பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காளிதாசனிம் ரகுவம்சம் : 51 to 53

காளிதாசனிம் ரகுவம்சம் : 51 முற்றிய காமம் மூளையினைச் சிதைக்கும் என்பதுபோல காளை போன்ற ராமன் மேல் பெரும் ஆசை கொண்ட சூர்ப்பனகை தன் விருப்பத்தைதா தெரிவித்தாள், சீதை எனும் பெண் அங்கே இருந்தபோதும் அவளைத் தாண்டி தன் ஆசையினை வெளிப்படுத்தினாள், மலர் வாசமற்றது போனது போல அந்தச் சூர்ப்பனகை நாணமற்றுப் போனாள். அழகிய தோற்றமுடைய ராமன் தன்மேல் பெரும் ஆசை கொண்ட சூர்ப்பனகையினை நோக்கிப் “பெண்ணே, நான் மனைவியுடன் இங்கே இருக்கின்றேன் க்ஷ, நீ தனித்திருக்கும் […]

காளிதாசனின் ரகுவம்சம் : 46 to 50

காளிதாசனின் ரகுவம்சம் : 46 இந்த பலமான சிவனின் வில்லை வளைப்பவர்க்கே தன் மகள் சீதையினை மணமுடித்து கொடுப்பதாக ஜனகன் அறிவித்திருந்தான், அதை யாரும் தொட்டு தூக்க கூட முடியாததால் அவன் மிக கவலையுற்றிருந்தான், அப்படியான நிலையில் ராமன் வந்து வில்லை வளைத்து ஒடித்து அவனின் துயரத்தை போக்கினான் எல்லா மக்களின் கவலையினையும் போக்க வந்த அவதாரமான ராமபிரான் ஜனகனின் பெரும் கவலையினையும் போக்கினான் இதனால் மகிழ்ந்த ஜனகன் விசுவாமித்திரர் முன்னிகையிலே தன் மகளான சீதையினை அக்னி […]

காளிதாசனின் ரகுவம்சம் : 41 to 45

காளிதாசனின் ரகுவம்சம் : 41 தேவர்கள் இவ்வாறு தம்மைத் துதித்து வாழ்த்தியதன் பின் பகவான் அவர்களிடம் அவர்களின் நலன் பற்றியும் அவர்களின் தர்மவழி இயக்கம் பற்றியும் விசாரித்தார்ர், அப்போது மிகுந்த துயருடன் அவர்கள் சொன்னார்கள். “பகவானே, பிரளய காலத்தில் கடல் பொங்கி வந்து பெரும் அழிவினைத் தரும் அது விதிக்கபட்டது , ஆனால் ஒழுக்கம் எனும் கரைதாண்டி வரும் ராவணன் எனும் ராட்சனால் நாங்கள் மிகுந்த பாதிப்படைகின்றோம்” என முறையிட்டார்கள். அப்போது பகவான் சமுத்திர கரையில் உள்ள […]

காளிதாசனின் ரகுவம்சம் : 36 to 40

காளிதாசனின் ரகுவம்சம் : 36 வசந்த கால துவக்கத்தில் கர்னிகாரமரம் (கோங்குமரம்) அக்னிஜுவாலை போன்ற தன் மலர்களைப் புஷ்பித்திருந்தது, மெல்லிய இலைகொழுந்துகள் மேல் பொன்னிறத்தில் மின்னிய அப்பூக்கள் வசந்த கால லட்சுமிதேவி பூமிக்கு அருளிய பொன் நகைகள் போலிருந்தன. அந்த கர்னிகாரமரத்தின் பொன்னிற பூக்களை விரும்பி பறித்துத் தங்கள் தலையில் மிகுந்த ஆசையுடன் பெண்கள் அணிந்து கொண்டனர். செழித்த மாஞ்சாடி வகை மரங்கள் அழகான மலர்களுடன் பூத்துக் குலுங்கியது, அது அம்மரத்துக்குத் திலகமாய் அமைந்தது, அம்மலர்களுக்காக அம்மரங்களின் […]

காளிதாசனின் ரகுவம்சம் : 26 to 30

காளிதாசனின் ரகுவம்சம் : 26 அஜனைக் கண்டதும் இந்துமதி முகத்தில் ஏற்பட்ட மெல்லிய நாணத்தைக் கண்ட ஸூனந்தை மெல்ல புன்னகைத்தாள். இதனால் நாணத்தில் சிவந்த அவளைப அஜன் முன் நிறுத்திச் சொல்லத் தொடங்கினாள், அவளின் இயல்பான பேச்சுவன்மை இப்போது இன்னும் அழகாக கூர்மையாய் இருந்தது. “பெருமை மிகு இஷ்வாகு குலத்திலே அரசர்களுள் சிறந்தவரும் உயர்ந்த நற்குணங்களைக் கொண்டவருமான ஒரு மன்னர் இருந்தார். அவர் பெயர் காகுத்ஸர், குலப பெருமையான அவரின் பெயரை அவர் சந்ததியில் வரும் உத்ரகோசல […]

காளிதாசனின் ரகுவம்சம் : 21 to 25

காளிதாசனின் ரகுவம்சம் : 21 ரகுவின் மகன் அஜய் சூரிய குலத்தின் மரபுப்படி எல்லாக் கலைகளிலும் தேர்ந்து வளர்ந்தான், காட்டில் முதிய யானை தடம்பற்றி நடக்கும் குட்டியானைபோல் தடம் தப்பாமல் நடந்து வளர்ந்தான், காலம் அவனை விரைவில் வாலிபனாக்கிற்று. காதல்கொண்ட பெண் தன் காதலனை அடைய பெரும் ஆசை கொண்டிருந்தபோதும் தகப்பன் உத்தரவினை எதிர்பார்ப்பது போல ராஜலஷ்மி இஷ்வாகு வம்ச அரியணை மூலம் அவனை அடையவிரும்பிய நிலையில் ரகுவின் உத்தரவினை எதிர்பார்த்து நின்றாள். அந்நேரம் ஷத்திரிய வம்சத்தில் […]

காளிதாசனின் ரகுவம்சம் : 16 to 20

காளிதாசனின் ரகுவம்சம் : 16 ரகுவுக்கு எல்லாப் பலமும் இருந்தது. அந்தப் பலத்தினை சரத்காலம் முடிந்த பருவம் இன்னும் பலமாக்கியது, மழைக்காலம் முடிந்ததால் ஆறுகள் கர்ப்பமான யானைகளின் வயிறு குட்டி ஈன்றதும் வற்றியதைப் போல் வற்றியது, அந்த ஆழம் சுருங்கிய ஆறுகளைக் கடப்பதும், தேங்கிய சேறு நிறைந்த இடம் உலர்ந்துபோனதால் படைநடத்துவதும் அவனுக்கு எளிதானது. இதனால் படை நடத்தி திக் விஜயம் செல்ல விரும்பிய ரகு அதற்கான யாகமான வாஜிநிராஜனம் எனும் யாகத்தைச் செய்தான். அப்போது யாக […]

காளிதாசனின் ரகுவம்சம் : 11 to 15

காளிதாசனின் ரகுவம்சம் : 11 தனக்கொரு மகன் பிறந்தான் எனும் அமிர்ததுக்கு ஈடான செய்தி கேட்டதும் சூரியனை மகனாய்ப் பெற்ற காசிப முனிவரைப்போல் மகிழ்ந்த திலீபன் அந்தச் செய்தியினைச் சொன்ன பணியாளனுக்குத் தன் செங்கோல், வெண்கொற்றக்குடை, மணிமுடி தவிர வேறு எல்லாமும் அள்ளி அள்ளி கொடுக்கும் அளவு எல்லையே இல்லா மகிழ்வினை கொண்டவனாய் மகனைக் காண விரைந்தான். அங்கே கலைமான் மடியில் கன்றினைப்போல் சுதக்ஷனை அருகே கிடந்த தன் மகனைக் காற்றில்லா இடத்தில் ஆடாத தாமரை மலர் […]

காளிதாசனின் ரகுவம்சம் : 10

காளிதாசனின் ரகுவம்சம் : 10 சுதக்ஷனைக் கர்ப்பத்தின் அறிகுறியினைப் பிறர் அறியக் கண்டாள், உலக மக்கள் கண்களுக்கு பூரண சந்திரன் விருப்பமானது போல அரண்மனை மகளிர்க்கு அவள் மகிழ்வானாள், இஷவாகு வம்சம் தொடர்கின்றது என்பதன் அறிகுறியினை அவள் கொண்டிருக்க மன்னனும் மற்றவர்களும் மிகவும் மகிழ்ந்தார்கள். அவள் மெலிந்த தோற்றம் கொண்டாள், பலவீனத்தால் நகைகளை சுமக்க சக்தியற்றவளாய் மங்கலம் கருதி சிலவற்றை மட்டும் சுமந்தாள், லோத்ர மலர்போல் அவள் முகம் வெளிறிற்று, விடியும் காலையின் வானத்தில் நிலவும் விண்மீன்களும் […]

காளிதாசனின் ரகுவம்சம் : 09

திலீபன் நிலம் பார்த்து நின்று சிங்கத்துக்கு இரையாகத் தயாரான நேரம் அவன் மேல் சிங்கம் விழவில்லை. மாறாக, பூமழை பொழிந்தது, தேவலோக மலர்களெல்லாம் வீழ்ந்தன‌. அவன் அதிசயித்தபோது ‘குழந்தாய்” என்றொரு வார்த்தை அவன் காதில் விழுந்தது. அமிர்தத்துக்கு ஒப்பான அந்த இனிய குளிர்ந்த மொழிகளைக் கேட்டு அவன் நிமிர்ந்தபோது சிம்மத்தை காணவில்லை. நந்தினி மட்டும் நின்றுகொண்டிருந்தது, தன் தாயினைக் காண்பதுபோல் அதனைக் கண்டான் திலீபன். ஆச்சரியம் அடைந்த அவனிடம் அந்த நந்தினி பேசிற்று, “சாந்தமான என் மகனே, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications