ஸ்ரீசைலம் ஆலயம் – ஜோதிர்லிங்கமும் சக்திபீடமும்
ஸ்ரீ ப்ரமராம்பா சமேத ஸ்ரீமல்லிகார்ஜுனர்
பாரதத்தின் எல்லா பாகங்களிலும் பிரசித்தியான சிவாலயங்கள் உண்டு, அவ்வகையில் தக்காணத்தில் பிராதனமான ஆலயம் ஸ்ரீசைலம் ஸ்ரீ ப்ரமராம்பா சமேத ஸ்ரீமல்லிகார்ஜுன ஆலயம்
ஆந்திர மாகாணத்தில் அமைந்துள்ள அந்த ஆலயம் தமிழக சிதம்பரம் திருவண்ணாமலை போல் தனித்துவமானது, மகா பிர்சித்தியானது.
ஸ்ரீசைலம் 12 ஜோதிர்லிங்கத்தில் முக்கியமானது மட்டுமல்ல, அன்னை சக்திக்குரிய சக்திபீடங்களில் அது கழுத்துபகுதி விழுந்த இடத்துக்கானது, அவ்வகையில் அது பெரிய சக்திபீடம்
ஜோதிலிங்கமும் சக்திபீடமும் இணைந்த மூன்றாம் அதுதான். காசியும் ஜார்கன்ட் மாகாணத்தில் வைத்தியநாதர் ஆலயமும் மற்ற இரு தலங்களுமாகும்
அப்படி மிக மிக அபூர்வமான தலம் இது, அதன் சிறப்பு ஒன்றல்ல இரண்டல்ல மிக மிக நீளமானது, பெரும் வரலாறும் பாரம்பரியமும் கொண்டது அது
அதன் வரலாறு யுகங்களை தாண்டி உண்டு நான்கு யுகங்களாக தொடரும் ஆலயம் அது, மிக மிக பழமையான ஆலயம் எனும் சிறப்பை காசிபோல தன்னுள் கொண்டு வீற்றிருக்கும் ஆலயம் அந்த ஸ்ரீசைலம் ஆலயம்
கிருதாயுகத்தில் இரணியனும், திரேதாயுகத்தில் ராமரும், துவாரபதயுகத்தில் பாண்டவரும் , கலியுகத்தில் ஆதிசங்கரரும் நாயன்மார்களும் பூஜித்த தலம் அது
அதன் வரலாறு இப்படி நீண்டு நெடியது என்றாலும் அதன் முக்கிய வரலாறு முருகபெருமானோடு இருந்தும் வருகின்றது
சூரனை அழித்த முருகபெருமான் இயற்கையாகவே முளைத்த அந்த சிவலிங்கத்தை தொழுது இந்த காட்டுபகுதியில் வலம் வந்தார், அவரை தேடி சிவனும் பார்வதியுமே வந்தார்கள் அவ்வகையில் அது சோமஸ்கந்தன் ஆலயமாகவும் கருதபட்டது
முருகவழிபாட்டின் தொடக்கம் அங்குதான் இருந்தது, அந்த ஸ்ரீசைலம் என்பது இரண்டாம் கயிலாயம் என அழைக்கபடும் அளவு சிறப்பான சக்திகளை விஷயங்களை கொண்டிருந்தது
அதன் வரலாறு மிக மிக பழமையானது யோக ரகசியங்களும் அங்கே சூட்சுமமாக உண்டு, அதுதான் சிவசக்தி தத்துவமாக பெரும் நல்ல அதிர்வுகளை அங்கே கொடுத்துகொண்டிருக்கின்றது
அழகான கிருஷ்ணாநதி கீழே ஓட மலையின் மேல் ஸ்ரீசைலம் அல்லது ஸ்ரீபர்வதம் என அமர்ந்திருக்கின்றது இந்த ஆலயம், அதன் விருட்சம் மருதமரம் அதன் தீர்த்தம் பாலா நதி எனும் சிறியநதி
அந்த கோவிலில் இருக்கும் சிவனின் பெயர் மல்லிகார்ஜூனர் , அன்னையின் பெயர் பிரமரம்பா
அர்ஜூனம் என்றால் மருதமரம், மருதமரங்கள் சூழந்த இந்த கானகபகுதியில் இயற்கையாகவே நிறைய மல்லிகைபூக்கள் நிரம்பி மல்லிகைகொடிகள் அந்த மருதமரங்களை சூழ்ந்து நறுமணமும் அழகிய கோலமும் கொண்டு அந்த இடத்தில் தானே உருவாகிய லிங்கம் என்பதால் அந்த சிவன் மல்லிகார்ஜூனர் என்றானார்
அழகிய நறுமணமிக்க மல்லிகை பூக்களை எப்போதும் வண்டுகள் ரீங்காரமிட்ட இடம் என்பதால் அன்னை பிரமரம்பா என்றாளாள்
சந்திராவதி எனும் இளவரசி பார்வதியின் அம்சமாக அவதரித்தாள், அவள்தான் முருகபெருமான் வழிபட்ட இந்த இயற்கையான லிங்கத்தை மீண்டும் கண்டெடுத்து மல்லிகை மலர்களிட்டு வணங்கினாள் , அந்த ஜோதிலிங்கத்துக்கு முதல் ஆலயம் அமைத்ததும் அவள்தான், பின் அந்த ஜோதிர்லிங்க சிவனோடு ஜோதிவடிவில் ஐக்கியமானவளும் அவளேதான்
அவள்தான் அதாவது அன்னை பார்வதிதான் முதலில் இந்த ஆலயத்தை அமைத்தாள் என்கின்றது குறிப்புக்கள், இது மிக மிக பழமையான காலம்
மல்லிகார்ஜூனம் என்பதற்கு மல்லிகையும் அர்ஜுனம் எனும் மருதமரங்களும் கலந்துவளர்ந்த இடம் என பொருள் என்றாலும் மிக முக்கியமான சம்பவம் அர்ஜூனன் தவம்
அர்ஜுனன் பாசுபதகனைக்காக தவமிருந்த இடம் அதுதான் என்பது நம்பிக்கை, அங்கேதான் வேடன் வடிவில் வந்த சிவனுடன் சண்டையிட்டான் என்பதும் நம்பிக்கை
அர்ஜூனம் என்றால் வேட்டைக்காரன் என்றும் பொருள் உண்டு, வேடன் வடிவில் வந்த சிவனே அர்ஜூனம் என பொருள் உண்டு, மல்லி கொடிகள் நிறைந்த காட்டில் அவர் இருந்ததால் மல்லிகார்ஜூனர் என்றானார்.
வேட்டைக்காரன் அதை மெய்பிக்கும் வகையில் இன்றும் ஆலய முகப்பில் வீரசங்கரர் அல்லது கிராதமூர்த்தி சன்னதி உண்டு
கிராதமூர்த்தி என்பது வில்லும் அம்பும் தாங்கிய சிவவடிவம், வேட்டைக்காரன் வடிவம், சிவனின் 25 மூர்த்தம் எனும் வடிவங்களில் ஒன்று
இந்த கோலமே மல்லிகார்ஜூன கோலம் என சொல்வோரும் உண்டு, அர்ஜூனன் வேடுவன் வடிவில் வந்த சிவனுடன் மல்லுகட்டிய இடம் அது
அதற்கு சான்றாக ஆலயத்தின் மேற்கே பாண்டவர் கண்ணனோடு சேர்ந்து கட்டிய ஆறு ஆலயங்கள் உண்டு
இங்கேதான் பாசுபத கனைக்கான பயிற்சி அது இருக்குமிடம் அதை பெறும்வழி என எல்லாம் சிவன் அர்ஜூனனுக்கு போதித்தார் அதன் பின் கண்ணன் உதவியோடு அர்ஜூனன் அந்த கனையினை பெற்றான் என்கின்றது மகாபாரதம்
அந்த மல்லிகார்ஜூனருக்கான ஆலயம் இந்தியாவில் மூன்று இடங்களில் பிரசித்தி, முதலாவது இந்த ஸ்ரீசைலம் , இரண்டாவது திருவிடை மருதூர் ஆலயம் மூன்றாவது திருநெல்வேலி அருகே இருக்கும் திருபுடை மருதூர் ஆலயம்
இந்த மூன்றும் மல்லிகார்ஜூனருக்கான ஆலயம், இங்கேதான் கிராதமூர்த்திகளும் உண்டு
அப்படிபட்ட இந்த ஆலயத்தை இரண்ய கசிபு முதல் எல்லோரும் வணங்கியிருக்கின்றார்கள், பாண்டவர் காலத்துக்கும் ராமபிரான் காலத்துக்கும் மூத்த ஆலயம் இது
கந்த புராணம் இந்த ஆலயத்தை பற்றி பேசுகின்றது, மார்கண்டேய புராணம் சொல்கின்றது, மகாபாரதத்தின் வன பருவம் தெளிவாக சொல்கின்றது, பத்மபுராண உத்திரகாண்டம், சிவபுராண ருத்சம்ஹிதை, பாகவத பத்தம் ஸகந்தம், ஆதித்ய சூத சம்ஹிதை, ரத்னகாத ரசாயாண காண்டம், கதா சரித்திர சாகரம், மாலரி மாதவம், பாணபட்டரின் காதம்பரி ஆகியவை இந்த ஆலயத்தை பற்றி சொல்கின்றன
இங்குள்ள சிறப்புகள் இன்னும் மிக மிக ஏராளம், பக்தர்களை பகவான் ஆட்கொண்ட கதைகளும் புராணங்களும் திருவிளையாடல்களும் தென்னக மதுரைபோல மிக உண்டு
அக்கமா தேவி எனும் பக்தையும், மல்லம்மா எனும் பக்தையும் தமிழக நந்தனார் ஆண்டாள் போல இந்த மல்லிகார்ஜூனரை வேண்டி வாழ்ந்து அவருக்காகவே தவமிருந்து அந்த ஆலயத்தில் ஜோதியாய் சிவனோடு ஐக்கியமான மெய்சிலிர்க்கும் வரலாறெல்லாம் உண்டு
அவர்களுக்கு இன்றும் அங்கே சன்னதிகள் உண்டு, அவர்கள் சிவகாரியம் செய்த தடங்கள் உண்டு
பக்தர்களை அந்த மல்லிகார்ஜூனர் எப்படியெல்லாம் காத்து நடத்தினார் என சொல்லும் மிக மிக ஆச்சரியமான வரலாறும் உண்டு
ஆதிசங்கரர் இங்குதான் தன் “சிவானந்த லஹரி” எனும் மிக சிறந்த பக்திமாலையினை பாடினார்
“
சைவகுரவர்களில் முக்கியமானவர்களான அப்பரும் திருஞான சம்பந்தரும் இங்கு பாடினார்கள் , தேவாரம் பாடபட்ட 268ம் ஆலயம் இது
“டுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர வரைக்கசைத்தான்
இடுமணி எழிலானை யேறல னெருதேறி
விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப்
படுமணி விடுசுடரார் பருப்பதம் பர்வதமே”
திருப்பருப்பதம் எனும் ஸ்ரீசைலம் பற்றி சுந்தரர் பாடிய பாடலின் தொடக்கம் இது, இன்னும் அப்பரும் அவரும் பாடிய பாடல்கள் நிறைய ஏராளம் உண்டு
மிக மிக புராதனமான இந்த ஆலயத்தின் மைய கோபுரம் காகதிய அரசி மைலம்மாவினால் கட்டபட்டது, இன்னும் ஏகபட்ட மன்னர்கள் சன்னதியும் கோபுரமும் கட்டினார்கள், தமிழக கரிகால் சோழன் ராஜராஜ ராஜேந்திர சோழன் ,பாண்டியர்கள் என பட்டியல் நீளமானது
விஜயநகர மன்னர்களில் முக்கியமான கிருஷ்ணதேவராயர் கிழக்கு கோபுரத்தை கட்டிகொடுத்தார்
சிவன் நந்தியினை தன் வாகனமாக ஏற்றதும், நந்திதேவர் சிவனுக்காக் தவமிருந்த பகுதி என்பதாலும் இந்து நந்தி அருள்பெற்ற இடமாக கருதாபடுகின்றது,நந்தியே மலையாக வந்து சிவனை சுமப்பதாகவும் ஐதீகம்
இங்குள்ள நந்தி என்று உறுமுமோ அன்று கலியுகம் முடியும் என்பதும் நம்பிக்கை
காசியில் வாழ்ந்த வாழ்வு, கங்கையில் நீராடிய புனிதம், நர்மதை கரையில் செய்யும் வழிபாடுகள் போன்றவற்றை இங்கே தரும் இடமாகவும் ஸ்ரீசைலம் கருதபடுகின்றது, அந்த பலன்களையெல்லாம் இந்த ஒரு தலத்தில் பெற்றுகொள்ளலாம்
இதனாலே மலைக்கு கீழே ஓடும் கிருஷ்ணாநதி பாதாள கங்கை என்றாகி பின் தெலுங்கு கங்கை எனவும் அடையாளம் பெற்றது
ஸ்ரீசைலம் லிங்கத்தை தரிசனம் செய்தால் பாவமெல்லாம் தீரும்,கர்மவினை தீரும் மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை
பஞ்சபாண்டவர், ராமபிரான், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி, நக்கீரர், சேக்கிழார், சங்கரபாதர் என எல்லா ஞானவான்களும் அவதாரங்களும் வந்து வணங்கிய இந்த ஆலயத்தினை ராமதாஸர் முதல் பலர் சிவாஜி காலத்திலும் வணங்கினார்கள், அந்த ஆலயத்தை சுற்றி இருக்கும் மரங்களுக்கு ஹனுமந்த பீரம் எனும் மரமுண்டு, இந்த மரங்களில் இலைகளில் ஆஞ்சநேயரின் உருவம் இயற்கையாகவே பதிந்திருக்கும்
அதாவது ராமன் வந்து சிவலிங்கவழிபாடு செய்த காலமுதல் ஆஞ்சநேயர் இப்படி தங்கிவிட்டார் என சான்றாக அந்த இலைகள் இப்போதும் உண்டு
ஸ்ரீசைலம் வேதாந்திகள், பரமயோகிகள், சித்தி பெற்ற சித்தர்கள், மகாதவசிகள், இருக்கும் தவஸ்தலமே இப்புண்ணிய ஷேத்திரம் இதற்கு தட்சிண கைலாசம் என்ற பெயரும் உண்டு.. கயிலாயத்துக்கு அடுத்து சிவன் தங்குமிடம் இதுதான் என்பார்கள் , காசி போல் சிவனுக்கு மிக விருப்பமான ஸ்தலம்
எங்குமே இல்லாத மிக விசித்திரமான ஆனால் அர்த்தமுள்ள பாரம்பரியம் இங்கே கடைபிடிக்கபடுகின்றது
எல்லா ஆலயங்களிலும் ஆலயத்தினுள் நுழையும்போது கை கால்களை கழுவி சுத்தமாக செல்லவேண்டும் என்பது ஐதீகம், இங்கே அப்படி அல்ல எந்த கட்டுபாடும் இல்லை
இதற்கு தூளி தரிசனம் என பெயர், அக்காலத்தில் ஆதிவாசி வேடுவர்கள் இப்படி வழங்கியதால் இன்றும் அவ்வழக்கம் நீடிக்கின்றது
காசிபோல இங்கும் பக்தர்கள் தங்கள் கைகளால் லிங்கத்துக்கு அந்த ஜோதிலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யலாம் , தொட்டு வணங்கலாம் தடை ஏதுமில்லை
இது வேடுவர் பாரம்பரியம் மட்டுமல்ல, பக்தன் எவ்வளவு பாவ அழுக்கோடும் கர்மவினை அழுக்கோடும் இருந்தாலும் இறைவன் ஏற்றுகொள்வார் எனும் சூட்சும தத்துவத்தை சொல்லும் வழிபாடு இது, அதன் தத்வார்த்த குறியீடு அதுதான்
இப்படி ஏகபட்ட சிறப்புக்களை கொண்ட ஆலயத்தின் இன்னொரு வழிபாடும் வினோதமானது அது பக்தர்கள் தங்கள் வழிபாடு நிறைவேறிய பின் சிவனுக்கும் அன்னைக்கும் திருமணம் செய்துவைப்பார்கள்
அதாவது சிவசக்தி தத்துவ வடிவம் இது, சிவனும் சக்தியும் சேர்ந்தால்தான் நல்ல விஷயம் நடக்கும், இருவர் அருளும் மகா முக்கியம் எனும் தத்துவம் அது
இப்படி பல சிறப்புக்களை கொண்ட ஆலயம் இது, சிவத்தலங்களில் கைலாயம் முதலிடம் என்றால், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடம் வகிக்கிறது. அத்துடன் அம்மனின் 51 சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
வீரசிவாஜி இங்கே வந்து தரிசித்தான், அங்கே அம்மன் அவனுக்கு காட்சி கொடுத்து அவனின் சோதனை காலத்தில் துணை இருந்து வாளை மீண்டும் கொடுத்தாள்
அதனால் வடக்குபக்க கோபுரத்தை அவனே கட்டி கொடுத்தான் அது இன்றும் உண்டு
அப்படிபட்ட ஆலயம் மதுரை தமிழ்சங்கத்துடனும் தொடர்புபட்டது, திருவிளையாடலில் வரும், அந்த பாண்டிய மன்னனுக்கு சந்தேகம் வர காரணம் இந்த மல்லிகார்ஜூன ஆலயத்தில் சங்கரர் பாடிய அந்த சிவானந்த லஹரிதான்
ஆதிசங்கரர் தன் சிவானந்தல லஹரியில் பாடுகின்றார், “அர்ஜுனத்தில் (மருதமரம்) படர்ந்த மல்லிகை கொடி” போன்றவள் அன்னை என்கின்றார்
“மல்லிகார்ஜுனர்” என சிவனுக்கு பெயர் இதிலிருந்துதான் வந்தது, அர்ஜூனம் மேல் படர்ந்த மல்லி கொடியாள், அதாவது அன்னையுடன் சிவன் நிற்கும் அந்த ஸ்ரீசைலம் தலத்தின் காட்சி இந்த சவுந்தர்ய லஹரியின் வரியில் இருந்துதான் வந்தது
அங்கே ஆதிசங்கரர் இன்னும் பாடுகின்றார், அன்னையின் கூந்தலில் சூடியதாலே மல்லிகைக்கே மணம் வந்தது என்கின்றார்
அதாவது மல்லிகையின் மணமே அன்னைதான் என்பது பொருள், இது காலங்களில் நான் வசந்தகாலம் மலர்களில் நான் மல்லிகை என கண்ணன் சொன்ன வரியின் பொருள்
இதை இன்னும் ஆழமாக சொல்கின்றார் ஆதிசங்கரர்
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் “ஸௌரப்யம்” எனப்படும் அன்னையின் இயற்கையான கூந்தலின் நறுமணம் பற்றி சொல்கின்றார் அந்த திருநாமம் “சௌகந்திக லஸத்கசா “.
அதாவது அன்னையின் கூந்தலில் இருப்பதால் மல்லிகைக்கு மணம் அதிகமாம், அந்த மணத்தின் வாசனையால் தேவலோக பாரிஜாத மரங்களை சுற்றிய வன்டுகள் கூட அதைவிட இனிமையான மணம் என கருதி அன்னையினை தேடி அவள் இருக்கும் ஆலயத்துக்கு வந்துவிட்டதாம், இப்படி வண்டுகள் சுழலும் தன்மை கொண்ட கூந்தலை கொண்டதால் அவள் “ப்ரமராம்பா”
கவனியுங்கள் சங்கரர் சொல்லவருவது அன்னை மல்லிகையில் மணமாய் இருக்கின்றாள், தன் கூந்தல் மணத்தையே மல்லிகைக்கு அவள் கொடுக்கின்றாள்
அவள் கூந்தல் மணமிக்கது அதுதான் மல்லிகையில் மணமாய் மணக்கின்றது என்பது பொருள்
(நிச்சயம் இது ஒரு பெரும் தத்துவம், அன்னை ஒளியானவள், அன்னை நீரானவள், சூரியனின் ஒளி சந்திரனின் ஒளி அவள் என்பதுபோல மலர்களின் மணமும் அவளே என்பதுதான் தத்துவம்)
சங்கரர் பாடியதும் புதிதல்ல அது வழமையில் இருந்த நம்பிக்கை, அன்றைய வேத நூல்கள் சொன்ன தத்துவம்
சங்கரருக்கு முன்பே அது உண்டு, இந்த தத்துவம் பாண்டிய மன்னன் காலத்திலேஉண்டு
அப்படி அமைந்ததுதான் ஆந்திராவின் ஸ்ரீசைலம் ஆலயம், அங்கே இருக்கும் நாதர் மல்லிகார்ஜூனர் நாயகி ப்ரமரம்பா
அந்த ஸ்ரீசைலம் ஆலயத்தின் தத்துவம் சங்கரர்காலத்துக்கு முன்பே இருந்தது, அந்த ஆலயம் அப்போதே உண்டு
இந்த ஸ்ரீசைலம் ஆலயத்தை பற்றித்தான் மதுரையினை ஆண்ட சென்பக பாண்டியனுக்கும் மனதில் எழுந்து சில யோசனை
மதுரை தமிழ்சங்கம் சதா காலமும் இறைவனை அவன் திருவிளையாடல்களை அவன் பெருமையினை பாடி மகிழ்ந்த சபை அங்கே எல்லா இறை தத்துவங்களும் விவாதிக்கபட்டன
சென்பக பாண்டியன் இந்த மல்லிகார்ஜுன தத்துவத்தைத்தான் விளக்க முற்பட்டான், அன்னை சக்தி இயக்கும் சக்தி, சிவன் அசையா சக்தி
சிவன் மரமென்றால் அன்னை அதில்தவழும் கொடி, சிவன் மல்லிகை என்றால் அனனை மணம், அவளே சக்தி
இதைத்தான் சபையில் விளக்க முயன்றான், அப்படியே தன் பக்தி எத்ததையது தன் மனதில் நினைத்த ஸ்ரீசைலம் ஆலயத்தை இறைவன் தானாக வந்து சொல்வாரா என விளையாடிபார்க்கவும் விளைந்தான்
அவன் பக்தி அப்படி இருந்தது
இந்த குழப்பத்தைத்தான் சபையில் சொன்னான், அதற்குத்தான் ஆயிரம் பொன் பரிசும் அறிவித்தான்
அர்ஜூனம் என்றால் மருதமரம், மருதமரங்கள் மதுரையில் முன்பு இருந்ததும் அன்னை மீனாட்சி அந்த மல்லிகொடிவம் வடிவம் என்பதையும் அந்த ஆலவாய் நாதனும் அன்னையும் மல்லிகார்ஜூன கோலத்தவர் என்பதை யாராவது சொல்வார்கள் அதை மக்களும் அவையோரும் அறிவார்கள் என்றே நம்பினான்
அதை மனதில் வைத்துதான் அறிவித்தான்
அதன் பின் யாராலும் அவன் மனதை அறியமுடியா நிலையில் அந்த தருமிக்கு சிவனே பாடல் கொடுத்தது எல்லோரும் அறிந்தது
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே” எனும் பாடல் அது
இதற்கு “மலர்களில் மகரந்தங்களை எடுத்து வாழும் அழகிய சிறகுகளை உடைய தும்பியே! நீ அறிந்த பூக்களில் என்னுடன் பல பிறப்புகளில் நட்புடன் பழகும் மயில் போல் அழகுடைய அழகிய பற்களை உடைய பெண்ணில் கூந்தலைவிட மணமுடையது ஏதேனும் உள்ளதோ?எனக்குப் பிடித்ததைக் கூறவேண்டாம்.நீ கற்றறிந்ததைக் கூறு” என பொருள்
கவனியுங்கள் , “எனக்குப் பிடித்ததைக் கூறவேண்டாம்.நீ கண்டறிந்ததை( கற்றறிந்ததை) கூறு” இதுதான் சிவன் வாக்கு
அதாவது பாண்டிய மன்னா நீ அறிந்த நூல்களில் ஞானியர் சொல்லவில்லையா? அன்னை சக்தி மணமாய் இருக்கின்றாள், அவள் கூந்தலில் சூடுவதாலே மல்லிகை மணம் பெற்றது அவளே எல்லா மணங்களிலும் உயர்ந்தவள் என்பதை நீ கற்கவில்லையா என சொன்ன பாடல்
சிவன் மிக அழகாக மன்னனை தும்பியாக கொண்டு அவனின் அந்தபுர நாயகிகளை மலர்களாக கொண்டு அப்பாட்டை கொடுத்திருந்தார், அப்படியே அவன் படித்த தத்துவங்களையும் நினைவு கூற செய்தார்
அங்கே தருமியினை கொண்டாடினான் மன்னன், தருமி சொன்னது மாபெரும் தத்துவம் அன்னை சூரியனில் ஓளி , மலர்களில் மல்லிகை மணம், காலங்களில் வசந்தம் என்பதை சொன்ன தத்துவம்
ஆனால் இங்கே குறுக்கே வந்தார் நக்கீரர்
நக்கீரர் நிரம்ப படித்தவர், அறிவாளி , பக்தர் ஆனால் கர்வம் பிடித்தவர்
அவருக்கு தனக்கு தெரியாத விஷயம் இந்த தருமிக்கு எப்படி தெரிந்தது எனும் அகந்தை இருந்தது அதனால்தான் குறுக்கே வந்தார்
அவர் கர்வம் அடக்க சிவனே வந்தார்
ஒரு கட்டத்தில் வந்தது சிவனே என தெரிந்தும் தன் பிடியில் உறுதியாக நின்றார்
அன்னையின் கூந்தலுக்கு மட்டுமே இயற்கை நறுமணம் உண்டு. அது ஞானியாகிய நக்கீரருக்கும் தெரியும். அன்னை மல்லிகையின் மணமாய் இருகின்றாள் எனும் தத்துவமும் தெரியும்
ஆனால் அவர் கர்வம் விடவில்லை, உண்மையினை மறுத்து தன் கர்வத்தில் நின்றார்
அந்த கர்வத்தைத்தான் எரித்தார் சிவன், கர்வம் நீங்கி புது மனிதனாய் சிவனை பணிந்தார் நக்கீரர்
அக்காட்சி நக்கீரர் சிவனையே அஞ்சாமல் எதிர்த்தார் என்பதல்ல தன் கர்வத்தை அவனிடமே காட்டினார் என்பது
அந்த மதுரை திருவிளையாடல் தருமி சொன்ன பாடல் காட்சி ஸ்ரீசைலம் சிவாலயத்தினை பற்றியது, சிவனும் அன்னையும் மல்லிகார்ஜூனராக வண்டுகள் சுற்றும் ப்ரமரம்பா என அன்னையும் நிற்கும் ஆலயத்தை பற்றியது
ஆனால் எல்லோரும் தருமி, பாடல், பெண்களின் கூந்தலுக்கு மணம் என்பதோடு நிறுத்திவிடுவார்கள், நக்கீரர் சிவனை கேள்விகேட்டார் எனபதோடு நிறுத்துவார்கள்
அதன் உண்மை பொருளை சொல்வாரில்லை
மல்லிகையில் மணம் என்பது இன்னும் ஆழமான தத்துவம், நறுமணம் மிகுந்த மல்லிகை மணத்தை ஆழமான மூச்சுடன் இழுத்து பார்த்தல் இயல்பு
அந்த மூச்சுபயிற்சியில் இறைவனை காணலாம் அந்த மூச்சினை அடக்கும் கலையில் இறைவனை காணலாம் என்பதே உச்ச தத்துவம்
மதுரை சென்பக பாண்டியன் ஸ்ரீசைலம் ஆலயத்தையும் அதன் தத்துவத்தையும் மனதில் வைத்து கேட்ட கேள்வி அக்காலத்தில் சரியாகத்தான் புரிந்துகொள்ளபட்டது
பிற்காலத்தில்தான் திசைமாறி சென்றுவிட்டது
மதுரையில் நடந்த ஒவ்வொரு திருவிளையாடலும் ஓராயிரம் தத்துவத்தை போதிப்பவை அங்கே அழிந்தது ஹேமநாத பாகவதர் அகந்தைமட்டுமல்ல நக்கீரரின் அகந்தையுமே
இந்துக்களின் ஒவ்வொரு புராணம், ஒவ்வொரு வரி, ஒவ்வொரு சம்பவமும் ஆயிரமாயிரம் தத்துவங்களை கொண்டது, தருமி பொற்கிழிபெற்ற புராணமும் அப்படியானதே
இப்படியெல்லாம் பல நிகழ்வுகளுக்கு காரணம் அந்த ஸ்ரீசைலம் ஆலயம், அந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்திருகின்றது
அந்த மல்லிகார்ஜூனரும் அன்னை ப்ரமராம்பாவும் இந்த தேசத்தை முழுக்க காக்கட்டும், எல்லா மக்களுக்கும் எல்லா நலமும் அருளும் வழங்கி காக்கட்டும்.