பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சப்த விடங்கர் ஆலயங்கள் 01 / 08 : திருவாரூர்

சப்தவிடங்கர் ஆலயம் 01 : திருவாரூர் ஸ்ரீ வன்மீகநாதர், புற்றிடைநாதர் இந்திய சைவதலங்களில் தனி இடம் அல்லது முதல் இடம் பெற்ற ஆலயம் ஆரூர் எனும் திருவாரூர். அது காலத்தால் மிக மிக தொன்மையானது, எப்போது உருவான ஆலயம் என அறியமுடியா அளவு பழமையானது வன்மீகநாதர் எனும் புற்றிடைநாதர் சன்னதியில் இருந்து அது தொடங்குகின்றது அதன் பின்புதான் தியாகேஸ்வரர் சன்னதி வந்தது, சிவனுக்கு இரட்டை சன்னதி இருக்கும் முதல் ஆலயம் அதுதான். அதன் பெருமையும் சிறப்பும் எல்லோரும் […]

சப்த விடங்கர் ஆலயங்கள் முன்னுரை 00 / 08

முன்னுரை தமிழக சிவாலயங்களில் மகா முக்கியமானது சப்த விடங்கர் ஆலயங்கள், திருவாரூர் தொடங்கி அதை சுற்றி ஆறு ஆலயங்கள் இந்த வரிசையில் உண்டு “விடங்க” என்றால் உளியால் செதுக்கபடாதது என பொருள், சப்தம் என்றால் ஏழு. உளியால் செதுக்கபடாத ஏழு சிவலிங்கங்களை கொண்ட ஆலயங்கள் என அதற்கு பெயர் உளியால் செதுக்கபடாதவை என்றால் மானிடரால் செய்யபடாத , விண்ணில் இருந்து கொடுக்கபட்ட லிங்கங்கள் என அர்த்தம் ஆம், இந்த ஏழு லிங்கங்களும் விண்ணில் இருந்து வந்தவை அதற்கு […]

ரகுவம்ச மஹாகாவியம்

கம்பனின் வரிகள் பலரும் அறிந்தது, அதே நேரம் காளிதாசன் ராமனைப் பற்றி சொன்ன வரிகளும் சாதாரணம் அல்ல, ராமனுக்கான இந்நாளில் மகாகவி காளிதாசன் தன் அழகான உவமைகளால் வர்ணனைகளால் ராமன் வாழ்வின் பல காட்சிகளை எப்படி சொன்னான் எனக் காணலாம். அவை எல்லாம் அழகு, தெய்வீக அழகு, அதை படிப்போர் மனதில் ராமனை தெய்வீகமாய் எழ வைக்கும் பெரும் அற்புதமான அழகு. ராமன் ஆட்சி பற்றிச் சொல்கின்றான் காளிதாசன். “காற்று! இரவும்‌ பகலும்‌ இயங்குகிறது அதனின்‌ இயக்கம் […]

அயோத்தி ஸ்ரீ ராமன் வாழி

ராமன் பெயரால் எழுந்த பெருந்தீஆறா சினமாய் இதயத்தில் வருத்திதீரா வலியாய் சிந்தையில் இருத்திபோரால் மீண்டது எங்கள் அயோத்தி ஒன்றா இரண்டா செய்த பெரும்போர்கன்றோடு பசுவாய் கதறிய கடும்போர்அன்னல் ராமன் ஆலயம் காக்க‌ஐநூறு வருடம் நடந்த கொடும்போர் வாளும் வேலும் ஏந்தி நின்றுநாளும் பொழுதும் போர்களம் கண்டுநாதன் ஆலயம் மீட்பினை கொண்டுகொடுத்த உயிர்கள் கோடி கோடி அரசர் வந்தார் சேனைகள் வந்தார்பெண்கள் வந்தார் குருக்களும் வந்தார்ஆண்டிகள் கூட ஆயுதம் கொண்டுபூண்ட போர்கோலம் காட்டிய பூமி ஆப்கானியரும் ஆபத் தான‌ […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 21 /21

நேற்று அயோத்தியில் உலகுக்கு அர்பணிக்கபட்ட்ட ராம லல்லா கோவில் பற்றி சில தகவல்களோடு இந்த தொடரை நிறைவு செய்யலாம் உச்சநீதிமன்ற தீர்ப்புபடி 5th பிப்ரவரி 2020 கோவில் கட்ட ட்ரஸ்ட் உருவானது. ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ர ட்ரஸ்டில் பிரதான வழக்கறிஞர் திரு பராசரன் (Founder) மடாதிபதிகள், நிர்மோஹி அக்காரா ப்ரதிநிதி, மத்திய, மாநில அரசு ப்ரதிநிதிகள், வி.ஹெச்.பி சார்பாக, மற்றும் ராம பக்தர்கள் உள்ளனர். இந்த ஆலயத்தை அம்பானி, எல் & டி, டாட்டா […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 20 /21

இந்த தருணத்தில் ஒவ்வொருவரும் மனதார நன்றி சொல்ல வேண்டிய பெரும் பட்டியல் உண்டு, அவர்கள் செய்த பெரும் போராட்டமும் அர்பணிப்பும்தான் அந்த புண்ணிய பூமியினை மீட்டு கொடுத்திருக்கின்றன‌ அவர்களை காலகிரமமாக நினைந்து நன்றி தெரிவிப்போம் அன்று சிறிதும் பெரிதுமாக 76 போர்களில் உயிர்நீத்தவர்கள் பாபா ஸ்ரீ ஷ்யாமாநந்த மஹராஜ், ராமர் கோவில் பூஜாரி, அயோத்யா ராஜா மெஹ்தாப் சிங், பீத்தி மற்றும் ஒரு லட்சம் படை வீரர்கள் ராஜா ரண்விஜய் சிங், ஹன்ஸ்வர் மற்றும் 24000 படை […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 19 /21

பாஜக தன் அரசியல் ஆதாயத்துக்காக ராமர்கோவிலை எடுத்தது அதனால் ஆட்சிக்கு வந்தது என்பதெல்லாம் அபத்தம், அந்த ராமர்கோவில் என்பது 500 ஆண்டுகால சிக்கல் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையான பெரு போராட்டத்தை அது சந்தித்தே வந்தது, சுதந்திர இந்தியாவில் அது இந்துமக்கள் போராட்டமானது ஆச்சரியம் என்னவென்றால் எந்த கட்சியும் அதனை கண்டுகொள்ளவில்லை, காங்கிரஸ் அதை தீர்த்துவைத்திருந்தால் பாஜக பின்னாளில் எழும் அவசியமே வந்திருக்காது காங்கிரஸ் என்றல்ல, ஜனதா தளமோ, முலாயம்சிங்கோ யாரோ ஒருவர் அதனை கையில் எடுத்திருந்தால் […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 18 /21

காஞ்சி காமகோடி 69வது பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் அயோத்தி ராமர்கோவில் விவகாரத்தில் முக்கிய பங்கினை செய்த அமைப்புக்களில் காஞ்சி மடத்துக்கும் பெரிய பங்கு உண்டு காஞ்சிமடம் எப்போதுமே இந்துக்களுக்கு, இந்து ஆலயங்களுக்கு ஒரு சிக்கல் என்றால் ஓடிவந்து உதவ முயலும், பிரச்சினையினை தீர்க்க முயலும் அதுதான் தமிழக ஆதீனங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம், அந்த மடத்தை இந்து துவேஷ கும்பல்கள் குறிவைப்பதும் அதனால்தான் தமிழகத்தில் மீனாட்சிபுர மதமாற்றம்,மண்டைக்காடு கலவரம் என எத்தனையோ இடங்களில் காஞ்சிமடம்தான் […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 17 /21

ஸ்ரீ ராமானந்த ஆசார்ய ஸ்வாமி ராமபத்ராச்சாரியர் & வழக்கறிஞர் கே. பராசரன்… அயோத்தி ராமர் ஆலய மீட்பு வழக்கின் மிக முக்கிய சாட்சி ஸ்ரீ ராமானந்த ஆசார்ய ஸ்வாமி ராம பத்ராச்சாரியர். இவர்தான் பால ராமர் சார்பாக வாதிட்டவர்களில் இதிகாச , வேத வரிகளின் அடிப்படையில் வாதிட்டவர். ராமாயணத்தில் இருந்தும் இந்திய சாஸ்திர புராண நூல்களில் இருந்தும் இவர் எழுத்துவைத்த வாதம் சாட்சாத் அந்த வியாசரே களத்துக்கு வந்ததுபோல் இருந்தது ஏற்கனவே 2003 ல் அலகாபாத் உயர்நீதி […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 16 /21

உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை, தீர்ப்பு விவரம்… கடைசி கட்ட போராட்டமாக இந்துக்கள் உச்சநீதிமன்றம் சென்றனர், இப்போது அவர்களுக்கு பெரிய பலமாக மிக ஆறுதலாக கீழ்நீதிமன்றமான அலகாபாத் நீதிமன்றம் அகழாய்வு ஆதாரங்கலை கொண்டு இந்து ஆலயம் ராமன் ஆலயமாக அங்கே இருந்தது அதன் மீதுதான் பள்ளிவாசல் அமைக்கபட்டிருந்தது ஆனால் இஸ்லாமியரும் சுமார் 500 வருடமாக அங்கு சென்றுவந்துள்ளதால் அவர்களுக்கும் ஒரு பங்கு உண்டு என மூன்றில் ஒரு பங்கு, அதாவது அந்த முக்கிய இடத்தில் ஒரு பங்கினை அவர்களுக்கும் […]