அட்ட வீரட்டானத் தலங்கள் 4
திருப்பறியலூர் – இளங்கொம்பனையாள் சமேத தக்ஷபுரீஸ்வரர் சிவபெருமானின் அட்டவீராட்டான தலங்களில் நான்காம் தலம் திருப்பறியலூர். தேவாரம் பாடப்பெற்ற இத்தலம் மயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர் முதல் திருமுறையில் இந்த தலத்தினை பாடித்தான் அந்த பதிகத்தை தொடர்ந்தார். “கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்திருத்த முடையார் திருப்பறி யலூரில்விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே” என்பது அந்த பாடல். திருநாவுக்கரசர் தன் ஆறாம் திருமுறையில் ஒரு பாடலை இங்கு பாடினார். “தெய்வப் புனற்கெடில வீரட்டமுஞ் செழுந்தண் பிடவூருஞ் […]