பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மதுரை சித்திரைத் திருவிழா

இந்திய இந்து விழாக்களில் பிரசித்தியானதும், தமிழக இந்து விழாக்களில் மாபெரும் கூட்டம் கூடுவதுமான அந்த‌ மதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டு மிக உற்சாகத்துடன் கொண்டாடபடுகின்றது, இன்று கொடியேற்று விழா மதுரை என்பது சாதாரண நகரம் அல்ல, மதுரை உலகின் மிகபழமையான நகரங்களில் ஒன்று கிரேக்கத்தின் ஏதென்ஸ், இத்தாலியின் ரோம், அரேபியாவின் பாக்தாத் , இஸ்ரேலின் ஜெரிக்கோ, சிரியாவின் டாமாஸ்கஸ், எகிப்தின் எல்காப், எஸ்னா சீனாவின் பிஜிங் போன்ற நகரங்களை விட மிக பழமையானது இந்தியாவின் காசி […]

சித்திரை பவுர்ணமியும் முருகப்பெருமான் வழிபாடும்

பசுமலை, முக்குணம் மற்றும் ஈசூர் முருகன் ஆலயங்கள் சித்திரை பௌர்ணமி என்பது இந்துக்களுக்கு மகா விசேஷமானது, அது ஆகர்ஷன சக்திகள் சூட்சும சக்திகள் நிறைந்த நன்னாள். அந்நாளில் மலைமேல் இருக்கும் தங்களை தரிசித்தல் நன்று, முன்பு மலையில் இருக்கும் கண்ணகி தேவியின் ஆலய கொண்டாட்டமெல்லாம் அப்படித்தான் உருவானது, இன்றும் கேரள எல்லையில் அந்த கொண்டாட்டம் உண்டு சித்திரை பவுர்ணமி அன்று சித்தர்கள் வழிபாடும் முருகப்பெருமான் வழிபாடும் அவசியம், முருகப்பெருமான் இருக்குமிடமெல்லாம் சித்தர்களும் இருப்பார்கள் அதனால் அந்த வழிபாடு […]

காளிதாசனின் சாகுந்தலம் : 05

சாகுந்தலையின் பூர்வீகம் குறித்து துஷ்யந்தன் கேட்க அதற்கு பதில் சொல்ல தொடங்கினாள் அனுசுயை “அய்யா, கௌசிக குலத்தில் வந்தவரும் பெரும் மன்னனும், கீர்த்திநிரம்பிய ராஜமுனிவராகவும் ஒருவர் இருக்கின்றார் அல்லவா? “ “ஆமாம், கேள்விபட்டது உண்டு” என்றான் துஷ்யந்தன் அனுசுயை சொன்னாள், “அவர்தான் எங்கள் அன்புக்குரியவளும் அழகு நிரம்பியவளுமான இந்த சகுந்தலையின் தகப்பனார், பெற்றெடுத்த தகப்பனார் . தவறவிட்ட அழகான மணிமாலை போல் தனித்துவிடபட்ட இவளை கன்வமுனிவர் எடுத்து வளர்க்கின்றார் , கேட்பாரற்று கிடந்த் ஒரு பெண்குழந்தையினை எடுத்துவளர்த்த […]

காளிதாசனின் சாகுந்தலம் : 04

சாகுந்தலை குனிந்து செடிகளுக்கு நீரூற்றும் அழகில் சொக்கிவிட்டான் துஷ்யந்தன், பொன்னிறமான அழகிய குட்டி மேகம் வானவில் மின்ன இறங்கி வந்து ஒரு செடிக்கு மட்டும் மழை பொழிவது போல் அவள் நீருற்றி கொண்டிருந்தாள. அவன் மயங்கி கொண்டிருந்தான் அந்த மயக்கத்திலே தன் குழப்பத்தையும் அந்த குழப்பத்தின் முடிவினையும் மனதிடம் சொன்னான் புயல்காற்று அலைகழித்த மரகலம் போல் அவள் அவனை உலுக்கியிருந்தாள், பெரிய அலை ஒன்று வீசியடித்த படகு கரையில் கிடப்பது போல் அவன் மனம் சலனற்று கிடந்தது […]

திருமுருகாற்றுப்படை : 19

(290 முதல் 300 வரை உள்ள வரிகள்) “மணங்கமழ் தெய்வத்து இளநலங் காட்டிஅஞ்சல் ஓம்புமதி; அறிவல்நின் வர’வெனஅன்புடன் நன்மொழி அளைஇ விளிவின்றுஇருள்நிற முந்நீர் வளைஇய உலகத்துஒருநீ யாகித் தோன்ற விழுமியபெறலரும் பரிசில் நல்கும் அதி பலவுடன் . . வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்துஆர முழுமுதல் உருட்டி வேரற்பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டுவிண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்ததண்கமழ் அலரிறால் சிதைய நன்பல” இனி பாடலின் பொருளைக் காணலாம். “மணங்கமழ் தெய்வத்து இளநலங் காட்டி” என வரும். மணமும் […]

திருமுருகாற்றுப்படை : 18

(271 முதல் 289 வரை உள்ள வரிகள்) “அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்!மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப்பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்!பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்!சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி போர்மிகு பொருந! குரிசில்!’ எனப்பலயானறி அளவையின் ஏத்தி ஆனாது நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்நின்னடி உள்ளி வந்தனென்; நின்னொடுபுரையுநர் இல்லாப் புலமை யோய்!’எனக் குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன்வேறுபல் உருவின் குறும்பல் கூளியர்சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றி,‘அளியன் றானே முதுவாய் இரவலன் வந்தோன்பெரும!நின் வண்புகழ் நயந்தெனஇனியவும் […]

திருமுருகாற்றுப்படை : 17

(261 முதல் 270 வரையான வரிகள்) “மாலை மார்ப நூலறி புலவிசெருவில் ஒருவ பொருவிறல் மள்ளஅந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலைமங்கையர் கணவ மைந்தர் ஏறேவேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்துவிண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவபலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறேஅரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருகநசையுநர்க்கு ஆர்த்தும் இசைபே ராள” “மாலை மார்ப” என்றால் மாலை அணிந்த மார்பை உடையவன் எனப் பொருள். முருகப்பெருமான் எப்போதும் வெற்றிமேல் வெற்றி பெறுபவன். அதனால் புத்தம் புது மாலைகளை […]

காளிதாசனின் சாகுந்தலம் : 03

“பாகனே , தன்னுள் இருக்கும் இறைவனை கண்டு அடைந்த முனிவர்கள் இருக்கும் இந்த குடிலை நான் சென்று அடைந்து, என்னை இழந்து இறைவனை அறிய முயல போகின்றேன்” என விடைபெற்ற துஷ்யந்தன் முனிவரின் குடில் நோக்கி சென்றான் இது துறவியரின் பூங்காவனம், துறவுநெறி சுரங்கம், இந்த இடத்துக்கு வந்ததே என் நல்வினை என்றபடி குடில் படியில் காவ்லைத்த அவன் ஒரு மாற்றம் உணர்ந்தான் ஆம், அவன் தன் வலது கண்ணும் வலது தோளும் துடிக்க கண்டான், அது […]

சப்த கன்னியர் – 08

சாமுண்டி – ஏழாம் கன்னிதெய்வம் சப்த கன்னியரில் முதலில் தோன்றியவளும் அதிசக்திவாய்ந்தவளுமானவள் இந்த சாமுண்டி, இவள் அதிசக்தி மிக்கவள் மிகபெரிய வடிவாய் எல்லா வகையிலும் காவல் இருப்பவள் இந்த தேவி பற்றி குமர குருபரர் சொல்கின்றார் அதாவது “கடகளிறு உதவு கபாய் மிசைப்போர்த்தவள்” மத யானை தந்த தோல் ஆகிய நிலை அங்கியை மேலே போர்தியவள் எனப் பொருள். அதாவது அன்னை யானை வடிவில் வந்த அசுரனை அழித்து தோலை போர்த்திக் கொண்டவள் என்பது பொருள், இக்காட்சி […]

சப்த கன்னியர் – 07

இந்திராணி – ஆறாம் கன்னிதெய்வம் “க‌டிகமழ் தருமலர் தார்முடிச் சேர்த்தவள்” என அவளை குமரகுருபரர் சொல்கின்றார், அவள் எப்போதும் மணக்கும் மலர்மாலை அணிந்த இந்திரனின் சக்தி என்கின்றார். சப்த கன்னியரில் ஆறாம் தேவி இந்த இந்திராணி. இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டி அருள் வழங்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும், ஐந்தரி எனும் பெயரையும் கொண்டவள், இவரது வாகனமாகவும், கொடியாகவும் யானை இடம்பெற்றிருக்கும், தேவேந்திரனின் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications