பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அபிராமி அந்தாதி 46

“வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டுகறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னேமறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே” இந்த பாடலை “வெறுக்கும் தகைமைகள் செய்தினும்” என தொடங்குகின்றார் பட்டர் வெறுக்கும் தகமைகள் என்பது சான்றோரும் அறிஞரும் நல்லோரும் பிறரும் வெறுக்கும் குணங்கள் அல்லது செயல்களை குறிப்பது அப்படிபட்ட செயல்களை பொறுப்பவர்களை, அப்படி செய்பவர்கள் மேல் வெறுப்பு கொள்ளாமல் பெருந்தன்மையாக கடந்து அணைப்போர் மேலோர் என்பது இந்துக்கள் கருத்து […]

அபிராமி அந்தாதி : 45

அபிராமி அந்தாதி : 45 “தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையேபண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசு அடியேன்கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோமிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே” ‍பட்டர் தொடர்ந்து பாடுகின்றார் முதல் வரியினை “தொண்டு செய்யாது தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது” என தொடங்குகின்றார் பட்டர் பல விஷயங்களை கவனிக்கின்றார், பெரும் ஞான சித்தி அடைந்தவர்கள் ஆகம விதிபடி மாலை தொடுப்பதில்லை பூஜை பொருளுடன் […]

அபிராமி அந்தாதி : 43

அபிராமி அந்தாதி : 43 “பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கைஎரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே” முதல்வரி”பரிபுர சீறடி” என என்றாகின்றது, பரிபுரம் என்றால் சிலம்பு, பரிபுரம், ஞெகிழி, ஞெகிழம், அரதனம், நூபுரம் என பல பொருள் உண்டு எனினும் இவை எல்லாம் சிலம்பு எனும் கொலுசை குறிப்பதே அன்னை கால்களில் சிலம்பை அணிந்திருக்கின்றாள் என்பதை “பரிபுர சீறடி” என்கின்றார் பட்டர், இங்கு […]

அபிராமி அந்தாதி : 37

“கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்னமெய்க்கே அணிவது வெண் முத்துமாலை விட அரவின்பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும்எட்டுத்திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே” இப்பாடல் அன்னையின் திருகோலத்தையும் அந்த கோலத்தில் அவளின் உயர்ந்த குணத்தையும் குறித்து பாடபடும் பாடல், பட்டர் அந்த பொருளில் மிக அழகாக பாடுகின்றார். முதல்வரி “கைக்கே அணிவது கன்னலும் பூவும்” அன்னையின் கைகளில் கரும்பும் பூக்களும் கொண்டிருக்கின்றாள் என்பது பொருளாகும், அன்னை மன்மதனை வெற்றிகொண்டு அவன் ஆயுதங்களை பறித்தவள் எனும் […]

அபிராமி அந்தாதி : 34

“திங்கட் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்கஎங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்–தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள்வெண்கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே” இந்த பாடலில் பட்டர் ஒரு வித்தியாசமான கோணத்தில் அன்னை புகழினை பாடுகின்றார் அன்னை நிலவின் மேல் நிற்பவள், அதாவது அன்னையின் காலடியில் நிலா இருக்கின்றது, அன்னையின் காலடியில் கிடக்கும் நிலாவினை அவள் கால்பட்ட நிலாவினை சிவன் தலையில் சூடியிருக்கின்றார் என்றால் அவர் அன்னையினையும் தலையினால் தாங்குகின்றார் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications