பஞ்ச மயான தலங்கள்
பஞ்ச மயான தலம் 01 : கச்சி மயானம்
காஞ்சிபுரத்தின் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் அமைந்த்ருக்கும் ஒரு மகா முக்கிய சன்னதிதான் முதல் மயான தலம்
இது காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் உட்புறத்தில் கொடிமரத்திற்கு வலப்புறம் மேற்கு நோக்கி தனி சந்நிதியாக அமைந்துள்ளது. இக்கோயில் மூலத்தானத்தின் மூலவராக, கச்சி மயானேசுவரர் எழுந்தருளி அருள் புரிகின்றார். இவருக்கு மயான லிங்கேசுவரர் எனும் மற்றொரு பெயருமுண்டு
இந்த தலத்துக்கும் ஒரு புராணம் உண்டு, அதை பார்க்குமுன் இந்த பஞ்ச மயான தலங்களின் தாத்பரியத்தை புரிந்து கொண்டால் இந்த ஆலயத்தின் சிறப்பை அதன் அருளை, போதனையினை புரிந்துகொள்ளுதல் எளிதாகும்
சைவ ஆகம நூல்கள் சிவனே ஐந்து தொழில்களை செய்வதாக சொல்கின்றன, அதனை சிவனின் முகத்தோடு பொருத்தி சொல்கின்றன அதன்படி சிவபெருமானின் ஐந்து முகங்களான சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் ஆகியவை
இவை முறையே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகியவற்றைச் செய்கின்றன
இனி சிவனின் வடிவகங்களான ஐந்து சக்திகளை காணலாம், பஞ்சபூதங்களின் வடிவம் சிவம் என்பது மரபு, அவ்வகையில் வானம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகிய ஐந்தும் பஞ்ச பூதங்களாகும்
இந்த பஞ்சபூதங்களுக்கும் சிவனின் தொழிலுக்குமான தொடர்பை சொல்வதுதான் இந்த மயான தலங்களின் சிறப்பு
அதாவது இந்து தொழில் என்பது ஒரு வடிவில் இருந்து இன்னொரு வடிவுக்கு மாறும் விஷயம், ஒரு இயக்கத்தை நடத்தும் விஷயம்
இந்த இயக்கத்தைத்தான் ஒன்றில் இருந்து இன்னொன்றை உருவாக்கும் அந்த பஞ்ச மயான தலங்கள் தத்துவத்தோடு போதிக்கின்றன, ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு உலக இயக்கத்தை மாற்றுவதுபோல ஆத்மாவினை ஆத்ம கர்மாவினை மாற்றி அடுத்த படிநிலைக்கு அதனை கொண்டு செல்லும் தலங்கள் இந்த பஞ்ச மயான தலங்கள்
ஒரு வடிவில் இருந்து இன்னொரு வடிவுக்கு மாறுவது, மயானம் என்றால் அதுதான் உடல் வடிவம் அழிந்து அந்த ஆத்மா அடுத்த வடிவம் எடுக்கும் இடம் மயானம், அப்படி கர்மரீதியாக அடுத்ததடுத்த படிநிலைக்கு ஆத்மா மாறுவது இந்த மயான தலத்தின் சிறப்புக்கள்
சிவனின் ஐந்தொழிலுக்கும் பஞ்சபூதத்துக்குமான தொடர்பு என்ன?
இந்த உலகம் வெளியில் அதாவது எல்லையும் , முடிவும் தொடக்கமற்ற இந்த வெளி எனும் ஆகாயத்தில் இருந்து காற்று தோன்றும்
காற்றில் இருந்து அக்னி உருவாகும், அக்னியும் காற்றும் வெளியும் சேர்ந்து நீர் உருவாகும், நீரில் இருந்து நிலம் உருவாகும் , நிலத்தில் உயிர்களெல்லாம் உருவாகும்
பின் அழியும்போது நிலம் நீரால் அழியும், நீரானது அக்னியின் வெப்பத்தால் இல்லாது போகும் , அக்னி காற்றில் கரையும், காற்று ஆகாயத்தில் இல்லாமல் போகும்
இதுதான் இந்த உலகம் தோன்றி மறையும் சுழற்சி, விஞ்ஞானமும் இதைத்தான் சொல்கின்றது
இதை என்றோ சொன்ன இந்துமதம் இந்த ஐந்து பூதங்களை சிவன் என்றது, அந்த ஐந்து தொழில்கள் அதாவது படைத்தல், காத்தல், அழித்தல், அருளல் மறைதல் என்பதை சொல்லிற்று
“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே”
என திருவாசகம் சொல்லும் பாடலின் தத்துவம் இதுதான்
மயானத்து தத்துவம் இதைத்தான் சொல்கின்றது, அதை ஆழமாக கவனித்தால் தெரியும்
உடல் பஞ்ச பூதத்தால் ஆனது, அதை அக்னி எரிக்கின்றது, காற்று உதவுகின்றது சாம்பல் மிஞ்சுகின்றது அது நீரில் கரைகின்றது , கடைசியில் ஒன்றுமில்லாமல் போகின்றது
மீண்டும் அந்த ஆத்மா வரும்போது தாய்வயிற்றில் உடலெடுத்து வருகின்றது
இதனாலே இந்த மயான சுழற்சியும் சிவனின் ஆட்டம் அவரின் செயல் என்றார்கள், எப்படி இந்த பிரபஞ்சம் உருவாகி வந்து அழிகின்றதோ அப்படி மானிட உடலும் அண்டத்தில் உள்ளது எனும் வகையில் பிண்டத்திலும் உண்டு என்பதை சொன்னார்கள்
இதுதான் மயானத்தில் சிவன் மாயாண்டியாக இருக்கும் சூட்சும தாத்பரியம்
அப்படி இந்த பஞ்ச பூத தலங்களின் முதல் தலம் இந்த காஞ்சி எனும் கச்சி மயானம்
காஞ்சி ஏமாபரேஸ்வரர் ஆலயம் பிரசித்தியானது பழமையானது என்றாலும் அதைவிட பழமையானது இந்த கச்சி மயான ஆலயம்
“அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பிள்ளை எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ
மூடனாய் அடியேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
என் செய்வேன் கச்சி ஏகம்ப நாதனே”
என பட்டிதனத்தார் பிறப்பின் கொடுமை பற்றி பாடியெதெல்லாம் , எப்போது கர்மம் தீர்ந்து பிறவா நிலை வாய்க்கும் என் பாடியதெல்லாம் இந்த சிவனை பற்றித்தான்
இந்த ஆலயம் பண்டாசுரன் கதையில் இருந்து தொடங்குகின்றது
அப்படி ஒரு அசுரன் இருந்தான், இவனுக்கு உடல் கிடையாது மாறாக எண்ணங்களால் ஆட்டிவைப்பான், அப்படி அவன் பிரம்மன், திருமால் உடலில் புகுந்து அவர்கள் உடலை பலவீனபடுத்தி சிந்தையினை குழப்பினான்
இதனால் படைக்கும் தொழில் இல்லை, அதனை காக்கும் தொழிலும் சிக்கலானது இன்னும் தேவர்கள் எல்லோரும் குழம்பினர்
எல்லா தேவர்கள் உடலும் இந்த இரு முக்கிய மூர்த்திகளின் உடலுக்குள்ளும் இருந்து பண்டாசுரன் அவர்களை பலவீனபடுத்தி இயக்கத்தை முற்றிலும் குழப்பி வைத்திருந்தான்
சிவபெருமான் இந்த பண்டாசுரனை ஒழிக்க திருவுளம் கொண்டார், அதன்படி இந்த மயானத்தில் பெரும் யாக குண்டம் அமைத்து நெய்யினால் நிரப்பி அவரே அக்னி பிழம்பாக வந்து யாகம் இயற்றினார்
சிவதத்துவங்கள் எனும் ஐந்து தொழிலை தர்ப்பையாகவும், முக்குணங்களான ரஜோ, தமஸ், சத்வ குணத்தை பீடமுமாக கொண்டு அந்த யாகத்தை செய்தார்
அப்போது தேவர்களை அந்த யாகத்தில் தேவர்களை இட்டார் அப்போது பண்டாசுரன் தனித்து வந்தான் அவனை அழித்துபோட்ட சிவன், தேவர்களை மீள வரசெய்தார்
இதுதான் அந்த ஆலயத்தின் தலபுராணம், தேவர்கள் வலுவிழந்த நிலையில் மயானம் சென்று மீண்டு நல் உரு கொண்டு மீண்டெழுந்து வந்த சம்பவத்தை சொல்லும் புராணம்
இந்த தத்துவத்தை கொஞ்ச்ம கவனமாக பார்த்தால் பல விஷயங்கள் புரியும்
தேவர்களை ஒரு அசுரன் உள்ளே புகுந்து பலவீனபடுத்துகின்றான், அவனை ஐந்தொழில்களை தர்ப்பையாக கொண்டு முக்குணங்களை பீடமாக கொண்டு யாகம் செய்து அவர்களை உருமாற்றி அதிலிருந்து அசுரனை பிரித்து அழிக்கின்றார்
இங்கே முக்குணங்கள் என்பது ரஜோ, தமஸ், சத்வ குணத்தை குறிப்பது. இந்த குணங்கள் தான் ஒருவனை ஆட்டிவைக்கின்ற்ன
தாம்ஸ குணத்தையும் ரஜோ குணத்தையும் சத்வ குணத்தால் வென்று பின் அந்த சத்வகுணத்தையும் அடக்கி ஒன்றுமில்லாமல் போவதே இறையில் கலக்கும் யோக நிலை முழு ஞான நிலை என்பது கீதையில் கண்ணன் சொலவது
மாயையினை அகற்றுதல் என அதற்கு பெயர், இங்கே சிவன் அந்த முக்குணங்களை பீடமாக கொண்டு , தன் ஐந்து குணங்களை தர்ப்பையாக கொண்டு யாகம் செய்தார் என்பது தன் இடையறா ஐந்த் தொழிலால் நீக்கி பண்டாசுரனை அகற்றி அழித்து தேவர்களை மீட்டெடுத்தார் என்பது
இன்னுமோர் தாத்பரியத்தை இந்த ஆலயம் சொல்கின்றது, அது தேவர்களை மீளபடைத்தல் என்பது
மயானம் என்பது தகணம் செய்யபடுமிடம் அல்லவா? அப்படி இங்கு பண்டாசுரனால் பாதிக்கபட்டோர் தகணம் செய்யப்பட்டு மீள் உருவம் பெற்று மறுபடி அசுர குணமில்லாமல் அவன் பாதிப்பு இல்லாமல் சரியாக் கடமையினை செய்தார்கள் என்பது
அவர்களின் அசுர குணம் அங்கே எரிந்துவிட்டது, அவர்கள் புது படைப்பாக வெளிவந்தார்கள்
ஆம், இது படைப்பு தொழிலை சொல்லும் ஆலயம், சிவனின் ஐந்து தொழில்களில் முதல் தொழிலான படைப்பின் தொழிலுக்கான அலயம்
இந்த ஆலயம் நில தத்துவத்தை பஞ்ச பூத தத்துவத்தில் சொல்கின்றது
நிலமே எல்லாவற்றுக்கும் ஆதாரம் நிலத்தில் இருந்துதான் எல்லாம் உருவாகின்றன, நிலம்தான் படைப்பினை கொடுக்கும், நிலம்தான் படைப்பின் ஆதாரம்
மற்றவையெல்லாம் படைப்பின் காரணமும் இயக்கமுமாகும் ஆனால் படைப்பினை தாங்கி நிற்பதும் உயிர்கள் வாழ்வதும் படைப்புகள் உருவாவதும் நிலத்தில்தான்
இது படைப்பு தொழிலுக்கான மயானம், ஒரு மோசமான அல்லது செயலற்ற ந்லையில் இருப்போரை இன்னொரு செயல்மிக்க வடிவத்துக்கு மாற்றும் மயானம்
ஒருவரிடம் உள்ள அகாத குணம் அல்லது செயலிழக்க வைக்குமோ எது ஒருவனை அவன் கர்மாவினை செய்யவிடாமல் மயக்கி வைக்குமோ அதை தகணம் செய்து எரித்துபோட்டு அவனை புது மனிதனாக உருவாக்கி அனுப்பும் ஆலயம்
சுருக்கமாக சொன்னால் வினைகளை அறுத்துபோடும் ஆலயம், கட்டுக்களை எரித்துபோடும் சன்னதி இது
இந்த பண்டாசுர்ன கதை மானுடர்க்கு அழகான நீதியினை போதித்து நம்பிக்கையும் தருகின்றது
பண்டாசுரன் என்றால் பாண்டம் + அசுரன் என பிரிந்துவரும், பாண்டம் என்றால் உடல்
மானிட கர்மம் அல்லது ஆத்மாவின் கர்மம் அந்த உடல் மூலமே கழியம், மானுட உடல் என்பது கர்மம் கழிக்கும் கருவி
அந்த உடலில் சில வேண்டாத குணம், பலவீனம் , மாயை, வழக்கம் என வந்து ஒட்டிகொண்டால் அது அவனை கர்மத்தை செய்யவிடாது எதற்கு படைக்கபட்டானோ அதை செய்யவிடாது
அது லவுகீக உலகில் மது,மாது,போதை, சோம்பேறிதனம், பேராசை, நிறைவின்மை என ஏதோ ஒரு பலவீனமாக இருக்கலாம், இல்லை நோய் நொடியாக இருக்கலாம் ஏதோ ஒன்று அவனை பலவீனபடுத்தி கர்மத்தை செய்யவிடாமல் குழப்பி கட்டி வைத்திருக்கலாம்
அப்படியாக பாதிக்கபட்டவர்கள் மீளமுடியா பலவீனத்தில் இருப்பவர்கள் இந்த ஆலயம் வந்து பணிந்தால் அவர்களிடமுள்ள அந்த கெட்ட பலவீனமான தன்மை , அந்த மோசமான வழக்கம் இந்த தலத்தில் எரிந்துபோகும்
அவர்கள் புது மனித்னாக படைக்கபட்டு வெளிவருவார்கள், இந்த சன்னதியில் வணங்குவோர் இரண்டாம் பிறப்பெடுப்பர் என்பது நம்பிக்கை
உங்கள் பழைய வாழ்வை தகணம் செய்து, மீறமுடியா மாய குணங்களை எரித்து உங்கள் கர்மத்தை சரியாக செய்ய, பிறப்பின் நோக்கத்தை சரியாக செய்ய வழிகாட்டும் தலம் இது
ஒவ்வொரு மானுடனுக்கும் ஒரு பலவீனம் உண்டு, லவுகீக மொழியில் அதை பலவீனம் என சொன்னாலும் அதன் உண்மையான பொருள் மாயை
இல்லாத ஒன்றை இருப்பதாக கருதி அதிலே சிக்கி கிடப்பதுதான் பலவீனம்
அது மது,மாது, போதை, பணம், சுகம், உணவு, புகழ் என எதுவாகவும் இருக்கலாம் அதில் மனம் சிக்கி அடிமையாகிவிட்டால் அவன் தன் கர்மத்தை செய்யமுடியாது, பிறப்பின் நோக்கத்தை அடையமுடியாது
அப்படியான மாயையில் சிக்கி செயல்யற்று பலனற்று தெளிவில்லாமல் உடல்ரீதியாக மன்ரீதியாக குழம்பி கிடந்தால் இந்த ஆலயம் அவர்கள் வாழ்வை மாற்றும்
இந்த கச்சி மயான சிவன் அவர்களின் மாயையினை எரித்து தருவார், அவர்களை அப்படியே பதுபடைப்பாக் படைத்து தருவார், பலவீனமற்ற மாய மயக்கங்கள் அற்ற கர்மாவினை சரியாக செய்யு வலுவான இயல்பை தருவார்
மானிட பலவீனங்களை எரித்து அவர்களை புது மனிதனாக ஆக்குவது இந்த கச்சி மயானம்
பட்டினத்தார் இதற்கு பெரிய உதாரணம் பட்டினத்தார், அவர் இந்த தலத்து சிவனின் சக்தியினை இந்த மயான் சிவன் மாயையினை அகற்றி ஞானத்தை தந்து கர்மத்தைமட்டும் செய்யவைப்பார் என்பதை உணர்ந்தவர் அதனால் தன் ஞானபடல்களையெல்லாம் இந்த சிவனை நோக்கி பாடினார்
“காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி என் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயைத உனை மறலிவிட்ட
தூதென்றுஎண் ணாமற் சுகமென்று நாடுமித் துற்புத்தியை
ஏதென்று எடுத்துரைப்பேன் இறைவாகச்சி ஏகம்பனே.
பொருளுடையோரைச் செயலிலும் வீரரைப் போர்க்களத்துந்
தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடையோரைத் தவத்திற்குணத்தில் அருளிலன்பில்
இருளறு சொல்லிலுங் காணத்தகுங்கச்சி ஏகம்பனே.
வாதுக்குச்சண்டைக்குப் போவார்வருவார் வழக்குரைப்பார்
தீதுக்குதவியுஞ் செய்திடுவார்தினந் தேடியொன்றும்
மாதுக்களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார் இறைவாகச்சி ஏகம்பனே.
ஓயாமற் பொய்சொல்வர் நல்லோரைநிந்திப்பர் உற்றுப்பெற்ற
தாயாரைவைவர் சதியாயிரஞ்செய்வர் சாத்திரங்கள்
ஆயார்பிறர்க்கு உபகாரஞ்செய்யார்தமை அண்டினர்க்கொன்று
ஈயாரிருந்தென்ன போயென்ன காண்கச்சி ஏகம்பனே”
அதாவது பெண், பொருள் மயக்கம், வாதம், சண்டை , சச்சரவு, பேராசை இன்னும் பலவகையான விஷயமெல்லாம் மாயை, அந்த மாய பலவீனத்தை களைந்து அருள்தருவாய் ஏகம்பனே என இந்த மயான சிவனை நோக்கி அவர் பாடுகின்றார்
பலவீன மாயையினை எரித்து போட சொல்லி பாடுகின்றார், அவரின் பாடல்கள் வெறும் பாடல்கள் அல்ல இந்த உலகின் மாய மயக்கங்களை இந்த தலத்து சிவன் எரித்து தருவார் அதனாலே அவர் மயானஈஸ்வரர் என சுட்டிகாட்டி பாடுகின்றார்
இந்த தலத்தில் அப்பர்சுவாமிகளின் பாடலும் உண்டு
““மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி
மயானத்தான் வார்சடையன் என்னின் அல்லால்
ஒப்புடையான் அல்லன் ஓருருவனல்லன்
ஓரூரனல்லன் ஓர்உவமன் இல்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே””
அதாவது கச்சி மயானத்தில் இருக்கும் சிவன் அவன் இப்படி இருப்பான் என்று உதாரணம் கூற முடியாது
ஒரு உருவம் உடையவன் அல்ல, ஒரு ஊர் காரன் அல்ல
உவமை இல்லாதவன், நிறம் இல்லாதவன், அவன் இப்படியானவன் இப்படி இருப்பான் என வரைந்துகாட்ட முடியாதவன் அவன் சிந்தனனைக்கு அப்பாற்பட்டவன் என்கின்றார் அப்பர்
அதாவது ஒரு மனிதனுக்கு ஊர்பெயர், குலபெயர், அடையாளம் எல்லாம் உண்டு. ஒரு ஆத்மா அந்த உடலில் வரும்போது அந்த அடையாளத்தை பெறும்
அப்படி சிவனும் காசிநாதன் , ஆரூரான் என இருக்கும் இடத்தை பொறுத்து பெயர்பெற்று நிற்பார்
ஆனால் இந்த சிவன் மயான சிவன் அதாவது ஆத்ம தனி தத்துவம், உடலை இழந்துவிடால் ஆத்மாவுக்கு எந்த அடையாளமும் இல்லை அது வெளியில் கலந்த ஒன்று எல்லாம் கடந்த நிலைக்கு சென்றுவிடுவது போல இந்த் சிவன் எல்லாம் கடந்த நிலையில் இன்னொரு வடிவில் மயான வடிவில் எந்த வகையிலும் சொல்லமுடியா வகையில் நிற்கின்றார் என்பது பொருள்
அங்கே சிவன் எல்லாம் கடந்த நிலையில் ஆத்ம வடிவில் , மயானத்தில் உருவற்ற் நிற்பதுபோல் நிற்கின்றார் அந்த சிவன் மயான கோலத்தில் நிற்கின்றார், அந்த மயானத்தில் மாய பலவீனமெல்லாம் அகலும் மானிட வாழ்வின் சிக்கல் ஆத்ம மயக்கம் எல்லாம் எரிந்துபோகும்
அங்கே சென்று வணங்கும் மக்கள் புது படைப்பாக வருவார்கள், சிவனின் படைத்தல் தொழில் அங்கே மானிடரை புதிதாக் படைக்கவும் நடகின்றது, இரண்டாம் பிறப்பு கொடுக்கின்றது என பாடுகின்றார் அப்பர்சுவாமிகள்
அந்த ஆலயம் சிவனின் படைப்பு தொழிலை சொல்லும் ஆலயம் அப்படியே நில தத்துவத்தை போதிக்கும் ஆலயம்
எவ்வித குழப்பத்தில் பலவீனத்தில் கட்டுகளில் நீங்கள் இருந்தாலும், மீளமுடியாத பலவீனமான நிலையில் மாய பலவீனத்தில் உடல் மற்றும் ம்னரீதியாக குழம்பி கிடந்தாலும் இந்த ஆலயம் செல்லுங்கள்
அந்த மயானேஸ்வரர் உங்கள் பலவீன மாயைகளை தகனம் செய்து உங்க்ளை புதுபிறப்பாக புதுபடைப்பாக மாற்றி கர்மம் செய்ய அனுப்பிவைப்பார் இது சத்தியம்
பஞ்ச மயான ஸ்தலம் : 02 சீர்காழி மயானம்
தென்னக ஆலயங்களில் மிக மிக பழமையான ஆலயம் சீர்காழி, காழி என்றால் மகா உறுதியானது அசைக்கமுடியாது எனும் பொருளில் வரும்
அந்த ஆலயத்தின் சிறப்புக்கள் கொஞ்சமல்ல, சீர்காழி என சொல்லபட்டாலும் ஏகபட்ட புராண சம்பவம், சிவனும் அன்னையும் வந்து நடத்திய நாடகங்கள் என பல நடந்திருப்பதால் அந்த ஊருக்கு பல பெயர்கள் உண்டு
பிரமன் வழிபட்டதால் அது பிரமபுரம். மூங்கில் வடிவில் இறைவன் வந்ததால் அது வேணுபுரம்
சூரபத்மனுக்கு அஞ்சி தேவர்கள் புகலிடம் பெற்றதால் அது புகலி , குரு பகவான் ஞானம் பெற்றதால் அது வெங்குரு
பிரளய காலத்தில் சிவனும் பார்வதியும் தோணியில் வந்து காத்ததால் அது தோணிபுரம்
இரணியாக்கன் எனும் அசுரன் பூமியினை பிளந்து சென்றபோது திருமால் அவனை அழித்த இடம் அதனால் பூந்தராய்
பராசரரின் அவமானம் தீர்ந்த இடம் என்பதால் கொச்சை வயம், உரோமச முனிக்கு மும்ம்மலமு நீக்கிய இடமென்பதால் கழுமலம்
இப்படி ஏகபட்ட விஷயங்களை காணமுடியும்
இன்னும் மங்கா அடையாளமாக திருஞானசம்பந்தர்க்கு அன்னை ஞானப்பால் கொடுத்து சைவம் காக்க வழிசெய்த இடம் இதுதான்
கணநாத நாயனார் வாழ்ந்த இடம் இதுதான்
இங்கிருகும் சட்டநாதரின் அடையாளமாக சட்டமுனி வாழ்ந்த இடமும் இதுதான்
சட்டநாதர் அங்கு முக்கியமான தெய்வம், நரசிம்ம அவதாரமாக மூர்த்தி வந்தபோது அதன் அகங்கார ஆக்ரோஷம் தீரவில்லை அந்த ஆகோர்ஷத்தை அகங்காரத்தை அழிக்க அதனை பிடித்து உரித்து தன் தோலை சட்டையாக சிவன் அணிந்ததால் சட்டநாதர் என்றானார் என்பது புராணம்
அந்த சட்டநாதர் அங்கே பைரவர் வடிவம், அப்படியே காசிக்கு அடுத்தபடி எட்டு பைரவரும் உண்டு
அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டபைரவர், குரோத பைரவர், உன்மத்த பைரவர், சம்கார பைரவர், பீஷண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர்.
இதனாலே “காழியில் பாதி காசி” என்பார்கள்
இந்த தலத்தில்தான் சம்பந்தர் தன் தேவாரத்தை அன்னை கொடுத்த ஞானப்பாலில் இருந்து பாடினார்
“தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே”
எனும் சம்பந்த பெருமான் இங்கிருந்துதான் பாடினார்
இந்த தலம்தான் பஞ்ச மயான தலங்களில் இரண்டாம் தலம், பஞ்ச பூத தலங்களில் இது நீர் தலம்
இங்கே ஒரு கேள்வி நிச்சயம் எழும், மயான தலம் என்றால் மயானம் இருக்கவேண்டும் ஆனால் இங்கு மயானம் இல்லையே பின் எங்கிருந்து இது மயான தலம் என்றால் விஷயத்தை கொஞ்சம் தத்துவமாக நோக்குதல் வேண்டும்
பஞ்சபூத தத்துவபடி இத்தலம் நீர் தத்துவத்தை கொண்டது
நீர்தான் உயிர்களை காப்பது வாழவைப்பது, நீர் இன்றி எதுவும் வாழமுடியாது எதையும் காப்பாற்றி தொடர் முடியாது
“நீரின்றி அமையாது உலகு” என்பது ஒருவரியில் கடந்து செல்ல கூடியது அல்ல, உயிர்களின் தோற்றமும் வாழ்வும் நீரில்தான் இருக்கின்றது
அதனாலே காக்கும் தெய்வம் என சொல்லபடும் பெருமாளை பாற்கடலில் மிதக்கும்படி காட்சிபடுத்தினார்கள் இந்துக்கள், சிவன் கங்கையினை தலையில் தாங்குகின்றான் என்றார்கள்
நீர்மை எனும் அந்த தன்மைதான் இங்கு உயிரை காக்கும், ஏன் எல்லா வகை உயிர்களும் நீர்வடிவில்தான் மூலத்தை கொண்டிருக்கும், நீர் வடிவம்தான் எல்லாவற்றையும் தாங்கி நிற்கும்
அப்படி இந்த சீர்காழி எனும் ஆலயம் தோணியப்பர் என நீரோடு சம்பந்தபடுத்தி சொல்லும்போது அதன் மூலம் சரியாகின்றது
இந்த ஆலயத்தில் ஞானப்பால் எனும் நீர்வடிவ சக்தியினை சம்பந்தருக்கு கொடுத்து அன்னை அவரை கொண்டு சைவம் காத்தாள் என்பது காக்கும் தலத்துக்கு இன்னும் வலுவாகின்றது
இந்த தலம் சிவனின் காத்தல் தொழிலை செய்யும் தலம்
இங்கே யாரெல்லாம் வந்து வணங்கினார்களோ அவர்களெல்லாம் காக்கபடுவார்கள், அவர்கள் எல்லா வகை சிக்கலில் இருந்து ஆபத்தில் இருந்தும் காக்கபட்டு காவல் பெறுவார்கள்
சரி, ஒரு விஷயத்தில் இருந்து ஒருவரை காக்கவேண்டும் என்றால் அவரின் ஆபத்தினை களையவேண்டும் அல்லவா?
அப்படி அவர்களின் சிக்கல்களெல்லாம் எரிந்துபோகும் இடம் இந்த தலம், அதனால் மயானம். அவர்களின் சிக்கல்கள் பிரச்சினைகள் ஆபத்துக்களை எல்லாம் எரித்து அகற்றி அவர்களை புதிய பரிணாமத்தில் புதிய வடிவில் வெளிவரசெய்யும் சக்தி இந்த ஆலயம் கொண்டிருக்கும்
அதனால்தான் இது சீர்காழி மயானம் என அழைக்கபடுகின்றது
அதன் தலபுராணங்களை கவனமாக பாருங்கள், ஒவ்வொரு இடத்திலும் பழையன கழிந்து அழிந்து புதிதாக அது உருமாறியிருப்பதை கவனிக்கலாம்
அதில்தான் இந்த ஆலயத்தின் தாத்பரியம் விளங்குகின்றது
பிரம்மன் படைப்பு கடவுள், சக்தியினை இழந்த அவன் இங்கே வழிபாடுகளை செய்து மறுபடி தன் சக்தியினை பெற்றான், அவன் வாழ்வு மறுபடி காக்கபட்டது
அந்த வரத்தை அருளியவர் பிரம்மபுரீஸ்வரர்
ஊழிகாலம் என்பது எல்லாம் அழிந்த நிலை, அந்த அழிவுக்கு பின் தோணியில் வந்த சிவனும் அன்னையும் மீண்டும் உலகை உருவாக்கினார்கள், உலகம் மீள வந்தது மறுபடி காக்கபட்டது
அதனால் அவர் தோணியப்பர்
இன்னும் புறா வடிவில் வந்த தேவரை காத்த சிபி சக்கர்வர்த்தி கதை உண்டு, அப்புறா இங்கே காக்கபட்டது
ராகு பகவானும் குரு பகவானும் இங்கேதான் மீண்டு வந்தார்கள், உரோமச முனி மறுவாழ்வு பெற்றார்
இப்படி ஏகபட்டோரை காத்த இந்த ஆலயத்தின் சிவன் இங்கு காத்தல் தொழிலை செய்கின்றார், அப்படி அவர் காத்த ஒரு விஷயம்தான் அந்த சட்டநாத வடிவம்
நரசிம்மத்தின் ஆவேசம் எல்லையில்லா நிலையில் அதனை ஒடுக்கி அதனை உரித்து சட்டையாக அணிந்தார் என்பதால் அவர் சட்டநாதர் என்றானார்
ஆனால் சட்ட, அல்லது சட்டை என்பதன் மூல பொருள் காப்பது, எல்லையிட்டு முழுக்க காப்பது எனது
சட்டம் என்றால் காவல் விதி, சட்டை என்றால் மானம் காக்கும் ஆடை என பொருள்
அசட்டை என்றால் கவனமில்லாத, ஒரு ஆர்வமில்லாத, அலட்சியமான என்பது பொருள், அசட்டையின் எதிர்பதமனா சட்டை என்பது கவனமும் காவலும் கொண்டது என பொருள்
அப்படி நரசிம்மத்தை காத்தவர் , சட்டை செய்தவர் என்பதே சட்டநாதர் ஆயிற்று
ஆம், சட்டநாதர் என்றால் தன்னை அண்டிவருவோரை கவனத்தில் எடுத்து காப்பவர் அவர்கள் இன்னல்களை அகற்றுபவர் என பொருள்
அப்படி இங்கு சட்டநாதராக இங்கே அமர்ந்திருக்கின்றார் சிவபெருமான்
இந்த ஆலயம் மூன்று அடுக்குகளை கொண்டது அடியில் பிரம்ம புரீஸ்வரர், இடையில் தோணியப்பர், மேலே ச்ட்டநாதர் என மூன்று அடுக்குகளாக சிவன் அருள்பாலிக்கின்றார்
மூன்று நிலைகளாக இருந்தாலும் இந்த மூன்றுமே காக்கும் கடமையினை செய்வதை கவனிக்கலாம், பிரபஞ்ச காவல் இந்த உலக காவல் உயிர்களின் காவல் என எல்லாவற்றுக்குமான காவலை சட்டநாதர் வழங்குகின்றார்
இந்த ஆலயத்தின் மகா சிறப்பு அந்த சட்டநாதரின் அம்சமாக அஷ்ட பைரவர்கள் அமர்ந்திருப்பது
காசியினை காப்பது அஷ்ட பைரவர்கள் என்பது எல்லோரும் அறிந்தது, அதே அஷ்ட பைரவர்கள் இங்கும் உண்டு
பைரவர்கள் என்றால் வேண்டாதவற்றை அழித்துநிற்பவர்கள் அவர்கள்தான் பைரவர்கள், காசியின் எட்டு திக்கிலும் எட்டு பைரவர்கள் அப்படி காவல் இருப்பார்கள்
அப்படி இங்கும் எட்டு அதே பைரவர்கள் உண்டு
அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டபைரவர், குரோத பைரவர், உன்மத்த பைரவர், சம்கார பைரவர், பீஷண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர்.
இந்த பைரவர்கள்தான் எட்டுவகை அகங்காரங்களை அழிப்பார்கல்
பிறப்பு, குலம், வலிமை,செல்வம், அழகு, பெருமை, தவம், அறிவு எனும் எட்டுவகை செருக்குகளை அகங்காரங்களை அழிப்பவர்கள் இந்த பைரவர்கள்
அதாவது எட்டுவகை மாயையினை அழிப்பவர்கள் இவர்கள், அழித்து அஷ்டமா சித்து எனும் எட்டுவகை காவலையும் அருள்பவர்கள்
இந்த அகங்காரத்தை அழிக்கும் தலம்தான் இந்த அகங்காரத்தை களையுமிடம்தான் சீர்காழி மயானம்
இங்கே அந்த சட்டநாதர் சன்னதி முக்கியமானது , அவர் உயரத்தில் இருப்பதால் அவர் பார்வைபடும் இடத்தில் புனுகுசாற்றி அர்ச்சனை செய்யபடும்
அங்கேதான் ஒருவனின் அகங்காரமெல்லாம் எரிந்துபோகும், அதனை அடுத்த அஷ்ட பைரவர் சன்னதிகளில் எல்லா துர்குணங்களும் அழிக்கபட்டு பின் புது மனிதனாய் வெளிவருவார்கள்
அந்த தலத்தின் வரலாறுகளெல்லாம் அதை சொல்கின்றன
அங்கே நரசிம்மரின் அகங்காரம் அகன்றது இன்னும் பலரின் அகங்காரம் அகன்று காவலும் புதுவாழ்வும் பெற்றார்கள்
நீர் என்பது ஒருவனை வாழவைக்கும் காக்கும் என்பதுமட்டுமல்ல அதுதான் சுத்தபடுததும், அவ்வகையில் ஞானநீராட்டு வழங்கி ஒருவனுக்கு ஆத்ம சுத்தம் வழங்கும் தலம் இது
இங்கே அகங்காரம் எரியும் ஆணவம் அற்றுபோகும் அவன் புது மனிதனாய் காக்கபடுவான்
பஞ்ச மயான ஆலயங்களில் கச்சி முதல் மயானம் அங்கே ஒருவன் புதிதாய் படைக்கபடுகின்றான், இரணடாம் மயானம் இந்த சீர்காழி
இங்கே ஒருவனுக்கு காவல் கிடைக்கின்றது அவன் புதுகாவலும் புதுபலமும் புதுவாழ்வும் பெறுகின்றான் அவன் வாழ்வு காக்கபட சட்டநாதர் அருள்புரிகின்றார்
சட்ட என்றால் எல்லையிட்ட காவல் என பொருள், அவ்வகையில் அந்த சிவன் அங்கே காத்தல் தொழிலை செய்கின்றார்
சட்டநாதர் சன்னதிதான் சீர்காழி மயானம், அங்கே எல்லா துர்குணங்களும் சாபங்களும் அகங்காரமும் எரிந்துபோகும் அவன் அடுத்த படிநிலைக்கு உயர்த்தபடுகின்றான்
நீர் தத்துவ அலயம் என்பதால் நீர் எவ்வளவு வாழ்வில் அவசியமோ அத்தனை அவசியமான வரங்களையும் வரமாக இந்த ஆலயம் வழங்கும்
தன்னை காத்து தன் கர்மத்தையும் காக்கும் வரத்தை அந்த ஆலயம் அருளும், அப்படி ஒரு காவலை செய்யும்
திருஞானசம்பந்தர் எனும் மகான் அதற்கு மாபெரும் உதாரணம் ஐந்துவயதிலே அந்த ஆலயம் ஞானப்பால் எனும் நீர்மூலம் அவரின் கர்மாவினை சரியாக செய்யவைத்தது
குழந்தை எனும் நிலையில் இருந்து ஞானி மகா ஞானி எனும் வகைக்கு அவரின் நிலையினை மாற்றியது, அவர் அக்கணம் மறுபிறப்பு அடைந்தார்
அந்த மறுபிறப்பு நிலை சீர்காழி சட்டநாதர் சன்னதி முன்னால்தான் நடந்தது
கணநாத நாயனார் அங்குதான் மானிடர் எனும் நிலையில் இருந்து நாயனார் எனும் அளவு மறுபிறப்பினை மறுபெரும் நிலையினை அடைந்தார்
சாதாரண மனிதனாக அங்கே வந்த ஒருவர், சட்டநாதன் அருளால் மாயை நீங்கபெற்று ஞானியாகி சட்டமுனி எனும் பெயரில் அழியா ஞானபாடல்களை வழங்கி அங்கே சமாதியும் கொன்டார்
பிரம்மனும் சிபி சோழனும், ராகும், குருவும் இன்னும் பலரும் அங்குதான் இன்னொரு நிலை அடைந்தார்கள்
மகாபாரத கண்ணனே தன் அவதாரம் முடிக்கும்போது இந்த சிவனிடம் வேண்டித்தான் தன் நிலை மறுபடி எய்தினான், தன் நிலை அடைந்தான் என்கின்றது சில குறிப்புகள்
அத்தலம் மறுவாழ்வு தரும் தலம், மறுவாழ்வு தந்து காவலையும் தரும் தலம்
“காணிந்தக் கேசரத்தின் தாயின் காந்தி
கண்கொள்ளா விண்கொள்ளா கரையுங் கொள்ளா
ஆணிந்தப் பரையென்பார் அம்பரந்தா னென்பார்
அவளுக்குள் மவுனமுண் டறிவாய் பாராய்
ஊணிந்த மௌனத்தை நிட்களமாய்ப் போவாய்
ஓகோகோ அம்பரத்தி லேதோ வேதோ
தோணிந்தப் படியிருந்தால் லயத்தின் நேர்மை
சொல்லரிதாம் அப்புறத்தே சோதி தானே.”
காணிந்த வுலகத்தில் மாயக் கூத்தும்
கண்மூக்குச் செவியோடிந் திரியக் கூத்தும்
பூணந்த வாசியினால் வறுமைக் கூத்தும்
புகழான செனனமொடு மானக் கூத்தும்
ஆணிந்த அண்டமெல்லாம் படைத்த கூத்தும்
ஆங்காரம் மனம்புத்தி யான கூத்தும்
தோணிந்தப் படிபடைத்த பாமே யையா!
சொற்பெரிய பூரணமே யென்று கூவே.”
என சட்டமுனி அங்கு பாடியபடி எல்லா நலமும் கிடைக்கும்
வாழ்வில் சில சாபம் உண்டு, எல்லாம் இருந்தும் அதை அனுபவிக்கவோ இல்லை அதன்படி நடக்கவோ முடியாத தடங்கலும் சாபமும் மாயையும் சிலரை பிடித்திருக்கும்
காரணமில்லா சண்டைகள், அவசியமில்லா வம்புகள், பெரும் பெரும் அபாயங்கள் தொடர்ந்து வரும்
அனாவசியற்ற சண்டைகள், வறட்டு சிந்தனை குழப்பங்கள், அறியாமையின் சர்ச்சைகள் என நிம்மதியறு போயிருக்கும் நிலை வரும்
எப்போதும், அச்சம் பயம் பதற்றம் அழுகை கண்ணீர், அகோர கொபம், அதிகமான குழப்பங்கள் என சிலருக்கு வாழ்வே அச்சமும் பயமும் நிறைந்ததாய் இருக்கும்
அவர்கள் இந்த தலத்துக்கு வந்தால் அவர்களின் பல மாயைகள் அறியமைகள் எல்லாம் எரிக்கபடும், சட்டநாதன் அருலிலும் அந்த அஷ்ட பைரவ அருளிலும் எல்லா காவலும் கிடைக்கும்
அங்கு சென்று வழிபட்ட நேரத்தில் புது பலமும், புது வாழ்வும் புது காவலும் உங்களை சூழும் , புதுபுணல் கண்ட நிலம்போல் உங்கள் வாழ்வும் செழிக்கும், அது செழிப்பாகவே இருக்க அந்த சட்டநாதர் அருள்புரிவார்
அவர் உங்களை கவனத்தில் எடுத்து தன் காவலில் எடுத்து நடத்துவார், காவல் தொழிலை அங்கு செய்யும் சிவன் எந்த குறையுமின்றி உங்களை தன் கையில் கொண்டு நடத்துவார் , இது சத்தியம்

பஞ்ச மயான தலங்கள் 03 : காசி மயானம்
வாரனாசி எனும் காசி மாநகரம்தான் இந்துக்களின் மகா புண்ணிய ஷேத்திரம், ஒவ்வொரு இந்துவின் பெரும் கடமையில் முக்கியமான காசியினை தரிசித்தல் என்பது அங்குதான் நிறைவடைகின்றது
காசி இன்றி இந்துக்களின் மதம் இல்லை, வழிபாடு இல்லை, தாத்பரியமில்லை, அவர்களின் ஆதி அடையாளமும் நம்பிக்கையும் ஆதாரமுமானது அந்த காசி
இந்துஸ்தானம் அந்த காசி எனும் புள்ளியில்தான் இணைந்தது, இனம் மொழி என பல்வேறு மக்களாய் இருக்குமம் இந்துஸ்தான் இந்துக்களை இந்து எனும் ஒரு புள்ளியில் இணைட்து இந்த் மாபெரும் இந்துஸ்தானத்தை தாங்கி நிற்பதும் அந்த காசி
“காசி வாழ இந்துஸ்தானம் வாழும்” என்பது அதுதான்
“காச்யதே பிரகாசதே இதி காசி ” என்பது ஸ்லோகம், அதாவது எது சுயமாகப் பிரகாசிக்கிறதோ அது காசி.
ரிக் வேதத்திலேயே சிவருத்ரனின் இருப்பிடமாக காசி குறிப்பு உண்டு
இந்த பூமியில் ஒவ்வொரு இடங்களும் ஒவ்வொருமாதியான ஈர்ப்பு கொண்டது எல்லாம் எல்லா இடத்திலும் கிடைக்காது, ஒரு இடத்தில் மழை, ஒரு இடத்தில் வெயில், ஒரு இடத்தில் கடற்கரை,ஒரு இடத்தில் தங்கம் என ஒவ்வொரு இடத்தில்தான் ஒவ்வொரு விஷயம் கிடைக்கும்,
இது மானிட கண்கள் அறிவது
மானிட கண்கள் அறியாததும் ஞான கண்ணால் மட்டுமே அறியகூடியதுமான சில இடங்கள் பூமியில் உண்டு, அதைத்தான் புண்ணிய ஷேத்திரங்கள் என்றார்கள் ஞானியர்கள், இங்கு பிரபஞ்சம் கொட்டும் சக்தி அதிகம், பிரபஞச சூட்சும சக்தி அதிகம்
அப்படிபட்ட இடங்களில் முக்கியமானது இந்த காசி, இதன் தோற்றம் மிக மிக பழமையானது சிவனே வந்து அமர்ந்து மானிடருக்கு இந்த இடத்தில் முக்கியத்தை அடையாளம் காட்டிய இடம் அது
அரிசந்திரன் கதை இங்குதான் நடந்தது, அரிசந்திராமயானம் என்பது அதோ அதுதான். எக்காலமும் பிணங்கள் எரியும் வரம்பெற்ற இந்த பூமியில் அவன் பெயரும் நிலைத்திருக்கும்
இந்த பூமி மகாபாரத காலத்தில் உண்டு, பீஷ்மர் காசிராஜனை வென்றுதான் பாரத காவியத்தை தொடங்குவார், அந்த மாபெரும் இதிகாசமே இங்கிருந்துதான் தொடங்கிற்று
தசரதன் எனும் பெரும் மன்னன் செய்த யாகத்தின் விற்பனரெல்லாம் இங்கிருந்து சென்றதாகவே அந்த இதிகாசமும் சொல்கின்றது, இரு இதிகாசங்களின் தொடக்கம் இந்த புண்ணிய பூமி
இது சாதாரண நகரமோ ஊரோ அல்ல , இது அமைக்கபட்ட விதம் மிக மிக சூட்சுமனானது, மிக மிக நுணுக்கமானது
காசி என்பது ஒரு இடமல்ல, மானிடர் கூடி வாழும் . கோவில்களை மட்டும் கொண்ட தலமுமல்ல அது ஒரு உணர்வு, ஒரு ஒளி, பிரபஞ்ச சக்தியின் குவியல்
இந்த பிரபஞ்சம் சிவசக்தி அடிப்படையில் இயங்குகின்றது, சிவனும் சக்தியும் இணைந்ததுதான் இந்த பிரபஞ்ச இயக்கம் , அதைத்தான் அண்டம் என்பார்கள்
அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்திலும் உண்டு என்பது சித்தர்கள் வாக்கு
இந்த உடலும் சிவசக்தி தத்துவம், வானத்தில் கோள்கள் அதனதன் இயக்கத்தில் நடப்பதுபோல இந்த உடலின் உறுப்புக்களும் அதனதன் இயக்கத்தில்நடக்கின்றது, உடலின் உள்ளுறுப்பெல்லாம் அப்படியானது
இந்த ஆகாயவெளிபோல மிக மிக பரந்தது மனிதனின் மனம், அந்த மனதால் அவனால் எவ்வளவு பெரிய அண்டத்தையும் ஆகாயத்தையும் காணமுடியும், மனதால் நினைத்த இடத்துக்கு அவனால் நொடியில் செல்லமுடியும்
அப்படி உடலுக்கும் அண்டத்துக்குமான தொடர்பு ஏராளம்
இந்த அண்டத்தின் பஞ்சபூதம் தனி தனி என்றாலும் எல்லாம் ஒன்றோடு ஒன்று கலந்தது மானிட பிண்டமும் அப்படியே
ஐந்து பூதங்களும் ஒன்றிலிருந்து ஒன்று உண்டானதால், அவற்றிற்கு தாயான வஸ்துவின் குணமும் உண்டு.
அதாவது ஆகாயத்தின் குணம் ஒலி. அதிலிருந்து தோன்றிய வாயுவிற்கு ஒலியும் உண்டு, தொடுவுணர்வும் உண்டு.
வாயுவிலிருந்து தோன்றிய அக்னிக்கு ஒலி, தொடுவுணர்வு, ஒளி (ரூபம் – கண்ணுக்குப் புலப்படும்) ஆகியவை உண்டு.
அக்னியிலிருந்து தோன்றிய நீருக்கு ஒலி, தொடுவுணர்வு, உருவம், சுவை ஆகியவை உண்டு.
நீரிலிருந்து தோன்றிய மண்ணுக்கு ஒலி, உருவம், தொடுவுணர்வு, உருவம், சுவை, மணம் ஆகிய ஐந்து குணங்களும் உண்டு. இவை அண்டத்தில் உள்ளது , அதே இயல்பு பிண்டத்துக்கும் அதன் பாதிப்பு அப்படியே வரும்
பிண்டமாகிய மானிட உடலில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு அதிதேவதை உண்டு, அண்டத்தில் இருப்பது போல் உண்டு என்கின்றார் கபிலர்
வாக்கின் அதிதேவதை அக்னி, மூக்கின் அதிதேவதை வாயு, கண்களின் அதிதேவதை சூரியன், காதுகளின் அதிதேவதை திக் தேவதைகள், தோல், ரோமங்கள், மீசை, கேசம் முதலியவற்றின் அதிதேவதை மூலிகைகள்.
ஜனனேந்த்ரியத்தின் அதிதேவதை நீர், கழிவுகளை அகற்றும் இந்திரியத்தின் தேவதை ம்ருத்யு,
கைகளின் தேவதை இந்திரன், கால்களின் தேவதை மஹாவிஷ்ணு.
நாடி நரம்புகளின் அதிதேவதை நதிகள், வயிற்றின் தேவதை ஸமுத்ரம், ஹ்ருதயம், மனம் ஆகியவற்றின் தேவதை சந்திரன்.
புத்தியின் அபிமான தேவதை ப்ரம்ம, அஹங்கார தத்வத்தின் அதிதேவதை ருத்ரன்.
சித்தம் எனும் பகுத்தறிவின் அபிமான தேவதை க்ஷேத்ரக்ஞன்.
இப்படி ஒவ்வொரு உறுப்புக்கும் இரு தேவதை உண்டு அதுதான் அண்டம் முழுக்கவுமான அதிபதிகள் கூட
இப்படி பிரபஞ்சமும் மானிட உடலும் சொல்லும் தத்துவத்தை அப்படியே ஒரு சக்தி மையமாக உருவாக்கி அதனில் இருந்து மானிடர் பல சூட்சும பலன்களை பெறுவதற்கு உருவாக்கபட்ட நகரமே இந்த காசி
இது மிக நுணுக்கமாக உருவாக்கபட்டது, ஏற்கனவே பிரபஞ்ச சக்தி பிரவாகம் கொள்ளும் இந்த இடத்தில் மிக நுணுக்கமாக சிவ சக்தி தத்துவ அடிப்படையில் இந்த காசி உருவாக்கபட்டது
ஆண் தத்துவத்தை குறிக்கும் 53 சிவாலயமும், பெண் தத்துவத்தை குறிக்கும் 53 சிவாலயங்களுமாக மொத்தம் 106 உண்டு
இதோடு மூல ஆலயங்களான காசி அப்பன், அன்னை ஆலயங்களை சேர்த்தால் 108 ஆலயமாகின்றது, இது முழுமை அடைந்த நிலை
நம் உடலில் நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 106 . இதில் இரண்டு நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை).
அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன
இது போக மானிட உடல் ஐந்து கோசங்களை கொண்டது என்பது தத்துவம்
அதனை அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகியவையே இந்த கோசங்கள் என்பார்கள், மானிட உடல் அன்னம் எனும் சோற்றால் உண்டான உடல் அதை சுற்றி இன்னும் நான்கு சூட்சும வகை வட்டங்களும் உருவங்களும் அடுக்கு போல் உண்டு
இந்த தத்துவத்தில்தான் காசியில் ஐந்து பிரகாரங்களை வைத்தார்கள், அப்படி சுற்றி வரும்பொழுது இந்த சூட்சும உடலும் நிறைவை காண்பதை உணரவைத்தார்கள்
சொராஷி குரோஷி, பஞ்ச கோஷி, நகர் பிரதஷ்ணம், அவிமுக்தா, அண்டகிருகா என ஐந்து வகை சுற்றுபாதைகளை வைத்திருப்பதும் அப்படித்தான்
ஐந்து கோசங்களும் பலம் பெறும் வழி இது
இப்படி மானிட உடலின் முக்கிய சூட்சுமங்களை பிரதிபலித்து அதற்கு பிரபஞ்ச சக்திகளை பெற்று தரும் அபூர்வமான வடிவில் மிக நுணுக்கமான வகையில் இந்த காசி நிர்மானிக்கபட்டது.
6 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12 சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும்.
இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும்.
அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து, உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது. இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது.
இது சிவனின் திரிசூலத்தில் அமைக்கபட்ட நகரம் என்பார்கள், அதன் உண்மை பொருள் ஆன்மம், கண்மம், மாயை எனும் மும்மலங்களையும் எரிக்கும் இடம் இது, பிரபஞ்ச சக்தி அதனை செய்யும்
காசி என்பது பித்ருக்கள் வழிபாட்டையும், சதா எரியும் பிணங்களை கொண்டிருக்கும் நகரம், மரணம் என்பது முடிவு என்பதை இங்கு உணரும் யாரும் பெரும் பாவம் செய்யமாட்டார்கள், மும்மலம் எனும் மூன்று முக்கிய பாவங்களை செய்ய யோசிப்பார்கள், அதனாலேதான் இது சிவனின் சூலத்தில் இருக்கும் நகரம் என்றானது
காசியில் எல்லோர் முகத்திலும் ஒரு தெளிவும் ஞானமும் நிம்மதியும் வருவதை காணலாம் , இங்கு அந்த சக்தியினை இயல்பாகவே பெறமுடியும்
காசியில் இறந்தால் முக்தி என்பது நிறைவான வாழ்வினை குறிப்பது, அவர்கள் புண்ணிய ஆத்மா என்பதை குறிப்பது
அப்படியே காசியில் இறக்க வாய்ப்பில்லாதவர்கள் தனக்கு பிடித்தமான ஒன்றை இங்கு விட சொல்லி ஒருவிதியும் உண்டு, அது ஏனென்றால் விஷயம் இல்லாமல் இல்லை
ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படையில் பிடித்தமான ஆசை ஒன்று இருக்கும் அதுதான் அவனை ஆட்டிவைக்கும், அந்த ஆசையினை காசியில் விட்டுவிட்டால் போதும் அந்த ஆசையினின்று விடுபடும் அவன் மெல்ல மெல்ல ஞானம் அடைவான்
ஈர்ப்பு அறுபடும் நிலையில் அவன் ஆத்மா முக்தி நோக்கி நகர தொடங்கும், அதனாலே காசி எல்லா வகையிலும் முக்தி அளிக்கும் தலமாயிற்று.
இங்கு சப்தரிஷிகளும் வந்து சில ஏற்பாடுகளை செய்தார்கள், அதன் நோக்கமே இந்த காசிஎன்பது சிவலோகத்தின் இன்னொரு வடிவமாக மாறவேண்டும் என்பது
அதனால் இந்துக்களின் எல்லா தெய்வங்களும் இங்கு குடியேறின, ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு அலயம் அமைக்கபட்டு பெரும் எண்ணிக்கையில் ஆலயம் இருந்தன.
கயிலாயம் எனும் பனிமலைக்கு எல்லாரும் எல்லா காலமும் செல்ல முடியாது என்பதால் அதற்கு ஈடான ஒரு புண்ணிய தலமாக எல்லா தெய்வங்களும் குடியிருக்கும் தலமாக இது அமைக்கபட்டது.
இன்று யாரும் நம்பமுடியா விஷ்யமம், அன்று ஒரு காலத்தில் இங்கு இருந்த கோவில்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டும் என்பது
இப்பொழுது இருப்பது 400ஐ கூட தாண்டாது என்பது வேதனை
இந்த காசிதான் இந்துஸ்தானத்தின் மையமாக இருந்தது, இதயமாக இருந்தது, இது வெறும் ஆன்மீக பூமி அல்ல, இது வெறும் பித்ருவழிபாடும் , பிணங்கள் எரியும் சுடுகாடும் அல்ல
பாரதம் எனும் அருமையான கலாச்சாரமும், அதன் பெரும் அறிவும் செல்வமும் இங்குதான் உருவானது
இந்த நகரம் எல்லா இந்துக்களும் பாரதமெங்கும் இருந்துவந்து குவியும் புண்ணிய பூமியாக மலர்ந்தது, இதனால் எங்கோ மூலையில் இருந்த இந்துக்களெல்லாம் சந்திக்கும் வாய்ப்பானது
ஏகபட்ட மொழிகள் இன்ங்கள் அவர்களுக்குள் சின்ன சின்ன முரண்பாடுகள், யுத்தங்கள் என எவ்வளவோ வேறுபாடு இருந்தாலும் இந்த நகர் அவர்களை ஒன்றிணைத்தது
தெய்வத்தை முன்னிட்டு ஒன்றுசேரும் அந்த இடத்தின் மரியாதை பெரிது, அங்கு சென்று அருள்பெற்று வரும் பக்தர்களின் தன்மையும் கனிவும் அறிவும் ஞானமும் பெரிது
காசிக்கு சென்றுவந்தோர் மரியாதையாகவும் ஞானிகளாகவும் பார்க்கபட்டனர், உண்மையில் அங்கு அமர்ந்து தவம் செய்த ஒவ்வொருவருக்கும், பொதுநலம் கருதி வேண்டி நின்ற ஒவ்வொருவருக்கும் ஞானம் கிடைத்தது
அப்படிபட்ட இடத்தின் புகழ் பரவ பரவ ஒவ்வொருவரும் சென்றார்க்ள், ஒவ்வொரு மன்னனும் தன் மடமும் குருவும் அங்கு இருக்குமாறு பார்த்து கொண்டான், ஒவ்வொரு மன்னனுக்கும் காசி கனவாயிற்று
26 ஆயிரம் கோவில்கள் என்றால் எவ்வளவு மந்திரங்கள் ஓதபடும், எவ்வளவு பெரும் யாகங்களெல்லாம் கங்கை கரையில் நடத்தபடும், இந்து பாரம்பரியத்தில் நீர் என்பது சக்திமிக்கது, அது உயிருள்ள பொருள்
அது தான் கலக்கும் இடமெல்லாம் உள்ள நிறத்தை பெறுவது போல மந்திர சக்திகளையும் தன்னுள் ஏற்றுகொள்ளும், காசியில் இடைவிடாது முழங்கும் மந்திரங்கள் அந்த நீரை எப்பொழுதும் சக்தியாய் வைத்திருக்கும் அதனாலே காசி நீரால் பாரதம் முழுக்க ஆலயங்கள் கும்பாபிஷேகம் செய்யபட்டன
முனிவர்களின் கமண்டல நீர் அவர்களின் மந்திரத்தால் சக்திபெறுவது போல காசி நதியின் கங்கை இங்கு நடக்கும் இடையறா பூஜைகளாலும் யாகங்களாலும் பெரும் சக்திபெற்றது
அப்படிபட்ட காசிக்கு பாரத கண்டத்தின் எல்லா மன்னர்களும் எல்லா மக்களும் வந்தார்கள்
இதனால் வியாபாரம் பெருகிற்று, ஒவ்வொரு இனத்தின் கலைகளும் சங்கமித்ததால் காசிக்கு சென்றால் புதிய விஷயங்களை கற்கலாம் புதிய பொருளை வாங்கலாம் என்ற நிலை வந்தது
அப்படியே காசி கலைகளின் தலைநகரும் ஆயிற்று, பாரத கண்டம் முழுக்க ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு கலைகளும் விஷயங்களும் பரவி கிடந்தன, அப்படி எங்கோ கிடந்த கலைகளெல்லாம் இங்கு கூடி ஒன்றில் ஒன்று கலந்து பெரும் வளர்ச்சி கண்டன
பாரத கண்டத்தின் கலை, இலக்கியம்,பண்பாடு, அறிவியல்,மருத்துவம், போர் வியூகம் என எல்லாமும் அங்கேதான் வளர்ந்தன, காசிக்கு ஒருவனை அனுப்பி பண்டிதனாக்கி திரும்ப தன் சமஸ்தானத்தில் அமரவைப்பது பெரும் அறிவுடமையான காரியமாக இருந்தது
இப்படி பாரத மக்களையும் அவர்கள் மனம், ஆன்மீகம், கலை, இலக்கியம் என எல்லாவற்றையும் ஒரு புள்ளியில் கொடுத்து குவித்தது இந்த மண்
இதுமட்டும் அமையவில்லை என்றால் நிச்சயம் இந்துஸ்தானம் அவ்வளவு அறிவாக வளமாக இருந்திருக்காது, மக்களிடம் இருந்த அறிவையும் கலைகளையும் எல்லா மக்களுக்கும் பரப்பி எல்லாரையும் சிந்திக்க செய்து, சிந்தித்ததை மறுபடியும் பரப்பி இந்த சுழற்சியினை அது செய்து கொண்டே இருந்தது
இந்த சூட்சுமத்தில்தான் பாரதம் தனிபெரும் நாடாக மின்னியது
காசி வாழ வாழ தேசம் வாழும் என இந்த பாரதம் அப்படித்தான் உருவானது, காசிக்கே உரிய பிரபஞ்ச சக்திகளும், ரிஷிகளும் முனிகளும் செய்துவைத்த சக்திமிக்க ஏற்பாடுகளும் அதை உறுதிபடுத்தி தொடர்ந்தன
ஒவ்வொரு இந்துஸ்தான மன்னனுக்கும் காசி விஸ்வநாதரே குருநாதரும் குல தெய்வமுமானார், அவரை தொழாமல் எந்த காரியமும் எங்கும் நடந்ததில்லை, காசி வழிபாடும் கங்கை நீருமே இங்கு பல காரியங்களை தொடங்கின அவை வெற்றியுமாயின, நிலைத்தன
காசியின் ஆலயங்களும் அதன் வழிபாடுகளும் இருக்கும் வரை இந்துஸ்தானம் செழிக்கும் அப்படித்தான் சிவபெருமான் முதல் ரிஷிகள் வரை ஏற்பாடுகளை செய்தார்கள்
காசி அன்று பொதுநகரமாக இருந்தது, என்னதான் மன்னர்களுக்குள் சண்டை என்றாலும் மோதல் என்றாலும் காசியினை பொதுவான பகுதியாக வைத்தார்கள்
காசி என்பது எட்டு அஷ்ட பைரவர்கள் காக்கும் நகரம் என்பதால் என்றும் அதன் காவலரும் அரசரும் கால பைரவரே, அவரைத்தான் எக்காலமும் அரசராக கொண்டாடினார்கள்
இப்படி மகா புனிதமாகவும் இந்துக்களின் தலையான பூமியாகவும், கைலாசம் காணமுடியாதோரும் எளிதில் சிவலோகத்தை காணும்படியாகவும் இருந்து செழித்துவழிகாட்டியது இப்பூமி
இது பித்ருக்களின் தேசம் என்பதால் இங்கு காகங்கள் பறக்காது அல்லது அவசியமில்லாதது. சிவனின் பிரதான நகரம் என்பதால் கருடனையும் காணமுடியாது, எப்பொழுதும் பிணம் எரிந்தாலும் அது நாறாது காரணம் இங்குள்ள சிவகணங்கள் அதனை ஈர்த்து கொள்கின்றது
இது சிவபூமிஎன்பதால் யோகமும் தவமும் உடனே கைகூடும், மற்ற இடங்களில் 1 லட்சம் முறை ஸ்தாபிக்க வேண்டிய மந்திரத்தை இங்கு 108 முறை சொன்னாலே அது சித்தியாகும், இந்த இடத்தின் மகிமை அப்படி
காலம் காலமாக செய்த தவமும் பலனும் சித்தர்களின் ஜீவசமாதியும் இன்னும் பலவும் நிரம்பி இருப்பதால் எப்பொழுதும் இங்கு சக்தி அதிகம், தீராத நீங்காத சக்தி அதிகம்
இங்கு தர்மம் ஆளும், அந்த காசி வாழ வாழ பாரதம் வாழும், அப்படித்தான் வாழ்ந்தது
காசிக்கு சவால்விட்டவன் முதலில் புத்தன், இது அர்த்தமற்ற வழிபாட்டு நகரம் என்றான், வேதங்களும் வழிபாடும் இந்த யாகமும் பலனற்றவை என்றான்
தனிவழி சமைக்கின்றேன் அதுவே ஞானம் என கிளம்பினான், எப்போதும் எல்லா காலத்திலும் அறியாமையில் இருக்கும் மக்கள் உண்டு, துரதிருஷ்டவசமாக அவர்கள் அதிகம் இருந்துவிடுவதும் உண்டு
அப்படி அவன் பின்னாலும் ஒரு காலத்தில் சென்றார்கள்
அவனுக்கு பின்னரான காலத்தில் காசி வீழ்ந்தது,காசி வீழவும் பாரதம் வீழ்ந்தது
இந்த சமூகம் இயங்க அவனவன் தன் கடமையினை சரியாக செய்யவேண்டும் என கீதை கொண்டு போதித்தமதம் நம்முடையது
அதாவது இல்லத்துவாசி பணம் சம்பாதிக்க வேண்டும், வீரன் சண்டையிட வேண்டும், அரசன் நாட்டை காக்க வேண்டும், வேதம் ஓதுபவன் ஓதவேண்டும் அவனவன் தன் கடமையில் தீவிரமாக இருந்தால்தான் நாடு நாடாக இருக்கும் என்பதை சொன்னமதம் இந்துமதம்
பந்தம் பற்றை தாண்டி கடமையினை செய் என்றவர்கள் நாம்
ஆனால் புத்தனோ குழப்பினான், ஆசையற்ற வாழ்வு என்றான், போர் வேண்டாம் என்றான், யுத்தம் கூடாது என்றான், அன்பே பிரதானம் என்றான், அரசனும் அவன்வழி சென்றான்
விளைவு அரசன் என்பவன் கடுமையாக இருத்தல் வேண்டும், சேனை என்பது பலமாக இருத்தல் வேண்டும் அது அல்லாது நாடு இல்லை
பாரதம் முழுக்க குழப்பம் அதிகரித்தது, தர்மம் தலைகீழானது, மன்னர்கள் வீழ காசி வீழ்ந்தது, காசி வீழ பாரதம் குலைந்தது
அதை மீட்டெடுக்க ஒருவர் வந்தார் அவர் ஆதிசங்கரர் எனும் மகான்
அவர் இதே காசியில்தான் பெரும் ஞானம் பெற்றார், 12 ஜோதி லிங்கங்களில் ஒன்றை இங்கு பிரதிருஷ்டை செய்தார், அதை எல்லோரும் தொட்டு வணங்கவும் வழி செய்தார்
அந்த மகானின் அருளால் காசி மெல்ல சீரானது, காசி சீராக சீராக நாடு சீரானது
அந்த மகான் நாடு முழுக்க நான்கு மடங்களை அமைத்தார், வேதங்களையும் வழிபாட்டையும் மீள்கொணர்ந்தார், இந்துஸ்தானம் பவுத்தத்தை விரட்டி தன்னை மீட்டது
காசி வாழ வாழ அது வாழ்ந்தது
செல்வம் மறுபடி கொழித்தது, பெரும் செல்வமிக்க தேசமாக இந்துஸ்தானம் ஒளிவிட்டது, காசி வாழ வாழ வாழும் தேசம் மாபெரும் எழுச்சி கண்டது
அப்பொழுது இந்து மன்னர்கள் மெல்ல மறுபடி ஆசைவயபட்டார்கள், பக்தியும் தர்மமும் குறைந்தது யார் பெரியவர் என தங்களுக்குக்குள் முஷ்டி உயர்த்தினார்கள், காசியினை மெல்ல மெல்ல மறந்தார்கள், காசியிலும் பணமே பிரதானம் சுகமே பிரதானம் என அதர்மம் அதிகரித்தது
அப்பொழுதுதான் அசுரன் மறுபடியும் வந்தான் அவன் பெயர் கஜினி முகமது, அவனின் பெரும் கொள்ளை இங்குதான் நடந்தது, பெரும் கொள்ளையோடு ஆலயங்களை இடித்து நாசமாக்கிவிட்டு சென்றான்
அவன் சென்றபின்னும் காசியினை இந்துமன்னர்கள் மறந்தார்கள் அவர்களுக்குள் மோதி கொண்டார்கள், இந்த மோதலில் மறுபடி மறுபடி வந்து மதுரா, சோமநாதபுரி என கொள்ளை அடித்தான் கஜினி
காசி இடிபாடுகளில் சிக்க பாரதத்தை மறுபடியும் இருள் கவ்வியது, கோரி வந்தான் தன் அடிமையின் ஆட்சியினை நிறுவினான், முதன் முதலாக இந்துஸ்தானம் ஆப்கானிய அந்நியர் கைக்கு சென்றது
அவர்கள் கைக்கு இந்துஸ்தானம் சென்றதும் ஆட்சியும் வரியும் நிதியும் அவர்கள் கைக்கு குவிய குவிய காசிக்கான செலவும் நிதியும் நின்றுபோனது, அதை பேணுவார் யாருமில்லை
காசி இருள் அடைய இருள் அடைய தேசத்தை இருள் கவ்விற்று
எனினும் சிவன் இத்தேசத்தைகைவிடுவதில்லை அன்னை காளியும் கைவிடுவதில்லை, நாயக்க மன்னர்கள் தெற்கே முதல் இந்து ராஜ்ஜ்யம் அமைத்தனர், அந்த எழுச்சியில் தேசமெங்கும் ஒரு நம்பிக்கை பிறந்தது
நாயக்கர் காலத்தில் காசிக்கு பலவகை உதவிகளை செய்தார்கள், தென்னக செட்டியார்களும் முற்கால பட்டினத்தார் தொடர்பில் பல காரியங்களை செய்தார்கள்
காசி முழுவதும் துலங்காவிட்டாலும் பூஜைகளும் வழிபாடுகளும் இருந்தன, ஆப்கானிய மன்னர்களுக்கு காசி அச்சுறுத்த்லாகவே இருந்தது, காசிக்கு வருகின்றேன் என பாரதம் முழுக்க இருந்து வரும் மன்னர்கள் படைதிரட்டுவதும் தீரா நெருக்கடி கொடுப்பதும் ஆப்கானியருக்கு சிக்கலயிற்று
காசி என்பதை ஒழித்துவிட்டால் இந்துக்கள் கூடமுடியாது என அவர்கள் திட்டமிட்டாலும் அதை செய்யமுடியவில்லை பெரும்பான்மை இந்துமக்களின் எதிர்ப்பால் ஓடவேண்டிய நிலைவரும் என அஞ்சினார்கள்
இதனால் வேறுவிதமான நெருக்கடிகளை கொடுத்தார்கள், வெட்டமுடியா மரத்தை பட்டினி போட்டு பட்டுபோக செய்தல் அல்லது விஷம் பரப்பி அழித்தல் என ரகசிய வேலைகளை செய்தார்கள்
ஆனால் இங்கு சாதுக்களும் யோகிகளும் எங்களை போன்றவர்களின் யாகங்களும், காசி என்பது ஒவ்வொரு இந்துவின் ரத்தத்தில் கலந்தது என்பதாலும் அதை அதனை முழுமையாகக் முடியவில்லை
செத்தாலும் காசியில் சாவேன், வீழ்ந்தால் காசிக்காக வீழ்வேன் என பெரும்கூட்டம் திரள்வதால் கொஞ்சம் அச்சபட்டார்கள்
யோகிகளின்வலிமையும் சிவன் அருளும் மக்களின் பக்தி உணர்வும் காசியினை காத்து நின்றன, காசி முழுக்க வீழவில்லை, இங்கு ஆட்சி செய்யலாமே தவிர இந்து மதத்தை ஒழிக்கமுடியாது என சுல்தான்களும் உணர்ந்தார்கள், இந்துக்களின் உறுதி அவர்களை சிந்திக்க வைத்தது
அப்படியே இந்து சன்னியாசிகளின் சக்தி மேலும் அவர்களுக்கு ஒரு அச்சம் இருந்தது
வறண பாலையில் இருந்து வந்த கூட்டம் வளமான நாட்டின் ஆட்சியில் திருப்தி அடைந்தது எனினும் அவர்களுக்குள் மோதல்கள் அடிக்கடி வந்தன , அந்த மோதல் வரும்பொழுதெல்லாம் இந்துக்களும் தங்கள் நாட்டை மீட்க முயற்சித்தனர் ஆனால் வெற்றி நிரந்தரமாக இல்லை
சுமார் 400 ஆண்டுகள் இந்த போராட்டம் நடந்தது, ஷஜாகான் காலத்தில் மதுரையில் இருந்து சென்ற குமரகுருபரர் சிங்கத்தின் மேல் அமர்ந்து ஷாஜகான் மகன் தாரா ஷிக்கோவிடம் இருந்து ஆலயத்தை மீட்டு பூஜை செய்தார்
ஆனாலும் அவுரங்கசீவ் விடவில்லை, இங்கே இந்த ஆலயம் இருந்தால்தானே இந்துக்கள் கூடுவார்கள், இதை அழிந்த்தால் காசி மாறும் இந்துக்கள் சிதறுவார்கள் என திட்டமிட்டு அங்கே கோவில் மேல் பள்ளிவாசல் கட்டினான் அவுரங்கசீப்
அவனை எதிர்த்து எழுந்தான் சிவாஜி, அப்படியே காசியில் ஞானம் பெற்ற சீக்கியரும் எழுந்தார்கள், 100 ஆண்டு போராட்டத்துக்கு பின் காசியினை மீட்டார்கள்
பின் மோடி காலத்தில் அது துலங்கி கொண்டிருக்கின்றது
இப்படியான நீன்ட வரலாற்றை கொண்டது அந்த காசிதலம், உலகின் மிக மிக தொன்மையான புண்ணிய நகரம் அது
ஆச்சரியமாக உலகில் எத்தனையோ தொன்ம நகரம் அழிந்த நிலையில், ஏகபட்ட தலங்கள் காசி காலத்தில் உருவான் தலங்களெல்லாம் அழிந்து அடையாளமற்று போன நிலையில் காசிதான் மீள எழுந்து நிற்கின்றது
அந்த ஆச்சரியம்தான் அந்த அதிசயம்தான் அது சிவனின் வசிப்பிடம், காலபைரவரின் கோட்டை, காலத்தால் அழிக்கமுடியா சூட்சும நிலையம் என்பதை காட்டுகின்றது
“காசிக்கு போனால் கர்மம்” அழியும் என்பார்கள்
ஆம், இது சிவனின் அக்னி வடிவ தலம், சிவனின் பஞ்ச தன்மைகளில் ஒன்றான அக்னி தலம்
இங்கே ஒரு கேள்வி எழும், அப்படியானால் திருவன்னாமலை அக்னி தலம் இல்லையா என்பது
திருவண்ணாமலையும் அக்னிதலம் சந்தேகமில்லை, அங்கே கர்மா நாம் வழிபட்டு கரையும், காசியில் கால்வைத்த உடனே கரையும்
அதுதான் காசியின் சக்தி
ஆம், அங்கே சிவன் தன் அழித்தல் தொழிலினை செய்கின்றார், ஆனால் எதனை அழிக்கின்றார் என்றால் கர்மாவினை அழிக்கின்றார் ஞானம் கொடுக்கின்றார்
காசி என்பது கர்மா அழியும் தலம், ஒருவனுக்கு நல்ல கர்மாவோ கெட்ட கர்மாவோ அது பாக்கி இருந்தால் அது அவனை மறுபிறப்பி எடுக்க செய்யும்
மொத்தமாக கர்மாவினை எரித்துபோட்டு அவன் ஞானவாழ்வு வாழ்ந்து செல்ல வழிசெய்யும் தலம் காசி
இதனாலே தங்கள் கர்மா தீரவே அங்கு செல்ல ஒவ்வொரு இந்துவுக்கும் விதி சொல்லபட்டது
அக்காலங்களில் வாழ்வின் முடிவினை நோக்கி செல்வோர் காசியில்தான் முடிய விரும்பினார்கள் அதுதான் அக்ர்மத்தை கரைத்து பிறப்பற்ற நிலை தரும் என சென்றார்கள்
காசி என்பது உலக உயிர்கள் ஒடுங்குமிடம், அங்கேதான் ஒவ்வொரு ஆத்மாவும் ஒடுங்குகின்றது, அப்போது அதற்கு பிறப்பில்லை
எல்லா வகை கர்மாவினையும் எரித்துபோடும் அந்த தலம் பெரும் ஞானத்தை தரும்
அங்குவரும் ஒவ்வொருவனும் வாழ்வின் நிலையாமையினை உணர அங்கே காலமெல்லாம் பிணம் எரிந்துகொண்டே இருக்கும்
கங்கை வற்றுவதுமில்லை அங்கே பிணம் எரிவது நிற்பதுமில்லை
அப்படி சிவனே நேரடியாக ஞானம் போதிக்கும் மயானம் அது, அங்கேதான் அரிசந்திரன் கதையும் நடந்தது
அவன் பொயயே பேசாமல் வாழ்ந்தான் என்பதல்ல விஷ்யம், எல்லோரும் இப்படி எரிந்து சாம்பலாக முடியும் வாழ்வில் பொய் சொல்லி என்னாக போகின்றது, அற்பமாக சாம்பலாக முடியும் வாழ்வில் ஏன் பொய்யும் புரட்டுமாக வாழவேண்டும் எனும் ஞானம் அவனுக்கு இருந்தது
வாழ்வின் முடிவினை சொல்லி, அந்த வாழ்வில் கர்மத்தை பொய்யினால் சேர்க்காதபடி நிலையற்ற வாழ்வு எனும் ஞானத்தை சொல்வதே அவன் கதை
இன்னும் காசிக்கு செல்வோர் எல்லாம் ஏதாவது தனக்கு பிடித்தமான ஒன்றை விட்டுவிட்டு வரவேண்டும் என்பதும் விதி
தனக்கு பிடித்தமான ஒன்றை விடுதல் என்றால் அதன் பின் வெறுமைதான் ஏற்படும், வெறுமையில்தான் ஞானம் வரும்
காசி ஒவ்வொரு இந்துவும் தர்சிக்கவ்ணேடிய தலம், காசி மயானம் என்பது அந்த மணிகர்னிகா மட்டுமல்ல, காசி என்பது ஒவ்வொருர் கர்மாவினையும் எரிக்கும் தலம்
காசி என்பது ஒருவனின் கர்மாவினை எரித்து முழுஞானநிலைக்கு அவனை மாற்றும் தலம், அந்த மயாநிலை என்பது அறியாமை எரித்து ஞானத்தில் பிறக்க வைக்கும் நிலை
காசி மயானம் என்பது கர்மம் அழித்து ஞானபிறப்பெடுக்க வைக்கும் மயானம்
அப்படித்தான் சங்கரர், ராமானுஜர், குருநாணக்,வீரசிவாஜி,ராம்தாசர், விவேகானந்தர், பாரதியார்
பஞ்ச மயான தலங்கள் 04 : திருகடவூர் மயானம்
இந்த திருகடவூர் மயானம் என்பது அந்த பிரசித்தியான திருகடையூர் அபிராமி ஆலயத்தை அன்மித்திருக்கும் ஆலயம்,
முன்காலத்தில் இதுதான் திருகடையூரின் அடையாளம்
இங்குதான் அந்த பல பிரசித்தியான புராணங்கள் நடந்தன, அந்த அபிராமி அன்னை குடியிருக்கும் அமிர்தகடேஸ்வரர் ஆலயம் இதற்கு பிந்தையது,
முதல் தலம் இந்த மயான கோவில்
குங்குமகலய நாயனார் இந்த ஆலயத்தில் குங்கலிய பூஜை செய்தார்
இங்குதான் சம்பந்தர், அப்பர், சுந்தரர் என எல்லோரும் வந்து பதிகம் பாடினார்கள், அவ்வகையிலே இதன் முக்கியத்துவத்தை சிறப்பை அறிந்துகொள்ளலாம்
“வரிய மறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார் எறியு முசலம் உடையார்
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பெரிய விடைமேல் வருவார் அவரெம் பெருமான் அடிகளே”
என்பது சம்பந்தர் பாடல்
“குழைகொள் காதினர் கோவண ஆடையர்
உழையர் தாங்கட வூரின் மயானத்தார்
பழைய தம்மடி யார்செயும் பாவமும்
பிழையுந் தீர்ப்பர் பெருமா னடிகளே”
என்பது அப்பர் சுவாமிகள் இங்கு பாடிய பாடல்
“மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரமன் இந்திரற்குந் தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே”
என்பது சுந்தர பெருமான் பாடிய பாடல்
மூன்று சைவகுரவர்களும் ஒரு ஆலயத்துக்கு வந்து பாடுதல் என்பது சாதாரணம் அல்ல, அவ்வகையில் இந்த தலத்தின் பெருமையினை அறிந்துகொள்ளலாம்
இந்த ஆலயத்தினை பற்றி பார்க்குமுன் சில முக்கிய விஷயங்களை அறிந்து கொள்ளல் அவசியம்
இந்த தலத்தை திருகடவூர் மயானம், திருமெய்ஞானம் என்பார்கள். திருமெய்ஞானம் என்றால் இறைவனின் உண்மை பொருளை அறியும் இடம் என பொருள்
மெய்ஞானம் அடையும் இடம் என்பதே மயானம் ஆயிற்று. சுடுகாட்டில்தான் ஒருவனுக்கு மெய்ஞானம் பிறக்கும், அதனால் அந்த இடத்தை மெய்ஞானம் என்றார்கள்
மெய்ஞானமே திரிந்து மயானம் என்றாயிற்று
அவ்வகையில் ஐந்து தலங்களுமே இங்கு திருமெய்ஞான தலங்களாகவே கருதபடும், இந்த தலமும் திருகடவூர் திருமெய்ஞானம் என்றே அழைக்கபடும்
இங்கு சிவன் தன் நான்காம் தொழிலான மறைதல் தொழிலை செய்கின்றார் , இந்த தலத்தின் பஞ்ச பூதவடிவம் வாயு அதாவது காற்று
இங்கு இறைவன் பிரமமபுரீஸ்வரர், இறைவி அமலக்குய மின்னம்மை
இனி இந்த ஆலயத்தின் இருபெரும் புராண காட்சிகளை பார்த்துவிட்டு ஆலய சிறப்பினை காணலாம்
முதலில் இந்த இடத்தில்தான் பிரம்மனை சிவன் எரித்துபோட்டார் என்பது புராண செய்தி, பிரம்மனுக்கு அவ்வப்போது பெரும் கர்வம் ஏற்படுவது வழக்கம், அப்படி அவனுக்கு கர்வம் வரும்போதெல்லாம் சிவன் வந்து கர்வம் அகற்றுவதும் வழக்கம்
அப்படி ஒருமுறை பிரம்மன் பெரும் கர்வம் கொண்டிருந்தான், தானே பெரியவன் தான் இன்றி இந்த உலகமில்லை எல்லா படைப்பும் செய்யும் நானே உயர்ந்தவன்
நான் படைக்காவிட்டால் எதை பெருமாள் காப்பார்? எதை சிவன் அழிப்பார்? இருவருக்குமே வேலை கொடுப்பவன் நான் எனும்படி பெரும் கர்வம் இருந்தது
சிவனுக்கு எப்போதும் கர்வமும் அகந்தையும் ஆகாத ஒன்று, அப்படிபட்டோருக்கு ஞானம் கொடுக்க சில சிகிச்சைகளை சிவன் செய்வது வழக்கம், அந்த சிகிச்சையில்தான் அவர்கள் ஆணவம் அகலும்
அப்படி சிவன் அகந்தை கொண்ட பிரம்மனை இந்த இடத்தில் எரித்து சாம்பலாக்கினார், அவரின் சாமப்ல் குவிந்த இடம் இது,
பிரம்மன் இல்லாவிட்டால் உலகம் இயங்காது என்பதை அறிந்த தேவர்கள் சிவனிடம் வந்து மன்றாடினார்கள்
அன்பே உருவான சிவன் பிரம்மனை மீண்டும் உயிர்பித்து கொடுத்தார், சிவனின் சக்தி அறிந்த பிரம்மன் அவரை பணிந்தா, அவன் அகந்தை அகன்றது
அப்படி பிரம்மனின் அகந்தை அகற்றியதால் அவர் பிரம்மபுரீஸ்வரன் என்றானார். பிரம்மனின் கர்வம் தவிர்த்தவர் அவர்
அமலக்குய மின்னம்மை என்பது அன்னையின் பெயர், மலம் என்றால் மும்மலம் எனும் ஆணவ, கர்மம், மாயை எனும் மூன்று குற்றங்கள், மின் என்றால் ஒளி
அன்னை மூன்று மலங்களையும் அழித்து ஒளிகொடுப்பதால் அவள் அமலக்கு மின்னம்மை
இப்படி பிரம்மனின் அகந்தை எரித்த இடம் இந்த மயானம் , மெய்ஞானம் பிரம்மனுக்கு கொடுத்த இடம் இந்த கடவூர் மயானம்
புராணபடி அந்த மார்கண்டேயன் உயிர்பிழைத்த கதையும் இங்கேதான் நடந்தது, ஒரு மனிதனின் முடிவு கட்டம் வருமிடம் மயானம், அவ்வகையில் இங்கேதான் அவன் சிவலிங்கத்தை கட்டிபிடித்து போராடினான், அந்த லிங்கத்தின் சிவனேதான் எமனை மிதித்து அழித்துபோட்டு மார்கண்டேயனை காத்தார்
ஆம், மார்கண்டேயன் மறுவாழ்வு பெற்ற இடமும் இதுதான்
இனி இந்த ஆலயத்தில் சிவன் மறைத்தல் தொழிலை செய்வதையும், காற்று தத்துவத்தையும் காணலாம்
மறைத்தல் என்றால் அரூபமாய் நின்று இயக்குதல், பிரம்மனை சிவன் அரூபமாய் நின்று ஏரித்தது போல இங்கே அரூபமாய் மார்கண்டேயன் போராட்டத்தின்போதும் நின்றார்
அரூபவடிவில் அவர் நின்றிருந்ததை மார்கண்டேயனால் அறியமுடியவில்லை, அவன் சிவன் நினைவாக லிங்கத்தை வேண்டி கதறிகொண்டிருந்தானே தவிர அரூபமாய் மறைவாய் அவர் நின்றதை அறியவில்லை
எமனும் அதை அறியவில்லை, அவர் மறைந்திருந்தார்.
பின் உரிய நேரத்தில் வரவேண்டிய நேரத்தில் வந்தார், வந்தவர் எமனின் அகந்தையினை அடக்கினார், அவனை அழித்துபோட்டார் பின் அவன் அகந்தை அடங்கியதால் உயிரோடு எழுப்பிவிட்டார்
ஆம், எமனுக்கும் கர்வம் இருந்தது, எந்த உயிரும் தன்னிடம் இருந்து தப்பமுடியாது எல்லோரையும் இழுத்து செல்பவன் நான் எனும் அகந்தை இருந்தது அந்த அகந்தையில்தான் சிவலிங்கம் மேலே பாசகயிற்றை வீசினான்
அவனின் அகந்தை அழித்து அவனை விட மேலானவர் தான் என்பதை சிவன் காட்டிய தலம் இது
இத்தலம் அகங்காரத்தை ஆணவத்தை எரித்துபோட்டு புதுபிறப்பாய் பிறக்கவைத்து அப்படியே ஆயுளை நீட்டித்து கொடுக்கும் சக்திவாய்ந்தது
பிரம்மனுக்கும் மார்கண்டேயனுக்கும் அதுதான் நடந்தது
மார்கண்டேயன் வாழ்வில் அதுதான் நடந்தது, சிவன் அவனுக்கு மறுவாழ்வு கொடுத்து புதுபிறப்பாய் வாழவைத்தார்
இந்த ஸ்தலம் பஞ்சபூதத்தில் காற்று தத்துவத்தை கொண்டது, சிவன் மார்கண்டேயனுக்கு மறுவாழ்வு கொடுத்தார் என்பது மூசசு காற்றினை திரும்ப கொடுத்தார் என்பதே
ஆம், மூச்சுதான் உயிர், மூச்சு உள்ள காலம்வரைதான் வாழ்வ
இதனால் இந்துக்கள் மூச்சு காற்றினை மூலமாக கொண்டார்கள் “காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா” என்றார்கள்
யோக சூத்திரம் அதாவது பிரணாயாமம் செய்து மூச்சடக்கி உரிய பயிற்சிகளை செய்து உயிரில் உறையும் அதாவது மூச்சுகாற்றின் வழி இயங்கும் உடலினுள்ளே இறைவனை கண்டு கலப்பதே யோக ரகசியம்
அந்த யோகம் மூச்சு காற்றின் வலிமையினை சக்தியினை உயிர்ப்பினை சொல்கின்றது
ஒளவையின் ஞானகுறள், திருமூலரின் திருமந்திரம், சிவாக்கியார் என பெரும் பெரும் ரிஷிகள் மூலம் சிவனே அதை மக்களுக்கு தந்திருக்கின்றார்
திருமூலர் பாடுகின்றார்
“புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே”
அதாவது தானே முறைகெட்டு அலையும் மூச்சினை முறைபடுத்தி உள்ளே அடக்கி மாசில்லா (நின்மலம்) நிலையினை அடைந்தால் ரத்த ஓட்டம் சரியாகி உறுப்புகள் சிவந்தே இருக்கும், முடி கருத்தே நரைக்கா நிலையின் எட்டும், உயிர் உடலை பிரியாது என்கின்றார்
ஒளவை ஞான குறளில் சொல்கின்றாள்
“காலன லூக்கங் கலந்த வமிர்துண்ணில்
ஞான மதுவா நயந்து”
அதே ஒளவை தன் விநாயகர் அகவலில் ஒளவையார் தன் அகவலில் “காலால் எழுப்பும் கருத்தறிவித்தே” என்கின்றார், கம்பன் தன் ராமாயணத்தில் “இக் கருங் கடல் கடந்தது என் காலினால்” என அனுமன் சொன்னதை சொல்கின்றார்
இங்கு காற்று என்பது மூச்சுகாற்றின் பிரயாணாமத்தை குறிப்பது, அந்த பிரயாணமும் அணலும் கலந்த எழுச்சி (ஊக்கம்) அமிர்தம் கொடுக்கும் என சொல்லும் ஒளவையார், இந்த அமிர்ந்தம் ஞானத்தை தேன்(மது) போல் இனிமையாக கொடுக்கும் என்கின்றார்
“காலும் தலையும் அறியார் கலதிகள்
கால் அந்தச் சத்தி அருள் என்பர் காரணம்
பால் ஒன்று ஞானமே பண்பார் தலை உயிர்
கால் அந்த ஞானத்தைக் காட்ட வீடு ஆகு”
கால் எனும் மூச்சினை அடக்கி தலைக்கு சக்தி ஏற்றி தெரியாதவர்கள் வீணர்கள் என தன் பாடலில் சொல்கின்றார் திருமூலர்
“‘மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலய மாமே’
மனம் என்பது சிந்தனையின் மனம் முறையான மூச்சினால் செம்மையாகும், மனதுக்கும் மூச்சுக்கும் தொடர்பு உண்டு, மூச்சு செம்மையானால் மனம் செம்மையாகும் மனமும் மூச்சும் செம்மையானால் குண்டலினி சக்தி தானே மேல் எழும் என்பது பாடலின் பொருள்
இதனையே கைலாயக் கம்பளிச் சட்டை முனி நாயனாரின் இன்னொரு பாடல் விளக்குகின்றது
“காணப்பா நெஞ்சினுள்ளே பிராண யோகங்
கண்டுகொள்ளு தாமரையில் நூல்போ லாடும்;
ஊணப்பா அதிலிரட்டி யபான வாயு
உற்றுநின்றி ரண்டையுநீ கண்டா யானால்
பூணப்பா விதற்குள்ளே ஞான யோகம்
ஒளவையார் இன்னும் சொல்கின்றார்
“உண்ணாடி வாயு வதனையுட னிறப்பி
விண்ணோடு மெள்ள விடு. “
சிவயோக நிலையினை அடைய மூச்சு பயிற்சி அவசியம் என சொல்லும் ஒளவையார், அந்த மூச்சு எல்லா நாடிகளிலும் காற்று நிரம்பும் அளவு அடக்கி பின் வெளியே மெல்ல விட வேண்டும், அப்படி செய்தால் பெரும் ஞானநிலையும் நீண்ட ஆயுளும் கிட்டும் என்கின்றார்
இதனையே திருமூலர் பாடலிலும் காணலாம்
“விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே”
விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து ஆக அறுநூறு
இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.
(இன்று விஞ்ஞானம் சொல்லும் கணக்கும் இதுதான், இதனை என்றோ உணர்ந்து சொன்னவர்கள் இந்து சித்தர்கள்)
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100, இது மிக அமைதியான மனமும் ஆத்திரபடாத காமவயபடாத மனமும் கொண்ட மனிதனின் சுவாச கணக்கு
சினம், கோபம், ஏக்கம், காமம், ஆத்திரம், அழுகை என பல வகையில் மனதின் சமநிலை பாதிக்கபடும்பொழுது மூச்சின் சமநிலையும் பாதிக்கபடும் அது ஆயுளை குறைக்கும்
மூச்சினை சமபடுத்தி அடக்கி குறைத்து மெல்ல வெளியிட ஆயுள் கூடும்
ஒரு மனிதன் நிமிடத்துக்கு 18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள், இது மூச்சு அடக்கி மெல்ல வெளியிடும் பயிற்சி அதிகரிக்க அதிகரிக்க இன்னும் அதிகமாகும்
கடைசியில் ஒரு நிமிடத்துக்கு 2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு, 1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு என நீளும் இதெல்லாம் சித்தர்களால் மட்டும் சாத்தியம்
ஒரு கட்டத்தில் நீரிலும் சூரிய ஒளியிலும் அல்லது பிரபஞ்சத்தின் இதர சக்திகளிலே உடல் தன் சக்தி இயக்கத்தை பெறும்பொழுது உடலுக்கு மூச்சு அவசியமில்லை, அந்த சித்தர்கள் அழியா பெருவாழ்வு வாழ்வார்கள்
மூச்சுக்கும் ஆயுளுக்கும் நோய்க்கும் தொடர்பு உண்டு, ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த அளவு மூச்சு என்பது விதிக்கபட்டது, அது வீணாக வீணாக ஆயுள் குறையும், அதை உணர்ந்து அடக்கி அதனை மிக மிக சிக்கனமாக்கி ஆயுளை நீட்டி அந்த நீண்ட ஆயுளால் பெரும் ஞானம் அடைபவர்கள் சித்தர்கள்
காலன் என்றால் காலநேரத்தில் வருபவன் என்றுமட்டும் பொருள் அல்ல, கால் என்றால் காற்று அதனால் உயிர்மூச்சை உயிர்காற்றை நிறுத்த வருபவன் காலன்
அந்த காலனை சிவன் விரட்டி மார்கண்டேயரை காத்தார் என்பது அவனின் மூச்சுகாற்றினை உயிர்காற்றினை மறுபடி மார்கண்டேயனுக்கு கொடுத்து அவனை எழுப்பினார் என்பதே
மேற்கண்ட யோக பாடல்களை கண்டால் ஒன்று விளங்கும், மூச்சை சரியாக பயிற்றுவித்தால் ஒருவன் சித்தநிலை சிவநிலை அடையலாம் என்பது
மார்கண்டேயனுக்கு சிவன் அந்த மூச்சுகாற்றின் முழு சக்தியினை வழங்கினார், அவன் அந்த சிவன் கொடுத்த மூச்சினாலே 16 வயதிலே சித்த நிலையினை அடைந்தான்
அதனால் என்றும் அழியாத பெரும் வரம், நித்திய சிரஞ்சீவிகளில் ஒருவன் என்றாக இன்றும் வாழ்கின்றான்
அந்த தலம் அப்படியான மறு உருவினை கொடுக்கும், அது சிவன் மறைத்தல் தொழிலில் காற்று உருவில் அருள்பாலிக்கும் தலம்
அங்கே ஒருவன் வாழ்வு மாறும், அங்கே மூச்சு பயிற்சியினால் என்னென்ன யோக பலன்களை பெறமுடியுமோ அதையெல்லாம் வழிபட்ட உடன் பெறலாம்
அவன் மூச்சு சிவன் அருளால், சிவகடாட்ச காற்றின் அருளால் அந்த அற்புதத்தை செய்யும்
பெரும் உதாரணம் குங்குலிய கலய நாயனார், அவர் அந்த ஆலயத்தின் தாத்பரியத்தை சரியாக அறிந்திருந்தார், இதனால் காற்றின் தூபத்தில் சிவனை வணங்கும் குங்கிலிய புகை எழுப்பி வழிபடும் வழிபாட்டில் இறங்கினார்
அதுதான் அவரின் வழிபாடாயிற்று, அதுதான் அவரின் தவமாயிற்று, அதுதான் அவரை நாயனார் எனும் பெரும் நிலைக்கு உயர்த்தி கயிலாய யோகமும் கொடுத்தது
ஆம், அவர் அங்கு காற்றில் சிவன் அதிக சக்தியோடு இருப்பதை அறிந்துகொண்டவர், காற்றால் வணங்கினார் சிவனை அடைந்தார்
அந்த தலத்தில் யார் சென்று வணங்கினாலும் அவர்கள் மூச்சு சீராகும், மூச்சு சீரானால் சிந்தை சீராகும், சிந்தை சீரானால் நல்ல அறிவும் ஞானமும் தெளிவும் சரியாக வாய்க்கும்
ஆம், மூச்சுதான் எல்லாவற்றுக்கும் காரணம், மானிட உடலை அதுதான் இயக்குகின்றது, அதுதான் சக்கரங்களை துலக்குகின்றது
மூச்சினால்தான் ஒருவன் லவுகீக வாழ்வு ஞானவாழ்வு என இரண்டையுமே தொடர்ந்து வரமுடியும்
அந்த மூச்சினை, மூல சக்தியான அந்த மூச்சினை சீர்படுத்தி தரும் தலம் இது
திருகடவூரில் அன்னை அபிராமி குடியிருக்கும் தலம் இதன் அருகில்தான் இருக்கின்றது, மார்கண்டேயனுக்கு புதுமூச்சு கொடுத்து மறுவாழ்வு கொடுக்கும்போது அங்கிருக்கும் கிணற்றினை உருவாக்கி அதிலிருந்து தீர்த்தம் கொடுத்தார் சிவன்
அந்த கிணற்றின் நீர்தான் இன்றும் அபிராமி அன்னையின் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகமாகின்றது
அதாவது அந்த அபிராமி ஆலயத்தின் மூலசக்தி இங்கிருந்துதான் செல்கின்றது
நிச்சயம் இந்த திருகடவூர் மயானமும், திருகடவூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம் எனும் அபிராமி ஆலயமும் இரட்டை ஆலயங்கள்
அமிர்தம் என்றால் ஆயுளை நீட்டிக்கும் வரம் என்பதில் சந்தேகமில்லை, அமிர்தகடேஸ்வரரை அபிராமியினை தேடி திருகடையூருக்கு பக்தர்கள் செல்வது அதனால்தான்
ஆனால் அந்த அமிர்தத்தை யார் தருவார் என்றால் திருகடவூர் மயானத்தில் இருக்கும் பிரம்மபுரீஸ்வரர்தான் , மார்கண்டேயனுக்கு அழிவில்லா வரமளித்த எமனிடமிருந்து காத்த அதே சிவனேதான் தருவார்
அந்த ஆலயத்தின் கினற்றில் இருந்துதான் அபிஷேக நீர் அபிராமி ஆலயத்துக்கு செல்கின்றது எனும் தத்துவம் அதுதான்
விதிப்படி திருகடையூர் செல்பவர்கள் இந்த தலத்தினை தரித்துவிட்டுத்தான் அபிராமி ஆலயம் செல்லவேண்டும்
ஆனால் வாழ்வு தேடி நீண்ட ஆயுள் தேடி அபிராமியிடம் செல்வோர், மயானம் என அழைக்கபடும் இந்த தலத்துக்கு செல்வதில்லை
இதற்கு காரணம் அறியாமை அல்லது சரியாக யாரும் எடுத்து சொல்லாமலே சென்றுவிட்ட பரிதாபம் , இந்துக்களுக்கு அவர்கள் தலத்தின் பெருமையினை சரியாக எடுத்துசொல்ல அமைப்போ இயக்கமோ இல்லை என்பதே
அந்த திருடவூர் மெய்ஞானம் என்பது திருகடவூர் மயானம் என மாறிபோனதே இதற்கு காரணம்
அங்கு செல்வோர் முதலில் திருகடவூர் பிரம்மபுரீஸ்வரர் இருக்கும் மயானம் எனும் மெய்ஞான ஆலயத்துக்குத்தான் செல்லவேண்டும், அங்குதான் சிவன் மூச்சுகாற்றாய், மறைந்து நிற்றல் எனும் அரூப வடிவில் நிற்கின்றார்
அங்கு அவரை வழிபட்டால் மூச்சினை சீர்படுத்துவார், மூச்சு சீரானால் எல்லாம் சீராகும்
இங்கே இன்னொரு ரகசியம் உண்டு, அது சூட்சுமமனது
பாற்கடலில் அமிர்தம் மறைந்திருந்தது, அதனை கடைந்தபோதுதான் கடைசியில் வந்து நீண்ட பெருவாழ்வை தேவர்களுக்கு கொடுத்தது
அப்படி மானுட உடலிலும் சக்தி மறைந்திருக்கின்றது, மூச்சினை சீர்படுத்தி யோகத்தில் நிலைக்கும்போது குண்டலினி எழுந்து தலையில் அமிர்ந்தமாக சுரக்கின்றது
அந்த அமிர்தம் பெற்றவர்களே ரிஷிகள், ஞானியர்கள், மகான்கள்
பாற்கடலை யாரோ என்றோ கடந்து அமிர்தம் பெற்றார்கள் அல்ல எனப்து விஷயம், ஒவ்வொருவர் உடலிலும் பாற்கடல் உண்டு அதை மூச்சினால் கடைந்து வாசுகி எனும் பாம்புபோல் சுருண்டிருக்கும் குண்டலியினை எழுப்பவேண்டும்
தியானத்தில் மூச்சினால் சக்தியினை கடையும்போது வரும் கெட்டவைகளை சிவனிடம் தள்ளிவிட்டு பின் வரும் அமிர்தத்தை எடுத்துகொள்ள வேண்டும், அந்த அமிர்தமே ஞானம் அதுதான் நிறைவு என்பது யோக ரகசியம்
அப்படி இங்கே திருகடவூர் தலத்தில் மூச்சுகாற்றாய் நிற்கும் சிவன், உடலின் சக்தியினை கடையும் சக்தியினை தருவார், பின் அமிர்த கடேஸ்வரர் ஆலயத்தில் அதன் பலனை பெறலாம்
திருகடவூர் மெய்ஞானம் எனும் மயானம் ஆலயத்தின் தத்துவமும், திருடவூர் அமிர்தகடேஸ்வரர் ஆலய தத்துவம் இதுதான்
அந்த ஆலயங்களுக்கு அதன் சிறப்பு காரணமாக காரண பெயர் வந்ததும் இப்படித்தான்
இங்கு அன்னை வீணை இசைமீட்டி சிவனை மகிழ்ச்சிபடுத்தியதாகவும் புராண செய்தி உண்டு, வீணை வாசித்தாள் என்பது சீரான அலையில் வரும் செய்தியினை சொல்வது
பஞ்சபூத தத்துவம் எனும்போது பஞ்ச தன்மாத்திரை என சிலவற்றை சொல்வார்கள் , நிலம் என்றால் சுவை , நீர் என்றால் மணம் என்பது போல ஒலி என்பது காற்றின் குறியீடு
அன்னையின் வீணை இங்கே ஒலித்தது என்பதில்தான், மிக அழகாக இது காற்றுதலம் என்பதை சூசகமாக சொல்லி வைத்தார்கள்
அதாவது இத்தலம் சரியான அளவில் ஒருவனை இயங்கவைக்கும் அவன் வாழ்வு மங்களகரமாக இருக்கும் மகிழ்வாக இருக்கும் என்பதை குறிப்பால் சொல்வது
திருகடவூர் செல்லும் போது முதலில் இந்த திருகடவூர் மயானம் எனும் மெய்ஞான தலத்தில் இருக்கும் சிவனை வணங்குங்கள்
அங்கே உங்கள் மூச்சு சீராகும், அந்த வரத்தை அருளும் ஆலயம் அது
மூச்சு சீரானால் சிந்தை தெளியும் அப்போது கர்மம் தானாகவே கரையும், கர்மம் கரைந்துபோனபின் புதுவடிவமாக புது மனதெளிவுடன் ஞானத்துடன் புதுபிறவி எடுப்பீர்கள்
மார்கண்டேயன் எடுத்தது போல் எடுப்பீர்கள்
கவனியுங்கள், அந்த ஆலயத்தின் புராணபடி எமன், மார்கண்டேயன், பிரம்மன் என எல்லோரும் மறுபிறவி எடுத்தார்கள், சிவன் யாரையும் அங்கே கைவிடவில்லை
அவர்களின் அகந்தை அகற்ற், கர்மத்தை மாற்றி , புது மூச்சு கொடுத்து புதுவாழ்வை கொடுத்து அனுப்பினார்
அந்த பெரும் அதிசயம் உங்கள் வாழ்விலும் நடக்கும், அங்கே சென்று வணங்கும் ஒவ்வொருவருக்கும் நடக்கும் இது சத்தியம்
அதனால் அங்கே செல்லும்போது முதலில் அவரை விழுந்து பணியுங்கள், அங்கே சற்றுநேரம் அமர்திருங்கள், மனதார வேண்டிகொண்டபின் மூச்சினை கவனியுங்கள்
உங்கள் மூச்சை நீங்கள் கவனிக்க கவனிக்க உங்களில் மாற்றம் நிகழும், எல்லாம் சரியாவதை காண்பீர்கள்
மூச்சு என்பது ஒரு விட்டு விட்டு வரும் சங்கிலி, அதுதான் கர்மாவினை பல பிறப்பாக செய்ய வைக்கின்றது, மூச்சில்தான் பூர்வ ஜென்ம கர்மாவும் இணைந்து வருகின்றது
இப்பிறப்பில் அது மறைக்கபட்டிருக்கின்றது, ஒவ்வொருவருக்கும் இப்பிறப்பில் முன் ஜென்ம கர்மா மறைக்கபட்டே இருக்கின்றது
அதற்கு காரணமும் உண்டு , முன் ஜென்ம கர்மா தெரிந்தால் அது நல்வினை என்றால் ஒருவன் கர்வம் கொள்வான், கொடும்வினை என்றால் மனமுடைந்துவிடுவான்
அதனால் சில விஷயங்கள் மறைக்கபட்டிருக்கின்றன
அதைத்தான் கீதையில் கன்ணன் சொன்னான் “அர்ஜூனா நீயும் நானும் பல பிறவி எடுத்தோம்,எனக்கு எல்லாம் தெரிந்திருக்கின்றது, உனக்கு மறைக்கபட்டிருக்கின்றது, அதனால் நான் சொன்னதை மட்டும் செய்”
அதேதான் அந்த மறைத்தலை செய்பவர் சிவன், சிவனின் தொழில்களில் மறைத்தலும் ஒன்று என்பது இப்படி கர்மங்களை மறைத்து வைப்பது அப்படியே மறைந்து நின்று செயலாற்றுவது
அப்படி இங்கு உங்கள் கர்மாவினை, மறைந்திருக்கும் வினைகளை சிவன் எரித்துபோட்டு உங்களுக்கு புதுமூச்சினை வழங்குவார்
(இந்த இடம் சுவாச கோளாறு, நுரையீரல் பிரச்சினை உள்ளோர்க்கு, காற்றினால் ஏற்படும் நோய் கொண்டோருக்கு பரிகார ஸ்தலம் )
இங்கே வணங்கிவிட்டு பின் அமிர்த கடேஸ்வரர் ஆலயம் செல்லுங்கள், இங்கே கடையபட்ட மனம் அங்கே அமிர்தம் பெறும், அந்த அமிர்தத்தில் அழியா வரம் பல உங்களுக்கு கிடைக்கும்
இது தடைகள் அகலும் ஆலயம், உயிர்பயம் நோய் நொடியெல்லாம் அகற்றும் ஆலயம்
வாழ்வில் உங்களுக்கு கடன் இருக்கலாம், நோய் இருக்கலாம், இதர பெரும் சிக்கல்கள் தொல்லைகள் இருக்கலாம், இன்னும் பலவாறு குழப்பமும் வேதனையும் பெரும் கவலையும் இருக்கலாம்
எல்லாவற்றிலும் பெரும் தடையும் சோதனையும் இருந்து தொடரலாம்
எல்லா சிக்கலுக்கும் பூர்வ ஜென்மா கர்மவினை தொடர்ச்சியாய் இருக்கின்றது, இந்த திருகடவூர் மயானத்தில் அது எரிக்கபடும் போது அந்த தடைகள் எல்லாம் விலகும்
இது தடைகள் அகற்றும், நோய் அகற்றும் ஆலயம், ஆயுளை கூட்டி நிறைந்த ஞானத்தை மெய்ஞானத்தை தரும் ஆலயம்
திருகடையூர் என்பது அங்கே செல்லும் பக்தனை மூச்சினால் சிவன் கடையுமிடம், அப்படி கடைந்து அவனுக்குள் இருக்கும் ஞான அமிர்தத்தை அவனுக்கு கொடுக்குமிடம்
அதனால் இங்கே செல்லும் போது முதலில் திருகடவூர் மயானம் செல்லுங்கள், அங்கே மூச்சியினை கவனியுங்கள், மூச்சினை சிவன் சரிபடுத்த வேண்டுங்கள், எல்லாம் நலமாகும், சிவனருளில் மூச்சு சுத்தமாகும் அதனால் சிந்தையும் மனமும் தெளிவாகும்
பின் திருகடவூர் அமிர்தகடேஸ்வரர் தலம் செல்லுங்கள், அப்போதுதான் முழு பலன் கிடைக்கும், முழு யோக நிலையும், அமிர்தம் பெற்ற தன்மை போல பெரும் வரமும் மங்கா ஆயுளும் நிறைந்த ஞானமும் உங்களுக்கு கிடைக்கும் அது சத்தியம்
(இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்று உண்டு, இப்போது சஷ்டியப்த பூர்த்தி எனும் அறுபதம கல்யாணம் இன்னும் முதிர்பிராய சடங்குகளெல்லாம் அமிர்தகடேஸ்வரர் கோவிலில்தான் திருகடையூரில் நடக்கின்றன
உண்மையில் அவை இந்த திருகடவூர் மெய்ஞான ஆலயம் எனும் தலத்தில்தான் நடக்க வேண்டும்
இந்து சனாதான தர்மபடி ஒருவன் 60 வயதுக்கு மேல் துறவு வாழ்க்கை ஞானம் தேடிய வாழ்க்கையினை மேற்கொள்ள வேண்டும், அதனால் 60 வயதுக்கு மேல் பிள்ளைகளிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு காசிக்கோ கானக ஆஸ்ர்மத்துக்கோ சென்று ஞானம் தேடி இறைவனில் கலந்து வாழ்வை முடிப்பது இந்துக்கள் வழமையாய் இருந்தது
அறம்,பொருள், இன்பம், வீடு என்பதில் 60ம் வயதுக்கு பின் வீடு எனும் ஞானநிலை நோக்கி செல்லல் வேண்டும்
அப்படிபட்ட பயணத்தை தொடக்குமிடம்தான் சஷ்டியப்த பூர்த்தி , அதாவது மெய்ஞானத்தை தேடி செல்லும் நிலை
அதை தொடங்கும்போது திருகடவூர் மெய்ஞ்ஞான தலம் எனும் மயான் சிவனிடம் வேண்டி தொடங்குதல்தான் அக்காலத்தில் மரபாய் இருந்தது
இப்போதும் அங்கு சென்று வழிபட்டு சஷ்டியப்த பூர்த்தி சம்பிரதாய சடங்கை செய்தல் அர்த்தமுள்ளது, நிச்சயம் இறையருளை பெற்று தரும் வழியுமானது, அதை ஒவ்வொருவரும் பின்பற்றுதல் நலம் )
பஞ்ச மயான தலங்கள் 05 : நாலூர் மயானம் திருமெய் ஞானம்

கும்பகோணம் குடவாசல் அருகே அமைந்திருக்கும் திருநாலூர் மயானம் எனும் திருதலம்தான் பஞ்ச மயான தலங்களின் கடைசி மயானம்
இன்று சிறிய ஆலயமாக அதிகம் அறியபடாத ஆலயமாக இருந்தாலும் அதுதான் தமிழகத்தின் தொன்மை மிக்க ஆலயம் என அறியபடுகின்றது
நாலூர் என்பது நான்கு வேதங்களும் வந்து வழிபட்ட இடம், நால்வேதியூர் என்பதே நாலூர் என மாறிவிட்டது, வேதங்கள் வந்து வழிபட்ட ஆலயம் என்பதால் அது மகா மகா தொன்மையானது
பலாச மரங்கள் நிறைந்த இடத்தில் வந்த சிவன் என்பதால் அவருக்கு பலாசவன நாதர் என்றொரு பெயர் உண்டென்றாலும் எல்லோரும் அறிந்த பெயர் ஞானபரமேஸ்வரர்
இந்த தலத்தில்தான் பிரம்மன் தன் ஆயுள் முடியும் போது சிவனிடம் அடைக்கலமாகி கரைந்து போவார் என்பதும் பின் மறுமுறை உலகை சிவன் படைக்க தொடங்கும்போது பிரம்மனை சிவன் மீண்டும் உயிர்பித்து வேதங்கள் கொண்டு படைப்பு தொழிலை செய்ய வைப்பார் என்பது புராண செய்தி
அதாவது படைப்பு முடியுமிடமும் தொடங்குமிடமும் இதுதான், உயிர்கள் ஒடுங்குமிடம் இதுதான்
இந்த தலத்தில்தான் பிரம்மன் வழிபட்டான், ஆதம்பரிஷி வழிபட்டா, வேதங்கள் வழிபட்டன இன்னும் மகான்கள் ரிஷிகள் பலர் வழிபட்டார்கள்
இந்த ஆலயம் பல விசித்திரமான விஷயங்களை கொண்டது, இந்த ஆலயத்துக்கு என தீட்டு கட்டுபாடுகள் எதுவும் கிடையாது யாரும் சென்று வழிபடலாம்
இந்த ஆலயம் விதிகளுக்கு அப்பாற்பட்டது, இங்கு ஆகமவிதிகள் இல்லை கும்பாபிஷேகம் கட்டாயம் எனும் நிலை இல்லை
எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் சிவன் அவர்போக்கில் அருள் பாலிப்பார் என்பது இங்குள்ள சிறப்பு, முக்கியமாக இங்கு வழிபடுவோர்க்கு பிறவி இல்லை
தேவாரம் அங்கே பாடபட்டது, அதில் சம்பந்தபெருமானே அதை சுட்டிகாட்டி பாடுகின்றார்
“பாலூரு மலைபாம்பும் பனிமதியும் மத்தமும்
மேலூரும் செஞ்சடையான் வெண்ணூல் சேர் மார்பினான்
நாலூர் மயானத்து நம்பான் தனடி நினைந்து
மாலூரும் சிந்தையர் பால் வந்தூரா மறுபிறப்பே”
என்பது சம்பந்தர் பாடிய பாடல்
“திங்களூர் திருஆதிரையான் பட்டினம்ஊர்
நங்களூர் நறையூர் நனி நால் இசை நாலூர்
தங்களூர் தமிழான் என்று பாவிக்க வல்ல
எங்களூர் எய்து அமான் இடையாறு இடைமருதே”
என்பது சுந்தர் பாடல்
பஞ்ச பூத தத்துவங்கலில் இது ஆகாய தத்துவம், சிவனுக்குரிய ஐந்து தொழிலில் இது அருளல் நடக்கும் தலம்
இந்த தலத்தின் சிறப்பை காணுமுன் பிரம்மன் ஏன் சிவனில் ஒடுங்க வேண்டும், கரைந்து போகவேண்டும் என்பதை காணலாம்
இந்த உலகம் மட்டுமல்ல பிரபஞ்சமும் கால நேர எல்லை கொண்டது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின் எல்லாமே பரம்பொருளில் ஒடுங்கும் பின் மெல்ல மீண்டும் விரிந்து எல்லாம் தோன்றும்
(விஞ்ஞானம் இதைத்தான் சொல்கின்றது, இந்த அண்டம் விரிவடைந்தே செல்வது ஒரு கட்டத்தில் சுருங்கி ஒரு புள்ளியில் குவியும், பின் அந்த புள்ளியில் இருந்து மறுபடி விரிந்து தொடங்கும்
இதயம் சுருங்கி விரிந்து துடிப்பது போல இந்த அண்டமும் சுருங்கி விரிகின்றது ஆனால் அது மாபெரும் கால அளவில் நடக்கின்றது
அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு என்பது இதுதான்
இப்படி ஒருமுறை பிரபஞ்சம் தோன்றும்போது புது பிரம்மன் வருவான் பின் காலம் முடியும் போது அவனும் சிவனிடம் கரைந்துவிடுவான், மறுபடி சிவன் அவனை தோற்றுவிப்பார் வேதங்களோடு அவன் படைப்பை தொடங்குவான்
இதற்கான கால அளவையும் சொன்னது இந்துமதம் அதுதான் மகா ஆச்சரியம், இந்துக்களின் ஞானம் அதை அன்றே செய்யவைத்தது
360 நாள் கொண்டது ஒரு மானிட ஆண்டு (சந்திரனின் சுழற்சியின் படி) என கணக்கு. அது சாந்த்ரமான ஆண்டு எனவும் சொல்லப்படும். (365 நாள் 15 நாழிகை 31 விநாடி 15 நொடி கொண்டது சௌர மானிட ஆண்டு (சூரிய சுழற்சியின் படி) )
இப்படி ஒரு மானிட ஆண்டு தேவர்களின் ஒரு நாள்.
360 மானிட (சாந்த்ரமான) ஆண்டுகள் என்பது ஒரு தேவ வருடம்.
1200 தேவ வருடங்களைக் கொண்டது ஒரு கலியுகம். கலியின் இரு மடங்கு அதாவது,
2400 தேவ வருடங்களைக் கொண்டது ஒரு துவாபர யுகம்.
கலியின் மூன்று மடங்கு,/ அதாவது 3600 தேவ வருடங்களைக் கொண்டது ஒரு திரேதாயுகம். கலியின் நான்கு மடங்கு, அதாவது 4800 தேவ வருடங்களைக் கொண்டது ஒரு கிருத யுகம்.
ஆக மொத்தம் 12000 தேவ வருடங்கள், அடுத்தடுத்து வரும் இந்த நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு சதுர் யுகம்.
இப்படி ஆயிரம் சதுர் யுகங்கள் கொண்டது பிரம்மனின் ஒரு பகல் பொழுது, ஆயிரம் சதுர் யுகங்களைக் கொண்டது பிரம்மனின் ஒரு இரவு.
ஆக மொத்தம் இரண்டாயிரம் சதுர் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு நாள். இதனை கீதையும் இன்னும் பல நூல்களும் சொல்கின்றன.
அது போல நூறு வருடங்கள் பிரம்மனின் ஆயுட்காலம் அதன்பின் அவனும் கரைந்துவிடுவான் இல்லாமல் போய்விடுவான்
இந்த தலம் இதைத்தான் சொல்கின்றது,பிரம்மன் ஒன்று அழியாதவன் அல்ல அவன் ஒவ்வொரு யுகத்திலும் சிவனில் ஒடுங்கி கரைந்துவிடுகின்றான் பின் மீள புது பிறப்பாய் வருகின்றான் என்பது அது
ஆம், பிரம்மனே சிவனில் கரைந்து ஒடுங்கி மறுபிறப்பாக வரும் ஆலயம் இது
இந்த ஆலயம் ஆகாய தத்துவத்தை கொண்டது, ஆகாயம் என்றால் எல்லையற்ற அதே நேரம் ஒன்றுமற்ற வெளி எனவும் பொருள்
சிதம்பர ஆலயத்தின் அம்பல தத்துவம் அதுதான் , யோகத்தில் ரிஷிகளின் மனம் செல்லும் சூனிய நிலை அதுதான்
திருசிற்றம்பலம் என்பது அதுவேதான்
“அகலிடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்தெம் மெய்யைப் போகவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேயிரு ணீங்கிநின் றேனே”
“மண்ணகத்தான் ஒக்கும் வானகத்தான் ஒக்கும்
விண்ணகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடல் உற்றானுக்கே
கண்ணகத்தே நின்று காதலித்தேனே”
நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே”
என திருமூலர் அதைத்தான் பாடினார்
இங்கு எல்லாமே சிவனில் அந்த வெளியில் கலந்துவிடும், எல்லா படைப்பும் அந்த ஒன்றுமற்ற வெளியில் கரைந்துபோகும் பின் அதிலிருந்து தோன்றும்
இதைத்தான் இந்த ஆலயம் போதிக்கின்றது, ஒருவகையில் இது நுணுக்கமான ஒன்றை போதிக்கின்றது
ஒவ்வொருவர் வாழ்விலும் உரிய கர்மத்தை கழிக்க நேரமும் ஆயுளும் கொடுக்கபடுகின்றது, ஆயுளும் வாழும் காலமும் கர்மம் கழிக்கவே நிர்மானிக்கபடுகின்றன
அந்த காலநேரத்தை தன்னுள் வாங்கி கர்மம் கழிக்கும் தலம் இது, அதனால்தான் இங்கு வந்து வணங்குவோர்க்கு பிறப்பே இல்லை
இது கர்மத்தை தன்னில் ஏற்கும் ஆலயம், கரைத்துவிடும் ஆலயம்
இங்கு எல்லாமே அந்த வெளியில் அந்த ஆகாயத்தில் கலந்துவிடுகின்றது என்பது நிஜம், இங்கு மறைந்துபோகும் ஒவ்வொன்றும் அந்த வெளியில்தான் கரைகின்றது
மயானத்தில் உடல் வெந்து கரைந்துபோகும் கோலமும் அதுதான், மானிட உடல் என்றல்ல, இந்த உலகம் இந்த பிரபஞ்சம் என எல்லாமே அந்த வெளியில் கலந்துவிடுகின்றன
அந்த வெளிதான் மூலமானது,அதுதான் நிரந்தமானது
அந்த வெளியில் இருந்துதான் காற்று வரும், காற்றில் அக்னி வரும் பின் இந்த கலவையால் நீர் வரும், பின் நிலம் வரும் அந்த நிலத்தில் இருந்து உயிர்கள் வரும்
இதுதான் அழியும்போதும் நடக்கும்
எல்லாம் அப்படியே கரையும், நிலம் நீரில் கரையும் நீரை அக்னி எடுக்கும் , அக்னி காற்றில் கரையும், காற்று ஆகாயத்தில் கரைந்துபோம்
இந்த நிலையினை சொல்லும் ஆலயம் அதாவது கடைசி நிலை இதுதான் இதை அண்டியோர்க்கு பிறப்பே இல்லை என போதிக்கும் ஆலயம் இது
பிறப்பு என்பது கர்மம் கழிக்க வருவது, கர்மமே இல்லை எனும்போது அந்த கர்மமெல்லாம் அந்த வெளி எனும் ஆலாயத்திலே கரைந்துவிடும்போது அங்கே பிறப்புக்கு வழியில்லை
இந்த ஆலயம் இந்த தத்துவத்தை போதிக்கின்றது, பிறப்பற்ற நிலையினை கர்மம் கடந்த நிலையினை சிவன் அருள்கின்றார் என்பது
சித்தர்கள் ரிஷிகள் யோகிகளெல்லாம் மனதால் இந்த வெளியில் இந்த பிரபஞ்சத்தில் கலந்தவர்கள் அதனாலே எல்லாம் கடந்த நிலை முக்காலம் அறிந்த நிலை என எல்லா சக்தியும் அவர்களுக்கு கைகூடுகின்றது
அந்த நிலைதான் முக்தி நிலை, மனதால் சிந்தையால் அந்த பிரபஞ்ச பெருவெளியில் அவர்கள் கலந்துவிடுவார்கள் அதுதான் சமாதி நிலை
கர்மம் முடித்த கர்மம் எரித்த அனுபூதி நிலை
அந்த நிலையினை இந்த ஆலயம் கொடுத்துவிடும் , அண்டிவரும் பக்தர்களுக்கு கொடுத்துவிடும் அவர்கள் முழு ஞானநிலை அடைவார்கள் என்பதுதான் இந்த ஆலயத்தின் தாத்பரியம்
அதனாலே இந்த தலம் திருமெய்ஞனாம் என்றானது, அந்த சிவன் ஆதிபரமேஸ்வரர் என்றானார்
இந்த வெளிதான் இந்த ஆகாயம்தான் ஆத்மாவின் தத்துவமாகவும் கருதபடுகின்றது, ஆத்மா இந்த வெளியின் தன்மை கொண்டது, உணர்வும் மனமும் கொண்ட ஆத்மா இந்த தத்துவமே
அதனாலே பரம்பொருள் எனும் மூலத்தை பரமாத்மா என்றும் ஆத்மாவினை ஜீவாத்மா என்றும் அழைக்கும் மரபு உருவானது
அந்த வெளி ஆதி அந்தமில்லாதது அது கால நேரத்தை கடந்தது இந்த பிரபஞ்சம் அதிலிருந்துதான் தொடங்கி அதில்தான் முட்கின்றது
இந்த வெளிதான் வேதங்களை ஒலிவடிவில் கொண்டிருகின்றது, அந்த வேதங்களை கொண்டுதான் பிரம்மன் உலகை படைக்கின்றான், வேதங்கள்தான் உலகை இயக்குகின்றன
இந்த வேதங்களின் சப்த வடிவினைத்தான் ரிஷிகள் நால்வகை வேதங்களாக பதித்து தந்தார்கள், அந்த வேதங்கள் உலகை படைக்க தொடங்குமுன் சிவனை வணங்கும் தலம் இது
பின் எல்லாம் முடியும்போது அவை சரணடையும் இடமும் இதுதான்
இந்த தலத்தின் பெருமையினை சொல்லும்போது அங்கு வாழ்ந்த ஆபஸ்தம்ப ரிஷி என்பவரை சொன்னாலே எல்லா தத்துவமும் விளங்கிவிடும்
அப்படி ஒரு முனிவர் இருந்தார், அவர் தானம் கேட்க போன இடத்தில் ஒருவன் அவர்மேல் நீரை எறிந்தான் ஆனால் நீர் அவர்மேல் படாமல் அந்தரத்தில் நின்றது
அதிசயத்த சாமான்யன் அவர் காலில் வீழ்ந்து பணிந்தார், அந்த ஆஸ்தம்ப முனி இந்த தலத்தில் வழிபட்டார் தவமிருந்தார்
ஆபஸ்தம்ப முனி இந்த தலம் ஆகாய தத்துவம் கொண்டது என்பதை எளிதாக புரியவைத்தார், அந்தரத்தில் நீரை நிறுத்தினார் என்பது இந்த தலம் ஆகாய சக்தி கொண்டது என்பதை தெளிவாக காட்டுகின்றது
ஆம், இங்கே உணரகூடியது எளிதான தத்துவம், பூவி ஈர்ப்பு விசை என்பது ஜடபொருளுக்கு மட்டுமல்ல ஆத்மாவுக்கும் உண்டு
பூமி எல்லா பொருளையும் ஈர்ப்பது போல ஆன்மா எல்லா மாயைகளாலும் ஈர்க்கபடும், மாயைகள் கர்மத்தை செய்ய வைக்கும், கர்மம் ஆத்மாவினை கட்டிபோட்டு மறுபடி மறுபடி பூமியில் பிறக்க வைக்கும்
புவீ ஈர்ப்பு விசையினை அறுத்த பொருள் அந்தரத்தில் மிதப்பது போல, மாய பிடியினை கர்மங்களை அறுத்தால் ஒரு ஆத்மா அந்தவெளியில் கலந்தே விடும்
அந்த அதிசயத்தை செய்வது இந்த ஆலயம்
இது மிக மிக சக்திவாய்ந்த ஆலயம், யுகம் யுகமாக பிரம்மனை அவன் படைப்புக்களை தன்னுள் ஈர்த்து பின் இன்னொரு படைப்பாக உருமாற்றும் ஆலயம்
இது விதிகளுக்கு அதாவது பூலோக ஆகம விதிகளுக்கோ எதற்குமோ கட்டுபடாது, ஆகாயத்தை போல அது எல்லையோ விதிகளோ இல்லாதது
இங்கு சென்று வழிபட்டால் ஒருவனின் கர்மா அழியும் அவன் முக்திநிலை ச்மாதி நிலை அடைந்து ஆகாயவெளியில் இருந்து மறுபடி பிறப்பது போல் உருமாறுவான்
அதுவரை அவனை ஆட்டிவைத்த கர்மம், இன்னும் கர்ம்படி அவனை இழுத்துசென்ற விதி மாறும் அவனோடு ஒத்துழைக்க தொடங்கும்
பிறப்பில்லா பெரும் பாக்கியமும் இந்த காலமட்டும் நிம்மதியும் நன்மைகளும் சூழும் பாக்கியமும் பெருவான்
நால்வகை வேதங்களும் வணங்கியஆலயம் இது என்பதால் இங்கு சென்று வணங்கினால் எல்லா ஞானமும் இயக்க சூத்திரமும் புரியும், கர்மம் அழிந்து எல்லா ஞானமும் தெளிவும் வாய்க்கும்
முக்திநிலை ஞானநிலை எனும் பெரும் நிலை வாய்க்கும்
பிறப்பில்லா நிலை அடைய , கர்மம்முழுக்க அழிய, இந்த வாழ்வின் அவலம் நீங்கி புது வடிவாய் புதுவாழ்வாய் உருமாறி வர இந்த ஆலயம் வந்து வழிபடுங்கள்
அங்கே பழையன எல்லாம் கழிந்து புது யுகத்தில் புதுவாழ்வில் புது வெளிச்சத்தில் புது மனிதனாய் திரும்ப வருவீர்கள், ஞானமும் தெளிவும் அறிந்த நிலையும், அதனால் பற்றற்ற கவலைகள் அற்ற நிதானமும் அன்பும் கூடிய, செய்வதெல்லாம் வாய்க்கும் சிறந்த ஞானமும் அறிவும் தெளிவும் கொண்டவர்களாக திரும்பி வருவீர்கள் இது சத்தியம்
எந்த அளவுக்கு இது சூசகமாக அமைக்கபட்டிருக்கின்றது என்றால் ஆண்டின் தொடக்கமான சித்திரைமாத தொடக்கத்தில் சூரிய கதிர்கள் சிவலிங்கம் மேல் விழும்படி அமைக்கபட்டிருகின்றது
அதாவது பழையது புகுந்து புதியதில் புகும்போது சிவனருளோடு இந்த ஞானபரமேஸ்வரரின் அருள் ஞானத்தொடு தொடங்கவேண்டும் என்பதை சூசகமாக சொல்ல அப்படி ஏற்பாடு செய்யபட்டிருக்கின்றது
இந்த அதிசயம் இன்றும் உண்டு
அதனால் மிக மிக உறுதியாக சொல்லலாம், அது இப்போது சிறிய வெளிதெரியா ஆலயமாக இருக்கலாம் ஆனால் அதுதான் மகா தொன்மையானது, யுகங்களுக்கு முன்பே வேதங்களும் பிரம்மனும் வந்து வழிபட்ட தலம் அது
அதனால்தான் சம்பந்தரும் சுந்தரரும் தேடி சென்று பாடி வணங்கி பிறப்பில்லா பெருநிலை எய்தினார்கள், ரிஷிகளும் மகான்களும் அவ்வழியே பணிந்து முக்தி அடைந்தார்கள்
சோழமன்னர்களின் முன்னோர் முதல் ராஜராஜசோழன் என எல்லா சோழ மன்னர்களும் ஓடிவந்து பணிந்து திருப்பணி செய்து கொண்டாடிய தலம் இது
இது ஆகாய தலம், திருசிற்றம்பலம் எனும் அந்த மகா புனிதமான வார்த்தையின் தாத்பரிய ஆலயம்
“சிவாய நமஹ” எனும் பிறப்பறுக்கும் மந்திரம் மட்டுமே இங்கு உச்சரிக்கபடவேண்டும் என்பது இங்கு வலியுறுத்தபடுவது
அந்த தலம் உங்கள் வாழ்வை மாற்றும், அருளல் தொழில்வடிவாக அங்கு வீற்றிருக்கும் கருணை மிக்க சிவபெருமான் உங்கள் எல்லா கர்மத்தையும் ஏரித்து ஆகாய பிரபஞ்சத்தில் கலந்த பெரு ஞானத்தை தெளிவினை உங்களுக்கு அருள்வார், பிரபஞ்ச பெருவெளியோடு கலந்துவிடும் உங்கள் மனம் முக்தி நிலையினை மிக எளிதாக தரும், மாபெரும் பெருவாழ்வு வாழ்ந்து பிறப்பில்லா பெருநிலை அடைவீர்க்ள் இது சத்தியம்


அருமையான தொகுப்பு
வெங்கடேஸ்வரன் சென்னை