பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாச்சியார் திருமொழி : 69

நாச்சியார் திருமொழி : 69 ( பாசுரம் 8.7, 8.8, 8.9) ஆண்டாள் எப்போதும் போல் கண்ணன் நினைவில் வாடிக் கொண்டிருந்தாள். ஒரு செடி நீருக்கு ஏங்குதல் போல் தரை வந்த மீன் நீருக்குத் துடிப்பதைப் போல் தவித்துக் கொண்டிருந்தாள், வேறு எந்தச் சிந்தனையுமே இல்லாதபடி ஒரே நினைவாய் அவன் அவளை முழுக்க ஆட்கொண்டிருந்தான். அவன் நினைவால் உருகிக்கொண்டிருந்த அவளுக்குக் காண்பவை எல்லாமே அவனை நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தன. வீட்டின் வெண்ணெய் பானை, பசுக்கூட்டம் முதல் உரல் […]

சிவ வாக்கியார் பாடல்கள்- 1 to 10

சிவ வாக்கியார் – முன்னுரை. இந்து ஞானமரபில் முக்கியமான சித்தர் சிவ வாக்கியார், திருமூலரைப் போல அவரின் பாடல்களும் காலத்தை வென்ற தத்துவப் பேழைகள். சிறிய பூசணிக்கொடி பெரிய காய்களைச் சுமப்பதுபோல் பெரிய பெரிய தத்துவங்களைச் சுருக்கமாக சொன்னவர் அவர், அந்த எளிமையும் தத்துவமும் மகா ஞானமானது. அவரையும் அவரின் பாடல்களையும் ஒவ்வொரு இந்துவும் அறிந்துவைத்தல் நலம், ஆகச் சிறந்த ஞானம் அவருடையது, அதனை நாத்திகம் எனச் சொல்லமுடியாது. அதெல்லாம் ஞான சிகரத்தின் மேலிருந்து பொழியப்பட்ட தத்வார்த்தங்கள், […]

நாச்சியார் திருமொழி : 81

நாச்சியார் திருமொழி : 81 (பாசுரம் 10.8) அந்த மழைக்காலப் பொழுதில் ஆண்டாள் வழக்கம் போல் மனதில் குழப்பத்துடன் கண்ணனை நினைத்தபடி அமர்ந்திருந்தாள், எல்லா உயிரும் மயங்கி தன் துணையுடன் மகிழும் அந்தக் கார் காலத்தில் கண்ணனின் நினைவு அவளுக்குள் அதிகம் வந்தது. அது அனலாய் அவளுக்குள் கொதித்தது, கொதித்த மனதுடனும் குழம்பிய சிந்தையுடனும் அவள் வானம் நோக்கினாள். சக்கரவாக பறவைகள் மழைநீர் அருந்த உற்சாகமாய்ப் பறந்து கொண்டிருந்தன, வானத்தில் கரிய மேகங்கள் யானைகளை போல் நகர்ந்து […]

நாச்சியார் திருமொழி : 82

நாச்சியார் திருமொழி : 82 (பாசுரம் 10(9)) ஆண்டாளுக்கு மனமெல்லாம் கண்ணன் நினைவாக இருந்தது. அவள் உயிரோடும் உணர்வோடும் கலந்த கண்ணனின் நினைவு அவளுள் அலை அலையாய் அடித்துக்கொண்டிருந்தது. இதயம் துடிக்கும் போதெல்லாம் அவன் நினைவும் சேர்ந்து சேர்ந்து அலையடித்துக் கொண்டே இருந்தது, கண்ணன் அவள் சுவாசமாய் இருந்ததால் அடிக்கடி பெருமூச்சு பெரும் காற்றாக வந்து கொண்டே இருந்தது. அவள் அதிகாலையில் வழக்கம் போல் எழுந்தாள். அதுவரை கனவில் இருந்த கண்ணனின் நினைவு இப்போது அவளோடு கண் […]

அருள்மிகு முத்து வடுகநாத சித்தர்.

அருள்மிகு முத்து வடுகநாத சித்தர். வாராஹி வழிபாடு மகா சக்திமிக்கது. பலர் நினைப்பது போல் வாராஹி அந்த வராகம் எனும் பன்றிமுகம் கொண்டவள் அல்ல. அவளின் மகா சக்தியும் பலமும் தாத்பரியமும் விளக்கும்படி அவளை அந்த முகத்தில் வரைந்து மக்களுக்குப் புரியவைத்தார்கள். அவள் கையில் உலக்கையினையும் கொடுத்திருந்தார்கள். அது மானிட மனம் எனும் நெல்லை புடமிட்டு தூய்மையான அரிசியாகத் தருபவள், மனதின் மாசை நீக்கிப் பக்குவப்படுத்துபவள், மாயை எனும் உமியினை பிரித்தெடுப்பவள் என விளக்கினார்கள். அவளின் முகமும் […]

ஆஷாட நவராத்திரியில் வழிபட வேண்டிய ஆலயங்கள்.

ஆஷாட நவராத்திரியில் வழிபட வேண்டிய ஆலயங்கள் 01 :திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி. வராஹி நவராத்திரி காலங்களில் வழிபட வேண்டிய முக்கிய தெய்வம் அன்னை அகிலாண்டேஸ்வரி. திருச்சி திருவானைக்கா ஆலயத்தில் நின்று அருள்பாலிக்கும் அன்னை அகிலம் ஆளும் அகிலாண்டேஸ்வரி தாய். அவள் அன்னை பார்வதியின் ரூபம், வாராஹி எனும் உக்கிர வடிவம் கொண்டு அங்கு வந்தாள். பல காரணங்களுக்காக வந்தாள். சிவனே அதர்மங்களை ஒழிக்க அனுப்பியதால் வந்தாள். வந்தவள் ஆங்கார ரூபிணியாய் உக்கிரவடிவாய் நின்றாள். ஆதிசங்கரர் காலத்தில் அவள் அருள்பாலிக்க […]

சிவபெருமானின் வன ஆலயங்கள் (பஞ்சவன சிவதலங்கள்)

சிவபெருமானின் வன ஆலயங்கள் (பஞ்சவன சிவதலங்கள்) – முன்னுரை. தென்னாடு கொண்ட சிவனே போற்றி என்பது கயிலாயத்துக்கு தெற்கே உள்ள நிலத்தினைச் சொன்னாலும் தென் பகுதியான தமிழகத்தில் சிவனுக்கான ஆலயங்கள் மிக அதிகம். அவை வகைபடுத்தப்பட்ட முறையும் அதிகம். பஞ்ச ஆரண்ய தலம், நவ கைலாயம், அட்ட வீராட்டானம், சப்த விடங்கர், நவபுலியூர், பஞ்ச சபைகள் என எத்தனையோ வகைகளில் சிவாலயங்கள் வகைபடுத்தப்பட்டன. ஒவ்வொன்றும் ஆயிரம் ஆயிரம் தத்துவங்களைக் கொண்டவை, சிவன் ஒவ்வொரு வடிவிலும் வந்து போதித்து […]

நரசிம்மர் ஆலயங்கள்.

நரசிம்மர் ஆலயங்கள் 01 : சிங்கம்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்மர் ஆலயம். ஆவணிமாதம் விஷ்ணுவிற்கானது, விஷ்ணு வழிபாடு பல வகையில் உண்டு. அது வாமன ஜெயந்தி முதல் பல வடிவில் உண்டு, தசாவதரமும் கொண்டாடப்படும் மாதமும் இதுவே. அவ்வரிசையில் நரசிம்ம வழிபாடும் பிரசித்தி, மிக மிக உக்கிரமான ஆனால் மிக‌ப் பலமான அவதாரம் அந்த நரசிம்ம அவதாரம். இந்துக்களின் ஒவ்வொரு அசைவும் ஞானமானவை. அர்த்தமுள்ளவை. அம்மதம் ஒன்பது வகையான விலங்குகளை இறைவனின் வாகனமும் வடிவமுமாக்கிற்று, அதில் ஒன்று […]

மாரியம்மன் ஆலயங்கள்.

மாரியம்மன் ஆலயங்கள் : 01புன்னை நல்லூர் மாரியம்மன். அம்பாளே இந்த உலகின் ஆதி சக்தி. நித்திய பரிபூரண சக்தி. இந்தப் பிரபஞ்சம் முழுக்க அவள் ஆட்சியே. அப்படியானவள் சில இடங்களில் தன்னை உரிய காலத்தில் உரிய வடிவில் வெளிபடுத்துவாள். அதற்குப் பூர்வ ஜென்ம பலன் அவசியம். சில கர்மத் தொடர்பு அவசியம். அப்படியானவர்களுக்குத் தன்னை வெளிபடுத்தும் அன்னை அவர்கள் பொருட்டு எல்லா மக்களுக்கும் அருள் வழங்குவாள். அப்படி அவள் அருளாட்சி நடக்குமிடம் சோழநாட்டின் புன்னை நல்லூர் மாரியம்மன் […]

பஞ்ச நரசிம்மர் ஆலயங்கள்.

பஞ்ச நரசிம்மர் ஆலயங்கள் – முன்னுரை. கார்த்திகை மாதம் என்பது கர்ம தொடர்புடையது, கர்மத்தைச் சரியாக முடிக்க ஒரு வைராக்கியம் வேண்டும், கூடவே உக்கிரமான வேகமும் வேண்டும், இதனாலேதான் கார்த்திகை மாதம் ருத்ர அம்சமெல்லாம் கொண்டாடப்பட்டது. காலபபைரவர், யமன் போன்ற தெய்வங்களெல்லாம் இம்மாதத்தில் கொண்டாடப்பட்ட ரகசியம் இதுதான், கார்த்திகை என்பது மாதங்களில் எட்டாம் மாதம், எட்டு என்பது எப்போதுமே ஒரு சமநிலை அல்லது பழையன முடிந்து புதியன பிறப்பதைச் சொல்லும், புதிய படைப்பினைச் சொல்லும் கர்கம் முடித்துப் […]