பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பஞ்ச மயானத் தலங்கள் – முன்னுரை 01 / 06

இந்துமதம் எப்போதுமே ஞானத்தை ஞானத்தின் மூலத்தை தேடிய மதம், அது ஒன்றுதான் மானிட வாழ்க்கைக்கு அப்பால் உள்ள விஷயம், மானுடன் இறந்தபின்னால் உள்ள வாழ்வை பற்றி அதில் உள்ள தத்துவத்தை பற்றி அதிகம் சிந்தித்து அதிகம் போதித்த மதம் இந்துமதம் சொன்ன அளவு இன்னொரு மதம் வாழ்வின் அந்தத்தை ஞானமாக சொல்லவில்லை, எல்லா மதமும் வாழ்வு முடிந்தது என்றபோது இந்துமதம் அது முடிவல்ல இன்னொரு வடிவ பிறப்பின் தொடக்கம் அது உருமாற்றம் என்றது அதைத்தான் மயான வழிபாடு […]

கோத்ரா ரயில் நிலையம் – சாபர்மதி ரயில் எரிப்பு

2002ம் ஆண்டு மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தார், அவருக்கென ஒரு நற்பெயர் பிம்பம் உருவாகி கொண்டிருந்த்து பாஜகவின் முதல் சிறப்பான மாகாண முதல்வராக அவர் உருவாகி கொண்டிருந்தார், மாகாணம் தாண்டியும் அவர் புகழ் பரவ ஆரம்பித்தது மத்தியில் வாஜ்பாய் மோடிக்கு முழு ஆதரவளிக்க வேகமாக வளர்ந்தார் மோடி, அவரை மாபெரும் சிக்கலில் தள்ளவும் அவரை அரசியலில் இருந்து வெளியேற்றவும் பெரும் திட்டம் தீட்டப்பட்டது. அது அரங்கேற்றபட்ட இடம் அந்த கோத்ரா ரயில் நிலையம், மிக தீவிரமான அதே […]

சப்த விடங்கர் ஆலயங்கள் 07 / 08 : வேதாரண்யம் எனும் திருமறைக்காடு

ஸ்ரீ வீணாவாத விதூஷணி சமேத திருமறைக்காடர் சைவதலங்களில் மகா முக்கியமானது வேதாரண்யம் ஆலயம், வேதாரண்யம் என்றால் வேதம்+ஆரண்யம் என பொருள் வேதங்கள் இருந்த காடு, அதாவது தமிழில் சொன்னால் மறைகள் இருந்த காடு என்பதால் அந்த பெயர் வந்தது இது அப்பர் சுந்தரர் காலத்தில் முக்கியமான ஆலயமாக வந்ததே தவிர அதன் வரலாறும் சிறப்பும் மகா தொன்மையானது, எவ்வளவு தொன்மையானது என்றால் யுகங்களை தாண்டியது கலியுகத்துக்கு முன்பே அந்த ஆலயம் உண்டு, வேதங்களே வந்து பாடி வழிபட்ட […]

இன்றிரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கின்றார் மோடி.

“அம்மா மதுரை மீனாக்ஷி அருள்வாய் காஞ்சி காமாட்சிஅன்பாய் எனையே ஆதரித்து அல்லல் களைந்தே காப்பாற்று அன்னை தேவி பராசக்தி என்னை படைத்தது உன்சக்திவாழ்வைத் தந்து வளம் தந்து வாழ்க்கைக் கடலின் கரையேற்று தில்லை சிதம்பரம் பத்தினியே நெல்லையில் வாழும் பத்தினியே திருவடி மலரினைத் தொழுதிடுவேன் திருவருள் புரிந்தெனைக் காப்பாற்று ஓங்காரப் பொருள் நீதானே உலகம் என்பதும் நீதானேகாணும் இயற்கைக் காட்சிகளும் காற்றும் மழையும் நீதானே அம்மா தாயே உனைவேண்டி அழுதிடும் என்னைத் தாலாட்டிஅன்புடன் ஞானப் பாலூட்டி அகத்தின் […]

சப்த விடங்கர் ஆலயங்கள் 06 / 08 : திருவாய்மூர்

ஸ்ரீ பாலினும் நன்மொழியாள் சமேத வாய்மூர் நாதர் சப்த விடங்கர் தலங்களில் ஆறாம் தலம் திருவாய்மூர் தலம். இங்கே சிவன் வாய்மூர் நாதர், அன்னையின் பெயர் பாலினும் நன்மொழியாள் இத்தலம் திருவாரூரில் இருந்து வேதாரண்யம் செல்லும் வழியில் இருகின்றது, தேவாரம் பாடபட்ட தலம் இது இங்கே சிவபெருமான் சுயம்புவாக எழுந்தார், சூரியன் தன் சாபம் தீர இங்கு வந்து வழிபாடு நடத்தினார் எனும் அளவு இது சிறப்பு வாய்ந்த தலம் சூரியனின் சாபம் தீர்ந்த இடம் இது […]

பாரதம் துலங்குகிறது

சமீப நாட்களாக நடப்பதைக் கண்டால் ஒரு உண்மையினை புரிந்துகொள்ள முடிகின்றது. அதாவது ஒரு மவுனமான இந்து புரட்சி நடக்கின்றது அல்லது எழப்போகும் பெரும் எழுச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன‌. இது அரசியலில் மட்டுமல்ல. ஊடகம், சினிமா, இன்னும் கட்டுமானம், அலங்காரம், விளையாட்டு எனப் பல துறைகளில் அந்த எழுச்சியினை அவதானிக்க முடிகின்றது. கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் அது புரியும். காலபைரவர் என்றால் யார் என்றே பலருக்குத் தெரியாமல் இருந்தது. இப்போது திரும்பும் இடமெல்லாம் கால பைரவர் வழிபாடும் அவருக்கான […]

மாசி மகம்

இந்துக்களின் வானியல் அறிவு அக்காலத்திலே உன்னதமாய் இருந்தது, தங்களின் மாபெரும் தவவலிமையால் விண்ணக இயக்கத்தின் பிரபஞ்ச ரகசியங்களை அறிந்த ஞானியர் அதனை வகை வகையாக சொல்லி வைத்து, ஒவ்வொரு கோளின் இயக்கமும் இந்த பூமியில் எப்படி எல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் கண்ணுக்கு தெரியாத வானலோக கதர்வீச்சும் சக்தியும் மானிட மனதை குணத்தை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதையும் உணர்ந்தனர். அப்படியே அவர்கள் அதனில் இருந்து தப்பவும் இன்னும் உன்னதமான பலன்களை அடையவும் பல போதனைகளையும் ஏற்பாடுகளையும் செய்தனர். […]

சப்த விடங்கர் ஆலயங்கள் : 05 / 08 திருக்குவளை

ஸ்ரீ வண்டமர் பூங்குழலி சமேத அவனிவிடங்கர் சப்த விடங்கர் ஆலயத்தில் அடுத்த ஆலயம், அதாவது ஐந்தாவது ஆலயம் திருக்குவளை என அழைக்கப்படும் திருக்கோளிலி ஆலயம். இது காவேரியின் தென்பக்கம் அமைந்துள்ள ஆலயம், இது தேவாரம் பாடபட்ட தலமாகும். சைவ குரவர்களும் பலரும் வந்து வழிபட்டிருக்கின்றார்கள் “நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கேஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமம்கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறம்அருளிக்கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே” என்பது சம்பந்தர் பாடல். “மைக்கொள் கண்ணுமை பங்கினன் மான்மழுத்தொக்க கையினன் செய்யதோர் சோதியன்கொக்க […]

வைத்தியநாதய்யரும் மதுரை ஆலய நுழைவும்

அந்நிய ஆட்சிக் குழபப்ங்களில் அவர்கள் கைகூலிகளின் அராஜகத்தில் மதுரை ஆலயத்தில் தாழ்த்தபட்டோர் நுழைய சில தடைகள் இருந்தன. அங்கு மன்னர் காலத்தில் அப்படி அல்ல, நாயக்கர் காலத்தில் அல்ல, இக்குழப்பம் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில்தான் மர்மமாக வந்தது அந்த மர்மத்தின் பின்னால் மதமாற்ற தந்திரமும் இருந்தது, இந்துக்களுக்கு நெருக்கடி கொடுத்து மாற்றுமதம் தேடவைக்கும் ரகசிய தந்திரம் இருந்தது 1924ல் கேரள வைக்கம் கோவிலுக்கு சென்று கூட்டத்தோடு ஓரிருநாள் கத்திவிட்டு பின் தன்னை பெரும் சாதி ஒழிப்பு தலைவராக அடிபொடிகள் […]

திருமுருகாற்றுப்படை : 10

(138 முதல் 154 வரை உள்ள வரிகள்) “புகைமுகந் தன்ன மாசில் தூவுடைமுகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்மென்மொழி மேவலர் இன்னரம்பு உளர நோயின்று இயன்ற யாக்கையர் மாவின்அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகைப்பருமம் தாங்கிய பணிந்தேந்து அல்குல்மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்க கடுவொடு ஒடுங்கிய தூம்படை வால்எயிற்றுஅழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு வலைவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்உமையமர்ந்து […]