பொங்கல் – சூரிய நாராயண ஸ்லோகங்கள்
இந்துக்கள் சூரியனுக்கான வணக்கத்தை தங்கள் முன்னோர் வகுத்த வகையில் சொல்லி போற்றுகின்றார்கள்
“ஆதித்தாய நமஹ! சூர்யாய நமஹ
பாஸ்கராய நமஹ! தினகராய நமஹ
திரைலோக்யாய நமஹ! சூடாமணியே நமஹ
திவாகராய நமஹ! லோகமித்ராய நமஹ
ஜோதி ஸ்ருபாய நமஹ! அருணாய நமஹ
வரத ஹஸ்தாய நமஹ! ரவியே நமஹ
சூர்யநாராயண சுவமியே நமஹ”
என வணங்குகின்றார்கள்
“சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் போற்றும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்” என வணங்குகின்றார்கள்
“ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி”
என வணங்குகின்றார்கள்
“”செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்
அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக”
என பாரதி சொன்னபடி வணங்குகின்றார்கள்
“ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் ” என சொல்லி வணங்குகின்றார்கள்
“ஞாயிற்றன்ன வெந்திற லாண்மையும்
திங்களன்ன தன்பெருஞ் சாயலும்
வானத் தன்ன வண்மையும் மூன்றும்
உடைய தாகி” என வணங்குகின்றார்கள்.
“முந்நீர் மீ மிசை பலர் தொழத் தோன்றி ஏமுர விளங்கிய சுடர்” என போற்றுகின்றார்கள்
“தயங்குதிரை பெருங்கடல் உலகுதொழத் தோன்றி வயங்குகதிர் விரிந்த உருவு கெழு மண்டிலம்” என சொல்லி வணங்குகின்றார்கள்
விசுவாமித்திர மகாமுனி சொன்ன காயத்திர் மந்திரம் சொல்லி வணங்குகின்றார்கள்
“ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்.” என வணங்குகின்றார்கள்
அதாவது பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்க அருள் பிரிவாய் என வணங்கி நிற்கின்றார்கள்
மகர சங்கராந்தியன்று சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை சொல்லி வணங்கின்றார்கள்
‘‘த்யேயஸ்ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தீ
நாராயண ஸரஸிஜாஸன ஸந்நிவிஷ்ட கேயூரவான்
மகர குண்டலவான் கிரீடீ ஹாரி ஹிரண்யவபு த்ருத சங்கசக்ர”
அதன் பொருளை தியானிக்கின்றார்கள், கை கூப்பி வணங்கி சொல்கின்றார்கள்
சூரிய மண்டலத்தின் மத்தியில் கிரீடம் தோள்வளை தங்கமயமான ஹாரங்கள் பூண்டு, சுவர்ணம் போன்று ஒளிவீசும் திருமேனியோடு, சங்கு சக்கரம் தாங்கும் நாராயணனை நான் தியானிக்கிறேன் என தொடங்குகின்றார்கள்

யாக்யவல்லி முனிவர் சொன்னபடி தியானிக்கின்றார்கள்
சூரிய நாராயணனுக்கு நமஸ்காரம். தாங்கள் பிரம்மதேவன் முதல் சிறு புழு வரையில் உள்ள நான்கு விதமான ஜீவன்களுக்கும் உள்ளே கடந்து விளங்கும் கடவுள் ஆவீர். இரவையும் பகலையும் தோற்றுவிக்கும் கால வடிவினரும் தாங்களே! மேகங்களால் மறைக்கப்பட முடியாத ஆகாசம் போல என்றும் இருப்பவராக மாசற்றவராக இருக்கிறீர்கள்.
மேலும், தாங்கள் க்ஷனம், நிமிஷம், லவம் முதலிய உறுப்புகளை உடைய சம்வத்சரமாக இருக்கிறீர்கள். அதாவது ஒரு வருடத்தின் வடிவாக உள்ளீர்கள். மேலும் கடலில் இருந்து அதிகப்படியான நீரை உறிஞ்சி, நீர் வேண்டித் தவிக்கும் எங்களுக்கு மழையாகப் பொழிகிறீர்கள்.”
இப்படி நீங்கள் செய்யும் செயலை எதிர்ப்பவர் யாரும் இல்லை. ஓ… தேவர்களுக்கு எல்லாம் தேவரே! ஜீவன்களை படைத்தவரே! ஒவ்வொரு நாளும் மூன்று வேளையும் வேளை தவறாமல் முனிவர்கள் செய்யும் சந்தியாவந்தனத்தால் மகிழ்ந்து, அவர்களது பாவத்தை வேரோடு சாய்க்கிறீர்கள்.
நிற்பன, நடப்பன, ஊர்வன, பறப்பன என அனைத்து வகை ஜீவன்களும் தாங்களாலேயே வாழ்கின்றன. காரணம், நீங்கள் அவற்றுள் இருந்து அவற்றின் உயிர், மூச்சு, மனம், புலன்கள் என்று அனைத்தையும் காரியம் செய்யும்படி ஏவுகின்றீர்கள்.
நீங்கள் உதித்தால்தானே உயிர்கள் சுறுசுறுப்போடு இயங்குகிறது? சூரியன் மறைந்தபின் தன்னை மறந்து அனைத்தும் தூங்க அல்லவா செய்கின்றது? அது மட்டுமில்லை. கொலை, கொள்ளை போன்ற பாதகச் செயல்களும் பெரும்பாலும் சூரியன் இருக்கும்போது நடப்பதில்லை. ஆகவே, உயிர்களை தர்ம வழி நடத்துபவர் நீங்களே
ஒவ்வொரு முறையும் இருட்டு என்னும் மலைப் பாம்பினால் வையகம் விழுங்கப்படும் போது தங்களின் அருள்பார்வையால் அல்லவா நாங்கள் ஒவ்வொரு நாளும் மீண்டு வருகிறோம்! இப்படி நல்லவர்களுக்கு நன்மையையும் துஷ்டர்களுக்கு இடைஞ்சலும் தந்து இந்த உலகத்தை அழகாக ரட்சிக்கிறீர்கள்.
இந்திரன் முதலிய எட்டு திசையின் காவலர்கள் தினம் தினம் தங்களை தாமரையால் அஞ்சலி செய்கிறார்கள்.
மூன்று உலகங்களுக்கும் குருவாக விளங்கும் பிரம்மாகூட தங்களை வணங்குகிறார். இப்படி மகிமைகள் அநேகமுடைய தங்களை நாங்கள் வணங்குகின்றோம் என வணங்குகின்றார்கள்
அப்படியே இன்னும் ஒரு பாடல் பாடி பாடி வணங்குகின்றார்கள், அது “சூரிய அஷ்டகம்” என சிவனே கொடுத்த பாடல்
ஆதிதேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர|
திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே||
ஆதிதேவனே வணங்குகிறேன். ஒளி பொருந்தியவனே எமக்கு அருள்வாய். பகலை உண்டாக்கும் நாயகா! ஒளியைத் தருபவனே உமக்கு என் வணக்கம்
ஸப்தாச்வ ரதமாரூடம் ப்ரசண்டம் கச்யபாத்மஜம்|
ச்வேத பத்மதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||
ஏழு (வானவில்லின் வண்ணம் போல் ஏழு) குதிரைகள் பூட்டிய தேரில் இருப்பவரே… வெப்பம் நிறைந்தவரே… ரிஷி கச்யபரின் குமாரரே… வெண் தாமரை மலரை கரத்தில் தாங்கியவரே… சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்
லோஹிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்|
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||
சிவப்பு நிறத் தேரில் ஏறி உலா வருபவரே… அனைத்து உலகங்களுக்கும் தந்தையே… எம் பாவத்தை அறுத்து பாவனமாக்குபவரே… சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்
த்ரைகுண்யம் ச மஹாசூரம் ப்ரஹ்ம விஷ்ணு மகேச்வரம்
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்
சத்வகுணம், ரஜோகுணம், தமோகுணம் என மூன்று குணங்களை உடையவரே… பலம் பொருந்திய மஹாசூரரே… ப்ரஹ்மா விஷ்ணு சிவனார் இவர் மூவரின் அம்சமும் பொருந்தியவரே… எம் பாவத்தை அறுத்து பாவனமாக்குபவரே… சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்
ப்ருஹ்மிதம் தேஜ: புஞ்ஜம் ச வாயும் ஆகாசம் ஏவ ச|
ப்ரபும் ச ஸர்வ லோகானாம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||
வளர்ந்துகொண்டே இருக்கும் தேஜஸ்ஸாகிய ஒளி கொண்டவரே… வாயு, ஆகாயம் முதலான பஞ்சபூதங்களின் தொகுதியானவரே… உலகு அனைத்துக்கும் பிரபுவாகத் திகழ்பவரே… சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்
பந்தூக புஷ்ப ஸங்காசம் ஹாரகுண்டல பூஷிதம்|
ஏக சக்ரதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||
பந்தூக மரத்தின் பூவைப் போன்ற நிறத்தவரே… மாலை, குண்டலங்கள் அணிந்து அலங்காரம் பொருந்தியவராகத் திகழ்பவரே… ஒரே சக்கரத்தைக் கொண்டவரே… சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்
தம் ஸூர்யம் ஜகத்கர்த்தாரம் மஹாதேஜ: ப்ரதீபனம்|
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||
உலக படைப்பு இயக்கத்துக்குக் காரணமாகத் திகழ்பவரே… தம் ஒளியால் உலகை இயக்கி உயிர்க்கு ஞானம் அளிப்பவரே… எம் பாவம் அறுத்து பாவனமாக்குபவரே… சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்
தம் ஸூர்யம் ஜகதாம்நாதம் ஞான விஞ்ஞான மோக்ஷதம்|
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||
உலகின் நாதனே… ஞானமாகிய அறிவையும், விஞ்ஞானமாகிய அறிவின் அனுபவத்தையும், மோக்ஷமாகிய மறுவீட்டையும் அளிக்கும் தேவனே… எம் பாவத்தை அறுத்து பாவனமாக்குபவரே… ஹே சூரிய தேவனே… உம்மை வணங்குகிறேன்
இதி ஸ்ரீ சிவப்ரோக்தம் ஸூர்யாஷ்டகம் ஸம்பூர்ணம் என சொல்லி வணங்குகின்றார்கள்
ஒருமுறை தேரில் பூட்டினால் விடுதலையே இல்லா குதிரைகைளை கொண்டவனே உன்னை வணங்குகின்றோம்
ஆயிரம் கைகளால் நீரை எடுத்து நிலமெங்கும் கொட்டுபவனே, ஆனாலும் உனக்கென நீ ஏதும் எடுப்பதுமில்லை வைத்து கொள்வதுமில்லை உன் உயர்ந்த குணத்தை போற்றுகின்றோம்
““இவனே பிரம்மா; இவனே விஷ்ணு; இவனே சிவன், ப்ரஜாபதி” என அகத்தியர் சொன்னபடி போற்றுகின்றோம்
வேதங்கள் ‘ரோக நாசகன்’ என வணங்கும் நோய்களை விரட்டும் சூரியனை வணங்குகின்றோம்
“காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்,
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்,
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த,
தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி”
கடைசியாக சூரியனுக்குள்ள காயத்ரி மந்திரத்தை சொல்லி முழு சரணாகதியாக விழுந்து வணங்குகின்றார்கள்
“ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே!
பாச ஹஸ்தாய தீமஹி!
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்”