சென்னிமலை முருகன் ஆலயம்
குன்றிருக்கும் இடமெல்லாம் மலை இருக்கும் இடமெல்லாம் முருகப்பெருமானை நிறுத்தினார்கள் இந்துக்கள், இதற்கு சில முக்கிய காரணங்களும் இருந்தன
விளக்கினை ஏற்றினால் உயரத்தான் வைப்பார்கள், ஒரு அரசனின் கொடி உயரத்தான் பறக்க வேண்டும், எது சிறந்ததோ எது பெருமைமிகு அடையாளமோ அதை உயரவைப்பதுதான் இந்துக்கள் மரபு கோபுர கலசம் போல
அப்படி முருகப்பெருமானை மலைமேல் வைத்தார்கள்
அதிலும் இரு விஷயம் இருந்தது முதலாவது மலை ஏறி இறங்குவதில் உடல்பயிற்சி இருந்தது, சுத்தமான காற்று இருந்தது ஆரோக்கியம் கைகூடிற்று
இரண்டாவது மலைகளில் தியானம் எளிதாகும், மனம் ஒருமுகபடும் என்பதால் அதை சூட்சுமமாக செய்தார்கள்
இப்படி நிறுவபட்ட முருகப்பெருமான் ஆலயங்கள் மலை இருக்குமிடத்திலெல்லாம் உண்டு, அப்படி அமைந்த ஆலயங்களில் ஒன்றுதான் சென்னிமலை
அதன் வரலாறு சங்க காலத்துக்கும் முந்தையது தொன்மையானது, அக்காலத்தில் சோழர்களின் மேற்கு எல்லையாக இருந்த இப்பகுதியில் விஜயாலய சோழனால் கட்டபட்ட ஆலயம் அது
அதுவும் அந்த சிலை மேல் பாதி அழகாகவும் கீழ்பாதி ஒழுங்கற்றும் உள்ள அமைப்பை கொண்டது, பூமியில் புதைந்திருந்த அச்சிலையினை பசு ஒன்று தானே பால் சுரந்து அடையாளம் காட்டியதாகவும் அதன் பின்பே மீட்கபட்ட சிலை அந்த ஆலயத்தில் ஸ்தாபிக்கபட்டதாக வரலாறு உண்டு
இன்றும் அந்த சிலை சென்னிமலை ஆலயத்தில் உண்டு
மனிதனின் முற்பகுதி வாழ்வு ஒழுங்கற்று இருந்தாலும் ஒரு இலக்கற்று இருந்தாலும் பிற்பகுதியில் மெல்ல மெல்ல அவன் இறைவடிவத்தை பெறவேண்டும் என்பதுதான் சிலைதத்துவம்
மனிதன் அலங்கோலத்தில் இருந்து திருகோலத்துக்கு மாறவேண்டும் எனும் போதனையினை அச்சிலை சொல்கின்றது
முருகப்பெருமான் தான் தேர்ந்துகொண்ட அத்தலத்தில் ஏகபட்ட அதிசயங்கள் நடந்தன, அங்குள்ள மங்கள தீர்த்தம் அதிசயமானது
மகமாகம் காலத்தில் கடும் வறட்சியிலும் அது தானே பொங்கி வழியும், இன்றுவரை அந்த அதிசயம் உண்டு, சிவலிங்க சோழன் எனும் சோழமன்னன் நோயுற்றிருந்தபோது அந்த நீரில் குளித்து சுகமடைந்த வரலாறு குறிப்பால் உண்டு
இப்படி பெரும் அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த அக்கோவிலில்தான் “கந்த சஷ்டி கவசம்” அரங்கேறிற்று
பாலதேவராயர் எனும் கவிஞருக்கு பெரும் நோய் உண்டாயிற்று, முருகபக்தரான அவர் கடைசியில் திருசெந்தூர் முருகனிடம் அடைக்கலமானபோது அந்த நோய் தீர்ந்தது
அப்படி நோய் தீர்ந்த நன்றியில்தான் “சஷ்டி கவசம்” எழுதினார், அதை அரங்கேற்ற சென்னிமலைதான் சரியான இடம் எனும் உத்தரவு முருகபெருமானிடம் இருந்தே கிடைத்தது
ஆம், அங்கேதான் முதன் முதலில் கந்த சஷ்டி கவசம் பாடபட்டது. இன்று முருகபெருமானுக்குரிய தனிபெரும் பக்திபாடலாக இருக்கும் அந்த பாடல் அங்குதான் அரங்கேறிற்று, அங்கிருந்துதான் உலகுக்கு கிடைத்தது
இந்த பிரதேசங்கள் கொஞ்சகாலம் மைசூர் சமஸ்தானத்தில் இருந்தபோது அம்மன்னர்கள் செய்த திருபணிகளும் நிறைய இருந்திருகின்றது
முருகபெருமான் தலம் எப்போதும் சித்தர்களோடுதான் விளங்கும், அப்படி சித்தர்கள் வந்து உருவாக்கவில்லை என்றால் முருகபெருமானே ஒரு சித்தரை உருவாக்கி தன் ஆலயத்தோடு வைத்துகொள்வார்
அப்படி சென்னிமலையிலும் பல சித்தர்கள் உருவானார்கள், அப்படி உருவானவர்தான் நிலதம்பிரான்
அவரின் பூர்வீகம் தெரியவில்லை எங்கிருந்தோ வந்தவர் 17ம் நூற்றாண்டில் அங்கு ஒரு பண்ணையாரிடம் வேலைக்காரனாக சேர்ந்து பின் முருகனுக்கும் பணிவிடைகள் செய்து வந்தார்
கொஞ்சம் கொஞ்சமாக முருகபெருமானால் ஈர்க்கபட்டு அவரின் அடியாராகவே மாறிபோனார், முருகபெருமானின் அருள் அவரில் பொங்கி வழிய பல அற்புதங்களை அவர் செய்தார்
அப்போதுதான் மலையின் கீழ் இருக்கும் கயிலாசநாதன் ஆலயத்தை மேம்படுத்தி மலையின் மெலிருக்கும் மயிலாசநாதனுக்கு மண்டபமும் கட்ட தீர்மானித்தார்
அது ஆங்கிலேய ஆட்சிகாலம் என்பதால் மரம் வெட்ட பிரிட்டிசாரின் அனுமதி அவசியம்
ஆனால் அனுமதியின்றி வெட்டிகொண்டிருந்தார் தம்பிரான், இதை அறிந்த ஆங்கில அதிகாரி “அனுமதி எங்கே?” என கேட்டான்
“சென்னியப்பன் அனுமதிதந்தபின் யார் அனுமதி எனக்குவேண்டும்” என சொல்லி தன் ஆட்களோடு மரம் வெட்ட தொடங்கினார்
“முரடனே, உன்னை இப்போதே கைது செய்கின்றேன்” என அதிகாரி உத்தவிட்டபோது உரக்க சிரித்தார் தம்பிரான்
“ஏன் சிரிக்கின்றாய் உனக்கு பைத்தியமா?” என்றான் அதிகாரி
“பைத்தியம் எனக்கில்லையப்பா உன் மனைவிக்கு வீட்டுக்கு சென்றுபார்” என சொல்லிவிட்டு மரம் வெட்ட தொடங்கினார்
அதிர்ந்தவன் வீட்டுக்கு ஓடினான் அங்கு மனநிலைபாதிக்கபட்ட நிலையில் இருந்தாள் பிரிட்டிஷ்காரி
நடந்ததை உணர்ந்தவன் நிலதம்பிரானை ஓடிவந்து பணிந்தான் “அஞ்சாதே சென்னியப்பன் குணமாக்குவான்” என்ற அவனை ஆற்றுபடுத்திய தம்பிரான் அவன் மனைவிமெல் விபூதியினை பூச அவள் குணமானாள்
அதன்பின் அவர் எதை விரும்பினாலும் செய்யட்டும் என கைகட்டி ஒதுங்கிகொண்டான் அதிகாரி, ஏகபட்ட நிதிகளும் கொடுத்தான்
தடை நீங்கியபின் தான் விரும்பியவாரே மலையில் மண்டபமும் கீழே சிவாலயத்துக்கு மதில்சுவரும் கட்டினார் சித்தர்
அவர் அதற்கு கூலி கொடுத்த கதைதான் ஆச்சரியம்
பக்தர்களிடம் தனக்கு பொரிவாங்கி வரசொல்வார், அவர்களும் பொட்டலமாக தருவர்
திருப்பணி செய்யும் கூலியாட்கள் மாலை வரும்போது அந்த பொட்டலத்தை பிரித்து ஒருபிடி பொரி அள்ளி கைக்குள் மூடி திறப்பார்
அது தங்கமாகும் அதுதான் கூலி
இப்படித்தான் அந்த பிரமாண்ட திருபணிகளை அவர் செய்துமுடித்தார், வாழும் காலம் வரை பெரும் அற்புதங்களை செய்தவர் அங்கேயே சமாதியும் கொண்டார்
இப்போதும் அவர் அங்கு உலாவிகொண்டிருப்பது கண்கூடு
உலகின் முருகபெருமான் திருதலலங்களில் அற்புதங்கள் நிறைய அன்றும் இன்றும் என்றும் நடப்பது அந்த சென்னிமலையில்தான்
மலையில் இருக்கும் புண்ணாக்கு சித்தர் சமாதி இன்னும் விஷேஷம், அங்குள்ள குகையில் நீண்டகாலம் தவம் செய்த அவரின் அருளாசி அங்கு செல்லும் பக்தர்களுக்கு எக்காலமும் உண்டு
அந்த கோவில் அதிசூட்சுமமானது அனுதினமும் நடக்கும் அற்புதங்கள் ஏராளம்
சமீபத்தில் கூட காளைகள் வண்டி இழுத்து மலைக்கு செல்வதும், ஒரு காளை முதுகில் சுமந்த பூஜை பொருட்களுடன் மலை ஏறும் நிகழ்வும் நடந்தது
அந்த காளை இப்போதும் அப்படி சுமக்கின்றது என்கின்றார்கள்
இதெல்லாம் என்றோ வாழ்ந்த அடியார்களின் மறுபிறவியாக இருக்கலாம், எஞ்சிய கர்மத்தை வந்த பிறப்பாக இருக்கலாம்
கொங்குமண்டலம் எனும் தமிழக தென்மேற்கு பிரதேசத்துக்கு செல்வோர் இந்த ஆலயத்தை தவறாமல் தரிசியுங்கள், எல்லா நலமும் உங்களை அடையும் அது சத்தியம்
முருகபெருமான் சாட்சாத் காலம் காலமாக நின்று பேசும் இடம் அது, சித்தர்கள் சூழ அவர் அருளாசி வழங்கும் இடம் அது
அதனால் தவறவிடாமல் வழிபடுங்கள் எல்லா நலமும் சூழும்
குறிப்பாக நோயுற்றிருப்பவர் அந்த ஆலயத்தில் கந்த சஷ்டி கவசம் பாடினால் நோய் தீரும் என்பது நம்பிக்கை, ஏகபட்ட சான்றுகள் உண்டு, நம்பிக்கையுடன் அதை செய்தால் நலம் விளையும்
தேவையிருப்போர் சென்று நலம்பெறட்டும், மற்ற வேண்டுதல் வேண்டுவோரும் சென்று வாங்கிவரலாம் முருகனிடம் எல்லாரின் தேவைக்கும் அருள் உண்டு
மேற்கு மண்டலத்தின் இன்னொரு முக்கிய ஆலயம் மருதமலை ஆலயம்
அந்த இடம் அக்காலத்தில் சேரநாட்டு பகுதி அப்போதே அங்கு முருகப்பெருமான் வழிபாடு இருந்திருக்கின்றது, அங்கிருக்கும் முருகனும் சுயம்புவாக தோன்றியவர்
முருகப்பெருமானின் திருவுருவம் சுயம்புவாக தோன்றிய ஒரே இடம் இதுதான்
முப்புரமும் மலை சுழ்ந்து மயில் தோகை விரித்ததுபோல் காணப்படும் அந்த மலையில் பின்னாளில் ஆலயம் வந்தது, ஒரு சித்தர்தான் அதனை கண்டறிந்து மக்களுக்கு கொடுத்தார் என்பது ஐதீகம்
அந்த சித்தர் மருதமரங்கள் நிறைந்த இந்த மலையில் மூலிகைகள் தேடி சென்றபோது ஒரு நீருற்றை கண்டார், அந்த நீருற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதை அறிந்தார், அப்போதுதான் அதன் அருகில் இந்த சுயம்பு முருகப்பெருமான் இருப்பதும் தெரியவந்தது
முருகபெருமானை தரிசித்து இந்த மருத்துவநீரில் மக்கள் நலம்பெறட்டும் என பலநூறு ஆண்டுக்கு முன்பு அவர் செய்த ஏற்பாடுதான் மருதமலை தலத்துக்கு தொடக்கமாயிற்று
அந்த நீருற்று இப்போதும் உண்டு
அது முன்பு சேரநாட்டோடு இருந்ததால் சபரிமலையின் சில சாயலும் முன்பு இருந்திருக்கின்றது அதன் சில அம்சங்கள் இன்றும் உண்டு
மிகசிறிய ஆலயமாக இருந்த அந்த ஆலயத்தை முதலில் பெயர்பெற வைத்தவர் பாம்பாட்டி சித்தர், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான அவர் அங்கேதான் குடியிருந்தார்
அவரை முருகப்பெருமான் நாகவடிவில் ஆட்கொண்டார் அக்குகை இன்றும் அங்கு உண்டு அதன் அருகில்தான் சித்தரின் ஜீவசமாதி உண்டு
பொதுவாக சித்தர்கள் இன்றி முருகன் ஆலயம் அமைந்திருக்காது, அந்த சித்தர்களுக்கும் நாகலோகங்களுக்கும் தொடர்பு இல்லாமலும் இராது
சித்தர்கள் மக்கள் நல்வாழ்வு வாழ, ஆரோக்கியமான வாழ்வு வாழ விரும்பியவர்கள் அதனால் பல மருந்துகளை இன்னும் நலம் காக்கும் வழிகளை மக்களுக்கு கொடுத்துகொண்டே இருந்தார்கள்
அந்த மருத்துக்கும் தேக ஆரோக்கியத்துக்கும் நல்ல சிந்தனைக்கும் நாகலோக அருள் அவசியம், நாகலோக அருள் இன்றி பல விஷயங்கள் நடக்காது
இந்த அருளை வாங்கி கொடுத்தவர் பாம்பாட்டி சித்தர், அவர் பாம்புபிடித்தார் , குண்டலினி பாமபினை எழுப்பினார் என்பதெல்லாம் இரண்டாவது
முதல் விஷயம் அவருக்கும் நாகலோகத்துக்கும் ஒரு தொடர்பு இருந்திருக்கின்றது அந்த தனி அருளை அந்த ஆலயத்தில் ஸ்தாபனம் செய்து அவரும் அமர்ந்துகொண்டார்
இந்த அருள்தான் மருதமலையில் தனித்து நிற்கின்றது
கோயம்புத்தூரின் அடையாளம் மருதமலை அன்றி எதுவுமல்ல, அதுதான் அந்த நகரின் மகா முக்கிய அடையாளம் அன்றிலிருந்து இன்றுவரை அதுதான் தனிசிறப்புமானது
கோயம்புத்தூர் பகுதி பலவழிகளில் சிறப்பானது, அங்கு பெரும் ஆறுகள் இல்லை, பெரும் துறைமுகம் இல்லை ஆனாலும் தொழில்வளர்ச்சியும் பல அம்சங்களும் கைகூடி முன்னணியில் நிற்கிற்தென்றால் அதற்கு மருதமலை முருகனின் தனி அருளும் காரணம்
சினிமா தயாரிப்பாளரும் , எம்ஜிஆர் அவகளே தன்னை வாழவைத்த தெய்வம் என வணங்கியவருமான சின்னப்ப தேவர் அக்கோவில் மேல் தனி அன்பு கொண்டிருந்தார்
மருதமலை முருகப்பெருமானும் அவர்மேல் தனி கருணை கொண்டு அவரை எங்கோ உயர்த்தினார்
அப்படி ஒரு அடியார் பெயர் நமக்கு தெரியும், இன்னும் எண்ணற்ற அடியார்கள் பக்திமான்கள் இருக்கலாம் அது வெளியில் தெரிந்திருக்காது ஆனால் லட்சகணக்கானோர் உண்டு
மலைமேல் தேரோடும் ஒரே முருகப்பெருமான் ஆலயம் அதுதான், பிரமாண்ட முருகன் தேர் அங்கு மட்டுமே மலைகோவிலில் உண்டு
மருதமலை என்பது பாம்பாட்டி சித்தரின் தனி அருள் பெற்ற இடம், அங்கு சென்றுவந்தால் ஒரு தெளிவும் , மனகுழப்பம் நீங்கி தீர்க்கமான சிந்தனையும் வரும்
அது உண்மை, அப்பக்கம் செல்வோர் தவறவிடகூடாத ஆலயம் அது
சென்னிமலையும் மருதமலையும் பலவழிகளில் சக்திவாய்ந்தவை, பெரும் அற்புத ஸ்தலங்கள், மகா முக்கியமான சக்தி மையங்கள், சித்தர்களின் அருளால் இன்னும் மகா சக்தியினை யந்திரமாக தொடர்ந்து வழங்கும் அற்புதமான இடங்கள்
அவை சக்திமையங்கள், அந்த சக்திதான் முருகபெருமான் அருளில் பக்தர்கள் பெற்றுகொண்டிருக்கின்றார்கள், சஷ்டி நாட்களில் இந்த ஆலயத்து முருகனையும் தியானித்து வணங்கலாம், பெரும் பலன் நிச்சயம் உண்டு.