அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 21 /21
நேற்று அயோத்தியில் உலகுக்கு அர்பணிக்கபட்ட்ட ராம லல்லா கோவில் பற்றி சில தகவல்களோடு இந்த தொடரை நிறைவு செய்யலாம்
உச்சநீதிமன்ற தீர்ப்புபடி 5th பிப்ரவரி 2020 கோவில் கட்ட ட்ரஸ்ட் உருவானது. ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ர ட்ரஸ்டில் பிரதான வழக்கறிஞர் திரு பராசரன் (Founder) மடாதிபதிகள், நிர்மோஹி அக்காரா ப்ரதிநிதி, மத்திய, மாநில அரசு ப்ரதிநிதிகள், வி.ஹெச்.பி சார்பாக, மற்றும் ராம பக்தர்கள் உள்ளனர்.
இந்த ஆலயத்தை அம்பானி, எல் & டி, டாட்டா என பலர் ஒருநபராக கட்ட முன்வந்தபோது நிர்வாகம் மறுத்தது
மத்திய மாநில அரசு உதவி இல்லாமல் முழுக்க பக்தர்களின் நன்கொடை மூலம் மட்டுமே நிதி சேகரிக்கப்பட்டது. ஒவ்வொரு இந்தியரின் பங்களிப்பும் அவசியம் ஒரு ரூபாய் என்றாலும் அவசியம் என விதி வகுக்கபட்டது
அப்படி விதிப்படிதான் வசூலித்தார்கள் ஒரு ரூபாயிலிருந்து எதுவாயினும் வாங்கி கோவில் பணியில் சேர்த்தனர்.
ஆகஸ்டு 5, 2020 கட்டுமானம் தொடங்கியது. பாரதப் ப்ரதமர் அடிக்கல் நாட்ட அழைக்கப்பட்டார் சோமநாதர் ஆலயம் உட்பட பல கோவில்களை நிர்மாணித்த ஸ்தபதிகள் சோமபுரா என்ற குழுமம் ஆலய அமைப்பில் ஈடுபட்டனர். பல்வேறு இந்திய கட்டுமான நிறுவனத்தார் சேர்ந்தனர்.
பாரததேசம் முழுவதுமிருந்து 2500 க்கும் மேற்பட்ட புனிதமான இடங்களில் இருந்து மண் எடுத்து கருவறை கீழே சேர்க்கப்பட்டுள்ளது.
கோவில்கள் மட்டுமில்லாமல் பாரதம் காக்கப்போராடி வீரர்கள் வீரமரணம் எய்த இடங்களின் மண்களும். உ.பி யின் ஜான்ஸி கோட்டை, ராஜஸ்தான் ஹல்திகத்தி மற்றும் சித்தோர்கட் கோட்டை, மஹாராஷ்ட்ரா சத்ரபதி சிவாஜி கோட்டை, பஞ்சாபின் பொற்கோவில் போன்றவை எல்லாம் அடக்கம்
தமிழ்நாட்டு ஆலயங்களும், செஞ்சி போன்ற கோட்டைகளும் இடம்பெற்றிருந்தன ஆனால் அதுபற்றி தமிழகத்தவர்களே அறிந்திருக்கவில்லை
காஞ்சிபுரத்திலிருந்து சங்கர மடத்தில் இருந்து அடிக்கல் செய்யும் விவரம் பதித்த செப்புத்தகடு உள்ளிட்ட மங்களப்பொருட்களும், காமாட்சியம்மன், ஏகாம்பரேஸ்வரர், வரதராஜர் கோவில் மண். காஞ்சி பெரியவர்கள் சமாதி மண் உள்பட அடிக்கல் நாட்டும் போது சேர்க்க அனுப்பிவைத்தனர்.
ப்ராணப்ரதிஷ்டை முன் செய்ய வேண்டிய யாகசாலை பூஜைக்காக கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு 150க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் பாரதம் முழுவதிலிருந்தும் வந்தனர்.
காசியின் ஸ்ரீ கணேஷ்வர் த்ராவிர் சாஸ்த்திரிகள், மற்றும் ஸ்ரீ லக்ஷ்மிகாந்த தீக்ஷித் சாஸ்த்திரிகள் தலைமை தாங்கினர். இதில் ஸ்ரீ லக்ஷ்மிகாந்த தீக்ஷித் சாஸ்த்திரிகள் சத்ரபதி சிவாஜி மஹாராஜாவுக்கு ராஜ பட்டாபிஷேகம் செய்து வைத்த காகபட்டர் வம்சத்தில் வந்தவர்.
(சிவாஜி தொடரை படித்தவர்களுக்கு தெரியும், காகபட்டர் எப்படியான ஞானி என்பதையும் சிவாஜிக்கு அவர் பட்டாபிஷேகம் செய்துவைத்துவிட்டு மூன்று முக்கிய யந்திரங்களை வழங்கினார் என்பதும் தெரியும்
அந்த யந்திரம் பதிக்கபட்ட மராட்டிய பக்கம் இருந்துதான் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எழும்பி பின் பாஜக எழும்பி இன்று அவர்களாலே ஆலயம் நிர்மானம் செய்யபடும்போது காகபட்டர் வாரிசு வந்து அமர்வதெல்லாம் தர்மம் நடத்தும் காட்சிகள், மெய்சிலிர்க்கும் நிகழ்வுகள் )
வேத யாகபூஜை தவிர பல்வேறு மொழிகளில் உள்ள ராமாயண காவிய பாராயணமும் தொடர்ந்து செய்யப்படுகின்றன. வால்மீகி, துளசி, அத்யாத்ம ராமாயணம் என பல ராமாயணங்கள் பல அறஞர்களால் அவை பாடபடுகின்றன
கும்பாபிஷேகத்திற்கு உலகின் அனைத்து பகுதிகளிலிருந்து பல பொருட்கள் பக்தர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. கஷ்மீரிலிருந்து இஸ்லாமியர் சார்பாக குங்குமப்பூ 2 கிலோ, உத்திரபிரதேச கனௌஜ் லிருந்து பலவித வாசனை scent, அஃப்கானிலிருந்து புனித நதி நீர், தமிழ்நாட்டிலிருந்து நெசவாளர்கள் பட்டுத்துணியில் கோவில் படம் நெய்து அனுப்பிவைத்தனர்.
தமிழ்நாட்டிலிருந்து மேலும் யாகசாலை பூஜைக்காக 5 நாட்களும் பூக்கள் தாமரை, மருக்கொழுந்து, முல்லை, துளசி, என பலப் பல அனுப்பியுள்ளனர்.
பாரத்ததின் அனைத்து ப்ரதேசங்களிலிருந்தும் இசை வாத்திய கலைஞர்கள் அழைக்கப்பட்டனர். தமிழ்நாட்டிலிருந்து நாதஸ்வரம், ம்ருதங்கம். ப்ராணப்ரதிஷ்டை ஆரத்தி சமயத்தில் ப்ரத்யேகமாக நாதஸ்வரத்தில் மூதறிஞர் ராஜாஜி எழுதிய குறை ஒன்றும் இல்லை பாடல் வாசிக்கப்பட்டது நமக்கு கிடைத்த அருள்.
வெளியே வரும்போது மோடி அவர்கள் அந்த கலைஞர்களை சந்தித்துவிட்டு வந்தது கவனிக்கதக்கது
கோவில் அமைப்பு மூன்று தளங்களாக கட்டப்பட்டுள்ளது. கீழ் தளத்தில் கருவறையில் மூலவராக 5 ½ வயதான குழந்தை பால ராமன் திருமேனியும், முதல் தளத்தில் பட்டாபிராமர் திருமேனியும் காட்சியக்கும்.
கீழ் தள கருவரை மூலவர் பாலராமருடன் இது வரை நமக்கு 1949 திலிருந்து வழிபட்டு வந்துள்ள விக்ரஹங்களும், இடிபட்ட 500 வருட பழைய கோவில் பூஜையில் இருந்த உத்ஸவ விக்ரஹங்களும் தரிசன தருவார்
ஆம், அந்த பழைய விக்ரஹம் முன்பு வெளியிலும் கட்டடதுள்ளும் மாறி மாறி இருந்த அந்த விக்ரஹமும் அங்கேதான் ஸ்தாபிக்கபடுகின்றது
கோவிலில் உள்ள மஹா மண்டபத்தில் பலவித பிள்ளையார் சிற்பங்களும், முகப்பு மண்டபத்தில் நடராஜர் சிற்பங்களும், அடுத்த மண்டபத்தில் ஆஞ்சநேயர் சிற்பங்களும், அடுத்து விஷ்ணுவின் பல சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை சேர்ந்த பல தச்சர்கள் கோவில் பணியில் பங்களித்துள்ளனர்.
பொதுவாக நடராஜர் தமிழகத்தை தாண்டி வட இந்தியாவில் பெரிதாக இல்லை அல்லது முன்பு இருந்த ஆலயங்கள் அன்னியரால் அழிக்கபட்டன
அந்த நடராஜர் மிக முக்கியம் என்பதால் மீண்டும் இங்கு நிறுத்தபடுகின்றார்
ஆலயத்தின் முக்கிய காட்சி அந்த ராமனின் திருமேனி
கர்நாடக சிற்பி செதுக்கிய மூல விக்ரஹ பால ராம திருமேனி அது
4 ½ அடி உயரமுள்ள குழந்தை ராமன் இரு கைகளுடன் வலதுகையில் சின் முத்திரையுடன் அம்பையும், இடது கையில் வில்லையும் பிடித்துள்ளார்.
தாமரை பீடத்தில் நிற்கும் கோலத்தில் உள்ள திருமேனியைச் சுற்றி திருவாசியில் மூர்த்தியின் தலைக்ரீடம் மேலே சூரியநாராயனர், அதன் கீழே இருபுறன்களிலும் சங்கம், சக்ரம் கதை என விஷ்ணுவின் ஆயுதங்கள், அதன் கீழே மங்கள சின்ங்கள் ஓம், ஸ்வஸ்திக், அதன் பின் இடது தோள் அருகே பரமசிவனார்,
வலது தோள் அருகே ப்ரம்மா, தொடர்ந்து இரு புறங்களிலும் விஷ்ணுவின் தசாவதார வடிவங்கள், கால் அருகே வலது பக்கம் திருவடியான ஆஞ்சநேயர், இடது பக்கம் பெரிய திருவடியான கருடன் அமைக்கபட்டுள்ளது
இன்னும் இந்த ஆலயத்தில் ஏகபட்ட பணிகள் உண்டு, இது இன்னும் பல்லாண்டுகளுக்கு நடக்கும்
அத்தோடு முடியுமா என்பது தெரியவில்லை மிக மிக பெரிய வளாகமாக இது மாறும், பெரிதாகி கொண்டே வரும், அவ்வளவு திட்டங்கள் இருக்கின்றன
அயோத்தி என்பது மிக சிறிய ஊர், பெரிய தொழில்வாய்ப்புமில்லை, ராமன் பிறந்த ஊர் என்பதை தவிர வேறேதுமில்லை
ஆனால் அதைவிட எந்த பெரிய பெருமையும் அவசியமே இல்லை என்பதால் இனி அந்த பகுதி பெரிதாக வளரும், அங்கிருக்கும் இஸ்லாமியரும் மிகுந்த மகிழ்ச்சியோடு தங்களுக்கு வாழ்வளிக்க வந்த வள்ளலாகவே ராமனை காண்கின்றார்கள்.
இன்னும் சில தகவல்கள் உண்டு பின்னால் தருகின்றோம்.