பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சித்தூர் சாஸ்தா கோவிலும் பங்குனி உத்திரத் தேரும்

வரலாற்றில் பாண்டிய நாட்டின் தென் எல்லை அடிக்கடி மாறிக் கொண்டே இருந்தது. சேரநாடு என்பது மலையினைத் தாண்டி களக்காடு, திருநெல்வேலி என பல இடங்களுக்கு நீண்டிருந்தது. கூன்பாண்டியன் எனும் நின்றசீர் நெடுமாற நாயனார் நடத்திய போர் அதனை சொல்கின்றது. அப்பொழுது நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகள் குமரி மாவட்டம் போலே சேர நாட்டுடன் இருந்தன. பழஞ்சி என்றால் கோட்டை எனப் பொருள். பெரும் பழஞ்சி சிறு பழஞ்சி எனும் அக்கால கோட்டை இருந்த ஊர்கள் பெருமளஞ்சி சிறுமளஞ்சி […]

திருவாரூர் தேரோட்டம் – ஆரூரா தியாகேசா

உலகளவில் இன்றும் இந்து ஆலயங்களே மிகபெரிய பரப்பளவில் கட்டபட்டவையாக இருக்கின்றன, அவ்வகையில் கம்போடியாவின் அங்கோர்வாட் எனும் இந்து ஆலயத்துக்கு அடுத்து மிக பிரமாண்டமான ஆலயங்கள் தமிழகத்தில்தான் உண்டு தமிழகத்தில் இது தேரோட்ட காலம், அவ்வகையில் தமிழகத்தின் தனிபெரும் அடையாளம் திருவாரூர் தேர், சிவனின் அதிமுக்கிய தலங்களில் ஒன்றானதும் இன்றளவும் இந்திய ஆலயங்களில் பெரியதுமான திருவாரூர் கோவில் போலவே அதன் தேரும் தனி பிரசித்தியானது ஒருவகையில் அது உலக அதிசயமும் கூட‌ சைவத்தின் மிக பெரிய அடையாளமும் மகா […]

ஸ்ரீரங்கனும் ஜீயர்புரமும்…

தொன்மையான இந்துமத தெய்வங்களின் திருவிளையாடல் கொஞ்சமல்ல, பாரத கண்டம் முழுக்க அது இயல்பாய் இருந்தது, தங்களுக்கு பெரும் ஆலயம் கட்டி விடாமல் விழா எடுத்து பிராமாண்ட தேர்செய்து நாள் தோறும் சீர் செய்து படையல் செய்து கொண்டாடும் பக்தர்கள் மேல் அந்த தெய்வங்களுக்கு எப்போதுமே வாஞ்சை இருந்தது அதனை காட்ட அடிக்கடி அவை திருவிளையாடலை நடத்துவதுண்டு, ஆனால் அந்த திருவிளையாடலை யார் உன்னதமான பக்தர்களோ, யார் எதுவுமற்ற நிலையிலும் யார் தான் ஒன்றுமே செய்யாத நிலையிலும், யார் […]

ஸ்ரீரங்கத்து திருவரங்கன் உலாவும், மதுரையின் மதுரா விஜயமும்…

திருச்சி திருவரங்கத்தில் பங்குனித் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இப்பொழுது மிக உற்சாகமாகவும் பாதுகாப்பாகவும் நடக்கும் அவ்விழாவின் பின்னால் மிகப் பெரிய சோகம் ஒளிந்திருக்கின்றது. இந்தியா ஏன் இந்துநாடாக இருக்க வேண்டும் என்பதும், ஏன் வட எல்லை எப்பொழுதும் வலுவானதாக இருக்க வேண்டும் எனும் தேவை அதில்தான் இருக்கின்றது. ஆம் அது 1323ம் ஆண்டு. முன்பு மாலிக்காபூர் வந்து மதுரையினை சூறையாடிவிட்டு டெல்லி சென்றதற்குப் பின்னரான‌ காலங்கள். ஆறாயிரம் யானை நிறையவும் 20000 குதிரையிலும் அவன் கொள்ளை பொருட்களைக் […]

மகா சிவராத்திரி நாளில் சிவாலய ஓட்டம்

மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு, சிவனிடம் இருந்து பாசுபத அஸ்திரம் அர்ஜூனன் பெற்று வந்தாலும் அவன் அதை பயன்படுத்தாமலே யுத்தம் முடிந்தது. கண்ணன் அவர்களின் கண்கண்ட தெய்வமானான், வேறு எதுவும் நினைவில் இல்லை, சிவன் கொடுத்த ஆயுதமுமில்லை. செய்த கடும் தவத்தின் நினைவுமில்லை, அது போக யுத்தம் முடிந்த வெற்றியில் இருந்தார்கள். இந்தப் போரும் வெற்றியும் மிகப் பெரிய பரம்பொருளின் நாடகம் என அவர்கள் எதையும் நினைக்கவில்லை, சிவனை அடியோடு மறந்திருந்தார்கள். யுத்தத்தில் துரியனை அடித்துக் கொன்று […]

விஜயநாராயணம் சிவாலயம்

நெல்லை மாவட்டத்தில் சிவராத்திரிக்கு செல்லுமிடங்கள் ஏராளம் உண்டு, தாமிரபரணி நதிக்கரை முழுக்க சிவாலயங்கள் உண்டு. நெல்லையப்பர் ஆலயம் முதல் திருப்புடை மருதூர் என ஏகப்பட்ட சிவாலயங்கள் உண்டு, அங்கெல்லாம் நாள் முழுக்க இரவு முழுக்க சென்று வழிபடலாம். நெல்லை மாவட்டத்தின் மிக முக்கிய சிவாலயம் விஜயநாராயணம் சிவாலயம். அந்த ஊர் மகாபாரத்தோடு தொடர்புடையது. அர்ஜூனன் வந்து தவமிருந்து வழிபட்ட இடம் என்பதால் விஜயநாராயணம் என்றாயிற்று. பெருமாளுக்கும் சிவனுக்கும் மிக மிக மூத்த ஆலயங்கள் அங்குதான் உண்டு, அங்கிருக்கும் […]

பஞ்ச மயானத் தலங்கள் : நாலூர் மயானம் திருமெய்ஞானம் 06 / 06

ஐந்தாம் மயானம் – திருநாலூர் மயானம் கும்பகோணம் குடவாசல் அருகே அமைந்திருக்கும் திருநாலூர் மயானம் எனும் திருதலம்தான் பஞ்ச மயான தலங்களின் கடைசி மயானம் இன்று சிறிய ஆலயமாக அதிகம் அறியபடாத ஆலயமாக இருந்தாலும் அதுதான் தமிழகத்தின் தொன்மை மிக்க ஆலயம் என அறியபடுகின்றது நாலூர் என்பது நான்கு வேதங்களும் வந்து வழிபட்ட இடம், நால்வேதியூர் என்பதே நாலூர் என மாறிவிட்டது, வேதங்கள் வந்து வழிபட்ட ஆலயம் என்பதால் அது மகா மகா தொன்மையானது பலாச மரங்கள் […]

பஞ்ச மயானத் தலங்கள் : திருக்கடவூர் மயானம் 05 / 06

நான்காம் மயானம் – திருக்கடவூர் திருமெய்ஞான ஆலயம் இந்த திருக்கடவூர் மயானம் என்பது அந்த பிரசித்தியான திருகடையூர் அபிராமி ஆலயத்தை அன்மித்திருக்கும் ஆலயம். முன்காலத்தில் இதுதான் திருகடையூரின் அடையாளம். இங்குதான் அந்த பல பிரசித்தியான புராணங்கள் நடந்தன, அந்த அபிராமி அன்னை குடியிருக்கும் அமிர்தகடேஸ்வரர் ஆலயம் இதற்குப் பிந்தையது. முதல் தலம் இந்த மயான கோவில். குங்குமகலய நாயனார் இந்த ஆலயத்தில் குங்கலிய பூஜை செய்தார் இங்குதான் சம்பந்தர், அப்பர், சுந்தரர் என எல்லோரும் வந்து பதிகம் […]

பஞ்ச மயானத் தலங்கள் : காசி மயானம் 04 / 06

மூன்றாம் மயானம் – காசி ஆலயம் வாரனாசி எனும் காசி மாநகரம்தான் இந்துக்களின் மகா புண்ணிய ஷேத்திரம், ஒவ்வொரு இந்துவின் பெரும் கடமையில் முக்கியமான காசியினை தரிசித்தல் என்பது அங்குதான் நிறைவடைகின்றது காசி இன்றி இந்துக்களின் மதம் இல்லை, வழிபாடு இல்லை, தாத்பரியமில்லை, அவர்களின் ஆதி அடையாளமும் நம்பிக்கையும் ஆதாரமுமானது அந்த காசி. இந்துஸ்தானம் அந்த காசி எனும் புள்ளியில்தான் இணைந்தது, இனம் மொழி என பல்வேறு மக்களாய் இருக்குமம் இந்துஸ்தான் இந்துக்களை இந்து எனும் ஒரு […]

பஞ்ச மயானத் தலங்கள் : சீர்காழி மயானம் 03 / 06

இரண்டாம் மயானம் – சட்டநாதர் ஆலயம் தென்னக ஆலயங்களில் மிக மிகப் பழமையான ஆலயம் சீர்காழி, காழி என்றால் மகா உறுதியானது அசைக்கமுடியாது எனும் பொருளில் வரும். அந்த ஆலயத்தின் சிறப்புக்கள் கொஞ்சமல்ல, சீர்காழி என சொல்லபட்டாலும் ஏகபட்ட புராண சம்பவம், சிவனும் அன்னையும் வந்து நடத்திய நாடகங்கள் என பல நடந்திருப்பதால் அந்த ஊருக்கு பல பெயர்கள் உண்டு பிரமன் வழிபட்டதால் அது பிரமபுரம். மூங்கில் வடிவில் இறைவன் வந்ததால் அது வேணுபுரம் சூரபத்மனுக்கு அஞ்சி […]