பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சுப்பிரமணிய புஜங்கம் : 02 / 06

(இரண்டாம் முதல் ஏழாம் ஸ்லோகம் வரை) இரண்டாம் ஸ்லோகம் “ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மேமுகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம்” இந்த பாடல் வரியினை பிரித்து பொருளை காணலாம். “ந ஜானாமி சப்தம்”, பகவானே எனக்கு ஒரு வார்த்தை கூட பதமாக நயமாக‌ பேச தெரியாது, “ந ஜானாமி சார்த்தம்” பொருளின் அர்த்தம் புரியாது, “ந ஜானாமி பத்யம்”, இலக்கண மரபுபடி யாப்பும் அறியேன், […]

சுப்பிரமணிய புஜங்கம் : 01 / 06

முன்னுரை & கடவுள் வாழ்த்து ஸ்லோகம் 01 முருகப்பெருமான்  பக்தியில் முக்கியமான வழிபாட்டு பாடல் இந்த சுப்பிரமணிய புஜங்கம். இது மகா அவதாரமான ஆதிசங்கரப் பெருமானால் அருளப்பட்டது. இதற்கு ஒரு பின்னணி வரலாறும் உண்டு. அவதாரங்களும் சோதனையில் சிக்கும், அதற்கு காரணம் அந்த சோதனையால் அவர்கள் பெரும் தத்துவத்தை உலகுக்கு கொடுக்க வேண்டும், பெரும் போதனையினை உலகுக்கு அறிவிக்கவேண்டும் என்பதே எல்லா அவதாரங்களுக்கும் எல்லா தேர்ந்தெடுக்கபட்ட ஆத்மாக்களுக்கும், புண்ணிய ஆத்மாக்களுக்கும் பெரும் பெரும் சோதனை வரும், அதெல்லாம் […]

தேவி மஹாத்மியம் : 12 / 13 (இறுதி பகுதி)

(தேவி மஹாத்மியத்தை படித்து அதில் சொல்லபட்ட துதிகளால் அதாவது வானோரும், தேவர்களும் எப்படி தன்னை கொண்டாடி துதித்தார்களோ அப்படி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும், என்னென்ன ஐஸ்வர்யமெல்லாம் கைகூடும் என்பதை அன்னை தானே சொல்கின்றாள். விஜயதசமியில் இந்த வார்த்தைகளை, அன்னை தேவியே நமக்கு தந்த வார்த்தைகளை தியானித்து வழிபட்டு அவளிடம் வரம்பெற்று கொள்ளுதல் அவசியம்.) இந்த தியானத்தோடு தொடங்கலாம். “கத்தி, கேடயம் ஏந்தி சேவை செய்யும் எண்ணற்ற பெண்களால் சூழப்பட்டு, சக்கரம், கதை, கத்தி, கேடயம், அம்பு, […]

தேவி மஹாத்மியம் : 11 / 13 – தேவீ ஸ்துதி

(அசுர கூட்டம் ஒழிக்கபட்டு தேவி பெரும் வெற்றிபெற்ற அந்த நாள், அந்த பத்தாம் நாள் விஜய தசமி. தேவியின் மாஹாத்மியம் அந்த விஜயதசமி காட்சிகளையும் சொல்கின்றது. தேவர்கள் தேவியினை போற்றியது போல நாமும் போற்றி இந்நாளில் வழிபடலாம்) “ஸர்வமங்கல-மாங்கல்யே சிவே ஸர்வார்த்த-ஸாதிகே | சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே” எல்லா மங்களங்களிலும் மங்களப் பொருளாய் விளங்குபவளே! எல்லா நன்மைகளையும் அளிப்பவளே ! எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்விப்பவளே! சரணடைதற் குரியவளே! மூன்று கண்களை யுடையவளே! நாராயணீ […]

தேவி மாஹாத்மியம் : 10 / 13 – சும்ப நிசும்ப வதம்

த்யானம் – தேவி துதி “ஓம். முக்கண் உடையவளும், சாம்பல் நிறமான பந்தூக புஷ்பத்தின் நிறத்துடன், உருக்கிய தங்கமாய் ஜொலிப்பவளும், கைகளில் பாசம், அங்குசம், புஷ்பபானம் கொண்டு அபய முத்திரையுடன், அந்த அர்த்தநாரீஸ்வரரின் பாதியாகவும், மூன்று கண்களுடன் பிறை சந்திரனையே தன் ஆபரணமாக்கி கொண்ட என் தாயை இரவு பகலுமாக எந்நேரமும் போற்றி வணங்குகிறேன். ஓம். தீயில் சுடப்பட்ட பசும்பொன்னாய் மிளிர்ந்து, சூரியன், சந்திரன், அக்னி ஆகிய தேவர்களையே தன் முக்கண்களாய் கொண்டு, அழகிய கரங்களில் பாசம், […]

தேவி மாஹாத்மியம் : 09 / 13 – ரக்த பீஜ வதம்

த்யானம் – தேவி துதி “செந்நிற மேனி கொண்டு அலை அலையாய் கருணை பொழியும் ப்ரகாசத்துடன் கூடிய மிக அழகான கண்களைக்கொண்டு, கையில் பாசம், அங்குசம், வில், மலர் அம்புகளை ஏந்தி, தன் கிரணங்களாலேயே அனைவரையும் கவர்ந்து, அனிமா, மகிமா போன்ற அஷ்டமா ஸித்திகளை தன்னுள் நிறுத்தி என்னுள் நிறைந்த பைரவியை நான் வணங்குகிறேன்” சண்டனுங் கொல்லப்பட்டு முண்டனும் வீழ்த்தப் பட்டு, சைனியமும் வெகுவாக நாசமாக்கப்பட்டபின் பிரதாபம் மிக்க அசுர ராஜனான சும்பன் கோபத்தால் மதிகெட்டு, அசுரர் […]

தேவி மஹாத்மியம் : 08 / 13 – சண்ட முண்ட வதம்

த்யானம் – தேவி துதி “சிரசில் பிறை சந்திரனை சூடியவளும், நெற்றியில் கலை நுட்பத்துடன் கூடிய திலகம் அணிந்தவளும் மென்மையான மதத்துடன் கூடிய புன்சிரிப்பு தவழும் அழகிய முகம் உடையவளும், உடலோடு ஒட்டிய சிவந்த நிற பட்டாடை, ஆம்பல் பூமாலை தரித்தவளும், கையில் சங்கு பாத்திரத்துடன், தாமரையின் மீது காலை பதித்தபடி கிளிகளின் இனிய மொழியை கேட்டவாறே கைகளால் வீணையை வாசித்துக் கொண்டு, நவரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அம்ருதமயமான ராஜமாதங்கியை நான் த்யானிக்கிறேன்.” அங்ஙனம் கட்டளையிடப்பட்ட சண்டமுண்டர்கள் […]

தேவி மஹாமித்யம் : 07 / 13 – தூம்ரலோசன வதம்

த்யானம் – “நாகங்களின் தலைவனான நாகராஜனை குடையாகக் கொண்டவளும், தனது கொடி போன்ற மேனியில் விலைமதிப்பற்ற நாகரத்தினங்களாலான நாகாபரணங்களை அணிந்தவளும், சூரிய கதிர்களை போல் ஒளிரும் முக்கண்களை உடையவளும், ஜெபமாலை, அமிர்த கலசம், கபாலம் மற்றும் தாமரையைக் கைகளில் ஏந்தியவளும், தலையில் பிறை சந்திரனை சூடியவளும், தர்பையை ஆசனமாக கொண்ட பைரவரின் மடியில் அமர்ந்து காட்சியளிப்பவளுமான பத்மாவதி தாயை நான் தியானிக்கிறேன்” தேவி சும்பனுக்கு கூறிய பதிலை தூதன் சென்று தெரிவித்தான், தேவி தங்களை போருக்கு அழைத்தது […]

தேவி மஹாமித்யம் : 06 / 13 – தேவீ தூத ஸம்வாதம் (தூதனுடன் உரையாடல்)

“மஹாஸரஸ்வதீ தியானம்” மணி, சூலம், கலப்பை, சங்கம், உலக்கை, சக்கரம், வில் அம்பு ஆகியவற்றைத் தனது தாமரைக் கைகளில் தரிப்பவளும், மேகத்திடை விளங்கும் குளிர்ந்த சந்திரனைப் போன்ற பிரபையுடன் பிரகாசிப்பவளும், கௌரியின் தேகத்திலுதித்தவளும், மூவுலகிற்கும் ஆதாரமாகியவளும், அபூர்வ வடிவினளும், சும்பன் முதலிய அசுரர்களை நாசஞ் செய்தவளும் ஆகிய மஹா ஸரஸ்வதியைத் தியானிக்கின்றேன். முன்னொருகால் சும்பன், நிசும்பன் என்ற அசுரர்களால் இந்திரனுடைய மூவுலக ஆட்சியும் யஜ்ஞபாகங்களும் பலத்தாலும் கொழுப்பாலும் அபகரிக்கப்பட்டன. சூரியன், சந்திரன், குபேரன், யமன், வருணன் முதலியோருடைய […]

தேவி மஹாத்மியம் : 05 / 13 – தேவி துதி (அபராஜித ஸ்துதி)

“முப்பத்து முக்கோடி தேவர்களால் சூழப்பட்டவளும், ஜயத்தை விரும்பும் பக்தர்களால் ஆராதிக்கப்பட்டவளும், தனது ஒளியால் மூவுலகங்களிலும் இருளை அகற்றுபவளும், தனது கடைக்கண் பார்வையால் எதிரிகளின் மனதில் அச்சத்தை உண்டாக்குபவளும், தீயனவற்றை தூசு போல சுட்டெரித்து ஒளிர்பவளும், கரங்களில் சங்கு, சக்கரம், வாள், திரிசூலம் ஆகியவற்றை ஏந்தி, சிரசில் பிறைசந்திரனை சூடியவளும், மூன்று கண்களையுடையவளும், சிங்கத்தின் மீது அமர்ந்தவளுமான ஜயா என்ற பெயருடைய துர்க்கையை நான் தியானிக்கிறேன்” வீரியம் மிக்கவனாயினும் துராத்மாவாகிய அம்மஹிஷாசுரனும் அவ்வசுரச்சேனையும் தேவியால் அழிக்கப்பட்ட பின் தேவேந்திரனும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications