காளிதாசனின் சாகுந்தலம் : 33
காளிதாசனின் சாகுந்தலம் : 33 சொன்னவன் சாகுந்தலை முன் வெட்டிய மரம்போல் வீழ்ந்து கிடந்தான். அவன் கைகள் அவள் பாதம் பற்றின, தெய்வ விக்ரகமொன்று தன் முன் சாய்ந்து கிடப்பதைப் போல் பதறிய சாகுந்தலை மண்டியிட்டு தன் முகத்தை மூடிக்கொண்டே அழுதுச் சொன்னாள். “என் தெய்வமே என்ன செய்கின்றீர், என்னுடைய வல்வினையோ இக்கொடுமையெல்லாம் நான் காண்பது? என் வாழ்வே என் அன்பே இது தகுமோ, நான் மன்னிப்புக் கேட்க வேண்டிய இடத்தில் என்னைத் தேடிவந்து நீர் கேட்பதென்ன? […]