பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சப்த கன்னியர் – 06

வராஹி தேவி – ஐந்தாம் கன்னிதெய்வம் சப்த கன்னியரில் ஐந்தாம் தேவி இந்த வராஹி. வராகம் என பகவான் விஷ்ணு அவதாரம் எடுத்து உலகை மீட்டது வராக புராணம் சொல்லும் பெரும் வரலாறு அந்த வராக பெருமானின் பெண் வடிவமாக அவதரித்தவள் இந்த அன்னை இவள் மற்ற சப்த கன்னியரில் இருந்து இவள் கொஞ்சம் வித்தியாசமானவள், அதி உச்ச பலசாலி மிருக பலம் கொண்டவள் அதே நேரம் கனிவும் அன்பும் நிரம்பிய மனம் கொண்டவள் லலிதாம்பிகையின் படைத்தலைவி […]

சப்த கன்னியர் – 05

வைஷ்ணவி தேவி – நான்காம் கன்னிதெய்வம் “கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்” என குமரகுருபரர் இந்த தேவி பற்றி சொல்கின்றார். அதாவது, கடலை கல்லால் நிரப்பி பாலம் கட்டிச் சென்றவள் என்கின்றார். ராமனின் சக்தியாக இருந்தவள் இவளே என்பது அதன்பொருள். அவ்வகையில் இவள் விஷ்ணுவின் சக்தியான வைஷ்ணவி என்கின்றார் குமரகுருபரர். அன்னையின் புராணமும் அதைத்தான் சொல்கின்றது, அன்னை விஷ்ணுவின் மார்பில் இருந்து வெளிபட்டாள் என்பது அவளின் அவதார குறிப்பு. “ஸஹஸ்ர பாஹும் புருஷம் புராணம்சயாநம் அப்தௌ லலிதா […]

திருமுருகாற்றுப்படை : 16

( 248 முதல் 260 வரையான வரிகள்) “வேண்டுநர் வேண்டியாங்கு எய்தனர் வழிபடஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறேஆண்டாண்டு ஆயினும் ஆக; காண்தக முந்துநீ கண்டுழி முகனமர்ந்து ஏத்திக்கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி,நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனைஐவருள் ஒருவன் அங்கை ஏற்பஅறுவர் பயந்த ஆறமர் செல்வ! ஆல்கெழு கடவுட் புதல்வ! மால்வரைமலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!இழையணி சிறப்பின் பழையோள் குழவி!வானோர் வணங்குவில் தானைத் தலைவ!” இனி பாடலின் பொருளைக் காணலாம். பாணனுக்கு முருகப்பெருமானின் அறுபடை […]

சப்த கன்னியர் – 03

மகேஸ்வரி – இரண்டாம் கன்னிதெய்வம் சப்த கன்னியரில் இரண்டாம் தெய்வமான மகேஸ்வரியினை காணுமுன்னால் இந்த சப்த கன்னி வழிபாடு இடையில் புகுத்தபட்டதா? யாரோ இடைசெருகல் செய்தார்கள்களா என்பதான குழப்பங்களை காணலாம் சப்த கன்னியர் வழிபாடு இங்கு கால காலமாக உண்டு, சிறிய கோவில்களின் தெய்வமாக கிராமங்களிலும் பெரிய ஆலயங்களில் சப்த கன்னியராகவும் இந்த வழிபாடு உண்டு கலிங்கத்து பரணி இந்த வழிபாட்டை சொல்கின்றது “மேதி புள் அலகை தோகை ஏறு உவணம்வேழம் என்ற கொடி ஏழுடைச்சோதி மென் […]

சப்த கன்னியர் – 04

கௌமாரி தேவி – மூன்றாம் கன்னிதெய்வம் கௌமாரம் என்றால் முருகப்பெருமானின் வழிபாட்டை குறிக்கும் சொல், அவ்வகையில் இந்த கௌமாரி தேவி என்பவள் முருகப்பெருமானின் சக்தியினை குறிப்பவள். “கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்” என குமரகுருபரர் முருகன் சூரனை அழிக்கும் போது அவள் முருகபெருமானின் சக்தியாய் இருந்தாள் என்பதை சொல்கின்றார். சப்த கன்னியரில் முன்றாம் தேவியான இந்த அன்னை முருகபெருமானின் சக்தி, அந்த ஸ்கந்தனின் இயக்கும் குமரன் எனும் கௌமாரனின் சக்தி அந்த கௌமாரி. அவள் முருகனின் அம்சம் […]

சப்த கன்னியர் – 02

பிராம்மி – முதல் கன்னிதெய்வம் இந்த பிரபஞசத்தை இயக்கும் மகா சக்திகளை ஏழுவிதமாக சக்திகளாக பிரித்து சொன்ன இந்துமதம் அவர்களை சப்த கன்னியர், சப்த மாதர்கள் என்ற அடையாளமிட்டு சொன்னது இந்த சக்திகள் இயக்கும் சக்திகள், இயங்கும் பலத்தையும் அருளையும் தரும் சக்திகள். அந்த சக்திகளின் பலத்தாலே இந்த பிரபஞ்சமமும் அண்டமும் அண்டத்தின் வடிவமான மானிட பிண்டம் எனும் மானிட உடலும் இயங்குகின்றது இந்த சக்திகளின் தோற்றம் பற்றி புராணத்தில் பல கருத்துக்கள் உண்டு, சிவன் அந்தகார […]

சப்த கன்னியர் – 01 முன்னுரை

இந்து மரபில் நான்கு நவராத்திரிகள் உண்டு. ஆடி மாதம், புரட்டாசி, தை, பங்குனி என நான்கு மாதங்களில் அவை கொண்டாடப்படும். ஆடி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வராஹி நவராத்திரி, தமிழக அம்மன் கொடை விழாக்கள் இந்த சாயலே. புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி. வழமையாக கொண்டாடப்படும் நவராத்திரி இதுதான், துர்கா பூஜை சரஸ்வதி பூஜை என கொண்டாடுவது […]

காளிதாசனின் சாகுந்தலம் : 02

அன்னை காளியின் புகழ்போல் மிகவும் பெரிதாகப் படர்ந்து உயர்ந்திருந்த ஹிமாலய மலை அது. அதன் உச்சியில் வெள்ளியினை உருக்கி ஊற்றி வைத்தது போல் பனிச் சிகரங்கள் மின்னிக் கொண்டிருந்தன‌. சூரியக்கதிர்கள் பட்டு அந்த மலைச்சிகரம் தங்கமாகவும் நவமணிகளாகவும் மாயமால ஜாலம் காட்டிக் கொண்டிருந்தது. பச்சை வர்ண புடவையினை சாற்றியது போல் மலை எங்கும் பசுமை சூழ்ந்திருந்தது. அமுதத்தை ஊற்றியது போல அருவிகள் வீழ்ந்து கொண்டிருந்தன. அந்த மலையின் எல்லா வளங்களையும் தான் சுமந்து மக்களுக்கு கொடுப்பதற்காக வார்த்தையால் […]

காளிதாசனின் சாகுந்தலம் – 01

முன்னுரை காளிதாசனின் மேகதூதம் கடந்த பதிவிலே முடிவு பெற்றுவிட்டது என்பதை தெரிவிக்கின்றோம். காளிதாசன் மேகத்திடம் தன் காதலி இருக்குமிடத்தையும் அதை அடையும் வழியினையும் சொல்லி அவளுக்கு சொல்லவேண்டிய செய்தியும் சொல்லி காவியத்தினை முடிக்கின்றார் காளிதாசர். அது மேகத்தின் வழி அழகான வர்ணனையுடன் பாரத தேசத்தின் வடபகுதியின் அழகைச் சொன்ன காவியம். வட பாரத மலைகள், நதிகள், நாடுகள் அப்படியே ஆலயங்கள், பண்டிகைகள், ஊர்கள் எனச் சொல்லி கயிலாயம் பற்றிச் சொல்லி மிக அற்புதமாக பாரதத்தை படம் பிடித்துக் […]

காளிதாசனின் மேகதூதம் : 13

பன்னிரெண்டாம் பத்து ஸ்லோகங்கள் “அன்பே, ஹிமாலயத்தில் இருந்து தெற்கே வரும் குளிர்ந்த காற்று நான் இருக்குமிடமும் வருகின்றது, அக்காற்று ஹிமாலயத்தின் தேவதாரு மரங்களின் தளிர்களை தொட்டு வரும், அப்போது அந்த மரங்களில் வடியும் பாலின் இனிமையான மணம் அதில் கலந்திருக்கும் அந்த இனிமையான மணத்தினை கொண்டு அக்காற்று ஹிமாலயத்தில் இருந்து வருவதை உறுதி செய்து கொள்கின்றேன், என் அன்பிற்கு எக்காலமும் உகந்த காதலியான‌ உன்னயும் அக்காற்று தழுவி வந்திருக்கும் என்பதால் அக்காற்றை ஆசையாய் தழுவுகின்றேன் என் அன்பே, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications