பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அபிராமி அந்தாதி : 65

“ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்தகனம்முன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும்செம்முகனும்முந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்மகனும்உண் டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே.” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள்தரும் “ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்தகனம் முன்செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்முகனும் முந்நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்மகனும் உண்டாயதன்றோவல்லி நீசெய்த வல்லபமே” இந்த பாடலை புரிந்துகொள்ளும் முன் ஒரு திருவிளையாடலை காண வேண்டும் , அப்பொழுது இப்பாடல் எளிதாக புரியும் கந்தபுராணத்தின் தொடக்க நிகழ்வு […]

அபிராமி அந்தாதி 63

“தேறும்‌ படிசில ஏதுவும்‌ காட்டிமுன்‌ செல்கதிக்குக்‌கூறும்‌ பொருள்‌ குன்றிற்‌ கொட்டும்‌ தறிகுறிக் கும்‌சமயம்‌ஆறும்‌ தலைவி இவளாய்‌ இருப்பது அறிந்திருந்தும்‌வேறும்‌ சமயம்‌ உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே” இப்பாடலை புரிந்துகொள்ளுமுன் ஒரு பின்னணியினை நோக்க வேண்டும் இந்துஸ்தானத்தில் எக்காலமும் சமய சச்சரவுகள் உண்டு, என் மதம் பெரிது என சொல்லும் கூட்டமும் அவர்களால் சில சர்ச்சைகளும் அடிக்கடி ஏற்படுவதும் உண்டு எல்லா நதிகளும் கடலுக்கு செல்வது போல எல்லா மதங்களும் இறைவனை நோக்கி இழுத்து சென்றாலும் யார் பெரியவர் […]

அபிராமி அந்தாதி : 62

அபிராமி அந்தாதி : 62 “தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மதவெங்கட் கரி உரி போர்த்த செஞ்சேவகன், மெய் அடையக்கொங்கைக் குரும்பைக் குறியிட்டநாயகி கோகனகச்செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே” இந்த பாடலை புரிந்து கொள்ளுமுன் சிவபெருமான் செய்த முக்கிய வதங்களையும் அவற்றின் ஆலயங்களையும் அறிந்து கொள்ள வேண்டும், அப்பொழுதுதான் இப்பாடல் எளிதாக பிரியும் சிவபெருமானின் திருவிளையாடல்களில் வீரம் காட்டிய அந்த சம்பவங்கள் வீராட்டானம் என அழைக்கபடும் சிவபெருமான் செய்த சம்ஹாரங்களில் முக்கியமானவை எட்டு, […]

அபிராமி அந்தாதி : 61

அபிராமி அந்தாதி : 61 “நாயே னையும்இங் ஒருபொருளாக நயந்துவந்துநீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய்நின்னை உள்ளவண்ணம்பேயேன் அறியும் அறிவுதந் தாய்என்ன பேறுபெற்றேன்தாயே மலைமக ளேசெங்கண் மால்திருத் தங்கைச்சியே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து வரும் “நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்துநீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய், நின்னை உள்ளவண்ணம்,பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்தாயே மலைமகளே செங்கண் மால் திரு தங்கச்சியே” அபிராமி பட்டர் மிக இழிவான மானிட‌ பிறவியான தனக்கும் அன்னை தேடி வந்து அருள்பாலிக்கும் […]

அபிராமி அந்தாதி : 60

அபிராமி அந்தாதி : 60 “பாலினும் சொல்இனி யாய்பனி மாமலர்ப் பாதம்வைக்கமாலினும் தேவர் வணங்கநின் றோன்கொன்றை வார்சடையின்மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும்மெய்ப் பீடம்ஒருநாலினும் சாலநன் றோஅடி யேன்முடை நாய்த்தலையே” இப்பாடல் கீழ்கண்டவாரு பிரிந்து பொருள் தரும் “பாலினும் சொல் இனியாய் பனி மா மலர்ப் பாதம் வைக்கமாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒருநாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே” பட்டர் அன்னையின் அன்பில் […]

அபிராமி அந்தாதி 58

அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்தருணாம்புயமுலைத் தையல் நல்லாள் தகை சேர் நயனக்கருணாம்புயமும் வதனாம்புயமும் கராம்புயமும்சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே இங்கு அம்புயம் என்றால் தாமரை எனும் பொருளை தெரிந்துகொண்டு மேற்கொண்டு காணலாம் இந்து ஞானமரபில் தாமரை முக்கியமானது, அது ஞானமலராக ஞானம் மலர்வதன் குறியீடாகவே கருதபட்டது, இந்துமதத்தின் எல்லா பிரதான தெய்வங்களையும் அம்மதம் தாமரை மலர்மேல்தான் நிறுத்திற்று, பிரம்மன் முதல் தேவி வரை அது தாமரையில் வைத்து மகிழ்ந்தது தாமரை என்பது ஞானத்தின் வெளிப்பாடாகவே இந்துமரபில் […]

அபிராமி அந்தாதி : 57

அபிராமி அந்தாதி : 57 “ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டம் எல்லாம்உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம் பால்செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே” இந்த பாடல் பெரும் விஷயங்களை சொல்லும் பாடல் என்பதால் ஒவ்வொரு விஷயமாக பார்க்கலாம் “ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம் உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி” என தொடங்குகின்றார் பட்டர் இந்த “இருநாழி கொண்டு” […]

அபிராமி அந்தாதி 55

அபிராமி அந்தாதி 55 “மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றதுஅன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி அருமறைக்குமுன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி தன்னைஉன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது” கடந்த பாடலை சேர்மின் என முடித்த பட்டர் இப்பாடலை மின்னாயிரம் என தொடங்குகின்றார், இங்கு மின் என்பது மின்னலை குறிப்பது அன்னையின் தோற்றம் எப்படியானது என்பதை இங்கு முதல் வரியில் சொல்கின்றார் பட்டர் “மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது” என்கின்றார் அதாவது அன்னையின் தோற்றம் […]

அபிராமி அந்தாதி : 53

“சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்தகன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்தன்னந்தனியிருப்பார்க்கு இது போலும் தவமில்லையே” தன் முந்தையபாடலில் அன்னையின் அடியார்கள் அடுத்தபிறவியில் அரசர்களாக பிறப்பார்கள் என சொன்னார் அல்லவா, அப்படி சொல்லிவிட்டு அன்னையின் பக்தியில் மறுபடியும் மூழ்குகின்றார், அன்னையின் திருமேனியினை கண்முன் தியானிக்கின்றார், அப்படி தியானித்தவர் அன்னையின் பொலிவான தோற்றம் பற்றி மேற்கண்டபாடலை பாடுகின்றார் பாடலை கொஞ்சம் ஆழமாக காணலாம் அன்னையின் தோற்றத்தை அவளின் இடுப்பிலிருந்து காண்கின்றார் பட்டர் “சின்னஞ்சிறிய […]

அபிராமி அந்தாதி 48

“சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிபடரும் பரிமளப் பச்சைக்கொடியைப் பதித்து நெஞ்சில்இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோகுடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே” பட்டர் தன் முதல் வரியில் “சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில்” என பாடி தொடங்குகின்றார் அதாவது “ஒளிவிடும் (சுடரும்) கலைமதி (பிறை நிலா) ஒட்டி நிற்கும் (ஒன்றும்) சடைமுடி குன்று மே;ல்” என சொல்கின்றார், மலையின் மேல் நிலா இருப்பதையும், மலையின் உச்சியில் இருந்து அருவிகள் நீண்டு விழுவதையும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications