அட்ட வீரட்டானத் தலங்கள் 8
திருக்கடவூர் (திருக்கடையூர்) – அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர்
அட்ட வீரட்டானத் தலங்களில் முக்கியமான தலம் திருக்கடவூர், அந்த ஆலயத்தின் தொன்மை காலத்தால் பழமையானது.


பிரம்மன் தன் பாவம் நீங்க வில்வமரங்கள் நடுவே இருந்து வழிபட்ட தலம் அது, வில்வவனம் என அதற்கு பெயர் உண்டு
தேவர்கள் மகா புனிதமான இடத்தில்தான் அமிர்த குடத்தை வைக்கவேண்டும் என தேடி இந்த தலத்தில் வைத்ததால் அதற்கு அமிர்த கடேஸ்வரர் ஆலயம் என்றொரு பெயரும் உண்டு
இந்த தலம் அகத்தியர் முதல் பலர் வந்து வணங்கிய தலம், பெரும் சிறப்புக்களை கொண்டது
தேவாரம் பாடபெற்ற தலம் அது
திருஞான சம்பந்தர் தன் மூன்றாம் திருமுறையினை இப்படி தொடங்குகின்றார்
“சடையுடை யானும்நெய் யாடலா னுஞ்சரி கோவண
உடையுடை யானுமை ஆர்ந்தவொண் கண்ணுமை கேள்வனுங்
கடையுடை நன்னெடு மாடமோங் குங்கட வூர்தனுள்
விடையுடை யண்ணலும் வீரட்டா னத்தர னல்லனே”
அப்பர் பெருமான் தன் நான்காம் திருமுறையினை இப்படி பாடி தொடங்குகின்றார்.
“பொள்ளத்த காய மாயப் பொருளினைப் போக மாதர்
வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் விரும்புமின் விளக்குத் தூபம்
உள்ளத்த திரியொன் றேற்றி உணருமா றுணர வல்லார்
கள்ளத்தைக் கழிப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே”
இன்னும் பாடுகின்றார்.
“மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவாள் எயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட வூருறை உத்தமனே”
ஐந்தாம் திருமுறையிலும் இந்த ஆலயம் உண்டு,
“மலைக்கொ ளானை மயக்கிய வல்வினை
நிலைக்கொ ளானை நினைப்புறு நெஞ்சமே
கொலைக்கை யானையுங் கொன்றிடு மாதலாற்
கலைக்கை யானைகண் டீர்கட வூரரே”
சுந்தரர் தன் பதிகத்தில் பாடுகின்றார், பொடியார் மேனியனே எனத் தொடங்கி 10 பாடல்கள் கொண்ட பதிகம் செய்துள்ளார்.
“பொடியார் மேனியனே புரிநூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வளர்கங்கையின் மங்கையொடுங்
கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்கார்துணை நீயலதே”
நாயன்மார்களில் குங்கிலிய கலயநாயனாரும், காரி நாயனாரும் இங்குதான் வாழ்ந்தார்கள். பல அதிசயம் பெற்றார்கள். அப்படியான சிறப்புக்களை கொண்ட ஆலயம் அது.
அபிராமி அந்தாதி இங்குதான் பாடபட்டது, தேவி வழிபாட்டில் மகா பிரசித்தியானதும் எக்காலமும் நிலைபெற்ற அந்த வழிபாட்டு பாடலை அபிராமிபட்டர் எனும் அந்த பக்தர் இங்குதான் பாடினார்
அன்னை சரபோஜி மன்னன் காலத்தில் தை அமாவசையினை பவுர்ணமியாக்கி பட்டர் உயிரை காத்த சம்பவத்தின்போது அபிராமி அந்தாதி எனும் மகா சிறந்த நூலை, சவுந்தர்ய லஹரியின் தழுவலை பட்டர் பாடிய தலம் இது
இந்த ஆலயத்தில்தான் சிவபெருமான் மார்கண்டேயனுக்காக எமனை மிதித்து தள்ளி காலசம்ஹாரமூர்த்தியாக விளங்குகின்றார்
அந்த கோலம்தான், எமனை அவர் விரட்டிய ருத்திர கோலம்தான் அட்ட வீராட்டான தலங்களில் இந்த ஆலயம் இடம்பெற காரணமாயிற்று
அதனை கொஞ்சம் ஆழமாக காணலாம்
இந்த காலனை சிவன் மிதித்த சம்பவத்தின் மூலம் மிருகண்டு ரிஷியிடம் இருந்து தொடங்குகின்றது, அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் அவரும் அவர் மனைவி விருத்தையும் ஒரு குழந்தைக்காக சிவனிடம் தவமிருந்தார்கள்
தன் திருவிளையாடல் திட்டத்தோடு அவர்களிடம் ஒரு நிபந்தனையினை சொன்னார் சிவன் , பதினாறு வருடம் வாழும் அறிவுள்ள மகன் வேண்டுமா இல்லை நூறுவருடம் வாழும் மூடனான மகன் வேண்டுமா? இரண்டில் ஒன்றுதான் தரமுடியும், உங்கள் கர்மவினை அப்படியானது என்றார்.
மிருகண்டு முனிவர் திகைத்தார், ஆனாலும் நிதானமாக சிந்தித்தார்
எல்லா உறவும் அறுபட கூடியதுதான் , தனக்கு பின் தன் மகன் என்றோ ஒருநாள் சாகத்தான் போகின்றான், என்றோ சாகபோகிறவன் 16 வயதுவரை அறிவாளியாக வாழ்ந்துவிட்ட்போகட்டும்
நீண்டநாள் வாழும் மூடனை பெற்று அவன் மூடதனத்தை பார்த்து நொந்தபடி சாவதைவிட, தான் பெற்ற மூடன் தான் இல்லா காலத்தில் எப்படி வாழ்வானோ என ஏங்கி சாவதை விட அறிவாளி மகன் கொஞ்சகாலம் வாழ்ந்தாலும் அந்த நினைவோடு சாவது நலம் என உணர்ந்தார்
தான் ஒரு முனிவன் முக்கியமாக சிவபக்தன், தனக்கு ஒரு மூடன் பிறந்து இந்த சிவனுக்குரிய கடமையின செய்யாமல் நீண்டநாள் வாழ்வதை விட அறிவுள்ள மகன் சிவபணி செய்துவிட்டு சிவபாதம் அடைவதை கண்டால் நல்லது என முடிவெடுத்தார்
அதனால் இளம்வயதிலே மரித்துபோகும் விதிகொண்ட மகன் அவருக்கு பிறந்தான், அவனுக்கு மார்கண்டேயன் என பெயரிட்டார்
மார்கண்டேயன் வளர்ந்தார், மிக நுண்ணிய அறிவும் அபாரமான சிவபக்தியும் அவனுக்குள் வந்தன, அந்த தெய்வீக மகன் 16 வயதுவரைதான் தன்னோடு இருப்பான் என்பதை அறிந்ததால் உள்ளே வலியும் அவனின் பெரும் அறிவிலும் சிவபக்தியும் மகிழ்வும் கொண்டு வளர்த்து வந்தார்கள் பெற்றோர்கள்
அவனுக்கு 15 வயது நெருங்கும்போது பெற்றோரின் முகவாட்டத்தை உணர்ந்தவன் அவர்களிடம் கேட்டதில் தன் விதியினை அறிந்துகொண்டான்
அவன் அறிவாளி அல்லவா? அதனால் பெற்றோரிடமே வரம் கேட்டான்
எந்த பெற்றோரும் தாங்கமுடியா சோகம் தங்கள் பிள்ளை தங்கள் கண்முன் சாவது, அந்த துன்பத்தை தங்கள் பெற்றோருக்கு கொடுக்க விரும்பாதவன் தான் சிவாலய தரிசனம் செய்தபடி ராமேஸ்வரம் செலவ்தாக கிளம்பினான்
பெற்றோருக்கும் வேறுவழி தெரியவில்லை, எப்படியும் 16 வயதில் பிரியபோகும் மகன் அவன், தங்கள் கண்முன் உயிறற்று பிரிவதைவிட, உயிரோடு பிரிவது நலமென உணர்ந்தார்கள்
அவர்கள் சம்மததித்தும் வெளியேறினான் மார்கண்டேயன், அவன் செல்லும் வழியினை அவன் மறைவதுவரை பார்த்துகொண்டே இருந்த தம்பதியர் அவன் மறைந்ததும் மனம் வெடித்து அழுதனர்
சிவனே சிவனே என சொல்லி சொல்லி அழுதவர்கள், தங்கள் கர்மத்தை நினைந்து நொந்து நொந்து அழுதனர்
மார்கண்டேயன் ஒவ்வொரு சிவாலயமாக தொழுது தொழுது வந்தான், அவன் இந்த ஆலயம் வரும்போது அவனுக்கு 16 வயதும் வந்து அவன் உயிர் பிரியும் நேரம் வந்தது
அவன் முன்னால் கர்வமாக வந்து நின்றான் எமன்
மார்கண்டேயன் இயல்பாக அறிவுள்ளவன் அல்லவா? அவன் ஒரு அனுமதிகேட்டான், “எமதர்மனே நான் இந்த சிவனை வணங்கிவிட்டு வருகின்றேன் அதன் பின் என்னை நீ பிடித்து செல்லலாம்” என அனுமதிகேட்டான்
எமதர்மனோ மிக அகங்காரமாக சொன்னான் “நான் மிக மிக கண்டிப்பானவன், உரிய நேரம் மிக சரியாய் உன் உயிரை எடுப்பேன், ஒரு நொடி கூட நேரம் தவறமாட்டேன்
நான் அவ்வளவுக்கு கடமையில் சரியானவன், என் கடமையில் நான் கொஞ்சமும் குறைவதில்லை, அதுதான் என் கவுரவம் என் அடையாள்ம், இதனாலேதான் நான் எல்லோரையும் நடுங்க வைக்கின்றேன்” என கர்வமாய் சொன்னான்
அவனிட்ம உத்தரவு கேட்டு ஓடி சென்று அந்த திருகடையூர் சிவலிங்கத்தை கட்டிகொண்டான் மார்கண்டேயன், “சிவனே உன்னைவிட்டு நான் போகமாட்டேன், அதோ எமன் நிற்கின்றான், என்னோடு நீரும் வந்தால்தான் அவனோடு செல்வேன் இல்லையெனில் உம்மை மீறி அவன் என்னை கொண்டுசெல்லட்டும்
இதுகாலமும் என் குலமும் தந்தையும் நானும் செய்த சிவவழிபாட்டின் பலனாய் உம்மை பற்றிகொள்கின்றேன், என் பெற்றோருக்கு செய்யவேண்டிய கடமைக்காக உம்மை பற்றிகொள்கின்றேன்
எம்மை கைவிட்டுவிடாதேயும், என் முடிவும் விதியும் எனக்கு தெரியும், ஆனால் விதியினை மாற்றும் சக்தி கொண்ட ஈஸ்வரன் நீர், எவ்வளவோ பேர் விதியினை மாற்றியவர் நீர், அதனால் உம்மிடம் அடைகலமாகின்றேன், இனி எது நடந்தாலும் உம் முடிவு என அந்த சிவலிங்கத்தை கட்டி கொண்டான்”
எமன் செய்வதறியாது திகைத்தான் “மார்கணேயா வா, உன்னை நான் இழுத்து செல்லவேண்டும்” என உறுமினான்
“முடியாது, சிவனை விட்டுவரமாட்டேன், முடிந்தால் என்னையும் அவரையும் சேர்ந்து இழுத்துசெல்” என சொன்ன மார்கண்டேயன் சிவலிங்கத்தை இறுக கட்டிகொண்டான்
எமனின் ஆணவம் தலைதூக்கிற்று , அவனின் கர்வம் அதிகரித்தது
“மார்கண்டேயா சிவலிங்கத்தை விட்டுவிடு, என்னோடு வா உன்னை கட்டி இழுக்கவேண்டும்” என பாசகயிறோடு உறுமினான்
“வரமாட்டேன், முடிந்தால் சிவனோடு என்னை இழு” என்றான் மார்கண்டேயன்
“என் கடமை எனக்கு முக்கியம், இந்த காலன் முன்னால் யாரும் நிற்கமுடியாது, குறித்த காலத்தில் யாரும் தடுக்கமுடியா சக்தி கொண்டவன் நான், சிவனே வந்தாலும் என்னை தடுக்கமுடியாது” என்றவன் அகங்காரத்தில் பாசகயிற்றை வீசினான்
அது அவன்மேல்ம் சிவலிங்கம் மேலும் விழுந்தது
அப்போதும் கொஞ்சமும் கலங்காத எமன், கர்வ புன்னகையோடு சிவலிங்கத்தோடு அவனை இழுக்க லிங்கம் ஆடிற்று
“சிவனே ” என படகை தழுவி கடலில் கிடப்பவன் போல லிங்கத்தோடு ஆட ஆரம்பித்தான்
அந்த இடத்தில் தோன்றினார் சிவன், “பரம்பொருளே எனக்கு அடைக்கலம்தாருங்கள் ” என அவர் பாதம் பற்றினான் மார்கண்டேயன்
“எமனே, இவனை விட்டுவிடு அவன் என்னிடம் அடைக்கலாகிவிட்டான்” என்றார் பெருமான்
“முடியாது, என் கடமை இது, இவனை இந்நேரம் இழுத்து செல்வதே என் கடமை. இந்த நேரம் எனக்கானது இங்கே யாரும் குறுக்கே வரமுடியாது, சிவனே ஆனாலும் இந்த காலம் எனக்கானது என் சக்திக்கு உட்பட்டது, இது என் சக்தி பேசும் நேரம்” என அகங்காராமாய் சொன்னான் எமன்
“காலனே, நான் சொல்கின்றேன், இவன் மேல் உனக்கு அதிகாரமில்லை சென்றுவிடு” என சொன்னார் சிவன்
மார்கண்டேயன் அவர் பாதங்களை இறுகபற்றிகொண்டான்
“முடியாது, எனக்கான காலமிது, இவன் என் கையில் இருக்கவேண்டிய நேரமிது, இங்கு நானே பெரியவன், இந்த காலத்தில் உம்மைவிட எனக்கே சக்தி உண்டு” என அகங்காரமாய் சொன்னவன் அவ்னை பற்றி இழுக்க முனைந்தான்
அவன் அகங்கார கர்வத்தை அடக்க அவனை தன் இடதுகாலால் ஓங்கி மிதித்தார் சிவன், ருத்ரகோலத்தில் அவர் மிதித்ததி தள்ளி போய் விழுந்தான், அவன் மேல் அவன் பாசகயிறுவந்து விழுந்தது
ஆவேசம் கொண்டவனாய் எழபார்த்தான் எமன், அவனால் எழமுடியவில்லை தன் சக்தியெல்லாம் இழந்து வீழ்ந்து கிடந்தான்
சிவன் தன் மார்பில் மிதித்ததில் அவரின் பாதம் பதிந்ந்துவிட்டதை உணர்ந்து கையெடுத்து வணங்கினான், இனி இவனிடம் வரபோவதில்லை என்றும் காலத்தை வெல்லும் சக்தி சிவனுக்கே உண்டு என ஒப்புகொண்டு அவ்விடம் விட்டு அகன்றான்
“மார்கண்டேயா, காலன் உன்னைவிட்டு அகன்றுவிட்டான் இனி காலம் உன்னை கட்டுபடுத்தாது அதனால் நீ நித்திய சிரஞ்சீவியாக வாழ்வாய்” என வரமருளினார் சிவன்
மார்கண்டேயன் அந்த இடத்தில் கால்த்தின் பிடியில் இருந்து விடுபட்டான், காலம் அதன் பின் அவனை கட்டுபடுத்தமுடியவில்லை என்பதால் நித்திய சிரஞ்சீவியாக இருந்து ஏகபட்ட புராணமும் மந்திரமும் வேத உரைகளும் எழுதும் பெரும் பாக்கியம் பெற்றான்
மார்கண்டேய மகரிஷி எனும் பெரும் இடத்தை அடைந்தார், மாபெரும் ரிஷியாக இன்றும் அருள்பாலிக்கின்றார்
சிவன், விஷ்ணு, அம்பாள் என மூவரையும் தொழுது பாடி பல சக்திமிக்க மந்திரங்களை அவர்தான் அருளினார்
இந்த மார்கண்டேயர் கதை அதாவது காலத்தில் கட்டில் இருந்து அவன் விடுபட்டு என்றும் 16 என இளமை கோலத்திலே இருப்பார் எனும் அந்த வரம் அப்படியே விஞ்ஞானம் அதுவும் ஐன்ஸ்டீன் சொன்ன சார்பியல் கொள்கையோடு ஒத்துபோவது அப்படியே பொருந்துவதுதான் மகா ஆச்சரியம்
ஆம், காலத்தில் இருந்து விடுபடும் எதுவும் அழியாது அதன் ஆயுள் மகா நீண்டது ஆனால் அதற்கு சில விஷயங்களில் இருந்து விலக்களிக்கும் வேகமான சாதனம் ஒளியின் திசைவேகத்தில் ஓளியோடு பயணிக்கும் வேகத்தில் வேண்டும் என அதிர வைத்தான் ஐன்ஸ்டீன்
அவன் சொன்னதை கொஞ்சம் எளிமையாக காணலாம்
அதாவது இங்கு ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு கால அளவு நிர்ணயிக்கபடுகின்றது, அதை மீறமுடியாது
பூமி சூரியனை சுற்றிவருவது ஒரு வருடம், அதனால் பூமியில் இருக்கும் மனிதனுக்கும் அந்த ஒருவருடம் எனும் கால அளவு உண்டு
இது வயதாகின்றது, வயது மூப்பாகின்றது, மூப்பு இறப்பாகின்றது, இதற்கு எந்த பொருளும் பூமியில் தப்பமுடியாது
அதாவது இங்கு காலமே ஆட்சி செய்கின்றது
ஐன்ஸ்டீன் காலத்தை மீறி சென்றால் இந்நிலை வராது என்றான், காலத்தை கடப்பது சாத்தியம் அதாவது ஒளியின் திசைவேகத்தில் ஒரு ராக்கெட் செய்து அதனில் மனிதனை ஏற்றி எங்காவது அனுப்பிவிட்டால், அந்த வேகத்தில் அதாவது காலத்தை மீறி அவனை பயணிக்கவைத்து பிரபஞ்சத்தின் எல்லைக்கோ இல்லை வெளியேவோ அனுப்பிவிடவேண்டும்
அவன் அந்த வேகத்தில் எங்கெல்லாமோ சென்று திரும்பிவருமுன் பூமி பல்லாயிரம் சுற்றுகளை சூரியனை சுற்றி முடித்திருக்கலாம், அவனோ எந்த கோலத்தில் எந்த வயதில் சென்றானோ அதே வயதில் அதே கோலத்தில திரும்பி வருவான்
உதாரணமாக அவன் 35 வயதில் ஒரு குழந்தையின் தகப்பனாக சென்றிருந்தால் அவன் ஆயிரம் ஆண்டு கழித்து அதே 35 வயதுவாலிபனாகவே வருவான் ஆனால் அவனின் 100ம் தலைமுறை இங்கே வாழும்
இதைத்தான் ஐன்ஸ்டீன் சொன்னான் இதையே இந்து புராணங்கள் சிலவும் சொல்கின்றன
அதாவது காலத்தை, இந்த பூமியினை கட்டுபடுத்தும் காலத்தை ஒருவன் கடந்துவிட்டால் அவனுக்கு அழிவில்லை என்பது பொருள்
அதுதான், அந்த விஞ்ஞான தத்துவம்தான் திருகடையூரில் மார்கண்டேயனுக்காக சிவன் செய்த காலசங்காரமாக கருதபடுகின்றது
இந்துமதம் அவ்வளவுக்கு ஆச்சரியமான விஞ்ஞான மதம் இன்றைய நாளைய விஞ்ஞானிகள் சொல்லும் பிரபஞ்ச ரகசியங்களை என்றோ சொன்னமதம் இந்துமதம்
திருகடையூர் ஆலயம் அப்படி காலத்தை மாற்றும் ஸ்தலம், காலத்தின் பிடியில் இருந்து ஒருவனை விடுவிக்கும் தலம்
காலத்தின் பிடியில் இருந்து என்றால் விதியின் பிடியில் இருந்து என பொருள்
ஆம், தலைவிதியினை மாற்றிவைக்கும் ஆலயம் அது அதனாலே அது இன்றும் பெரும் செல்வாக்குடனும் பக்தர்களுடனும் நிலைத்து நிற்கின்றது
எதற்கும் அடங்காத காலன், யாராலும் கட்டுபடுத்தமுடியா காலன் என அகங்காரததோடு வந்த எமதர்மனை சிவன் விரட்டி அவன் அகங்காரத்தை முறித்த இடம் அது
அங்கே காலம் கட்டுபடும், காலம் தன் அதிகாரத்தை இழக்கும்
நீங்கள் யாராகவும் இருங்கள், எவ்வகை சிக்கலாலும் பாதிக்கபட்டவராகவும் இருங்கள் ஆனால் அந்த திருகடையூர் ஆலயத்தில் சென்று வணங்கினால் உங்கள் விதி மாறும்
உங்களை வாட்டும் அகங்காரமிக்க வியாதியோ, கடனோ, வாழ்வின் சிக்கலோ எது உங்கள் கர்ம விதி என வந்து எங்கும் அடங்காமல் காலகட்ட விதிபடி இந்துதான் எங்கள் காலம் என ஆடுகின்றதோ அது அகலும்
வியாதியோ இல்லை இதர ஆபத்தோ உச்சிக்கு வரும் நேரம் உங்கள் உயிர்பறிக்கவரும் நேரம் நீங்கள் அங்கே தொழுதால் அந்த சிவனை பற்றி தொழுதால் நிச்சயம் காலன் உங்களை பிடிக்காமல் நகர்ந்துவிடுவான்
இந்த பூமியில் உங்களுக்கான கர்மம் செய்யவேண்டிய நிலையில் ஏகபட்ட காரியம் செய்யவேண்டிய நிலையில் உடலாலும் உயிராலும் இடையூறு வந்தால் அந்த திருகடையூர் சென்று வணங்கினால் நிச்சயம் பெரும் ஆயுள் நீளும்
அங்கே காலன் காலம் உள்ளிட்ட எல்லாவற்றின் அகங்காரமும் தீர்க்கபடும்
அமிர்தகடேஸ்வரர் என அந்த சிவன் என்றோ அமிர்தகுடம் கொண்டிருந்தார் என்பதற்காக அழைக்கபடவில்லை
அமிர்தம் என்பது சாவில் இருந்து ஒருவனை விடுவிக்கும் , ஆயுளை நீட்டும்
அந்த ஆலயத்து சிவனும் தன்னை நம்பி வருவோரை காலனிடம் இருந்து அவன் அகங்காரத்டிடம் இருந்து மீட்டு ஆயுளை நீட்டிதருகின்றார் என்பதால் அவர் அமிர்தகடேஸ்வரர் என்றானார்
காலனை வதம் செய்ததால் காலசங்காரமூர்த்தி என்றுமானார்
அந்த ஆலயம் சிவன் ஆட்சி செய்யும் ஆலயம், அம்பாள் அவருக்கு துணை இருக்கின்றார். அங்கே மார்கண்டேயன் மட்டுமல்ல அபிராமிபட்டர் போன்ற பலர் ஆயுளை நீட்டித்தனர், காலம் அவர்களை கட்டுபடுத்தமுடியாமல் தோற்றது என்பது சாட்சி
அந்த ஆலயத்தின் சிறப்பு அதுதான், மயிலாடுதுறை அருகே அமைந்திருக்கும் அந்த ஆலயத்துக்கு செல்லுங்கள், உங்கள் பிரச்சினை எதுவாகவும் இருக்கட்டும், நோயோ மாயையோ இல்லை யாரின் அகங்காரத்தாலோ வந்த சிக்கலாக இருக்கட்டும்
அது உங்கள் கிரகபலன் கர்மபலன் படி நீங்கள் படாதபாடுபடும் காலமாகவும் இருக்கட்டும் சிக்கலே இல்லை
அங்கே காலமே செயல் இழக்கும், காலம் தன் அதிகாரத்தை இழந்துவீழும் அப்போது நீங்கள் காலநேரத்த்தில் இருந்து விடுபடுவீர்கள் எதுவும் உங்கள் மேல் அதிகாரம் செலுத்தமுடியாது
சிவனை பணிந்து அருள்வாங்க செல்வோர் , காலத்தால் பாதிக்கபட்டோர், காலன் வந்துவிடலாம் என அஞ்சுவோர் என சிக்கலில் இருப்போர் அனைவரும் செல்லலாம்
உங்கள் விதியினை மாற்றி உங்கள் கர்மவினையினை மாற்றி உங்கள் வாழ்வினையே மாற்றி நீங்கள் செய்யவேண்டிய எல்லா கடமையினையும் அந்த அமிர்த கடேஸ்வரர் செய்யவைப்பார் இது சத்தியம்
காலத்தால் எதையெல்லாம் இழந்தீர்களோ அதை எல்லாம் திருப்பியும் தருவார், இதுவும் சத்தியம்
எட்டு அஷ்ட வீராட்டன தலங்களையும் பார்த்துவிட்டோம் இந்த எட்டு தலங்களும் எட்டுவிதமான பாதுகாவலை எண் திசைகளில் இருந்து வழங்கும், எட்டுவிதமான பெரிய ஆபத்துகளில் இருந்து வழங்கும்
எதிரிகளின் அகங்காரம் முதல் கர்மவினை தீவினைகள் வரை மாற்றிதரும் தலங்கள் இவை. இவைகள் எட்டையும் தரிசித்தால் கயிலாயத்துக்கு சென்றுவந்த பலனும் இழந்துவிட்ட காலங்களின் பலனும் திரும்ப கிடைக்கும், அது உறுதி
ஒவ்வொரு இந்துவும் கட்டாயம் தரிசிக்கவேண்டிய பைரவ தங்களில் இவை எட்டும் உண்டு
கால பைரவர் என்பவர் காலத்தின் அதிபதி, காலம் அவருக்கு கட்டுபட்டது அவர் முன் காலத்தின் ஆட்டம் வோட்டம் சக்தி என எதுவும் செல்லாது எல்லாம் கடந்த ஆற்றல் அவருடையது
அந்த காலபைரவ தத்துவம்தான் அந்த ரூபம்தான் இந்த எட்டு அட்டவீராட்டான தலங்களிலும் இருக்கின்றது, யாருக்கு சிவன் அருளும் அழைப்பும் உண்டோ அவர்கள் அந்த தலங்களுக்கு சென்று அதனை பெற்றுக் கொள்ளட்டும்.