பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காளிதாசனின் மேகதூதம் : 06

ஐந்தாம் பத்து ஸ்லோகங்கள் “மேகமே, அடர்ந்த இரவில் வழி தெரியாமல் தடுமாறிய விலைமாந்தருக்கு நீ உன் மின்னலால் வெளிச்சம் கொடுத்து வழிகாட்டியதில் மிகவும் களைத்திருப்பாய், அதனால் உஜ்ஜைனி நகரின் மாடங்களில் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கோள் அந்நகரின் மாட மாளிகையில் புறாக்கள் கூடுகட்டி வசிக்கும், அவை உறங்கும் நேரம் நீயும் அங்கே கொஞ்சம் இளைப்பாறி களைப்பு நீங்கி எழுவாய், என் நண்பனான் நீ எனக்கு உதவி செய்யவேண்டி இருப்பதால் அதிகம் அங்கே தங்காமல் விரைந்து செல்ல முயலுவாயாக‌ மேகமே, அந்நகரின் […]

காளிதாசனின் மேகதூதம் : 05

நான்காம் பத்து ஸ்லோகங்கள் “மேகமே உஜ்ஜைனியினை நீ நெருங்கும்போது சிப்ரா என்ற நதியினை காண்பாய், அதிகாலை வேளையில் அந்த நதியின் குளிர்காற்று நகரை நோக்கிவீசும், கரையோரம் உள்ள மரங்களில் இருந்தும், நதிமேல் ஆடி திரியும் நீர்பறவைகளின் சத்தங்களையும் அந்த ஈரம் நிறைந்த கனமான காற்று நீண்ட தூரம் எடுத்து செல்லும் நதியோரம் மலர்ந்த தாமரை உள்ளிட்ட மலர்களின் மணம் கலந்த அந்த காற்று நகரத்தையே மணம் கமழசெய்யும் உஜ்ஜைனி நகரில் மறுபடியும் மறுபடியும் தன் காதலியோடு கூட […]

காளிதாசனின் மேகதூதம் : 04

மூன்றாம் பத்து ஸ்லோகங்கள் “மேகமே, நீ வான்வழியே செல்லும் போது ஸித்திகள் எனும் தேவலோகத்தவர் தங்கள் துணையுடன் உன் எதிரில் சஞ்சரிப்பர், உன்னை கண்டதும் சாதகபறவைகளெல்லாம் நீ சிந்தும் துளிகளை பருகவேண்டி உனக்கு கீழே தாழபறக்கும் இரக்கமும் கருணையும் கொண்ட நீ அவைகள் தாகம் தீர்க்க சில துளிகளை வீசுவாய், அப்போது அவை வானில் பறந்தபடியே அந்த துளிகளை அருந்தும், அவை பறந்தபடி தங்கள் அலகுகளால் அழகாக நீர்துளிகளை அருந்துவதை காணும் ஸித்தர்கள் தங்கள் துணையோடு ஆச்சரியபடுவார்கள், […]

காளிதாசனின் மேகதூதம் : 03

இரண்டாம் பத்து ஸ்லோகங்கள் மேகமே, நீ உன் பயணத்தை தொடங்கும் முன்னால் ராமபிரானின் காலடியால் புனிதமடைந்தததும், உன் நண்பனுமான‌ இந்த சித்திரக்கூட மலையினைத் தழுவி விடை கொள்வாய். ராமனின் கால்பட்ட இந்த மலையினைத் தழுவ நீ தவம் செய்தவனுமாவாய். ராமபிரான் மகா புனிதமானவன். அவன் கால்பட்ட தூசுகூட புனிதமானது எனும்போது இந்த மலை எவ்வளவு புண்ணியமானது. நீ வருடம் ஒருமுறைதான் இவனை சந்திக்கின்றாய். பத்துமாதம் அம்மலை உன்னை பிரிந்திருக்கின்றது. அதனால் அந்த மலையினை அணைத்து கண்ணீர்விட்டு உன் […]

காளிதாசனின் மேகதூதம் : 02

முதல் பத்து ஸ்லோகங்கள் கொழித்த செல்வத்தில் மிதப்பதும், சுவரையும் பொன்னால் கொண்ட‌ அலகாபுரி பட்டணத்தின் வேந்தன் குபேரன் இட்ட சாபத்தால் மனைவியினை சில காலம் பிரிந்து தொலை தூரம் சென்ற யட்சன் ஒருவன், பரிகாரம் தேடித் தனித்து தவித்து நின்றான். அன்னை சீதையின் ஸ்நானத்தால் புனிதமான நதியோடும் சித்திரகூட மலையில் நின்றான். தன் தெய்வ சக்தியும், பெரும் செல்வமும், மின்னல்போல் அழகானவளும் அன்பு நிறைந்தவளுமான தன் காதலியினையும் ஒரே நேரம் இழந்து புலம்பி நின்றான். தன் ஆத்மாவில் […]

காளிதாசனின் மேகதூதம் : 01

முன்னுரை காளிதாசனின் விக்ரமோர்வ‌சியம் என்பதன் தமிழாக்கத்தை நாம் எழுதவில்லை. அது அரவிந்தரால் ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்டதன் தமிழ் வடிவம். அதுவும் இன்னொரு தளத்தில் வந்தது.  படிக்க நன்றாக இருந்ததால் நாம் சில பாகங்களை இங்கே சொன்னோம். அது பலருக்கு புரியவில்லை என்றார்கள்.  சிலர் காளிதாசனின் காவியங்களை சொல்லமுடியுமா என்றார்கள். அவன் பெரும் கடல், எழுதிக் குவித்தவை ஏராளம்.  அதையெல்லாம் எழுத தனிவாழ்வு வேண்டும். அவனின் உவமை அழகு, அந்த உவமையில் சொல்லும் ஆழ்ந்த வாழ்க்கை தத்துவம் அழகு, வர்ணனை […]

சுப்பிரமணிய புஜங்கம் : 06 / 06

(இருபத்தியாராவது முதல் முப்பத்து மூன்றாம் (இறுதி) ஸ்லோகம் வரை) கந்த சஷ்டி நாட்கள் என்பவை சூரசம்ஹாரத்தோடு மட்டும் முடிவதல்ல, ஏழாம் நாள் மிக முக்கியமானது. அன்றுதான் திருகல்யாணமெல்லாம் நடக்கும், முருகப்பெருமான் பெரும் அருள் புரிவார். இன்று தான் அவர் வரமருளும் நாள். திருக்கல்யாணம் என்பது லவுகீக சிந்தனைபடி மணவாழ்வு என்றாலும், ஆன்மீக போதனைப்படி முருகப்பெருமான் எனும் பரமாத்வோடு மானிட ஜீவாத்மா கலந்து நிற்கும் தருணம் அதாவது பரம்பொருள் மானிட ஆத்மா மேல் எவ்வளவு அன்புகொண்டு அதனை தன்னொடு […]

சுப்பிரமணிய புஜங்கம் : 05 / 06

(இருபதாம் முதல் இருபத்தைந்தாம் ஸ்லோகம் முடிய) இதுவரை முருகனின் ஆலயம், முருகப்பெருமானின் அழகான கோலம் என உருகிப் பாடிய ஆதிசங்கரப் பெருமான் இப்போது மனக்கவலையால் ஏற்படும் நோய், பூர்வ ஜென்ம கர்மாவினால் ஏற்படும் நோய், சூழலால் ஏற்படும் நோய் என மூவகை நோய்களையும் முருகப்பெருமான்  தீர்த்து வைப்பான், அவன் ஒருவனாலேயே பூர்வ ஜென்ம வினைகளையும் விதியினையும் மாற்றிவைக்க முடியும் என உருகிப் பாடி நிற்கின்றார் சங்கரர். இது அவருக்காக மட்டும் பாடிய பாடல் அல்ல, நோயுற்றிருக்கும் எல்லா […]

சுப்பிரமணிய புஜங்கம் : 04 / 06

(பதினான்காம் முதல் பத்தொன்பதாம் ஸ்லோகம் முடிய) பதினான்காம் ஸ்லோகம் “ஸ்புரன் மந்தஹாஸை ஸஹம்ஸானி சஞ்சத்கடாக்ஷாவலீப்ருங்க ஸங்கோ ஜ்வலானிஸுதாஸ்யந்தி பிம்பா தரணீச ஸூனோதவாலோகயே ஷண்முகாம் போரு ஹாணி” முதல்வரி “ஸ்புரன் மந்த ஹாஸ ஸ ஹம்ஸானி சஞ்சத்” அதாவது என்றால் மின்னுதல் / ஜொலித்தல் என பொருள், சுப்பபுரமணி என முருகனுக்கு சமஸ்கிருத பெயர் வந்தது இப்படித்தான், மணிபோல மின்னுபவன் என பொருள் மந்த ஹாஸ என்றால் புன்முறுவல், ஸ என்றால் உடன், ஹம்ஸா என்றால் அன்னம், சஞ்சல் […]

சுப்பிரமணிய புஜங்கம் : 03 / 06

(எட்டு முதல் பதிமூன்று வரையான ஸ்லோகங்கள்) சுப்பிரமணிய புஜங்கத்தில் மிக அழகான அணுகுமுறையினை நேரடியாகவும் சூசகமாகவும் போதிக்கின்றார் ஆதிசங்கரர். முதலில் திருச்செந்தூரின் கடற்கரை, கந்தமலை எனச் சொல்லும் சங்கரர் பின் முருகப்பெருமானின் அழகிய‌ தோற்றத்தை 8ம் ஸ்லோகத்தில் இருந்து விளக்கத் தொடங்குகின்றார் அதன் அர்த்தம் காடு, மலை,கடற்கரை என எங்கெல்லாமோ ஓடி இறைவனை தேடுவவோர் தங்கள் மனக்கண்ணில் இறைவனை காணும்படி தியானிக்க வேண்டும் என்பது இறைவன் எல்லா இடத்திலும் இருக்கின்றார் அப்படியே மனதிலும் குடியிருக்கின்றார், காடு மலை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications