பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கந்தர்வ குரலோன் – எஸ்.பி. பால சுப்பிரமணியம்

கலைகள் என்பது தெய்வத்தின் வரம் எனச் சொல்லும் இந்துமதம், சில கலைஞர்களுக்கு கந்தர்வர்களின் அனுகிரகம் இருப்பதாக தன் ஞானத்தால் சொல்லும் அந்த அனுகிரஹம் பெற்றவர்கள் தொடும் கலை சிறக்கும், காலத்துக்கும் அவர்கள் நிலைப்பார்கள், எது மாறினாலும் அவர்களுக்கு கொடுக்கபட்ட வரம் மாறாது, அந்த கலை மாறாது. வாழும் காலமட்டும் அந்த கந்தர்வ அருள் அவர்களோடு இருக்கும், அந்த சக்தி அவர்களை பெரும் உச்சத்தில் வைத்து பெரும் ஜனவசியமும், மக்கள் அபிமானமும் கொண்டு நிறுத்தி வைத்திருக்கும். மிக சிலருக்கே […]

வாழ்க நீ! எம்மான்!!! – மோடி

நரேந்திர மோடி என்பது தனிப்பெயர் மட்டும் அல்ல, நரேந்த்ர மோடி என்பது பாரத பிரதமரின் பெயர் மட்டுமல்ல, உலகை வசீகரிக்கும் மந்திர சொல் மட்டுமல்ல‌; நரேந்திர மோடி என்பது ஒரு உணர்வு, ஒரு எழுச்சிமிக்க மூச்சு, நம்பிக்கையும் உற்சாகமும் சிலிர்ப்பும் கொடுக்கும் நாமம், நரேந்திர மோடி என்பது ஆச்சரியம் கலந்த புன்னகை கொடுக்கும் பெரும் நிம்மதி உணர்வு. எதெல்லாம் இந்தியருக்கு குருடன் கண்ட கனவு போல வார்த்தையாக இருந்ததோ, எதெல்லாம் எம்மாலும் இதெல்லாம் சாத்தியமா என இருந்ததோ […]

ஸ்ரீரங்கத்து தேவதை

இன்று உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்ற வெகு சில பெண்கள் உண்டு. அமெரிக்காவின் கமலா ஹாரீஸ் உள்ளிட்ட வெகு சிலரே அந்த இடத்தில் உண்டு, அப்படி சில அரசியல் பெண்களுக்குத் தனி செல்வாக்கு உலகில் உண்டு. அந்த வரிசையில் முதன் முதலில் ஒரு தமிழச்சி இடம் பிடித்திருக்கின்றார். உலகம் அவரை உற்று கவனித்து பல விஷயங்களில் பாராட்டிக் கொண்டிருக்கின்றது. அவர் திருச்சி தமிழச்சி, பின் வெளிநாட்டில் படித்து கணவருடன் பெங்களூரிலும் ஐதராபாத்திலுமாக‌ வசித்து, பள்ளி நடத்தியபொழுது சுஷ்மாவின் […]

நெல்சன் மண்டேலா

அந்த தென் ஆப்ரிக்கா, பெரும் கண்டமான‌ ஆப்ரிக்காவின் தெற்கு பகுதிநாடு, ஆனால் மிக மிக வளமான நாடு, வைரத்திற்கும் தங்கத்திற்கும் இன்னும் பல வகையான பொருளுக்கும் பெயர்பெற்ற நாடு, வளம் இருந்தால் அங்கு யார் இருப்பார்? அதுவும் மக்கள் அறியாமையில் இருந்தால் யார் இருப்பார்? எல்லாம் வேட்டையாட ஒரு வல்லரசு இருக்கும், அப்படி 19ம் நூற்றாண்டில் அதை ஆக்கிரமித்த நாடு பிரிட்டன் 19ம் நூற்றாண்டிலே பிரிட்டன் அன்றே பிடித்து வைத்திருந்தது, உலகெல்லாம் இருந்து தமிழர் உட்பட தொழிலாளர்களை […]

மானிட சாதியின் தனி மனிதன்… அடால்ஃப் ஹிட்லர்

பல்லாயிரம் பேர் அனுதினமும் வந்து பிறக்கும், இறக்கும் உலகில் ஒரு சிலரின் கர்மா வரலாற்றை மாற்றிவிடுகின்றது, கோடியில் ஒருவருக்கு அந்த வரம் கிடைக்கின்றது மானிட இனத்தின் பல பலவீனங்களாலும் அதன் லவுகீக மயக்கங்களாலும் போர்களே உலக வரலாற்றை மாற்றும், போரும் அதுகொடுக்கும் விளைவும் பயமும் அந்த ஆபத்தை களைவிக்க செய்யும் முயற்சிகளும் தயாரிப்பும் விஷத்துக்கு விஷமே முறிவு என்பது போல் பல திருப்பங்களை கொடுக்கும் அது மானிட இனத்தால் புரிந்துகொள்ளமுடியா சூட்சுமாம் புராணகாலத்தில் அசுரர்களை ஆடவிட்டு அந்த […]

கோபால்சாமி துரைச்சாமி நாயுடு (ஜி.டி நாயுடு)

இந்த பிரபஞ்சம் எனும் பெரும் சக்தி உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒருவனுக்கு விஷேஷித்த சக்திகளை அவ்வப்போது தருகின்றது, வெகு அபூர்வமாக அப்படி சிலருக்கு அந்த ஆர்வம் பிறப்பிலே வருகின்றது சாதாரண மனித சிந்தனையில் இருந்து விலகி வித்தியாசமான சிந்தனையினால் அவர்கள் பலவித கருவிகளை, எந்திரங்களை உலகுக்கு தருகின்றார்கள், அவர்களை விஞ்ஞானிகள் என்கின்றது உலகம் ஆழ கவனித்தால் மானிட குலம் சில கடின உழைப்பையும் சிரமத்தையும் தவிர்க்க, வேலையினையும் வாழ்வினையும் எளிதாக்க ஆண்டவன் கொடுக்கும் வாய்ப்பு அது ஆனால் […]

ஸ்ரீ அன்னை

இந்துமதம் சொல்வதெல்லாம் உண்மை என்பதும், அது சொல்லும் முன் ஜென்மம், கர்மா என்பதெல்லாம் முழுக்க நிஜம் என்றும் உலகுக்கு நிரூபிக்கவே சில பிறப்புகள் வருகின்றன‌ உரிய நேரத்தில் உரிய தொடர்புகள் கிடைக்கும்பொழுது அவை அந்த உண்மையினை பட்டவர்த்தனமாக சொல்கின்றன, எந்த பகுத்தறிவாளனும் பெரும் விஞ்ஞானியும் கூட அதனை மறுக்கமுடியாதபடி அவை விஸ்வரூப சாட்சியாய் நிற்கின்றன‌ காலம் காலமாக நடப்பது இந்த பிரபஞ்சத்தின் விளையாட்டு பகவானின் அருளாட்சி இது, அது இந்துமதத்துக்கு சோதனை வரும்பொழுதெல்லாம் அடிக்கடி நடக்கும் திருவிளையாட்டு. […]

எருக்கூர் நீலகண்ட பிரம்மாச்சாரி

இந்திய சுதந்திரபோராட்டம் என்பது ஆப்கானியர் காலத்திலே தொடங்கி வீரசிவாஜியால் இன்னும் தீவிரமாக்கபட்டு கடைசியில் 17ம் நூற்றாண்டில் மொகலாயம் ஒடுக்கபட்டபோதே வெற்றி அடைந்திருந்தது ஆனால் ஆங்காங்கே சுல்தான்களை ஒடுக்க பிரிட்டிசாரை அனுமதித்த தவறில் அவர்கள் சக்திபெற்று வலுபெற்று ஆட்சியினை கைபற்றினர் மொகலாயர்போல் அல்லாமல் பிரிட்டிசாரின் தந்திர ஆட்சி கடுமையாய் இருந்தது, இங்கே ஆயுதபோராட்டம் 700 ஆண்டுகாலம் நடந்தது என்பதால் அது தனக்கும் எதிராக திரும்ப கூடாது எனும் அச்சத்தில் முதலில் இந்தியர் ஆயுதம் வைக்க கூடாது என்பதில் கவனமாக […]

பாண்டித்துரை தேவர்

ச‌ங்கம் வைத்து தமிழ்வளர்த்த நகரம் மதுரை, அதுவும் ஞானமுனி அகத்தியனும் ஞானகுரு முருகனும் தெய்வீக கவியான அவ்வை மாதரசியும் இணைந்து தமிழ் வளர்த்த இடம் மதுரை கூடவே அன்றைய மதிப்பிலே லட்ச ரூபாய் கொடுத்தார் அந்த ஆலவாய் நாதனின் ஆலயம்தான் தமிழ் சபையாயிற்று, சிவன் உருவாக்கிய தமிழ்மொழியின் சங்கம் அந்த சிவாலயத்தில்தான் தொடங்கிற்று பின்னாளில் மதுரைக்கான அம்மனான மீனாட்சி அம்மன் கொண்டாடபட்டு அந்த ஆலயம் மீனாட்சி அம்மன் ஆலயம் என உருவானானும் தமிழ்சங்கம் அங்குதான் நடந்தது சிவன் […]

ராமகிருஷ்ண பரம ஹம்சர்

அவர் பெயர் கதாதர், வங்கத்துக்காரர் சிலை செய்வதும், ஓவியமும் அவருக்கு பிடித்தமான விஷயங்கள் ஆனால் குடும்ப வறுமை அவரை வேறுவழியில் இழுத்து சென்றது. கலைமனம் கொண்டவன் வாழ்வில் வறுமை விளையாடுவது ஒன்றும் ஆச்சரியமல்ல‌ அந்த ககாதரின் அண்ணன் ஒரு புரோகிதர், அதனால் அவரும் வழிபாடுகளிலும் பூஜை யாகங்களிலும் ஈடுபட்டார், மெல்ல மெல்ல ஆன்மீகத்தில் மூழ்கிய அவருக்கு பல சிந்தனைகள் எழுந்தன‌ கடவுள் என்பது சிலையா, இல்லை வானலோகத்தில் இருப்பவரா? எல்லாம் அறிந்த தெய்வம் கல்லில் இருக்குமா? இதற்கு […]