பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மாதவ சதாசிவ கோல்வால்கர்

காலத்தால் வரும் ஒரு சிலரே காலத்துக்கும் நிற்கும் அடிப்படை அஸ்திபாரங்களை இடுவார்கள், அவர்கள் வாழ்ந்த காலத்தில் செய்த போராட்டமெல்லாம் மறைக்கபடலாம், அவர்கள் முன்னெடுத்த காரியமெல்லாம் அன்று புறக்கணிக்கப் பட்டிருக்கலாம் ஆனால் அவர்கள் விதைத்த சத்தியவிதைகள் பெரும் மரமாகும் போது, அவர்கள் கட்டிவைத்த அஸ்திபாரம் பெரும் கோபுரமாகும் போது, அவர்கல் கைகாட்டிய வழிகள் பெரும் சாலைகளாகும்போது, அவர்கள் ஏற்றிய தீபம் பற்றி எரிந்து ஒளிகொடுக்கும் போது அவர்கள் எப்படியான பெரும் பிறப்பு என்பதும் அவர்கள் ஏற்றிவைத்த ஜோதி எப்படி […]

மரித்துவிட்டார் நவ்லோனி

சில நாடுகளின் தலைவிதி எக்காலத்திலும் மாறாது, ஜாதகமோ விதியோ இல்லை அவர்கள் சாபமோ எதுவோ என ஒன்றை நம்பித்தான் தீரவேண்டி இருக்கின்றது இந்தியாவின் மேற்கு பக்கமாக இருந்து பின் தனிநாடாக பிரிந்த இடம் பாகிஸ்தான். அங்கேதான் மொகஞ்சதாரோ ஹரப்பா என மண்மூடிபோன இடங்கள் உண்டு, அன்றில் இருந்தே ஒரு சாபம் அங்கே நிலவி பின்னாளில் அது ஆப்கானிய குழப்பமாகி பின் தனி இஸ்லாமிய நாடானார்கள் இந்த 75 வருட அவர்கள் வரலாற்றில் ஒரு அரசு கூட ஐந்துமுறை […]

சப்த விடங்கர் ஆலயங்கள் : 03 / 08 திருநாகை

நாகப்பட்டினம் நீலாயதாட்சி சமேத சுந்தர விடங்கர் சோழநாட்டின் கடற்கரையின் நாகப்பட்டினத்தில் அமர்ந்திருக்கும் அந்த சிவனுக்கு பெயர் காயாரோகணேசுவரர், அந்த ஆலயம் மிக மிகப் பழமையான ஒன்று. அன்னையின் பெயர் நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி. நாகப்பட்டினத்திற்கு பல பெயர்கள் உண்டு. காயாரோகணம், ஆதிபுராணம், சிவராசதானி, பார்ப்பதீச்சரம், அரவநகரம் என அக்காலத்தில் இருந்தே பலவகையான பெயர்கள் கொண்டு அந்த தலம் அழைக்கப்பட்டது. நாகர்கள் அங்கே வழிபாடு செய்த இடம் ஆகையால் நாகப்பட்டினம் எனப் பெயர் வந்தது என்றொரு காரணமும் உண்டு. அந்த […]

திருமுருகாற்றுப்படை : 09

திருமுருகாற்றுப்படை : 09 (126 முதல் 137 வரிகள்) சீரை தைஇய உடுக்கையர் சீரொடுவலம்புரி புரையும் வால்நரை முடியினர்மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல். பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடுசெற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடுகடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை யாவதும் அறியா இயல்பினர் மேவரத்துனியில் காட்சி முனிவர் முற்புக” இனி பாடலின் பொருளைக் காணலாம். நக்கீரர் திருப்பரங்குன்றம், திருச்செந்தூரை அடுத்து திருஆவினன்குடி […]

வசந்த பஞ்சமி

இன்று வசந்த பஞ்சமி வசந்த காலத்தில் வரும் நவராத்திரியின் பஞ்சமி திதி வசந்த பஞ்சமி என கொண்டாடபடும் என்றாலும் சில கணக்கீடுகள் அடிப்படையில் இந்த சியாமளா நவராத்திரியின் பஞ்சமி வசந்த பஞ்சமியாக கொண்டாடப்படுகின்றது. இந்தப் பண்டிகை சாதாரணம் அல்ல, மிக மிக முக்கிய பண்டிகையாக தேசமெங்கும் ஒரு காலத்தில் இருந்தது, பின் பவுத்த குழப்பம் அந்நிய படையெடுப்பு என பல குழப்பங்களால் சுருங்கிவிட்டாலும் இன்று மெல்ல மெல்ல அது மீண்டெழுந்து வருகின்றது. இந்தக் கொண்டாட்டம் முன்பு பாரதம் […]

சப்த விடங்கர் ஆலயங்கள் : 02 / 08 திருநள்ளாறு

ஸ்ரீ நாகவிடங்கர் திருநள்ளாறு நாகவிடங்கர் நள தமயந்தி சைவ தலங்களில் மிக முக்கியமான தலமான இந்த திருநள்ளாறு தலத்தில் தர்ப்பாரண்யேஸ்வரர் எனும் பெயருடன் சிவன் வீற்றிருக்கின்றார்,  அவரோடு வீற்றிருக்கும் அன்னைக்கு பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள் எனப் பல பெயர்கள் உண்டு. இந்த ஆலயம் காலப்போக்கில் திருநள்ளாறு என்றாலே சனீஸ்வரனுக்கானது என மாறிப்போனதெல்லாம் மிக தவறான நம்பிக்கை அல்லது பிரச்சாரம். அது மிக மிக சக்திவாய்ந்த சிவதலம். சிவனும் அன்னையும் அருள் வழங்கும் பெரும் சக்திமிக்க தலம். சனீஸ்வரனின் […]

சப்த விடங்கர் ஆலயங்கள் 01 / 08 : திருவாரூர்

சப்தவிடங்கர் ஆலயம் 01 : திருவாரூர் ஸ்ரீ வன்மீகநாதர், புற்றிடைநாதர் இந்திய சைவதலங்களில் தனி இடம் அல்லது முதல் இடம் பெற்ற ஆலயம் ஆரூர் எனும் திருவாரூர். அது காலத்தால் மிக மிக தொன்மையானது, எப்போது உருவான ஆலயம் என அறியமுடியா அளவு பழமையானது வன்மீகநாதர் எனும் புற்றிடைநாதர் சன்னதியில் இருந்து அது தொடங்குகின்றது அதன் பின்புதான் தியாகேஸ்வரர் சன்னதி வந்தது, சிவனுக்கு இரட்டை சன்னதி இருக்கும் முதல் ஆலயம் அதுதான். அதன் பெருமையும் சிறப்பும் எல்லோரும் […]

சப்த விடங்கர் ஆலயங்கள் முன்னுரை 00 / 08

முன்னுரை தமிழக சிவாலயங்களில் மகா முக்கியமானது சப்த விடங்கர் ஆலயங்கள், திருவாரூர் தொடங்கி அதை சுற்றி ஆறு ஆலயங்கள் இந்த வரிசையில் உண்டு “விடங்க” என்றால் உளியால் செதுக்கபடாதது என பொருள், சப்தம் என்றால் ஏழு. உளியால் செதுக்கபடாத ஏழு சிவலிங்கங்களை கொண்ட ஆலயங்கள் என அதற்கு பெயர் உளியால் செதுக்கபடாதவை என்றால் மானிடரால் செய்யபடாத , விண்ணில் இருந்து கொடுக்கபட்ட லிங்கங்கள் என அர்த்தம் ஆம், இந்த ஏழு லிங்கங்களும் விண்ணில் இருந்து வந்தவை அதற்கு […]

தீனதயாள் உபாத்யாய்

இன்று உலகின் மிகப்பெரிய கட்சி பாரதீய ஜனதா கட்சி (பாஜக), மாபெரும் ஜனநாயக அரசியல் இயக்கமும் அதுதான். பலமான இந்தியாவினை உருவாக்கி, இனி அவர்களை அசைக்கவே முடியாது, இனி எதிரிகளே அவர்களுக்கும் தேசத்துக்கும் இல்லை எனும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அப்படிப்பட்ட பலமான பாஜக இன்று ஆட்சியில் இருக்கலாம், மகா அசுரபலத்துடன் அது விஸ்வரூபமெடுத்து நிற்கலாம். இன்னும் 100 ஆண்டுக்கு அசைக்கமுடியா பலத்தை அது பெற்றிருக்கலாம். ஆனால் அதன் தொடக்கம் மிகக் கடுமையானதாக இருந்தது, சுருக்கமாகச் சொன்னால் அப்படி […]

சியாமளா நவராத்திரி

இந்து மரபில் நான்கு நவராத்திரிகள் உண்டு. ஆடி மாதம், புரட்டாசி, தை, பங்குனி என நான்கு மாதங்களில் அவை கொண்டாடப்படும். ஆடி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வராஹி நவராத்திரி, தமிழக அம்மன் கொடை விழாக்கள் இந்த சாயலே. புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி. வழமையாகக் கொண்டாடப்படும் நவராத்திரி இதுதான், துர்கா பூஜை சரஸ்வதி பூஜை எனக் கொண்டாடப்படுது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications