பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அட்ட வீரட்டானத் தலங்கள் 4

திருப்பறியலூர் – இளங்கொம்பனையாள் சமேத தக்ஷபுரீஸ்வரர் சிவபெருமானின் அட்டவீராட்டான தலங்களில் நான்காம் தலம் திருப்பறியலூர். தேவாரம் பாடப்பெற்ற இத்தலம் மயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர் முதல் திருமுறையில் இந்த தலத்தினை பாடித்தான் அந்த பதிகத்தை தொடர்ந்தார். “கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்திருத்த முடையார் திருப்பறி யலூரில்விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே” என்பது அந்த பாடல். திருநாவுக்கரசர் தன் ஆறாம் திருமுறையில் ஒரு பாடலை இங்கு பாடினார். “தெய்வப் புனற்கெடில வீரட்டமுஞ் செழுந்தண் பிடவூருஞ் […]

அட்ட வீரட்டானத் தலங்கள் 3

திருவதிகை – திரிபுரசுந்தரி சமேத வீரட்டானேஸ்வரர் சிவபெருமான் அகங்காரம் கொண்டோரை தோற்கடித்து அவர்களின் அகங்காரங்களை அழித்த தலத்தில் முக்கியமானது திருவதிகை தலம். திரிபுரம் எரித்த சிவனின் பெருமையினை சொல்லும் தலமாக, அந்த சம்பவத்தின் மிக முக்கிய அடையாளமாக, இங்குதான் அந்த காட்சி நடந்தது என தேர்வடிவில் நிறுவபட்ட ஆலயம் அது ஆம், தேர்வடிவில்தான் அது அமையபட்டிருக்கும், சிவபெருமான் ஒரு தேரில் இருந்துதான் அந்த திரிபுரத்தை எரித்தார் என்பது புராணம் அப்படியே வில்லும் பாணமுமாக அந்த திரிபுரம் எரித்த […]

அட்ட வீரட்டானத் தலங்கள் 2

திருக்கோவிலூர் – பெரியநாயகி சமேத அந்தகாசுவர மூர்த்தி சிவபெருமானின் அட்ட வீரட்டானத் தலங்களில் இரண்டாம் தலம் திருக்கோவிலூர். அந்த தலம் விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றோரம் அமைந்திருக்கும் தலம், அங்கிருக்கும் சிவன் பெயர் அந்தகாசுவர மூர்த்தி இது தேவாரம் பாடபட்ட தலம், அட்ட வீரட்டானம் எனும் வீரபத்ர ருத்ரகோல சிவனின் இரண்டாம் முக்கியத் தலம், மகா சிறப்பானது. “கரவலாளர் தம்மனைக் கடைகள் தோறுங் கால்நிமிர்த்திரவலாழி நெஞ்சமே இனியதெய்த வேண்டில் நீகுரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர்விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் […]

அட்ட வீரட்டானத் தலங்கள் 1

திருக்கண்டியூர் – ஸ்ரீ மங்களநாயகி சமேத பிரம்மசிரகண்டீஸ்வரர் பொதுவாக கார்த்திகை மாதம் என்பது அதர்மத்தை அழிக்க வந்த, மாயைகளை அழிக்க வந்த அவதாரங்களுக்கான மாதம். இதனாலே கார்த்திகை மாதம் முருகப்பெருமான் வழிபாடுகள் அதிகம் உண்டு, சுவாமி அய்யப்பன் சாஸ்தாவின் வழிபாடும் அதிகம் உண்டு. பிரம்மா, விஷ்ணு இருவரின் அகங்காரத்தை திருவண்ணாமலையில் சிவபெருமான் அழித்தார் என்பதால் கார்த்திகைதீப கொண்டாட்டமும் உண்டு. அப்படியான கார்த்திகை மாதம் முழுக்க அதர்மக்காரர்கள், அதர்மம் பெருக மூலக் காரணமான மாய மயக்கங்கள், அகங்காரங்கள் ஆகியவற்றை […]

முருகனின் மூன்று சோழதேச கோவில்கள்

முருகப்பெருமானின் ஆலயங்கள் உலகெல்லாம் உண்டு, ஒவ்வொரு ஆலயமும் முருகபெருமானின் அளவற்ற ஆற்றலையும் தனி கருணையினையும் சொல்பவை, அப்படியே தன் அடியார்மேல் அவன் கொண்ட அளவற்ற பிரியத்தையும் காலமெல்லாம் அந்த பக்தியின் பெருமை நிலைபெற்று நிற்க அவன் காட்டிய தனிபெரும் அதிசய வரலாறுகளின் காட்சிதலமாய் நிற்பவை இப்படி ஏராளமான ஆலயங்கள் உண்டெனினும் மூன்று ஆலயங்கள் ஒரே ஒரு முருகபக்தனை, அவன் செய்த அற்புதமான கலையினை முருகபெருமான் சிலையாய் கொண்டு கண்முன் நிற்கின்றது அந்த வரலாறு ஒவ்வொருவரும் அறியவேண்டிய ஒன்று, […]

சாஸ்தாவின் அறுபடை வீடு

கார்த்திகை மாதம் என்பது இந்துக்களுக்கு ஞானம் தேடும் மாதம், கூடவே ஆரோக்கியமும் தேடும் மாத, அக்கால கட்டத்தில் விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது கார்த்திகை நட்சத்திரம் சில பலன்களை கொடுக்கும், அதை நுணுக்கமாக கண்காணித்து பல எற்பாடுகளை செய்தனர் இந்து ஞானியர் கார்த்திகை என்பது ஞானத்தின் தொடக்கம், அதனாலே முருகபெருமான் எனும் ஞானபண்டிதனை கார்த்திகை பெண்கள் வளர்த்தார்கள் என குறிப்பால் சொன்னார்கள் இந்துக்கள் அந்த கார்த்திகையில் பல வழிபாடுகளை ஏற்படுத்தினார்கள், கார்த்திகையில்தான் சூரசம்ஹாரம் நடக்கும் இன்னும் […]

சபரிமலை

அந்த மலை ராமனின் மிகபெரிய பக்தையான சபரி என்பவள் வாழ்ந்த மலை அவள் பெயராலே சபரிமலை என்றாயிற்று ராமாயணம் என்பது பெண்களின் கண்ணீர் தீர்க்கவந்த ஒரு அவதாரத்தின் கதை, அந்த அவதாரம் முழுக்க ராமபிரான் ஏகபட்ட பெண்களின் கண்ணீரை தீர்த்து சாபவிமோசனம் கொடுத்து வந்தார், அதில் ஒருத்தித்தான் அந்த சபரி அந்த சபரிமலை எனும் புனிதமான மலையில் பின்னாளில் மகிஷி எனும் அரக்கி ஆட்டம் போட ஆரம்பித்தாள், அவள் மகிஷன் எனும் எருமைதலையனின் சகோதரி, அவனை அன்னை […]

மலேசிய திருநாட்டின் பத்துமலை முருகன் ஆலயம்

இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் முருகன் ஆலயத்தில் தனி சிறப்புபெற்று நிற்பது மலேசிய திருநாட்டின் பத்துமலை முருகன் ஆலயம், சஷ்டி காலத்தில் கடல்கடந்து நிற்கும் அந்த கந்தனை வணங்குதல் அவசியம் என்பதால் அந்த ஆலயத்தின் வரலாற்றையும் அதன் சிறப்பையும் கொஞ்சம் பார்க்கலாம் கடாரம் என ஒருகாலத்தில் அழைக்கபட்ட அந்த திருநாட்டில் இந்த ஆலயத்தின் வரலாறு 18ம் நூற்றாண்டில்தான் தொடங்குகின்றது அதற்கு முன் அங்கு ஆலயம் இருந்திருக்கவில்லை பொதுவாக தென்கிழக்கு ஆசிய நாடுகள் தடாகத்தில் தாமரை போல தீவுகளாக சிதறிகிடப்பவை, […]

சென்னிமலை முருகன் ஆலயம்

குன்றிருக்கும் இடமெல்லாம் மலை இருக்கும் இடமெல்லாம் முருகப்பெருமானை நிறுத்தினார்கள் இந்துக்கள், இதற்கு சில முக்கிய காரணங்களும் இருந்தன‌ விளக்கினை ஏற்றினால் உயரத்தான் வைப்பார்கள், ஒரு அரசனின் கொடி உயரத்தான் பறக்க வேண்டும், எது சிறந்ததோ எது பெருமைமிகு அடையாளமோ அதை உயரவைப்பதுதான் இந்துக்கள் மரபு கோபுர கலசம் போல‌ அப்படி முருகப்பெருமானை மலைமேல் வைத்தார்கள் அதிலும் இரு விஷயம் இருந்தது முதலாவது மலை ஏறி இறங்குவதில் உடல்பயிற்சி இருந்தது, சுத்தமான காற்று இருந்தது ஆரோக்கியம் கைகூடிற்று இரண்டாவது […]

கதிர்காமம், கதிரைகாமம் முருகன் ஆலயம்

இந்தியாவினை தாண்டி உலகெல்லாம் பல இடங்களில் சிறப்பான முருகன் ஆலயங்கள் உண்டு , அவற்றில் முதலிடத்தில் இருப்பது இலங்கையின் கதிர்காமம் உண்மையில் அறுபடை வீடுகள் என்பது ஆறு அல்ல, கதிர்காமத்தையும் சேர்த்து ஏழு அதுதான் தொடக்கமானது, ஆனால் இலங்கையில் பவுத்த தரப்பிடம் அவ்வாலயம் இருந்துவிட்டதால் இங்கே தமிழகத்துக்குள் ஆறு என சுருக்கி கொண்டார்கள் உலகின் மிக மிக பழமையான இந்து ஆலயத்தில் குறிப்பாக முருகபெருமான் ஆலயத்தில் அதுவும் ஒன்று அது காலத்தால் மிக மிக முந்தையது, ஆனால் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications