பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காளிதாசனின் சாகுந்தலம் : 12

காளிதாசனின் சாகுந்தலம் : 12 சாகுந்தலையினை அவள் நிலையறிந்து அவளை துஷ்யந்தனிடம் அனுப்ப கன்வர் ஒப்புக்கொண்டார். பெரும் மகிழ்வுடன் சம்மதித்தார். அசரீரி சொன்னதைக் கேட்டு அவர் சாகுந்தலைமேல் கோபம் கொள்ளாமல் அவளை அவன் இல்லம் அனுப்ப போகின்றார் என கேள்விப்பட்டவுடன் அனுசுயையும், பிரியம்வதையும் பெரும் மகிழ்ச்சி கொண்டார்கள். “அவள் கணவன் இல்லம் செல்கின்றாள் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி. ஆனால், நம்மைவிட்டு பிரிகின்றாள் என்பதும் கடினம் அல்லவா? ஆனால், கலங்கவேண்டாம். சிலை இல்லாவிட்டாலும் கோவில் இருக்கும். அவள் […]

காளிதாசனின் சாகுந்தலம் : 11

காளிதாசனின் சாகுந்தலம் : 11 பிரியம்வதையும் அனுசுயையும் பூஜைக்கு மலர் பறித்துக் கொண்டே பேசுகின்றார்கள். “சாகுந்தலை ஒன்றும் பெரிய தவறை செய்யவில்லை. களவழி என முன்னோர் அனுமதித்த வழிதான் அவனோடு பழகினாள். அது உள்ளத்தாலும், உடலாலும் ஆழமான உறவாகிவிட்டது. அந்த சிந்தனையில் அவள் அச்சுமுறிந்த தேர், தான் போன போக்கில் செல்லுதல் போல் குழப்பிக் கிடக்கின்றாள். என்ன சொல்கின்றாய்? அரசர் துஷ்யந்தன் இங்கு தன் கடமையெல்லாம் முடித்து, வேள்வி காத்துவிட்டு பொய்க்காதமொழி சொல்லும் தவசிகள் வாழ்த்த‌ ஊருக்குள் […]

காளிதாசனின் சாகுந்தலம் : 10

காளிதாசனின் சாகுந்தலம் : 10 சாகுந்தலை தன் காதல் வரிகளை தன் தோழியருக்கு பாடிக் காட்டினாள். “இரக்கமிலாதவரே, உம்முன் நான் இரக்கம் வேண்டி நிற்கின்றேன், உலக உயிர்களை உறங்கவிடாத காமதேவன் என்னை உள்ளும் புறமும் எரிக்கின்றான்; தன் ஐந்து அம்புகளால் என் ஐம்புலன்களையும் அவன் அனலாய் அம்புகளால் வதைக்கின்றான். உங்கள் உள்ளத்தையோ நான் அறியேன். ஆனால், அவனோ உடலும், உயிரும், உணர்வும், சிந்தையும் நீங்களாக இருப்பதால் உங்கள் பொருட்டு என்னை காய்ச்சுகின்றான். அவன் பகலில் சூரியனின் கதிர்களால் […]

காளிதாசனின் சாகுந்தலம் : 05

காளிதாசனின் சாகுந்தலம் : 05 (இப்போது காட்சி கொஞ்சம் மாறுகின்றது, மன்னனைத் தேடி படைகள் வந்துவிட்டன, அதனால் தவசிகள் குடிலை விட்டு சற்றுத் தள்ளி முகாம் அமைத்து தன் படைகள் மற்றும் சேவகர்களோடு தங்கியிருக்கின்றான் துஷ்யந்த மஹாராஜா. அக்காலத்தில் காட்டின் மிருகங்களைக் கட்டுப்படுத்தி மக்களைக் காக்கவேண்டியது அரசக்கடமை, இதனால் மன்னர்கள் தங்கள் பரிவாரங்களுடன் காட்டுக்குச் செல்வார்கள், அந்தப் பரிவாரத்தில் சேவக பெண்கள் முதல் படைவரை எல்லாம் உண்டு. அப்படி வந்த துஷ்யந்தன் ஒரு மானை விரட்டி இந்தத் […]

காளிதாசனின் சாகுந்தலம் : 08

துஷ்யந்தன் அந்த கானகத்தின் ஆசிரமத்தை அரக்கரிடம் இருந்து காக்க வந்துவிட்டான் என்றதும் அந்த தவகுடில் மகிழ்ந்தது, மீண்டும் தர்ப்பை புல் சேகரித்தனர், யாக குண்டம் எழுப்பினர் எங்கும் உற்சாகம் கரைபுரண்டது அப்போது தர்ப்பைபுல் அறுக்க தயாரான பெண் சொன்னாள் “எவ்வளவு வியப்பு?, எவ்வளவு மகிழ்ச்சி?, வல்லாளன் வில்லாளன் துஷ்யந்தனே வந்து நமக்கு காவல் இருக்கின்றான், வலிமையின் மாட்சிக்கு சிகரமான அவனே வந்தபின் நம் பயம் எங்கே போயிற்று? முன்பு இந்த அரக்கரை கண்டால் புலிகண்ட மான்கூட்டம் போல் […]

காளிதாசனின் சாகுந்தலம் : 07

பாகனும் துஷ்யந்தனும் பேசிகொண்டிருக்கையில் ஏவலாள் வந்து மன்னனை வணங்கி இருமுனிவர்கள் அவனை தேடி காண வந்த செய்தியினை சொல்கின்றார்கள் காலத்தை கடத்திடாமல் அவர்களை உடனே வரசொல் என்ற மன்னன், அவர்கள் வந்ததும் எழுந்து வரவேற்றான் அவன் அழகையும் தோற்ற பொலிவினையும் கண்ட முனிவர் இன்னொருவரிடம் சொன்னார் “இவர் தேஜஸ் சூரியன் போல் தகதக்கின்றது ஆனால் கண்குளிர பார்க்கும் நிலவு போல் சுடர்விடுகின்றது தவயோகத்தில் நிறைந்து பழுத்த கணல் போன்ற மேனிகொண்ட முனிவர்க்கும் இவருக்குமான ஒற்றுமைகள் அதிகம், வேறுபாடு […]

காளிதாசனின் சாகுந்தலம் : 06

வேட்டையினை நிறுத்திய துஷ்யந்தன் தொடர்ந்து சொல்கின்றான். “கொடிய காட்டுத்தீ புயல் காற்றோடு சேர்ந்து சுற்றி வளைத்து எரிப்பதைப் போல, வேட்டைக்காக எந்த உயிரையும் தப்ப விடாதபடி காட்டை வளைத்த நம் படைகள் அதனை கைவிட்டு அமைதியாக திரும்பட்டும். சிங்கத்தின் கம்பீரம் போல் மாட்சிமை மிக்கவர்களும், சினம் தவிர்த்தவர்களுமான தூய துறவிகள் வாழுமிடம் இது. அவர்கள் கோபத் தீயினை மூட்டும் வண்ணம் எந்த செயலும் செய்ய கூடாது தளபதியே. துறவிகள் சினம் கொள்ளாதவர் போல் சாந்தமே உருவானவர்களாக தோன்றினாலும், […]

காளிதாசன் சாகுந்தலம் : 06

(இப்போது காட்சி கொஞ்சம் மாறுகின்றது, மன்னனை தேடி படைகள் வந்துவிட்டன, அதனால் தவசிகள் குடிலை விட்டு சற்று தள்ளி முகாம் அமைத்து தன் படைகள் மற்றும் சேவகர்களோடு தங்கியிருக்கின்றான் துஷ்யந்த மஹாராஜா அக்காலத்தில் காட்டின் மிருகங்களை கட்டுபடுத்தி மக்களை காக்கவேண்டியது அரச கடமை, இதனால் மன்னர்கள் தங்கள் பரிவாரங்களுடன் காட்டுக்கு செல்வார்கள், அந்த பரிவாரத்தில் சேவக பெண்கள் முதல் படைவரை எல்லாம் உண்டு அப்படி வந்த துஷ்யந்தன் ஒரு மானை விரட்டி இந்த தவசிகள் குடிலுக்கு வந்து […]

காளிதாசனின் சாகுந்தலம் : 04

சாகுந்தலையின் பூர்வீகம் குறித்து துஷ்யந்தன் கேட்க அதற்கு பதில் சொல்ல தொடங்கினாள் அனுசுயை “அய்யா, கௌசிக குலத்தில் வந்தவரும் பெரும் மன்னனும், கீர்த்திநிரம்பிய ராஜமுனிவராகவும் ஒருவர் இருக்கின்றார் அல்லவா? “ “ஆமாம், கேள்விபட்டது உண்டு” என்றான் துஷ்யந்தன் அனுசுயை சொன்னாள், “அவர்தான் எங்கள் அன்புக்குரியவளும் அழகு நிரம்பியவளுமான இந்த சகுந்தலையின் தகப்பனார், பெற்றெடுத்த தகப்பனார் . தவறவிட்ட அழகான மணிமாலை போல் தனித்துவிடபட்ட இவளை கன்வமுனிவர் எடுத்து வளர்க்கின்றார் , கேட்பாரற்று கிடந்த் ஒரு பெண்குழந்தையினை எடுத்துவளர்த்த […]

காளிதாசனின் சாகுந்தலம் : 03

சாகுந்தலை குனிந்து செடிகளுக்கு நீரூற்றும் அழகில் சொக்கிவிட்டான் துஷ்யந்தன், பொன்னிறமான அழகிய குட்டி மேகம் வானவில் மின்ன இறங்கி வந்து ஒரு செடிக்கு மட்டும் மழை பொழிவது போல் அவள் நீருற்றி கொண்டிருந்தாள. அவன் மயங்கி கொண்டிருந்தான் அந்த மயக்கத்திலே தன் குழப்பத்தையும் அந்த குழப்பத்தின் முடிவினையும் மனதிடம் சொன்னான் புயல்காற்று அலைகழித்த மரகலம் போல் அவள் அவனை உலுக்கியிருந்தாள், பெரிய அலை ஒன்று வீசியடித்த படகு கரையில் கிடப்பது போல் அவன் மனம் சலனற்று கிடந்தது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications