சபரிமலை
அந்த மலை ராமனின் மிகபெரிய பக்தையான சபரி என்பவள் வாழ்ந்த மலை அவள் பெயராலே சபரிமலை என்றாயிற்று
ராமாயணம் என்பது பெண்களின் கண்ணீர் தீர்க்கவந்த ஒரு அவதாரத்தின் கதை, அந்த அவதாரம் முழுக்க ராமபிரான் ஏகபட்ட பெண்களின் கண்ணீரை தீர்த்து சாபவிமோசனம் கொடுத்து வந்தார், அதில் ஒருத்தித்தான் அந்த சபரி
அந்த சபரிமலை எனும் புனிதமான மலையில் பின்னாளில் மகிஷி எனும் அரக்கி ஆட்டம் போட ஆரம்பித்தாள், அவள் மகிஷன் எனும் எருமைதலையனின் சகோதரி, அவனை அன்னை பராசக்தி வதம் செய்தபின் மகிஷி மிகபெரிய வரம் வாங்கி தன் அட்டகாசத்தை ஆரம்பித்தாள்
ஆம், ஆணுக்கும் ஆணுக்கும் பிறக்கும் பிறப்பு ஒன்றே தன்னை அழிக்க முடியும் என்பது அவள் வாங்கிய வரம்,அப்படி ஒரு பிறப்பு எக்காலத்திலும் சாத்தியமில்லை என்பதால் இஷ்டத்துக்கு ஆடினாள்
அவளை அழிக்க சிவனும் விஷ்ணுவும் தங்கள் சக்தியின் ஒரு பாதியினை கொடுத்து ஒரு குழந்தையினை உருவாக்கினர், இது முருகபெருமானின் அவதாரம் போன்றது.
இரு பெரும் சக்திகள் இணைந்து உருவாகி காட்டில் குழந்தையாகக் கிடந்த ஐயப்பனை கேரள மன்னன் தன் வீட்டில் வளர்க்க ஆரம்பித்தான்.

ஐயப்பனே அந்த அரசின் வாரிசாக வளர்ந்து வந்தான் காரணம் மன்னனுக்கு அப்பொழுது குழந்தை இல்லை
அந்த கேரள மன்னனுக்கு இன்னொரு குழந்தை பிறக்கவே மன்னனின் மனைவி தனக்கு பிறந்த மகனுக்கு முடிசூட்ட எண்ணி ஐயப்பனை தந்திரமாக கொல்ல அமைச்சர் துணையோடு திட்டம் தீட்டி கொல்ல துடித்தாள்
அந்த வஞ்சக திட்டத்தில் உருவானதுதான் ஐயப்பனை புலிப்பால் கொண்டுவர காட்டுக்கு அனுப்பும் திட்டம்
ராணி தலைவலியால் துடித்தது போல் நடித்தாள், அமைச்சன் திட்டபடி புலிபாலால் மட்டும் இது குணமாகும் என வைத்தியனும் சொல்ல புலிபாலுக்காய் கானகம் புகுந்தான் அந்த ஞான சிறுவன்
அதுவும் படையோடு சென்றால் புலி சிக்காது என தனியே வஞ்சகமாக அனுப்பபட்டான்
ராமனாவது காட்டில் தன் தம்பியோடு சுற்றினான், அய்யப்பனோ சிறிய வயதில் தனியே சென்றான், அந்த காடு மகிஷியின் காடாய் இருந்தது
அவள் அய்யப்பனை கொல்ல துடிக்க பெரும் புத்தம் நடந்தது, புலிபாலுக்காய் சென்ற அய்யப்பன் மகிஷியினை வதம் செய்து அழித்தான், அவள் அழியவும் தேவர்கள் வந்து அவனை வாழ்த்தினர் சிவனும் விஷ்ணுவும் வந்து அவன் அவதார நோக்கத்தை சொல்லி அவன் காலம் நெருங்குவதை சொன்னார்கள்
இந்திரன் புலியாக இதர தேவர்களும் புலியாக , புலியின் மேல் அமர்ந்து புலிகூட்டத்துடன் அரண்மனை புகுந்தான் அய்யப்பன், அவனை வணங்கிய ராணி தன் தவறை ஒப்புகொண்டு மனம் திருந்தினாள்
தனக்கு சபரிமலையில் கோவில் கட்டும்படியும், மகரத்தில் சூரியன் உதிக்கும் நாளில் தான் ஜோதிவடிவில் அவர்களுக்கு ஆசி வழங்குவதாகவும் சொன்ன அய்யப்பன் வில் எடுத்து அம்பு வீசி இடத்தை குறித்தான், அதில் அமைந்ததுதான் அய்யப்பன் கோவில், அதன் எதிரே இருக்கும் பொன்னம்பல மேடுதான் இன்று மகர ஜோதி ஏற்றுமிடம்
இதுதான் சபரிமலை வரலாறு
இது பன்னெடுங்காலத்துக்கு முன்பு நடந்த அவதார நிகழ்வு, இதன் காலமெல்லாம் மிக மிக பழமையானது
இதன் பின் கேரளத்தில் பவுத்தமும் சமணமும் தலைவிரித்தாடின, பல இந்து ஆலயங்களின் வடிவமெல்லாம் மாறின, என்னவெல்லாமோ திரிபுகள் வந்தன, சபரிமலை பெயரும் ஆலயமும் கூட குழம்பிற்று
அந்த அவதார அய்யப்பனை வளர்த்த குடும்பத்தில் அய்யன் நினைவாக பலருக்கு அய்யப்பன் என்ற பெயர் இருந்தது, அப்படி ஒரு அய்யப்பன் பின்னாளில் சபரிமலையினை புத்த கோஷ்டியிடம் இருந்து மீட்டெடுத்தான்
ஆதிசங்கரர் தொடங்கி வைத்த சைவ புரட்சிக்கு பின் அது நடந்தது, அதை மீட்டெடுத்தவன் ஒரு அய்யப்பன் என்கின்றது வரலாறு
இதன் பின் நெடுகாலம் சிக்கல் இல்லை என்றாலும் பின்னாளில் சில அராபிய தொடர்புகளால் அங்கிருந்த மார்க்கமும் வந்தது, அது 7ம் நூற்றாண்டிலே கேரளாவுக்கு வந்தது
அதன் பின்புதான் பள்ளிவாசல் வந்தது
மற்றபடி அந்த அவதார அய்யப்பனுக்கும் வாவருக்கும் சம்பந்தம் இல்லை, வாவர் என்பது ஜாபர் என்பதன் திரிபு.
ஏதோ ஒரு காரணத்துக்காக நிறுவபட்ட பள்ளிவாசல் அது, பல காரணங்கள் இருந்திருக்கலாம்
ஆனால் காலத்தால் மிக மூத்த அவதாரமான ஐயப்பனும் 7ம் நூற்றாண்டுக்கு பின் வந்த இஸ்லாமியர் ஜாபரும் நண்பர்கள் என்பது பொருத்தமற்றா அர்த்தமற்ற கூற்று
இதற்கும் அய்யப்பன் அவதார வரலாற்றுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை
அய்யப்பன் அவதாரம் மகிஷி எனும் அரக்கியினை அழித்து போட்டது என்றாலும் அது போதிக்கும் தத்துவவிதார்த்தம் அருமையானது
அதை சபரிமலைக்கு செல்லும் கட்டுபாடுகளோடு சொன்னால் மிக அழகாக புரியும்
ஆம் ஒரு ஆணுக்கு வரும் மிகபெரிய மயக்கங்களில் ஒன்று பெண்ணாசை, ஆசைகளிலெல்லாம் அது கொடிய
ஆசை
பெண்ணிடம் மயங்கும் ஒருவன் அந்த போதையில் அறம் மறந்து, அறிவு மறந்து, தன் குலம் மறந்து புகழ் மறந்து நிலை தடுமாறி சரிவான், அவனால் ஒரு காலமும் தெளிவு பெறமுடியாது , தெளிவில்லாதவன் இறைவனை அடைய முடியாது
ராவணன் இதற்கு மிகபெரும் உதாரணம், மாபெரும் சிவபக்தனான அவன் ஒரு பெண்ணால் சரிந்தான்
விஸ்வாமத்திரர் மேனகையிடம் விழுந்து அவர் பட்ட சிரமம் யாரும் அடையமுடியாதது, பெண் மயக்கம் என்பது உலக மயக்கங்களிலே கொடுமையானது
இவ்வளவுக்கும் பெண்கள் ஒரு சாதாரண மானிட பிறப்பே, ஆனால் உலகமே அவள் என்றும் சொர்க்கமே அவள் என்றும் ஒரு மாயை மனிதனை ஆட்டி வைக்கின்றது, அந்த மாயையினை வெல்லல் வேண்டும்
பெண்ணாசையினை வெல்வது எப்படி என்பதே அய்யப்ப பக்தி சொல்லும் மாபெரும் தத்துவம்
இதனாலே அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் அனுமதிக்கபடுவதில்லை, அதற்கு பெண்ணடிமை தனம் என்றோ பெண்ணை விலக்கி வைத்தல் என்றோ பொருள் அல்ல
பெண்களுக்கு தனி ஆலயமே அமைத்து பெண்களை எல்லா கோவில்களிலும் அனுமதிக்கும் இந்துமதம், இந்த கோவிலில் மட்டும் ஆண்கள் நற்பயிற்சி பெற ஒரு ஏற்பாட்டை செய்தது
அந்த பயிற்சிதான் ஆண்கள் கார்த்திகை விரதம் என சொல்லபட கூடிய மாலை போட்டு அசைவம் தவிர்த்து, மது தவிர்த்து, பெண்களை தவிர்த்து கடும் குளிரில் வாடி செய்யும் மிக பெரிய பயிற்சி
மதுவும் அசைவ உணவும் மனிதனை புத்தி தடுமாற செய்பவை, அசைவம் உடலுக்கு கெடுதி மது புத்திக்கு கெடுதி இது இரண்டையும் எடுக்கும் மனிதன் தடுமாறுவான்
இதனால் அதை முதலில் களைய சொன்னது அந்த சபரிமலையின் கட்டுப்பாடு
மாதரார் உறவு என்பது மானிடன் வெல்லமுடியா மயக்கம், பசி தூக்கம் போல அது மகா அவசியமான ஒன்று என்ற அளவில் அது இங்கு வழமையாக்கபட்டிருகின்றது
ஆனால் முறையான பயிற்சி மூலம் அதை கட்டுபடுத்தலாம் என ரிஷிகள் சொன்னார்கள், அதை இறைவன் சிந்தனையில் மனதை செலுத்தி வெல்லலாம் என சொன்னார்கள்
காமத்தை வென்றவர்கள் இறைவனுக்கு நிகரானார்கள், அவர்களை சாமி என்றார்கள். இதனாலே சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு “சுவாமி” எனும் பெயர் உண்டாயிற்று
வேறு எல்லா கோவிலுக்கும் செல்பவன் பக்தன், சபரிமலைக்கு செல்பவன் “சுவாமி” என்பது இப்படி உருவானதே
ஆம் , சபரிமலை சாஸ்தாவின் நோக்கம் காமத்தை மனிதன் வென்று வேரறுத்து இறைவனுடன் இணைவது என்பதை போதிப்பதே, அதைத்தான் ஆண்டுதோறும் செய்கின்றார்கள் அய்யப்ப பக்தர்கள்
சரி, இதற்கு ஏன் மகரஜோதி எனும் பெரும் தீபம்?
விஷயம் வேறொன்றுமல்ல, காமம் எனும் பெரும் தீயினை நீ கடந்தால் உனக்கு இறைவன் எனும் பெருஞ்சோதி தெரிவார் என்பதே மகர ஜோதி தத்துவம்.
சபரிமலை அய்யப்பன் கோவில் என்பது பலவகை தத்துவங்களை கொண்ட ஞான ஆலயம் ஒன்றல்ல இரண்டல்ல அது சொல்லும் தத்துவார்த்த விளக்கங்கள், சொல்லும் செய்தி ஏராளம்
முதலாவது எந்த வரம்பெற்ற தீமை என்றாலும் பரம்பொருளால் அழிக்கபடும், இரு ஆண்கள் சேர்ந்து ஒரு குழந்தை பிறக்காது என மகிஷி நம்பினாள், அதை அழித்து போட்டான் பரம்பொருள்
அதிலும் சிவனும் விஷ்ணுவும் சேர்ந்தார்கள் என்ற கதை இருந்தது, ஆம் மிகபெரும் அழகியான மோகினி வடிவில் இருந்த பெண்வடிவில் சிவன் மயங்கினாராம்
இது சிவனே அழகிய பெண்ணில் மயங்கினார், ஆம் மன்மதனை எரித்த சிவனே பெண்ணின் அழகில் மயங்கினார் எனும் பொழுது மனிதர் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என குறிப்பால் சொன்ன செய்தி
மற்றபடி அய்யப்பன் பிறப்பு என்பது சிவனின் சக்தியில் முருகன் உதித்தது போல சிவன் சக்தியும் விஷ்ணு சக்தியும் இணைந்து உருவான பெரும் சக்தி, அதுவன்றி வேறல்ல
எல்லா சோதனைகளும் நல்லதற்கே என்பதற்கு அய்யப்பன் புலிபால் கொண்டுவர சென்ற காட்சியே சாட்சி, ராணிக்கு அந்த சோதனையினை கொடுத்திராவிட்டால் மகிஷவதம் நடந்திருக்காது
அய்யப்பன் வாழ்வில் நல்ல தாயினை பார்த்தவனுமில்லை, காட்டிலும் நல்லவளை கண்டவனுமில்லை இதனால் தன் ராஜ்யத்தையே உதறி புறப்பட்டான்
இது நல்ல பெண்கள் இல்லாத இடத்தில் வாழாதே என பக்தர்களுக்கு அவன் கொடுக்கும் மிக பெரும் எச்சரிக்கை, ஆம் நல்ல பெண்கள் இல்லாதோர் குடியிருக்கும் இடம் நாகங்களின் புற்றுக்கு சமம்
பெண் ஆசை என்பதை எளிதில் அறுக்கமுடியாது, அது இருக்கும்வரை ஆணின் மனம் தெளியாது, தெளியாத மனம் மேலும் மேலும் மோகத்தில் மூழ்கி அழியுமே அன்றி இறைவனிடம் சேராது
இதனால் பக்தர்களுக்கு பெண்ணாசையினை கட்டுபடுத்தும் பல பயிற்சிகளை அது கொடுத்தது, அந்த பயிற்சியில் உடல்நலமும் காக்கபட்டது
அதிகாலை எழுதல் உடலுக்கு தீங்கான மது மாமிச வகைகளை தவிர்த்தல், உடல் நலத்தை கெடுக்கும் மாதரார் உறவில் இருந்து விலகி இருத்தல் பிரார்த்தனையிலும் பாடலிலும் தியானத்திலும் மூழ்கி இருக்கும் பொழுது மனம் அமைதி அடைவதால் ஏற்படும் உற்சாகம் இவை மனிதன் மன உடல் ஆரோக்கியத்தை அதிகபடுத்துகின்றது
சபரிமலைக்கு ஏறி இறங்குவதால் அவனின் உடல் ஒரு சமநிலையின பெறுகின்றது , இதனால்தான் ஒருவருடம் மலை ஏறினால் அவ்வருடம் முழுக்க நோய் அண்டாது என்பார்கள், அது உண்மையாகவும் இருக்கின்றது, சாட்சிகள் ஏராளம்
ஆம் ஆண்களுக்கான உடல்நல மருத்துவமும் ஆரோக்கியமும் அங்கே இருக்கின்றது
அக்காலத்தில் அய்யப்ப பக்தர்களுக்கு உடல் நலத்துக்காக மன நலத்துக்காக யோக விஷயங்களும் கற்பிக்கபட்டன, அவ்வளவு ஏன் இன்றும் அய்யப்பன் அமர்ந்திருக்கும் வடிவம் கூட ஒரு யோக வடிவமே
இவை எல்லாம் காலபோக்கில் மறைக்கபட்டன அல்லடு மறக்கடிக்கபட்டன அவை மீட்டெடுக்கபடல் வேண்டும்
சபரிமலையில் நிச்சயம் அந்த ஐயப்ப சாஸ்தா குடியிருக்கின்றார், யாரெல்லாம் பெண்ணாசையினை துறந்து மிக கட்டுபாட்டோடு தன்னை நோக்கி வந்து 18 படிகள் கடந்து தன்னை அடைகின்றார்களோ அவர்களுக்கு அவர் அருள் புரிகின்றார்
18 படி என்பது வேறொன்றுமல்ல, 5 வகை புலன்கள், அந்த புலன்களால் வரும் 5 வகை ஆசைகள் , அன்னமய கோஷா முதனால 5 கோஷாக்கள், ரஜோ குணம், தமோ குணம் , சத்வ குணம் எனும் 3 குணங்கள் என 18 விஷயங்களை சொல்வது
இந்த 18 விஷயங்களையும் ஆழ கவனியுங்கள் இதுதான் ஒரு மனிதன் பெண்ணிடம் விழும் வாசல்
கண், காது, மூக்கு, மெய், வாய் என பெண்களின் உருவம் பார்த்தோ, இல்லை பெண்ணின் பார்வை பேச்சு உடல் என எதனாலோ அவன் விழுவான்
5 வகை கோஷா என்பது உணவு, சிந்தை, புத்தி, அறிவு என விளக்கபடுவது, இதிலும் பெண்களிடம் சிக்கியவன் உருப்படமாட்டான்
ரஜோ குணம் எனும் வீரர்களின் குணம் பெண்களுக்கு விருப்பமானது வெற்றிபெரும் ஒருவனிடம் பெண் மயங்குவாள் அவளிடம் கவனமாயிரு, தமோ குணம் எனும் சாந்த குணத்தானையும் பெண் விரும்புவாள் அப்படியே ஞானி என்பவனையும் அதிகம் விரும்புவாள்
இந்த 18 விஷயங்களிலும் எச்சரிக்கையாயிரு என்பதுதான் 18 படிகள் தத்துவம் அன்றி வேறல்ல
இதை கடந்தால் அவனுக்கு ஒரு வெற்றிடம் உண்டாகும், பெண் ஆசையின் இப்படிகளை கடந்தால் அந்த ஆசை இல்லா வெற்றிடத்தில் கடவுள் தெரிவார் என்பதே தத்துவம்
அதுவே பொன்னம்பலமேடு ஜோதியாகவும் தெரிகின்றது
அது பெண்ணாசையினை ஒழி உனக்குள் தெய்வம் எனும் மாபெரும் ஜோதி தெரியும் எனும் மாபெரும் பேரோளி தத்துவம்
பெண்ணாசை மறையும் இடத்தில் எல்லா நலனும் வளமும் செல்வமும் பலமும் தானே வரும், அதை அய்யப்பன் எனும் மாபெரும் அவதாரம் இன்னும் அதிகமாக வழங்குவார்
சபரிமலையி நிற்கும் பக்தர்களுக்கும், உலகெல்லாம் இன்று ஐயப்பனை வேண்டி நிற்கும் பக்தர்களுக்கும் அவர்கள் மாலை இட்டு விரதம் தொடங்கும் நாள் வாழ்த்துக்கள்
சபரிமலை என்பது ராமனனை கண்டு சபரி எனும் அந்த பெண் சாபம் நீங்கிய மலை, அந்த மலைக்கு ஆண்கள் பக்தியோடு சென்று வர வர நாட்டில் பெண்கள் பலவகை தொல்லைகளில் இருந்து விடுபட்டு மிக மகிழ்வாகவும் நலமாகவும் பயமின்றியும் வாழ்வார்கள்
அப்படியே ஆண்களும் மகிஷி போன்ற பெரும் அரக்க தன்மை கொண்ட பெண்ணின் நிழலும் தீண்டாமல் நிம்மதியான வாழ்வும் வாழ்வார்கள்
அதைத்தான் உரக்க சொன்னபடி சபரிமலையில் அமர்ந்து அருள்பாவித்து சொல்லி கொண்டிருக்கின்றார் அந்த தர்ம சாஸ்தா.
சாமியே சரணம் அய்யப்பா.