மலேசிய திருநாட்டின் பத்துமலை முருகன் ஆலயம்

இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் முருகன் ஆலயத்தில் தனி சிறப்புபெற்று நிற்பது மலேசிய திருநாட்டின் பத்துமலை முருகன் ஆலயம், சஷ்டி காலத்தில் கடல்கடந்து நிற்கும் அந்த கந்தனை வணங்குதல் அவசியம் என்பதால் அந்த ஆலயத்தின் வரலாற்றையும் அதன் சிறப்பையும் கொஞ்சம் பார்க்கலாம்

கடாரம் என ஒருகாலத்தில் அழைக்கபட்ட அந்த திருநாட்டில் இந்த ஆலயத்தின் வரலாறு 18ம் நூற்றாண்டில்தான் தொடங்குகின்றது அதற்கு முன் அங்கு ஆலயம் இருந்திருக்கவில்லை

பொதுவாக தென்கிழக்கு ஆசிய நாடுகள் தடாகத்தில் தாமரை போல தீவுகளாக சிதறிகிடப்பவை, மலேசிய திருநாடு தீபகற்பம் என்றாலும் அந்த புவியியல் சாயல் அங்கும் மற்ற கிழக்காசிய தீவுகளை போலவேத்தான் அமைந்திருக்கும்

அந்த பிராந்தியத்தில் எரிமலையில் உருவான இடங்கள் அதிகம், அந்த மலைகளும் அதிகம், உருக்கிய மெழுகினை போல ஒரு காலத்தில் எரிமலை குழம்பு குவிந்திருக்கின்றது அதனில் உருவான மலைகளுக்குள் அற்புதமான குகைகள் உண்டு

அணைந்துவிட்ட மெழுகின் பக்கவாட்டில் சுடர்கள் கெட்டிபட்டு தொங்குவதை போல பாறை குழம்புகள் இறுகி தலைகீழாக உட்புரமும் வெளிபுறமும் தொங்கும் குகைகள் ஏராளம் அங்கு உண்டு

அப்படியான குகைகள் மலேசியாவில் அதிகம், அது மலையும் மழையும் மிகுந்திருக்கும் நாடு, பசுமையும் செழுமையும் அங்கே கொட்டிகிடக்கும் வரம்

இந்த மலேசிய திருநாட்டுக்கும் தமிழகத்துக்குமான தொடர்பு ராஜராஜன் காலம், ராஜேந்திரன் காலம் பின் பாண்டிய ஜடாவர்மன் காலம் வரை அரசரீதியாக இருந்திருக்கின்றது, பின் தமிழகத்தில் சுல்தான்களும் நாயக்க மன்னர்களும் வந்தபின் இந்த ராஜாங்க உறவு இல்லை

செட்டியார்கள் சிறிய கப்பல்களில் வியாபாரம் செய்தார்கள் அவர்களின் முக்கிய இலக்காக சந்தையாக பர்மா மாறிபோனபின் இங்கு அதிகம் வரவில்லை கொஞ்சம் தொடர்பில் இருந்தார்கள்

18ம் நூற்றாண்டு இந்துஸ்தானின் தலைவிதி மாற தொடங்கிய காலகட்டம், அதுவரை அந்நியநாட்டுக்கு பிழைக்க செல்லும் அவலம் இந்துஸ்தானியருக்கு இல்லை, எல்லாருக்கும் எல்லாம் கிடைத்தது

பிரிட்டிஷார் கைக்கு இந்துஸ்தான ஆட்சி சென்றதும் அவர்களின் சுரண்டல் இந்துஸ்தானத்தில் பசி பட்டினியினை கொண்டுவந்தது, பசுவின் காம்புவரை அறுப்பது போல் பேராசையில் சுரண்டியதில் பஞ்சமும் பசியும் விலைவாசி கொடுமையும் வந்தது

தொழில்புரட்சியின் விளைவாக விவசாய சந்தைகள் குறைந்தன, இந்துஸ்தான விவசாயம் 18ம் நூற்றாண்டிலே பலனில்லா தொழிலாயிற்று, வீழ தொடங்கிற்று

இதுபோக மதமாற்றம், இந்துக்களுக்கு தலைவர்கள் இல்லாமை வறுமை பிரிட்டிசார் தூண்டிவிட்ட சாதிகொடுமை என மக்கள் தவித்தனர், அப்படி சிக்கிய மக்களை கொத்தாக அள்ளி உலகெல்லாம் தன் தொழில்காடுகளில் குவிப்பது வழமையாயிற்று

இந்துஸ்தானியர்கள் நாடோடியாக அலையும் அவலம் அப்போதுதான் தொடங்கிற்று

அப்படி இலங்கை தேயிலை தோட்டம், பிஜூ கரும்புதோட்டம் என எங்கெல்லாமோ அள்ளி சென்றார்கள், மலேசிய காலநிலை தேயிலைக்கு உதவாது

காரணம் மலை என்றாலும் பனியும் மழையும் வேண்டும், மலேசியாவில் பனி அவ்வளவாக இல்லை என்பதால் தேயிலை சரிவராது

இதனால் ரப்பரை தேர்ந்தெடுத்தார்கள், ரப்பர் மரம் அதிகாலை செய்யவேண்டிய தொழில் அதிகாலையில் பாலெடுத்து ரப்பர் தோலாக மாற்றும் தொழில்

மலேயா மக்கள்தொகை அதிகமில்லா நாடு இம்மாதிரி பெரும் ரப்பர்காடுகளில் வேலை செய்ய மக்கள் தொகை போதாது, இதனால் இந்துஸ்தானத்தில் இருந்து அள்ளி வந்தார்கள்

அப்படி வந்தமக்கள் அபலைகள் ஆனால் கடும் உழைப்பாளிகள் அதிகாலை எழுந்து நீர் இறைத்தல், மாடு பராமரிப்பு, வயல்வேலை என உழைப்பினை கொண்டவர்கள்

பிரிட்டிசார் தமிழர்களை நன்கு மதித்தான் அவன் ஆவணங்களில் தமிழக இந்துக்கள் கடும் உழைப்பாளிகள் என எழுதிவைத்து செல்லுமிடமெல்லாம் அழைத்து சென்றார்கள், இது வரலாறு அக்கால தமிழக மக்களுக்கு இருந்த நற்பெயர் அப்படி

தமிழகத்தில் அதிகாலை எழுந்தே உழைத்து பழகிய அந்த இனம் ரப்பர்காடுகளில் மாடாய் உழைத்தது, எஸ்டேட் எனும் ரப்பர் காடுகள் பெருக பெருக பலதரபட்ட இந்திய சமூகம் வந்தது

அப்படி மலேய இந்திய சமூகம் என தமிழர், மலையாளி, சீக்கியர் என எல்லா இனமும் இருந்தாலும் பெரும்பான்மை இனம் தமிழ்பேசும் இந்துசமூகம்

இந்த சமூகத்திடம் ஒரு வழமை இருந்தது அது செல்லுமிடமெல்லாம் தன் மதத்தை காப்பது

அவர்கள் மண்பாசம் மிக்கவர்கள், சொந்த ஊரில் இருந்து அவர்களால் பெற்றோரை உறவினரை சொந்த வீட்டை ஊரை கொண்டுவரமுடியவில்லை

அவர்களால் முடிந்தது தெய்வத்தை மட்டும் அழைத்து வருவது

அப்படி கொண்டுவந்த தெய்வங்களை 18ம் நூற்றாண்டிலே ரப்பர் தோட்டங்களில் காளி, மாடன், கருப்பன் என வணங்க தொடங்கினார்கள்

இன்றும் அவர்களுக்கும் இந்தியாவுக்குமான தொடர்பை அந்த தெய்வங்கள்தான் சாட்சியாய் பேசிகொண்டிருக்கின்றன‌

அப்படிபட்ட அபலைகளுக்கு ஒரு ஏக்கம் இருந்தது அது பெரும் ஆலயங்களை கட்டுவது

அப்படி ஏன் ஏங்கினார்கள் என்றால் காரணம் யாழ்பாண தமிழர்கள்

யாழ்பாண தமிழர்கள் வாழ்க்கை வித்தியாசமானது, இந்துஸ்தானில் பெரும் போர்களும் குழப்பமும் விடுதலை போராட்டமும் இருந்துகொண்டே இருந்ததால் அமைதியான வாழ்க்கை இல்லை

ஆனால் இலங்கை தீவில் அப்படி அல்ல, ஒரு அமைதி நிலவிற்று இதனால் 17ம் நூற்றாண்டிலே அவர்கள் ஆங்கிலம் படித்தார்கள்

ஆங்கிலம் படிப்பதைத்தான் கல்வி என இங்கு பலர் நம்பவைக்கபட்டிருக்கின்றார்கள்

இந்துகளிடம் எல்லா நிர்வாகமும் கணக்குவழக்கும் இருந்தது, இல்லாத ஒன்று ஆங்கிலமும் ஐரோப்பிய நாகரீகமும்

இதை யாழ்பாணர்கள் 17ம் நூற்றாண்டிலே பெற்றதால் ஆங்கிலத்தில் இந்திய தமிழரைவிட முன்னணியில் இருந்தார்கள், அதனால் பிரிட்டிசார் அலுவலகம், உத்தியோகம் என மேலதிகாரிகளாக இருந்தார்கள்

அவர்கள் பழக்கவழக்கம் வித்தியாசமானது தொழிலுக்கு ஆங்கிலம் ஐரோப்பா என்றிருந்தாலும் உள்ளுக்குள் தீவிர இந்துக்களாக இருந்தார்கள், பெரும் இந்து ஆலயமெல்லாம் எழுப்பினார்கள்

ஆனால் இந்திய தமிழ்சமூகத்துக்கும் அவர்களுக்கும் இடைவெளி இருந்தது, இவர்களை பல இடங்களில் தள்ளிவைத்தார்கள்

அப்படி தள்ளிவைக்கபட்ட கூலி சமூகம்,, உழைக்கமட்டும் தெரிந்த அப்பாவி சமூகம் தங்களுக்கும் ஒரு ஆலயம் வேண்டும் என பெரிதும் ஏங்கிற்று

18ம் நூற்றாண்டின் இறுதியில் இப்படி உழைத்த மக்கள் நடுவில் இருந்து கற்றறிந்த ஒருவர் தோன்றினார், அவர் பெரும் கண்ணியவானும் பக்திமானும் பெரும் அறிவாளியுமாக இருந்தார்

அவர் பெயர் தம்புசாமி பிள்ளை

இந்த தம்புசாமி பிள்ளைக்கு வழக்கறிஞர் தொழில் இருந்தது, இன்னும் தாதுமணல் எனும் ஈயசுரங்கங்களை நடத்தினார் எல்லோருடனும் பெரும் மதிப்பை பெற்றிருந்தார்

அவர்தான் கோலாலம்பூரில் இந்திய இந்துசமூகத்துக்கான ஒரு ஆலயத்தினை மகா மாரியம்மன் ஆலயம் என தொடங்கினார் அது இன்றும் சீரும் சிறப்புமாக உண்டு

அது 1890ல் கட்டபட்டிருக்கின்றது

அக்காலகட்டத்தில்தான் கோலாலம்பூர் நகரின் வடக்கு பக்கம் மலைகளில் ஒன்றினை கண்ட தமிழர்கள் அங்கிருந்த குகை ஒன்றில் மூங்கிலால் வேல் நட்டு வணங்க தொடங்கினார்கள்

அந்த மலை பத்துமலை என அழைக்கபட்டது

பத்து என்றால் கல் என பொருள், அங்கு ஓடும் ஆற்றுக்கு பத்து ஆறு என பெயர் அம்மலைக்கும் அதுவே பெயராயிற்று

அந்த மலையில் ஏகபட்டகுகைகள் தரையிலே உண்டு, இக்குகை கொஞ்சம் மேலே இருந்தது, அதன் வாயில்வேல் வடிவில் இருந்ததை அறிந்த இந்துதமிழர்கள் அந்த காட்டுமலைக்குள் ஏறி முருகனை வேல் நாட்டு வணங்கினார்கள்

இந்த வழிபாடுதான் அங்கு நடந்த முதல் வழிபாடு

அந்த வழிபாட்டை குகை வழிபாட்டை கேள்விபட்ட தம்புபிள்ளை அங்கு தலையிட்டு ஆலய நிர்மானம் செய்ய எண்ணினார், காரியம் தொடங்கிற்று

மரத்தினால் ஆன படிகளை செய்து ஒற்றையடி பாதையினை மாற்றி, வவ்வால்கள் அடையும் குகையினை ஆலயமாக மாற்றினார்கள்

உண்மையில் அந்த குகையில் ஒரு அனுமாஷ்ய சக்தி உண்டு, முதன் முதலில் அதை உணர்ந்தவர் தெய்வீக மனிதராக மட்டுமே இருந்திருக்க முடியும்

அந்த சக்தி பலரை ஈர்த்தது , கூட்டம் குவிந்தது

மலேய இந்திய சமூகத்தின் ஒரு அடையாளமாக அது மாறிகொண்டிருந்தது, பக்திமிக்க அந்த இந்து சமூகமும் இந்தியாவுக்கு ஓடி ஓடி பாம்பன் சாமிகளையெல்லாம் ஆலோசித்து அதனை இன்னும் வளர்த்தது

1910களில் பிரிட்டிசாரின் மதமாற்றம் உச்சத்தில் இருந்தது, ஆங்கில கல்வி அரசவேலை பிரிட்டிசாருடன் உறவு என பல மாயங்களை செய்து மதமாற்றிய கும்பலுக்கு இந்திய இந்துசமூகம் சவால்விட்டது

நாம் கொண்டுவந்தவர்களை நாமே மதம்மாற்றமுடியாத நிலைகண்டு திகைத்தனர் பிரிட்டிசார், கதிகாமத்தில் செய்யமுயன்றைதை போல பத்துமலைக்கும் தடையெல்லாம் விதித்து இது அரசநிலம் ஆக்கிரமிப்பு என்றெல்லாம் ஏதேதோ செய்ய பார்த்திருக்கின்றார்கள்

அதாவது இப்போது இந்திய தமிழகத்தில் புதிதாக ஒரு இந்து ஆலயம் எழும்பமுடியுமா? முடியாது அப்படியான நெருக்கடிகள் அன்று இங்கு கொடுக்கபட்டிருக்கின்றன‌

ஆனால் மக்கள் போராடியிருகின்றார்கள், மலாய் இஸ்லாமிய மக்களும் சீனர்களும் ,மலேய இந்திய இந்துக்களுக்கு ஆதரவாய் நின்றிருக்கின்றார்கள், கடைசியில் தடை விலக்கபட்டு இப்பகுதி மலேய இந்திய இந்துக்களுக்காக மாறிற்று

அதன்பின் உலகபோர்கள், ஜப்பானிய ஆட்சி , மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சி என்றாலும் இந்த ஆலயம் அசையவில்லை அல்லது இந்துக்கள் விட்டுகொடுக்கவில்லை

மாறாக வளர்த்தார்கள், உயிரை கொடுத்து வளர்த்தார்கள்

தமிழக இந்துக்கள் எப்படி உன்னதமான பக்தி கொண்டவர்கள் என்பதை அங்குதான் காட்டினார்கள், ஒரு இந்து எங்கு சென்றாலும் பன்மடங்கு இந்து உணர்வில் வலுத்திருப்பான் என்பதை உணர்வால் சொன்னார்கள்

அந்த பக்தியில் அந்த ஆலயம் வளர்ந்தது

இன்று மலேசிய திருநாட்டின் சுற்ற்லா தலமாகவும் ஆன்மீக தல்மகாவும் அது நிமிர்ந்து நிற்கின்றது

அந்த வளாகம் மிக மிக அழகானது, அங்கு கால் வைக்கும்போதே ஒரு அமைதியும் உற்சாகமும் அனதில் தொற்றிகொள்ளும்

கீழே பல குகைகள் உண்டு, அதில் ஒரு குகையினை ராமாயண கண்காட்சி என ராமாயண சிற்பங்களால் நிரப்பியிருக்கின்றார்கள், அதன் உச்சியில் சுயம்புவாக வந்த சிவலிங்கமும் உண்டு

இன்னொரு குகையில் கண்காட்சிகள், திருகுறள்கள் என நிரப்பியிருக்கின்றார்கள்

சிலகுகைகள் அரியவகை தாவரம் கனிமம் கொண்டவை என்பதால் அனுமதியில்லை

கீழே அனுமன் ஆலயம், ரங்கன் ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலாய்ம் இப்போது துர்க்கை அம்மன் ஆலயம், சனி பகவான் சன்னதி என பல உண்டு

அந்த வளாகத்தில்தான் உலகின் மிகபெரிய முருகப்பெருமான் சிலை கம்பீரமாக நிற்கின்றது

பார்ப்பதற்கு மிக மிக உன்னதமான காட்சி எதுவென்றால் அந்த முருகபெருமான் சிலையடியில் உலகின் எல்லா நாட்டு மக்களையும் எப்போதும் காணமுடியும்

ஜப்பான் முதல் அமெரிக்கா வரை வந்து பார்ப்பர்கள், அராபியர் ஆப்ரிக்கர் என எல்லா மக்களும் இனம் மொழி மதம் தாண்டி வருவார்கள்

மலேசியா இஸ்லாமிய நாடு எனினும் அவரவர் மதத்தை அவரவர் யாருக்கும் சிக்கலின்றி பின்பற்ற முழு உரிமை உண்டு, அதுவும் பத்துமலை ஆலயமென்றால் எல்லோருக்கும் புன்னகை கொடுக்கும் ஸ்தலம்

அரசாங்கமும் மலாய் மக்களும் சீனர்களும் முழு மனதோடு தங்கள் நாட்டின் அடையாளமாக அதனை கருதுகின்றார்கள்

தைபூசம் அங்கு தனிபெரும் விழா என்பதால் மாகாணா பொதுவிடுமுறை உண்டு

அந்த அளவு காவடியும், உடலெல்லாம் துளைத்து அலகு குத்திவரும் ஆயிரமாயிரம் பக்தர்களும் உண்டு, பண்டைய இந்துக்களின் உருக்கமான வழிபாட்டை அங்குதான் காணமுடியும்

அந்த குகை ஆலயத்துக்கு செல்ல சுமார் 350 படிகளை கடக்க‌ வேண்டும்

வாசல் வேல்வடிவத்தில் அமைந்த குகை அது, அதனை நெருங்க நெருங்க இனம்புரியா ஒரு சக்தி மனதை ஆக்கிரமிக்கும்

அந்த குகைக்குள் நுழையும் போதே பிரமாண்ட பிரபஞ்சத்துக்குள் நுழைவது போல ஒரு பிரமை வரும், சக்தி மிக்க கடலுக்குள் மூழ்குவது போல ஒரு இனம்புரியா ஆகர்சனம் வரும்

அந்த குகையின் அமைப்போ இல்லை தனி சக்தியோ தெரியவில்லை அங்கொரு ஈர்ப்பு உண்டு அது உங்களை ஆட்கொள்ளும்

அங்கு இரு ஆலயங்கள் உண்டு ஒன்று வேலாயுதருக்கு இன்னொன்று கொஞ்சம் மேடான பக்கம் வள்ளி தெய்வானைக்கு

அந்த குகை மகா பிரமாண்டமானது , ஏன் முருகபெருமானுக்கு குஹன் என பெயர் வந்தது? ஏன் பாம்பாட்டி சித்தர் முதல் போகர் வரை குகைகளில் தவம் செய்தார்கள் என்பது அப்போதுதான் புரியும்

பிரமீடுகளின் ஈர்ப்பு மையம் போல் ஒரு சரியான இடத்தில் குகையின் பீடம் அமைந்திருக்கின்றது, உண்மையில் எகிப்திய பிரமீடுகளும் அதன் மையமும் தியானத்துக்கு ஏதுவானவை

அப்படித்தான் தொடக்கம் இருந்திருக்கின்றது, பின்னாளில் கல்லறை ஆக்கிவிட்டார்கள்

இது ஒரு சூட்ச்சும ரகசியம், இந்துக்கள் என்றோ புரிந்த சூட்சுமம், கூம்புவடிவில் அல்லது உருளைவடிவில் ஒரு கட்டம் கட்டினால் பிரபஞ்ச சக்தியினை குவிக்கமுடியும் என கணறிந்த நிஜம்

இந்துகோவில்களின் கர்ப்பகிரஹங்கள் அப்படி அமைக்கபட்டன, வட இந்திய ஆலயங்களின் கோபுரத்தில் இதனை காணலாம்

இதைத்தான் எகிப்தியர்களும் முதலில் முயற்சித்தார்கள் பெரும் மலை இல்லா அந்த நதிகரையில் அவர்களாக ஒரு மலையினை ஏற்படுத்தி தியானத்தில் பிரபஞ்ச சக்தியினை பெறமுயன்றார்கள்

நெப்போலியன் எகிப்தை கைபற்றிய காலங்களில் அங்கே அமர்ந்து சில காட்சிகளை கண்டதாக சொன்னான், அதையே ரமண மகரிஷியினை தேடிவந்த பால் பிராண்டனும் சொன்னான்

இப்படி சில பிரபஞ்ச சக்திகள் சில மலைகளில் சில குகைகளில் அதன் அமைப்புபடி எளிதாக குவிகின்றன‌

இந்த தலம் அப்படியான ஒன்று

சரியான அளவில் சரியான உயரத்தில் உள்குவிந்த அந்த அமைப்பு கொண்ட இந்த குகை மிகசரியான வகையில் சக்தியினை குவிக்கின்றது, அந்த புள்ளி மிக சரியாக பொருந்தும் இடத்தில் சன்னதி அமைக்கபட்டுள்ளது

அங்கு அந்த வேலாயுத சன்னதி முன் அமர்ந்தால் மனம் எளிதில் ஒருமுகபடும், வழக்கமாக இதர இடங்களில் தியானத்தில் அமர்ந்தால் மனம் அடங்காது

அது அரசியலை தேடும், சினிமா வரும், அலுவலகம் வரும், கண்ட உணவும் வரும், அழகு மங்கையர் வருவார்கள் எல்லாம் கடந்தால் “தமிழர்களே தமிழர்களே” என அய்யா கலைஞர் வருவார்

ஆனால் இந்த குகையில் மணிகணக்கில் அமரமுடியும், அந்த ஆரவாரம் ஆலய மணிசத்தம், பூஜை மந்திர சத்தம் சுற்றுலா வருவோரின் ஓசை என எல்லாம் கடந்து அமரமுடியும்

மனம் அப்படியே கரைவதை உணரமுடியும்

ஒருகட்டத்தில் மனம் அப்படியே கரைந்து பிரபஞ்சத்துடன் ஒன்றாகி தன்னை மறந்த மனமற்ற உணர்வற்ற நிலையினை எளிதில் உணரமுடியும்

அது ஏகாந்தமனது அது பரவசமானது எது வேறு எங்கும் கிடைக்காதது

அதற்கு குண்டலினி, சக்கரம் என என்னென்ன பெயர்களை சொன்னாலும் அங்கு அது முருகப்பெருமானின் அருளாக மட்டும் கிடைக்கின்றது

வெறும் 150 ஆண்டுகளுக்குள் அது மாபெரும் வளர்ச்சியடைந்து நிற்க அந்த குகையில் இருக்கும் மகா சக்திதான் காரணம்

அதுதான் அங்கு செல்வோரை ஈர்க்கின்றது, மலேசிய இந்துக்களை அப்படி இழுக்கின்றது , ஒருமுறை சென்றோரை தன்னை பிரியவிடாமல் தன்னில் கட்டிவைத்து கொள்கின்றது

அந்த மகா அனுமாஷ்யம்தான் லட்சோப லட்ச மக்களை காவடி எடுக்க வைக்கின்றது அலகுகுத்த வைக்கின்றது , உலகெங்கும் இருந்து மக்களை இழுத்துகொண்டே இருக்கின்றது

அந்த குகையினை முதலில் அடையாளம் கண்டவர் நிச்சயம் பிரபஞ்சத்துடன் தொடர்புடைய ஒரு தெய்வீக மனிதராகத்தான் இருக்கமுடியும்

அந்த குகையின் ஈர்ப்பு அப்படி

ஒருமுறை சென்று பாருங்கள், அது உங்களை அபபடியே ஈர்க்கும் , கண்ணை மூடி அமரவைக்கும், ஆயிரமாயிரம் குடமாக அமிர்தங்களை கொட்டியதுபோல் மனதை நிறையவைக்கும்

அங்கேயே அமரவைக்கும், அதிலே கரையவைக்கும், முழுக்க ஈர்த்துவைக்கும் அந்த நிறைவில் இனம்புரியா மகிழ்வும் நிம்மதியும் கிடைக்கும்

இதுவரை தேடிய நிம்மதி நொடியில் மனதில் நிறையும், அதுவரை மனதில் இருந்த கவலை துயரம் சோகமெல்லாம் நொடியில் மறையும்

அந்த மாபெரும் குகையில் மனம் கரையும் நேரம் காதோரம் “ஓம்” எனும் ஒலி ஒலிப்பதையும் விஷேஷித்த அதிர்வுகள் உள்ளே இறங்குவதையும் அனுமானிக்கமுடியும்

ஒரு நிசப்தமான நேரம் பூஜை மணிசத்தமும், முருகனுக்கு அரோகரா எனும் கோஷமும் ஒருசேர எழும்போது அந்த சத்தம் குகையில் எதிரொலித்து மனதில் மோதும்போது அதுதான் கயிலாயமா? இதுதான் அவனின் ராஜலோக சன்னதியா எனும் அந்த ஆனந்த பெரும் உவகை மனமெல்லாம் ஆட்கொள்ளும்

அது அதிசயமான அனசயாமான எங்குமே உணரமுடியாத ஒரு பரவசம், மனம் அக்களித்து ஆனந்த பரவசத்தில் கரைந்துபோகும் அற்புதம்

ஆழ்வார்களும் அடியார்களும் பாடலில் சொன்னதை மனதார உணர்ந்து கொள்ளும் திருமுருகன் சன்னதி அந்த ஞான குகை

அங்கே எளிதில் தியானம் கைகூடும், மனம் ஒருமுகபடும், ஒருமுகபட்ட மனம் செய்யும் பிரார்த்தனை உடனே பலிக்கும்

அங்கு பெரும் அதிசயங்களும் மாபெரும் கூட்டமும் திரள்கின்றது என்றால் இதனால்தான், ஒவ்வொரு நாளும் திருவிழா என்றால் இதனால்தான் இந்த அதிசயம்தான்

கடல்கடந்து முருகபெருமான் விஸ்வரூபமாக நிற்கும் தலம் அது

இன்று ஐரோப்பா அமெரிக்கா என எங்கெங்கோ இந்துக்கள் பரவியிருக்கலாம் ஆனால் இந்துக்கள் கடல் கடந்த காலங்களில் இந்திய இந்துக்களின் பெரும் அடையாளமாக நிலைத்திருப்பது அதுதான்

மதமாற்ற கும்பல்களால் வெஸ்ட் இண்டீஸ் போல இன்னும் பிஜூ போல பல இடங்களில் இந்தியாவில் இருந்துகொண்டு செல்லபட்ட மக்கள் மதம்மாறியது போல் அல்லாமல் இன்றும் மலேசிய இந்துக்கள் தனித்து நிற்கின்றார்கள் என்றால் காரணம் அந்த மலைதான்

மலேசிய இந்துக்களை போல் பாரம்பரியத்தையும் தெய்வ வழிபாட்டையும் ஆலய சுத்தத்தினையும் பேணும் இன்னொரு தமிழினம் இருக்கமுடியாது

இந்திய தமிழர்களெல்லாம் அவர்களிடம் படிக்கவேண்டிய இந்துபார்ம்பரியம் பூஜைமுறை ஆலய பராமரிப்பு நிறைய உண்டு

அந்த அளவு இந்திய தமிழகத்தின் இந்துக்கள் நிலை வீழ்ந்துவிட்டது பரிதாபம்

கம்பீரமாக நிற்கும் முருகன் சிலையினையும் அந்த குகையினையும் அங்கு குவியும் கூட்டத்தையும் பெரும்வழிபாட்டையும் கண்டால் ஒரு உண்மை புரியும்

ஆம், அது இந்துமதத்தின் பெரும் சக்தி

இந்திய தமிழகத்தில் யாரையோ அல்லது ஒரு கிராமத்தையோ மதம்மாற்றிவிட்டு சில கும்பல்கள் கொக்கரிக்கலாம் திராவிட முகமூடி அணிந்து ஏதேதோ பேசலாம்

ஆனால் நிஜம் அது அல்ல, அங்கு ஒரு இந்து மாற்றபட்டால் வெளிநாட்டில் பல இந்து பிறக்கின்றான், அங்கு இழக்கபடுவதை விட வெளிநாட்டில் இந்துமதம் வேகமாக பரவுகின்றது

நாளை இந்திய தமிழகத்தில் இந்துமதம் பின்னடைந்தால் உலகெங்குமிருந்து சுனாமியின் ஆவேசத்தில் இந்துமதம் இந்திய தமிழகத்தில் பாய்ந்து புதுவெளிச்சம் கொடுக்கும்

பின்னாளில் இந்துமததுக்கு வரும் சோதனையினை முன்கூட்டியே அறிந்து அம்மதம் தன் மக்களை உலகெல்லாம் விதைத்திருகின்றது

பிரிட்டிசார் வந்ததும் ஆண்டதும் இந்தியாவில் பல பின்னடைவுகளை கொடுத்தது என்றாலும் பிற்கால நன்மைகளுக்காக ஏதோ ஒரு சக்தி அவர்களை அனுமதித்திருக்கின்றது

அவர்களாலே மொகலாயத்தோடு சுல்தானிய ஆட்சி இந்துஸ்தானில் ஓய்ந்தது, பிரிட்டிசார் வரவில்லைஎன்றால் அராபிய ஊடுருவல் தொடர்ந்துகொண்டே இருந்திருக்கும்

அவர்கள் எழும்பித்தான் மேற்கே துருக்கிய அரசு பாரசீக அரசை முடித்துவைத்தபின் இந்துஸ்தான அச்சுறுத்தல்நீங்கிற்று

அதைவிட முக்கியமாக இந்துஸ்தானத்தில் மட்டும் இருந்த இந்துமதத்தை உலகெல்லாம் பிரிட்டிசார்தான் இந்திய மக்கள் மூலம் கொண்டு சென்றார்கள்

தேயிலைகாடோ, ரப்பர்காடோ , கரும்புதோட்டமோ, புகையிலை வயலோ எங்கு இந்தியர்களை அவர்கள் கொண்டு சென்றாலும் இந்துமதமும் கூட சென்றிருக்கின்றது

அப்படி அமெரிக்கா வரை பெரும் மரமாக வளர்ந்து நிற்கின்றது

இனி இந்துஸ்தானத்தில் இந்துக்களுக்கு சிக்கல் என்றால் அது உலக தரத்தோடு பெரும் தொழில்நுட்பம் அரசியல் உலக பலத்தோடு அங்கு நுழைந்து இந்துமதத்தை மீட்டெடுக்கும்

கவனித்துபார்த்தால் வியாபாரம் செய்யவந்த பிரிட்டிஷாரை கொண்டு இந்துமதம் தன்னை விடுவித்து பல நாடுகளில் நிறுத்திகொண்டது

இந்தியாவினை இந்துக்களை யாரும் பயன்படுத்தவில்லை இந்துமதம்தான் பிரிட்டிசாரை கொண்டு உலகெல்லாம் தன்னை மீட்டுகொண்டு எதிர்கால ஆபத்துக்களை களைய ஆயத்தம் செய்திருக்கின்றது

பழைய இந்து ஆலயங்களை பண்டைய மனன்ர்களும், சோழனும் பாண்டியனும் ராஜபுத்திரர்களும் நிர்மானித்திருக்கலாம்

ஆனால் எதிர்கால இந்து ஆலயங்களை வெளிநாட்டு இந்துக்கள்தான் வழிகாட்டி நிர்ணயிப்பார்கள், அமெரிக்காவிலும் கிழக்காசியாவிலும் அதுதான் நடக்கின்றது

காலம்தோறும் தன்னை புதுப்பிக்கும் இந்துமதம் கலியுகத்திலும் தன்னை நிறுத்திகொள்ள பிரிட்டிஷார் காலத்தை பயன்படுத்தி இன்று உலகெல்லாம் சிலிர்த்து நிற்கின்றது

இந்துமதம் இந்த யுகத்தில் தன்னை நிறுத்தும் முதல்படி பிரிட்டிஷ் காலத்தில் நடந்து அடுத்தடுத்த காட்சிகள் அமெரிக்காவிலும் இன்னும் பல நாடுகளிலும் நடக்கின்றன‌

பத்துமலை ஆலயம் அதற்கு முன்னோடி

இது விமானபயணங்கள் அதிகரித்துவிட்ட காலம் மக்களும் பிரயாணங்களுக்கு விரும்பி செல்லும் காலம், அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் இந்த ஆலயத்தை தவறவிடாதீர்கள்

அந்த வளாகத்துக்கு வந்து அடுத்த தலைமுறை இந்து ஆலயம் எப்படி இருக்கவேண்டும் என்பதை கற்று சென்று கற்றும் கொடுங்கள்

வளாகத்தில் இருக்கும் அனுமன் , ரெங்கன் ஆலயம் காசிவிஸ்வநாதர் துர்க்கை ஆலயத்தை தரிசித்துவிட்டு முருகன் இருக்கும் குகைக்கு செல்லுங்கள்

அங்கு அவன் சன்னதி முன்னால் அப்படியே அமர்ந்திருங்கள், மனம் அங்கே கரைவதையும் அந்த ஆனந்தம் கண்ணீராய் வெளிபடுவதையும் உணர்வீர்கள்

இதுவரை தேடிய தெய்வம் உங்கள் மனதில் வந்து அமர்வதை அந்த குகையில் உணர்வீர்கள்

பின் கயிலாயம், சபரிமலை போல திருவண்ணாமலை திருப்பதி போல நீங்களே அடிக்கடி தேடி தேடி வருவீர்கள் இது சத்தியம்

சஷ்டி காலத்தில் அந்த பத்துமலை முருகனையும் மனமார நினைத்து வணங்குங்கள், அடுத்த தலைமுறை இந்துக்களுக்கும் அவன் ஆலயத்துக்குமான வழிகாட்டியாக அவனே நிற்கின்றான்

அவனை இந்த‌ சஷ்டி காலத்தில் மனமார வணங்குங்கள், உரிய காலத்தில் தன் குகையில் அவனை சந்திக்க அந்த கந்தபெருமான் உங்களுக்கும் வாய்பளித்த்து அழைத்துவந்து அருள்தந்து அனுப்பிவைப்பான், இது முக்கால சத்தியம்

சில நூறுவருடங்களுக்கு முன் ஊரைவிட்டு இனத்தைவிட்டு சொந்த மண்ணையும் மக்களையும் விட்டு கண்ணீர் வடிய பிரிந்த மக்கள், எல்லாம் விட்டு பிரிந்தமக்களை முருகபெருமான் மறக்கவில்லை

அவன் அவர்களோடு வந்திருகின்றான், அவர்களோடு அவர்களாக இந்த குகையில் தங்கியிருக்கின்றான்

அவர்கள் காலம் முடிந்தாலும் அவர்கள் வாரிசுகளுக்கு நல்வாழ்வு கொடுத்து எக்காலமும் உங்கள் குலதெய்வம் நானே என நின்று அவர்களுக்கும் இந்துஸ்தானுக்குமான பந்தத்தை சொல்லி கொண்டிருக்கின்றான் என்பதை தவிர என்ன சொல்லமுடியும்?

எக்காலமும் எல்லா நேரமும் எல்லா இடத்திலும் தன் மக்களோடு அவன் உண்டு, அவன் ஆட்சியும் ஆசியும் உண்டு என்பதற்கு சாட்சியாய் அந்த இந்து ஆலயம் கம்பீரமாய் நிற்கின்றது.