பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முருகப்பெருமான் ஆலயங்கள் : கண்ணனூர் பால சுப்பிரமணியர் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : கண்ணனூர் பால சுப்பிரமணியர் ஆலயம். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அமைந்திருக்கின்றது இந்த ஆலயம், காலத்தால் மிக மூத்த இந்த ஆலயமானது புராணக் காலத்திலே உண்டு, ராஜயோகம் தரும் இந்த ஆலயம் முருகப்பெருமான் இந்திரனை வென்று அவனின் பிணிமுக யானையினை வாகனமாக கொண்ட கோலத்தைக் காட்டி முன்பே ராஜகுருக்களால் அமைக்கப்பட்டது, மிகத் தொன்மையானது. முருகப்பெருமான் போர்க்கடவுள் அப்படியே தமிழ் கடவுள் என்பது வெறுமனே தமிழ் மொழிக்காக மட்டுமல்ல, முருகப்பெருமான் வழிபாடு லௌகீகமும் ஆன்மீகமும் […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : குன்றத்தூர் முருகப்பெருமான் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : குன்றத்தூர் முருகப்பெருமான் ஆலயம். முருகப்பெருமான் ஆலயங்களில் புகழ்பெற்றதும் தொன்மையானதுமான இந்த ஆலயம் திருப்போரூருக்கும் திருத்தணிகை மலைக்கும் இடையே சிறிய குன்றில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் வரலாறு முருகப்பெருமானிடம் இருந்தே துவங்குகின்றது. முருகப்பெருமானின் சிறப்பே அவர் எல்லா வகை போரையும் செய்தார் என்பது. வான் வழி, கடல் வழி , நிலவழி போர் என எல்லாமும் செய்தவர் அவர், அந்த முருகப்பெருமான் திருபோரூரில் சில அசுரர்களை ஒழித்துவிட்டு தணிகை மலை நோக்கி செல்லும் போது […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : வில்பட்டி முருகன் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : வில்பட்டி முருகன் ஆலயம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே மலையில் அமைந்துள்ளது இந்த வில்பட்டி வெற்றி வேலப்பர் ஆலயம், இது தமிழக முருகப்பெருமான் ஆலயங்களில் மகா தொன்மையானது. எவ்வளவுக்குத் தொன்மையானது என்றால் அகத்தியர் போகர் காலத்தில் உருவான ஆலயம் இது, இரு வகையில் இது தொன்மையானது. இந்த மலையில்தான் அகத்தியரின் சீடரான போகர் வசித்தார், இங்கு நிரம்பியிருக்கும் மூலிகைகளை ஆராய்ந்து மருந்து செய்வது, மானுட இனத்துக்காய்ப் பெரிய தவத்தை இயற்றுவது எனப் போகர் […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : சொர்ணமலை முருகன் ஆலயம் கோவில்பட்டி.

முருகப்பெருமான் ஆலயங்கள் : சொர்ணமலை முருகன் ஆலயம் கோவில்பட்டி. தென்முனையில் இருக்கும் முருகப்பெருமான் ஆலயங்களில் முக்கியமானது சொர்ணமலை அல்லது கதிரேசன் மலை எனும் முருகப்பெருமான் ஆலயம் இதன் வரலாறு சுவாரஸ்யமானது. இந்த முருகப்பெருமானின் வரலாறு இலங்கை கதிர்காமம் ஆலயத்தில் இருந்து துவங்குகின்றது. பொதுவாக தென்முனை மக்களுக்கு அன்றைய பிரதான தொழில்களில் ஒன்று வணிகம் , அதிக மழைவளம் ஆறுவளம் இல்லா அப்பூமியில் நாயக்கர் காலத்தில் உருவான சாலை வசதிகளும் இதர வசதிகளும் வியாபாரத்தைப் பெருக்கின‌. சாத்தூர், சிவகாசி […]

சிவ வாக்கியார் பாடல்கள் : 41 to 49

சிவ வாக்கியார் பாடல்கள் : 41 “வாயிலே குடித்தநீரை யெச்சிலென்று சொல்லுறீர் வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ வாயினெச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள் வாயினெச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே” இப்பாடல் இப்படிப் பிரிந்து வரும். “வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுறீர் வாயிலே குதப்பும் வேதம் எனப் பட கடவதோ? வாயின் எச்சில் போகவென்று நீர்தனை குடிப்பீர்காள் வாயின் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே” மாந்தர்களே, உங்கள் வாய் பட்ட நீரை எச்சில் நீர் […]

சிவ வாக்கியார் பாடல்கள் : 31 to 40

சிவ வாக்கியார் பாடல்கள் : 31 “நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்தநித்த நீரிலே விருப்பமோடு நீர்குளிக்கும் வேதவாக்கியங் கேளுமின் நெருப்புநீரு மும்முளே நினைந்துகூர வல்லிரேல் சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூட லாகுமே” இப்பாடல் இப்படிப் பிரியும். “நெருப்பை மூட்டி நெய்யை விட்டு நித்தம் நித்தம் நீரிலே விருப்பமோடு நீர் குளிக்கும் வேத வாக்கியம் கேளுமின் நெருப்பும் நீரும் உம்முள்ளே நினைந்து கூற வல்லிரேல் சுருக்கமற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே” தினமும் நீராடி பின் யாகத்தில் நெய் ஊற்றி நெருப்பு […]

நாச்சியார் திருமொழி : 83

நாச்சியார் திருமொழி : 83 ( பாசுரம் 11.1, 11.2) கண்ணன் மேல் கொண்ட காதலால் முழுக்க ஏங்கிப்போனாள் ஆண்டாள், அந்த ஏக்கம் உடலைப் பாதித்தது, தன் நீண்ட நாள் காதலில் அவன் இன்னும் தன்னை அவனோடு சேர்க்காதது அவளை மிகுந்த ஏக்கத்துக்குள்ளாக்கிற்று. வாழவும் விடாமல், சாகவும் விடாமல் அந்தக் காதலுடன் கண்ணன் காட்டும் பூச்சாண்டி அவளுக்குள் பெரும் சோகத்தைத் தந்தது, இனியும் தாங்கமுடியாது என்றபடி அவள் கவலையில் வீழ்ந்து அது அவள் உடலைப் பாதித்து, அதனால் […]

சிவ வாக்கியார் பாடல்கள் : 21 to 30

சிவ வாக்கியார் பாடல்கள் : 21 “சங்கிரண்டு தாரையொன்று சன்னபின்ன லாகையால்மங்கிமாளு தேயுலகில் மானிடங்க ளெத்தனைசங்கிரண்டை யுந்தவிர்ந்து தாரையூத வல்லீரேல்கொங்கைகொங்கை பங்கரோடு கூடிவாழ லாகுமே” இப்பாடல் இப்படிப் பிரிந்து வரும். “சங்கு இரண்டு தாரை ஒன்று சன்னபின்னல் ஆகையால்மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனைசங்கு இரண்டையும் தவிர்ந்து தாரைஊத வல்லீரேல்கொங்கை கொங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமே” சங்கு என்றால் வழி, காற்று செல்லும் வழி எனப் பொருள் உண்டு. கழுத்தை சங்கு எனச் சொல்வதில் அப்படியும் […]

சிவ வாக்கியார் பாடல்கள் 11 to 20

சிவ வாக்கியார் பாடல்கள் : 11 “அந்திகால முச்சிமூன்று மாடுகின்ற தீர்த்தமும்சந்திதர்ப் பணங்களுந் தபங்களுஞ் செபங்களும்சிந்தைமேவு ஞானமுந் தினஞ்செபிக்கு மந்திரம்சிந்தைராம ராமராம ராமவெனும் நாமமே’ இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும். “அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்சந்தி தர்ப்பணங்களும் தவங்களும் ஜெபங்களும்சிந்தை மேவும் ஞானமும் தினம் ஜெபிக்கும் மந்திரம்சிந்தை ராம ராம ராம என்னும் நாமமே” காலை மதியம் மாலை என பொழுதுகளில் நீராடி நியமங்கள் விதிகளின் படி இருந்து, தர்ப்பணங்கள் செய்து தவம் […]

நாச்சியார் திருமொழி : 70

நாச்சியார் திருமொழி : 70( பாசுரம் 9.1) ஆண்டாள் கண்ணன் நினைவில் மூழ்கிக் கிடந்தாள், அவன் நினைவு எனும் பெருங்கடலில் நீந்தி தத்தளித்துக் கொண்டிருந்தாள், அவனின் ஆசை முகம் ஒன்றே அவள் மனமெங்கும் வியாபித்திருந்தது. வழக்கம்போல் அதிகாலை பூஜை முடித்து குங்குமம் சூட எடுத்தவள் அதனையே உற்றுப் பார்த்துப் புன்னகைத்தாள், “எனக்கு இதனை திலகமாய் இட எப்போது வருவாய் கண்ணா?” எனக் கேட்டுக்கொண்டவள் வழக்கம் போல் குங்குமத்தைக் கண்ணன் காலடியில் இட்டு பின் தன் நெற்றியால் ஒற்றித் […]