பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காளிதாசனின் மேகதூதம் : 02

முதல் பத்து ஸ்லோகங்கள் கொழித்த செல்வத்தில் மிதப்பதும், சுவரையும் பொன்னால் கொண்ட‌ அலகாபுரி பட்டணத்தின் வேந்தன் குபேரன் இட்ட சாபத்தால் மனைவியினை சில காலம் பிரிந்து தொலை தூரம் சென்ற யட்சன் ஒருவன், பரிகாரம் தேடித் தனித்து தவித்து நின்றான். அன்னை சீதையின் ஸ்நானத்தால் புனிதமான நதியோடும் சித்திரகூட மலையில் நின்றான். தன் தெய்வ சக்தியும், பெரும் செல்வமும், மின்னல்போல் அழகானவளும் அன்பு நிறைந்தவளுமான தன் காதலியினையும் ஒரே நேரம் இழந்து புலம்பி நின்றான். தன் ஆத்மாவில் […]

காளிதாசனின் மேகதூதம் : 01

முன்னுரை காளிதாசனின் விக்ரமோர்வ‌சியம் என்பதன் தமிழாக்கத்தை நாம் எழுதவில்லை. அது அரவிந்தரால் ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்டதன் தமிழ் வடிவம். அதுவும் இன்னொரு தளத்தில் வந்தது.  படிக்க நன்றாக இருந்ததால் நாம் சில பாகங்களை இங்கே சொன்னோம். அது பலருக்கு புரியவில்லை என்றார்கள்.  சிலர் காளிதாசனின் காவியங்களை சொல்லமுடியுமா என்றார்கள். அவன் பெரும் கடல், எழுதிக் குவித்தவை ஏராளம்.  அதையெல்லாம் எழுத தனிவாழ்வு வேண்டும். அவனின் உவமை அழகு, அந்த உவமையில் சொல்லும் ஆழ்ந்த வாழ்க்கை தத்துவம் அழகு, வர்ணனை […]

சுப்பிரமணிய புஜங்கம் : 06 / 06

(இருபத்தியாராவது முதல் முப்பத்து மூன்றாம் (இறுதி) ஸ்லோகம் வரை) கந்த சஷ்டி நாட்கள் என்பவை சூரசம்ஹாரத்தோடு மட்டும் முடிவதல்ல, ஏழாம் நாள் மிக முக்கியமானது. அன்றுதான் திருகல்யாணமெல்லாம் நடக்கும், முருகப்பெருமான் பெரும் அருள் புரிவார். இன்று தான் அவர் வரமருளும் நாள். திருக்கல்யாணம் என்பது லவுகீக சிந்தனைபடி மணவாழ்வு என்றாலும், ஆன்மீக போதனைப்படி முருகப்பெருமான் எனும் பரமாத்வோடு மானிட ஜீவாத்மா கலந்து நிற்கும் தருணம் அதாவது பரம்பொருள் மானிட ஆத்மா மேல் எவ்வளவு அன்புகொண்டு அதனை தன்னொடு […]

சுப்பிரமணிய புஜங்கம் : 05 / 06

(இருபதாம் முதல் இருபத்தைந்தாம் ஸ்லோகம் முடிய) இதுவரை முருகனின் ஆலயம், முருகப்பெருமானின் அழகான கோலம் என உருகிப் பாடிய ஆதிசங்கரப் பெருமான் இப்போது மனக்கவலையால் ஏற்படும் நோய், பூர்வ ஜென்ம கர்மாவினால் ஏற்படும் நோய், சூழலால் ஏற்படும் நோய் என மூவகை நோய்களையும் முருகப்பெருமான்  தீர்த்து வைப்பான், அவன் ஒருவனாலேயே பூர்வ ஜென்ம வினைகளையும் விதியினையும் மாற்றிவைக்க முடியும் என உருகிப் பாடி நிற்கின்றார் சங்கரர். இது அவருக்காக மட்டும் பாடிய பாடல் அல்ல, நோயுற்றிருக்கும் எல்லா […]

சுப்பிரமணிய புஜங்கம் : 04 / 06

(பதினான்காம் முதல் பத்தொன்பதாம் ஸ்லோகம் முடிய) பதினான்காம் ஸ்லோகம் “ஸ்புரன் மந்தஹாஸை ஸஹம்ஸானி சஞ்சத்கடாக்ஷாவலீப்ருங்க ஸங்கோ ஜ்வலானிஸுதாஸ்யந்தி பிம்பா தரணீச ஸூனோதவாலோகயே ஷண்முகாம் போரு ஹாணி” முதல்வரி “ஸ்புரன் மந்த ஹாஸ ஸ ஹம்ஸானி சஞ்சத்” அதாவது என்றால் மின்னுதல் / ஜொலித்தல் என பொருள், சுப்பபுரமணி என முருகனுக்கு சமஸ்கிருத பெயர் வந்தது இப்படித்தான், மணிபோல மின்னுபவன் என பொருள் மந்த ஹாஸ என்றால் புன்முறுவல், ஸ என்றால் உடன், ஹம்ஸா என்றால் அன்னம், சஞ்சல் […]

சுப்பிரமணிய புஜங்கம் : 03 / 06

(எட்டு முதல் பதிமூன்று வரையான ஸ்லோகங்கள்) சுப்பிரமணிய புஜங்கத்தில் மிக அழகான அணுகுமுறையினை நேரடியாகவும் சூசகமாகவும் போதிக்கின்றார் ஆதிசங்கரர். முதலில் திருச்செந்தூரின் கடற்கரை, கந்தமலை எனச் சொல்லும் சங்கரர் பின் முருகப்பெருமானின் அழகிய‌ தோற்றத்தை 8ம் ஸ்லோகத்தில் இருந்து விளக்கத் தொடங்குகின்றார் அதன் அர்த்தம் காடு, மலை,கடற்கரை என எங்கெல்லாமோ ஓடி இறைவனை தேடுவவோர் தங்கள் மனக்கண்ணில் இறைவனை காணும்படி தியானிக்க வேண்டும் என்பது இறைவன் எல்லா இடத்திலும் இருக்கின்றார் அப்படியே மனதிலும் குடியிருக்கின்றார், காடு மலை […]

சுப்பிரமணிய புஜங்கம் : 02 / 06

(இரண்டாம் முதல் ஏழாம் ஸ்லோகம் வரை) இரண்டாம் ஸ்லோகம் “ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மேமுகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம்” இந்த பாடல் வரியினை பிரித்து பொருளை காணலாம். “ந ஜானாமி சப்தம்”, பகவானே எனக்கு ஒரு வார்த்தை கூட பதமாக நயமாக‌ பேச தெரியாது, “ந ஜானாமி சார்த்தம்” பொருளின் அர்த்தம் புரியாது, “ந ஜானாமி பத்யம்”, இலக்கண மரபுபடி யாப்பும் அறியேன், […]

சுப்பிரமணிய புஜங்கம் : 01 / 06

முன்னுரை & கடவுள் வாழ்த்து ஸ்லோகம் 01 முருகப்பெருமான்  பக்தியில் முக்கியமான வழிபாட்டு பாடல் இந்த சுப்பிரமணிய புஜங்கம். இது மகா அவதாரமான ஆதிசங்கரப் பெருமானால் அருளப்பட்டது. இதற்கு ஒரு பின்னணி வரலாறும் உண்டு. அவதாரங்களும் சோதனையில் சிக்கும், அதற்கு காரணம் அந்த சோதனையால் அவர்கள் பெரும் தத்துவத்தை உலகுக்கு கொடுக்க வேண்டும், பெரும் போதனையினை உலகுக்கு அறிவிக்கவேண்டும் என்பதே எல்லா அவதாரங்களுக்கும் எல்லா தேர்ந்தெடுக்கபட்ட ஆத்மாக்களுக்கும், புண்ணிய ஆத்மாக்களுக்கும் பெரும் பெரும் சோதனை வரும், அதெல்லாம் […]

தேவி மஹாத்மியம் : 12 / 13 (இறுதி பகுதி)

(தேவி மஹாத்மியத்தை படித்து அதில் சொல்லபட்ட துதிகளால் அதாவது வானோரும், தேவர்களும் எப்படி தன்னை கொண்டாடி துதித்தார்களோ அப்படி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும், என்னென்ன ஐஸ்வர்யமெல்லாம் கைகூடும் என்பதை அன்னை தானே சொல்கின்றாள். விஜயதசமியில் இந்த வார்த்தைகளை, அன்னை தேவியே நமக்கு தந்த வார்த்தைகளை தியானித்து வழிபட்டு அவளிடம் வரம்பெற்று கொள்ளுதல் அவசியம்.) இந்த தியானத்தோடு தொடங்கலாம். “கத்தி, கேடயம் ஏந்தி சேவை செய்யும் எண்ணற்ற பெண்களால் சூழப்பட்டு, சக்கரம், கதை, கத்தி, கேடயம், அம்பு, […]

தேவி மஹாத்மியம் : 11 / 13 – தேவீ ஸ்துதி

(அசுர கூட்டம் ஒழிக்கபட்டு தேவி பெரும் வெற்றிபெற்ற அந்த நாள், அந்த பத்தாம் நாள் விஜய தசமி. தேவியின் மாஹாத்மியம் அந்த விஜயதசமி காட்சிகளையும் சொல்கின்றது. தேவர்கள் தேவியினை போற்றியது போல நாமும் போற்றி இந்நாளில் வழிபடலாம்) “ஸர்வமங்கல-மாங்கல்யே சிவே ஸர்வார்த்த-ஸாதிகே | சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே” எல்லா மங்களங்களிலும் மங்களப் பொருளாய் விளங்குபவளே! எல்லா நன்மைகளையும் அளிப்பவளே ! எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்விப்பவளே! சரணடைதற் குரியவளே! மூன்று கண்களை யுடையவளே! நாராயணீ […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications