அட்ட வீரட்டானத் தலங்கள் 6

திருவழுவூர் – இளங்கிளை நாயகி சமேத கஜசம்ஹாரர்

அட்ட வீராட்டான தலங்களில் ஆறாம் தலம் வழுவூர் வீராட்டனேஸ்வரர் ஆலயம், மயிலாடுதுறை அருகில் இருக்கும் அந்த ஆலயம் மகா முக்கியமானது.

சத்யபுரி, கைலாசம், ஞானபூமி என அதற்கு பெயர்கள் உண்டு.

ஊழிகாலத்திலும் வழுவாத ஊர் என்பதால் வழுவூர் என்றும். எக்காலத்திலும் இங்கிருக்கும் சிவனை யாரும் அசைக்கமுடியாது, அவர் வழுவமாட்டார், பக்தர்களையும் வழுவவிடமாட்டார் என்பதாலும் இப்பெயர் வந்தது

தேவாரம் வைக்கப்பட்ட தலம் இது.

“உருத்திரகோடி மறைக்காட்டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானம் கேதாரத்தும்
வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகாவூர்
வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றியூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும்
கயிலாயநாதனையே காணலாமே”

“மேவிய வீரட்டானம் வழுவை வீரட்டம்
வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக்கு இடமாம்
கோவல்நகர் வீரட்டம் குறுக்கை வீரட்டம்
கோத்திட்டைக் குடிவீரட்டானம் இவை கூறி
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன்தமரும் சிவன்தமர் என்று அகல்வர் நன்கே.”

என அப்பர் பாடுகின்றார், அப்படியான தலம் இது.

அந்த ஈஸ்வரனுக்கு கிருத்திவாஸேஸ்வரர் என பெயர் உண்டு, கஜசம்ஹாரமூர்த்தி என அவர் அறியபடுகின்றார்,

அந்த ஆலயத்தின் வரலாற்றினை ஒவ்வொருவரும் அறிந்திருத்தல் வேண்டும்

அந்த தலத்தின் வரலாறு தருகாவனத்து ரிஷிகள் காட்சியில் இருந்து அதாவது சிதம்பரம் நடராஜ கோவில் சிவனின் நடன கோலத்தோடு தொடர்புபட்டது

தருகாவனத்து ரிஷிகள் கதை இதுதான்

அக்காலத்தில் 48 ஆயிரம் ரிஷிகள் கூடினர் தெய்வநிலை அடைய விரும்பிய அந்த‌ ரிஷிகள், தவத்தாலும் சித்துக்களினாலும் பலம்பெற்ற ரிஷிகள் தாங்களும் தெய்வமாகலாம், பரம்பொருளாகலாம் அதற்கு யாகம் போதும் கர்மம் போதும் அதை செய்தால் தாங்களும் தெய்வநிலையினை அடையலாம் என கடும் யாகம் வளர்த்தார்கள்

அதாவது தெய்வநிலையினை கர்வமாய் அடைய முயன்றார்கள்

இன்னும் தெளிவாக சொன்னால் வேதங்களின் யாகத்தை சரியாக செய்தால் தாங்களும் பெரும் சக்தி பெற்று கடவுளாகிவிடலாம் என அகங்காரத்தில் வேள்வியினை தொடங்கினார்கள்

யாக வேள்வியின் அவிர்பாகத்திலே இறைவன் வாழ்வதாகவும், அதை தாங்களே பெற்றுகொண்டால் அந்நிலையினை தாங்களும் எட்டலாம் என அவர்களாக அறியாமையில் கருதி பெரும் வேள்வி செய்தார்கள்

இந்த யாகத்தை அறிந்த பரம்பொருள் வழக்கமான பிச்சைகார கோலத்துடன் வந்து நிற்க, யாகத்தில் யாசகம் கேட்கும் ஆண்டிக்கு இடமில்லை என அவர்கள் வந்த பரமசிவனை விரட்டியும் விட்டார்கள்

அந்த ஆண்டிகோலத்து சிவன் தன் திருவிளையாடலை தொடங்கினார்

அவர்களால் விரட்டபட்ட சிவன், அதே ஆண்டி கோலத்தில் ரிஷிபத்தினிகளிடம் பிச்சை வாங்க சென்றார், இவர்கள் கண்ணுக்கு ஆண்டியாக தெரிந்தவர் அவர்கள் கண்களுக்கு பெரும் சுந்தரவடிவில் தெரிந்தார்

அவரின் அழகில் மயங்கிய முனிவரின் மனைவியர் அவரை பின் தொடர்ந்தனர், இதனால் அவமானபட்ட ரிஷிகள் வந்தது யாரென தங்கள் வரத்தால் காண சிவன் என தெரிந்தது

ஆனாலும் அவர்கள் கர்வம் அடங்கவில்லை , யாகத்தால் சிவனையே வெல்லலாம் என முடிவெடுத்தவர்கள் சக்தி மிக்க மந்திரம் மூலம் பெரும் யாகம் நடத்தி சிவன் தங்கள் யாகத்தில் இருந்து ஒதுங்கி விட பெரிய பெரிய சக்திகளை உருவாக்கி ஏவினார்கள்

முதலில் நெருப்பை ஏவினார்கள், வேள்வி நெருப்பை ஏவினார்கள், சிவன் அதனை தன் கையில் வைத்துகொண்டார்

பின் அதர்வண வேதத்தை ஒரு மான்போல செய்து ஏவினார்கள், அதையும் சிவன் தன் கரத்தில் வைத்து கொண்டார்

படைப்பின் தத்துவமும வேதங்களின் சாரமுமான ஓசையினை அனுப்பினார்கள், எது உலகை இயக்குமோ அந்த சக்தியினை அனுப்பினார்கள், சிவன் அதனை உடுக்கையாக வைத்து கொண்டார்

நாகலோகத்தில் இருந்த சக்தியினை அனுப்பினார்கள் சிவன் அதை மாலையாக அணிந்துகொண்டார்

முயலகன் எனும் கொடிய அரக்கனை அனுப்பினார்கள் சிவன் அவனை கீழே தள்ளி மேல் ஏறி கொன்று நர்த்தனமாடினார்

கடைசியாக தங்கள் சக்தியெல்லாம் திரட்டி எல்லா கொடிய விஷயங்களையும் கலந்து ஒரு யானை உருவ அசுரனை உருவாகினார்கள், கஜாசுரன் என அவனுக்கு பெயர்

கையாலத்தில் இருக்கும் சிவனை நோக்கி அவனை அனுப்பினார்கள், சில ஆலோசனைகளை சொல்லி அனுப்பினார்கள்

இதுதான் ரிஷிகளின் கடைசி முயற்சி என அறிந்த சிவன் அவர்களுக்கு ஒரு ஆட்டம் காட்ட விரும்பினார், அந்த கஜாசுரனும் சிவன் தன்னுள் இருக்கவேண்டும் என பணிந்து நின்றான்

ரிஷிகளின் உள்நோக்கம் அறிந்த சிவனும் யானை வயிற்றுக்குள் சென்று அமர்ந்துகொண்டார், உலகமே இருளில் மூழ்கியது, பெரும் குழப்பம் ஏற்பட்டது

அப்படியே யானை வயிற்றில் இருந்த சிவன் தன் வெப்பத்தை அதிகரிக்க அதிகரிக்க யானை அலறி துடித்து வீழ்ந்தது, அதன் வயிற்றை கிழித்து வெளிவந்த சிவன் , அந்த யானையின் தோலை உரித்து போர்த்தி கொண்டார்

கடைசி முயற்சியும் தோற்றதை அடுத்து ரிஷிகள் அவரை பணிந்தார்கள், கர்வத்தால் செய்யபடும் காரியத்தால் பலனில்லை, அகங்காரம் கொண்ட எந்த செயலும் பலனை தராது, தெய்வம் வந்து அகங்காரத்தை ஒழிக்கும் என உணர்ந்தவர்கள் சிவனை பணிந்தார்கள்

அவர்கள் அகங்காரம் அழிந்து போனது, ஆணவம் அகங்காரமும் உடைந்து போனது, கர்வம் அழிந்த அவர்கள் பின் சிவனை வழிபட்டு கயிலாயம் ஏகினார்கள்

அந்த பிச்சாண்டியோ தருகாவனத்து ரிஷிகள்

ஆத்திரமடைந்த முனிகள் மதயானை, உடுக்கை, மான் , தீ என எல்லாவற்றையும் ஏவி ஒரு அரக்கனையும் ஏவிவிட்டனர்

இதுதான் ஆருத்திர தரிசனம் என்பது, அச்சம்பவம் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் நடந்தது என்கின்றது புராணம் அதை நினைவு கூறி வழிபடுகின்றார்கள்

நடராஜ கோலமும் இதுதான்

இந்த காட்சி சிவபுராணத்தில் உண்டு, இன்னும் பாகவதம் உள்ளிட்ட சில புராணங்களில் உண்டு, பல இடங்களில் உண்டு

உஜ்ஜைனி மகாகாளேஸ்வர ஆலய சிவன் இந்த கோலத்தில் யானையினை உரித்த கோலத்தில்தான் இருப்பார் என்பது ஐதீகம்

இந்த சம்பவம் நடந்த இடம்தான் இந்த ஆலயம், அந்த தத்துவத்தின் சாட்சியாக எழுந்த ஆலயம் இது என்பதுதான் மிக சிறப்பு

இச்சம்பவம் கூறும் தத்துவம் என்ன?

ஆம் அன்றல்ல இன்றுவரை எல்லா மனிதனுக்கும் கடவுளாக உள்ளூர ஆசை இருக்கின்றது, தான் சார்ந்து நிற்கும் தொழிலிலும் இன்னும் பல இடங்களிலும் தானே கடவுளாக இருக்க வேண்டும் எனும் மமதையும் ஆணவமும் வருகின்றது

சில வெற்றிகள் அந்த ஆசை நெருப்பினை, ஆசை யாக நெருப்பில் நெய்யாக பெய்து ஆசை நெருப்பை பெரிதாக வளர்க்கின்றன‌

வெற்றிகள் கூட கூட ஆசை கொழுந்துவிட்டு எரிந்து தானே கடவுள் எனும் நிலைக்கு செல்கின்றது, அகங்காரம் அப்படி ஆசையினை பெரும் நெருப்பாக‌ எரிய வைக்கின்றது

சிவனின் ஆருத்திரா தரிசனத்தில் அவர் மேல் ஏவபடும் விஷயங்களை பாருங்கள் மத யானை, இது பெரும் ஆசைவெறி கொண்டதும் மூர்க்கமானதுமான மனதை குறிக்கின்றது

மான் என்பது பார்வைக்கு அழகானது கண்களால் கோரபடும் ஆசைகளை குறிக்கின்றது

நெருப்பு உணர்ச்சிக்கும், உடுக்கை என்பது செவிகளால் பெறும் இன்பத்தினையும் குறிக்கின்றது

அரக்கன் என்பவன் மனதின் அகங்காரத்தை குறிக்கின்றது

ஆம் இந்த மானிடன் மனதுக்கும் உணர்ச்சிக்கும் அடிமையாக கூடியவன். அதனால் மாயை அதிகரிக்கும் அந்த ஆசையே சகல பாவங்களுக்கும் உலக துன்பங்களுக்கும் அடிப்படை

புலன்களை அடக்கு மனதினை ஒடுக்கு இறைவன் தெரிவான்

எல்லா புலன்களையும் அடக்கி, ஆசையினையும் அடக்கி இறைவனிடம் சரண்டைதலே இறைவனை அடையும் வழி, மாறாக ஆசையினை யாகம் போல் வளர்த்தால் அது வளருமே தவிர ஞானம் கிடைக்காது

சிவன் எல்லாவற்றையும் அடக்கி வைத்து அகங்கார அரக்கனை ஒடுக்கி அதன் மேல் ஆடியது போல, சகல புலன்களையும் அடக்கினால் மனிதனும் தெய்வ நிலைக்கு உயர்த்தபடுவான் என்பதே

இங்கே கரிய யானை எதற்கு வந்தது என்றால் அதுதான் கவனிக்கதக்கது

யானை பெரியது, மிகபெரிய பலமிக்கது, கூரிய அறிவும் எதையும் மறக்காத குணமும் கொண்டது, மனிதன் சொல்வதை புரிந்துகொள்ளும் மனமும் பதிலை செயலால் செய்யும் குணமும் கொண்டது

அந்த மாயையினைத்தான் யானை வடிவில் சொன்ன காட்சி இது

மாய அகங்காரம் யானைபோல் வரும், இருள் போல் படரும், அது அறிவை மயக்கும் சிந்தனையினை கெடுக்கும், மிகபெரிய அளவில் வளைக்கும்

யானைபடை கொண்டிருக்கும் அரசன் அஞ்சுவதில்லை, யானை மேல் இருப்பவன் எந்த ஆபத்தையும் சிந்திப்பதில்லை, ஒருவித கர்வமும் அபார நம்பிக்கையும் யானை கொடுக்கும்

யானை என்பது அரசனின் வாகனம், பெரும் நம்பிக்கைகுரிய பலம்

அப்படி எது மிகபெரிய பலம் ஆற்றல் என நம்புகின்றோமோ அதுவே கர்வத்தை கொடுக்கும், என்னிடம் இவ்வளவு பலம் இருக்கின்றது, அவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது அதனால் எனக்கு என்னகுறை வரும் எனும் அகந்தை ஆபத்தானது

சிவன் கரிய யானையினை அழித்து போட்டார் என்பது அகங்காரத்தை ஒழித்தது

இன்னும் ஆழமாக சொல்லவேண்டும் என்றால் எப்படி பாற்கடல் கடையபடும்போது உலகின் நஞ்சினை சிவன் ஏற்றாரோ, அப்படி ரிஷிகள் செய்த யாகத்தினால் எழுந்த மிககொடிய விஷயத்தையெல்லாம் அவரே ஏற்றார்

கடைசியில் அந்த யானையினயும் ஏற்று அதனை உரித்து தோலை தன்னோடு போர்த்திகொண்டார்

இன்னும் விளக்கமாக சொல்லவேண்டும் என்றால் மனிதருடைய எல்லா அகங்காரகுணத்தினையும் தான் ஏற்று அவர்களின் எல்லா கொடிய குணங்களையும் தான் வாங்கி கொண்டு அவர்களை புனிதமாக்குகின்றார் சிவன்

இந்த தலம் அப்படி அகங்காரமும் பாவமும் நீங்கி புனிதமடையும் தலம்

சிவனிடம் நம் எல்லா துஷ்ட குணங்களையும் மன அழுக்கையும் இருளையும் சமர்பிக்கும் இடம்

இந்த தலத்தில் யானையின் தோலை கரிய நிறதோலை போர்த்திகொண்ட சிவன், நம் பாவ இருளையும் துஷ்ட அகங்கார குணங்களையும் ஏற்றுகொள்கின்றார்

சிதம்பரம் போலவே இங்கும் சில தனித்துவம் உண்டு

சிதம்பர ரகசியம் போல இங்கும் சில யந்திரங்கள் உண்டு, அவை மகா சூட்சுமமானவை, இங்கிருக்கும் சகஸ்கரலிங்கம் எனும் ஆயிரம் லிங்கம் பதிக்கபட்ட ஒரே லிங்கத்தை காண்பது மகா சிறப்பு

மிக மிக முக்கிய அதிசயம் அல்லது மகா சிறப்பு, உலகில் எங்குமே காணமுடியாத சிறப்பு என்னவென்றால் பகவானின் உள்ளங்காலை காண்பது

பொதுவாக சுவாமி தரிசனங்களில் உள்ளங்கையினை காணமுடியும் ஆனால் பாதங்களை உள்ளங்கால்களை எங்குமே காணமுடியாது

இங்கு யானையினை மிதித்து வெளிவந்தபோது அவர் காட்டிய பாதம் அப்படியே பக்தர்களுக்கு தரிசனமாகின்றது

இந்த உலகமே என் உள்ளங்காலுக்கு கீழ், எல்லாமே இந்த பாதத்தின் கீழ் என்பதை சொல்லும் தத்துவம் அது இது வேறு எந்த சிவாலயத்திலுமில்லை

அங்கு சென்று அந்த பாதம் நேர் தலையினை வைத்து வணங்கவேண்டும், அப்படி வணங்கும் போது நம் வினையும் அகங்காரமும் அகங்காரத்தால் தேடிகொண்ட எல்லா துன்பமும் வினையும் அகலும்

இது புராண கதை மட்டுமல்ல‌ விஞ்ஞானத்தோடும் ஒத்துபோகும் மிக சிறந்த ஆச்சரியம்

இந்த பிரபஞ்சத்தை பற்றி விஞ்ஞானம் சொல்வதும் அதுதான், ஒரு காலத்தில் இந்த பிரபஞ்சம் இருளில் மூழ்கியிருந்தது வெப்பமில்லை ஒளியில்லை என்பதால் எங்கும் இருளே படர்ந்திருந்தது

பனியுகம் எனும் கொடும்பனி காலம் அப்போது வந்தது

பின் மறுபடியும் ஒளி வந்து வெப்பம் வந்தபின்பே உயிர்கள் உருவாக தொடங்கின எல்லாம் சரியாயிற்று என்பது விஞ்ஞான வாதம்

அதைத்தான் யானை வயிற்றில் சிவன் இருந்தார் பின் வெளிவந்து அதன் கரிய நிற தோலை தான் எடுத்துகொண்டார் என்கின்றது இந்துமதம்

லவுகீகம், ஆன்மீகம் விஞ்ஞானம் என எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி விளக்கமும் சொல்லி காலகாலத்துக்கும் அற்புதமான மதம் இந்துமதம்

அந்த இந்துமதம் இங்கும், இந்த வழுவூர் அலயத்திலும் அப்படி போதிகின்றது

கர்வத்தால் ஆணவத்தால் மனிதன் இறைநிலையினை அடையமுடியாது, ஆணவமும் கரவமும் அகங்காரமும் நீங்கிய ஆனமா இறைநிலை அடையும் என்பது இத்தலத்தின் தத்துவம்

அந்த அகங்கார குனங்களை நஞ்சுண்ட எம்பெருமான் எடுத்து, பாற்கடல் நஞ்சினை தான் உண்டு எல்லோரையும் காத்த அந்த பகவான், அப்படியே இந்த தீமைகளை தான் எற்றுகொண்டு பக்தர்களை வாழவைக்கின்றார், ஆத்மத்தை தெய்வநிலை அடைய வைகின்றார் என்பதுதான் ஆலயமும் இந்த கஜசம்ஹார மூர்த்தி கோலம் சொல்லும் தத்துவம்

இந்த வழுவூர் ஆலயத்தின் மிக சிறப்பு, செய்வினை பில்லி சூனியத்தால் பாதிக்கபட்டோருக்கு நலம் அருளும் தலம்

பில்லி சூனியம் , ஏவல் , செய்வினை என்பதெல்லாம் பெரிதாக ஒன்றுமல்ல சில சூட்சும சக்திகளை பயன்படுத்தி ஒருவன் சிந்தனையினை குழப்புவது மனதில் இருளை ஏற்படுத்துவது

சிந்தையில் குழப்பமும் இருளும் கொண்டவன் முடங்குவான் ,இதுதான் செய்வினை கோளாறுகளின் பாதிப்பு

இந்த தலத்துக்கு வந்து அந்த உள்ளங்காலினை தரிசித்து பணிந்து நின்றால் , அந்த காலை நோக்கி தலையினை வைத்து வணங்கி நின்றால் அகங்காரம் அகற்றி கர்வம் அகற்றி இந்த பாதமே சரணம் என தலைமீது பாதம் காட்சிபடும்படி பணிந்து நின்றால் , சரண்டைந்து வீழ்ந்து தலையோடு ஏற்றுகொண்டால் எல்லா தீமையும் அகலும்

யார் என்ன ஏவியிருந்தாலும் எவ்வவித பில்லி சூனிய கோளாறு என்றாலும் அது நீங்கும்

ரிஷிகளின் யாகத்தில் இருந்துவந்த துர்சக்திகளை ஏற்று மனுகுலத்தை காத்த சிவன் உங்களுக்கு யார் எவ்வினை செய்திருந்தாலும் அதனை ஏற்று உங்களுக்கு விடுதலை தருவார்

சிதம்பரம் கோவில் போல தனித்துவம் வாய்ந்தது இந்த வழுவூர் வீராட்டான ஆலயம்

அங்கு செல்ல வாய்ப்பிருப்போர் தவறாமல் செல்லுங்கள், முக்கியமாக பில்லி சூனிய சிககல், துர் சக்திகளால் தொந்தரவு, தீய சக்தியின் பாதிப்புக்கள், எதிரிகளின் தீரா தொல்லை என நீங்கள் பாதிக்கபட்டிருந்தால் உங்கள் முயற்சி அனைத்தும் தோற்று நீங்கள் முடக்கும் நிலைக்கு வந்திருந்தா இந்த ஆலயம் சென்று ஓங்கிய பாதத்தில் முழுக்க சரண்டடையுங்கள்

தருகாவனத்து ரிஷிகளின் கர்வம் அடக்கிய சிவன், யானையினை கொன்று தோல் உரித்த சிவன் உங்கள் எதிரிகளையும் திருத்தி தருவார், உங்கள் பெரும் சிக்கல்களையும் அழித்து அந்த தீய சக்திகளை தன்னுள் ஏற்று உங்களை வாழவைப்பார் இது சத்தியம்.