சிவராத்திரி

சிவராத்திரி என்பது ஒவ்வொரு இந்துவும் விழித்திருந்து சிவாலயங்களுக்கு சென்று சிவனை தரிசித்து அருள் பெற வேண்டிய இரவு, அன்று கண்டிப்பாக சிவாலயம் செல்ல வேண்டும், இந்துக்கள் இந்துக்களாக இருக்க இம்மாதிரி ஏற்பாடுகளை மிக கண்டிப்பாய் பின்பற்றுதல் அவசியம்
அந்த இரவில் ஒரே ஒரு சிவாலயத்தினை மட்டும் தரிசிப்பததை விட பல சிவாலயங்களை, குறைந்தது நான்கு சாமத்துக்கு நான்கு சிவாலாங்களினை தரிசிப்பது மிக நல்லது
போக்குவரத்து எளிதாகிவிட்ட காலங்களில் அருகிருக்கும் சிவாலயங்கள் பலவற்றை தரிசித்தல் எளிது
சிவராத்திரி என்பதற்காக இரவில் மட்டும் ஆலயம் செல்ல வேண்டும் என்பதல்ல, காலை முதலே ஒவ்வொரு ஆலயமாக சென்று இரவிலும் அதை தொடரலாம்
அவரவர்க்கு அருகில் இருக்கும் ஆலயங்களை தரிசிக்கலாம், முக்கிய ஆலயங்களை அவற்றை வகைபடுத்தியபடி பல ஆலயங்களை இங்கே கொடுத்துள்ளோம்
மதுரை, நெல்லை, சிதம்பரம், திருவண்ணாமலை என மகா முக்கிய பெரிய ஆலயங்களுக்கு செல்வது நல்லது என்றாலும் இந்த தொகுப்பு ஆலயங்களுக்கு செல்வதும் மிக்க பலன் தரும்
அவற்றில் அட்ட வீராட்டாணம் ,நவபுலியூர்
, சப்த விடங்கர் , பஞ்ச மயான தலங்கள், சேத்திரங்கள், சிவராததிரியில் நாகங்கள் வழிபட்ட பஞ்ச நாக தலங்கள், சிவராத்திரி சிவாலயங்கள் நான்கு என முக்கிய ஆலயங்கள் சோழ நாட்டில் காவேரியினை சுற்றி உண்டு
இந்த ஆலய தொகுப்புகள் ஒரே நாளில் வழிபட கூடியவை, இன்னும் இடையார்ஜுனம் எனும் திருப்புடை மருதூர் உண்டு
சென்னை செங்கல்பட்டு பக்கம் இருந்தால் ஸ்ரீ ருத்ர கோடிஸ்வரர் ஆலயம் மகா முக்கியமானது
அப்படியே திருவாலங்காடு போன்ற தலங்கள் முக்கியமானவை
கொங்கு பகுதிகளுக்கு வெள்ளையங்கிரி முதல் கரூர் பசுபதீஸ்வரர் வரை ஏகபட்ட சிவாலயங்கள் உண்டு, பவானி கூடுதுறை முதல் ஈரோட்டு நட்டாறீஸ்வரர் வரை உண்டு
மதுரை, ராமேஸ்வரம், காளையார்கோவில் என தென்னகம் எப்போதுமே விஷேஷமானது
இன்னும் நவ கையாலம், தச வீராட்டாணம் என பல உண்டு, திருப்புடை மருதூர் எனும் மல்லிகார்ஜூன ஷேத்திர்ம இன்னும் விஷேஷம்
கடற்கரைகளில் உவரி சுயம்புலிங்க சுவாமி தனித்துவமான அருளை பொழிபவர், அவரை தரிசித்தல் மிக்க நலமானது
குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் எனும் பெரும் தரிசனம் நடக்கும் 12 கோவில்களும் முக்கியமானவை
நாளை பகலும் இரவுமாக அந்த சிவனை தேடுங்கள், ஆலயங்களில் தேடுங்கள், எவ்வளவு சிவாலயம் முடியுமோ அத்தனையும் விடிய விடிய தரிசித்து நில்லுங்கள், அந்த பகலும் புனிதமான இரவும் சிவன் நமக்காக அருள்புரிய காத்திருக்கும் காலம்
அந்த அருளை தேசமும் தேச மக்களும் நிரம்ப பெறட்டும், மதமும் மக்களும் தேசமும் வலுத்து செழித்து உயர்ந்து நிலைக்கட்டும், எல்லா வகையிலும் தேசத்தை அந்த சிவன் நிரம்ப பலமாக்கி காவல் இருக்கட்டும்
இந்த தேசத்தின் ஒரே பெரும் அடையாளம் சிவலிங்கம், இமயம் முதல் குமரி வரை அதன் வடிவம் ஒன்றே
காசி முதல் குமரி வரை அதன் அமைப்பு ஒன்றே, இத்தேசத்தை பிணைக்கும் ஒரே வடிவம் அதுதான்
என்னதான் தமிழக சித்தர்கள், தமிழக சிவவழிபாடு அது இது என பிரிவினைகும்பல்கள் வடக்கத்திய பிரிவினை, சமஸ்கிருத எதிர்ப்பு, பார்பானிய எதிர்ப்பு என ஆயிரம் பேசினாலும் அவர்கள் மறுக்கமுடியா விஷயம் எல்லோருக்கும் ஒரே சிவலிங்கம் என்பது
ஆதிசங்கரர், அகத்தியர், போகர் என எல்லாருக்கும் அது பொதுவானது, திருவிளையாடல் காலம் முதல் நாயன்மார் காலம் என வந்து இக்காலம் வரை நிற்பது சிவலிங்கமே
அந்த சிவலிங்க வழிபாடுதான் எல்லா குழப்பவாதிகளும் வாயடைக்கும் விஷயம், இங்கு “ஒரே நாடு ஒரே மதம்” என எல்லோரும் மறுப்பின்றி ஒப்புகொள்ள வைக்கும் அடையாளம் சிவலிங்கம்
இந்துஸ்தானம் இந்து குடியரசு என அறிவிக்கபட்டிருந்தால் இங்கு தேசிய சின்னமாக அதுதான் இடம்பெற்றிருக்கும், எதிர்காலத்தில் இந்து நாட்டின் சின்னமாக அதுதான் அறிவிக்கவும்படும்
இங்கு சிவலிங்கத்தின் இடம் பெரிது, தேசத்தின் அடையாளமும் ஒற்றுமையின் சின்னமும், மாபெரும் ஞானதாத்பரியத்தின் அடையாளமும் அதுதான்
அப்படியான சிவலிங்க தத்துவத்தை பிரிட்டிசார் ஆட்சியில் மதமாற்றிகளும், இந்திய ஆன்மாவினை அழிக்க உருவான சித்தாந்த குழப்ப கோஷ்டிகளும் பெரிதும் குழப்பின, அதை உடைத்து போட விரும்பின
சிவலிங்க தத்துவம் உடைபட்டால் இந்தியா உடைபடும் என அவை திட்டமிட்டு தோற்றோடின
அவை தோற்றோடினாலும் அவை விதைத்த முள்விதைகள் ஆங்காங்கே உண்டு செடியாக மரமாக உண்டு
அவற்றை முழுக்க களைந்துபோட திடமான சிந்தனை அவசியம், சிவலிங்கத்தை பற்றிய அடிப்படை புரிதல்கள் அவசியம்
அதை இந்நாளில் காண்பது நன்று
சிவலிங்கம் என்பதற்கு குழப்பமான கருத்துக்களை பல இதர மதத்தவர் சொல்லலாம், ஆண்குறி என கொச்சையாக சொல்லலாம், அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் நோக்கம் அப்படியானது
ஆனால் இந்துக்களில் சிலரே சரியாக சிவலிங்க தத்துவத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் இருப்பது காலகொடுமை
சாஸ்தா எனும் சொல் சாத்தான் என்றானது போல, லிங்கம் எனும் சொல்லும் என்னென்ன பொருளெல்லாம் காண்பது இந்துக்களுக்கு நடந்துவிட்ட பெரு வீழ்ச்சி
முதலில்,”லிங்கம்” என்ற சொல்லின் பொருளை ஆராய்வோம்.”லிங்கம்” என்னும் சொல்லிற்கு சின்னம், அடையாளம் மற்றும் காட்டி என்று பல பொருள்கள் உண்டு.
“லிங்யதே ஞாயதே அனேன”
சிலர் சொல்வது லிங்கம் ஆண்குறி என வேதத்திலும் சமஸ்கிருதத்திலும் எந்த குறிப்பும் பொருளும் எக்காலமும் இல்லை.
இனி லிங்கம் என்றல் என்ன என்பதற்கு வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள் மற்றும் இதர சாஸ்திரங்கள் கூறும் விளக்கங்களைப் பார்க்க வேண்டும்.
இங்கு ஒரு குழப்பம் வரும் சில ஒதுக்கபட வேண்டிய லிங்க வழிபாடு என வேதத்தில் ஒரு வரிவரும், அதாவது லிங்கம் எல்லோருக்கும் பொதுவானது ஆனால் தீயவழக்கம் உள்ள, பொல்லாமையும் அருவருப்பான குணமுள்ள சிலர் அந்த லிங்கத்தை வணங்குவார்கள், அப்படிபட்டவர்களை ஒதுக்க வேண்டும் என்றுதான் வேதம் கூறுகின்றது
அதுதான் பின்னாளில் ஆண்குறியினை வழிபடுபவர்களை விலக்க வேண்டும் என அரைகுறை வேதம் படித்தவர்கள், சமஸ்கிருதத்தில் பெயிலானவர்கள், சமஸ்கிருதம் அறியாதவர்களால் திரித்து கூறபட்டது
இதோ அந்த வரி
“சசர்தாத் ஆர்யோ விஷ்ணோநஸ்ய ஜந்தொர் ம சிச்ன தேவ அபி குர்ரிதம் ந” : ரிக் வேதம் – 7.21.3.5
இந்த “சிச்ன தேவ” என்னும் சொல்லை சில ஆராய்ச்சியாளர்கள் “ஆண்குறியை தேவனாக/தெய்வமாக வழிபடும் கூட்டம்“ என்று அர்த்தம் செய்து கொண்டு, இந்தச் சொல் இலிங்கத்தை வழிபடுபவர்களைக் குறிக்கிறது என்று வாதிடுகிறார்கள்.
இவர்கள் அந்நிய கைகூலிகள் அல்லது அவர்களால் குழப்பிவிடபட்டவர்கள்
“சிச்ன தேவ” என்ற பதத்திற்கு கற்புநெறி இல்லாதவர்கள் என்றே அர்த்தத்தைத் தருகிறார் சாயனார் முனி
“சிச்ன தேவ- அப்ரஹ்மசர்ய இதி அர்த்த” எனதும் ஒரு வரி
சாயனர் முனி சிச்ன தேவ என்பது ஆண்குறியை கொண்டு காம விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களைக் குறிக்கும் என்று தமது பாஷ்யத்தில் (உரையில்) விளக்கியுள்ளார்.
“சிஸ்நேந தீவ்யந்தி க்ரீடந்தி இதி சிச்ன தேவா” என்கின்றார்
நிருக்தத்திற்கு உரை செய்த துர்காச்சாரியார், சிச்ன தேவ என்பது வேத அனுட்டானங்களை கைவிட்டு, சதா விலைமாதர்களோடு காமக்கேளிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் குறிக்கும் என்கிறார்.
“சிஸ்நேந நித்யம் ஏவ ப்ரகீர்ணபி:ஸ்த்ரீபி சாகம் க்ரீடந்த”, ” ஆஸதே சிரௌதானி கர்மானி உத்ஸ்ருஜ்ய” என்பது ஸ்லோகம்
ஆக “சிச்சின தேவ” என்ற சொல் இலிங்க வழிபாடு செய்ப்பவர்களை குறிக்கும் சொல் அல்ல. மாறாக காம கேளிக்கையில் ஈடுபட்டு ஆச்சாரமில்லாமல் பெயருக்கு லிங்கத்தை வழிபடுவோரை குறிக்கும் சொல்
இதை தவிர வேதத்தின் எல்லா இடங்களிலும் லிங்கம் எப்படி சொல்லபடுகின்றது என்றால் இப்படித்தான், இங்கு எதிலுமே ஆண்குறி என்பது இல்லை
யஜுர் வேதத்தின் தைத்திரீய ஆரண்யகம் சொல்கின்றது
“பவாய நம,பவலிங்காய நம” அதாவது உலக உற்பத்திக்கு காரணமான லிங்கத்திற்கு நமஸ்காரம்.
“சர்வாய நம, சர்வலிங்காய நம” அதாவது ப்ரளயகாலத்தில் பிரபஞ்சம் ஒடுங்கும் சம்ஹாரத்திற்கு காரணமான லிங்கத்திற்கு நமஸ்காரம்.
என்ற வாக்கியங்கள் லிங்கத்தில் அணைத்து சிருஷ்டியும் தோன்றி இறுதியில் ஒடுங்குகிறது என்கிறது.
இன்னும் சொல்கின்றது, சிவலிங்கம் என்பது அனல்பிழம்பாக ஈசன் தோன்றிய வடிவத்தையே குறிக்கிறது ,ஆண்குறியை அல்ல என்று வேதம் தெளிவு படுத்துகின்றது:
“ஜ்வலாய நம,ஜ்வலிங்காய நம” அதாவது அக்கினிச் சுவாலையின் வடிவாக விளங்கும் இலிங்கத்திற்கு நமஸ்காரம்
எல்லா உயிர்களின் இதயத்தில் உயிரின் உயிராக ஆத்மாவினுள் லிங்கமாக ஈசன் உறைகிறான் என்றும் வேதம் உரைக்கிறது-
“ஆத்மாய நம,ஆத்மலிங்காய நம” அதாவது ஆத்மமாக விளங்கும் லிங்கத்துக்கு நமஸ்காரம்
அதர்வண வேதம் சிவலிங்கத்தை அனைத்து புவனங்களையும், படைப்புகளையும், உயிரினங்களையும் தாங்கி நிற்கும் தம்பமாக (தூணாக) போற்றுகிறது. எல்லா தேவர்களும் நான்கு வேதங்களும் தம்பமாகிய இந்த லிங்கத்தில் அடக்கம் என்கின்றது
அமரத்தன்மையும், மரணமும், காலமும் தம்பத்துள் அடக்கம். பிரம்மன் முதலிய தேவர்களைப் படைத்து அவர்களுக்கு உரிய கடமைகளை நிர்ணயித்தது அந்த ஸ்தம்பவடிவில் நிற்கும் பரமபுருடனே. சூரிய சந்திரர்களே அதன் கண்கள் என்கின்றது இப்படியாக
“யஸ்மின் பூமிர் அந்தரிக்ஷம் தியூர் யஸ்மின் அதி ஆஹிதா
யத்ராக்னிஸ் சந்த்ரமா ஸூர்யோ வாடஸ் திஷ்டந்தி ஆர்பிதா
ஸ்கம்பம் தம் ப்ரூஹி கடம: ஸ்விட் ஏவ ச”
“யஸ்ய த்ரயஸ்த்ரிம்சத் தேவா அங்கே சர்வே ஸமாஹிதா
ஸ்கம்பம் தம் ப்ரூஹி கடம: ஸ்விட் ஏவ”
இனி, ஆகமங்கள் லிங்கத்தின் தாத்பர்யத்தை பற்றி என்ன கூறுகிறது ஏன்று பார்ப்போம்.
“லிங்கம்” என்ற சொல்லின் பொருளை அஜிதாகமம் விளக்குகிறது:
“லயம் கச்சந்தி பூதாநி ஸம்ஹாரே நிகிலானி ச
நிர்கச்சந்தி யதஸ்சாபி லிங்கோக்திஸ் தென ஹேதுனா”
ஆம், பிரளய காலத்தில் அணைத்து உயிர்களும் அதனிடம் லயம் அடைந்து (ஒடுங்கி), சிருஷ்டியின் தொடக்கத்தில் அதனின்று தோன்றுவதால் அது “லிங்கம்” .
ஏகமாய், எல்லாவற்றிற்கும் மேலானதாய், குணங்களும் அடையாளங்களும் உருவமும் அற்றனவாய் விளங்கும் நிஷ்களமான பரசிவத்திலிருந்து ஆயிரத்தில் ஒரு கூறாய் பராசக்தி தோன்றியது.
பராசக்தியிலிருந்து ஆதி சக்தியும், ஆதிசக்தியிலிருந்து இச்சாசக்தியும், இச்சாசக்தியிலிருந்து ஞானசக்தியும், ஞானசக்தியிலிருந்து கிரியாசக்தியும் தோன்றின.
இச்சக்திகளிலிருந்து, யோகிகள், ஞானிகள் மற்றும் கிரியாவாதிகள் தன்னை தியானித்தும் பூசித்தும் உய்யும் பொருட்டு பரசிவம் தனது அம்சங்களான சிவ சாதாக்கியம், அமூர்த்தி சாதாக்கியம், மூர்த்தி சாதாக்கியம், கர்த்துரு சாதாக்கியம் மற்றும் கர்ம சாதாக்கியம் என்னும் பஞ்சசாதாக்கியங்களை வெளிப்படுத்துகிறது.
“யோகிநாம் யதினாம் ஞானிநாம் மந்த்ரினாம் த்யானபூஜா நிமித்தாய நிஷ்களம் சகளம் பவேத் வாதுளாகமம்” என்கின்றது தத்வபேத படலம்,
இவற்றில் ஐந்தாவது சாதாக்கியமான கர்ம சாதாக்யமே லிங்க வடிவம்.
“லிங்கப்பீடப்ரகாரென கர்மசாதாக்யலக்ஷணம்
நாதம் லிங்கமிதி ஞேயம் பிந்துபீடமுதாஹ்ருதம்
நாதபிந்துயுதம் ரூபம் லிங்காகாரமிதி ஸ்ம்ருதம்
சத்வாரி கர்த்ருரூபாணி கேவலம் நாதமீரிதம்
லிங்கம் சிவமிதி ஞேயம் பீடம் சக்திருடஹ்ருத
லிங்கே து ஜாயதே சர்வம் ஜகத்ஸ்தாவர ஜங்கமம்
கர்மோதயே ச ஸ்ருஷ்டிஸ்யாத் கர்மாந்தே ஸம்ஹ்ருதிர்பவேத்
ஏதத் கர்மஸ்வரூபம் து ஸ்ருஷ்டிஸ்திதி லயாவஹம்”
அது இன்னும் விளக்குகின்றது
பரசிவன் படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல் மற்றும் அருளல் என்னும் பஞ்ச கிருத்தியங்களைப் புரிவதற்கே இலிங்க வடிவத்தை எடுத்துள்ளான் என்கின்றது
“ஏவம் லிங்கம் து கர்மேசம் த்யாயேத் சகளநிஷ்களம்”
லிங்கம் ஈசனின் அருவுருவ ( சகள-நிஷ்கள) நிலையை உணர்த்தும் .அது எப்படி ஒரே சமயத்தில் அருவம் மற்றும் உருவநிலையை ஒரே வடிவம் உணர்த்தும் என்ற கேள்வி எழும்.
லிங்கத்திற்கு மற்ற தெய்வவடிவங்களைப் போல் முகம், கைகால்கள் போன்ற உடலுறுப்புகள் கிடையாது, அதாவது குறிப்பிட்ட ஓர் உருவம் கிடையாது. ஆதாலால், அது அருவம் எனப்படும்.
அதே சமயத்தில்,உடலோ உறுப்புகளோ இல்லாமலிருந்தாலும்கூட இலிங்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட வடிவம் உண்டு. அந்த வடிவம் (வட்டமான, நீண்ட வடிவம்) நம் கண்ணுக்குப் புலப்படுகிறது. ஆதலால், இலிங்கத்திற்கு உருவமும் உண்டு. இக்காரணத்தால் தான் இலிங்கம் அருவம்+உருவம் = அருவுருவ நிலையை குறிக்கும் என்று ஆகமங்கள் உரைக்கின்றன.
இலிங்க பீடமான ஆவுடையாரை பெண்ணுறுப்பு என்ற தவறான ஒரு கருத்தும் நிலவிவருகிறது.
பரமாகாசம் எனப்படும் பரவெளியின் சின்னமாக இலிங்கம் விளங்குகிறது. அதில் என்றும் உள்ள ஓர் அசைவு சக்தியை குறிக்கும். அந்த அசைவு இலிங்கத்தில் என்றும் உள்ளது என்பதை சித்தரிக்கவே சக்தியின் சொரூபமான ஆவுடையார் இலிங்கத்தைச் சுற்றி கீழடங்கின நிலையில் அமைந்துள்ளது. மேலும்,உயிர்களின் மலத்தை நீக்கும் பொருட்டு அசைவை குறிக்கும் சக்தியாகிய திருவருள் சிவமாகிய இலிங்கத்தைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.
ஆவுடையாரின் நீண்டிருக்கும் பகுதியான கோமுகி உயிர்களை நோக்கி இருக்கும் திருவருளை குறிக்கும்.
அந்தர்யாகம் எனப்படும் அகப்பூசையில் நாத(ஒலி) வடிவான இலிங்கத்தை ஓளி வடிவான சோதி சொரூபமாக தமது இதயத்தின் நடுவே ஓர் எட்டிதழ் தாமரையின் மேல் வீற்றிருப்பதாக பாவித்துப் பூசிக்கவேண்டும் என்று ஆகமங்கள் விதிக்கின்றன. ஆக, ஆகமங்களும் இலிங்கம் இறைவனின் சோதி சொரூபமேயன்றி ஆண்குறி அல்ல என்பதை அறுதியிட்டுக் கூறுகின்றன.
மேலும், ஆகமங்களும் சில்ப சாஸ்திரங்களும் இலிங்கத்திற்கு மூன்று பாகங்கள் உள்ளதாக தெரிவிக்கின்றன. இலிங்கத்தின் அடிப் பகுதியாகிய பிரம்மபாகம் நபும்சக(அலி) லிங்கமாகவும், நடுப்பகுதியான விஷ்ணுபாகம் ஸ்த்ரீலிங்கமாகவும், மேல்பகுதியான உருத்ரபாகம் பும் (ஆண்) லிங்கமாகவும் விளங்குகிறது.
அவன், அவள், அது என்று பிரபஞ்சத்தில் தோன்றும் உயிருள்ள உயர்திணை ஆண் பெண்களும் அஃறிணைப் பொருள்களும் யாவும் தன்னிடத்தே தோன்றி ஒடுங்குகின்றன என்பதை இது உணர்த்துகிறது.
இப்படி அணைத்து பாலினத்தையும் தனது பாகங்களாக கொண்டு பாலினம் கடந்து நிற்கும் இலிங்கம் எவ்வாறு ஆண்குறியாகும்?
மகாபாரதம் அணைத்து சிருட்டிக்கும் ஆதாரமாக விளங்குவது ஈசனின் இலிங்க வடிவமே என்கிறது. துரோண பர்வத்தில், வியாசர் அசுவத்தாமனுக்கு பரமேசுவரனின் மஹிமைகளை உரைக்கும் பொது கேசவனாகிய மஹாவிஷ்ணு இலிங்கத்தை அனைத்துப் படைப்புக்கும் மூலமாகக் கருதி வழிபடுகிறார் என்கிறார்:
“ச எஷ ருத்ர பக்தஸ் ச கேசவோ ருத்ர சம்பவ
ஸர்வபூதபவம் ஞாத்வா லிங்கே ‘ர்ச்சயதி ய ப்ரபும்” : மஹாபாரதம் – 7:172:89-90
ஸ்ரீ கிருஷ்ணர் அனுசாசன பர்வத்தில், பரமசிவனின் பிரபாவத்தை தர்மபுத்திரனுக்கு உபதேசிக்கும்போது இவ்வாறு உரைக்கிறார்:
“வதந்த்யாக்னி மஹாதேவம் ததா ஸ்தாணு மஹேஸ்வரம்”
அதாவது முனிவர்கள் மகாதேவனை அக்னி, ஸ்தாணு மற்றும் மகேஸ்வரன் என்று வர்ணிக்கிறார்கள் என்கின்றார்
கூர்ந்து கவனித்தால்,இந்த வாக்கியத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் ஈசனின் லிங்க
வடிவத்தை பற்றி விளக்கியுள்ளார். ”ஸ்தாணு” என்ற சொல் தூண், தம்பம், அசைவற்ற நிலை என்னும் அர்த்தங்களை உடையது.
”ஸ்தாணு” என்ற சொல்லும் “ஸ்தூனம்” அதாவது தூண் என்ற சொல்லும் ஒரே வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொற்கள். அனைத்தையும் முழுமையாக வியாபித்து நின்றபடியாலும், மேற்கொண்டு வியாபிக்க ஏதும் இல்லாததாலும், ஈசன் அசைவற்ற தூண்- “ஸ்தாணு” என்றழைக்கப்படுகிறார்.
மஹாபாரதம் ஏன் ஈசன் ஸ்தாணு என்ற திருநாமம் கொண்டுள்ளான் என்பதை விளக்குகிறது.
“மஹத் பூர்வே ஸ்திதோ யச்ச ப்ராநோத்பத்தி ஸ்திதஸ் ச யத்
ஸ்திதலிங்கஸ்ச யந்நித்யம் தஸ்மாத் ஸ்தாணுரிதி ஸ்ம்ருத”
அவன் சிறந்தவனாக விளங்குவதாலும்,அவனே பழம்பொருளாதலாலும் , அவனே உயிருக்கு ஆதாரமாக விளங்குவதாலும், அவனின் லிங்கம்-சின்னம் என்றுமே அழிவற்று நிலைநிறுத்தப்பெற்றதாலும் அவனை ஸ்தாணு என்று அழைக்கிறார்கள். (மஹாபாரதம் – 07:202:133)
அக்னித்தம்பமான இலிங்க வடிவில் பரமேஸ்வரன் தோன்றியதால் அவனை “அக்னி” என்றும் “ ஸ்தாணு” என்றும், அனைத்து சிருட்டிக்கும் அந்த இலிங்கமே மூலமானதால் அவன் “மஹேஸ்வரன்” என்றும் போற்றப்படுகிறான்.
அடுத்து புராணங்கள் இலிங்க தத்வத்தை பற்றி கூறும் விளக்கத்தையும் எவ்வாறு இலிங்கம் நாமிருக்கும் பிரகிருதி மாயையில் தோன்றியது என்பதனையும் பார்ப்போம்.
ஸ்ரீ கிருஷ்ணர் உபமன்யு முனிவரை பார்த்து, ”லிங்கம் என்றல் என்ன?”என்று வினவினார். அதற்கு உபமன்யு மஹரிஷி பதிலளிக்கிறார்:
“எவமேவ விவாதோபூத்ப்ரஹ்மவிஷ்ணோ: பரஸ்பரம்
அபவச்சா மகாயுத்தம் பைரவம் ரோமஹர்ஷணம்
முஷ்டி பிர் நிக்நடோஸ்தீவ்ரம் ரஜஸா பத்த வைரையோ:
தாயோர்தர்பாபஹாராய ப்ரபோதாய ச தேவயோ:
மத்யே சமா விர பவல் லிங்கமைஸ்வரமத்புதம்
ஜ்வாலாமாலா சஹஸ்ராத்யமப்ரமேய மநௌபமம்
க்ஷயவருத்தி விநிர்முக்தம் ஆதிமத்யாந்தவர்ஜிதம்”
பிரஹ்மனுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் ( தம் இருவரில் யார் பரம்பொருள் என்பதை பற்றி ) கடுமையான வாக்குவாதம் மூண்டது. பின்னர், அது பயங்கரமான யுத்தமாக மாறியது. ரஜோகுண தாக்கத்தால், இருவரும் ஒருவரையொருவர் முஷ்டிகளால் தாக்கினர். அவர்களின் ஆணவத்தைப் போக்கி, ஞானம் தந்து விழிப்பூட்டுவதற்காக, ஆயிரமாயிரம் சுவாலைகள் கொண்டதும், அளவிடற்கரியதும், ஈடிணையற்றதும், ஆதி நடு அந்தம் இல்லாததுமான ஈஸ்வரனின் அற்புதமான இலிங்கம் அவர்களின் மத்தியில் தோன்றியது.
சிவ மஹாபுராணம் (31-34 ,அத்தியாயம் 34 , வாயவிய சம்ஹிதை)
பிரம்மனும், விஷ்ணுவும் அன்னப் பறவையாகவும், பன்றியாகவும் உருமாறி அந்த இலிங்கத்தின் முடியையும் அடியையும் காண முயற்சி செய்து தோல்வியடைந்தனர். அவர்களின் நிலையை கண்டு மனமிரங்கிய கருணாமூர்த்தியான சிவபிரான், அந்த இலிங்கத்தினின்றும் வெளிப்பட்டு அவர்களுக்கு அருள்செய்தார்.
பரமேஸ்வரனே தாம் எதற்காக இலிங்க வடிவத்தை எடுத்தார் என்பதனை பிரம்ம மற்றும் விஷ்ணுவிடம் விளக்குகிறார்:
“ஈசத்வாதேவ மே நித்யம் ந மதண்யஸ்ய கஸ்யசித்
ப்ரஹ்மதத்வபுத்யர்தம் நிஷ்களம் லிங்கமுத்திடம்
தஸ்மாதஞ்ஞாதமீசத்வம் வ்யக்தம் த்யோதயிதும் ஹி வாம்
சகளோஹமதோ ஜாத: ஸாக்ஷத் ஈசஸ்து தத்க்ஷநாத்
சகலத்வமதோ ஞேயம் ஈசத்வம் மயி ஸத்வரம்
யதிதம் நிஷ்களம் ஸ்தம்பம் மம ப்ரஹ்மத்வபோதகம்
லிங்கலக்ஷண யுக்தத்வான் மம லிங்கம் பவேதிதம்
ததிதம் நித்யமப்யர்ச்யம் யுவாப்யாமத்ர புத்ரகௌ”
நானே அனைத்திற்கும் ஈசனாக விளங்குகிறேன்; இந்த ஈசத்துவம் என்னுடையது, என்னை அன்றி வேறு எவருக்கும் இது கிடையாது. முதற்கண், மனதிற்கு எட்டாத எம்முடைய நிஷ்கள (உருவம்,குணம்,அடையாளம் அற்ற நிலை) தன்மையை உங்களுக்கு உணர்த்துவதற்காக நான் அக்கினித் தம்பமான இலிங்க வடிவில் உங்கள் முன்பு தோன்றினேன்.
பின், நீங்கள் என்னை அறிந்துகொள்வதற்காக சகல ( உருவம், குறி, பண்புகள் கொண்ட நிலை) நிலையை குறிக்கும் இந்த உருவத்தோடு காட்சி அளித்தேன். எனது இந்த ஈஸ்வர வடிவம் எனது சகள நிலையை உணர்த்தும். இந்த அக்கினித்தூண் நிஷ்கள நிலையைக் குறிக்கும் எனது இலிங்கமாகும்(சின்னம்). என் சின்னமான இலிங்கத்திற்கும் எனக்கும் துளியளவு கூட பேதம் இல்லையாகையால், இந்த இலிங்கம் எப்பொழுதும் வழிபடத்தக்கது, புத்திரர்களே, சிவமஹா புராணம் –1:9:39-42
“தத: ப்ரபிருதி சக்ராத்யா: சர்வ ஏவ ஸுராஸுர:
ரிஷயஸ் ச நரா நாக நார்யஸ்சாபி விதானத:
லிங்கப்ரதிஷ்டா குர்வந்தி லிங்கே தம் புஜயாமிதி ச”
அந்த நாள் முதற்கொண்டு ,இந்திரன் முதலிய தேவர்கள், அரக்கர்கள்,ரிஷிகள்,நாகங்கள் மற்றும் பெண்கள் விதிப்படி லிங்கங்களை ஸ்தாபித்து ஈசனை லிங்க வடிவில் வணங்குகிறார்கள்.
சிவ மஹாபுராணம் சொல்கின்றது
(ஸ்லோகம் ஸ்லோகம் 85 ,அத்தியாயம் 35 , வாயவிய சம்ஹிதை)
“அப்ரஹ்மத்வாத் தாதான்யேஷாம் நிஷ்காலத்வம் ந ஹி க்வசித்
தஸ்மாத்த்தே நிஷ்காலே லிங்கே நாராத்யாம்தே சுரேஸ்வர”
சிவன் பரம்பொருளை இருக்கும் காரணத்தால் அவருக்கு நிஷ்களம் மற்றும் சகளம் என்ற இருதன்மையும் உண்டு.ஆதலால், சிவனுக்கு மட்டும் தான் இலிங்கம் மற்றும் உருவ வழிபாடு என்ற இரண்டும் உண்டு.
இதர தெய்வங்கள் பரப்பிரம்மமாக இல்லாத காரணத்தால், உருவ வழிபாடு மட்டுமே உண்டு.
சிவ மஹாபுராணம் 5.13
“
சிவபெருமான் பிரம்ம விஷ்ணுக்களுக்கு ஆதி அந்தம் இல்லாத அனல் தூணாக காட்சி தந்தான். அந்த அனல் தூண்தான் லிங்கம் என்று சிவ மஹாபுராணம் தெளிவுபடுத்திகிறது.
பிரணவத்தின் தூல வடிவமே இலிங்கம் என்று சிவ மஹாபுராணம் கூறுகிறது. பிரணவ சொரூபமே இலிங்கம். அக்கினி இலிங்கமாக ஈசன் அயன், மாலுக்கு காட்சி நல்கியபோது:
“தத்ராகார: ஸ்ரீதோ பாகே ஜ்வலலிங்கஸ்ய தக்ஷிணே
உகாரஸ்சொத்தரே தத்வன் மகாரஸ்தஸ்ய மத்யத:
அர்த்தமாத்ராத்மகோ நாத: ஸ்ரூயதே லிங்கமூர்த்தனி”
உயர்ந்து சுடர்விடும் அந்த ஜ்வாலலிங்கத்தின் வலப்புறத்தே அகாரமும்,இடப்புறத்தே உகாரமும்,நடுவில் மகாரமும்,அதன் சிரத்தின் மேலே அர்த்த மாத்திரையான நாதமும் பொருந்திக்கொண்டன.
லிங்க புராணத்தில், முனிவர்கள் பிரம்மதேவரை பணிந்து, ”இலிங்கம் என்றல் என்ன? இலிங்க வடிவம் எவ்வாறு தோன்றியது?” என்று வினவினர்.
அதற்கு பிரம்மன் கூறினார்:
“ப்ரலயார்ணவமத்யே து ரஜஸா பத்தவைரயோ
எதஸ்மிந்னந்தரே லிங்கம் அபவச்சாவயோ: புரா
விவாதசமனார்தம் ஹி ப்ரபோதார்த்தம் ச பாஸ்வரம்”
பிரளய சமுத்திரத்தின் நடுவே, நானும் விஷ்ணுவும் ரஜோ குணத்தால் உந்தப்பட்டுக் கடும் போரில் ஈடுபட்டிருந்தோம். அந்தச் சமயத்தில், எங்கள் விவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், எங்களுக்கு விழிப்பூட்டுவதற்கும், ஒரு தேஜோமயமான இலிங்கம் எங்கள் முன் தோன்றியது.
லிங்க புராணம் (17.32-33)
“அவ்யக்தம் லிங்கமாக்யாதம் த்ரிகுணப் ப்ரபவாப்யயம்/
அணாத்யானந்தம் விஸ்வஸ்ய யதுபாதானகாரணம்//
ததேவ மூலப்ரக்ருதிர்மாயா ச ககனாத்மிகா
தத ஏவ ஸமுத்பன்னம் ஜகதேதச்சராசரம்”
அவ்வியக்தமே (தோன்றி வெளிப்படாத நிலை) இலிங்கம் என்று அழைக்கப்படும். அதுவே முக்குணங்களுக்கும் மூலம். அதிலிருந்தே இந்தப் பிரபஞ்சம் தோன்றி பின் அதிலேயே ஒடுங்குகிறது. அதற்கு முதலும் முடிவும் கிடையாது. அதுவே இந்த பிரபஞ்சத்திற்கு உபாதான காரணமாகும்.அதுவே ஆகாயத்திற்கொப்பான விரிவுடைய மாயையாகிய மூலபிரகிருதி. பிரபஞ்சத்தின் அணைத்து தாவர சங்கம உயிரினங்களும் அதனிடமிருந்தே தோன்றுகின்றன.
“தத: சிவோ மஹேசஸ் ச ருத்ரோ விஷ்ணு பிதாமஹ:
பூதாநி சேந்த்ரியைர்ஜாதா லீயந்தே’த்ர சிவாக்ஞயா
அத ஏவ சிவோ லிங்கோ லிங்காக்ஞபயேத்யத
சதாசிவன், மஹேஸ்வரன், உருத்ரன், விஷ்ணு, பிரம்மன், பூதங்கள் மற்றும் இந்திரியங்கள் முதலிய அனைத்தும் இலிங்கத்தினின்றே சிவாக்ஞையால் தோன்றி இலிங்கத்திலேயே ஒடுங்குகின்றன.
சிவமஹா புராணம் இலிங்கம் என்பது சிவனின் திருமேனி என்று தெள்ளத் தெளிவாக உரைக்கிறது:
“லிங்கம் ச சிவயோரதேஹ ஹஸ்தாப்யாம் யஸ்மாத்ததிஷ்டிதம்”
லிங்கம் சிவ சக்திகளால் அஷ்ட்டிக்கபட்டிருப்பதால் அது அவர்களின் திருமேனியாகும்.
சிவமஹா புராணம் – 7.2,34 சொல்கின்றது ஸ்காந்த புராணமும் சிவனின் அனல் தூண் வடிவம்தான் இலிங்கம் என்கிறது:
“லோகோபத்ரவமாகர்ந்நய ஜோதிர்லிங்கதயா சிவ
மாகாக்ருஷ்ண சதுர்தஸ்யாம் மத்யேராத்ரமதுல்யபா”
பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் நடந்த யுத்தத்தினால் உலகத்திற்கு ஏற்பட்ட உபத்திரவத்தை நீக்குவதற்கு சிவபிரான் ஜோதிர்லிங்க வடிவத்தில் மாசி மாத சதுர்த்தசி திதியில் தோன்றினார்.
மேலும்,கூர்ம புராணம், தேவி பாகவதம், பவிஷ்ய புராணம், புராணங்களில் மிக்க பழமையானதாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்படும் வாயு புராணம், இவை அனைத்தும் சிவ லிங்கம் என்பது பிரம்ம விஷ்ணுக்களுக்கு காட்சி தந்த அக்னித்தம்பத்தின் சொரூபமே அன்றி ஆண்குறி அல்ல என்று அறுதியிடுகின்றன. ஆதலால், மேற்கண்டபடி, வேதங்கள், ஆகமங்கள், சி ல்பசாஸ்திரங்கள் மற்றும் புராணங்களைக் கூர்ந்து ஆராய்ந்தால் சிவலிங்கமானது ஆண்குறியின் சின்னம் அல்ல என்பது தெளிவாக புலப்படும்.
இப்படி வேதங்கள் பல இடங்களில் சொல்கின்றன , உண்மையில் லிங்கம் எனும் நீள்முட்டை வடிவம் இந்த பிரபஞ்சத்தை குறிப்பது, அணுவின் வடிவம் அதுவே அண்டவெளி வடிவமும் அதுவே
நீள்வட்ட பாதையில் கோள்கள் சுற்றுவது போல அணுவுக்குள் நீள்வட்டபாதையில்தான் அணுதுகள் சுற்றுகின்றது, இந்த நீள்வட்ட தொடர்புதான் லிங்கதத்துவமாக அமைந்துள்ளது
ஆவுடை என்பது வேறொன்றுமல்ல, ஆ என்றால் ஆன்மாவினையும் குறிக்கும் ஆன்மாவில் தங்கும் சிவனே என்றுதான் ஆவுடையும் லிங்கமும் இணைத்து வைக்கபட்டன
நீள்வட்டமான கல் நிற்க ஒரு குழி வேண்டும், லிங்கத்தின் அபிஷேக நீர் ஓடிவழிய ஒரு இடம் வேண்டும், இவைதான் ஆத்ம தத்துவமாக ஆவுடை என நிறுவபட்டது
லிங்கம் என்றால் அடையாளம், இறைவனுக்கும் மானிடருக்குமான அடையாளம், எங்கும் வியாபித்திருக்கும் இறைவனை ஒரு கல்லில் கண்டு வழிபடும் அடையாளம்
இன்றும் கிராமங்களில் கல் வைத்து வழிபடும் வழிபாடு லிங்க வழிபாடே, அமைப்பு சரியில்லா கல்லை செதுகி நீள்வடிவமாக்கினால் அதுதான் லிங்கம்
ஆசியா முழுக்க இந்த வழிபாடு இருந்தது, பைபிளில் ஆபிரகாமின் பேரன் யாக்கோபு கூட இறைவனை நினைந்து ஒரு கல் வைத்து எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்த காட்சி கிடக்கின்றது
லிங்கம் எனும் கல் வடிவினை இறைவனாய் கருதி, தன்னிடம் உள்ள பாலும் தேனும் பழமும் நெய்யும் தயிரும் கொட்டி கொட்டி வழிபடுவது பக்தியின் உச்சமாய் இருந்த அந்த வழிபாடு லிங்க வடிபாடாய் தொடர்ந்தது
லிங்கம் என்பது சிவன் எனும் பெரும் கடவுளுக்கும் மானிடருக்கும் சந்திப்பு புள்ளியாக இருந்தது, அதில் தத்துவம் உண்டு, அணுவியல் உண்டு, இன்னும் என்னவெல்லாமோ உண்டு
சிவலிங்கம் அதாவது சிவ அடையாளம் என கொண்டாடபட்ட லிங்கம், வெள்ளையனின் குறுக்கு ஆய்வுகளாலும் இந்து ஞானத்தில் அவனுக்கு இருந்த அரைகுறை அறிவாலும் அவனுக்கு துணைபோன அரைகுறை சமஸ்கிருத கோஷ்டிகளாலும் “ஆண்குறி” என மாற்றபட்டது
அந்த பொய்தான் இன்று எங்கெல்லாமோ சுற்றி இந்துக்களில் சிலரே சிவலிங்கம் ஆண்குறி என குழம்பி நிற்கும் கொடு நிலைக்கு சென்றிருக்கின்றது
தங்கள் வேர்கள் தெரியாமல் இந்துக்கள் குழப்பிவிடபட்டதே அதற்கு காரணம்
இந்துக்களின் பாரம்பரியமும் வழிபாடும் ஞானமும் அவர்கள் செய்த ஏற்பாடுகளும் வியக்கதக்க ஞானம் கொண்டவை
அண்டம் என்பதன் கண்காணும் வடிவமே லிங்கம், சிவன் எல்லையற்ற பரம்பொருள் அண்டங்களின் பரமாத்மா என்பதைத்தான் கல்லில் சிவலிங்கமாக சுருக்கிவைத்து இந்துக்கள் வழிபட்டு கொண்டிருக்கின்றார்களே தவிர வேறு எதுவும் அதற்கு பொருளல்ல
இந்த பாரத கண்டத்து சனாதன தர்மம் என்பது மதம் மட்டுமல்ல, அது ஆன்மீகம், அறிவியல், உளவியல், பிரபஞ்ச தத்துவம், தெய்வீகம் எல்லாம் கலந்த வாழ்வியல் நெறி
ஒரு மனிதன் உடலாலும் மனதாலும் பலமாகி உறுதியாகி இறைவனை அடைய பிரபஞ்ச விதிகளுக்குட்பட பல வழிகளை சொன்ன மதம் இந்துமதம், அதை வழிபாடு, விழா, கொண்டாட்டம், அனுசரிப்பு என பல வகைகளில் தெய்வத்தின் பெயரை முன்னிறுத்தி சொன்னது
அதில் ஒன்றுதான் மகா சிவராத்திரி நாள்
இந்நாளை விழா என சொல்வதை விட மனதை கட்டுபடுத்தும் விரதம் என்பதே பொருத்தமானது, அதை கொண்டாட்டம் என்பதை விட ஏற்று வைராக்கியாமாக அனுசரிப்பது என்பதே சரி
இந்துக்களின் வழிமுறை எல்லாம் புராண கதைகளில் தொடங்கி மானிட மன உடல் நலத்தை பாதுகாத்து அதன் மூலம் இறைவனை உணார்ந்து அடைதல் எனும் அமைப்பினை கொண்டதே
அவ்வகையில் இந்த நாள் சிவபெருமானிடம் ஒடுங்கியிருந்த உலகை மீண்டும் படைக்க வேண்டி அன்னை விரதம் இருந்த நாளாக சொல்லி இன்னும் பல சிறப்புகளை சொல்வார்கள்
(ஒருவகையில் விஞ்ஞான விளக்கமும் இங்கு மிக சரியாக பொருந்தி செல்வதை காணலாம், இந்த பிரபஞ்சம் விரிந்து சுருங்கி மறுபடி விரிந்து சுருங்கும் இயக்கத்தை கொண்டது என்கின்றது விஞ்ஞானம்
இந்த தத்துவத்தை ஆன்ம தத்துவமாக இந்து ரிஷிகளும் சொன்னார்கள்
அப்படி பிரபஞ்சம் சுருங்கி அடங்கி பின்னர் விரியும் என விஞ்ஞானம் சொல்வதை மிக சரியாக சொல்லும் மதம் இந்துமதம் )
பிரம்மனும் விஷ்ணுவும் சிவனை பணிந்த நாள், அர்ஜூனனுக்கு பாசுபதகனை கொடுத்த நாள், கண்ணப்ப நாயனார் முக்தி அடைந்த நாள் என ஏகபட்ட சிறப்புகள் உண்டு
ஒரு சிவராத்தியிரில் புலிக்கு பயந்து மரத்தின் மேல் இரவெல்லாம் தூங்காமல் இருக்க வில்வ இலையினை பறித்து லிங்கத்துக்கு போட்டவனே அடுத்த பிறப்பில் குகனாக பிறந்தான் என்கின்றது இன்னொரு செய்தி
ஆயிரமாயிரம் செய்திகள் புராணங்களில் இருந்தாலும் கூர்ந்து நோக்க வேண்டிய சில பக்கங்கள் இந்த மகா சிவராத்திரியில் உண்டு
ஏன் மிக சரியாக ஒரு தேய்பிறையின் 14ம் நாளை சொன்னார்கள்?
ஆசை என்பது நிலவு போன்றது அது வளரும் தேயும் அகலும் மறுபடி மெல்ல முளைக்கும் இப்படி முடிவில்லா விளையாட்டு காட்டும், நிலவற்ற வானம் போல் ஆசையற்ற மனமே இறைவனை அடைய வழி என அந்நாளை சொன்னார்கள்
லிங்க வழிபாடு மகா மகா விஷேஷமானது, லிங்கம் என்பது பிரபஞ்ச சக்தியின் வடிவம், அதை கவனித்தால் ஒரு முட்டை வடிவில் இருக்கும், இன்றும் பிரபஞ்சம் அவ்வடிவே கோள்கள் சுற்றுபாதை இவ்வடிவே
லிங்கத்தினை ஏன் சிவன் என்றார்கள்?
லிங்கம் என்பதை உருட்டினால் ஓடி கொண்டே இருக்கும், அதன் வடிவில் தொடக்க புள்ளியுமில்லை முடிவுமிலை
ஆம் தொடர்ந்து இயங்கும் அழிவற்றவன் இறைவன், தொடக்கமும் முடிவுமில்லாதவன் இறைவன், பிரபஞ்ச வீதியின் பெருவடிவம் இறைவன் என லிங்கத்தை அடையாளமாய் வைத்தார்கள்
லிங்கம் என்பது சிவனின் அரூப வடிவம் என்பது இதனாலே.
மாத சிவராத்திரியெல்லாம் அந்நாளில் வந்தாலும் மாசிமாதம் வரும் சிவராத்திரி மிக விஷேஷமானது, பிரபஞ்ச தத்துவபடி நல்ல அதிர்வுகள் பூமியில் பெருகும் மாதம் என்பதால் விழாக்கள் பல வைத்தார்கள், அப்படியே அந்த சிவராத்திரியும் விஷேஷமானதாயிற்று
சிவராத்திரியின் ஆன்மீக விஷயங்களை புராணங்கள் சொன்னது, அதன் பிரபஞ்ச தத்துவங்கள் என்னென்ன?
சந்திரன் என்பது தேய்ந்து வளரும் பொழுது மானிடரின் எண்ணங்களில் அதாவது மனதில் பல மாற்றங்களை கொடுக்கும், புவிஈர்ப்பு விசை உள்ளிட்ட எல்லாமே அந்நாளில் மாறும், கடல் மட்டம் கூடி குறையும்
அதே கொந்தளிப்பு மானிட மனதிலும் ஏற்படும், அன்று சில விரதம் பக்தி வழிபாடு மூலம் மனதை கட்டுபடுத்தும் முறை அவசியம் இதனாலே ஒவ்வொரு மாதமும் தேய்பிறையின் 14ம் நாள் சிவராத்திரி ஆயிற்று
அதன் முன்னால் வரும் 13ம் நாள் பிரதோஷம் இன்னும் குறிப்பிடதக்கதாயிற்று
பிரதோஷம் என்பது பாற்கடலை கடைந்தபொழுது அதில் திரண்ட விஷத்தை உலக உயிர்களுக்காக சிவன் தானே குடித்து காத்ததினை குறிப்பது என புராணம் காரணம் சொன்னாலும் மூன்று விஷயங்கள் உண்டு முதலாவது யோகிகள் சொல்வது, இரண்டாவது ஞானியர் சொல்வது, மூன்றாவது உலக பொது நம்பிக்கையும் விஞ்ஞான ரகசியமும்
ஆம் யோகிகள் இந்த பாற்கடலை கடைவதை தியானத்தோடு ஒப்பிடுவார்கள் மூலாதாரத்தை (பாற்கடல்) முதுகெலும்பு எனும் மத்தினை (மேருமலை) கொண்டு பிங்கலை, இடகலை எனும் மூச்சுகாற்றாக (வாசுகி) கொண்டு தியானித்தால் (கடைந்தால்) குண்டலினி எனும் அபரிமிதமான (அமிர்தம்) சக்தி வரும்
ஆனால் தியானம் இருக்கும் பொழுது முதலில் ஒருவனின் கெட்ட அதிர்வுகளும் விஷம் போன்ற பாவசிந்தனைகளும் முதலில் வரும், அது தலையில் துரியம் எனும் சக்கரத்துக்கு சென்றால் அவன் துஷ்டனாகிவிடுவான்
இன்னும் தெளிவாக சொன்னால் குண்டலி என்பது நெருப்பு அதாவது தீ, நம் தீ என்பதே நந்தியுமாயிற்று, அந்த குண்டலினி எனும் சக்திமேல் இருக்கும் நற்சக்தி அந்த கெட்ட விஷயங்களை தலைக்கு ஏற்றாமல் களைந்துவிடும். விசுக்தி எனும் கழுத்து சக்கரத்திலே அதை களைந்துவிடும் என்பது யோகியர் சொல்வது
இது 13ம் நாளில் தியானம் கைகூடும் நாள் அதாவது சந்திர பூமி ஈர்ப்பு விசையால் மனம் ஒரு கொந்தளிப்பில் இருக்கும் பொழுது எளிதாக நடக்கும் என்பதால் அந்நாளில் வழிபாடு முக்கியம் என்றார்கள்
ஞானியர் அந்நாளில் பாவங்களை எல்லாம் இறைவனிடம் விட்டுவிட்டு அமிர்தம் போன்ற புண்ணியத்தை மட்டும் பெறவேண்டும் என்றார்கள்
உலக வழக்கில் இன்றும் ஐரோப்பியர் 13ம்நாளை துரதிருஷ்டமாக கருதுகின்றனர். அந்நாளில் தீய அதிர்வுகளும் சக்திகளும் வானில் இருந்து வருவதாக அவர்கள் நம்பிக்கை, அதிலிருந்து காவல் பெற பிரார்த்தனை ஆலயம் என வழிசெய்திருந்தார்கள்
இதனை மேற்குலகம் இந்துக்களிடம் இருந்தே எடுத்து கொண்டது
ஆம் அந்த 13ம் நாள் மாலை ஆகமவிதிக்கு உட்பட்ட ஆலயம் சென்று வணங்கினால் தீய அதிர்வுகளிடம் இருந்து தப்பலாம் என்பது விஞ்ஞான உண்மை, இந்துக்களின் ஆகமவிதி ஆலயம் அந்த கவசத்தை கொண்டது
இதைத்தான் பிரதோஷம் என்றார்கள் பிரதோஷம் என்றால் ஒடுங்கும் நேரம், நம் பாவமும் நம் முன்னோர்களின் சந்ததி பாவமும் இறைவனில் ஒடுங்கும் நேரம் என்பதால் அந்த வழிபாடு அவசியமாயிற்று
அந்த காலகட்டமான 14ம் நாள் அந்த சிவராத்திரியில் மனம் கொந்தளிப்பான அல்லது இனம்புரியா இறுக்கம் கலக்கம் வரும் நேரம் அந்த மாலை நேரம் மனதை சிவனிடம் செலுத்த இறை சக்தியிடம் செலுத்த அந்த சிவராத்திரி ஏற்படுத்தினார்கள்
அந்தபொழுது இறைசிந்தனையில் இருந்தால் தேவையற்ற குழப்பங்களில் மனம் சிக்காது என்பதே அதற்கான தத்துவம்
சந்திரன் சிந்தனைக்கு காரணம் என்பதால் அந்த பவுர்ணமி அம்மாவாசை ஒட்டிய நாட்களில் ஞாபகமறதி, அலர்ஜி, டென்சன்(மன அழுத்தம்), ஜீரண சக்திக் குறைபாடு போன்றவைகளால், சோர்வு, தூக்கமின்மை, அதிக உஷணம் போன்ற துன்பங்கள் ஏற்படும்.
இன்று தொட்டதெற்கெல்லாம் மருத்துவம் மருந்து மனநல ஆலோசனை தூக்கமருந்து என மனதையும் உடலையும் கெடுத்து கொள்ளும் முட்டாள் சமூகம் போல் அன்றைய சமூகம் இல்லை அது மனதை பிரபஞ்சத்தின் இயக்கபடி கணித்திருந்தது. பிரபஞ்ச இயக்கம் மனதை பாதிக்கும் என்பதை உணர்ந்திருந்தது
அந்த அறிவுடை சமூகம் இதைப்புரிந்து கொண்டதால், அமாவாசை மற்றும் பௌர்ணமியை ஒட்டிய நாட்களில் மனவலிமையையும், அறிவின் விழிப்பாற்றலைத் தூண்டவும் மன ஒருமை மற்றும் உடல் இயக்கங்களில் நிதானத்தைக் கொண்டுவரவும் விரதம் மற்றும், பூஜைகள், தியானம் போன்றவற்றைக் கடை பிடித்தார்கள்.
மாதம் மாதம் கடைபிடித்தார்கள்.
மாதாந்த வளர்பிறை, தேய்பிறை இரண்டிலும் வருகின்ற ஏகாதசி திதிகளில் குறைவான உணவுப்பழக்கத்தை கை கொண்டார்கள் . துவாதசி திதிகளில் கிழங்கு உணவு வகைகளைத் தவிர்த்து, உப்பைக் குறைத்து, கீரைவகைகளை அதிகமாகச் சேர்த்தார்கள்
திரியோதிசி நாட்களில் உணவில் எண்ணெயை நீக்கி, இனிப்பை சொஞ்சம் சேர்த்து மதியம்1.30 மணிக்குள் உண்பார்கள்.
மாத சிவராத்திரிகளில் மதிய உணவு அரை வயிறும் இரவு பால் பழம் உணவாக கொண்டார்கள். சிலர் சிவ சிந்தனையில் இருந்து பூஜை, அபிஷேக ஆராதனைகளைச்செய்வார்கள், யோக சாதகர்கள் தியானம் மேற்கொள்வார்கள்.
மாத சிவராத்திரியில் நடுச்சாமம் (இரவு 12.00 மணி) வரை விழித்திருந்து ஈசனை நினைத்து பூஜைகளோ, தியானமோ மேற்கொண்டார்கள். அதற்குப்பிறகு ஓய்வு எடுப்பார்கள்.
மாதம் மாதம் இது நடந்து கொண்டிருக்கும்
அதாவது சரியை வழியில் உள்ளவர்கள் பூஜைகள் விரதங்கள். கிரியை வழியில் உள்ளவர்கள் இரவில் தூங்கி விடும் அறிவை தூங்காமல் விழிப்பு நிலையில் இருக்கச்செய்வது அதாவது தியானம்.
இதைக்கடைபிடிப்பதால்உடல்நலமும், மனவளமும் காக்கப்படும், விரதமும் தூக்க கட்டுபாடும் பிரபஞ்ச விதிக்கு ஏற்ப சந்திரனின் நிலைபாட்டுக்கு ஏற்ப உடலை வளைக்கும் ஒரு நுட்பமே
அப்படி செய்வதால் உடலில் செரிமானம் முதல் பல சிக்கலை தவிர்க்கலாம், மனதில் எழும் இனம்புரியாத சிக்கலகளை விலக்கலாம்
இதில் மாசி மாதம் வரும் அந்த தேய்பிறை 14ம் நாள் கொஞ்சம் சக்திவாய்ந்தது என்பதால் சில வழிகளை மனதை காக்க சொன்னார்கள், இறைவனிடம் இருக்கும் மனம் எதிலும் குழம்பாது என்பதை உணர்ந்து அந்நாளில் பூஜை வழிபாடு என விழித்திருக்க சொன்னார்கள்
அந்நாள் இந்த சூரியமண்டலமும் பூமியும் பிரபஞ்சத்தின் மையத்துக்கு வரும் நாளாக வான்வெளியில் கருதபடுகின்றது அப்பொழுது சில விஷேஷித்த கதிவீச்சும் சக்தியும் பூமி மேல் விழும்
இதனை விழித்திருந்து பெற்றுகொள்ளத்தான் அந்த இரவை மகாசிவராத்திரி என்றார்கள்
பிரதோஷத்தின் அன்று பாவங்களை இறைவனிடம் விட்டு விட்டு , துர்சிந்தனைகளை விட்டுவிட்டு முழு தெளிவான அன்பான மனதுடன் மறுநாள் விரதம் இருக்க சொன்னார்கள்
அப்படியே அன்றிரவு விழித்திருக்கவும் சொன்னார்கள்
ஏன்?
ஆம் உணவும் தூக்கமும் மனிதனின் அடிப்படை தேவைகள், மானிட இயக்கத்தை கூர்ந்து கவனித்தால் மனிதன் இதை நோக்கித்தான் ஓடிகொண்டிருப்பான், மருத்துவன் நோயாளியிடம் கேட்கும் முதல் கேள்வியே இந்த இரண்டும் பற்றியதுதான்
ஆனால் இந்த இரண்டிலும் மனிதன் மிக மோசமாக சிக்கி கொண்டால் அவன் மனம் வேறு எதையும் தேடாது சுகம் ஒன்றையே நாடும்
அந்த சுகத்தினை தேடி அலைந்து அதற்காக பாடுபட்டு திரியும் மனிதன் கடவுளை தேட மறந்துவிடுவான், அச்சிந்தனையே எழாது
உணவும் தூக்கமுமே ஒரு மனிதனை இவ்வுலகில் எல்லா சுகங்களக்கும் அடிமையாக்கி கட்டுபடுத்தி வைத்திருக்கின்றன
இதை இந்நாளில் உணர்த்தி உணவும் உறக்கமும் ஒருவித சங்கிலி என்பதை புரியவைக்கும் நாள் சிவராத்திரி, இந்த இரண்டும் நெருப்பு போல் எரிந்து கொண்டே இருக்கும் என சொன்ன நாளும் இதுவே
அதை கட்டுபடுத்த விரதம் இருக்க சொன்னார்கள், தூங்காமல் விழித்திருந்து இறைவனை சிந்திக்க சொன்னார்கள்
விரதம் இருக்கும் பொழுது இரு விஷயங்கள் சாத்தியம் முதலில் உடல் ஒடுங்கும் உடல் ஒடுங்க ஒடுங்க மனம் ஒடுங்கும். உணவை தவிர்க்கும் மனம் இறைவனை தேடும்
மஹா சிவராத்திரி
(அப்படியே பசிகொடுமையினையும் அது புரியவைக்கும் அன்னதானத்தின் அவசியத்தை தெளிய வைக்கும்)
உறக்கம் தவிர்க்கபடும் பொழுது சிந்தனை பெருகும், இதுகாலமும் தேவையற்று தூங்கி கழித்த வெட்டி பொழுதுகள் நினைவுக்கு வந்து தூக்கத்துக்கு மனம் கடிவாளம் இடும்
ஆம் உணவும் உறக்கமும் உன் கட்டுபாட்டில் இருக்க வேண்டுமே தவிர அதன் கட்டுபாட்டில் நீ இருக்ககூடாது அதற்காக போராடு என சொன்ன மதம் இந்துமதம்
இந்த இரண்டையும் வென்றவன் உலகில் எதையும் வெல்லும் சக்தியினை பெறுவான், இந்த இரண்டிலும் சுகம் கண்டவன் வீட்டை விட்டு ஒரு அடிகூட எடுத்து வைக்காமல் முடங்கியே அழிவான்
உணவு குறைந்தால் உணர்ச்சி குறையும், தூக்கம் குறைந்தால் தெளிவு சிறக்கும் இந்த இரண்டிலும் மனம் ஒருமுகபட்டு இறைவன்பால் சாயும் என்பதன் ஏற்பாடே சிவராத்திரி
சைவசமய ஆகமங்களில் சிவராத்திரி ஆகம வழிமுறைகள், கால வரையறை, பூஜைமுறை என்று விரிவான விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன, அக்கால ஞானியர் ரிஷிகள் அதை செய்தார்கள்
பக்தியும், பூஜைகளும், விரதங்களும், தியான யோகங்களும் எல்லாமே ஈசனை அடைவதற்குத்தான், மானிட பிறவி ஈடேறத்தான்
அதற்கு உடல்நலமும், மனவளமும் அவசியம் என்பதைக்கருத்தில் கொண்டே இத்தகைய நுட்பமான விரத முறைகள் இந்துக்களுக்க் தரப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் இந்தப் பிரபஞ்ச சக்தியின் இயக்கத்தை ஒட்டியே வடிவமைத்துத் தந்திருக்கிறார்கள் என்பதையோசித்துப் பார்க்கும் போது அவர்களின் அக்கால விஞ்ஞான அறிவு குறித்து ஆச்சரியம் தோன்றுகிறது.
மனம், உடல், பிரபஞ்சம் , தெய்வம், ஆலயம் என எல்லாவற்றையும் ஒரு புள்ளியில் இணைத்த அவர்களின் மிக மிக மேம்பட்ட அறிவு என்பது ஆச்சரியமானது
மனம் தாண்டி உடல் சார்ந்த நன்மைகளும் சிவராத்திரியில் உண்டு
ஆம், விரதம் இருக்கும் உடலில் எப்படி கெட்ட கொழுப்பெல்லாம் கரைந்து உடலின் சர்க்கரை அளவு ரத்த அழுத்தம் எல்லாம் கட்டுக்குள் வருகின்றதோ அப்படி தூங்காமல் இருக்கும் பொழுதும் பல நல்ல மாற்றங்கள் உடலில் ஏற்படுகின்றன
உடலுக்கு விரதம் என பட்டினி போடும் பொழுது பல நல்ல மாற்றங்கள் நடப்பது போல, தூக்கம் எனும் மயக்கத்துக்கு விடுமுறை கொடுக்கும் பொழுது பல உறுப்புக்களும் ஹார்மோன்களும் சீரடைகின்றன
மாதம் ஒரு நாள் நோன்பிருந்து மாதம் ஒருநாள் தூங்காமல் இருந்தால் ஒரு நோயும் அண்டாது
ஆம் ஆன்மீகம், பக்தி, பிரபஞ்சத்தை ஒட்டிய மானிட அசைவு, சந்திரனால் ஏற்படும் தாக்கம், உடல் நலம், மனநலம் , பிரபஞ்ச சக்தி வீச்சு என எல்லாமு கலந்த ஒரு வழிபாடு சிவராத்திரி
அன்று மிக மிக அமைதியாக அதிகம் பேசாமல் உண்ணாமல் உறங்காமல் இறை சிந்தனையில் நிலைத்து அமர்ந்திருப்பதும் 4 கால வழிபாடுகளில் பங்கெடுப்பதும் சால சிறந்தது
4 யாமங்களின் பூஜையும் அந்த வடிவங்களை வழிபடுவதும் சால சிறந்தது
அது உஷ்ணமிக்க இரவு என்பதால் பால் தயிர் நெய் போன்ற அபிஷேக பொருட்களை வாங்கி கொடுத்து பூஜையில் பங்கெடுப்பது இன்னும் நல்லது
மாசி மாத தேய்பிறையின் 14ம் நாள் இரவு கொஞ்சம் தீயதன்மை வாய்ந்தது என்பதால் அன்று ஆலயத்தில் தங்குதல் நலம், இதனால் பிரபஞ்ச தீய கதிர்கள் தாக்காது, ஆலய கவச அமைப்பு அதற்கு துணை செய்யும்
இதனாலே ஆலயமெல்லாம் திறந்துவைத்து வழிகாட்டியது இந்துமதம்
இந்நாளில் இரு விஷயங்களை ஆலயத்திலும் மற்ற இடங்களிலும் தவிர்த்தல் நலம்
முதலாவது ஆங்காங்கே நடக்கும் அன்னதானம் நடக்கும், இந்நாள் விரதத்துக்குரிய நாள் எனும் வகையில் இது அனுமதிக்க முடியாதது என்றாலும் விரதததத்துக்கு விலக்கான பெரியோர்களும், உடல்நலம் சரியில்லாதோரும் சிறுவர்களும் அதில் பங்குபெறுவதை அனுமதிக்கலாம்
மற்றவர்கள் அன்று உண்பதும் அதை ஊக்குவிப்பதும் சரியல்ல
இரன்டாவது தூங்க கூடாது என சொல்லிவிட்டு டிவி, திரைபடம், அரட்டை என திசைமாறி விழித்திருப்பதும் சரியல்ல
அக்காலங்களில் சிவராத்திரி அன்று நடனம் இருந்ததா என்றால் இருந்தது, ஆனால் இப்பொழுது இருக்கும் ஆட்டம் அல்ல, இறை சிந்தனையில் இறைவழிபாட்டின், இறைவனின் செய்தியினை, புராண குறிப்பினை நடனத்தால் சொல்லும் அந்த ஆட்டம் அனுமதிக்கபட்டது
ஆம் இறைபாடல் போல இறைவனை உணர்த்தும் நடனங்கள் அனுமதிக்கபட்டவை மாறாக காட்டு கூச்சலும் பெரும் விளக்கு வெளிச்சத்தில் நடக்கும் ஆட்டமெல்லாம் நிச்சயம் தவறானவை
இந்நாள் முழுக்க சிவ நினைவில் மனம் லயிக்க வேண்டிய நாள், பிரதோஷத்தை ஒட்டி எடுழுகபடும் அந்த விரதம் ஒரு நாள் கழிந்தபின்பே முடியும்
இடைபட்ட 36 மணி நேரமும் இறை சிந்தனையிலே மனம் லயிக்க உணவு தூக்கமின்றி லயிக்க ஆலயம் செல்லுதல், பூஜை செய்தல் என்றும் சிவ புராணம், திருவிளையாடல், பன்னிரு திருமுறை படித்தல் என மனம் லயித்தல் நன்று
வாயில் சிவநாமம் ஒலித்து கொண்டே இருக்கட்டும், சிந்தையெல்லாம் சிவன் நினைவு நிறைந்தே இருக்கட்டும்
தியானம் செய்யும் வழக்கம் இருந்தால் இன்னும் விசேஷம்
சிவராத்திரி என்பது பிரபஞ்ச தத்துவபடி மனம் அமைதியாக இறைவனை தரிசிக்க ஒரு நன்னாள், அதாவது காற்றே இல்லா இடத்தில் தீபம் ஏற்றினால் எப்படி எறியுமோ அப்படி பல சஞ்சலங்களை தாண்டி மனம் இறைவனில் லயிக்க வழி செய்யும் ஒரு அழகான பொழுது
அந்த பொழுதினை மனம் கட்டுபட்டு நிற்கும் அந்த பொழுதினை மிக சரியாக அடையாளம் காட்டியிருக்கின்றது இந்துமதம்
அந்நாளில் அந்த புராணகதையில் அதாவது சிவனில் எல்லா உயிர்களும் ஒடுங்கியது போல் ஒடுங்கியிருங்கள், பார்வதி தேவி மறுபடியும் உலகம் படைக்கபட வேண்டும் என தவமிருந்தது போல் இருங்கள்
நிச்சயம் விரதம் முடியும் பொழுது சிவன் அருளால் புது உயிராக, பாவம் நீங்கிய புது பிறப்பாக நிச்சயம் எழுவீர்கள், இறைவனின் அருள் உங்களை முழு கவசமாக இருந்து நல் தெளிந்த சிந்தனையுடன் வழிநடத்தும்
எல்லா மானிடரும் இந்த நன்னாளில் தனித்திருந்து விழித்திருந்து இறையருள் பெற வாழ்த்துக்கள்.
தமிழகத்தில் இந்நாளின் சிறப்பினை உணர்ந்து இந்துக்களெல்லாம் இந்துவாய் வழிபட்டு இந்துமதத்தின் மிகபெரிய சூட்சும வழிகளை எல்லாம் புரிந்து அதில் மனம் நிறைந்து வழிபட்டு வந்தால் தெளிவு பிறக்கும்
அந்த தெளிவில் மாய அரசியல் பிடியில் இருந்து அந்த சைவ பூமி விரைவில் மீழும், சிவன் அதற்கு வழிகாட்டி வருவார் அது சத்தியம்

மகா சிவராத்திரி, ஒவ்வொரு இந்துக்களும் முன்னோர் போதித்த மரபுபடி அதனை கட்டாயம் பின்பற்றுதல் அவசியம்
இந்துமதம் மகா சுதந்திரமானது ஆனால் அந்த அதிதீவிர சுதந்திரமேதான் அதன் பல வீழ்ச்சிக்கும் காரணமாயிற்று
கண்டிப்பும் கட்டுபாடும் இல்லா மதம் காலவோட்டத்தில் தடுமாறும், இந்துமதத்துக்கும் அந்த சோதனை வந்தது ஆனால் அதனை தாங்கிபிடித்த விஷயங்கள் பல உண்டு
இந்துமதம் பல்லாயிரம் தூண்களில் நின்றிருக்கும் மண்டபம், லடசகணக்கான வேர்களில் நிற்கும் மதம்
அதனால் வழிபாடுகள் அவசியம், அதுவும் கோவில் சென்று வழிபடுதல் அவசியம்
கோவிலின் நிர்வாகம் யாரிடமும் இருக்கட்டும், காலம் அதை மாற்றும் ஆனால் கோவில் செல்லும் வழக்கத்தை எக்காரணம் கொண்டும் விட்டுவிட கூடாது
பெரும் கூட்டமாக செல்ல செல்லத்தான் இந்துமதம் வாழும், மதம் வாழ வாழத்தான் இந்துக்கள் வாழ்வார்கள் இந்த திருநாடும் வாழும்
பண்டிகைகள், சிறப்பு நாட்கள் மதம் சார்ந்ததுதான், அந்நாளில் மதம்மேல் நாம் வைத்திருக்கும் பற்றை வெளிபடுத்த நல்ல வாய்ப்புத்தான் அதே நேரம் இந்த மாபெரும் ஞான்சமூகத்தின் தொன்மை என்ன? பாரம்பரியம் எனன? லட்சோபலட்சம் ஆண்டாக இதை பெருமையுடன் உலகுக்கு சொல்லிகொண்டிருக்கும் ஞானகர்வம் என்ன என்பதெல்லாம் உலகுக்கு விளங்கும்
எந்த இனத்த்துக்கும் இல்லா பெருமையும், தொன்மையும்,ஞானமும், வழிபாட்டு பெருமையும் இந்துக்களுக்கு மட்டும்தான் உண்டு
அதை ஒவ்வொருவரும் மறக்காமல் செய்யவேண்டும்
தயவு செய்து ஒவ்வொரு இந்துவும் இந்நாளில் கோவில்களுக்கு சென்று வணங்குங்கள், இரவில் எல்லா கோவில்களிலும் பூஜை நடத்துதல் நன்று
இது வாகன வசதி பெருகிவ்ட்ட காலங்கள், ஒரே இரவில் ஏகபட்ட ஆலயங்களை தரிசிக்கவும் முடியும், அதனால் முடிந்தவரை பல ஆலயங்களுக்கு இரவெல்லாம் செல்ல முயலுங்கள்
நாலுகால பூஜையும் நான்கு இடங்களில் காணுதல் மிக நன்று
இந்த நாளும் இந்த இரவும் சிவனுக்கானது சிவன் இந்த உலகத்துக்கனவர் என்றாலும் இந்நாட்டிற்கு மகா முக்கியமானவர்
அந்த சிவனுக்குரிய நாளில் தொன்மை மாறாமல் முடிந்தவரை எல்லா கோவிலுக்கும் சென்று அங்கிருக்கும் அர்ச்சகர்கள் குருக்கள் பணியாளர்கள் என எல்லோரையும் உற்சாகபடுத்துங்கள்
அவர்களுக்கு அதுதான் மகிழ்ச்சி, தெய்வத்தை அவர்கள் உங்கள் வடிவில்தான் காண்பார்கள், அவர்கள்தான் இந்துமத அச்சாணி
உலகெல்லாம் வெகு உற்சாகமாக கொண்டாடபடும் சிவராத்திரி தமிழகத்தின் எல்லா ஆலயங்களிலும் அதே உற்சாகத்துடன் உங்கள் ஆதரவில் கொண்டாடபடட்டும்
யாரோ ஒரு அன்னியன் சொன்ன ஆங்கிலபுத்தாண்டை கொண்டாடும் மடமை போல் அல்லாமல் நம் முன்னோர் சொன்ன, நம் ஞானபரம்பரை சொன்ன, நமது ரிஷிகளும் ஞானியரும் தந்துவிட்ட நாளில் அவர்கள் குறித்து சொன்ன நாளில் உற்சாகமாக சிவராத்திரியினை கொண்டாடுவதே அறிவுடமையானது
அலை அலையாக இந்துக்கள் எழுந்து ஆலயங்களை நிரப்பட்டும் “மகாதேவா” எனும் குரல் இரவினை உலுக்கட்டும்
இந்த நாட்டின் அடையாளம் மதம் அதன் சிறப்பு மதம் அதன் மாபெரும் தாத்பரியம் ஞானமதம், அதை கொண்டுதான் அந்நாடு எழும்பிற்று அதன் வாழ்வு அட்சி தேசம் மக்கள் வாழ்வியல் என எல்லாமுமே அந்த ஞான மதமாய் இருந்தது என்பதை உலகம் மீண்டும் மீண்டும் பார்க்கட்டும்
தேசத்தின் எல்லா சிவலிங்கங்களும் இன்று நாலுகால பூஜையும் அர்ச்சனையும் காணட்டும், தேசமெங்கும் இந்த பெருவிழா ஞானமயமாக நடக்கட்டும்
மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு, சிவனிடம் இருந்து பாசுபத அஸ்திரம் அர்ஜூனன் பெற்று வந்தாலும் அவன் அதை பயன்படுத்தாமலே யுத்தம் முடிந்தது
கண்ணன் அவர்களின் கண்கண்ட தெய்வமானான், வேறு எதுவும் நினைவில் இல்லை, சிவன் கொடுத்த ஆயுதமுமில்லை செய்த கடும் தவத்தின் நினைவுமில்லை, அது போக யுத்தம் முடிந்த வெற்றியில் இருந்தார்கள்
இந்த போரும் வெற்றியும் மிகபெரிய பரம்பொருளின் நாடகம் என அவர்கள் எதையும் நினைக்கவில்லை, சிவனை அடியோடு மறந்திருந்தார்கள்
யுத்தத்தில் துரியனை அடித்து கொன்று அதை முடித்துவைத்தவன் என பீமனும் ஒரு கர்வத்தோடு அலைந்தான், காட்சிகளை கவனித்து கொண்டிருந்த கண்ணன் அவர்களின் மாயை அறுக்க ஒரு நாடகம் நடத்தினான்
யுத்தம் என்பது பாவங்களின் முடிவு, அதற்கு யாரும் தப்ப முடியாது, செய்த பாவங்களுக்கு பரிகாரமாக ஒரு யாகம் நடத்த நினைக்கும் தர்மனிடமும் அகங்காரம் மிகுந்தது, இதுவரை யாரும் கொடுக்காத பொருளை கொண்டு யாகம் நடத்த விரும்பினான்
அங்கேதான் தன் விளையாட்டை ஆரம்பித்தான் கண்ணன், அவனி விளையாட்டு அந்தணர்கள் உருவில் வந்தது
தர்மனிடம் யாகம் செய்ய வந்த அந்தணர்கள் யாரும் இதுவரை பயன்படுத்தாத யாக பொருள் புருஷ மிருகத்தின் பால் என்றார்கள், மானிட உருவும் சிங்க உடலும் கொண்ட புருஷா மிருகத்தின் பால் அபூர்வமானது என சொல்ல அதை கொண்டுவர விரும்பினான், ஆனால் அந்த கொடிய மிருகம் பற்றி தகவலேதும் அவனிடம் இல்லை
அதை தொடர்ந்து காட்சிக்கு வந்தான் கண்ணன்
அந்த புருஷா மிருகம் பற்றி தனக்கு தெரியும் என்றும் ஆனால் அது பொல்லாதது என்றும் கோபாலன் பெயரை சொன்னால் ஓடும் ஆனால் சிவன் பெயரை சொன்னால் அப்படியே உருகி நிற்கும், அந்நேரம் பாலை கறக்கலாம் ஆனால் சிறிது நேரத்தில் விரட்டும் என்றும் அதன் இயல்பை சொன்ன கண்ணன் ஒரு உத்தியும் சொன்னான்
12 ருத்திராட்சங்களை பீமனிடம் கொடுப்போம், அவன் நாழிக்கு ஒன்றாக இரவு முழுக்க அதை கொண்டு அந்த மிருகத்தை ஓடவைத்து நிறுத்தி பால்கறக்கட்டும் என 12 ருத்திராட்சங்களை கொடுத்து பீமனை அனுப்ப சொன்னான்
ஆம், அகபாவத்தில் இருந்த பீமனின் கர்வம் ஒழிக்க அவனையே கிளம்ப சொன்னான் கண்ணன்
அந்த ருத்திராட்சத்தை தரையில் வைத்தால் அது லிங்கமாகிவிடும், அதை கண்டு உருகும் மிருகம் அப்படியே பூஜை செய்யும் அப்பொழுது பால்கறக்கலாம் ஆனால் பூஜை முடியும் பொழுது லிங்கம் மிருகம் சீறும் என சொல்லியும் அனுப்பினான் கண்ணன்
அன்று மகா சிவராத்திரி நாளாய் இருந்தது, கண்ணனின் கணக்கு அதில் சரியாய் இருந்தது
பீமன் காட்டுக்குள் சென்று கோபாலா கோபாலா என்றதும் அந்த மிருகம் விரட்டியது பீமன் ஒரு ருத்திராட்சம் வைக்க அது லிங்கமாகும் கொஞ்சநேரம் மெய்மறக்கும் மிருகத்திடம் பீமன் பால் எடுப்பான் பின் அவன் கோபாலா கோபாலா என ஓட மிருகம் விரட்டும்
இப்படி 12 ருத்திராட்சங்களும் லிங்கமாகி பீமன் தப்பியபின்னும் மிருகம் அவனை விரட்டியது அடுத்து ருத்திராட்சம் இல்லா பீமன் யாகசாலையினை நெருங்கியிருந்தான், அது விடியும் பொழுதாய் இருந்தது காலை 6 மணி ஆகியிருந்தது
ஆனாலும் மிருகம் விரட்ட யாக சாலைக்குள் ஒரு காலை அவன் வைத்த நிலையில் இன்னொரு காலை மிருகம் பற்றியது
இப்பொழுது யாகசாலைக்குள் இருக்கும் கால் அவனுக்கு, வெளியில் தான் பிடித்த கால் தனக்கு என அது வாதிட்டது, அங்கு வந்தான் தர்மன்
ஏ மிருகமே 12 சிவலிங்கத்தை உனக்கு காட்ட ஓடிய புண்ணிய பாதத்தையா கடித்து விழுங்கபார்க்கின்றாய் என உருக்கமாக அவன் கேட்கவும் மிருகத்துக்கு தன் தவறு விளங்கிற்று
அய்யய்யோ ஆமாம், லிங்கத்தரிசனம் காட்டிய புண்ணிய காலையா கடித்தேன் என அவனை விடுவித்த மிருகம் பின் ஏன் அவன் கோபாலா கோபாலா என கத்தினான் என்பதை யோசித்து சொன்னது. கோபாலா கோபாலா என இவன் அழைத்து ஓடினாலும் அவன் ருத்திராட்சம் வைத்தவுடன் சிவலிங்கம் வந்ததென்றால் “ஹரியும் சிவனும் ஒன்றல்லவா”
அந்த வார்த்தை தர்மனுக்கும் பீமனுக்கும் சுட்டது, அதுவரை குழம்பியிருந்த அவர்கள் இரண்டும் ஒரே சக்தி என்பதை உணர்ந்து அகந்தை ஒழிந்து நின்றனர்
இரவெல்லாம் ஓடி அரியும் சிவனும் ஒன்று என பீமன் ஞானம் பெற்ற கதை இப்படி உண்டு, அதை நினைவு கூறும் விதமாக முன்பு சிவராத்திரியில் 12 சிவாலங்களுக்கு ஓடும் நிகழ்ச்சியும் இருந்தது
புராணகதை இப்படி இருந்தாலும் 12 லிங்கம் என்படு 12 ராசிகளை குறிப்பது என்றும், எல்லா ராசிகளின் அருளும் அந்நாளி கிடைக்க 12 லிங்கங்களை வணங்க வேண்டும் என்பதும் ஏற்பாடு என்பார்கள்
(உண்மையில் 12 ஜோதிலிங்கம் எனும் முக்கிய லிங்கமும் ஆலயங்களும் இந்த 12 ராசிகளை குறிப்பதே, 12 லிங்கங்களையும் வணங்கினால் இந்த பிரபஞ்சத்தை 360 பாகை கோணம் சுற்றியது போலாகும் என்பது ஐதீகம் )
இன்னும் அழுத்தமாக சொன்னால் சிவராத்திரி இரவில் தூங்காமல் லிங்க தரிசனம் செய்ய இந்த ஏற்பாடு செய்யபட்டிருந்தது
அதில் ஹரியும் சிவனும் ஒன்று எனும் மாபெரும் தத்துவமும் இருந்தது
இதனை பாரதத்தின் பல பாகத்தில் வாழ்ந்த இந்துக்கள் ஒரு காலத்தில் செய்தனர், சிவராத்திரி அன்று “கோபாலா கோபாலா” என கத்திய படியே 12 லிங்கங்கள் இருக்கும் ஆலயத்துக்கு ஓடுவார்கள்
இதனை பல இனங்கள் பின்னாளில் கைவிட்டது, அதற்கு புத்தமத எழுச்சி பின் சமண மதம் அதை தாண்டிய ஆப்கானியர் ஐரோப்பியர் குழப்பம் என பல காரணம் உண்டென்றாலும் அந்நியர் ஆட்சியில் அதிகம் சிக்காத கன்னியாகுமரி பக்கம் இந்த ஓட்டம் உண்டு
சாலிய மகரிஷி வழிவந்தவர்கள் என தங்களை சொல்லும் சாலியர் இனம் எனும் நெசவாளர் இனம் அதனை தொடர்ந்தது
சிவராத்திரி அன்று இப்படி ஆதிகேசவ பெருமாள் கோவிலை சுற்றிய 12 சிவாலயங்களை இப்படி சிவராத்திரியன்று கோபாலா கோபாலா என சொல்லியபடியே ஓடி சுற்றுவார்கள்
இது சிவாலய ஓட்டம் என்றாயிற்று
இப்பொழுது சாலியர் தாண்டி எல்லா இந்துக்களும் பங்கெடுக்கும் நிகழ்வாக அது அமைந்திருக்கின்றது, ஆம் இந்தியா முழுக்க சிவராத்திரி கொண்டாடபடும் நேரம் கன்னியாகுமரி பக்கம் மட்டும் “கோபாலா கோபாலா” என கண்ணனை நினைத்தபடியே சிவராத்திரி அனுசரிக்கபடுவது அங்குதான்
தூங்காமல் விழித்திருந்து சிவனை தரிசிக்கவும் அதில் ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை புகுத்தவும் எவ்வளவு நுட்பமான வழிகளை எல்லாம் போதித்திருக்கின்றார்கள் அந்த முன்னோர்கள்
சிவராத்திரி முழுக்க இறைவனை அவன் நினைவிலே தேடு என்பதை இதைவிட எப்படி ஒரு ஏற்பாட்டை செய்ய முடியும்?
ஆம் அந்த சமூகம் பரிபூரண ஞானசமூகமாய் இருந்திருகின்றது, சிவாலய ஓட்டம் அதைத்தான் சொல்கின்றது
(யாளி போலவே புருஷா மிருகம் எனும் மனித தலையும் புலி உடலும் கொண்ட சிலைகள் இந்து ஆலயங்களில் உண்டு, சில இடங்களில் அவை கொண்டாடபடுவதும் உண்டு
புருஷா மிருகம் யாளி என எவ்வளவோ அதிசயங்களை சொல்லி அதனால் தத்துவங்களையும் போதிப்பது இந்துமதம்
இன்றும் கிழக்காசியாவில் நடக்கும் டிராகன் நடனமும் இன்னும் பலவடிவ நடனமும் இந்த யாளி மற்றும் புருஷா மிருக தத்துவமே, அதன் அடிப்படையில் அமைந்தவையே, எல்லாமும் இந்துமத்தில் இருந்துதான் உருவானது, ஒவ்வொன்றும் ஆயிரமாயிரம் தத்துவத்தை கொண்டது
பவுத்தர்களாலும் இந்துமதம் எனும் பெருஞானமரத்தின் இலைகளை பறிக்க முடிந்ததே தவிர இந்துமத அடிமரமும் அதன் ஆணிவேரும் அப்படியேதான் இருக்கின்றது அதை தொட்டுபார்க்கவும் யாராலும் முடியவுமில்லை )


சிவராத்திரி விஷேஷமாக கொண்டாடபடும் காலமிது, அந்த காலகட்டத்தில் ஒரு உண்மை சரியாக விளங்கும்
அதாவது குமரி மாவட்டத்து சிவாலய ஓட்டம் தொடங்கி, சிவராத்திரி பிரசித்தியாக கொண்டாடபடும் சிவாலயங்கள் வரை காணப்படும் விஷயம் சைவ வைணவ ஒற்றுமை தாண்டி ஆறு மார்க்கங்களும் ஒரே ஆலயத்தில் காணபடும் அந்த ஒற்றுமை
அதாவது சன் மார்க்கம் எனும் சூரியவழிபாடு, முருக வழிபாடு, கணபதி வழிபாடு , சக்தி வழிபாடு, சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு எனும் ஆறுவழியும் ஒன்றாகவே தொடக்கதில் இருந்ததை அவதானிக்கலாம்
இவை எங்கே தனி தனியாக வலுவானது என்றால் இந்து மதத்துக்கு ஆபத்து இல்லாதபோது அவை தனி பிரசித்தியான வடிவமாக உருவெடுத்தது
பொதுவாக பேரரசர்களிடம் ஒரு வழமை உண்டு, அது போர் அல்லாத காலங்களில் தங்கள் படைகளை தங்களுக்குள் பிரித்து மோதவிடுவது, விளையாட விடுவது, அதாவது தங்களை தாங்களே வலுபடுத்தும் காரியம்
அதைத்தான் இந்துமதமும் செய்தது, பிரிவுகள் ஆறு என பின்னாளில் சொல்லபட்டாலும் அதன் வேற் ஒன்றே, நால்வகை வேதம், அடிப்படை தர்மம், யாக விதிகள், ஆகம விதிகள் என அடிப்படையில் எல்லாம் ஒன்றே
ஆனால் தனி பிரதான தெய்வங்களை கொண்டு தங்களுக்குள் வாதிட்டு அவை இந்துவினை ஏதோ ஒரு வகையில் இந்துவாக இருத்தின
பவுத்தம்,சமணம் எழுந்த போது இந்த வாத சக்தி இந்துக்களுக்கே உரிய போராட்ட சக்தி அவர்களை ஒன்றிணைத்து சனாதனவாதிகளாக நிறுத்திற்று
இந்துமதம் அதில்தான் நின்றது, அதில்தான் மீண்டெழுந்து பவுத்தத்தை சமணத்தை வேரறுத்து போட்டது
நான் சைவன், வைஷ்ணவன, கொளமாரன், அம்பாள் உபாசகன் என எதுவாக இருந்தாலும் அடிப்படையில் சனாதனி என ஒன்று சேர்த்து அது மீண்டெழுந்தது
ஆப்கானியர் காலம் முதல் பல கொடும் காலங்களில் இவை ஒற்றுமை வந்தது, வைஷ்ணவ குருவான ராம்தாஸர் சிவபக்தரான சிவாஜியினை சீடனாக்கி பெரும் இந்துராஜ்ஜியம் அமைத்தார்
அம்பாள் உபாசகரான வித்யாரண்யர் வைஷ்ணவர்களான ஹரிகர புக்கரை கொண்டு பெரும் இந்து ராஜ்யம் அமைத்து காட்டினார்
மொழி பேதம், இனம் தாண்டி இன்னும் பல விஷயம் தாண்டி சாதி உள்ளிட்ட எல்லாமும் தாண்டி நீயும் நானும் சனாதனவாதி என இணைந்து பகையினை முடித்து இந்துமதம் மீட்டனர்
அப்படி ஒரு அடிப்படை ஒற்றுமை காலம் காலமாக இருந்திருக்கின்றது
வரலாற்றை கூர்ந்து கவனித்தால் ஆபத்தில்லா காலங்களில் இந்துமதம் ஆறுபிரிவுகளாக தங்களில் யார் பெரியவர் என மோதி தன்னை வலுபடுத்தி வந்திருக்கின்றது
பின்னாளில் ஆறு பிரிவுகள் இரண்டாயின, சைவம் வைணவம் என எல்லா பிரிவும் இரண்டில் அடங்கிவிட்டன
அப்போதும் நான் சைவம், நான் வைணவம் என அடிப்படையில் உறுதியாய் நின்றார்கள் ஆபத்து என்றால் சிவாஜியும், ராமதாஸரும் போல , வைஷ்ணவ நாயக்கர்களும் மதுரை சிவனடியார்களும் போல ஒன்றாக சனாதனவாதியாக நின்றார்கள்
ஆக எப்போதெல்லாம் நான் சனாதனி என பொதுவாகவும், நான் சைவம், நான் வைணவம் என தனியாகவும் இந்துக்கள் நின்றவரை எல்லாம் சரியாக இருந்திருக்கின்றது
எப்போது “எம்மதமும் சம்மதம்” ,”மதமென பிரிந்தது போதும்”, “மதத்தை விட மானுடநேயம் முக்கியம்” என இந்து பேசதொடங்கினானோ
மற்ற மதத்தவரெல்லாம் அவனவன் தர்மத்தில் நிலைத்திருக்க, இவன் மட்டும் “எம்மதமும் சம்மதம்” என பேச தொடங்கினானோ அன்று தொடங்கிற்று இந்துக்களின் வீழ்ச்சி
எப்போது சைவமோ, வைணவமோ எதுவோ அடிப்படையில் நான் சனாதானி, நான் இந்து எனும் பெரும் உணர்வும் அதற்குரிய நடவடிக்கை காரியமும் அவனிடம் வருமோ அப்போது எல்லாம் சரியாகும்
அப்படி ஒரு நிலை வந்துவிட கூடாது என்பதாலே நீ தமிழன், நீ திராவிடன், நீ இந்த சாதி என அவனுக்குள் எல்லா பிரிவினைக்ளும் வகை வகையாக புகுத்தபடுகின்றன அதனை இந்துக்கள் கவனமாக தவிர்த்து தங்களை இந்துவாக உணர்ந்தால் எல்லாம் எதிர்காலத்தில் சரியாகும்
சிவராத்திரி காலத்தில் ஒவ்வொரு இந்துவும் உணரவேண்டிய , உணர்ந்து எடுக்கவேண்டிய முக்கிய தீர்மானத்தில் இது முக்கியமானது