பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

புரட்டாசி மாதம்

புரட்டாசி மாதம் புனிதமானது, அது விஷ்ணு வழிபாட்டுக்கு மிகச் சிறந்த மாதம், மார்கழி போலவே அப்போது சொல்லவேண்டிய மந்திரங்களும், வழிபாடுகளும் உண்டு. அதனில் முக்கியமானது விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைச் சொல்லும் “விஷ்ணு சஹஸ்ர நாமம்” பாடும் பெரும் வழிபாடு. அது இந்துக்களின் வழமையாய் இருந்தது, இன்றும் உண்டு, என்றும் தொடரவும் வேண்டும். இந்த வழிபாடு மகாபாரத காலத்திற்கு முன்பே இருந்தது, யார் இதனை தொகுத்தார்கள்? யார் இதனை பாடி பகவான் நாமத்தை பாடலாக, ஸ்லோகமாக தந்தார்கள் என்பதற்கு […]

வரலெட்சுமி நோன்பு / வ்ரதம்

இந்து பெண்களின் மிக முக்கிய நோன்புகளில் ஒன்று வரலெட்சுமி விரதம். அது இன்று அனுசரிக்கப்படுகின்றது. உலகிலே பெண்களுக்கு உரிமை கொடுத்து, அவர்கள் தனித்துவமும் மகத்துவமும் பேண பல வழிகளை செய்த ஒரே ஒரு மதம் இந்துமதம். வேறு எங்கும் அப்படி ஒரு ஏற்பாட்டை பார்க்க முடியாது. இந்துமதம் அந்த சிறப்பை ஞானமாக செய்தது, பெண்கள் தனியாக கூடி வழிபடவும் கொண்டாடவும் அது பல பண்டிகைகளை செய்தது, முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கொண்டாடி வழிபடும் அளவு அது […]

கருட பஞ்சமி

இந்துக்களின் அடையாளங்களெல்லாம் ஞான குறியீடுகள், ஒவ்வொரு அடையாளமும் பெரும் ஞானத்தை குறிப்பது. நாகசதுர்த்தியும், கருடபஞ்சமியும் அப்படியானதே. இந்துக்களின் பெரும் அடையாளம் நாகம், அதுவும் படமெடுக்கும் நாகம். அது சிவனின் கழுத்தில் இருக்கும் முருகனின் காலடியில் கிடக்கும், விநாயகரின் இடுப்பில் கொடியாய் கிடக்கும், அப்படியே ஆயிரம் தலைகளுடன் பரந்தாமனுக்கு படுக்கையாய் சுருண்டிருக்கும். அதே நேரம் தெய்வங்களின் வாகனங்கள் என ஒவ்வொன்றை அடையாளப்படுத்தியது இந்துமதம், சிவனுக்கு காளையும், முருகனுக்கு மயிலும், பரந்தாமனுக்கு கருடன் என்றும் அது சொன்னது. தெய்வங்களுக்கு ஏன் […]

நாக சதுர்த்தி : 02

இந்திய ஆன்மீக லவுகீக‌ வாழ்வில் பசுக்கள் எப்படி முக்கியமோ, பசுக்கள் எப்படி கொண்டாடப்பட்டதோ, எப்படி வழிபாடு செய்யப்பட்டதோ அதன் அடுத்த இடத்தில் நாகங்கள் இருந்தன‌. நாக வழிபாடு என்பது இந்துமதத்தின் பெரும் அடையாளமாக இருந்தது, உலகம் முழுக்க இருந்த இந்துமதம் இந்துஸ்தானில் சுருங்கிய பின் அது இங்கே பிரதானமானது, சீனா போன்ற நாடுகளில் அது அடையாளமானது. பாம்பு நடனம் என அவர்கள் ஆடி தொடங்கும் புத்தாண்டு அவர்களின் வழிபாட்டு நிகழ்வு அன்றி வேறல்ல‌. இந்துமதம் நாகத்தை பிரதானமாக்கியது, […]

நாக சதுர்த்தி : 01

இந்துக்களைப் போல பிரபஞ்ச அசைவுகளை கவனித்தவர்கள் யாருமில்லை. மானிடரைத் தாண்டி எல்லா லோகங்களையும் அதன் இயக்கங்களையும் அங்கு வாழும் சக்திமிக்க வடிவங்களையும் தங்கள் ஞானத்தால் உணர்ந்தவர்கள் இந்து ரிஷிகள். தாங்கள் உணர்ந்ததை வேதமாக, உபநிஷமாக, புராணமாக எழுதிவைத்தார்கள், அத்தோடு அவர்கள் தங்கள் பணி முடிந்ததென விலகவில்லை. மானிடர்மேல் மிக மிக அன்புகொண்ட அவர்கள் இப்பூமியில் மானிடர் நலமாக வாழ பல இதர உலக சக்திகளின் உதவி அவசியம் என்பதை உணர்ந்து, அந்த சக்திகளின் ஆசியினை எப்படி மானுடன் […]

சாவித்திரி – காரடையான் நோன்பு

அந்த பாரததித்தில் அசுபதி என்றொரு மன்னன் இருந்தான், அவனுக்கு வாரிசு என ஒரு மகள் இருந்தாள், அழகிலும் அறிவிலும் சிறந்தவளான அவளுக்கு புனிதமான பெயரான சாவித்திரி எனும் பெயர் சூட்டினான், ஆம் சரஸ்வதியின் இன்னொரு பெயர் சாவித்திரி, எது உன்னதமும் உயர்ந்ததும் ஆசீர்வாதமுமானதோ அதற்கு சூட்டும் பெயர் சாவித்திரி அந்த சாவித்திரிக்கு திருமண வயதும் வந்தது, அக்கால இந்து சம்பிரதாயம் பெண்கள் தன் கணவனை தேர்ந்தெடுக்க முழு சுதந்திரம் அளித்தது, தன் பாதுகாவலர் ஆலோசகரான பெரியவரகள் சூழ […]

ஆருத்திர தரிசனம்

ஆருத்திர தரிசனம் என இந்துக்கள் இந்நாளை அனுசரிக்கின்றார்கள், சைவர்களுக்கு திருவெம்பாவை நோன்பு இத்தோடு முடியும் என்பார்கள் ஆருத்திரா என்பது வேறு ஒன்றுமல்ல , அந்த வடமொழி வார்த்தை தமிழில் திருவாதிரை என அழைக்கபடும், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாள் அக்காலத்தில் வரம்பெற்ற முனிவர்கள் கூடி நாம் யாகம் நடத்தி சிவனாகிவிடுவோம் என தருகாவனத்தில் யாகம் நடத்தினார்களாம், கர்மம் என்பதே கடவுள். கடவுள் என ஒருவர் இல்லவே இல்லை, ஒழுங்காக கர்மம் ஆற்றும் ஒவ்வொருவனும் கடவுள் எனும் […]

திருவோணம்

ஓணம் பண்டிகை எனும் வாமண அவதார திருநாளை கொண்டாடும் நேரம் அந்த பண்டிகைக்கான காரணத்தையும் அது சொல்லும் நோக்குவதும் இந்துக்களின் பிரதான கடமை அது வழமையான தேவ அசுர சண்டையில் ஒரு புராணம் என்றாலும் அதன் தத்துவம் பெரிது, போதனை மிக பெரிது தேவர்கள் அசுரர்கள் என இருவருமே பரம்பொருளுக்கு மனிதர்களை போல கட்டுபட்டவர்கள் என்றாலும் அவர்களின் சக்தியும் ஆயுளும் அதிகம், பல சிறப்புக்களை பெற்ற மேலானவர்கள் இருவருமே உலக இயக்கத்துக்காக படைக்கபட்டவர்கள், இருவருக்குமே பொறுப்புக்கள் உண்டு […]

கிருஷ்ணார்பணம் – கோகுலாஷ்டமி

இந்த பூமி பிரபஞ்சத்தின் கட்டுபாட்டில் இயங்குவது, பூமியினை அந்த பிரபஞ்சம் இயக்குகின்றது, இந்த பிரபஞ்சம் பூமியின் எல்லா குரலுக்கும் செவி சாய்க்கின்றது அன்று அந்த காலம் திரும்பும் இடமெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடி கொண்டிருந்தது, தர்மம் நாராய் கிழிந்து கிடந்தது, பாம்பினை கண்ட பறவை குஞ்சாய் ஒடுங்கி கிடந்தது. நதி, மண், ஆகாயம் என திரும்பும் இடமெல்லாம் அக்கிரம கூட்டம் மிதமிஞ்சி ஆடியது கம்சன் நரகாசுரனில் தொடங்கி துரியோதன கூட்டம் வரை ஆடி தீர்த்தார்கள். பெற்ற வரத்தை அதர்மத்தின் […]

ஆடி பூரம்

இந்துக்களின் ஒவ்வொரு பண்டிகையும் அதன் கொண்டாட்டமும் மானிட வாழ்வின் ஒவ்வொரு பக்கத்தையினையும் உணர செய்பவை, அர்த்தமில்லா பண்டிகைகள் என்றோ வெட்டி செலவு பண்டிகைகள் என்றோ அங்கு எதுவுமில்லை ஒவ்வொரு கொண்டாட்டமும் அவர்களுக்கு அவ்வளவு ஞானமானது , வானியல் பிரபஞ்ச கோள்களுடனும் அன்றைய நாளில் ஓங்கியிருக்கும் சக்தியுடனும் மிக நுணுக்கமாக பின்னபட்ட ஞானமதம் அது அதனில் ஒன்றுதான் இந்த ஆடிபூரம், ஆடிமாத பூர நட்சத்திரம் ஆடிபூரம் என்றாயிற்று பூர நட்சத்திரம் ஜாதகரீதியாக சிம்மராசிக்குரியது, அந்த நட்சத்திரம் சக்திதேவிக்கு உகந்தது […]