் சோதனைகாலம் தொடங்கிற்று
மன்னர்கள் இல்லாததால் அதனை உரிமையோடு ஏற்று செய்ய ஆளில்லை எனும் அளவில் அது பொலிவிழந்து கவனிக்கபடாமல் போனது
ஆனால் ஒரே ஒரு மனிதர் தனியாக போராடினார் அவ்ர் பெயர் கிருஷ்ணபட்டர்
தன் 12ம் வயதுமுதல் அந்த ஆலயத்தில் சேவகம் செய்யவந்த அவர் தன் 90 வயது வரை தனிமனிதனாக எந்த லாப கணக்குமின்றி ஆலயத்திற்கு பணிசெய்து காத்தார்
பட்டமரத்தில் அமர்ந்த ஒற்றை கிளியாக அவர் மட்டும் அங்கே வழமையான அர்ச்சனைகளை செய்து அந்த ஆலயம் அழியாமல் பார்த்து கொண்டார்
அவரின் தியாக வாழ்வால் அந்த ஆலயம் மெல்ல மீண்டது, இப்போது அவர் மகன் தலமையில் பக்தர்கள் கூடி ஆலயத்தை மீட்டெடுத்து சீர்படுத்தி வருகின்றார்கள்
இந்து அரசுகளின் வீழ்ச்சியும், காங்கிரஸ் திராவிட குழப்பங்களும் எப்படியெல்லாம் புராதன் இந்து ஆலயங்களை கடுமையாக பாதித்தன என்றால் இப்படித்தான், அவைகளின் இந்து துவேஷத்துக்கு இந்த ஆலயம் ஒரு சான்று
ஆனாலும் மாலிக்காபூர் காலம், தலைக்காடு சாபம் என எல்லாம் தாண்டி நிற்கும் இந்த ஆலயம் பிரிட்டிஷ் சதிகளையும் தாண்டி இப்போது பொலிவு பெற்று வருகின்றது
மார்கழியில் மறக்காமல் வழிபட வேண்டிய ஆலயங்களில் இந்த மத்திய ரங்கம் எனும் இரண்டாம் ரங்கம் முக்கியமானது
அந்த ஜெக மொகன ரங்கர் சாதாரணமாக வந்தவர் அல்ல, இந்திரன் தன் சாபம் தீர விஸ்மகர்மாவால் சாளகிராமத்தில் உருவாக்கிய அரங்கன் அவர்
ஸ்ரீரங்க ரங்கநாதருக்கு என்ன பெருமை உண்டோ அதே பெருமை இந்த மத்திய ரங்க பெருமாளுக்கும் உண்டு, அவ்வளவு சிறப்பனாவர் இந்த ரங்கன்
அதுவும் பெருமாள் கோவிலில் இங்கு மட்டும்தான் ஆதிஷேஷன் சிலைமேல் கருடனும் அமர்ந்திருக்கின்றார். அதாவது பகை கொண்ட பாம்பும் கருடனும் பெருமாள் முன் சமமாக அமர்ந்திருப்பது இங்குதான்
இந்த ஆலயம் வடகலை தென்கலை மக்கள் ஒருகாலத்தில் ஒன்றாக சர்ச்சையின்றி ஒரு சேர வழிபட்ட ஆலயம் இது
இங்கும் ரங்கன் அருகே தேவியர் இல்லை காவேரி அவர் காலடியில் அமர்ந்திருக்கின்றாள், காவேரி தேவியரின் அம்சம் என்பதால் அங்கே அவள் மட்டும்தான் உண்டு
மகா சிறப்பான இந்த இரண்டாம் ரங்க ஸ்தலத்தை மார்கழியில் வணங்கினால் பலன் அதிகம்
இந்த ரங்கன் விஷேஷமான தத்துவம் போதிப்பவர், அங்கே கருடனும் நாகமும் ஒரு சேர அமர்ந்திருப்பதை காணலாம்
அதாவது நன்மை தீமை கடந்தவர் அப்பெருமான், அவர் இருவரையும் சமமாகவே பார்க்கின்றார், தீயவரிடம் இருந்து தீமையினை பறித்து அவர்களையும் பரிசுத்தமாக்கி தன்னோடு சேர்க்கின்றார்
அந்த பெருமாளுக்கு அசுரனும் பக்தன் ததிசீ முனிவரும் பக்தர், பெருமாள் இருவரையும் கடந்த நிலையில் அதாவது மானுடரின் விருப்பு வெறுப்புக்கு அப்பால் இருப்பவர்
உலகில் கருடனும் தேவை பாம்பும் தேவை இரண்டையும் சமபடுத்த ஒரு சக்தியும் தேவை என்பதை பாம்பணையில் படுத்து கொண்டே கருடனை வாகனமாக கொண்டு பகவான் உணர்த்டுகின்றார்
ஆம், ம்மதமும் சொல்லா பெரும் தத்துவத்தை இந்துமதம் போதிக்கின்றது
பல மதங்களில் கடவுள் நல்லவர் சாத்தான் கெட்டவன். சாத்தான் கடவுளை அடையாமல் மானிடனை நரகத்துக்கு இழுப்பான் என்பார்கள்
ஆனால் சாத்தான் எங்கிருந்து வந்தான் அவனை ஏன் கடவுள் படைக்க வேண்டும் என்பதை சொல்லமாட்டார்கள்
இந்துமதம் அதை தெளிவாக சொன்னது, தெய்வம் நன்மை தீமைக்கு அப்பாற்பட்ட சக்தி. அது முழு ஞான சக்தி என்றது
இதனாலே அது பாம்பை தன் காலடியிலும் கருடனை தன் வாகனமாகவும் பரம்பொருள் இருப்பதாக காட்டிற்று,
இந்துமதம் சாத்தான் என எதனையும் சொல்லாது மாறாக மாயை எனும் சோதனையினை அறியாமையினை சொல்லும் அந்த மயக்கத்தில் இருந்து மீண்டால் முக்தி சாத்தியம் என்பதை சொல்லும்
அந்த ஞானத்தை அடைய நன்மையும் தீமையும் அவசியம் என சொல்லும்
மிக நன்மையான காரியங்களை வாழ்வில் செய்தால் அதை தொலைக்க நல்ல கர்மாவும், கெட்ட காரியங்களை செய்தால் அதனை கழிக்க கடினமான வாழ்வும் எடுக்க பிறக்க வேண்டும் என சொல்லும்
நன்மை தீமை கடந்த வாழ்வே ஞான பெருநிலை என சொல்லும் மதம் இந்துமதம், அதாவது எல்லாம் கடந்த சூனிய பெருநிலை
அந்த நிலையினை குறிக்கத்தான் ஒருபக்கம் கருடனையும் ஒரு பக்கம் பாம்பினையும் தராசில் நிறுத்தினான் பரம்பொருள், முள் சரியான நிலையினை காட்டிற்று
வாழ்வின் நன்மை தீமைகளை இறை அருளால் கடந்து ஞானம் அடையவேண்டும் என்பதையே கருடன் பாம்பு வடிவில் காட்டிற்று
எதையும் அதிகம் நேசிக்காதே, எதையும் அதையும் தூற்றாதே , எல்லாமும் இங்கு இறைவனால் அனுமதிக்கபட்டது என்பதுதான் அந்த தத்துவம்
இந்த தத்துவம்தான் ராமாயணத்தில் சொல்லபட்டது, பாரதத்தில் சொல்லபட்டது, தேவ அசுர யுத்தமெல்லாம் சொல்லபட்டது
இந்த உலகம் நன்மைகளாலும் தீமைகளாலும் சூழபட்டது, அதுதான் ஒரு மனிதனுக்கு ஞானத்தை கொடுக்கும், தர்மம் தன்னை யாரென கட்ட அதர்ம சக்திகள் தெய்வத்தால் அனுமதிக்கபட்டதே என்பதை அழுத்தி சொன்னது இந்துமதம்
எக்காலமும் இங்கு நல்லவரும் தீயவரும் இருப்பார்கள், நன்மையும் தீமையும் உண்டு அதை கொண்டு ஞானம் அடைந்து இறைவனை உணர்தல் வேண்டும் என்பதுதான் இந்த கருடனும் பாம்பும் சொல்லும் பெரும் தத்துவம்
பாம்பின் விஷம் ரத்தினமாக மாறுவது போல மானிடனின் கெட்ட சிந்தனையும் ஒருநாளில் ஞானமாக மாற வேண்டும், உயர பறந்தாலும் வானை மீற கருடனால் முடியாது வானம் மிக பெரியது இறைவன் மிகபெரியவன் என்பதை உணர்த்தும் தத்துவம் அது
பிரபஞ்சத்தின் இயக்கு சக்தியினை சுதர்சன சக்கரமாக சொன்ன இந்துமதம், இன்னும் சில சூட்சும சக்திகளை கருடனாகவும் பாம்பாகவும் காட்டிற்று
அவைகளை நோக்கி வழிபட இறை அருளில் ஞானம் பெருகும் வாழ்வு வளமாகும் என்பதை சொல்லிற்று
அந்த சக்திகளை சக்கரத்தாழ்வார், கருடாழ்வார் என ஆழ்வார்களாக அறிவித்தது, அந்த பெரும் சக்தியினை ஆதிஷேசனாக நிறுத்தியது
இந்த வடிவங்களில் அதாவது கருடனோ பாம்போ சக்கரமோ வழிபடும்பொழுது அந்த அந்த பிரபஞ்ச சக்தி மானிடருக்கு கிடைக்கவும் அதனால் தெளிவு வரவும் பல ஏற்பாடுகளை செய்தது இந்துமதம்
தன்னுள் இருக்கும் இறைவனை உணர்தலும், தன் ஆத்மாவில் இறைவனை சுமக்க வேண்டும் என்பதே இதன் தத்துவம், அந்த கருடனையும் நாகத்தையும் வணங்க வணங்க பிரபஞ்ச பெரும் சக்தி இறங்கி வருகின்றது
அது நன்மை தீமைக்கு அப்பாற்பட்ட நிலைக்கு மனிதனை இழுத்து செல்கின்றது, அப்படிபட்ட நிலைக்கு செல்லும் மனிதன் ஞானமடைந்து முக்தியடைவான்
இந்த தத்துவத்தை மிக அழகாக போதிக்கின்றது இந்த சத்தியகாலம் ரங்கன் ஆலயம் எனும் மத்ய ரங்கம்
பகவானுக்கு எல்லாருமே ஒன்று, பாம்பும் கருடனும் ஒன்று தேவரும் அசுரரும் ஒன்று, நல்லவனும் பாவியும் ஒன்று
ஆனால் அதே நேரம் எது தர்மமோ எது அறமோ அதை செய்பவர்
சாகாவரம் என யாருக்கும் பகவான் அருளவில்லை தவம் செய்தோர்க்கும் சில நிபந்தனையுடனே வரமளித்தார், அப்படியான நிபந்தனை வரம் நிர்ந்தரம் என அசுரன் ஆடினான்
எல்லாம் அறிந்த பெருமான் ததிசீ முனியின் தியாகத்தால் அவனை வீழ்த்தினார், அவன் ஞானமடைந்து உண்மை உணர்ந்தே வீழ்ந்தான்
எல்லா அகங்காரமும் ஒரு தியாக்த்தால் வீழும் , உருக்கமான அன்பினால் வீழும் என்பதை சொல்லி அங்கே அருள்பாலிக்கின்றார் ரங்கன்
மார்கழியில் இங்கு வழிபடும் போது இந்த தத்துவம் அவசியம், அங்கே வழிபடும் போது ஒரு தியாகத்தை சொல்லி வழிபடுங்கள், ஏதாவது ஒன்றை தியாகம் செய்வதாக, பிறர் நலத்தின் பொதுநலத்தின் இந்த தர்மத்தின் பொருட்டு ஏதோ ஒன்றை தன்னலமற்று தியாகம் செய்வதாக சொல்லி பிரார்த்தியுங்கள்
அது பொருளா, செயலா, பழக்கமா இல்லை வேறு பிடித்தமான ஒன்றா, நேசிக்கும் ஒன்றா என்பதல்ல விஷயம் , உங்களால் முடியும் ஏதோ ஒரு தியாகத்தை செய்யுங்கள்
அப்போது நீங்கள் பகவானால் பன்மடங்கு ஆசீர்வதிக்கபடுவீர்கள், மாபெரும் வளமும் பலமும் உங்களை சூழும், உங்க்ள் எதிரிகள் அல்லது எதிரான சூழலெல்லாம் தவிடுபொடியாக போகும்
அந்த அர்பணிப்பான ஒரு தியாகத்தை அந்த ஆலயத்தில் சொல்லி செய்து வழிபடுங்கள் ததீசி முனிவரின் நினைவாக வழிபடுங்கள், அப்போது பகவான் நிச்சயம் உங்கள் வேண்டுதலை கேட்பார்
எந்த பெரிய பாவம் செய்திருந்தாலும் அது அங்கே மன்னிக்கபடும், அந்த மோகன ரங்கர் உங்களை எல்லா விதத்திலும் ஆசீர்வதித்து உங்கள் வாழ்வை மாற்றுவார்
இந்திரன், ஆதிசங்கரர், விஸ்வகர்மா என பெரும் பிம்பங்கள் வழிபட்ட அந்த இடத்தில், ராமானுஜர் வணங்கிய தலத்தில், வேதாந்த தேசிகர் வேதமும், பெரும் பெரும் ஏடுகளை காத்து மீட்டு வழிபட்ட தலத்தில் நீங்களும் வழிபட பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்
அங்கே சென்று வழிபடுங்கள், அந்த மோகன ரங்கனின் மெல்லிய புன்னகையில் அறிதுயிலில் இருக்கும் பகவானை நீங்கள் பார்க்கும் போது உங்களை அறியாமலே உங்கள் வாழ்வின் சாபம் நீங்கி நன்மையெல்லாம் சூழ தொடங்கும், கெட்டதெல்லாம் அகன்று நன்மையானவை உங்களில் கலந்துவரும் , உங்கள் வாழ்வே மாறும் இது சத்தியம்
இந்த ஆலயம் முழு பொலிவடைதல் நன்று, காசி முதல் பல ஆலயங்கள் துலங்கும் இக்காலம் இந்த ஆலயமும் துலங்கினால் தேசத்துக்கும் சனாதனத்துக்கும் மிக்க நல்லது
வைஷ்ணவ பக்தர்கள் மடங்களுடன் கூடி முன்னெடுக்க வேண்டிய முயற்சி இது, அதை செய்வார்கள் என எதிர்பார்ப்போம்


சப்த ரங்க ஆலயம் 03 : ஸ்ரீரங்கம்
இந்துஸ்தானின் ஆலயங்களில் தனித்துவமானதும், இந்து மரபின் மாபெரும் பொக்கிஷங்களில் ஒன்றானதும், காசி ஆலயம் போல மகா பழமையான ஆலயங்களில் முக்கியமானதும், பெரும் செல்வம் கொழித்து சோமநாதபுரி ஆலயம் போல உலகை ஈர்ததுமான அந்த ஸ்ரீரங்கத்தின் பெருமை ஏடுகளில் எழுதி முடிக்க முடியாதது, எவ்வளவு பேசினாலும் தீராதது
அந்த ஆலயத்தின் வரலாறு திரேதாயுகத்திற்கு முன்பே தொடங்குகின்றது, பாற்கடலில் பரந்தாமன் இருக்கும் அந்த தோற்றத்தை அப்படியே கொண்டிருக்கும் பகவானின் திருமேனி வடிவத்தை பிரம்மன் தன் தவத்தால் பெற்றான், அந்த திருமேனி பாற்கடலில் இருந்து சுயம்புவாய் பிரம்மனுக்கு கிடைத்தது
பிரம்மன் அதனை சூரியனிடம் கொடுத்து வழிபட சொன்னான், சூரியன் அதனை தன் வம்சத்தில் வந்தவனாகிய இஷவாகு மன்னனிடம் கொடுத்தான்
இஷவாகு மன்னர் பரம்பரையில் வந்த ராமபிரான் அயோத்தியில் முடிசூடியபோது அங்கே வந்த ராவணனின் தமி விபீஷன் அந்த உருவத்தில் மயங்கிபோக, யார் எதை கேட்டாலும் அருளும் ராமபிரான் அந்த சுய்மபு வடிவ பகவானை அவனுக்கே கொடுத்தார்
அதனை அவன் இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவேரியின் தீவு ஒன்றில் கீழே வைக்கும்படி விநாயக பெருமான் வழி செய்தார், அதன் பின் அந்த மேனியினை அசைக்க விபீஷ்ணனால் முடியவில்லை, அதே நேரம் “நான் இங்கே வாசம் செய்ய விரும்புகின்றேன், இங்கிருந்தே தெற்கு நோக்கி உனக்கு அருள் பாலிக்கின்றேன்” என பகவான் திருவுளம் பற்ற அவரை அங்கே ஸ்தாபித்துவிட்டு இலங்கை திரும்பினான் விபீஷன்
இப்படி காவேரிக்கு இடையான தீவில் ஒரு மேடையில் அதாவது ரங்கம் என சொல்லபடும் மேட்டு பகுதியில் அவர் குடிகொண்டதால் ரங்கன் என்றானார், அந்த தலம் ஸ்ரீரங்கம் என்றாயிற்று
பாற்கடலில் பிரம்மனுக்கு கிடைத்த அரங்கனே, சுயம்புவாக வந்த அரங்கனே குடிகொண்ட ஸ்தம் என்பதால் அது பூலோக வைகுண்டம் என்றாயிற்று, திவ்ய தேசங்களில் முதன்மையானது இதுதான்
இந்த ரங்கநாதருக்கு முதலில் ஆலயம் எழுப்பியவன் தர்ம வர்ம சோழன், ஆனால் ஒருமுறை இந்த ஆலயம் காவேரி வெள்ளத்தால் மண்மூடபட்டு மறைக்கபட்டது, பின்னர் ஒரு சோழமன்னன் அதை மீட்டான்
அவன் அந்த மணல்மேட்டில் ஒரு மரததடியில் ஓய்வில் இருந்தபோது கிளி ஒன்று “இது நாராயணன் இடம்” என சொன்னதையே சொல்லிகொண்டிருந்தது, அதன் அர்த்தம் பிரியாமல் அவன் தடுமாறியபோது பகவானே அவனுக்கு தன்னை வெளிகாட்டினார்
அதன் பின் அந்த கிளியினை பின் தொடர்ந்து அது அடையாளம் காட்டிய இடத்தினை தோண்டி ரங்கனை கண்டான் , அவனே அந்த ஆலயத்தை மீள எடுத்து கட்டினான். ஆலயத்தை மீட்டெடுக்க கிளி வழிகாட்டிய சோழன் “கிளி சோழன்”, “கிளி வளவன்” என்றானான் அது “கிள்ளி வளவன்” என மாறிற்று
இன்றும் அவன் ஆலயத்தில் அமைத்த கிளிமண்டபம் அவன் அந்த ஆலயத்தை பகவானின் உத்தரவுபடி மீட்டெடுத்த சாட்சியாய் நிற்கின்றது
இப்படி அற்புதமாக மீண்ட ஆலயத்தை உலகுக்கு முதலில் சொன்னவர்கள் புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும். இவர்கள் இருவருமே சிவபக்தர்கள்
இவர்கள் சிவநடனம் கண்டு முக்தி அடைய விரும்பி சிதம்பரம் வந்தார்கள், சிவபெருமான் அவர்களுக்கு தன் நடனத்தை காட்டி பின் பல தலங்களை தரிசிக்க செய்து கடைசியில் ஸ்ரீரங்கம் ஆலயத்தில் பகவானை சந்தித்து முக்தி அடையும்படி வழிகாட்டினார்
ஆம், இந்த பூமியில் பிறந்த மானுடர் மட்டுமல்ல ஏழு உலகில் வாழ்வோரும் பகவானின் காவலை பெறாமல் அவரை தரிசிக்கமால் முழுமையாக முடியாது முக்தி அடையமுடியாது என்பது சிவனே கொடுத்த வாக்கு
ஆம், இந்த ஆலயம் முழுமை தரும் ஆலயம், ஒருவன் எதை வேண்டி வருகின்றானோ அந்த குறையினை தீர்த்து முழு முழுமையினை தரும் ஆலயம், முக்தி தரும் ஆலயம் அதனாலே பூலோக வைகுண்டம் என்றாயிற்று
இங்கே மூவேந்தர்களும் திருபணி செய்தார்கள், விஜயநகர மன்னர்கள் உள்ளிட்ட பல மன்னர்கள் செய்தார்கள், என்றாலும் திருமங்கை ஆழ்வார் பல இடங்களில் அறத்துக்கு அப்பாற்கட்டு பொருள் குவிக்கபட்டு பதுக்கபட்டிருந்த இடங்களில் இருந்தும் , பவுத்த விகாரைகளில் இருந்தும் கொண்டுவரபட்ட பொருளை கொண்டு இந்த ஆலயத்தை மகா பிரமாண்டமாக கட்டினார்
இன்றிருக்கும் பிரமாண்ட ஆலயத்துக்கு அவர்தான் காரணம்
இந்த ஆலயத்தினை 11 ஆழ்வார்கள் தரிசித்து பாடியிருக்கின்றார்கள். நம்மாழ்வார் மட்டும் ஆழ்வார் திருநகரியினை விட்டு வெளிவராததால் இங்கு அவர் உடலோடு வந்து வழிபடவில்லை ஆனால் அவர் பாடல்களில் இந்த தலத்தை பெரிதாக பாடியிருக்கின்றார்
இங்குதான் ஆண்டாள் நாச்சியாரும், திருப்பாணாழ்வாரும் பகவானின் சன்னதியிலே காயத்தை காற்றில் கரைத்து ஜோதி வடிவாய் முக்தி அடைந்தார்கள்
இந்த ஆலயத்தில் எக்காலமும் பகவான் உண்டு, சாதி துவேஷங்களுக்கு அப்பாற்பட்ட ஆலயம் இது, தன் மேல் பக்தி கொண்ட சவர தொழிலாளிக்காக பகவானே அவன் இல்லம் சென்ற வரலாறும், பாணர் குலத்தில் பிறந்தவரை தன்னோடு பகவான் சேர்த்த வரலாறும் இங்குதான் நடந்தது
இப்படி ஏராளமான சாட்சிகள் இங்கு உண்டு, பகவான் எக்காலமும் இங்கு பெரும் அற்புதங்களை செய்வது வாடிக்கை
இந்த ஆலயம் ஏழு என்பதை மிக அழகாக ச்மபந்தபடுத்தும் ஆலயம், பகவான் ஏழு உலகுக்கும் காவல் செய்பவர் என்பது தொடங்கி, ஏழு பிறப்புக்கும் அவரை அண்டாமல் அவரை பணியாமல் வாழ்வு இல்லை, முக்தி இல்லை என்பதை சொல்லும் தத்துவம் இது
அதன்படி ரங்கநாதர் கோயில் உள்ள ஏழு மதில் சுற்றுகள் ஏழு உலகங்களாக கருதப்படுகின்றன.
மாடங்கள் சூழ்ந்த திருச்சுற்று என்பது பூலோகம், திருவிக்கிரம சோழன் திருச்சுற்று என்பது புவர்லோகம், அகலங்கனென்னும் கிளிச்சோழன் திருச்சுற்று என்பது சுபர்லோகம், திருமங்கை மன்னன் திருச்சுற்று என்பது மஹர்கோகம், குலசேகரன் திருச்சுற்று என்பது ஜநோலோகம், ராஜமகேந்திர சோழன் திருச்சுற்று என்பது தபோலோகம், தர்மவர்ம சோழன் திருச்சுற்று என்பது சத்யலோகம் என்று கருதப்படுகின்றன.
பெரிய கோயில், பெரிய பெருமாள், பெரிய பிராட்டியார், பெரிய கருடன், பெரியவசரம் (நைவேத்தியம்), பெரிய திருமதில், பெரிய கோபுரம் என் அதன் பெருமைகள் ஏழு
ஸ்ரீதேவி, பூதேவி, முதல் சேரகுலவல்லி நாச்சியார் கோதை நாச்சியார், ரங்கநாச்சியார் என்று நாச்சியார் சன்னதிகள் ஏழு
ஸ்ரீரங்கம் கோயிலில் வருடத்துக்கு 7 முறை நம்பெருமாள் நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார். வருடத்துக்கு 7 முறை நம்பெருமாள் கோயிலை விட்டு வெளியே எழுந்தருள்வார்.
தாயார் சந்நிதியில் வருடத்துக்கு 7 உற்சவங்கள் நடைபெறும்.
நவராத்திரி உற்சவத்தின் 7-ம் திருநாளில் ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும். தமிழ் மாதங்களில் 7-ம் மாதமான ஐப்பசி 30 நாட்களும் தங்க குடத்தில் புனிதநீர் யானை மீது கொண்டு வரப்படும்.
பன்னிரெண்டு ஆழ்வார்களும் 7 சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். முதல் சந்நிதியில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், இரண்டாம் சந்நிதியில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், மதுரகவியாழ்வார், மூன்றாம் சந்நிதியில் குலசேகர ஆழ்வார், நான்காம் சந்நிதியில் திருப்பாணாழ்வார், ஐந்தாம் சந்நிதியில் தொண்டரடிப்பொடி ஆழ்வார், ஆறாம் சந்நிதியில் திருமழிசை ஆழ்வார், ஏழாம் சந்நிதியில் பெரியாழ்வார், ஆண்டாள் எழுந்தருளியுள்ளனர்.
வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாக 7 சேவைகள் உள்ளன. அவை பூச்சாண்டி சேவை, கற்பூர படியேற்ற சேவை, மோகினி அலங்காரம், ரத்னாங்கி சேவை, வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாகனம், உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீராமநவமி சேர்த்தி சேவை, தாயார் திருவடி சேவை, ஜாலி, சாலி அலங்காரம் என்பன அவை
இந்த ஆலயத்தின் சிறப்புக்கள் ஏராளம் உண்டு, கம்பன் இங்கேதான் தன் ராமாயணத்தை தாயார் சன்னதிக்கு எதிரே உள்ள அரங்கத்தில் முதலில் பாடினான், அவனின் “சடகோபன் அந்தாதி” அங்கேதான் பாடபட்டது
இங்கிருக்கும் தன்வந்திரி சன்னதி சிறப்பு வாய்ந்தது, தன் வந்திரி பகவானுக்கு தனி சன்னதி கொண்டிருக்கும் ஆலயம் இதுதான், அட்டைபூச்சியும் அமுத கலசமுமாக அவர் காட்சி தருகின்றார், இங்கு தீராத வினை எல்லாமே தீரும்
இங்கே சக்கரத்தாழ்வார் சக்திவாய்ந்தவர அந்த சன்னதியில் கேட்டவரம் நிச்சயம் கிடைக்கும்
இந்த ஆலயத்தில்தான் ராமானுஜர் எனும் மாபெரும் மகான் தங்கியிருந்து தமிழில் வழிபாடு முதல் எல்லாமே போதித்தார், இந்தியா எங்கும் சுற்றி பெரும் மறுலர்ச்சியும் சீர்திருத்தமும் செய்து சனாதனத்தை வாழவைத்த அந்த மகான் இங்குதான் தங்கியிருந்து திருபணி செய்தார்
அவரின் திருமேனி இன்றும் அங்கு அழியாமல் காக்கபடுகின்றது, தானாய் உவந்த திருமேனி அங்கே சன்னதி கட்டி காக்கபடுகின்றது
இந்த ஆலயத்தில் இன்றும் விளங்காத பல சூட்சுமங்கள் உண்டு, மிக மிக அபூர்வமான அந்த சூட்சுமங்கள் எப்போதுமே ஆச்சரியமானவை, விடை தெரியாதவை பகவானின் விளையாட்டு அவர் அங்கே இருப்பதன் சாட்சி என அவை இன்றும் என்றும் தொடரும்
ஆம், ஏழு அதிசயங்களை அது கொண்டிருக்கின்றது
முதலாவது இந்த ஆலயத்தின் இந்த ஆலயத்தின் விமானம், அது ஸ்ரீ ரங்க விமானம் சுயம்புவாக உருவானது, . பொன்னால் வேயப்பட்ட இந்த விமானம் ஓம் என்ற பிரணவ வடிவில் எழுந்தருளி உள்ளது.
இந்த தங்க விமானத்தில் அமுதக் கிண்ணத்துடன் வாசு தேவர் காட்சியளிக்கிறார். அந்த அமுதக் கிண்ணம் மெல்ல மெல்ல அவர் வாய் நோக்கி நகர்ந்து போவதாகவும், எப்போது அது அவரின் வாயருகில் சென்று சேர்கிறதோ அப்போது ஊழிகாலம் தொடங்கும்
இரண்டாவது ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்கவிலாஸ் மண்டபத்தில் உள்ள கல் கொடிமரத்தின் முன் நாம் விழுந்து வணங்கி, கொடி மரத்தை உயர்ந்து நோக்கும் போது அது அசைவதாக தோன்றும், உண்மையில் அசையாது
மூன்றாவது ஆயிரம் ஆண்டாக அழியாமல் இருக்கும் ராமானுஜரின் திருமேனி
நான்காவது அரங்கனின் காலணிகள், அரங்கனுக்கு அணிவிக்கபடும் காலணிகள் ஆறுமாதத்துக்கு ஒருமுறை மாற்றபடும் அளவு தானே தேய்ந்துவிடும், அரங்கன் அங்கே ஆட்சி செய்கின்றார் என்பதன் பெரும் அடையாளம் இது
ஐந்தாவது அந்த அரங்கனின் கண்கள், அவை விலைமதிப்பில்லாத இந்த பூமியில் கிடைக்க வாய்ப்பில்லாத அபூர்வ மணியினால் ஆனவை, அந்த மணிபதித்த அரங்கனின் கண்கள் பெரும் ஜொலிப்பு மிக்கவை, பார்ப்போரை வசீகரித்து தன் பக்கம் நிறுத்தும் மர்ம சக்தி கொண்டவை
ஆறாவது இந்த தலத்தில் இருக்கும் நெல் களஞ்சியங்கள், 20 அடி விட்டமும் 30 அடி உயரமும் கொண்ட 5 பிரமாண்டமான நெற்குதிர்கள் அமைந்துள்ளன. மிக பழமையான இவற்றில் எக்காலமும் நெல் இருந்து கொண்டே இருக்கும், எவ்வளவு நெல்லை கொட்டினாலும் அது ஏற்றுகொள்ளுமே தவிர நிரம்பி வழியாது
ஏழாவது அந்த ஐந்து குழி மூன்று வாசல் அற்புதமானது. இந்த ஐந்து குழிகள் வழியே, ஐந்து விரல்களை வைத்து தெற்கு பக்கம் பார்த்தால் பரமபத வாசல் தெரியும், இது மிக சூட்சுமனான தத்துவத்தை கொன்டது
இன்னும் ஏகபட்ட புரிந்துகொள்ளமுடியாத தத்துவங்களை கொண்டது இந்த ஆலயம், மூன்றாம் சுற்றின் ஒரு இடத்தில் ரங்கா என சொன்னால் அது கோவில் முழுக்க எதிரொலிக்கும் படி அபூர்வமான அமைப்பு கொண்டது
ஸ்ரீரங்கத்தில் துணை கோயில்களாக விஷ்வக்சேனா, ராமர், கிருஷ்ணர், நாச்சியார், சக்கரத்தாழ்வார், கருடன், அனுமான், ஆண்டாள், 12 ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் மற்றும் வேதாந்த தேசிகர்கள் அருள்புரிகின்றன
இங்கு அமுத கலசம் ஏந்திய கருடாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. அந்த கருடன் சாளகிராம கல்லினால் அனது அசுரர்களிடம் இருந்து வேதங்களை மீட்ட பெருமாள், அதனை கருடாழ் வாரிடம் ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் இவர் கையில், வேதங்களை வைத்திருக்கிறார்.
இந்த ஆலயத்தில் நடக்காத அற்புதங்கள் இல்லை இங்கு உருவாகி வராத ஆச்சாரியார்கள் இல்லை உருக்கமான பக்தர்களும் அவர்களின் அழியா வரலாறும் இங்கிருந்துதான் உருவாயின
இது ஆழ்வார்களின் தாய்வீடு, ஆச்சாரியார்களின் குருகுலம், எத்தனையோ பெரும் பெரும் ஞானியர் உருவாகி மகா அற்புதங்களை செய்த தலம்
உறங்காவல்லிதாசர் உள்ளிட்ட எத்தனையோ அடியார்கள உருவாக்கிய தலம் இது, இன்னும் சாட்சிகள் ஏராளம்
ஆன்மீகமாக இன்றி லவுகீகமாகவும் இவ்வாலயம் எத்தனையோ இடர்களை தாண்டி வந்தது
ஜடாவர்ம சுந்தரபாண்டியன் காலம் வரை இந்த ஆலயம் பெரும் பொக்கிஷமாக விளங்கிற்று, மூவேந்தர்களும் அள்ளி கொடுத்த ஆலயம் இது, ஜடாவர்ம சுந்தரபாண்டியன் இந்த ஆலயத்தை தலைக்கு மேல் வைத்து கொண்டாடினான்
காலம் தோறும் சவால்களை சந்தித்த இந்த ஆலயம் மீண்டு வந்தது, சமண பவுத்த குழப்பத்தையெல்லாம் தாண்டி எழுந்து இந்த ஆலயம் நின்றது, ஆனால் அதன் மிகபெரிய சவால் மாலிக்காபூர் காலத்தில் 13ம் நூற்றாண்டில் வந்தது
அப்போது உலகின் பணகார இந்து ஆலயங்கள் வரிசையில் இது முதலிடத்தில் இருந்தது, சோமநாதபுரி போல மிக மிக பணக்கார கோவிலாக இதுதான் இருந்தது
ஆப்கானியர்கள் இதனை வேட்டை நாயாக தேடினார்கள், கடைசியில் மாலிக்காபூர் பாய்ந்து பெரும் கொள்ளை நடத்தினான், அவனால் ஏற்பட்ட அழிவுகள் கொஞ்சமல்ல, வரலாற்றின் மாபெரும் கொள்ளை அது
எண்ணற்ற மக்களை கொன்று, ஆயிரகணக்கான பக்தர்களை கொன்று கொள்ளயிட்ட அவன் பெரும் தங்கத்தோடு உற்சவர் சிலையோடு டெல்லிக்கு சென்றான்
அந்த அரங்கனின் சிலை சுல்தான் மகளின் பொம்மையாயிற்று , அதை அறிந்த மக்கள் ஆடல் பாடல் கோஷ்டியாக சென்று டெல்லி கில்ஜியின் அரண்மனைக்குள் புகுந்து உரிய நேரம் அந்த சிலையினை மீட்டு வந்தார்கள்
மாபெரும் ஆச்சரியம் அது, அந்த அரங்கனை அப்படி மீட்டு வந்து மறுபடி ஆலயத்தை ஸ்தாபித்தார்கள்
ஆனால் கொஞ்ச நாளிலே உலுக்கான் எனும் துக்ளக் திருவரங்கம் மேல் பாய்ந்தான், அப்போதும் அந்த மக்கள் அந்த அரங்கனை மலையாள தேசம் கொண்டு சென்று பின் மேல்கோட்டையில் காத்து பின் திருப்பதி காடுகளில் பாதுகாத்து வந்தார்கள்
40 ஆண்டுகாலம் அந்த கொடுங்காலம் நீடித்தது
மக்கள் பெரும் பெரும் போராட்டங்களை செய்து தாக்குபிடித்தார்கள்
அந்நாளில் சுல்தான்களுக்கு மாதாந்திர வரிகொடுக்கும் போது பெரும் பணமும் இந்து பெண்ணும் சுல்தானுக்கு கொடுக்க வேண்டும்,அந்த அளவு கொடுமை இருந்தது
அந்நேரம் சுல்தானை ஒழிக்க வேண்டி ஒரு இந்துபெண் வாங்க கூடாத நோயினை பெற்று அதை சுல்தானுக்கு கடத்தி அவனையும் கொன்று தானும் வீழ்ந்தாள்
அந்த ஆலயம்பாலும் அரங்கன்மேலும் அவள் கொண்ட பக்தி அப்படி இருந்தது
இதன் பின் சுல்தானிய படைகள் அட்டகாசம் அதிகமாயிற்று ஆனாலும் ஒவ்வொரு முறையும் போராடி அவர்களை கட்டுபடுத்தினார்கள் இந்துக்கள்
அதிலும் வெள்ளையம்மாள் எனும் தாசியின் தியாகம் உருக்கமானது, அங்கே பெரும் அராஜகம் புரிந்து கொண்டிருந்த ஆப்கானிய தளபதியினை மயக்கி கோபுரத்தின் உச்சிக்கு சென்று அவனை கீழே தள்ளிவிட்டு தானும் வீழ்ந்தாள் அந்த வெள்ளையம்மாள்
ஆம், அந்த கொடிய தளபதியினை அந்த ஆலயத்துக்கும் மக்களுக்கும் பெரும் மிரட்டலை செய்தலனை தன்னையே தியாகமாக்கி அவள் அழித்தாள்
அவளிடமிருந்தது இரு விஷயம் ஒன்று அரங்கன் மேலான அந்த அன்பு, இரண்டாவது அவள் உடல், அரங்கனுக்காக தன்னையே அழித்து ஆபத்தை நீக்கி அவள் செத்துபோனாள்
இன்றும் அந்த அலயத்தின் கிழக்கு கோபுரம் வெள்ளையாக வெள்ளையம்மாள் என அவள் நினைவினை தாங்கி நிற்கின்றது
இந்த கொடுமையெல்லாம் 40 ஆண்டுகாலம் நீடிததது, இந்துக்களின் எதிர்ப்பாலும் வெள்ளையம்மாள் போன்றோரின் தியாகத்தாலுமே அது தக்கவைக்கபட்டது
பின் நாயக்க அரசின் கம்பண்ண உடையார் வந்து இந்த ஆலயத்தை மீட்டான், பின் திருப்பதியில் இருந்து அரங்கன் கொண்டுவரபட்டார்
அதே நேரம் அங்கே ஒரு அரங்கன் வைக்கபட்டிருந்தார், இதனால் எது உண்மையான அரங்கன் எனும் குழப்பம் மக்களிடம் வந்தது
அதை தீர்த்து வைத்தவன் ஒரு கண் இல்லாத சலவை தொழிலாளி
அவன் சிறிய வயதில் அரங்கனின் ஆடைகளை சலவை செய்தவன் இந்த பேரழிவுகளெல்லாம் நடந்து அரங்கன் திரும்பியபோது அவனுக்கு 90 வயதாகியிருந்தது கண் தெரியாது
ஆனால் அந்த சீனிவாசனை அவன் தன் வாசனையால் உணர்ந்திருந்தான், அனுதினமும் அவன் துணிகளை துவைத்ததால் அந்த வாசனை அவனுக்கு தெரியும்
அவன் இரு அரங்கனையும் சுத்தமான ஈரதுணியால் துடைத்து தன்னிடம் கொண்டுவர சொன்னான், அப்படி கொண்டு கொடுத்தார்கள், அவன் தன் வாசனையால் இவரே “நம்பெருமாள்” என சரியான அரங்கனை காட்டினார்
அது இன்று அங்கே பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றது
இந்துஸ்தானில் வேறு எந்த ஆலயத்தையும் விட அதிக சோதனையினை ஸ்ரீரங்கம் ஆலயம்தான் சந்தித்தது, அதை போல அழிவு மிக்க ஆலயம் எதுவுமில்லை
சோமநாதபுரி,மதுரா, அயோத்தி, காசி என எல்லா ஆலயங்களையும் விட மோசமாக பாதிக்கபட்டது ஸ்ரீரங்கம், அதுவும் இருமுறை பாதிக்கபட்டது
ஆனால் அதையெல்லாம் மீறி சட்டென எழுந்து அது பிரகாசித்தது, இன்று ஆசியாவின் உயரமான கோபுரம் 80 ஏக்கரில் கடல் போல் விரிந்து கிடக்கும் ஆலயம், ஒரு நாளில் தரிசிக்க முடியா பெரும் அலயம் எனும் பெருமையோடு கம்பீரமாக நிற்கின்றது
திருப்பதியினை விட பெரும் செல்வமிக்க ஆலயமாக ஸ்ரீரங்கமே எக்காலமும் உண்டு, ஆனால் பின்னாளைய பிரிட்டிஷார் குழப்பம், தமிழக அரசியல் சாபங்களால் திருப்பதி அந்த இடத்தினை பிடித்து கொண்டது
இப்போது மெல்ல மெல்ல மக்களுக்கு உண்மை விளங்குவதால் உரிய நாளில் ஸ்ரீரங்கம் ஆலயம் அந்த இடத்தை பிடிக்கும்
ஸ்ரீரங்கம் என்பது ஆன்மீகமாகவும் லவுகீகமாகவும் வரலாறாகவும் இந்திய தேசத்துக்கே ஒரு பொக்கிஷம், அங்கேதான் இந்தியாவின் வரலாறு முதல் ஆன்மீகம் வரை மொழி வரை எல்லா அடையாளங்களும் சுமக்கபடுகின்றது,காக்கபடுகின்றது
அது சுக்கிரனின் தலம், அங்கே வழிபட வழிபட சுக்கிர சம்பத்து கிடைக்கும், இந்த பூமியில் வாழ பொருள் முக்கியம் அந்த பொருளையும் அருளையும் ஒருங்கே தரும் அற்புத ஆலயம் அது
அது பலமுறை வீழ்ந்து எழும்பிற்று, ராமனின் குலதெய்வமான அந்த அரங்கன் கோவில்தான் ராம பிரானின் ஆலயம் அயோத்தியில் எழுந்தே தீரும் எனும் நம்பிக்கையினை கொடுத்தது
இந்த திருவரங்க ஆலயம் துலங்கி அதன் மாபெரும் கோபுரகட்டுமானம் கட்டபட்டு முறையாக வழிபாடுகள் நடக்க தொடங்கியபின்புதான் 500 வருட சிக்கலான அயோத்திர் ராமர் ஆலயம் மீண்டது
மிக மிக சூட்சுமான ஆலயம் இது, இதன் சக்தி மகா பெரிது, அதன் புரிந்துகொள்ளமுடியாத சக்திகள் இன்னும் பெரிது
காலம் காலமாக அதை ஒழிக்க முயன்றவர்களே ஒழிந்தார்களே தவிர அது எக்காலமும் தன்னை மீட்டு உச்சத்தில் வைத்திருக்கின்றது, புரி ஜெகநாதர் போலவே இதுவும் மகா சூட்சுமமான சக்தி கொண்டது
எல்லா மாதமும் இங்கு முக்கியம் எனினும் மார்கழி மாதம் மகா முக்கியமானது, அந்த மார்கழியில் அங்கே பிரம்ம தேவன் அதிகாலை வந்து வணங்குகின்றான், தேவர்கள் வந்து வணங்குகின்றார்கள்
அந்த மார்கழியில் ஸ்ரீரங்கம் ஆலயத்தில் அந்த ரங்கனை தரிசிப்பது எல்லா பலன்களையும் தரும், எல்லா வளங்களும் ஐஸ்வர்யமும் உங்களுக்கு வரும்
அந்த திருவரங்கம் உங்களை முழுமை அடைய செய்யும், எது உங்களில் குறையோ அது முழுமையாகும், உங்கள் சிந்தனையும் வாழ்வும் முழுமையாகும், பாற்கடலில் இருகும் அந்த அமைதியும் நிம்மதியும் உங்களை சூழும், ஏழு உலகங்களில் உள்ள அருளையும் அந்த ஆலயத்து அரங்கன் தருவார், இது சத்தியம்.



சப்த ரங்கம் 04 : அப்பால ரங்கநாதர் ஆலயம்.
“கையிலங்கு ஆழிசங்கன் கருமுகில் திருநிறத்தன்
பொய்யிலன் மெய்யன்தன் தாள் அடைவரேல் அடிமையாக்கும்
செய்யலர் கமலம் ஓங்கு செறிபொழில் தென்திருப்பேர்
பையரவணையான் நாமம் பரவிநான் உய்ந்தவாறே”
எனத் திருமங்கை ஆழ்வாரால் பாடப்பட்ட தலம் இந்த அப்பால ரங்கர் ஆலயம். இந்த ரங்கநாதர் ஆலயம் காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையே கோவிலடி எனும் இடத்தில் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து திருக்காட்டுப்பள்ளி ஊடாக இந்த ஆலயத்தை அடையலாம்.
108 திவ்ய தேசங்களில் ஆறாவது தலம் இது.
காவேரி நடுவே ஒரு மேட்டின் மேல் அமைந்துள்ள ஆலயம் இது, சுமார் 20 படிகள் ஏறிச் செல்லவேண்டிய தலம் இது.
சப்த ரங்கங்களில் இதுதான் மூத்தத்தலமாக அறியப்படுகின்றது, புராணக் காட்சியில் இருந்து இந்தத் தலத்தின் பெருமையினை அறிதல் அவசியம்.
யார் சிறந்தவர் எனும் போட்டி ஸ்ரீதேவிக்கும், பூமாதேவிக்கும் இடையே நடக்கின்றது, இதனை தொடங்கி வைத்தவர் நாரதர். அப்போட்டியில் பூமாதேவி வெல்ல, ஸ்ரீதேவி பெருமாளை பிரிந்தாள். ஆனாலும், பகவானுடன் சேர வேண்டி தவமிருக்கத் தொடங்கினாள்.
அவர் தவமிருந்த இடம் இது. அவளின் தவத்தின் பலனாய் வந்த பெருமாள், “எக்காலமும் சிறந்தவள் நீ” எனச் சொல்லி அவளைத் தன் மார்போடு சேர்த்துக் கொண்டார். அன்றில் இருந்து இந்தத் தலம் பெருமாளுக்கும், ஸ்ரீதேவிக்கும் வெகு விசேஷம், இங்கு ஸ்ரீதேவிதான் பிரதானம்.
ஸ்ரீதேவி தவமிருந்த இடம் என்பதால் இது “ஸ்ரீநகர்” என்றே முதலில் அழைக்கப்பட்டது, பின் “திருப்பேறு நகர்” எனவுமாயிற்று.
இங்கிருந்துதான் பெருமாள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அடியெடுத்து வைத்தார் என்பதால் இது “கோவிலடி” என்றும் பெயர் பெற்றது.
இந்த ஆலயத்தில் நடந்த மாபெரும் வரலாறு உபமன்யு அல்லது உபரிசிரவஸ் என அழைக்கப்பட்ட அந்த மன்னன் பாண்டியநாட்டு மன்னன், அவன் ஒருமுறை காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். அப்போது மதம் கொண்ட யானை ஒன்று அட்டகாசம் செய்தது, மன்னன் அதன் மீது வேல் எறிந்தான், அந்த யானை அந்நேரம் கௌதம முனிவர் குடிலில் நுழைந்து ஒரு தபஸ்வியின் மேல் சரிந்து விழுந்து செத்தது, தவஸ்வியும் இறந்து போனார்.
உபமன்யு மன்னனுக்கு இதனால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது, படாதபாடு பட்ட உபமன்யு மன்னன் தன் குருவிடம் இதிலிருந்து விடுதலை பெற ஆலோசனைக் கேட்டான்.
அவனின் குரு துர்வாசர் அவனுக்கோர் உபாயம் சொன்னார். புரசைமரங்கள் நிறைந்த “பலச வனம்” எனும் சோலையில் குடியிருக்கும் பெருமாள் ஆலயத்தில் அன்னதானம் செய்தால் உன் சாபம் தீரும் என்றார்.
அதன்படி அங்கே அனுதினமும் ஆயிரம் பேருக்கு உணவிட்டான் மன்னன், அது சிலகாலம் நடந்தது, அன்னதானமும் பூஜையுமாக அவன் காலம் கழிந்தது.
அவனுக்கு பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுதலை கொடுக்க விரும்பிய பகவான் ஒரு வயதான அந்தணர் வேடத்தில் வந்தார், மன்னன் அவருக்கு பரிமாறினான்.
அவரோ அவன் அன்னம் இட இட வாங்கி உண்டுகொண்டே இருந்தார், ஒருகட்டத்தில் உணவெல்லாம் தீர்ந்தது மன்னன் அசந்தே போனான், சமைத்த உணவு முடிந்துவிட்டது, இனி சமைத்து தர கொஞ்சம் நேரமாகும் அதுவரை பொறுப்பீர் என்றான்.
ஆனால், அவரோ அரைவயிறு நிரம்பியதாக சொல்லி எழுந்து தான் கொஞ்சம் ஓய்வெடுக்கப் போவதாகவும், மாலையில் ஒரு குடம் நிறைய நெய் அப்பம் செய்து தனக்கு அனுப்பும்படியும் சொல்லிவிட்டு ஓய்வெடுத்தார்.
அப்படியே மாலை அவருக்கு நெய் அப்பம் செய்து ஒரு குடம் நிறைய கொடுத்தான் மன்னன், அவர் அந்த குடத்து அப்பத்தில் ஒரு அப்பம் மட்டும் எடுத்து உண்டு புன்னகைத்தார்.
அந்நேரம் அம்மன்னனுக்கு பீடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் அகன்றது. பகவானும் தன் உருவை அவனுக்கு காட்டினார். அவரோடு ஸ்ரீதேவியும் சேர்ந்து அவனுக்கு அருள்பாலித்தார். மன்னன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்.
தன் பக்தனிடம் இருந்து குடம் அப்பம் கேட்டு வாங்கி, அவன் பிணியினை ஏற்று அவனுக்கு அருள் பாலித்ததால் “அப்ப குடத்தான்” என அவருக்குப் பெயர் வந்தது.
ஸ்ரீரங்கத்துக்கு அப்பால் இருப்பதால் இது அப்பால ரங்கம் என்றாயிற்று, அப்ப ரங்கம் எனும் பெயர் அப்பால ரங்கம் என மாறிற்று என்ற கோணமும் உண்டு
மார்கண்டேய மகரிஷி கதை இந்த ஆலயத்திலும் உண்டு. திருகடையூரில் சிவனருளால் அந்த மார்கண்டேயன் எமனிடம் இருந்து தப்பித்தாலும் உள்ளூர அவனுக்கு இருந்த எம பயம் இந்த ஆலயத்தில்தான் நீங்கிற்று.
ஆம். மார்கண்டேய மகரிஷியாக அவர் நிலைத்து நிற்க இந்த ஆலயம் முக்கிய காரணம். அவருக்கு எம பயம் அகற்றி முழு தெளிவினை தந்த ஆலயம் இது.
இது காலத்தால் மூத்த ஆலயம். ஸ்ரீதேவி, உபமன்யு எனப் பலர் வந்து வழிபட்ட தலம், மார்கண்டேய முனிவர் வழிபட்டது என மிகத் தொன்மையான ஆலயம்.
இந்திரனுக்கு ஏற்பட்ட பெரிய சாபம் இங்கு வழிபட்டுத்தான் தீர்ந்தது, இந்திரனுக்கு இத்தலத்தை காட்டிய விநாயகப் பெருமான் வழிகாட்டி விநாயகர் என அங்கே அமர்ந்திருக்கின்றார்.
பராசர முனிவர் இங்கு வழிபட்டு வரம் பெற்றிருக்கின்றார்.
இவ்வளவு சிறப்பான ஆலயத்தினை கரிகால் சோழன் கல்லணை கட்டும் போது இந்த ஆலயத்தை மீள ஸ்தாபித்தான், மூலக்கோவிலை கட்டியவன் அவனே.
நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார்களால் 33 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்.
நம்மாழ்வாரால் கடைசியாக மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் இது தான்.
திருமங்கையாழ்வார் வாழ்வில் முக்கியமான ஆலயம் இது, அவர் இந்தப் பெருமாளை மங்களாசாசனம் செய்துவிட்டு திருவெள்ளறை பெருமாளை தரிசிக்கச் செல்லும்போது இந்த அப்பகுட பெருமாள் கூடவே வருகின்றார், இதை உணர்ந்த திருமங்கை ஆழ்வார் திருவெள்ளறையில் வைத்து அப்பக்குடத்தான் பெருமாளை மீண்டும் மங்களாசாசனம் செய்த காட்சி அவர் வாழ்வில் உண்டு.
அந்த அளவு அப்பகுடத்தானுக்கும், திருமங்கை ஆழ்வாருக்குமான பந்தம் அலாதியானது.
இந்திரன் வழிபட்டு சாபம் நீங்கிய தலம் என்பதால், இக்கோவில் விமானத்தின் பெயர் இந்திர விமானம். தீர்த்தத்தின் பெயர் இந்திர புஷ்கரணி. தாயாரின் பெயர் இந்திராதேவி எனும் கமலவல்லி.
இந்த ஆலயத்தில் இறைவன் கருவறையில் புஜங்க சயன கோலம் கொண்டுள்ளார். தாயார் கமலவல்லி அமர்ந்த கோலத்தில் காட்சி தந்து அருள் பாலிக்கின்றார்.
தன் பக்தனிடம் அப்ப குடம் கேட்டதை எக்காலமும் சொல்லும்படி பகவான் தன் வலது திருக்கரத்தில் அப்பக் குடத்துடன் காட்சி தருகிறார்.
இங்கு ஸ்ரீதேவியுடன் அவர் சேர்ந்ததை சொல்லும்படி பெருமாளின் மார்பில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாள். தசாவதார ஒட்டியாணம் அணிந்து காட்சித் தருகின்றாள்.
பகவானின் அருகில் மார்கண்டேய மகரிஷி அமர்ந்திருக்கின்றார், அவரை ஒரு கரத்தால் தொட்டபடி எமபயம் போக்குகின்றார் பகவான்.
இங்கே தனிச் சந்நதியில் கமலவல்லித்தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். உட்பிரகாரத்தில் விநாயகர், நம்மாழ்வார், இராமானுஜர், ஆழ்வார்கள், கருடன், வேணுகோபாலன், விஷ்வக்சேனர் ஆகியோர் தரிசனம் தருகின்றார்கள்.
திருவரங்கத்தில் பிரசித்தியான வடை, காஞ்சியில் விசேஷமான வரதராஜருக்கு இட்லி, திருமலையில் லட்டு என்பது போல இங்கு அப்பம் மிக மிக விசேஷம்.
இங்கு அந்த அப்பகுடத்தானுக்கு ஒவ்வொரு நாளும் மாலை ஒருகுடம் அப்பம் நிவேதனமாக படைக்கப்படுகின்றது, இந்த வழமை பாரம்பரியமானது.
இந்த ஆலயம் பயம் போக்கும், பிரிந்தவர்களை சேர்த்துவைக்கும், மகா முக்கியமாக வறுமையினை அகற்றும், எல்லா வகை செல்வங்களையும் தரும்.
திருமகள் குடியிருக்கும் ஆலயம் என்பதால் இங்கு வழிபடுவோருக்கு பொருள், நிதி என எந்த இடையூறும் வராது, வறுமை அவர்களை நெருங்காது, எல்லா செல்வமும் கைகூடும்.
பக்தர்கள் இங்கு வேண்டிக் கொண்டது பலிக்கும், அப்படி பலித்தபின் அவர்கள் அப்பம் படைத்தலும் அதை பக்தர்களுக்கு பகிர்ந்தளித்து மகிழ்வதும் இயல்பான விஷயம், பகவானுக்கு திருமஞ்சனம் செய்து மகிழ்வார்கள்.
இந்த ஆலயத்தின் தாத்பரியம் எளிதான தத்துவம், ஒரு மனிதனுக்கு இருக்கக் கூடாத விஷயம் பயம், அச்சமும் கலக்கமும் ஒருவனை வீழ்த்தும், இந்தத் தலம் அந்த அச்சத்தை போக்கும்.
மார்கண்டேய மகரிஷிக்கு அச்சம் நீக்கி அவரின் தலையில் கரம் வைத்து அருள்புரியும் பகவான் உங்கள் ஒவ்வொருவருக்கும் அச்சம் நீங்க காத்துக் கொண்டிருக்கின்றார், அங்கே பணிந்தால் உங்களையும் அந்த மாயக்கரம் தொடுவதை உணர்வீர்கள்.
இந்திரனும், உபமன்யுவும் தாங்கள் இழந்ததையெல்லாம் பெற்ற தலம் இது, அதுவும் உபமன்யு கதை மாபெரும் தத்துவத்தினை சொல்வது.
அவன் மாபெரும் இக்கட்டில் இருந்தான், அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் இருந்தது, அவன் ஆயிரம் அந்தணர்க்கு அனுதினமும் அன்னதானமிட்டும் அவன் குறை தீரவில்லை.
பகவானே, அவன் பிணியினை ஏற்கவந்தார், அவன் கையால் அவன் இட்ட அன்னத்தையெல்லாம் அவன் கர்மமாக வாங்கி பின் ஒரு குடம் நிறைய அப்பம் வேண்டும் என்றார்.
அந்த ஒரு குடத்து அப்பம் அவனின் ஓராயிரம் பிரச்சினைகளின் அடையாளம், அவரோ ஒரே ஒரு அப்பத்தை மட்டும் எடுத்து புன்னகைத்து உண்டார், ஒரு அப்பத்திலே மன்னின் எல்லா பிரச்சினையும் தீர்ந்தது.
ஆம். ஆயிரம் பிரச்சினை உங்களுக்கு இருக்கலாம், அதை ஒவ்வொன்றாக சொல்ல அங்கு அர்த்தமே இல்லை, அந்தப் பெருமாளிடம் ஒரே ஒரு காரியம் மட்டும் செய்தால் போதும் அவர் விரும்புவதும் அதுதான்.
அது சரணாகதி, பூரண சரணாகதி, மனப்பூர்வமான அடைக்கலம் கேட்ட சரணாகதி.
அதை செய்தால் போதும். அதை ஒன்றை செய்தால் போதும். வாழ்வில் உங்களுக்கு எல்லாமே கைகூடும்.
அது பகவான் எக்காலமும் அருள்பாலிக்குமிடம், அங்கே தொழுதுதான் இந்திரன் இழந்ததை பெற்றான், கரிகால் சோழன் அங்கே தொழுதுதான் கல்லணை எனும் அழியா பெரும் அடையாளத்தை கட்டினான்.
மார்கண்டேய முனிவரின் பயம் முழுக்க அகன்று அவர் நித்திய சீரஞ்சீவியாக வாழும் வரம் அங்குதான் கிடைத்தது.
ஆழ்வார்கள் அந்தப் பெருமாளை பாடி அழியா புகழ் அடைந்தார்கள், அங்கே வழிபட்டால் எல்லா வளமும் நலமும் கைகூடும்.
ஸ்ரீதேவியோடு பகவான் அருள்புரியும் அத்தலம் எல்லா ஐஸ்வர்யத்தையும் தரும், பொதுவாக இந்திரன் வழிபட்ட தலங்களெல்லாம் சுக்கிர கடாட்சம் கொண்டவை, பெரும் வாழ்வு அருளும் சக்தி கொண்டவை, அவ்வகையில் வளமான வாழ்வு தரும் ஆலயம் இது.
சோழமன்னர்களின் விருப்பமிகு ஆலயமாகவும், பின் நாயக்க மன்னர்கள், மராட்டியரின் அபிமான ஆலயமாக இது கொண்டாடப்பட்டது.
மார்கழியில் மறக்காமல் செல்லவேண்டிய தலங்களில் அது முக்கியமானது, அங்கே சென்று வழிபட்டு அப்பம் பிரசாதம் செய்து படைத்து நில்லுங்கள், பகவான் ஒரே ஒரு அப்பத்தில் உங்கள் துன்பம் துயரமெல்லாம் அப்பால் போக வைப்பார்.
அப்பால ரங்கர் என்பது உங்கள் துன்பத்தை அப்பால் எறியும் அற்புதமான ரங்கர் என்பதை அங்கு வணங்கி பலன் பெறும்போது அற்புதமாக உணர்வீர்கள். இது சத்தியம்.
“நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே “



சப்த ரங்க தலம் : 05 அன்பில் சுந்தரராஜ பெருமாள்
“நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத் தணையரங்கம் பேர் அன்பில்-
நாகத்தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால்
திருச்சி அருகே லால்குடி பக்கம் காவேரியின் நடுவில் அமைந்துள்ளது அந்த அன்பில் எனும் ஊர், அந்த ஊரில்தான் சுந்தரராஜ பெருமாள் என பள்ளிகொண்டு அருள் பாலிக்கின்றார் பெருமாள்.
இந்த ஆலயம் சோழர்கள் காலத்துக்கு முன்பே இருந்தது, பின்னாளைய சோழர்கள் இந்த ஆலயத்தை கொண்டாடி வள்ர்த்தார்கள்
சுந்தர சோழனிடமும் அவன் மகன் இராஜராஜ சோழனிடமும் தலைமை தளபதியாக இருந்த அநிருத்தபிரம்மராயர் இந்த அன்பில் ஊரை சேர்ந்தவர்.
பெருமாள் அழகர் என மிக மிக அழகாக அருள்பாலிக்கும் தலங்கள் மூன்று அவை கள்ளழகர், கூடலழகர் என மதுரையில் இரு இடங்களிலும் இங்கே அன்பில் எனும் தலத்தில் அவர் அழகராக அருள் பாலிக்கின்றார்.
அந்தளவு அபூர்வமான ஆலயம் இது. முக்கியமானது.
இந்த ஆலயம் மகா தொன்மையானது, இங்கே உற்சவர் வடிவுடை பெருமாள், தல விருட்சம் தாழம்பூ, தீர்த்தம் மண்டூக தீர்த்தம்.
இந்த ஆலயத்தின் வரலாறு பிரம்மன் பெற்ற சாபத்தில் இருந்து தொடங்குகின்றது. பிரம்மன் தான் படைக்கும் உயிர்களின் தோற்றம் வடிவமெல்லாம் அழகாய் இருப்பதை கண்டான், தன் படைப்பான அவை தன் திறமையாலே அழகாய் இருப்பதாகவும், மிக மிக அழகாக படைக்கும் வரமும் திறமையும் ஆற்றலும் தனக்கே இருப்பதாக நினைந்து கர்வம் கொண்டான்.
இந்த கர்வத்தால் அவன் யாரையும் மதிப்பதில்லை, அழகான படைப்புகளெல்லாம் தன்னில் இருந்தே வரும் என்றும் அழகுக்கு அழகு சேர்ப்பவன் தான் என்றும் நினைத்து வெகு கர்வம் கொண்டான்.
அந்த கர்வத்தில் தனக்கும் பெரும் கோவில் வேண்டும், தனக்கும் பெரிய மரியாதை வேண்டும், அழகுக்கும் வடிவத்துக்கும் மானுடர் தன்னை வணங்க வேண்டும் என்றெல்லாம் அவன் சிந்தனை சென்றது.
அவன் தன் ஆணவத்தால் படைப்பு தொழிலை அலட்சியமாக எண்ணினான், இன்னும் பெரும் குழப்பம் செய்ய தொடங்கினான்.
அவனின் கர்வத்தை அடக்க சித்தம் கொண்ட பெருமாள் அவனை பூமிக்கு அனுப்பி மானுடராய் பிறக்கவைத்தார், அவனும் மானுடனாக பிறந்து அலைந்து திரிந்தான், அவனுக்கு அவன் சாபப்படி அழகான தோற்றம் மேல் மயக்கம் இருந்தது.
அழகானப் படைப்பினை கொடுத்து அழகு மேல் கர்வம் இருந்ததால் அவன் சாபம் அழகான விஷயங்கள் மேல் மயக்கம் கொடுப்பதாக இருந்தது, அழகான விஷயங்களில் மயங்கிப் போனான்.
அந்தச் சாபம் அவனை பாடாய்படுத்திற்று, எல்லா அழகிலும் மயங்கியவன் அதிலிருந்து மீளமுடியாமல் சிக்கினான். அவனால் வேலை செய்யமுடியவில்லை, இதர காரியங்களில் கவனம் செலுத்தமுடியவில்லை, ஒரு பித்து போன்ற நிலைக்கு ஆளானான்.
அவன் சாபம் தீர கோவில் கோவிலாக சென்றான், அப்படி இந்த ஆலயத்துக்கு வந்தபோது அவன் மேல் தனி அன்பு கொண்டார் பெருமாள்.
ஒரு மிக மிக அழமான வாலிபராக பெருமாள் அங்கு வந்தார். அவர் வடிவம் கண்டு அப்படியே உருகிப் போன பிரம்மன் “நீங்கள் யார், எங்கிருந்து வருகின்றீர்கள்?” என விசாரித்தான்.
அந்த வாலிபன் சிரித்தான், அவன் அழகை மிகப் புகழ்ந்து பேசினான் பிரம்மன்.
அப்போது அந்த வாலிபன் தான் யாரென காட்டினான் , பகவானே என அவரை வீழ்ந்து பணிந்தான் பிரம்மன்.
பகவான் அவனுக்கு தனிப்பட்ட அன்பு காட்டி சில விளக்கங்களை சொன்னார்.
“சாபம் காரணமாக மானுட பிறப்பு எடுத்த பிரம்மனே, இங்கு அழகு என்பது மாயை பூமியில் காணும் அழகு எதுவும் அழகல்ல எல்லாம் தோற்ற மாயை.
அழகுக்கு மானுடர் மயங்குவது என்பது அவர்கள் ஆத்மா ஒரு விஷயத்தில் நிறைவு கொள்ள துடிக்கின்றது ஆனால் முழுமையான நிறைவினை மாயை தருவதில்லை.
ஆத்மாவின் ஏங்கம் அந்த ஜீவாத்மாவின் ஏக்கம் பரமாத்வினை காணும்போது அவரில் கலக்கும் போது நிறைவடையும். மானுட ஆத்மாவின் தேடல் அழகில் அல்ல; மகிழ்வில் அல்ல; பூலோக மாயையில் அல்ல; அது என்னில்தான் நிறைவடையும்.
எல்லா வடிவிலும் இங்கு இருப்பது நானே, எல்லா வடிவத்தின் பின்னாலும் எல்லா அழகின் பின்னாலும் மானுடர் தேடிவரவேண்டியது என்னையே.
என் தொப்புள் கொடியில் இருந்து உருவானவன் நீ என்பதை மறந்து, எல்லாவற்றுக்கும் மூலம் நீ எனக் கருதி ஆணவம் கொண்டதால் இந்தச் சாபம் பெற்றாய்.
பிரம்மதேவா, என் தொப்புள் கொடியில் அவதரித்ததால் எப்போதுமே எனக்கு உன்மேல் அன்பு உண்டு, நீ படைக்கும் எல்லா படைப்பின் மேலும் அதே அன்பு உண்டு. ஆனால் உன் படைக்கும் தொழிலின் மூலம் நான் என்பதை புரிந்துகொள், நானே உன் மூலம் படைக்கின்றேன், எல்லாமும் நானே, எல்லா படைப்பும் நானே என்பதை உணர்ந்து கொள், எல்லா ஆத்மாவின் தேடலும் நானே என்பதை அறிந்துகொள்” என திருவுளம் பற்றினார்.
பிரம்மன் மேலான “அன்பில்” அவருக்கு அவன் சாபம் தீர்த்த இடம் இந்த அன்பில்.
இந்த இடம் மண்டூக முனிவரின் வாழ்விலும் உண்டு, அந்த சுபேத முனிவர் நீரிலும் நிலத்திலும் தவம்புரியும் ஆற்றல் கொண்டவர். நீருக்கடியில் அமர்ந்து தவம் செய்வது அவர் வழக்கம்.
அப்படி அவர் தவம் செய்யும் போது அப்பக்கம் வந்த துர்வாச முனிவரை அவர் கண்டுகொள்ளவில்லை, ஆத்திரமடைந்த துர்வாசர் என்னை அவமதித்த நீ, நீரிலும் நிலத்திலும் வாழும் தவளை உருவை அடைவாய் எனச் சபித்தார்.
முனிவரின் சாபத்தை சுமந்து தவளை உருவில் காணப்பட்டார் முனிவர். இதனால், தவளையின் பெயரான மண்டூகம் அவரின் பெயருமாயிற்று.
மண்டூக முனி இந்த அன்பில் சுந்தரராஜபெருமாளிடம் முறையிட்டபோது அவர்மேல் அன்பு கொண்ட பெருமான் அவரை மதுரைக்கு செல்லும்படியும், அங்கே தான் ஆற்றில் இறங்கும் நேரம் அவரும் ஆற்றில் இருக்கும்படியும் சொல்லி அனுப்பினார்.
அப்படியே மதுரையில் கள்ளழகராக அவர் ஆற்றில் இறங்கும் நேரம் மண்டூக முனிவர் தன் சாபம் நீங்கப் பெற்றார்.
இந்த ஆலயத்தின் பெருமை இன்னும் உண்டு, கொள்ளையனாக இருந்த வால்மீகி பல தலங்களை தரிசிக்கும் போது , நாரத முனிவர் அவரை இங்கு வழிபடச் சொன்னார், வால்மீகி இங்கு வழிபட்ட பின்பே இராமகாதையினை இயற்றினான் என்பது வழி வழிச் செய்தி.
சிவபெருமான் பிரம்மனின் ஐந்தாம் தலையினை கிள்ளியதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி சாபம் நீங்கபெற்றதும் இங்குதான்.
இந்த ஆலயத்தில் ஆண்டாளுக்கு இரு சந்நிதிகள் உண்டு, ஒரு சந்நிதியில் நின்று அருள்பாலிக்கும் ஆண்டாள் இன்னொரு சந்நிதியில் பகவான் பக்கம் அமர்ந்து அருள் பாலிக்கின்றார்.
வேறு எங்கும் இந்தக் காட்சியினை காண முடியாது.
ஒருமுறை தேவர்ளுக்குள்ளே அழகான விஷயம் எது எனும் சண்டை வந்து, பின் நாரத முனியின் கலகத்தால் இந்த அன்பில் சுந்தராஜ பெருமாளே மிக்க அழகுடையவர் என அவர்கள் ஒப்புக்கொண்ட காட்சி ஒன்றும் உண்டு.
ஆம். அவ்வளவுக்கு மிக மிக அழகான கோலத்தில் சுந்தரராஜ பெருமாள் அருள்பாலிக்கும் தலம் இது.
சாபம் காரணமாக தங்கள் அழகையெல்லாம் இழந்த தேவலோகப் பெண்களான ரம்பை, ஊர்வசி, திலோத்தமை, மேனகா ஆகியோர் இங்கு வழிபட்டுத்தான் இழந்த அழகை மீட்டனர்.
இந்த ஆலயத்தின் கருவறை விமானம் கோபுர வடிவில் அமைந்திருக்கும். அந்தத் தாரக விமானத்தின் கீழே சயனக்கோலத்தில் காட்சி தருகிறார் நம்பி. இவர் திருவடிகளில் ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்திருக்க நாபிக் கமலத்தில் பிரம்மனும் காட்சி அளிக்கிறார்.
இங்குள்ள தாயார் அழகியவல்லி நாச்சியார், உற்சவர் வடிவழகி உடனுறை வடிவழகராக எழிலுற எழுந்தருளி உள்ளார்.
108 திவ்ய தேசங்களில் இது ஐந்தாம் தலம் இது.
பழைமையான இந்த ஆலயப் பிரகாரத்தில் ஆண்டாள், லட்சுமி நரசிம்மர், வீர ஆஞ்சநேயர், நரசிம்மர், வேணுகோபாலர், ஆழ்வார்கள் சந்நிதிகள் உள்ளன. அன்பில் பரமபதம் எனப்படும் இந்தத் தலத்தைத் திருமழிசை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
இந்த ஆலயத்தின் ஆண்டாள் இரு சன்னதிகளில் உள்ளது சிறப்பு, அதன் பொருள் ஓடி ஓடி அலையும் ஜீவாத்மா பரமத்வாவில் அடங்கி அமர்ந்து கொள்ளும் என்பது.
இந்த ஆலய ஆண்டாளை தரிசித்தால் திருமண பாக்கிய தடைகள் நீங்கும், பித்ரு தோஷம் நீங்கும், நோய்கள் எல்லாம் நீங்கும் தலம் இது.
குறிப்பாக சரும நோய்கள், ஒருவரின் தோற்றத்தை உருமாற்றிகாட்டும் கொடிய நோய்களெல்லாம் இந்த ஆலயத்தில் தீரும்.
அமாவாசை அன்று கொள்ளிடத்தில் நீராடி இந்த சுந்தரராஜ பெருமாளுக்கு அன்னம் படைத்துவிட்டு அருகில் இருக்கும் அப்பகுட பெருமாளை தரிசித்தால் எல்லா வியாதியும் தீரும்.
ஆம். இது ஒருவரின் சாபம் தீர்த்து அவரை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் ஆலயம், பழைய பொலிவினை தரும் ஆலயம்.
இந்த ஆலயம் மாபெரும் தத்துவம் ஒன்றையும் போதிக்கின்றது
அழகில் மயங்குவது இந்த உலகம், அது பணமோ, பெண்ணோ, நிலமோ எதுவோ ஒரு அழகான விஷயத்தை கண்டுவிட்டால் மயங்கிக் கிடப்பது மானிட குணம்.
அந்த அழகு மாயை என்பதும், அந்த அழகின் மூலம் பரம்பொருள் என்பதும், அந்த அழகே நிலையானது அழியாதது ஈர்ப்பும் நிலைப்பும் மிக்கது என்பதை சொல்லும் ஆலயம்.
அழகு ஒரு மனிதனை ஈர்க்கக் கூடியது. ஆனால், அந்த பூலோக அழகு நிலையானது அல்ல, அழியக் கூடியது, அந்த மாயையினை விட அழகானதும் நித்தியமானதும் பரம்பொருள் என்பதே இந்த ஆலயம் சொல்லும் தத்துவம்.
இந்த உலகில் அழகான விஷயம் மீது மயக்கம் அதிகம், அங்கே மோதலும் சண்டையும் சச்சரவும் இன்னும் எல்லா வன்மமும் மிக அதிகம்.
இராவணன் வீழ்ந்ததும், துரியன் வீழ்ந்ததும் அதனாலே, அழகு அதை கொண்டிருப்போருக்கும் ஆபத்து காண்போருக்கும் பேராபத்து.
ஆனால், எந்த அழகாவது நிறைவினை தருமா? இது போதும் எனும் நிறைவினை மகிழ்வினை தருமா என்றால் இல்லை. அது கழுகின் இறக்கை போல உயர உயரச் செல்லும்.
இங்கே இந்த ஆலயம் ஆழமாக போதிக்கின்றது, எல்லா ஆத்மாவும் தேடும் விஷயம் பரமாத்வாவே, அந்தப் பரமாத்மாவே முழு நிறைவினைத் தருவார், அவரிலேதான் ஒரு ஆன்மா முழுவதும் கலந்து நிறைவாக இருக்க முடியும் .
அழகு என்பது எல்லாம் சரியாக அமைந்த விதம், எல்லா விஷயமும் மிகச் சரியாக அமைவதே அழகு, ஒரு பரிபூரணமே அழகு.
அப்படியான முழு பரிபூரணம் பரமாத்மா ஒருவரே. அவரைத் தவிர எல்லாம் அழியக் கூடியது, அழியா பூரணமும் அழியா நித்யமும் அவரே என்பதை மிக அழகாக சொல்லும் தலம் இது.
மானுடர் பெற்றுவந்த சாபத்தையெல்லாம் மாற்றி தரும் அற்புதமான தலம் இது.
ஆம். அந்த பிரம்மன் அல்ல, மாண்டூக முனி மட்டுமல்ல , ஒவ்வொரு மானுட பிறப்பும் ஏதோ ஒரு சாபத்தில் ஏதோ ஒன்றை தேடித்தான் அலைகின்றது.
பிரம்மன் அழகை தேடி சாபம் பெற்றது போல ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒன்றைத் தேடி சாபம்பெற்றே பிறக்கின்றான்.
மண்டூக முனிபோல அது காரணம் கொண்ட சாபம் அல்லது காரணமே இல்லாத சாபமாக கூட இருக்கலாம்.
தவளை என்பது அறியாமையின் வடிவம், மானுடர் ஒவ்வொருவருக்குள்ளும் அப்படி ஒரு தவளை உண்டு. அறியாமை உண்டு
அந்தச் சாபமெல்லாம் நீங்கி நல்வாழ்வு தரும் ஆலயம் இந்த ஆலயம்.
மார்கழியில் தரிசிக்க வேண்டிய ஆலயங்களில் இது முக்கியமானது, இந்த அன்பில் சுந்தரராஜ பெருமாளும் , அப்பால ரங்க அப்பகுட பெருமாளும் இரட்டை ஆலயங்கள். ஒரே நாளில் தரிசிக்க வேண்டியவை.
இங்குச் சென்று வழிபடுங்கள், உங்களுக்கு சர்மம் சம்பந்தமான நோய், உங்கள் தோற்றத்தை அலங்கோலமாக காட்டும் நோய் இருந்தால் நிச்சயம் தீரும்.
திருமணமாகதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும்.
இன்னும் உங்கள் சாபம் தீரும், அந்த சுந்தரராஜ பெருமாள் உங்கள் வாழ்வை வளமாக்கி அழகாக்கி தருவார். எதெல்லாம் சாபம் காரணமாக கிடைக்காமல் இருந்ததோ அதெல்லாம் மீளக் கிடைக்கும்.
பிரம்மன், மண்டூக முனி, வால்மீகி இன்னும் தேவலோக மாந்தர்களெல்லாம் இழந்ததை சாபம் தீர்த்து மீள பெற்றதை போல நீங்களும் பெற்று கொள்வீர்கள், சிவபிரானுக்கே சாபம் தீர்த்த ஆலயம் உங்கள் சாபத்தையும் நொடியில் தீர்க்கும்.
எந்த மானுட மயக்கமும் மாய ஆசைகளும் ஈர்ப்பும் உங்களை நெருங்காது, எந்த ஆபத்திலும் சிக்காமல் பெருவாழ்வு வாழ்வீர்கள், நிறைவாழ்வு வாழ்ந்து அவன் பதம் அடைவீர்கள். இது சத்தியம்.
அழகர் எனும் பெயரே சுந்தரர் என்றாயிற்று, அழகான வாழ்வினை தருவார் அந்த அழகர்.


சப்த ரங்கம் 06 : கும்பகோணம் சாரங்க பாணி ஆலயம்
காவேரியின் நடுவில் கும்பகோணத்தில் அமைந்திருக்கும் பிரதான ஆலயம் இந்த சாரங்கபாணி ஆலயம், சார்ங்கம் அல்லது சாரங்கம் என்றால் விஷ்ணுவின் கையில் இருக்கும் வில்லை குறிப்பது.
“தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்” என்பது ஆண்டாள் நாச்சியார் பாடல்
அப்படியான பெருமாளுக்குரிய தலம் இது, இந்த சாரங்கபாணி ஆலயம்தான் சப்தரங்க தலங்களில் ஆறாவது, இது திவ்யதேசங்களில் 12ம் தலம்
இந்த தலத்தின் வரலாறு பிருகு முனிவரிடம் இருந்து தொடங்குகின்றது, எல்லா உலகின் நன்மைக்காக நடந்த யாகத்தின் பலனை யாரிடம் சேர்ப்பது என முனிவர்கள் இடையே கேள்வி எழுந்தது, எந்த தெய்வம் மிக மிக சாந்தமானவரோ அவரிடமே யாகத்தின் பலனை கொடுப்பது என தீர்மானமுமாயிற்று
அப்படி சாந்தமான தெய்வம் எது என்பதை அறிய சென்ற பிருகு முனிவர் திருமாலின் பெருமையினை சோதிக்க அவரின் நெஞ்சிலே ஓங்கி மிதித்தார்
விஷ்ணு அப்போதும் புன்ன்கைத்தார், மிக மிக சாந்தமான தெய்வத்தை கன்டேன் என மகிழ்ந்தார் பிருகு முனிவர் ஆனால் பெருமாளின் நெஞ்சிலே தங்கியிருக்கும் ஸ்ரீதேவி இது தனக்கான அவமானமாய் உணர்ந்து முனிவர் தன்னை அவமதித்ததாகவும் பெருமாள் அதை பார்த்து கொண்டிருந்ததாகவும் சொல்லி பெரும் கோபம் கொண்டாள்
அவளின் கோபம் கொண்ட முனிவர் தான் அப்படி செய்ததைன் காரணத்தை சொல்லி வணங்கினார், அப்படியே தேவியினை ஆத்திரமடைய செய்த தன் பாவம் போக அவரையே மகளாக வளர்க்கும் வரம் வேண்டும் என கோரினார்
அப்படியே கும்பகோணம் அருகே ஹேமபுஷ்கரணியில் தோன்றினாள் , அவள் கோமள வல்லி பெயரிட்டு என பெயரிட்டு வளர்த்தார் பிருகு முனிவர், அவள் வளர்ந்து உரிய காலத்தில் தான் யாரென உணர்ந்து பெருமாளை நோக்கி தவமிருந்தாள்
பெருமாள் வானலோக தேரில் வந்து சாரங்கம் ஏந்திய கோலத்தில் வந்து தேவியினை மணம் செய்து தன்னோடு அழைத்து சென்றார், அதிலிருந்து இந்த ஆலய வரலாறு தொடங்குகின்றது
இது மிக மிக தொன்மையான ஆலயம், சாரங்கபாணி கோலத்தில் இறைவன் வந்த அந்த ஆலயம், இதனாலே இது தேர்வடிவில் அமைந்துள்ளது, இது பகவான் வந்த தேரின் வடிவமாகவே முதலில் அழகுற சிறியதாக அமைக்கபட்டது பின் அது சோழ மன்னர்களால் பிரமாண்டமானது என்றாலும் தேர்வடிவ சன்னதி இன்றும் ஆதிகாலம் போல் எப்போதும் உண்டு
பள்ளிகொண்ட கோலத்தில் இங்கு எழுந்தருளியிருக்கின்றார் பகவான், அப்படியே உற்சவர் எழும்பிய நிலையில் தேரில் இருந்து அருள்பாலிக்கின்றார்
இது ஆழ்வார்கள் ஏழுபேரால் மங்களாசசனம் செய்யபட்டிருக்கின்றது. பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், பெரியாழ்வார் என ஏழு ஆழ்வார்கள் இங்கு பாடியுள்ளார்கள்
திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் 11 ஆழ்வார்களாலும், திருப்பதி வெங்கடாஜலபதி 10 ஆழ்வார்களாலும் மங்களாசாஸனம் செய்யபட்டன, இதற்கு அடுத்து “கும்பகோணம் சாரங்கபாணி கோவிலே ஏழு ஆழ்வார்களால் மங்களாசாஸனம்” செய்யப்பட்டிருக்கிறது.
இந்த தலம் மிக பிரமாண்டமானது, சோழர்கள் அவ்வளவு பெரியதாக இந்த ஆலயத்தை பிரமாண்டமாக எழுப்பி கொடுத்தார்கள்
தேர் சன்னதியில் சாரங்கனாக காட்சிகொடுக்கும் பெருமாள் மூலவராக சயன கோலத்தில் மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கின்றார் அவரோடு தேவியர் அருள் பாலிக்கின்றனர், பகவானின் தொப்புள் கொடியில் பிரம்மன் அமர்ந்து அருள்பாலிக்கின்றார்
இந்த சன்னதியினை சுற்றி நரசிம்ம அவதார சிற்பங்கள் பொறிக்கபட்டுள்ளன.
இந்த சுவாமி சன்னதிக்கு இரு வாசல்கள் உண்டு, உத்ராயணம் காலகட்டத்தில் ஒரு வாசலும், தெட்சாயணம் காலத்தில் இன்னொரு வாசலுமாக இரு வாசல்கள் உண்டு, அந்த காலத்தை பொறுத்துத்தே ஏதோ ஒன்று திறந்திருக்கும், இது திருவல்லாரை ஆலயம் தவிர வேறு எங்கும் இல்லாத ஒன்று
எல்லா பெருமாள் கோவிலும் சொர்க்கவாசல் கண்டிப்பாக இருக்கும், ஆனால் இந்த தலத்தில் அது இல்லை. காரணம் பகவானே தேரில் ஏறி வந்து நின்ற தலம் என்பதால் இங்கு வழிபட்டால் நேரே வைகுண்டம் என்பதால் சொர்க்க வாசல் இல்லை
ஆம், இந்த தலம் வழிபடுவோர்க்கு நேரடியாகவே வைகுண்ட பிராப்தம் தரும் ஆலயம் அது, உத்ராயண தெட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே பரமபதம் தரும் ஆலயம் இந்த சாரங்கபாணி ஆலயம்
இந்த தலம் திவ்ய தேசங்களில் இந்த ஆலயம் மட்டுமே “உபய பிரதான் திவ்யதேசம்” என அழைக்கபடும், அதாவது உற்சவர் மூலவரின் பொறுப்பில் இருந்து அவருக்கு பதிலாக செயல்படுபவராக இருப்பதால் உபயம் செய்வோர் பிரதானம் என்பதால் இத்தலம் அப்பெயரில் அழைக்கபடுகின்றது.
எல்லா ஆலயத்திலும் சங்கு சக்கரத்துடன் அருள் பாலிக்கும் பெருமாள் இங்கே சாரங்கம் எனும் வில்லுடன் காட்சியளிக்கின்றார்
இங்கு முதலில் வந்தது தாயார் என்பதால் இங்கு தயாருக்கே முன்னுரிமை, முதலில் அவர் சன்னதியில் கோமாதா பூஜை முடிந்தபின்பே பெருமாளுக்கு வழிபாடு செய்யமுடியும். அக்கோவிலின் அமைப்பே தாயாரை வழிபட்ட பின்பே பெருமாளை வழிபடும்படி ஆலய தாத்பரியபடி அமைக்கபட்டிருக்கின்றது
இந்த ஆலயத்தில் ஒரு வினோதம் உண்டு, அது பாதள சீனிவாசன் என்றும் மோட்டு சீனிவாசன் என்றும் இரு சன்னதிகள் உண்டு
அதாவது பகவான் தாயாரை மணமுடிக்கவந்தபோது விளையாட்டாக பூமிக்குள் ஒளிந்திருந்தாராம், அப்படி அவர் இருந்த இடம் பாதள சன்னதி, பின் விளையாட்டை முடிந்து தாயாரை சந்தித்த இடம் மேட்டு சன்னதி எனும் மோட்டு சன்னதி
இதன் அர்தம் மானிடன் தாழ்நிலையில் இருந்து உயர்நிலைக்கு செல்லவேண்டும் என்பது. அடிமட்ட நிலையில் இருந்து தெய்வநிலைக்கு உயரவேண்டும் என்பதை போதிக்கும் தத்துவம் இது.
இந்த ஆலயம் மகா அற்புதங்களை கொண்டது, இந்த ஆலயம் மேல் பெரும் பக்தி கொண்டவர் திருமழிசை ஆழ்வார், ரத்த்தில் வந்த பகவானை நினைந்து அவர் பாடிய “ரத பந்தம்” பிரசித்தியானது
அவரின் அந்திமகால நிகழ்வுகள் இந்த ஆலயத்தில்தான் நடந்தன, அந்த திருமழிசை ஆழ்வார் இங்கு வந்து பள்ளி கொண்ட பரந்தாமனை பாடினார்
“நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால்வரைச்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக்கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே”
அதாவது மிகுந்த களைப்பால் இப்படி உறங்குகின்றாயோ எம்பெருமானே, இப்படி நீ உறங்கிவிட்டால் எங்களை யார் காப்பது? எழுந்து பேசு என் பகவானே எனப் பாடினார்.
இப்பாடல் பாடப்பெற்றதும் பகவான் மெல்ல எழுந்து பாதி படுத்த நிலையில் காட்சியளிழ்த்தார், அந்த கோலம் இப்போதும் உண்டு.
முழு சயன கோலத்தில் இருந்த பெருமான் ஆழ்வார் பாடியதற்காக கொஞ்சம் எழுந்து காட்சியளித்தார, இந்த கோலம் “உத்தான சயனம் ” என்பது, அங்கு பகவான் இந்த கோலத்தில்தான் இப்போதும் மெல்ல எழுந்த நிலையில் காட்சியளிக்கின்றார்
அந்த சாரங்க பாணி ஆலயத்தில்தான் தான் எழுதிய எல்லா ஏடுகளையும் எல்லா பாடல்களையும் பகவான் முன் வைத்தார் திருமழிசை ஆழ்வார்
அவற்றில் பிறக்க இருக்கும் கலிகாலத்துக்கு எது தேவை, எவை எல்லாம் காக்கப்பட வேண்டும் என்பதை பகவானே முடிவு செய்யும்படி பிரார்த்தித்தார்.
அதன்படி பகவான் கட்டளைப்படி எல்லா ஏடுகளையும் காவேரியில் எறிந்தார், கலியுகத்தில் எது காக்கப்படவேண்டுமோ அந்த ஏடுகள் மட்டும் திரும்பி வந்தன.
அவைதான் நான்முகன் திருவந்தாதி, திருச்சந்தவிருத்தம் என நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
அந்த கும்பகோணத்திலே முழு தியானத்தில் இறங்கினார் ஆழ்வார், சுமார் 2300 வருடங்கள் அவர் அங்கே தவமிருந்தார்.
கலியுகம் பிறக்கும் நேரம் அவர் யோக நிஷ்டையின் உச்சத்தில் இருந்தார். கலியுக கொடுமைகளில் இருந்து தன்னையும், பகவானையும் காக்கும் பொருட்டு அவர் அங்கேதான் நிலை கொண்டிருக்கின்றார்
அவர் இன்னும் மரிக்கவில்லை, வைகுண்டம் ஏகவில்லை. மாறாக, கலியுகத்தில் அவர் பூமிக்கு கீழ் தவக்கோலத்தில் இருக்கின்றார். அவர் தவமிருக்கும் இடத்தின் மேல்தான் சன்னதி கட்டப்பட்டுள்ளது.
இந்த சமாதி சாரங்கபாணி ஆலயம் அருகிலே அமைந்துள்ளது, அங்கே திருமழிசை ஆழ்வார் பூமிக்கடியில் இன்றும் தவம் செய்து கொண்டிருக்கின்றார்
இந்த ஆலயத்தின் மகா பெரிய அடையாளம் அந்த நாதமுனிகள்
அவர்தான் காலத்தால் தொலைந்துபோன “நாலாயிர பிரபந்த” பாடல்களை தொகுத்து தந்தவர், முன்பு எல்லா பாடல்களும் குழப்பமான அரசியல், பவுத்தம் போன்ற கொடும்காலத்தில் மறைந்தே போயின
சில ஆங்காங்கே எஞ்சியிருந்தன, அப்படி ஒரு பாடலை இந்த சாரங்கபாணி ஆலயத்தில் கேட்டார் நாதமுனிகள்
“ஆராவமுதே” என தொடங்கும் அப்பாடலை தொடர்ந்து “ஓராயிரத்துள் இப்பத்தும்” என பத்து பாடல்களை பக்தர்கள் பாடினார்கள்
அந்த பாடலில் மனம் சொக்கி போன நாதமுனிகள் “ஆயிரத்தினில் இது பத்துபாடலா? அப்படியானால் மீதி பாடல்கள் எங்கே? என ஆர்வமாக தேடினார் ஆனால் பதில் இல்லை
மிகவும் சோர்ந்த நாதமுனிகள் இந்த சாரங்கபாணியிடமே அதனை கேட்டு தவமிருந்தார் “நம்மாழ்வாரின் ஆழ்வார் திருநகரி தலத்துக்கு போ, அங்கே அவை உனக்கு அருளபடும்” என அவருக்கு நல்லமொழி தந்தார் சாரங்கபாணி
அப்படியே ஆழ்வார்திருநகரி சென்று நம்மாழ்வார் சன்னதில் எல்லா பாடல்களையும் மனதில் உணரபெற்று இன்றிருக்கும் நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தை முழுமையாக நமக்கு தந்தார்
ஆம், நாலாயிர பிரபந்தம் எனும் அற்புதமான பாடல்களை நாதமுனி மூலம் இந்த ஆலயமே மீட்டது
இந்த ஆலயத்தின் அற்புதமான பக்தருக்கு பகவானே மகனாக வந்து இறுதிகாரியம் செய்த காட்சி உண்டு
அங்கே லட்சுமி நாராயணன் எனும் பக்தர் இருந்தார், அவருக்கு குழந்தைகள் இல்லை தன் வாழ்வினையே பகவானுக்கு அர்பணித்து திருபணிகள் செய்தவர் லட்சுமி நாராயணன், கோபுரமெல்லாம் அவர்தான் கட்டினார்
10 வயது முதல் முதிய வயதுவரை தனக்காக உழைத்த அந்த பிள்ளைகளற்ற பக்தன் இறந்தபோது அந்த அற்புத்தை பகவான் காட்டினார்
ஒரு தீபாவளியன்று லட்சுமி நாராயணன் பெருமாளின் திருவடியை அடைந்தார். சிரார்த்தம் செய்ய பிள்ளைகள் இல்லை. அப்படி சிரார்த்தம் செய்யாவிட்டால் அவர்கள் நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால், தனக்கு சேவை செய்த தன் பக்தருக்கு தானே மகனாக இருந்து இறுதிச்சடங்குகள் செய்தார் சாரங்கபாணி.
அது எப்படி உலகறிய நிருபிக்கபட்டது என்றால் அவரின் சிரார்தத்தை ஒரு இளைஞன் முன்னின்று செய்தான் அவன் யாரென தெரியவில்லை எல்லாம் முடிந்தபின் அவனை காணவும் முடியவில்லை
றுநாள் கோவிலை திறந்து பார்த்த போது பெருமாள் ஈரவேட்டியுடனும், மாற்றிய பூணூலுடனும், தர்ப்பைகளுடனும் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சியளித்தார்
அதனை கண்டு மெய்சிலிர்த்த பக்தர்கள் தன் பக்தனுக்காக வந்தது பகவானே என அவர் பாதம் பணிந்தார்கள் இன்றும் தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி, திதி கொடுக்கும் நிகழ்ச்சி உண்டு
இப்படி எத்தனையோ பெருமைகளை கொண்ட அந்த ஆலயத்தின் இன்னொரு பிரமாண்டம் அந்த தேர்
தேர் வடிவில் பகவான் வந்து தாயாரை அழைத்ததால் அக்கோவிலின் சன்னதி மட்டுமல்ல அந்த ஆலய தேரும் அந்த வடிவிலே உண்டு
உலகின் மிகபெரிய தேர்களில் ஒன்றான அது சுமார் 400 டன் எடை கொண்டது, அது ஆடிவரும் அழகு அதி அற்புதமானது
கும்பகோணம் சாரங்கபாணி ஆலயம் அதி அற்புதமானது, பகவான் எக்காலமும் அருள்பாலிக்கும் அற்புதமானது
மார்கழியில் அங்கே வழிபடுவது பெரும்பலனை தரும், கண்டிப்பாக தரிசித்தல் நன்று
அந்த ஆலயம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும் ஆலயம், திருமண தடைகளை அகற்றும் ஆலயம், உங்களுன்னானது எதுவோ அதை மிக சரியாக உங்களிடமே தரும் அற்புதமான ஆலயம்
எதை நீங்கள் வாழ்வில் தொலைத்தீர்களோ, இழந்தீர்களோ அதை மீள எடுத்து தரும் ஆலயமும் அதுதான்
இங்கு சென்று வழிபடும்போது அருகிருக்கும் திருமழிசை ஆழ்வாரின் தவகோல சன்னதியினை வணங்க தவறாதீர்கள் அது கூடுதல் பலனை உங்களுக்கு தரும்
மார்கழியில் இந்த சாரங்க பாணியினை தரிசிக்கும் பக்தர்கள் பேறுபெற்றவர்கள், எங்கிருந்தாலும் இந்த காலகட்டத்தில் அவரை வேண்டி கொள்ளுங்கள், உரிய நேரம் வரும்போது அவரே தன் ஆலயத்துக்கு உங்களை ஈர்த்து கொள்வார்
சாரங்கம் என்பது பலநூறு அம்புகளை ஒரே நேரத்தில் வீசும் பலமான வில், உங்கள் ஆயிரகணக்கான பிரச்சினைகளை ஒரே நாண் அசைவில் பகவான் தீர்த்து தருவார் என்பதைத்தான் , ஒரே ஒருமுறை நீங்கள் அவரை தரிசித்தாலே ஆயிரமாயிரம் பிரச்சினைகள் முடிந்துவிடும் என்பதைத்தான் சாரங்கம் எனும் வில் ஏந்தி நின்று சொல்லி அருள் பாலிக்கின்றார் அந்த சாரங்க பாணி


சப்த ரங்கம் 07 : இந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயம்.
“முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூ ரீரே”
எனத் திருமங்கை ஆழ்வாரால் பாடப்பட்டு மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம் இது. இது மயிலாடுதுறை அருகே காவேரியின் நடுவில் அமைந்திருக்கும் மிகத் தொன்மையான ஆலயம்.
இந்த ஆலயத்தின் வரலாறு புராணகாலத்தில் இருந்தல்ல, உலகம் தோன்றும் காலத்தில் இருந்தே தொடங்குகின்றது.
நான்கு வேதங்களையும் கொண்டு உலகை படைத்துக் கொண்டிருப்பவர் பிரம்மா, அவரிடம் இருந்து மது, கைபடர் எனும் அசுரர்கள் வேதங்களை திருடிச் சென்று கடலுக்கடியில் புதைத்து காவல் இருந்தார்கள், வேதங்கள் இல்லாமல் உலக படைப்பில்லை, இயக்கமில்லை என்பதால் தேவர்கள் பகவான் விஷ்ணுவினை சரணடைந்தார்கள்.
பகவான் விஷ்ணு அந்த அரக்கர்களை முறியடித்து கடலடிக்கு சென்று வேதங்களை மீட்டு வந்தார், இது மத்ஸய அவதாரத்தில் வரும் காட்சி
அப்படி மீட்கப்பட்ட வேதங்கள் கடலடியில் இருந்ததாலும், இன்னும் தீய அரக்கர் கைகளில் இருந்ததாலும் சுத்தமற்று போயின, துர்வாசம் அவைகளைக் ஒட்டிக்கொண்டது.
பகவான் அந்த வேதங்களின் துர்நாற்றத்தை இங்கே போக்கினார், ‘இந்தளம்’ என்றால் தூபம் எனப் பொருள் உண்டு, நறுமணத்தால் அவைகளை சுத்தமாக்கினார், அப்படி பரிமள தூபத்தால் வேதங்களின் அசுத்தம் போக்கிய பகவான் “பரிமள நாதர்” என்றானார்.
அவர் இந்தளம் எனும் தூபமிட்ட இடம் இந்தளூர் என்றாயிற்று, அங்கே குடிகொண்ட ரங்கநாதர், பரிமள புகையிட்டவர் “பரிமள ரங்கநாதர்” என்றானார்.
அந்தச் சம்பவம் நடநத தலம் இது, வேதங்களை மீட்டதால் இந்த பெருமாளுக்கு “வேதநாராயணப் பெருமாள்” என்றொரு பெயரும் உண்டு.
இங்கு நறுமணம் பகவானால் எழுப்பபட்டது என்பதால் அந்த பெருமானுக்கு “சுகந்தவனநாதன்” எனும் பெயர் உருவானது. தாயார் சுகந்தவன நாயகி என்றானார்.
இங்கு நடந்த இன்னொரு சம்பவம் சந்திரபகவானுடையது, இந்து என்றால் சந்திரன் என்றொரு பொருளும் உண்டு.
சந்திரன் தட்சனின் மகள்களை திருமணம் செய்தான், எல்லா மனைவியரையும் சமமாக நடத்துவேன் என உறுதி சொல்லி மணம் செய்தான். ஆனால், ரோகிணியிடம் மட்டும் மிக அன்பாக இருந்தான். இதைப் பொறுக்காத மற்ற மனைவியர் தகப்பன் தட்சனிடம் முறையிட்டனர்.
தட்சன் சந்திரனுக்கு சாபம் கொடுத்தான், அந்தச் சாபம் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டான் சந்திரன். அவன் தன் சாபம் தீர இந்த ஆலயம் வந்து ஒரு குளத்தை உருவாக்கி அதில் நீராடி இந்தப் பெருமாளை பணிந்து நலம் பெற்றான்.
இந்து எனும் சந்திரன் வழிபட்ட ஊர் என்பதால் இது இந்தளூர் என்றாயிற்று, இந்துபுரி எனும் பெயரும் இந்தத் தலத்துக்கு உண்டு.
சந்திரன் நலம் பெற்ற இந்தத் தலத்தின் அன்னை, “சந்திர சாப விமோசன வல்லி” என்று போற்றப்படுகிறாள். தன்னை சாபத்திலிருந்து விடுவித்ததால் பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பங்குனி மாதத்தில் சந்திரன் நடத்தி வைத்த பிரமோற்சவம் இப்போதும் உண்டு.
இந்தத் தலத்தின் மாபெரும் சாட்சி அம்பரீசன் மகாராஜா.
அவன் இப்பகுதியினை முற்காலத்தில் ஆட்சி செய்த அரசன், மாபெரும் பகவான் பக்தன், அவன் ஏகாதசி நாளில் விரதம் இருப்பது வழக்கம்.
அப்படி விரதம் இருக்கும் போது மறுநாள் துவாதசி முடியும் முன் உணவு உண்ண வேண்டும், அப்போதுதான் விரதத்தின் முழுப் பலனும் கிடைக்கும்.
அவன் 1000 ஏகாதசியினை நெருங்கிக் கொண்டிருந்தான், அது நிறைவடைந்தால் அவன் தேவர்களுக்கு சமமான பலனைப் பெற்றுவிடுவான்.
அதை விரும்பாத தேவர்கள் அவனை குழப்பும்படி துர்வாச முனிவரை ஏவிவிட்டார்கள், அவரும் அவனை விரதம் முடியும் நேரம் சந்திக்க வந்தார், வந்தவரிடம் நீங்கள் நீராடி வாருங்கள் பின் போஜனம் செய்யலாம் எனச் சொல்லி காத்திருந்தான் மன்னன்.
நீராட சென்ற முனிவர் காலம் தாழ்த்தினார், மன்னனுக்கோ துவாதசி முடிந்துவிடுமே துவாதசிக்குள் உணவு அருந்தவேண்டுமே இல்லாவிட்டால் விரதபலன் கிடைக்காமல் போய்விடுமே எனும் அச்சம் இருந்தது.
ஆனால், முனிவர் வரவே இல்லை, துவாதசி நெருங்கிக் கொண்டிருந்தது.
மன்னன் திகைத்தான். ஆனால், அவனோடு இருந்தவர்கள் ஒரு யோசனை சொன்னார்கள். “மன்னா, உள்ளங்கை அளவு துளசி தீர்த்தம் மும்முறை குடித்தால் போதும், விரத பலன் கிடைத்துவிடும், பின் துர்வாசர் வந்ததும் அவருடன் சேர்ந்து உண்ணலாம், அவர் துவாதசி முடிந்து வந்தாலும் சிக்கல் இல்லை” என்றார்கள்.
அதன்படி அவன் மும்முறை தீர்த்தம் உண்டான்.
ஆனால், முனிவர் சாதாரணமானவரா அவர் வந்ததே மன்னன் விரதத்தை குழப்ப அல்லவா? அதனால் தன் ஞான திருஷ்டியால் மன்னன் தீர்த்தம் உண்டதை அறிந்து, நான் வருமுன் நீ எப்படி நீர் அருந்தலாம் என்னை அவமானபடுத்தினாயா? எனக் கர்ஜித்து அவனை தண்டிக்க ஒரு பூதம் அனுப்பினார்.
அந்தப் பொல்லா பூதத்தினை கண்டு அஞ்சிய அம்பரீச மன்னன் இந்த இந்தளூர் பகவானிடம் சரணடைந்தான், பகவான் பூதத்தை விரட்டிவிட்டு அவனுக்கு தரிசனமானார்.
அவர் ஆயிரமாவது ஏகாதசியினை பூரணம் செய்திருந்ததால் பகவான் அவனுக்கு தரிசனமாகி வேண்டும் வரம் கேட்டார்.
அவனோ “எல்லா மக்களுக்கும் வரமருள பகவான் இந்த ஆலயத்தில் பெரும் வல்லமையுடன் அமரவேண்டும்” என்றான், அவனின் மாபெரும் அன்பினால் மகிழ்ந்த பகவான் அப்படியே வரமருளினார்.
இந்த ஆலயத்தின் பெரும் சிறப்பு கங்கை ஓடி வந்தது.
கங்கை தன்னில் மூழ்குவோர் பாவத்தை சுமந்து மிக அழுக்காகி சுமையாகி பகவானிடம் கெஞ்சியது, பகவான் ஐப்பசி மாதம் காவேரியில் கலந்தால் அதன் பாவமெல்லாம் தீரும் என வரமருளினார், கங்கை அப்படியே செய்தாள்.
அதிலிருந்து ஐப்பசியில் காவேரியில் நீராடுதல் வெகு பிரசித்தியாயிற்று, அந்த ஐப்பசி முடிந்தும் கார்த்திகை ஒன்றாம் தேதி நீராடி பலன் பெறவும் பகவான் ஒரு ஏற்பாட்டை செய்தார்.
ஐப்பசியில் கால்கள் ஊனமுற்ற ஒரு பக்தன் துலா ஸ்நானம் செய்ய விரும்பி இந்த ஊரை நோக்கி மெல்ல வந்தான். ஆனால், அவன் வருவதற்குள் ஐப்பசி முடிந்து கார்த்திகை தொடங்கிவிட்டது, மிகுந்த சிரமப்பட்டு வந்த அவன் மனம் வெதும்பி பரிமள ரங்கனிடம் மனதார முறையிட்டான். பெருமாளோ, ‘இன்றும் நீ நீராடலாம், உண்மையான பக்தனான உனக்காக ஒரு நாளை நீட்டிக்கின்றேன்” என்றார்.
அதிலிருந்து கார்த்திகை முதல் தேதிவரை இங்கு துலா ஸ்நானம் உண்டு.
திருமங்கை ஆழ்வார் இந்த தலத்தில் தனி பக்தி கொண்டிருந்தார், ஒருமுறை அவர் பகவானை தரிசிக்க வரும்போது தாமதமாகிவிட்டது, தரிசனம் செய்யமுடியாமல் தவித்த ஆழ்வாருக்கு பகவான் தன் வீரசயன கோலத்தை காட்டி அருள் செய்தார்.
ஆம். புஜங்க சயனம், வீர சயனம், போக சயனம், உத்தான சயனம், பால சயனம், தல சயனம் எனப் பல வகை சயனங்கள் பெருமாளுக்கு உண்டு. இந்தள பரிமள ரங்கர் நான்கு திருக்கரங்களோடு சங்கு, சக்கரதாரியாக வீர சயனத்தில் காட்சியளிக்கிறார்.
தன்னைத் தேடிவந்த திருமங்கை ஆழ்வாருக்கு அவர் அளித்த காட்சி அது, முன்பு அம்பரீச மகாராஜாவுக்காக பூதத்தை எப்படி விரட்டி நின்றாரோ அதே கோலத்தில் அருள் பாலித்தார்.
அதனை திருமங்கை ஆழ்வார் பாடினார்.
“ஆசை வழுவா தேத்து மெமக்கிங் கிழுக்காய்த்து அடியோர்க்கு
தேசமறிய உமக்கே யாளாய்ச் திரிகின்றோமுக்கு
காசினொளியில் திகழும் வண்ணம் காட்டீர்
எம்பெருமான் காசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே”
இப்படி மிக நீண்ட பின்னணி கொண்ட மகா சக்திவாய்ந்த ஆலயம் இது, ஏகப்பட்ட வரலாறும் சாட்சிகளும் அவர்களின் காட்சிகளும் கொண்ட முக்கியமான தலம் இது.
ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் கம்பீரமாக நிற்கும் பெரிய கோவிலான இத்தலத்தின் வாசலில் சந்திர புஷ்கரிணி தீர்த்தம் உள்ளது. சந்திரன் தன் சாபம் தீர உருவாக்கிய பொய்கை இதுதான்.
மூலஸ்தானத்தில் அரங்கனின் திருமுகத்தருகே சூரியனும், பாதங்களுக்கு அருகில் சந்திரனும், நாபிக் கமலத்தில் பிரம்மாவும் காட்சி அளிக்கின்றனர்.
தலைப் பக்கத்தில் காவிரித் தாயும், கால் பக்கத்தில் கங்கா மாதாவும் பெருமாளை தரிசித்தவாறு காட்சியளிக்கின்றனர்.
எமதர்மராஜனும், அம்பரீஷ் மகாராஜாவும் திருவடிகளுக்கு அருகில் பெருமாளை வணங்கிய வண்ணம் உள்ளனர். தனிச் சந்நிதியில் பரிமள ரங்கநாயகி தாயார் அருள்பாலிக்கிறாள்.
மூலவர் சந்நிதியின் மேல் உள்ள விமானம் ‘வேத சக்ர விமானம்’ என்று அழைக்கப்படுகிறது.
உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழில் கோலம் காட்டுகிறார். கருவறை சுற்றில் ஆழ்வார்கள், சக்கரத்தாழ்வார், சந்திரன் சாப விமோசன தாயார் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.
பரிமள ரங்கனாதன் என்ற பெயருக்கேற்றாற்போல் உற்சவ மூர்த்தி அழகிய திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். அருகில் சந்தான கோபாலமூர்த்தியும் எழுந்தருளியுள்ளார்.
இந்த ஆலயத்தின் ரங்கன் எங்கும் காணமுடியா பேரழகு, நான்கு கரங்களுடன் வீரசயன கோலத்தில் பச்சை நிற மேனியுடன் அவர் பள்ளிகொண்டிருக்கும் பேரழகு வேறேங்கும் இல்லாதது
“பச்சை மாமலைபோல் மேனி.” எனத் திருமங்கை ஆழ்வாரும், தொண்டரடிபொடியாழ்வாரும் பாடிய திருமேனி அது, அவ்வளவு அழகானது.
இந்த ஆலயத்தின் மாபெரும் சிறப்பு தசவாதார சிற்பங்கள், கோபுரத்தை தாண்டி கொடிமரம் தாண்டிய உடனேயே பெருமாளின் தசாவதாரச் சிற்பங்கள் அவ்வளவு அழகாக செதுக்கப்பட்டிருக்கின்றன.
தசவாதார வரிசைப்படி உயிர்களின் படிநிலையினை மாறி வரும் உயிர்கள் தோற்றத்தையும் சிந்தனை அமைப்பையும் அழகே உருவாக அங்கே சிற்பமாக வைத்திருக்கின்றார்கள்.
பத்து அவதாரமும் அவ்வளவு அழகாக செதுக்கப்பட்டிருக்கின்றது.
அதைத் தாண்டி வாலி வதம், சுக்ரீவனுக்கு ராமன் முடிசூட்டுதல், அனுமன் இலங்காபுரியினை எரித்தல், சீதை அனுமனுக்கு கணையாழி கொடுத்தல் என இராமாயண சிற்பங்கள் பேரழகு.
பகவான் கிருஷ்ணரின் காளிங்க நர்த்தன சிற்பம் தனி அழகு.
வாமனனிடம் மகாபலி சக்கரவர்த்தி தலைகொடுக்கும் சிற்பம் மகா தத்ரூபமானது, பாமா ருக்மணியுடன் கண்ணன் காட்சிகொடுக்கும் அழகு அபூர்வமானது.
தாய் யசோதையுடன் குழந்தை கண்ணன், குழல் இசைக்கும் கண்ணன், ஆலிழை கண்ணன் என எல்லா கிருஷ்ண காட்சிகளும் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.
இது இந்த ஆலயத்தின் தனிப்பெரும் சிறப்பு.
இந்த ஆலயம் அருகே அமைதிருக்கும் இரு ஆலயங்கள் பிரசித்தியானது. முதலாவது, மாட வீதியில் மிகப் புராதனமான ஹயக்ரீவர் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு ஸ்வாமி தேசிகனும் லட்சுமி ஹயக்ரீவரும் காட்சி தருகிறார்கள். சற்று தொலைவில் அதன் அனுமன் ஆலயம் அமைந்துள்ளது.
இவை தனி ஆலயம் என்றாலும் பூஜைகள் முதல் சகலமும் பரிமள நாதர் ஆலயத்தில் இருந்தே நடக்கின்றன.
இந்த ஆலயம் ஏகாதசி பெருமையினைச் சொல்லும் ஆலயம், ஏகாதசியன்று விரதமிருந்து இந்தப் பரிமள ரங்கனை வழிபட்டு துளசி சாற்றி நின்றால் எல்லா வேண்டுதலும் கேட்கப்படும், எந்த குறை இருந்தாலும் நிவர்த்தியாகும்.
இந்த ஆலயம் மகா சக்தி வாய்ந்தது, எதை இழந்தீர்களோ அதை பகவான் மீட்டுத் தருவார். உங்களுடைய சொத்துக்கள் இல்லை வேறு வகையான உரிமைகளை யார் வலுகட்டாயமாக பறித்திருந்தாலும், உங்களுக்குரியது பறிபோய் கொடியவரிடம் பொல்லாதவரிடம் சிக்கியிருந்தாலும் பகவான் அதை மீட்டு தருவார்.
இது உங்கள் அவமானங்களை, பழிகளை, உங்கள் மேல் வீசப்பட்ட பெரும் சேறுகளை, துர்நாற்றம் போன்ற கொடிய குற்றங்களை மாற்றி தரும் ஆலயம்.
உங்கள் மேல் ஊரே வெறுக்கும், உலகமே ஒதுக்கிவைக்கும் பெரும் பழி இருந்தால், குடும்பமும் உற்றாரும் எல்லாரும் அவமானமாய் பார்க்கும் நிலை, புழுவினும் துச்சமாக வெறுத்து ஒதுக்கப்படும் மிக துர்பாக்கியமான நிலை இருந்தால் அதனை மாற்றித் தரும் ஆலயம் இது.
பெரும் அவமானம், கண்ணீர், இழிவு என உங்கள் வாழ்வு சிக்கியிருந்தால், பெரும் பழிகள் மன உளைச்சல் புறக்கணிப்பு என வாழ்வே பெரும் சீரழிவில் சிக்கியிருந்தால் இந்தத் தலத்தில் நறுமண புகையிட்டு வணங்குங்கள், தூபமிட்டு வணங்குங்கள் உங்கள் வாழ்வு மாறும்.
குடும்பம், குடும்பத்தார், பணியிடம், சமூகம், தொழில் என ஏதும் பெரிய பெரிய அவமானமும் சிக்கலும் இருந்தால் இங்கு நறும்புகையிட்டு வணங்குங்கள்.
பகவான் உங்கள் வாழ்வை மாற்றுவார், ஊர் விரும்பும் பெரும் வாழ்வினைத் தருவார்.
இந்தக் காவேரி கங்கையினை விட சக்திவாய்ந்தது புனிதமானது என்பதால் இங்கு நீராடினால் எல்லாப் பாவமும் நீங்கும்.
இங்கு சந்திரன் வழிபாட்டான் என்பது அவனுக்கானது மட்டுமல்ல, சந்திரனே மனதின் கிரஹம் ஒரு பொருள் மேல் ஒரு விஷயத்தின் மேல் ஈர்ப்பு வரவும், அதனில் இருந்து விடுபடவும் சந்திரன் கொடுக்கும் வலிமையே காரணம்.
ஆம். மனதை ஆட்டுவிப்பவன் சந்திரன்.
சந்திரனின் தாக்கத்தால் உங்கள் மனம் எதிலாவது பித்தாக இருக்கலாம். அது பெண், பொன், மண் என எங்கோ சிக்கிக் கிடக்கலாம், அது அல்லாமல் இதர மனபாதிப்புகள் இருக்கலாம்.
இங்கு வழிபட்டால் மனம் மாறும், மாயைகள் நீங்கும் புத்தி தெளிவாகும், மாயைகள் விலகும்.
எது மனதால் உங்களை ஆட்டிவைத்ததோ அந்த மாய ஈர்ப்பு அகலும், மனம் தெளிவாகி சிந்தை தெளிவாகி உண்மை புரிந்த மனம் உங்களுக்கு வாய்க்கும். அப்போது நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.
மனம் சம்பந்தபட்ட எல்லா கோளாறுகளும் தீரும் தலம் இது.
மனச்சிக்கல், உறவு சிக்கல், உணர்வுகளால் வந்த சிக்கல், வெற்று மயக்கத்தில் சிக்கிய மனம் என எல்லா மனதின் கோளாறும் இங்கு சரியாகும்.
இன்றைய உலகில் மனநல மருத்துவர் என்றொரு கூட்டம் உண்டு, ஆனால் மனதை முழுக்க அறிந்தவர் யாருமில்லை, அதைக் கண்டவரோ அதன் சிக்கல் அறிந்தவர் என யாருமே இல்லை.
மிக மிக ஆச்சரியமானதும் யாராலும் புரிந்து கொள்ளமுடியாததுமான மனதை மாற்றும் சக்தி, அதைப் புரிந்து கொண்டு பண்படுத்தி அதை சரியாக்கும் சக்தி பகவான் ஒருவனுக்கே உண்டு.
அந்த வரத்தை தரும் அபூர்வ ஆலயம் இது, மனநல மருத்துவத்தின் மூலக்கோவில் இது.
பொதுவாக, நறுமணம் என்பது இந்துக்களின் வாழ்வியலில் ஒன்று, அதனாலே இருக்குமிடத்தை மணமிக்கதாக வைப்பது இந்துமரபு.
சாம்பிராணி, ஊதுபத்தி, நறுமலர்கள் என மணமிக்க பொருட்கள் இல்லாமல் இந்துக்கள் வழிபாடே இல்லை.
ஆம். நறுமணம் மூளைக்கு நல்ல பலம் தரும். நல்ல நல்ல சிந்தனைகளைத் தரும், தெளிவினைதா தரும், மனதுக்கு அமைதியினைத் தரும்.
அங்கே தெய்வ சக்தி சேர்ந்து கொண்டால் பெரும் ஆச்சரியம் நிகழும், அப்படி மகா ஆச்சரியங்களை அதிசயங்களை தன்னை நம்பிவரும் பக்தர்களுக்கு தருவது இந்த ஆலயம்.
அங்கு செல்லும் போது மணமிக்க குங்கிலியம் , சாம்பிராணி போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள், துளசி மாலை மறக்கக் கூடாதது.
அந்த சந்திரபொய்கையில் நீராடி பகவானை தரிசித்து நறுமண தூபமிட்டு வணங்குங்கள், துளசிமாலை சாற்றி நில்லுங்கள் அந்நொடியில் சாக்கடையாய் கிடக்கும் உங்கள் வாழ்வு மணமிக்க சந்தனமாய் மாறும், எல்லா நல்ல திருப்பங்களும் உங்களுக்கு வரும்.
நீங்கள் வழிபடும் நாள் ஏகாதசியாய் இருந்தால் இன்னும் சிறப்பு.
அப்போது இந்த ஸ்லோகத்தினையும் சொல்லுதல் நன்று.
“ஸ்ரீமத் ஸுகந்தி வபினே பணிராஜ சாயீ
சந்த்ராக மோசன பரா தயிதேந்து தீர்த்தம்
தஸ்மிந் ஸுகந்த வநநாத விமாநவர்யம்
ப்ராசீ முகோ விதிநுத: கலு வேத மோதம்’’
இந்தத் தலத்தில் வழிபட்டால் உங்கள் மனதினை ஆட்டிவைக்கும் எல்லா மாயையும் அகலும், மனம் தெளிவாகும், எது சரி, எது பொய் என்பதும், எது வேண்டும், எது வேண்டாம் எனும் ஞானமும் கிடைக்கும்.
உங்கள் வாழ்வே மாறும், அந்தப் பரிமள ரங்கன் உங்கள் வாழ்வினையும் பெயரையும் மணக்க வைத்து புகழ்பரப்பவும், எல்லா வளமும் தந்து வாழவைக்கவும் காத்துக் கொண்டிருக்கின்றார், அங்கு வழிபடுபவர்கள் நிச்சயம் பாக்கியசாலிகள், ரங்கனின் பூரண அருள் அவர்களுக்கு உண்டு. இது சத்தியம்.
