கார்த்திகை சோமவாரத்தில் வழிபட வேண்டிய முக்கிய சிவாலயங்களில்

கார்த்திகை சோமவாரத்தில் வழிபட வேண்டிய முக்கிய சிவாலயங்களில் திருநெடுங்க‌ளம் ஆலயமும் ஒன்று. இது திருச்சி அருகே அமைந்துள்ளது.

இங்கு சிவன் திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர் என அமர்ந்திருக்க, அன்னை மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி என அழைக்கப்படுகின்றார்.

சம்பந்த பெருமான் தன் தேவாரத்தில் இந்த ஆலயத்தின் “இடர் களையும் பதிகம்” என ஈசன் மேல் பத்து பாடல்களை பாடியுள்ளார், இப்படிப் தொடங்கி பாடியுள்ளார்.

“மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுன்னைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களமேயவனே”

அப்படியான சக்திமிக்க ஆலயம் இது. மிக மிகத் தொன்மையான வரலாறும் அன்றில் இருந்தே சிவன் அருள் ஆறாகப் பெருகி ஓடும் அற்புதமான தலம் இது.

பார்வதி தேவி சிவனை தவமிருந்து அடைந்த தலம் என்பதால் சிவசக்தி தலம், அர்த்த நாரீஸ்வரர் தலம் எனக் கொண்டாடப்படுகின்றது.

இந்த ஆலயத்தின் சிறப்பு மிக மிக வித்தியாசமானது, அதாவது சிவன் அர்த்த நாரீஸ்வரர் கோலத்தில் அருள் பாலிப்பார், அதே நேரம் அந்த காட்சி இல்லாமல் லிங்க வடிவிலே அமர்ந்திருப்பார்.

ஒரே கருவறையில் இடபாகத்தை அம்மனுக்கு விடுத்து சிவன் வலபாகம் அமர்ந்திருப்பார், ஆனால் அன்னைகுரிய இடம் காலியாக இருக்கும்.

அதே நேரம் இங்கே சிவனும் அன்னையும் உண்டு என்பதை சொல்ல இருவிமானங்கள் அமைக்கப்பட்டிருக்கும், காசிக்கு அடுத்து அந்த இரு விமானம் இங்கேதான் உண்டு.

தட்சன விமானம், கைலாய விமானம் என அதற்குப் பெயர்.

சிவன் அன்னையினை அரூபியாய் தன்னகத்தே கொண்டு, சிவசக்தி கோலத்தில், அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் அருள்பாலிக்கின்றார் எனச் சொல்லும் தலம் இது.

இங்கே அகத்தியர் வந்து வழிபட்டிருக்கின்றார். அவர் உருவாக்கிய தீர்த்தம் அகத்திய தீர்த்தம் என இப்போதும் உண்டு, அகத்தியர் சன்னதிக்கு எதிரே உண்டு, அதன் நீர் ஒரு காலமும் வற்றுவதில்லை, கை தொடும் தூரத்தில் எப்போதும் அங்கே நீர் உண்டு

இந்த அலயத்தின் நாதர் மேல் ஆடி மாதம் 7 முதல் 12ம் தேதி வரை காலை சூரியக்கதிர் விழும், ஆடிமாதம் அம்மனுக்கானது என்பதாலும், சிவனில் பாதி அம்மன் என்பதாலும் இந்த ஏற்பாடு அன்றே செய்யப்பட்டிருந்தது.

வந்திய சோழ மன்னன் என்பவன் இந்த தலத்தில் தன் இடர் நீங்கப்பெற்றான், அவனின் நோய் தீர்ந்தது. அத்தோடு அவன் சிவனின் தரிசனத்தையும் பெற்றான். இதனால் இத்தல இறைவன் ‘நித்திய சுந்தரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்த தலத்தின் தட்சிணாமூர்த்தியின் வடிவம் அருமையானது, யோக தட்சிணாமூர்த்தியான அவர், தன் மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் கொண்டு யோக கோலத்தில் காட்சி அருள்வார்.

உள்பிரகாரத்தில் தென்கிழக்கில் சோமாஸ்கந்தர், சந்திரசேகர் சன்னதிகள் உள்ளது. தென்பிரகாரத்தில் சப்தகன்னியர்களும், தட்சிணாமூர்த்தியும், ஐயனாரும் அருள்பாலிக்கிறார்கள்.

கன்னி மூலையில் வலம்புரி விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது.

இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயங்கள் சிவனை தவிர இரண்டு; ஒன்று பைரவர் சன்னதி, இரண்டாவது முருகப்பெருமான் சன்னதி.

இங்கே சிவசன்னதியில் விமானம் மட்டும் இரண்டு அல்ல, பைரவரும் இருவர்.

சேத்திர பைரவர், சர்ப்ப கால பைரவர் என்று இரண்டு பைரவர்கள் இங்கு உண்டு. சேத்திர பைரவர் வாகனத்துடன் இருப்பார், சர்ப்பகால பைரவருக்கு வாகனம் இல்லை.

சர்ப்ப கால பைரவர் திருமேனி முழுவதும் படர்ந்து இருக்கின்றன. இப்படி திருமேனி முழுவதும் சர்ப்பங்கள் பின்னி படர்ந்திருக்கும் காலபைரவரை வேறு எங்கும் காணமுடியாது..

இந்த சர்ப்ப கால பைரவரை வழிபட்டால், கால சர்ப்ப தோஷம், நாக தோஷம், ராகு கேது தோஷம் என எல்லாம் விலகும், இந்த பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் தீபமேற்றி வழிபாடு செய்ய எல்லா தடையும் அகலும்.

இந்த சேத்திர பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், எம பயம் இருக்காது.

ஆம். கார்த்திகை மாத தலங்கள் எல்லாமே எம பயம் நீக்குபவை, இங்கு சேத்திர பைரவர் சன்னதியில் வழிபட்டால் அந்த எமபயம் நீங்கும், மரணம் பயம் அகலும்.

கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி இங்கு விசேஷம் என்றாலும் கார்த்திகை முழுக்க வழிபடுதல் கூடுதல் பலனை தரும்.

இந்த ஆலயத்தின் மேற்கு பிரகாரத்தில் தெய்வானையுடன் முருகன் தனி சன்னதி உள்ளது.

ஆம். இந்தத் தலம் முருகப்பெருமானுக்கு விசேஷமான தலம். அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

வள்ளலார் பெருமான் தாம் பாடி அருளிய‌ விண்ணப்பக் கலிவெண்பாவில், “துன்று கயல் கண்ணார் நெடும் களத்தைக் கட்டு அழித்த மெய்த்தவர் சூழ் தண்ணார் நெடுங்கள மெய்த் தாரகமே” என்று போற்றி உள்ளார்.

இங்கே ஒரு வழமை உண்டு. அதாவது விரலி மஞ்சளை இடிக்கும் உரலும் அந்த மஞ்சளை அன்னைக்கு பூசும் வழமையும் உண்டு.

இது திருமண தடைகளை நீக்கும்; கணவன் மனைவியினை சேர்த்துவைக்கும் வழிபாடு; பார்வதி தேவி செய்து வழிகாட்டிய இக்காரியம் இன்றளவும் பின்பற்றப்படுகின்றது.

முப்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களை கொண்ட இந்த ஆலயத்தின் ஒரு கல்வெட்டு இத்தலத்தை, “பாண்டிகுலாசினி வளநாட்டு வடவீர நாட்டு திருநெடுங்களம்” என்றும்; இறைவன் பெயர் “நெடுங்களத்து மகாதேவர் ” என்றும் குறிக்கின்றது.

இங்கு உள்ள வராஹிக்கு விரலி மஞ்சள் இடித்து இராகு காலத்தில் ஞாயிறு, வெள்ளி நாட்களில் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வதால் திருமண தடை நீங்கும், குடும்பம் சேரும், நல்ல வரன் அமையும்.

இக்கோவில் சிவனை ஆறுவாரங்கள் நெய் தீபமேற்றி வழிபட்டால் பதவி உயர்வு, மக்களிடம் செல்வாக்கு என எல்லாம் கிடைக்கும்.

இங்குள்ள சிவனுக்கு மாதுளம்பழம் அபிஷேகம் செய்வதால் நினைத்த காரியம் நடக்கும் என்பதால் இந்த நடைமுறை இங்கு பிரசித்தியானது.

ஆக, ஆழ கவனியுங்கள் இந்த தலத்தின் தாத்பரியம் புரியும்.

இத்தலம் சிவனும் பார்வதியும் ஒரே கருவறையில் இருக்கும் தலம், அதாவது அன்னை அரூபமாய் அங்கே சேர்ந்திருக்கின்றாள், சன்னதியின் ஒரு விமானம் அதைச் சொல்லும்.

இரு பைரவர்கள் அங்கே விசேஷம் , பைரவர் எப்போதும் கர்மத்தின் காவலாளி, அதே நேரம் இன்னொரு பைரவர் பாம்புகள் சூழ அமர்ந்திருக்கின்றார், பாம்புகள் அவர்மேல் பின்னி கிடக்கின்றன‌, அவருக்கு சிகப்பு நிற பூக்களால் அர்ச்சனை செய்யப்படுகின்றது.

சிவனுக்கு மாதுளம்பழ அபிஷேகம் விசேஷம். இதுவும் சிகப்பு நிறம்.

ஆம். இந்தப் பிறப்பில் ரத்த பந்தத்தில் ரத்த ஓட்டத்தில் நம் கர்மத்தை செய்ய, ரத்த உறவுகளுடன் நம் கர்மாவினை சரியாக செய்யும் வரம் அருள, அது வாழ்க்கை துணையோ குடும்பமோ குலமோ அனைவரின் ஒத்துழைப்புடன் கர்மத்தை சரியாக செய்ய வரமருளும் ஆலயம் இது.

ரத்தம் சம்பந்தமான கிரஹம் செவ்வாய், செவ்வாயின் அதிபதி முருகப்பெருமான். இங்கு எழுந்தருளியிருப்பது அதனாலே.

இந்தத் தலம் ரத்த உறவினாலும் ரத்த பந்தத்தினாலும் வரும் சிக்கல்களை தீர்த்து அவர்களுக்கும் உங்களுக்குமான பெரும் பந்தத்தை நினைத்துத் தரும்.

இந்த ஆலயத்தில் கார்த்திகையில் வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை வரும், நல்ல பிணைப்பு ஏற்படும். அந்த நல்ல பலத்தில் அவரவர் கர்மாவினை கடமையினை செய்ய பெரும் பலம் கிடைக்கும்.

இந்த தலத்தில் வழிபட செல்லும் போது மாதுளை பழத்தினை சிவனுக்கும், செவ்வரளி பூக்களை பைரவருக்கும் சாற்றி வழிபடுங்கள், எல்லா பந்தமும் வலுக்கும், கர்மா உறுதிபடும்.

பெண்கள் வராஹி அன்னைக்கு மஞ்சள் இடித்து வழிபட தாம்பத்யம் வலுக்கும், தாலி பாக்கியம் நிலைக்கும், மங்களம் வீட்டில் பெருகும்.

அச்சம் அகலும், தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும், குடும்பத்தில் அமைதி நிலவும், மனம் தெளிவடையும்.

முடிந்தவர் அங்கே வழிபடுதல் நன்று, கார்த்திகை சோமவாரத்தில் வழிபடுதல் மிக்க நன்று, அந்த நெடுங்களநாதர் எல்லா ஐஸ்வரியமும் தந்து உங்களை ஆசீர்வதிக்க தன் தேவியுடன் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றார்.

சம்பந்தர் வரிகளில் அந்தச் சிவனை போற்றிப் பாடலாம்.

“கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
மனத்தகத்தோர் பாடலாடல் பேணி இராப்பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.”

கார்த்திகை மாதம் வழிபட வேண்டிய சிவாலயங்கள் 01 : திருப்பைஞ்ஞீலி.

கார்த்திகை மாத சிவதலங்களில் தரிசித்து வழிபட வேண்டிய முக்கியமானதொரு தலம் திருப்பைஞ்ஞீலி, ஞீலிவனேஸ்வரர் ஆலயம். காவேரி கரையில் கொள்ளிடம் அருகே திருவெள்ளரை அடுத்து அமைந்துள்ள மகா முக்கியமான சிவதலம் இது.

“காருலாவிய நஞ்சையுண்டிருள்
கண்டர் வெண்டலை யோடுகொண்
டூரெலாந்திரிந் தென்செய்வீர்பலி
ஓரிடத்திலே கொள்ளும்நீர்
பாரெலாம்பணிந் தும்மையேபர
விப்பணியும்பைஞ் ஞீலியீர்
ஆரமாவது நாகமோசொல்லும்
ஆரணீய விடங்கரே”

என்று சுந்தரர் போற்றிப் பாடிய தலம் இது.

இதன் வரலாறு ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் இடையே ஏற்பட்ட அகங்காரச் சண்டையில் இருந்து தொடங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. தன் பலம் காட்ட ஆதிசேஷன் கைலாச மலையைச் சுற்றி வளைக்க வாயு அதனை கடும் சூறாவளியால் ( சண்டமாருதம் ) உடைக்க முயல அதன் சிகரங்களில் ஒன்று வெடித்து எட்டு இடங்களில் விழுந்தது.

அவை திருகோணமலை திருகாளஹஸ்தி, திருச்சிராமலை, திருஈய்கோய்மலை, நீர்த்தகிரி, இரஜதகிரி, இரத்தினகிரி மற்றும் ஸ்வேதகிரி. இந்த ஸ்வேதகிரி என்பதே திருப்பைஞ்ஞீலி என்றாயிற்று.

இது கயிலாய மலையின் துண்டு என்பதால் இத்தலம் காலத்தால் மூத்ததும், புண்ணியமிக்கதும் சக்திமிக்கதுமாயிற்று. அதனாலே தென் கயிலாயம் என்ற பெயரும் பெற்று நிலைத்தது.

இந்தத் தலம் ஆதிசேஷன் வாயுபகவானில் தொடங்கி பார்வதி, காமதேனு, இந்திரன், சுதாமா முனிவர், மன்னன் கலியுகராம பாண்டியன், சிவமித்திரன், பதுமகர்ப்பன், வியாக்கிரசுரன், அர்ஜுனன் உள்ளிட்ட பலர் வழிபட்டு பயனடைந்த மகா அற்புதமான தலம்.

இதனால் இந்த சிவனுக்கு ஆரண்யவிடங்கர், நீலகண்டர், கடலிவசந்தர், ஞீலிவனநாதர், சக்ரத்தியாகர் எனப் பல பெயர்கள் உண்டு.

இந்தத் தலத்தின் பெரும் வரலாறு சப்த கன்னியர் வழிபாட்டில் இருந்து தொடங்குகின்றது. சப்த கன்னியர் ஏழுபேரும் சிவபூஜை எப்போதும் செய்வார்கள்.

ஆவுடையில் தங்கியிருப்பவர்களும் அவர்களே; அப்படியான சப்தகன்னியர் தங்கள் சாபம் தீர என்ன செய்யவேண்டும் என அன்னையிடம் கேட்டபோது அன்னை அவர்களை இந்த தலத்தில் வழிபடச் சொன்னார். அவர்கள் சிவனை வழிபட்டு சாபம் தீர்ந்தபோது ஞீலி எனும் கல்வாழை மரம் அவர்களின் அம்சமாக அங்கே தோன்றிற்று.

ஆம். அவர்கள் திருமணவரம் பெற்ற ஆலயம் இது.

அவர்கள் அங்கே வழிபட்ட அடையாளத்துக்காய் தோன்றிய அந்த ஞீலியின் பெயரிலே அத்தலம் திருப்பைஞ்ஞீலி என்றாயிற்று, அந்த ஞீலி அங்கே தலவிருட்சமுமாயிற்று

இங்கேதான் சிவன் தன் பக்தருக்கு சிதம்பரம் ஆலயம் போல நடராஜ கோலம் காட்டிய அதிசயமும் நிகழ்ந்தது.

தைப்பூச நாளில், சிவபெருமான் தனது பிரபஞ்ச நடனத்தை சிதம்பரத்தில் நிகழ்த்தினார்; அதனை வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி முனிவருக்காக அதை செய்தார்.

வசிஷ்டருக்கும் அதை காணும் ஆவல் வந்தபோது அவரை இந்த திருப்பைஞ்ஞீலிக்குச் செல்லும்படி சிவன் கூறினார். அப்படிச் செய்தபோது சிவன் பிரபஞ்ச நடனத்தை காட்டினார்.

இதனாலே சிதம்பரத்துக்கு மேற்பக்கம் இருப்பதால் இது “மேலை சிதம்பரம்” என்றாயிற்று, இரத்தின சபை எனும் சபை இங்குதான் முதலில் இருந்தது.

வசிஷ்டர் இந்த ஆலயத்தின் மேல் அபார நம்பிக்கை கொண்டிருந்ததால் ஸ்ரீராமர் சீதையை மீட்பதற்காக இலங்கைக்கு செல்வதற்கு முன் சிவபெருமானை இங்கு வணங்கிவிட்டே சென்றார்.

இக்கோவில் சிதம்பரம் ஆலயத்துக்கு மட்டுமல்ல, திருக்கடையூர் ஆலயத்துக்கும் ஈடானது. அதே அளவு வரலாற்றையும், சிறப்பையும் கொண்டது.

திருக்கடையூரில் மார்கண்டேயரைக் காப்பாற்ற சிவன் யமனை அழித்துப் போட்டார். யமன் இல்லாததால் பூமியில் உயிர்கள் பெருகின; பூமியின் பாரம் அதிகமானது; பிரம்மனின் கணக்கும் விஷ்ணுவின் கணக்கும் பிழைத்தன; தேவர்கள் திணறினார்கள்.

இதனால் மகாவிஷ்ணு, பிரம்மா, பூமிதேவி மற்றும் தேவர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து, சிவனிடம் யமனை உயிர்ப்பிக்குமாறு வேண்டினர். தைப்பூச நாளில் சிவன் யமனை மீண்டும் இதே ஆலயத்தில் உயிர்ப்பித்தார். ஆதலால் சிவன் இங்கு “அதிகார வல்லவர்” என்று அழைக்கப்படுகிறார்.

அந்த அதிகாரவல்லவர் சன்னதியில் சிவன், பார்வதி, முருகன் ஆகியோர் சோமாஸ்கந்தராக காட்சியளிக்க, சிவனின் பாதத்தின் கீழ் யமனை குழந்தை வடிவில் காணலாம்.

அதாவது யமன் இங்கே புதிதாய் பிறந்தான் என்பதை சொல்ல குழந்தை வடிவில் அவனை அங்கே நிறுத்தினார்கள்.

யமன் உயிர்பெற்ற இடம் என்பதால் இந்தக் கோயில் யம தர்மராஜா கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆம். இந்த ஆலயத்தின் மகா விசேஷம் யமனின் சன்னதி, அது ஒரு குகை போன்றது. குடை வரை கோவிலாக அது செதுக்கப்பட்டுள்ளது.

இது எமனின் ஆலயம் என்பதால் இங்கு நவக்கிரகம் கிடையாது. எமபயம் நீங்க பிரத்தியேகமாக எமதீர்த்தத்தை தெளித்து இங்கு எழுந்தருளியுள்ள எமதர்மருக்கு அர்ச்சனை செய்தால் எமபயம் நீங்கும்.

இத்திருக்கோவிலுக்கு வந்து “ஆயுள்ஹோமம்” செய்து எமனை தரிசித்து சென்றால் ஆயுள் கூடும் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து “வாழைபரிகாரம்” செய்தால் திருமணத்தடை நீங்கும்.

முதல் கோபுரத்தின் வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு 4 கால் மண்டபமும் அதன் பின்புறம் 3 நிலைகளை உடைய இராவணன் வாயில் என்று கூறப்படும் இரண்டாவது நுழைவு கோபுரமும் உள்ளது. இந்த இரண்டாவது கோபுரத்தின் முன் இடதுபுறம் சோற்றுடை ஈஸ்வரர் சந்நிதி காணப்படுகிறது.

தேவாரம் பாடப்பட்ட தலம் இது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் என மூவரும் பாடிய தலம் எனினும் அப்பர் மற்றும் சம்பந்தர் ஆகியோர் வாழ்வில் நடந்த அற்புதங்களும் இங்கு அழியா அடையாள சாட்சிகள்.

ஆம். அப்பர் சுவாமிகளுக்கு சிவன் கட்டுச்சோறு கொடுத்து காத்த தலம் இது. தன் முதிய வயதில் திருவானைக்காவல், திருக்கற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய சிவஸ்தலங்களை தரிசித்துவிட்டு திருநாவுக்கரசர் திருப்பைஞ்ஞீலி நோக்கி வந்துகொண்டிருந்தார்.

ஆனால், கடும் வெயிலில் அவருக்கு தாகமும் பசியும் பெரும் அழுத்தமுமாயின. அதைத் தாண்டி வைராக்கியமாக வந்தவரால் ஒரு கட்டத்துக்கு மேல் முடியவில்லை. அவர் அப்படியே சரிந்து அமரும் போது சற்று தொலைவில் ஒரு மண்டபமும், ஒரு முதியவரும் இருக்கக் கண்டார்.

அவரிடம் அப்பர் சென்றபோது அந்த முதியவர் கட்டுச்சோறும், நீரும் கொடுத்து உண்ணவைத்து உயிர்காத்தார். பின் அவரை இளைப்பாற செய்து பயணத்தினை தொடரச் செய்து கூடவே வந்தார்.

பின், ஆலயம் நெருங்கும்போது அந்த முதியவர் சட்டென மறைந்தார். அப்போதுதான் வந்தவர் சிவன் என அப்பர் சுவாமிகளுக்கு புரிந்தது. அந்த அதிசயம் நிகழ்ந்த ஆலயம் இது.
அப்பருக்கு சோறு கொடுத்ததால் அவர் சோற்றுடை ஈஸ்வரர் என்ற பெயரில் இச்சந்நிதியில் அருள் பாலிக்கிறார்.

சித்திரை மாதம் அவிட்டம் நட்சத்திர நாளில் இச்சந்நிதியில் திருநாவுக்கரசருக்கு சோறு படைத்த விழா நடைபெறும். எக்காலமும் உண்டு.

சம்பந்தர் தன் பாலக வயதில் சிவதல யாத்திரை சென்றபோது முயலகன் எனும் கால் கை வலிப்பு நோயினால் வாடிய ஒருவருக்கு குணமளித்தார். சிவனருளால் நடந்த அந்த அதிசயத்துக்கு நன்றி சொல்லி இந்தத் தலத்தில்தான் சம்பந்தர் நன்றி சொல்லி பாடினார்.

“ஆரிடம் பாடிலர் அடிகள் காடலால்
ஓரிடம் குறைவிலர் உடையர் கோவணம்
நீரிடம் சடை விடை ஊர்தி நித்தலும்
பாரிடம் பணி செயும் பயில் பைஞ்ஞீலியே”

என்பது சம்பந்தர் பாடிய வரிகள்.

இந்தத் தலம் சூரியனுக்கான தலம். இதனால் புரட்டாசி மற்றும் பங்குனி என அதாவது சரியாக 6 மாதங்களில் உத்தராயணம், தட்சிணாயனம் தொடங்கும் நாளில் இங்கு சூரிய ஒளி சிவன் மேல் படும்.

அந்த அளவு நுணுக்கமாக கட்டப்பட்ட ஆலயம் இது.

இந்த ஆலயத்தின் பிராதானமானவர் சிவன் என்றாலும் எமன் சன்னதி முக்கியமானது, அங்கு தீபம் ஏற்றி வழிபடுதல் நன்று.

இராவணன் வாயில் என்பது இரண்டாம் கோபுர வாயில், இது இராமாயணத்திலே உள்ள ஆலயம் என்பதால் சிறந்த சிவபக்தனான இராவணாலும் வணங்கப்பட்டு அவன் பெயரை தாங்கி நிற்கின்றது.

இந்தக் கோபுரம் வழியாக செல்லும் போது ஒன்பது படிக்கட்டுகள் இறங்கிச் செல்ல வேண்டும். இந்தப் படிகள் இராவணின் சபையில் ஒன்பது நவக்கிரங்களும் அடிமைகளாக இருந்ததை குறிப்பிடுபவை.

சுவாமி சந்நிதிக்கு முன்னுள்ள நந்தியின் அருகே ஒன்பது குழிகள் உள்ளன. அதில் தீபம் ஏற்றி அதையே நவக்கிரகத்துக்கான தீபமாக வணங்குதல் வேண்டும்.

இக்கோவிலில் இரண்டு அம்மன் சந்நிதிகள் உண்டு. அதாவது, சிவனின் தேவியான விசாலாட்சியும், சப்த கன்னியரை தன்னில் இருந்து உருவாக்கிய வடிவமாகவும் அவள் இரு பார்வதியாக இருக்கின்றாள். பார்வதியாலே சப்த கன்னியர் இங்கு வந்து வழிபட்டு வரம் பெற்றனர்.

பாண்டிய மன்னன் கலியுகராம பாண்டியன் இங்குள்ள இறைவனை வேண்டி நோய் நீங்கி இங்கு வழிபட்டு நலம்பெற்றான். சுமார் எட்டு நாட்கள் பிரார்த்தனை செய்து இந்தப் புண்ணிய நதியில் நீராடி குணம் பெற்றார் என்பது ஆதாரச் செய்தி.

இப்படியான ஆலயம் இது. மிக மிகத் தொன்மையும் ஆழ்ந்த சக்தியும், பெரும் தாத்பரியமும் கொண்ட அதிசிறந்த சக்தி மையம் இது.

கார்த்திகை மாதம் இங்கே ஏன் வழிபட வேண்டும் என்பதினை கொஞ்சம் ஆழமாக பார்க்கலாம்.

கார்த்திகை மாதம் என்பது கர்மம் செய்ய வேண்டி வணங்கும் மாதம். சூரிய வழிபாடு செய்து சக்தி பெருக்க வேண்டிய மாதம். முக்கியமாக கர்மம் செய்ய வலிமை வேண்டி எம பயத்தை அகற்றிப் போடவேண்டி வரம் கேட்கும் மாதம்.

அதனால் இந்த ஆலயம் முக்கியம்.

இங்கு சென்று எமனுக்கு தீபமிட்டு அந்த நவக்குழிகளிலும் தீபமேற்றி சிவனுக்கும், அன்னைக்கும் விளக்கிட்டு வணங்கினால் எல்லா அருளும் கிடைக்கும்.

எம பயம் அகலும்.

இந்த ஆலயத்தில் திருக்கடையூர் போலவே 60 மற்றும் 80 ஆம் ஆண்டு பூர்த்திகள் விசேஷம்‍. அங்கு செய்யும் எல்லா பூஜைகளும் இங்கும் உண்டு, அதில் பலனும் உண்டு.

இங்கே வழிபட்டால் பயம் அகலும், கர்மம் செய்யும் ஞானமும் தெளிவும் நிரம்ப ஏற்படும்.

திருமணமாகாதவர்கள் இங்கு வழிபட்டால் நல்ல வரன்கள் அமையும், சப்த கன்னியர் அப்படி வரம்பெற்றார்கள்.

இங்கு வழிபட்டால் கர்மம் சித்தியாகும்; இராமபிரானே அதற்கு பெரும் உதாரணம்; இங்கு வழிபட்டு சென்றுதான் அவர் தன் பிறப்பின் கர்மாவினை சரியாக செய்து முடித்தார்.

சூரியனின் அருள் நிரம்ப கிடைக்கும் தலம் இது. கார்த்திகையில் இது மகா முக்கியம்.

கார்த்திகை சோமவாரத்தில் கட்டாயம் வழிபட வேண்டிய ஆலயம் இது. எல்லா வகை பயங்களையும் போக்கி கர்மத்தை கடமையினை முழுவீச்சில் செய்யவைத்து, முழு வெற்றி கொடுக்கும் ஆலயம் இது.

அதனால் இம்மாதம் சென்று வழிபடுங்கள்; எல்லா நலமும் தெளிவும் ஆரோக்கியமும் பலமும் ஞானமும் ஐஸ்வர்யமும் செல்வமும் அறிவும் எல்லா நல்ல வகைகளும் உங்கள் வீடு தேடிவரும்; பகைவர் ஒழிந்து அச்சமும் கலக்கமும் விலகி நீங்கள் நிம்மதி சூழ பெருவாழ்வு வாழ்வீர்கள்; வாழையடி வாழையாக உங்கள் வம்சமும் வாழும். இது சத்தியம்.

“உடையர் கோவண மொன்றுங் குறைவிலர்
படைகொள் பாரிடஞ் சூழ்ந்தபைஞ் ஞீலியார்
சடையிற் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லவர்க் கில்லை அவலமே.

மத்த மாமலர் சூடிய மைந்தனார்
சித்த ராய்த்திரி வார்வினை தீர்ப்பரால்
பத்தர் தாந்தொழு தேத்துபைஞ் ஞீலியெம்
அத்த னைத்தொழ வல்லவர் நல்லரே.

விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக்
கழுது துஞ்சிருள் காட்டகத் தாடலான்
பழுதொன் றின்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத்
தொழுது செல்பவர் தமவினை தூளியே.”

என்று திருநாவுக்கரசர் போற்றிப் பாடிய தலம் இது.

கார்த்திகை மாதம் வழிபட வேண்டிய சிவாலயங்கள் 02 : திருமங்கலக்குடி.

கார்த்திகை மாதம் வழிபட வேண்டிய ஆலயங்களில் முக்கியமானது திருமங்கலக்குடி. இது கும்பகோணம் மயிலாடுதுறை வழியில் சூரியனார் கோவிலை அண்மித்து உள்ள மாபெரும் சிவாலயம்.

மிகப்பெரிய வரலாறும், தொன்மையும், பெரும் அருளும் இன்றுவரை அது நின்று சிவனுக்கு சாட்சி சொல்லும் சிறப்பும் கொண்டது.

“மங்கலக்குடி ஈசனை மாகாளி
வெங்கதிர்ச் செல்வன் விண்ணொடு மண்ணும் நேர்
சங்குசக்கரதாரி சதுர்முகன்
அங்கு அகத்தியனும் அர்ச்சித்தார் அன்றே.”

என அப்பர் சுவாமிகளால் தேவாரத்தில் பாடப்பட்ட தலம் இது. ஆம். தேவாரம் பாடப்பெற்ற பேறுடைய தலம்.

இந்த ஆலயத்தின் வரலாறு யுகங்கள் தாண்டி தொடங்குகின்றது. இங்குள்ள சிவன் சுயம்பு வடிவானர். முன்பொரு யுகத்தில் நவகிரகங்கள் தங்கள் சாபம் தீர இங்கு சிவனை வழிபட்டு நலமடைந்து தங்கள் கர்மம் செய்ய திரும்பியதில் இருந்து தொடங்குகின்றது.

ஆம்.‌ பெரும் சாபத்தால் தங்கள் கர்மத்தை, கடமையினை செய்யமுடியாமல் கிரகங்கள் தவித்தபோது இந்த ஆலய சிவனேதான் அவர்களின் சாபம் தீர்த்து கடமையினை செய்யவைத்தார்.

அந்த சாபம் காலவா முனிவர் வாழ்வில் வருகின்றது. காலவா முனிவர் தன் ஜாதகத்தை முழுக்க ஆராய்ந்தார், ஜோதிட கலையில் வல்லவரான அவர் தன் சுய ஜாதகத்தை ஆராய்ந்தபோது அதிர்ந்தே போனார்.

அவருக்கு தொழுநோய் வரும் ஆபத்து இருந்தது. உறுதியாக கிரகங்களின் சஞ்சாரத்தால் அது நிகழும் என அறிந்தவர் நவகிரகங்களை நோக்கி தவமிருந்தார்.

அவரின் தவத்துக்கு மெச்சிய நவகிரகங்களும் அவருக்கு அருள் புரிந்து எப்பிணியும் தங்களால் வராது எனச் சொல்லி வரமருளினார்கள்.

இந்த வரத்தை கேட்ட பிரம்மன் கடும் ஆத்திரம் அடைந்தான். காரணம், நவகிரகங்கள் என்பது வெறும் வேலைக்காரர்கள், ஒருவன் கர்மாவினை இயங்க வைக்கும் சக்கரங்கள், ஒருவனின் கர்ம பலன்படித்தான் அவர்கள் வரமருள அல்லது சிரமப்படுத்த முடியும், எதுவும் அவனவன் கர்மத்தை மீறி அவர்கள் செய்ய முடியாது, அப்படியான நவக்கிரகங்கள் எப்படி வரமருளலாம் என கொதித்த பிரம்மன் அந்த தொழுநோய் அவர்களை தாக்கட்டும் எனச் சபித்தான்.

அந்த சாபம் தீர அந்த நவக்கிரகங்கள் இந்த திருமங்கலக்குடி தலத்தில் வழிபட்டனர். கார்த்திகை முதல் தை வரையிலான காலகட்டங்களில் வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் உண்டு 12 ஞாயிற்றுகிழமையில் வழிபட்டு விமோசனம் பெற்றார்கள்.

அதிலிருந்து இந்தத் தலத்தின் வரலாறு அறியப்படுகின்றது. பெரும் அருளோடு அன்றிலிருந்து அவ்வாலயம் துலங்கி ஜொலிக்கின்றது.

இத்தலம் “பஞ்ச மங்கள தலம்” எனும் பெருமையினை பெற்றது. இங்கு அம்பாள் பெயர் மங்களாம்பிகை. இந்த கோவிலில் விமானம் மங்கள விமானம், இத்தல விநாயகரின் பெயர் மங்கள விநாயகர், இத்தல தீர்த்தம் மங்கள தீர்த்தம் ஆகிய ஐந்தும் இத்தலத்தில் அமைந்திருப்பதால் இது பஞ்ச மங்களம் என்றாயிற்று.

இரண்டு பிரகாரங்கள் இந்த ஆலயத்துக்கு உண்டு. நவக்கிரகங்கள் உணவு உண்ட வெள்ளெருக்கு இங்கு தல விருட்சமாகும், அது வடமொழியில் கோங்கிலவம் எனப்படும் .

முன்மண்டபத்தில் அம்பாள் மங்களநாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் கோவில் கொண்டிருக்கும் சிவபெருமான் நீண்டுயர்ந்த பாண வடிவில் சுயம்பு லிங்கமாக வீற்றிருப்பார்.

சந்திரசேகரர், மயில் வாகனர், நால்வர், பிரதோஷ நாயகர் உற்சவ மூர்த்திகள் உண்டு. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, ரிஷபாரூடர், பிரம்மா, துர்க்கைக்கு சந்நிதிகள் உள்ளன. உள் சுற்றில் விநாயகர், ஆறுமுகர், கஜலட்சுமி, பைரவர் சந்நிதிகளும், நடராஜ சபையும் உள்ளன.

இரண்டு நடராஜ உற்சவ மூர்த்தங்கள் இங்கு காணப்படுவது சிறப்பு. ஒருவர் ஆனித் திருமஞ்சன நாளிலும், மற்றொருவர் ஆருத்ரா தரிசன நாளிலும் திருவீதி உலா வருவர்.

இத்தலத்து இறைவியை வழிபட, திருமணத் தடை நீங்கும்; மாங்கல்ய பலம் நீடிக்கும். ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கிட்டும் என்பது பக்தர்களின் அனுபவம். கார்த்திகை மாத முதல் ஞாயிறு தொடங்கி, தொடர்ந்து 12 ஞாயிற்றுக் கிழமைகள் – தயிர் சாதத்தை வெள்ளெருக்கு இலையில் வைத்து சுவாமிக்கு நிவேதனம் செய்து அதை உண்ண, நோய் குணமடைடையும்.

இன்றும் இத்தலத்தில் ஞாயிறு மதியம் உச்சிக்கால பூஜையில் தயிர் சாதம் பிரசாதமாக வெள்ளெருக்கு இலையில் தரப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் தயிர்சாதம் அன்னதானம் செய்வதால் அஷடமச்சனி, 7 1/2 ஆண்டுச்சனி, தசாபுக்தி தோஷம் ஆகியவை களைந்து போகும்.

ம‌ங்களநாயகியின் திருக்கரத்தில் இருக்கும் மாங்கல்ய சரடு பெண்களுக்கு பிரசாதமாக தரப்படும், மங்காளம்பிகைக்கு 5 வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டால் மாங்கல்ய தோஷம், களத்திர தோஷம் ஆகியவை நீங்கப்பெற்று திருமண தடைகள், குடும்ப தடைகளெல்லாம் அகலும்.

இத்திருக்கோவிலுள்ள அகத்தீஸ்வரர் லிங்கத்திற்கு அமாவாசை தினத்தில் அபிஷேகம் செய்வதால் பூர்வ ஜன்ம தோஷம், பித்ருக்கள் சாபம் எல்லாமே நீங்கும்.

இங்கே மாபெரும் சாட்சியாக நிற்பது அந்த 11 ஆம் நூற்றாண்டில் நடந்த பெரும் அதிசயம்.

அப்போது முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அவனிடம் அலைவாணர் எனும் சிவபக்தர் மந்திரியாய் இருந்தார். கருவூலம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அலைவாணர் அரசன் பணத்தையெல்லாம், அரசாங்க பணத்தயெல்லாம் சிவபணிக்கு செலவு செய்தார், குறிப்பாக திருமங்கலக்குடி ஆலயத்துக்கே செவழித்தார்.

அரசாங்க பணம் மாயமாய் மறைவதை அறியவந்த அரசன் பெரும் நிதியினை அவர் களவாடியாதகவும், ராஜதுரோகம் செய்ததாகவும் சொல்லி மரண தண்டனை அறிவித்தான்.

அந்நிலையிலும் தன் உடலை திருமங்கள குடியில்தான் தகனம் செய்யவேண்டும், அந்த சிவாலயத்தை பார்த்தபடிதான் தன் உடல் சாம்பலாக வேண்டுமென சொல்லி தலையினை கொடுத்தார்.

அவரின் இறுதி விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அவர் உடலும் தலையும் தனி தனி ஆக்கப்பட்டு இரண்டும் திருமங்கலக்குடிக்கு எடுத்து செல்லப்பட்டது, விஷயம் அறிந்த அவர் மனைவி திருமங்களகுடி கோவிலில் சென்று கதறினாள், எல்லா பணமும் அவர் இந்த ஆலயத்துக்கு அல்லவா செலழித்தார், நீர் சாட்சி சொல்லவேண்டாமா எனக் கதறி கதறி அழுதாள்.

அப்போது ஒரு ஒலி கேட்டது, “பெண்ணே அஞ்சாதே, என் அடியார் உயிருடன் வருவான்’

அதன்படி அவரின் தலையும் உடலும் தானே சேர்ந்து அவருக்கு உயிரும் திரும்பிற்று, வெறும் முண்டத்துடன் ஊரை நெருங்கும் போது அவர் எழுந்து நின்ற அதிசயம் கண்டு அரச காவலர்கள் அலறி அடித்து ஓடினார்கள்.

தனக்கு மீள பெரும் அதிசயத்தோடு உயிர்தந்த சிவனை நோக்கி “எனக்கு பிராணன் தந்த நாதா” எனக் கதறி அழுதார் அலைவாணர், அன்றிலிருந்து இந்த சிவனுக்கு பிராணாநாதர் எனும் பெயர் வந்தது.

இந்த ஆலயத்தின் தாத்பரியம், இது நவகிரகங்களை கட்டுப்படுத்தும் முழுக்க சிவனிடம் சரணடைவோரை அவர்களின்மரண பயத்தில் இருந்து விடுவித்து முழு தைரியமாக காரியம் செய்யவைப்பது, கர்மம் கழிக்க வைப்பது.

ஆழ கவனித்தால் அது புரியும்.

காலவா முனிவருக்கு கர்மவினைப்படி தொழுநோய் வரவேண்டும், அவரோ அதனை நவகிரகங்களின் தள்ளிவிட்டார், நவக்கிரகங்களின் சாபத்தை சிவன் இங்கே ஏற்று அவர்களை அவரவர் கர்மத்தை செய்ய வைத்தார்.

அப்படியே இந்த அலைவாணருக்கும் கர்மவினைபடி மரணம் வந்தது, அங்கேயும் சிவன் வந்து அவர் சாபம் களைந்து அவரை மீண்டும் எழுப்பி கர்மவினை செய்யவைத்தார்.

ஆக, தொழுநோய் எனும் மரணம் தரும் நோய், மன்னவன் தண்டனை எனும் ஆபத்து என இரு இடங்களிலும் சாவிலிருந்து தன் பக்தர்களை சிவன் காத்தார்.

சாவு என்றால் எமன், இங்கு எமபயத்தை மரண பயத்தை அகற்றி, அந்த பயத்தால் வரும் துன்பங்களை தடைகளை அகற்றி அவரவர் வாழ்வின் பலனை கர்மத்தை முழுக்க செய்ய சிவன் அருள்புரிவார்.

கார்த்திகை மாதம் கர்மத்தை செய்ய வரம் வேண்டும் மாதம், எல்லா அச்சமும் ஏன் மரண பயமும் தாண்டி கர்மத்தை செய்ய வரம் வேண்டும் காலம்.

மரணபயம் எப்போது வராது என்றால் தன் கர்மத்தை சரியாக செய்யும் ஒருவனுக்கு ஒரு காலமும் வராது.

நவக்கிரகங்கள் அதனதன் விருப்பத்தால் அல்ல, ஒருவனின் கர்மவினைப்படி அவனுக்கு வரமருள நியமிக்கப்பட்டவை, ஆனால் அவை கர்மம் மறந்து தங்கள் விருப்பப்படி செய்தபோது, தங்கள் கர்மத்தை கடமையினை மறந்தபோது சாபத்துகுள்ளாயின‌.

அந்த சாபத்தால் அதனதன் கடமையினை செய்யமுடியவில்லை. நவகிரகங்கள் கடமையினை செய்யாவிட்டால் மானுடர் கர்மம் கழிக்க முடியாது, குரு அறிவை கொடுக்க முடியாது, சனி சோதிக்க முடியாது, சுக்கிரன் இன்பங்களை கொடுக்க முடியாது.

அப்படி நவக்கிரகங்கள் சோர்ந்து கிடந்தன. அந்தக் கிரகங்கள் சாபம் நீங்கி அவற்றின் கர்மாவினை செய்யவைத்தார் சிவன்.

அங்கும் எமன் தோற்றுப்போனான், தொழுநோய் கிரகங்களால் கொடுக்கப்பட்டிருந்தாலும் உயிரை எமனே கடைசியில் பிடித்திருப்பான் அங்கே எமன் தோற்றே ஓடினான்.

அப்படியே கர்மவினைப்படி அலைவாணருக்கு மரணம் நேர்ந்தது. ஆனால், உத்தமமான சிவனடியாரான அவரிடம் எமன் தோற்று ஓடினான். சிவன் தன் அடியார் உயிரை மீள கொடுத்து கர்மம் செய்யவைத்தார், அலைவாணரின் மரண பயம் அன்றே நீங்கிற்று.

அம். இப்படி ஒருவரின் கர்மத்தை செய்யவரும் தடைகள் எதுவாயினும் அது மரணமே ஆனாலும் நீக்கி தரும் ஆலயம் இது.

நோய் உங்கள் கர்மம் செய்ய தடை என்றால் இங்கே வந்து கார்த்திகை முதல் தை வரையிலான காலங்களில் ஞாயிற்றுக்கிழமையில் சிவனை வழிபட்டு வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் உண்டால் எந்த கொடிய நோயும் 12 ஞாயிற்று கிழமையில் நீங்கும், உங்கள் கர்மாவினை செய்ய வழி பிறக்கும்.

திருமணம் என்பதும் கர்மா, வேலை முதல் எல்லாமே கர்மா, அப்படி வாழ்வில் எதெல்லாம் கர்மத்துக்கு தடையோ அதை எல்லாம் நீக்கித் தரும்.

அலைவாணர் மனைவியின் தாலி காத்த ஆலயம் என்பதால் இங்கு வழிபட்டால் பெண்களின் தாலி நிலைக்கும்.

ஆம். அலைவாணர் மனைவிக்கு தாலி திரும்ப கொடுத்ததால் அன்னை “மாங்கல்யம் கொடுத்த அருள்மிகு மங்களாம்பிகை” எனக் கொண்டாடப்படுகின்றாள்.

இந்த ஆலயம் சென்று சிவனை வழிபடுங்கள், அன்னையினை வேண்டுங்கள், கார்த்திகை முதல் தை வரையிலான காலக்கட்டத்தில் ஞாயிற்றுகிழமைகளில் வழிபட்டு வெள்ளெருக்கில் தயிர்சாதம் உண்டால் எல்லா நோயும் தீரும், பிணி அகலும்.

இந்த கார்த்திகை முதல் தை வரையிலான காலக்கட்டங்களில் ஐந்து வெள்ளி கிழமை பெண்கள் வழிபட்டால் எல்லா நலனும் கிட்டும், திருமணத் தடை அகலும், மாங்கல்ய பலம் வலுக்கும்.

நவக்கிரகங்களில் எல்லா கிரகங்களின் பாதிப்பும் இத்தலத்தில் பூர்த்தியாகும். கார்த்திகை முதல் தை வரையிலான காலகட்டங்களில் வழிபட்டு எல்லா நன்மையினையும் சிவனிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் கர்மத்தை செய்ய தடையாய் இருக்கும் எல்லா வினைகளையும் நோய்களையும் பிணி முதல் அச்சம் எல்லாவற்றையும் சிவன் களைந்து எரித்துப் பொடுவார். அச்சம் என்பதே உங்களுக்கு வராது, கர்மாவினை சரியாக செய்வீர்கள். இது சத்தியம்.

இந்த ஆலயத்தின் அருகில்தான் சூரியனார்கோவில் உண்டு, அந்த சூரியனார் கோவில் செல்லும் முன் இங்கு வழிபட்டு சென்றால்தான் முழு பலன் கிட்டும்.

இந்த ஆலயம் எப்படியான பலத்தை தந்து கர்மத்தை செய்யவைக்கும் என்பதற்கு சைதன்ய சித்தர் வாழ்வே சாட்சி, அது இந்த ஆலயத்தின் அருகில்தான் இருக்கின்றது.

மகான் சைதன்ய சித்தர் இந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர், இளம் வயதிலே துறவறம் ஏற்ற மகான் இப்பக்கமே வாழ்ந்தார், அனுதினமும் இந்த திருமங்கலக்குடி பிராணநாதரை வணங்குதல் அவரின் வழமை, அப்பக்கம் எல்லா ஆலயங்களுக்கும் செல்வார், எப்போதும் தவம் தியானம் என அமர்ந்திருப்பார், அவருக்கு பக்த கோடிகள் நிரம்ப உண்டு.

அப்படியான மகானின் பக்தர்தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், ஒரு சுத்தமான சனாதனியாக முருகப்பெருமானின் பக்தராக வாழ்ந்த தேவர் இவரை குருவாக கொண்டாடினார்.

1957ல் நடந்த இம்மானுவேல் சேகரன் கொலை காரணமாக தேவர் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்பொது அவர் இருந்த புதுக்கோட்டை சிறைக்கே அவரை காணச் சென்றார் சைதன்ய சித்தர்.

அவரை கண்டதும் தேவர் மனமுருகி சொன்னார், “ஐயா, என் குருவே! பாவிகள் பாதம்படும் இந்த சிறைக்கு உங்களை போன்ற மகான்கள் வரலாமா? என்னால்தானே இந்நிலை உங்களுக்கு வந்தது” என வருந்தினார்.

கருணையே உருவான அந்த சைதன்ய மகான் சொன்னார், “மகனே உன் கர்மவினையால் நீ இந்த பழி ஏற்றாய், ஆனால் விரைவில் விடுதலை அடைவாய், நீ வெளிவரும்போது நான் இருக்கமாட்டேன் என்பதாலே உன்னைக் காணவந்தேன்” எனச் சொல்லி அவரை வாழ்த்தி நீறு பூசிவிட்டு விடைபெற்றார் சித்தர்.

அப்படியே சில நாட்களில் ஜீவசமாதியானார், அவர் சமாதி திருமங்கலக்குடி அருகே சித்திவிநாயகர் கோவில் அருகே அமைந்துள்ளது.

புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 1959 ஜனவரி 7 ஆம் தேதி, நீதிபதி அனந்த நாராயணன் சரியாக 2 மணிக்கு தேவர் குற்றவாளி இல்லை என விடுதலை செய்தார். சம்பிரதாயங்கள்முடிந்து மாலை வெளிவந்த தேவர் ஐயா அப்படியே இந்த சித்தர் சமாதிக்கு வந்து அமர்ந்து தியானம் செய்தார்.

இப்படி பசும்பொன் தேவருக்கு குருவாய் விளங்கிய அந்த சைதன்ய சித்தர் இந்த கோவிலின் அடியார்.

அந்தக் குருவின் அருளாலே கடைசிவரை மரணத்துக்கு அஞ்சாமல் தன் கடமையினை செய்து, எல்லா தடையும் தாண்டி கடைசியில் ஒரு அறுவை சிகிச்சை செய்தால் வாழலாம் என ஆசைகாட்டியபோது, என் கர்மம் முடிந்தால் நான் கிளம்பவேண்டுமே அன்றி வாழ்வதற்காக ஆசை கொண்டு முயற்சிக்க கூடாது. அது பாவம் என மகா சுத்தமான கர்மயோகியாக விடைபெற்றார் பசும்பொன் தேவர் அவர்கள்.

என்றோ நடந்த காலவா முனிவர் வாழ்வு, ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய அலைவாணார் வாழ்வு தாண்டி கண்முன் பசும்பொன் தேவர், அவர் குருநாதர் என நம்முன் சாட்சி சொல்லும் ஆலயம் இது.

மரணபயமில்லாமல் தேவர் அய்யா வாழ்ந்து கர்மம் செய்ததற்கும் இன்றும் அவர் சாவை வென்று யோகியாய் நிற்பதன் காரணத்தில் இந்த திருமங்கலக்குடி ஆலயமும் முக்கிய பங்கு உண்டு.

அந்த மாபெரும் வரம் உங்களுக்கும் கிடைக்கும். இந்த கார்த்திகை முதல் தை வரையிலான ஞாயிற்று கிழமைகளில் தவறாது சென்று வணங்கி பெரும் வரத்தை பெற்றுக்கொள்வது உங்கள் பாக்கியம்.

கார்த்திகை மாதம் வழிபட வேண்டிய சிவாலயங்கள் 03 : திருநெடுங்களம்.

கார்த்திகை சோமவாரத்தில் வழிபட வேண்டிய முக்கிய சிவாலயங்களில் திருநெடுங்க‌ளம் ஆலயமும் ஒன்று. இது திருச்சி அருகே அமைந்துள்ளது.

இங்குச் சிவன் திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர் என அமர்ந்திருக்க, அன்னை மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி என அழைக்கப்படுகின்றார்.

சம்பந்த பெருமான் தன் தேவாரத்தில் இந்த ஆலயத்தின் “இடர் களையும் பதிகம்” என ஈசன் மேல் பத்துப் பாடல்களைப் பாடியுள்ளார், இப்படித் தொடங்கி பாடியுள்ளார்.

“மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுன்னைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களமேயவனே”

அப்படியான சக்திமிக்க ஆலயம் இது. மிக மிகத் தொன்மையான வரலாறும் அன்றில் இருந்தே சிவன் அருள் ஆறாகப் பெருகி ஓடும் அற்புதமான தலம் இது.

பார்வதி தேவி சிவனை தவமிருந்து அடைந்த தலம் என்பதால் சிவசக்தி தலம், அர்த்த நாரீஸ்வரர் தலம் எனக் கொண்டாடப்படுகின்றது.

இந்த ஆலயத்தின் சிறப்பு மிக மிக வித்தியாசமானது, அதாவது சிவன் அர்த்த நாரீஸ்வரர் கோலத்தில் அருள் பாலிப்பார், அதே நேரம் அந்த காட்சி இல்லாமல் லிங்க வடிவிலே அமர்ந்திருப்பார்.

ஒரே கருவறையில் இடபாகத்தை அம்மனுக்கு விடுத்து சிவன் வலபாகம் அமர்ந்திருப்பார், ஆனால் அன்னைகுரிய இடம் காலியாக இருக்கும்.

அதே நேரம் இங்கே சிவனும் அன்னையும் உண்டு என்பதை சொல்ல இருவிமானங்கள் அமைக்கப்பட்டிருக்கும், காசிக்கு அடுத்து அந்த இரு விமானம் இங்கேதான் உண்டு.

தட்சன விமானம், கைலாய விமானம் என அதற்குப் பெயர்.

சிவன் அன்னையினை அரூபியாய் தன்னகத்தே கொண்டு, சிவசக்தி கோலத்தில், அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் அருள்பாலிக்கின்றார் எனச் சொல்லும் தலம் இது.

இங்கே அகத்தியர் வந்து வழிபட்டிருக்கின்றார். அவர் உருவாக்கிய தீர்த்தம் அகத்திய தீர்த்தம் என இப்போதும் உண்டு, அகத்தியர் சன்னதிக்கு எதிரே உண்டு, அதன் நீர் ஒரு காலமும் வற்றுவதில்லை, கை தொடும் தூரத்தில் எப்போதும் அங்கே நீர் உண்டு

இந்த அலயத்தின் நாதர் மேல் ஆடி மாதம் 7 முதல் 12ம் தேதி வரை காலை சூரியக்கதிர் விழும், ஆடிமாதம் அம்மனுக்கானது என்பதாலும், சிவனில் பாதி அம்மன் என்பதாலும் இந்த ஏற்பாடு அன்றே செய்யப்பட்டிருந்தது.

வந்திய சோழ மன்னன் என்பவன் இந்த தலத்தில் தன் இடர் நீங்கப்பெற்றான், அவனின் நோய் தீர்ந்தது. அத்தோடு அவன் சிவனின் தரிசனத்தையும் பெற்றான். இதனால் இத்தல இறைவன் ‘நித்திய சுந்தரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்த தலத்தின் தட்சிணாமூர்த்தியின் வடிவம் அருமையானது, யோக தட்சிணாமூர்த்தியான அவர், தன் மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் கொண்டு யோக கோலத்தில் காட்சி அருள்வார்.

உள்பிரகாரத்தில் தென்கிழக்கில் சோமாஸ்கந்தர், சந்திரசேகர் சன்னதிகள் உள்ளது. தென்பிரகாரத்தில் சப்தகன்னியர்களும், தட்சிணாமூர்த்தியும், ஐயனாரும் அருள்பாலிக்கிறார்கள்.

கன்னி மூலையில் வலம்புரி விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது.

இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயங்கள் சிவனை தவிர இரண்டு; ஒன்று பைரவர் சன்னதி, இரண்டாவது முருகப்பெருமான் சன்னதி.

இங்கே சிவசன்னதியில் விமானம் மட்டும் இரண்டு அல்ல, பைரவரும் இருவர்.

சேத்திர பைரவர், சர்ப்ப கால பைரவர் என்று இரண்டு பைரவர்கள் இங்கு உண்டு. சேத்திர பைரவர் வாகனத்துடன் இருப்பார், சர்ப்பகால பைரவருக்கு வாகனம் இல்லை.

சர்ப்ப கால பைரவர் திருமேனி முழுவதும் படர்ந்து இருக்கின்றன. இப்படி திருமேனி முழுவதும் சர்ப்பங்கள் பின்னி படர்ந்திருக்கும் காலபைரவரை வேறு எங்கும் காணமுடியாது..

இந்த சர்ப்ப கால பைரவரை வழிபட்டால், கால சர்ப்ப தோஷம், நாக தோஷம், ராகு கேது தோஷம் என எல்லாம் விலகும், இந்த பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் தீபமேற்றி வழிபாடு செய்ய எல்லா தடையும் அகலும்.

இந்த சேத்திர பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், எம பயம் இருக்காது.

ஆம். கார்த்திகை மாத தலங்கள் எல்லாமே எம பயம் நீக்குபவை, இங்கு சேத்திர பைரவர் சன்னதியில் வழிபட்டால் அந்த எமபயம் நீங்கும், மரணம் பயம் அகலும்.

கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி இங்கு விசேஷம் என்றாலும் கார்த்திகை முழுக்க வழிபடுதல் கூடுதல் பலனை தரும்.

இந்த ஆலயத்தின் மேற்கு பிரகாரத்தில் தெய்வானையுடன் முருகன் தனி சன்னதி உள்ளது.

ஆம். இந்தத் தலம் முருகப்பெருமானுக்கு விசேஷமான தலம். அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

வள்ளலார் பெருமான் தாம் பாடி அருளிய‌ விண்ணப்பக் கலிவெண்பாவில், “துன்று கயல் கண்ணார் நெடும் களத்தைக் கட்டு அழித்த மெய்த்தவர் சூழ் தண்ணார் நெடுங்கள மெய்த் தாரகமே” என்று போற்றி உள்ளார்.

இங்கே ஒரு வழமை உண்டு. அதாவது விரலி மஞ்சளை இடிக்கும் உரலும் அந்த மஞ்சளை அன்னைக்கு பூசும் வழமையும் உண்டு.

இது திருமண தடைகளை நீக்கும்; கணவன் மனைவியினை சேர்த்துவைக்கும் வழிபாடு; பார்வதி தேவி செய்து வழிகாட்டிய இக்காரியம் இன்றளவும் பின்பற்றப்படுகின்றது.

முப்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களை கொண்ட இந்த ஆலயத்தின் ஒரு கல்வெட்டு இத்தலத்தை, “பாண்டிகுலாசினி வளநாட்டு வடவீர நாட்டு திருநெடுங்களம்” என்றும்; இறைவன் பெயர் “நெடுங்களத்து மகாதேவர் ” என்றும் குறிக்கின்றது.

இங்கு உள்ள வராஹிக்கு விரலி மஞ்சள் இடித்து இராகு காலத்தில் ஞாயிறு, வெள்ளி நாட்களில் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வதால் திருமண தடை நீங்கும், குடும்பம் சேரும், நல்ல வரன் அமையும்.

இக்கோவில் சிவனை ஆறுவாரங்கள் நெய் தீபமேற்றி வழிபட்டால் பதவி உயர்வு, மக்களிடம் செல்வாக்கு என எல்லாம் கிடைக்கும்.

இங்குள்ள சிவனுக்கு மாதுளம்பழம் அபிஷேகம் செய்வதால் நினைத்த காரியம் நடக்கும் என்பதால் இந்த நடைமுறை இங்கு பிரசித்தியானது.

ஆக, ஆழ கவனியுங்கள் இந்த தலத்தின் தாத்பரியம் புரியும்.

இத்தலம் சிவனும் பார்வதியும் ஒரே கருவறையில் இருக்கும் தலம், அதாவது அன்னை அரூபமாய் அங்கே சேர்ந்திருக்கின்றாள், சன்னதியின் ஒரு விமானம் அதைச் சொல்லும்.

இரு பைரவர்கள் அங்கே விசேஷம் , பைரவர் எப்போதும் கர்மத்தின் காவலாளி, அதே நேரம் இன்னொரு பைரவர் பாம்புகள் சூழ அமர்ந்திருக்கின்றார், பாம்புகள் அவர்மேல் பின்னி கிடக்கின்றன‌, அவருக்கு சிகப்பு நிற பூக்களால் அர்ச்சனை செய்யப்படுகின்றது.

சிவனுக்கு மாதுளம்பழ அபிஷேகம் விசேஷம். இதுவும் சிகப்பு நிறம்.

ஆம். இந்தப் பிறப்பில் ரத்த பந்தத்தில் ரத்த ஓட்டத்தில் நம் கர்மத்தை செய்ய, ரத்த உறவுகளுடன் நம் கர்மாவினை சரியாக செய்யும் வரம் அருள, அது வாழ்க்கை துணையோ குடும்பமோ குலமோ அனைவரின் ஒத்துழைப்புடன் கர்மத்தை சரியாக செய்ய வரமருளும் ஆலயம் இது.

ரத்தம் சம்பந்தமான கிரஹம் செவ்வாய், செவ்வாயின் அதிபதி முருகப்பெருமான். இங்கு எழுந்தருளியிருப்பது அதனாலே.

இந்தத் தலம் ரத்த உறவினாலும் ரத்த பந்தத்தினாலும் வரும் சிக்கல்களை தீர்த்து அவர்களுக்கும் உங்களுக்குமான பெரும் பந்தத்தை நினைத்துத் தரும்.

இந்த ஆலயத்தில் கார்த்திகையில் வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை வரும், நல்ல பிணைப்பு ஏற்படும். அந்த நல்ல பலத்தில் அவரவர் கர்மாவினை கடமையினை செய்ய பெரும் பலம் கிடைக்கும்.

இந்த தலத்தில் வழிபட செல்லும் போது மாதுளை பழத்தினை சிவனுக்கும், செவ்வரளி பூக்களை பைரவருக்கும் சாற்றி வழிபடுங்கள், எல்லா பந்தமும் வலுக்கும், கர்மா உறுதிபடும்.

பெண்கள் வராஹி அன்னைக்கு மஞ்சள் இடித்து வழிபட தாம்பத்யம் வலுக்கும், தாலி பாக்கியம் நிலைக்கும், மங்களம் வீட்டில் பெருகும்.

அச்சம் அகலும், தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும், குடும்பத்தில் அமைதி நிலவும், மனம் தெளிவடையும்.

முடிந்தவர் அங்கே வழிபடுதல் நன்று, கார்த்திகை சோமவாரத்தில் வழிபடுதல் மிக்க நன்று, அந்த நெடுங்களநாதர் எல்லா ஐஸ்வரியமும் தந்து உங்களை ஆசீர்வதிக்க தன் தேவியுடன் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றார்.

சம்பந்தர் வரிகளில் அந்தச் சிவனை போற்றிப் பாடலாம்.

“கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
மனத்தகத்தோர் பாடலாடல் பேணி இராப்பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.”

கார்த்திகை மாதம் வழிபட வேண்டிய சிவாலயங்கள் 04 : திருமணஞ்சேரி.

கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.

கிழக்கே விக்கிரமன் என்னும் காவிரியாறு, மேற்கில் கிளை நதியான காளி வாய்க்கால், இரண்டுக்கும் நடுவில் அமைந்த திருத்தலமே திருமணஞ்சேரி.

“பட்ட நெற்றியர் பாய்புலித் தோலினர்
நட்ட நின்று நவில்பவர் நாடொறுஞ்
சிட்டர் வாழ்திரு வார்மணஞ் சேரியெம்
வட்ட வார்சடை யார்வண்ணம் வாழ்த்துமே”

எனத் தேவாரத்தில் பாடப்பட்ட அந்தத் தலம் கார்த்திகை மாதம் வழிபட வேண்டிய முக்கிய ஆலயங்களில் ஒன்று. காரணம், அந்த ஆலயத்தின் தாத்பரியம் அப்படியானது. சிவனோடு சக்தி இணைந்த அந்த ஆலயம் ஆத்மார்த்தமான ஒன்றினைப்பினை பிறவிக்கு அளித்து நிம்மதியும் நிறைவும் கொடுக்கும் சக்தி கொண்டது.

இந்துக்களின் புராணங்களும் அந்த செய்தி வழி வந்த ஆலயங்களும் வெறும் வேடிக்கை அல்ல; கற்பனை அல்ல. அவை ஆழ்ந்த பொருளும் ஆன்மீக லௌகீக தத்துவ குவியல்களும் கொண்டவை. எல்லா காலத்துக்கும் எல்லாருக்கும் அவசியமானவை.

இதன் வரலாறு சிவனும் சக்தியும் பிரிந்ததில் இருந்து தொடங்குகின்றது. சாபம் காரணமாக சிவனை பிரிந்து பசுவாக பிறக்கின்றார் பார்வதி, அவரை காக்கும் இடையனாக பெருமாள் அவதரிக்கின்றார்.

சாபம் தீரும் காலத்தில் பசுவாய் இருந்த தேவி தன் உருவினை அடைய, பிரம்மனே அவர்கள் திருமணத்தை நடத்தி வைக்கின்றார்.

இந்தத் திருமணக் கோலம் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் இன்றும் சிற்பமாக உண்டு அந்த வரலாறு நடந்த ஆலயம் அது.

திருமணம் என்றால் ஒன்றுபட்ட மணவாழ்வு தொடங்கிய இடம், சேரி என்றால் எல்லோரும் சேர்ந்திருத்தல். தேவர்களும் திருமாலும் புடைசூழ சிவன் பார்வதியினை ஏற்றுக்கொண்டார்; மீண்டும் தன் இடபாகத்தில் இடம் கொடுத்தார்; இருவரும் ஒரே உடலாய் ஒரே சிவசக்தியாய் ஆனார்கள் என்பதுதான் அங்குள்ள தாத்பரியம்.

இந்தத் தலத்தின் இறைவனின் திருநாமம் உத்வாக சுவாமி. இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு. கல்யாண சுந்தரேஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீகோகிலாம்பாள்.

சிவன் கோயிலுக்கு அருகில் சுமார் 200 மீட்டர் தொலைவில் இருப்பது மேலத் திருமணஞ்சேரி அங்கேதான் திருமணத்திற்கு வந்த முப்பத்து முக்கோடி தேவர்களை எல்லாம் விஷ்ணு வரவேற்றார். அதனால் இது எதிர்கொள்பாடி என்றும் பெயர் பெற்று நிலைத்துள்ளது.

சுந்தரேஸ்வரர் கோயிலில் முக்கியமான திருவிழா சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமே. அந்த திருக்கல்யாணத்திற்கு என்றைக்கும் சீர்வரிசைகள் லக்ஷ்மி நாராயண பெருமாள் குடிகொண்டிருந்த எதிர்கொள்பாடியில் இருந்து தான் கொண்டு செல்லப்படுகின்றன. வழக்கத்திற்கு மாறாக இந்த ஊரில் பெருமாள் மேற்கு பார்த்துக் காட்சியளிக்கிறார்.

அதற்கு ஒரு காரணம், திருமணத்திற்காகச் சுந்தரரும், கோகிலாம்பாள் கிழக்கு நோக்கி அமர அதை நடத்தி வைத்த மைத்துனர் மகாவிஷ்ணு மேற்கு பார்த்து நமஸ்காரம் செய்வதால் இப்படி காட்சியளிக்கப்படுகிறது.

மகாவிஷ்ணுவிடம் எப்போதும் லட்சுமி தேவி, பக்கத்திலும் அல்லது மார்பிலும் இருப்பது வழக்கம். ஆனால் இந்த கோயிலில் தாயாரை தன் மடியிலேயே தாங்கிய கோலத்துடன் மகாவிஷ்ணு வரம் அருள்கின்றார்.

இந்த கோவில் திருமண தடைகளை நீக்கும், எதெல்லாம் இந்தப் பிறவியில் உங்களுக்கு கிடைக்க வேண்டியது தடைபட்டு நிற்குமோ அதை எல்லாம் அருளும்.

பொதுவாக, பெண்களின் திருமண தடைக்கு களத்திர தோஷம் முக்கியானது, அது அந்த வம்சத்தில் நடந்த பல பாவகர்மாக்களின் தண்டனையாய் ஜாதகத்தில் அமையும்.

இந்தத் தலம் அந்த களத்திர தோஷத்தை போக்கும், திருமண வரம் எளிதாகும்.

இந்தக் கோயிலில் உள்ள சப்தகிரி தீர்த்தத்தில் குளித்து விட்டு பிறகு மூலவராக உள்ள கல்யாண சுந்தரரைத் தரிசிக்க வேண்டும். பிறகு அர்ச்சனை செய்து அங்குத் தீபம் வைக்கப்படும் மேடையில் 5 தீபம் ஏற்ற வேண்டும்.

திருமண பாக்கியம் பெற வழிபடுவோர் அங்குத் திருமண மேடையில் வழங்கப்படும் எலுமிச்சை பழத்தை உப்பு, சர்க்கரை சேர்க்காமல் தண்ணீரில் கலந்து குடிக்கவேண்டும். பிரசாதமாக வழங்கப்படும் மாலையைப் பத்திரப்படுத்தி வீட்டிற்குச் சென்றதும் அதனை ஒரு முறை போட்டுக்கொண்டு இறைவனை மனதார வணங்க வேண்டும். பிறகு கோயிலில் கொடுக்கப்படும் பிரசாதமான விபூதி, குங்குமத்தைத் தினமும் பயன்படுத்த வேண்டும்.

இங்கே பெருமாள் கோயிலில் உள்ள தன்வந்திரி பகவானுக்கு ஹஸ்த நக்ஷத்திரம் மற்றும் புதன் கிழமைகளில் மூலிகைத் தைல அபிஷேகம் செய்வதும், நெய் தீபம் ஏற்றி 11 முறை வலம் வருவதும் உடல் ஆரோக்கியத்தை அளிக்கும். ராகு தோஷம் உள்ளவர்கள் ராகு காலத்தில் ஐந்து தலை நாகர் சிலைக்குத் தீபம் ஏற்றி வழிபட்டால் தாக்கம் குறையும்.

திருமணஞ்சேரி அர்த்த நாரீஸ்வரர் சிற்பம் அந்த கோவிலின் மொத்த தாத்பரியத்தையும் தாங்குகின்றது, சிவனும் சக்தியும் இணைந்து ஒரே உயிரான இத்தலத்தில் ஜீவாத்மா பரமாத்வாவோடு இணையும் வரம் கிட்டும் என்பதையும், கர்மத்தை நல்லபடியாக செய்ய நல்ல துணை இறையருளால் அருளப்படும் என்பதையும் இந்த அர்த்த நாரீஸ்வரர் தத்துவம் சொல்கின்றது.

எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் கோயிலுக்குள் கொடி மரத்தின் அருகில்தான் இருப்பார். ஆனால், இந்தக் கோயிலில் ராஜகோபுரத்துக்கு முன்னால் நந்தி தேவர் உள்ளார். இவர் சுயம்புவாக எழுந்தருளியவர் யாரும் செதுக்கியவர் அல்ல. இவர் விடங்கர் என்பதால் சக்தி அதிகம்.

இதனால் நந்திக்கு தனி மண்டபம் இல்லை. தரையிலேயே அமர்ந்துள்ளார். இவரை வணங்கி அபிஷேகம் செய்தால் நினைத்தது நடக்கும்.

இந்த நந்தி இருக்கும் இடத்தில் இருந்து சங்கொலி கேட்கும் தூரம் வரை அவர் அரசாங்கம். அங்கே நிசப்தம் அமைதி மிக முக்கியம் என்பது ஆலய விதி, அந்த அளவு சக்தியான நந்தி இவர்.

காளமேகப்புலவர் இத்தலத்து இறைவனை வணங்க வந்த போது நீரில்லா அக்னி ஆற்றை கடும் வெயிலில் தாண்டும் போது சிக்கி கொண்டார். உடனே சிவனை நினைந்து கசிந்துருகிப் பாடினார் காளமேகம். பகவானோ ஆற்றில் திடீரென தண்ணீர் வரச் செய்தார்.

அந்த அற்புதம் நடந்த தலம் இது.

அக்னியாற்றினை தன் வைராக்கியத்தால் தாண்டுவேன் என கால்வைத்து சிக்கிய காளமேகத்தை சிவனே மீட்டார். அவரின் ஆணவம் அழிந்த இடம் அது.

அந்நதியில் நீராடும் பாக்கியம் கிடைத்தால் அஞ்ஞானம் அழியும்.

இந்த ஆலயத்தின் பெருமை இத்தோடு நின்றுவிடவில்லை. இது திருவிளையாடல் புராணத்திலே வரும் ஆலயம்.

மதுரையில் ஒரு அபலை பெண்ணுக்கு நாழிகிணறும், வன்னிமரமும் சாட்சி சொன்ன திருவிளையாடல் எல்லோரும் அறிந்த ஒன்று.

இங்கே ஒரு வணிகன் இருந்தான். அவனுக்கு ஒரு தங்கையும் இருந்தாள். அவள் மகளைத்தான் தன் மகனுக்கு திருமணம் செய்துவைக்க இந்த வணிகன் முடிவு செய்திருந்தான்.

ஆனால், வியாபார நிமித்தம் மதுரை சென்றவனோ அங்கே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான், அந்தத் திருமணம் நடந்தாலும் நீயும் என் வீட்டு மருமகளே எனச் சொல்லி அவளை தேற்றி சரியான காலத்துக்கு காத்திருந்தான்.

அப்பெண்ணோ அன்றாடம் இந்த திருமணஞ்சேரி ஆலயத்தில் வந்து விளகேற்றி சிவனை, சக்தியினை வழிபடுவதை ஒரே பணியாக கொண்டாள்.

இந்நிலையில் மாமனார் இறந்துவிட்டார், அந்நிலையிலும் அவள் சிவ வழிபாட்டை தொடர்ந்தார்.

இந்நிலையில் சொந்த ஊர் வந்த அந்த வணிகன் மகனை பாம்பு தீண்டிற்று; அவளோ திருமணஞ்சேரி சிவனை நினைத்து அழுதாள்; அவளின் அடைக்கலம் அவர் ஒருவர்தான்.

சிவன் ஒரு முதியவர் வேடத்தில் வந்து அவனை எழுப்பி ” இனி உனக்கு ஆபத்தில்லை, நீ இந்த பெண்ணை திருமணம் செய்து கொள், இவள் உனக்காகப் பிறந்தவள்” எனச் சொல்லி ஆலயம் அழைத்துச் சென்றார்.

அப்பெண் கலங்கிச் சொன்னாள், “சாட்சிகளற்ற இத்திருமணம் எப்படி செல்லும், நீரோ முதியவர், உம்மை நான் முன்னே பின்னே பார்த்தது கூட இல்லையே, இதனை யார் ஏற்பார்கள்?” எனக் கலங்கினாள்.

“அஞ்சாதே மகளே, இந்த கிணறும் அந்த வன்னி மரமும் உனக்கு சாட்சி சொல்லும்” எனச் சொல்லி மறைந்தார் பெரியவர்.

அதன் பின் மதுரைக்கு மனைவியோடு வந்தான் வணிகன், முதல் மனைவி சாடினாள், அவள் குலமும் பொங்கியது, இது செல்லாத திருமணம், இவள் மோசக்காரி என்றெல்லாம் சொன்னார்கள்.

அவள் ஆலவாயன் சன்னதிக்கு ஓடினாள். அங்கே சென்று சிவனிடமே முறையிட்டாள்.

அப்போதுதான் அந்த திருமணஞ்சேரி நாழிக்கிணறு கோவிலுக்குள் வந்து அமர்ந்தது, வன்னிமரம் வீதியில் சாட்சியாய் நின்றது.

கூட்டம் அப்படியே அமைதியாயிற்று. திருமணாசேரியில் இருந்த நாழிகிணறும், வன்னிமரமும் இப்படி வந்துவிட்டதால் அங்கு இன்றும் கிணறும் மரமுமில்லை.

திருவிளையாடல் புராணத்தில் இது அழகாகப் பதிக்கப்பட்டிருக்கின்றது.

அப்படியான தலம் இது, இங்கே திருமண வரம் மட்டும் கிடைப்பதில்லை, கிடைத்த வரமும் மிகச் சரியாக சிவனால் பின் தொடரப்பட்டு இறுதிவரை காக்கப்படுகின்றது, அப்படி சக்தியான சிவன் வரமும் தந்து, அருளும் காவலும் தந்து உங்களை காக்க தயாராக இருக்கின்றார்.

திருமணம் என்பது கர்மா, அந்த கர்மாவுக்கு தடை, தாமதம் எனும் போது இங்கே அது நீக்கப்பட்டு வரம் அருளப்படுகின்றது. அப்படியே எதெல்லாம் இந்த பிறப்பில் உங்களை சேரவேண்டுமோ, அதெல்லாம் கர்மவினை காரணமாக உங்களை சேராமல் இருந்தால் இந்த தலம் சென்று வணங்கி வாருங்கள். வாழ்வில் பெரும் அற்புதம் பெறுவீர்கள். இது சத்தியம்.

கார்த்திகை மாதம் வழிபட வேண்டிய சிவாலயங்கள் 05 : திருச்செங்கோடு.

கார்த்திகை மாத ஆலயங்களில் முக்கியமானது திருச்செங்கோடு ஆலயம். நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மகா முக்கியமான தலம் இது. செந்நிறமான மலைக்குன்று மேல் இந்த சிவாலயம் அமைந்திருக்கின்றது.

இந்த ஆலயத்தின் வரலாறு ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் அகங்கார சண்டை நடந்த காலத்தில் இருந்து தொடங்குகின்றது. மேரு மலையினை வைத்து ஆதிசேஷனும், வாயுபகவானும் மோதும் போது தெற்கே விழுந்த துண்டுகளில் இதுவும் ஒன்று.

மற்றவை திருவண்ணாமலை, இலங்கையின் திரிகோணமலை என வீழ்ந்து மகா புண்ணியமான மலைகளாயின. இந்த திருச்செங்கோடும் அப்படி புண்ணிய நிலையினை தொடக்கத்திலே எட்டிற்று.

இதன் மூல வரலாறு சிவனுக்கும் பார்வதிக்குமான பிரிவும், பின் அவர்கள் தவமிருந்து இணைந்த இடத்தில் இருந்து தொடங்குகின்றது.

சிவன் கண்ணை பார்வதி விளையாட்டாக சில நொடி மூட, அந்தச் சில நொடியில் உலகமும் அதன் உயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட, அந்தச் சாபத்தால் பார்வதியினை பூமியில் பிறக்க கட்டளையிடுகின்றார் சிவன், பார்வதியும் அப்படி பிறந்து பூமியில் சிவ நினைவுடனே வாழ்ந்து வருகின்றார்.

காஞ்சியிலே அவர் மண்ணால் சிவலிங்கம் செய்து, அந்த மண் சிவலிங்கத்தை பெரும் வெள்ளம் மூழ்கடிக்கும் போது அதனை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் அன்னை. அவள் பக்திக்கு மனமிறங்கிய சிவன் அவளை திருவண்ணாமலைக்கு வந்து விரதமிருக்கச் சொன்னார்.

அன்னை திருவண்ணாமலையில் தவமிருந்தாள். அவளின் தவத்தின் கடைசி கட்ட காலத்தை திருச்செங்கோட்டு மலையில் இயற்றச் சொன்னார் சிவபெருமான்.

திருச்செங்கோடு எனும் அந்த மகா புண்ணிய மலை எல்லா கர்மத்தையும் போக்கும், ஒருவரின் எல்லா சாபத்தையும் தீர்க்கும் என்பதால் அங்கே வரச் சொன்னார்.

புரட்டாசி மாதம், வளர்பிறை அஷ்டமி திதியில் அன்னை அங்கே விரதம் தொடங்கிளான், அதுதான் கேதார கௌரி விரதம் என்றாயிற்று.

அந்த விரதம் முடியும் போது, 21 நாட்கள் கழித்து அன்னையினை தன்னில் பாதியாக சிவன் இந்த இடத்தில் ஏற்றுக்கொண்டார். பார்வதிக்கு தன் உடலில் சிவன் பாதி இடம் கொடுத்த இடம் என்பதால் இங்கே சிவன் “அர்த்தநாரீஸ்வரர்” கோலத்தில் எழுந்தருளினார்‌.

இத்தலம் அன்றிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் தலம் என்றாயிற்று.

ஆம். இந்தத் தலம் எது தொலைக்கவேண்டிய கர்மமோ அதை முடித்து வைக்கும், எது சாபமோ அதை முழுக்க தீர்த்தும் வைக்கும்.

இந்த உலகில் யாரும் தனி அல்ல, எதுவும் தனி அல்ல, தனிமை உணர்வு என்பது வேறு. ஆனால், கர்மம் முடிக்க ஒருவரின் உதவி அவசியம், ஆத்மா சென்று கலக்க பரம்பொருள் எனும் இலக்கு அவசியம்.

ஜீவாத்மா என்பது பரமாத்மாவினை தேடிச் செல்லும் இந்த வாழ்வில், அந்தப் பெரும் பயணத்தை கர்மம் எனத் தொலைக்கும் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு துணை அவசியம்.

அப்படி நல்ல துணையும் வழிகாட்டலும் தந்து கடைசியில் ஜீவாத்மாவினை பரமாத்மா ஏற்றுகொள்ளும் வரத்தையும் முழுக்க அளிப்பது இந்த ஆலயம்.

மிக அழகானதும் தனித்துவமிக்கதுமான இந்த ஆலயம் ஒவ்வொருவரும் தரிசிக்க வேண்டிய சிவதலங்களில் முக்கியமானது.

திருசெங்கோட்டின் பெரிய மலைமுகடு நாகமலை என்றும், சிறிய முகடு நந்திமலை என்றும் அழைக்கப்படும். திருச்செங்கோடு மலையை நாகாசலம், நாகமலை, நாககிரி, உரககிரி என்றும் சொல்வார்கள். மலையின்மீது ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயில் ஒருபுறமும், ஸ்ரீபாண்டீஸ்வரர் கோயில் இன்னொரு பக்கமும் உள்ளது.

அடிவாரத்தில் செங்குன்றூரின் நடுவே ஸ்ரீகயிலாசநாதர் கோயில் உள்ளது. ஆக, இங்கே, இந்தத் தலத்தில் சிவாலயங்கள் மூன்று.

இந்த ஆலயம் தேவாரம் பாடப்பட்ட சிறப்பினை கொண்டது, சம்பந்தர் ஓடி வந்து தேவாரம் பாடிய ஆலயம் இது.

திருப்பைஞ்ஞீலி, திருஈங்கோய்மலை முதலான தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி வழிபட்ட ஞானசம்பந்தர், வழியெங்கும் பல தலங்களை தரிசித்து வழிபட்டபடியே, திருச்செங்கோட்டுக்கு வந்தார். சிவனாரை தரிசித்து பதிகம் பாடியவர், அடுத்து திருநணா என்கிற பவானிக்குச் சென்றுவிட்டு,
மலையின் மீதும் இறைவனின் மீது கொண்ட ஈர்ப்பால், மீண்டும் திருச்செங்கோடு வந்து பல நாட்கள் தங்கி இருந்து சிவனை தொழுதார்.

அப்போது அங்கே ஒரு நோய் பரவிற்று, அந்த நோயில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு அவர் பாடியதுதான் “திருநீலகண்ட பதிகம்”

இந்த ஆலயத்தின் சிவனை காண சில நூறு படிகள் மலை ஏறிச் செல்ல வேண்டும்.

முதற்படியில் விநாயகப் பெருமானை வணங்கி நாம் படியேறத் தொடங்கவேண்டும், அருகில் முருகன் கோவில் ஒன்றும் உண்டு.

மேலே செல்லும் வழியில் செங்குந்தர் மண்டபம், காளத்தி சுவாமிகள் மடம், திருமுடியார் மண்டபம், தைலி மண்டபம் போன்றவை அமைந்துள்ளன. அதனை அடுத்து வீரபத்திர சுவாமி திருக்கோவில் உள்ளது. அதன் மேல்புறம் நந்தி கோவில் உள்ளது.

இந்த நந்திகோவில் விசேஷமானது. இங்கு பால், பசுக்கள் சம்பந்தமாக அவற்றின் வளம் பெருகி குடும்பங்கள் செழித்து எல்லா நலன்களையும் பெற்று வாழ இங்குள்ள நந்தி பகவானுக்கு பொங்கலிட்டு, வெண்ணை சாற்றி வேண்டி வழிபடுவார்கள்.

இந்த நந்தி கோவில் அருகேதான் இந்த மலை உருவாக காரணமான ஆதிசேஷனுக்கு தனி சிலையும் வழிபாடும் உண்டு.

இவ்விடத்தில் ஐந்து தலைகளுடன் ஆதிசேஷனின் முழு உருவமும் 60 அடி நீளத்தில் பிரம்மாண்டமான தோற்றத்தில் உண்டு. நாகரின் முழு உடலிலும் பக்தர்கள் மஞ்சளையும் குங்குமத்தையும் கலந்து பூசி வழிபடுவர். இதனால் நாக தோஷம் நீங்கும்.

உலலை தாங்கும் ஆதிசேஷன் இங்கு சிவலிங்கத்தை தாங்கி நிற்பது ஞான தத்துவத்தை சொல்கின்றது.

இன்னும் உயரே சென்றால் சிங்க மண்டபம் உண்டு. இதற்கு அடுத்து அமைந்துள்ளது அறுபதாம்படி என்னும் சத்தியவாக்குப் படிகள்.

திருச்செங்கோடு ஆலயத்தின் தனி சிறப்பானவை இந்த சத்திய வாக்கு படிகள் எனும் 60 ஆம் படி. இங்கு செய்யப்படும் சத்தியம் முழு வலிமையானது. இங்கு யாரும் பொய்யே பேசமுடியாது என்பது எக்காலமும் இருந்து வரும் நம்பிக்கை மற்றும் மரபு.

கொங்குநாட்டின் எவ்வளவோ சிக்கலான விஷயமெல்லாம் இந்தப் படிகளில் தீர்க்க பட்டது. இந்தப் படிகளில் நின்று செய்யப்படும் சத்தியத்திற்கு அளவற்ற மதிப்பு என்பது நம்பிக்கை. இந்தப் படிகளின்மேல் நின்று யாரும் பொய்யாக சத்தியம் செய்யமுடியாது.

எத்தனையோ பெரிய வழக்குகளை, சர்ச்சைகளை தீர்த்து வைத்த படிகள் இவை. இங்கு செய்யப்படும் சத்தியம் மற்றும் ஒப்புதலை தாண்டி எந்த சர்ச்சையும் வளர்ந்ததில்லை, யாருக்கு நீதி உண்டோ அவர்களுக்கு தானாய் நீதி வந்து சேரும்.

யாரிடம் குற்றம் உண்டோ அவர்கள் அதை ஒப்புக்கொண்டு மெல்ல அமைதியாகிவிடுவார்கள், உரிய தண்டனை அல்லது பரிகாரம் அவர்களை தானே வந்து அடையும்.

இந்த சத்தியவாக்குப் படிகளின் முடிவில் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் உண்டு.

இந்த ஆலயத்தைதாண்டிச் சென்றால் அறுபதாம்படி மண்டபம், இளைப்பாற்றிமண்டபம், கோபுரவாயில் மண்டபமும் மேலும் பல மண்டபங்கள் உண்டு.

அவற்றை கடந்துதான் ராஜகோபுரத்தினை அடைதல் வேண்டும், கோவிலின் உள்ளே நுழைந்த உடனே இடது புறத்தில் விநாயகப் பெருமானை காணலாம், அடுத்து திருசெங்கோட்டு வேலவனின் சன்னதி உண்டு.

இந்த மண்டபத்தில்தான் உலகின் மிக மிக அழகான சிற்பங்கள் நிறுவபட்டிருக்கின்றன‌.

மகாபலிபுரம், மதுரை ஆலயம், நெல்லை கிருஷ்ணபுரம் போன்றவற்றை போல அதி அற்புதமான சிலைகள் இந்த இடத்தில் மிக மிகத் துல்லியமாக மிகத் தேர்ந்த வகையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன, இவை உலகின் அற்புதமான சிலைகள், பாரத தேசத்தின் பெரும் கலைகள்.

இந்த முருகப்பெருமானின் சன்னதி மிக சக்தி வாய்ந்தது. தனது வலக்கையில் வேலும், இடக்கையில் சேவலும் என ஏந்திக்கொண்டு, நின்ற கோலத்தில், செங்கோட்டு வேலவனாக காட்சி தரும் முருகப்பெருமானின் அழகு அவ்வளவு அழகானது.

இந்த முருகனைத்தான் அருணகிரிநாதன் தன் திருப்புகழ், கந்தர் அலங்காரம் எனப் பல பாடல்களில் பாடியிருகின்றார்.

இதை அடுத்துத்தான் மகா பிரசித்தியான அந்த அர்த்த நாரீஸ்வரர் சன்னதி உண்டு.

அங்கே அர்த்தநாரீஸ்வரர் வெண்ணிற மேனியுடன் காட்சி தருகிறார். ஒரே உருவத்தில் இடது பக்கம் பெண்ணுருவாகவும், வலது பக்கம் ஆணின் உருவமாகவும் உமையொரு பாகனாய் காண்போரை வசீகரிக்கும் தோற்றத்துடன் அருள் பாலிக்கின்றார்.

இந்த அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தை மணிவாசகப் பெருமான் “தொன்மைக்கோலம்” என்பார்.

இங்கு அர்த்தநாரீஸ்வரர் மேற்கு நோக்கி உள்ளார். ஆனால் உள்ளே நுழைய கதவுகள் கொண்ட வாசல் இல்லை. குகை போன்ற இந்த சன்னதியில் குனிந்து நுழைந்து உள்ளே செல்ல வேண்டும்.

இந்த சன்னதியின் மற்றும் ஒரு சிறப்பு அங்கு வற்றாமல் ஓடிக்கொண்டே இருக்கும் தேவதீர்த்தம். இது தானாக தோன்றிய சுனை, அது எப்போதும் ஊறி ஓடிக்கொண்டே இருக்கும்.

அர்த்தநாரீஸ்வரர் காலடியில் இந்த ஊற்று நீர்தான் அங்கு புண்ணிய தீர்த்தம், அது சக்திவாய்ந்தது. நோய்களை குணமாக்குவது முதல் எல்லா அற்புதங்களையும் செய்ய கூடிய அற்புத நீர்.

இதற்கு அடுத்து ஸ்ரீதேவி தாயார், பூமா தேவி தாயார் உடனுறை ஆதிகேசவ பெருமாள் சன்னதி உண்டு. இதே மண்டபத்தின் தரையில் ஆமை மீது ஒரு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மேற்பகுதி மரத்தால் செய்யப்பட்டது. திருவிழாக் காலங்களில் உற்சவ பெருமானை இந்த மண்டபத்தில் வைத்துதான் பூஜைகள் நடைபெறும்.

நாரி கணபதி சன்னதிக்கு அருகே தாண்டவப்பத்திரை விலாச மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியும், ஆலங்காட்டுக் காளியும் எதிர் எதிரே அமையப் பெற்றுள்ளன. இங்கு அமைந்துள்ள நடராஜர் சன்னதிக்கு அருகே தலவிருட்சமான இலுப்பை மரம் உண்டு.

பொதுவாக எல்லா ஆலயங்களிலும் சக்தி நிலைகள், மூலஸ்தான கருவறை, கொடிமரம் என இவற்றிற்கு அடுத்து தலவிருட்சம் மிக முக்கியமான ஒன்றாகும். இத்திருக்கோவிலில், நடராஜருக்கும், சஹஸ்ர லிங்கத்திற்கும் இடையே இக்கோவில் தல விருட்சமான இலுப்பை மரம் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.

இந்த இலுப்பை மரத்தை அடுத்து பஞ்ச லிங்கங்கள், விஸ்வநாதர், மல்லிகார்ஜுனர், தென்முகக் கடவுள், கொற்றவை, சூரிய பகவான், நாக ராஜா, பைரவ மூர்த்தி போன்ற பரிவார தெய்வங்களின் சந்நதிகளும் உண்டு.

திருச்செங்கோடு ஆலயம் உங்கள் பக்திக்கும் தவத்துக்கும் நிச்சயம் பலனளிக்கும் தலம், கேட்டதை அள்ளித் தரும் ஆலயம்.

ஆனால், அதனை கொஞ்சம் உறுதிபடுத்தித்தான் தரும், முழு அர்ப்பணிப்பும் தேடலும் சரணாகதியும் இருந்தால், முழுக்க அந்தச் சிவனே எல்லாமும் என சரணடைந்தால் உங்களுக்கு எது சாபமோ அதை தீர்த்து எது கர்மமோ அதனை சரியாக செய்ய வரத்தை அருளும்.

அன்னை பார்வதிக்கு அப்படித்தான் அங்கே சோதனை நடந்தது, அவள் அந்தத் தவத்தில் உறுதியாய் இருந்தாள். அவளுக்கு சிவன் தன் இடப்பாகம் கொடுத்து தன்னோடு சேர்த்துக்கொண்டார்.

இந்தத் தத்துவம் பார்வதிக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு ஜீவாத்மாவினையும் தன்னோடு சேர்த்துக்கொள்ள தன்னில் ஒன்றாக ஈர்த்துக் கொள்ள அந்த பரம்பொருள் தயாராக இருக்கின்றார் என்பதை சொல்வது.

அந்த 60 ஆம் படி என்பதுதான் இந்த ஆலயத்தின் முக்கிய இடம், அங்கே இப்போது சத்தியபடி என மாறி வம்பு வழக்குகள், சர்ச்சைகளுக்கான முடிவு சத்தியம் என்றாகிவிட்டாலும் உண்மையில் அதன் தாத்பரியம் வேறு.

அதாவது அங்கே அந்தப் படியில் ஒருவன் அகங்காரம், ஆணவம், வாழ்வின் துர்குணங்கள், இன்னும் வேண்டாத அத்தனையும் தலைமுழுகி, அந்தப் படியில் இனி எல்லாம் சிவனே என முழுக்க சரணடைதல் வேண்டும்.

சத்தியபடி எல்லாம் விட்டு சிவனை சரணடையும் போது அங்கே சிவன் இறங்கி வந்து எல்லா சாபமும் தீர்த்து பெரும் வரம் அருள்வார்.

இந்த ஸ்தலம் கர்மத்தை சுமக்க யார் யார் உடன் வருவார்களோ அவர்களை நல்லபடியாக முழு மகிழ்ச்சியும் மனமுமாக கொண்டு, வாழ்வின் சுமை அறியாமல் பயணிக்கவைக்கும் வரம் தரும் ஆலயம்.

கணவன் மனைவி ஒற்றுமையினை அதிகரிக்கும் ஆலயம் இது. நாக தோஷம், ராகு தோஷம், காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷம் இவற்றால் பாதிக்க பட்டவர்கள் இங்கு வந்து வணங்கினால் பெரிய பலன் உண்டு.

சந்தான பாக்கியம் அதாவது குழந்தை இல்லதவர்கள் இங்கு வணங்கினால் நிச்சயம் குழந்தை பேறு உறுதி.

இங்கிருக்கும் மலை உச்சியில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் மலடி கல் என்ற ஒரு பெரிய கல் இருக்கிறதாம். குழந்தை இல்லாதவர்கள் அந்தக் கல்லை சுற்றி வந்து வணங்கிச் சென்றால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும். இது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

சம்பந்தர் காலத்தில் அல்ல எல்லா காலமும் இந்த ஆலயத்தில் அதிசயங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன‌.

கொங்கு நாட்டில் காடம்பாடி எனும் ஊரில் பாததூளி, சுந்தரம் தம்பதியர் பக்தர்களுக்கு குழந்தை பாக்கியமில்லை, இந்த தலத்துக்கு வந்து வழிபட்டபின் அந்த பாக்கியம் கிட்டிற்று. ஆனால், குழந்தை நெடு நாட்களாக பேசவில்லை.

இதனால் அக்குழந்தையுடன் ஆலயம் வரும் அவர்கள் அந்த குறையினை தீர்க்க மன்றாடி கொண்டே இருந்தார்கள்.

அப்படி அவர்கள் தேரோடும் நாளில் வந்தபோது குழந்தை கூட்டத்தில் தவறி தேரின் சக்கரத்தில் சிக்கி கொள்ள இருந்தது. அப்போது வேலப்பன் எனும் அடியார் குழந்தை நிலை கண்டு பதறி ஓடிச்சென்று தன் உயிரை பணயம் வைத்து குழந்தையினை காத்தபோது தேர்தானே நின்றது.

அப்படி தப்பி பிழைத்த குழந்தை பின் வாய் பேசிற்று பெற்றோர் பெருமகிழ்வுடன் குழந்தையினை வளர்த்தனர், இன்றும் அவர்கள் சந்ததிகள் சாட்சியாய் உண்டு.

இந்த ஆலயம் குடும்ப உறவுகளுக்கும் சிக்கலுக்குமான எல்லா தீர்வையும் தரும் ஆலயம், உறவுகளை மேம்படுத்தி கர்மத்தை சரியாக செய்யவைக்க பலம் தரும் ஆலயம்.

இந்த ஆலயத்திற்கு சென்று வந்தால் நிச்சயம் உங்கள் வாழ்வே மாறும், இப்போது இருப்பதை விட பெரும் நல்ல மாறுதல் அடுத்து அமையும்.

அந்தப் படியில் ஏறி செல்லும் போது உங்கள் பிரச்சினைகள் அகலும். மறமாவல் ஆதிசேஷனை பூஜித்து பின் 60 படியில் சங்கல்பம் செய்து மேல் ஏறிச் செல்லுங்கள்.

மலைகோவிலில் விநாயகப் பெருமானை பணிந்து, அந்த அற்புதமான முருகனை தரிசித்து பின் இந்த அர்த்த நாரீஸ்வரரை தரிசியுங்கள்.

“ஓம் ஹும் ஜும் சஹ, அர்த்தநாரீஸ்வர ரூபே, ஹ்ரீம் ஸ்வாஹா” என அவருக்குரிய மந்திரத்தை சொல்லி நில்லுங்கள், அந்த அர்த்த நாரீஸ்வரர் காலடியில் ஊறும் தீர்த்தத்தை பெற்று பருகுங்கள்.

அதுமுதல் உங்கள் வாழ்வே மாறும், விரோதித்த விதி சரியாகும், எதெல்லாம் தடையாக இருந்ததோ, எதெல்லாம் சிக்கலாக இருந்ததோ எல்லாமே மாறி அவை எல்லாமே உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்.

வாழ்வே மாறும், அதுவரை மிக கடினமாக இருந்த வாழ்வு எளிதாகும், வாழ்வில் உடன் வருவோர் எல்லோரும் மிகுந்த ஆதரவாய் கர்மம் கழிக்க துணை வருவர், சிவனருளினால் எல்லாமே சித்தியாகி நல்லபடியாக வாழ்வினை நிறைவு செய்து எல்லா கடமையும் இனிதே முடித்து அந்த சிவனோடு கலந்தே விடுவீர்கள். இது சத்தியம்.