பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சரஸ்வதி அந்தாதி : 07

சரஸ்வதி அந்தாதி : 07 “பாதாம் புயத்தில் பணிவார் தமக்குப் பலகலையும்வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி வெள்ளிதழ்ப்பூஞ்சீதாம் புயத்தில் இருப்பாய் இருப்பஎன் சிந்தையுள்ளேஏதாம் புவியில் பெறலரி தாவ எனக்கினியே” இந்த பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும். “பாத அம்புயத்தில் பணிவார் தமக்கு பல கலையும்வேதாந்த முக்தியும் தந்தருள் பாரதி வெள்ளி இதழ் பூசீத அம்புயத்தில் இருப்பாய் இருப்ப என் சிந்தையுள்ளேஏதாம் புவியில் பெறல் அரிது ஆவது எனக்கு இனியே” பாடலின் பொருளைக் காணலாம். “பாத அம்புயத்தில் […]

சரஸ்வதி அந்தாதி : 06

சரஸ்வதி அந்தாதி : 06 “மயிலே மடப்பிடி யேகொடி யேயிள மான்பிணையேகுயிலே பசுங்கிளி யேஅன் னமேமனக் கூரிருட்கோர்வெயிலே நிலவெழு மேனிமின் னேயினி வேறுதவம்பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனதுபொற் பாதங்களே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து வரும். “மயிலே மடப்பிடியே கொடியே இளமான் பிணையேகுயிலே பசுங்கிளியே அன்னமே மனக் கூர் இருள்க்கு ஓர்வெயிலே நிலவெழும் மேனி மின்னே இனி வேறுதவம்பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனது பொற் பாதங்களே” கம்பன் அன்னையினைப் போற்றி பாடும் இந்தப் பாடலினை இனி விளக்கமாகக் காணலாம். […]

சரஸ்வதி அந்தாதி : 05

சரஸ்வதி அந்தாதி : 05 “அருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத் தழகெறிக்கும்திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான்இருக்கோ துநாதனுந் தானுமெப் போதுமினி திருக்குமருக்கோல நாண்மல ராள் என்னை யாளு மடமயிலே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.“அருக்கு உதயத்திலும் சந்திர உதயம் ஒத்து அழகு எறிக்கும்திருக்கோல நாயகி செந்தமிழ் பாவை திசைமுகத்தான்இருக் ஓதும் நாதனும் தானும் எப்போதும் இனிது இருக்கும்அரு(ட்)கோல நாண் மலராள் என்னை ஆளும் மடமயிலே” இனிப் பாடலின் பொருளைக் காணலாம். முதல் வரி “அருக்கு […]

சரஸ்வதி அந்தாதி : 04

சரஸ்வதி அந்தாதி : 04 “இயலானதுகொண்டு நின்றிரு நாமங்க ளேத்துதற்குமுயலா மையாற்றடு மாறுகின்றே னிந்த மூவுலகும்செயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்குஅயலா விடாம லடியேனையும் உவந்து ஆண்டருளே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும். “இயலானது கொண்டு நின் திரு நாமங்கள் ஏத்துவத‌ற்குமுயலாமையால் தடுமாறுகின்றேன் இந்த மூவுலகும்செயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்குஅயலா(க) விடாமல் அடியேனனையும் உவந்து ஆண்டருளே” இனிப் பாடலின் பொருளைக் காணலாம். முதல் வரி “இயலானது கொண்டு நின் திரு நாமங்கள் ஏத்துவத‌ற்கு” எனத் […]

சரஸ்வதி அந்தாதி : 03

“உரைப்பா ருரைக்குங் கலைகளெல்லாம் எண்ணில் உன்னையன்றித்தரைப்பா லொருவர் தரவல்ல ரோதண் டரளமுலைவரைப்பா லமுதுதந் திங்கெனை வாழ்வித்த மாமயிலேவிரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும். “உரைப்பார் உரைக்கும் கலைகளெல்லாம் எண்னில் உன்னை அன்றிதரைப்பாரல் ஒருவர் தரவல்லோரோ தண் அரள முலைவரைப்பால் அமுது தந்து இங்கு எனை வாழ்வித்த மாமயிலேவிரைப்பா சடைமலர் வெண் தாமரை பதி மெல்லியலே” இனிப் பாடலின் பொருளைக் காணலாம். முதல் வரி “உரைப்பார் உரைக்கும் கலைகளெல்லாம் என்னில் உனை […]

சரஸ்வதி அந்தாதி : 02

சரஸ்வதி அந்தாதி : 02 “வணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்சுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனேபிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால்உணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கும் உரைப்பவளே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும். “வணங்கும் சிலை நுதலும் கழை தோளும் வனமுலை மேல்சுணக்கும் புதிய நிலவு எழும் மேனியும் தோட்டுடனேபிணக்கும் கருந்தட கண்களும் நோக்கி பிரமன் அன்பால்உணங்கும் திருமுன்றிலாய் மறை நான்கும் உரைப்பவளே” இனிப் பாடலின் விளக்கத்தைக் காணலாம். கம்பன் அன்னையின் தரிசனத்தைக் கண்டவன். […]

சரஸ்வதி அந்தாதி 01 : கடவுள் வாழ்த்து.

சரஸ்வதி அந்தாதி 01 : கடவுள் வாழ்த்து. எல்லாப் பாடலிலும் தெய்வத்தை வாழ்த்திப் பாடுதல் மரபு. ஆனால் கம்பன் திருவாழும்கோடு மகாராஜா எனும் சேர மன்னனிடம் உயிராபத்தில் சிக்கிவிட்ட நேரத்தில் பாடும் பாடல் என்பதால், இங்கு வழமையான வாழ்த்து இல்லை. கம்பன் எப்படியான ஆபத்தில் இருந்தான் என்பதையும், அவன் அன்னையிடம் தன்னைக் காக்கச் சொல்லி வேண்டிப் பாடினான் என்பதையும் கடவுள் வாழ்த்தே சொல்லிவிடுகின்றது. இனிப் பாடலை காணலாம். “ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்ஏய உணர்விக்கும் என்னம்மை – […]

சரஸ்வதி அந்தாதி – முன்னுரை.

சரஸ்வதி அந்தாதி – முன்னுரை. இந்துக்களின் தனிச் சிறப்புவாய்ந்த மொழி தமிழ், அது சிவபெருமானால் உருவாக்கப்பட்டு அகத்தியனாலும் தொல்காப்பியனாலும் முறையாக வகுக்கபட்டு மதுரையில் சிவனைத் தலைவனாகக் கொண்ட தமிழ்ச்சங்கத்தில் வளர்ந்த மொழி. அது உருவான நோக்கமே பரம்பொருளை இனிமையாகவும், அழகாகவும், உருக்கமாகவும் பாடவேண்டும் என்பதே. தெய்வமும் தனக்குரிய புலவர்களை அப்படித் தேர்ந்தெடுத்து உருவாக்கியே வந்தது. விநாயகப் பெருமானுக்கு ஒளவை வாய்த்தாள், முருகனுக்கு நக்கீரர் முதல் பலர் வந்தார்கள், கண்ணகி எனும் பகவதி இளங்கோவினை ஈர்த்துக்கொண்டாள். சிவபெருமான் சைவக்குரவர் […]

தசமஹாவித்யா 10 : கமலாத்மிகா.

தசமஹாவித்யா 10 : கமலாத்மிகா. இந்த அன்னை தசமஹா வித்யாவின் கடைசிப் படிநிலை. அதாவது எல்லா வரமும் பரிபூரணமான நிலையில் எல்லாம் கடந்த முழுநிலையில், ஒருவனைப் பரிபூரணமாக்கும் வரம் தருபவள், எல்லா வகையிலும் நிறைவு தந்து அந்த நிறைவின் அடுத்தக் கட்டமான முழுத் திருப்தியுடன் இந்த உலகில் இருந்து வெளியேறி பிரபஞ்சத்துடன் இணைவிக்கும் அந்தப் பெரு நிலையினைத் தருபவள் அன்னை. கமலாத்மிகா என்றால் கமலத்தில் அமர்ந்திருக்கும் நாயகி எனப் பொருள், அதாவது தாமரையில் அமர்ந்திருக்கும் நாயகி எனப் […]

தசமஹாவித்யா 09 : ராஜ மாதங்கி.

தசமஹாவித்யா 09 : ராஜ மாதங்கி. தசமஹா வித்யாவில் அடுத்து வருபவள் அன்னை மாதங்கி. சியாமளா தேவி என வழங்கபடுபவளும் இவளே, இந்தப் பிரபஞ்சத்தில் கோடான கோடி உயிர்கள் படைப்புக்கள் இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் இல்லாத ஒரு சிறப்பு மானிடருக்கு உண்டு. அது உணர்வுகளைத் தக்கபடி வெளிப்படுத்துவது, மானிட இனத்தின் சிறப்பு அதுதான். அப்படிச் சரியாகச் சிந்திப்பதும் சிந்திப்பதை வெளிப்படுத்துவதும் யார் சரியாகச் செய்வார்களோ அவர்கள் பெரும் இடம் அடைவார்கள். சரியாக உணர்ந்து அதைச் சரியாக வெளிப்படுத்தி மற்றவர்களை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications