பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அபிராமி ஆலயங்கள் 04 : மேல்மருத்துவகுடி ஐராவதேஸ்வரர் அபிராமி அன்னை ஆலயம்.

அபிராமி ஆலயங்கள் 04 : மேல்மருத்துவகுடி ஐராவதேஸ்வரர் அபிராமி அன்னை ஆலயம். அபிராமி அன்னை ஆலயங்களில் நான்காம் ஆலயமான இந்த ஆலயம் மயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது, தேவாரம் வைப்பு தலமான இந்த ஆலயத்தின் வரலாறு இந்திரனிட்ம இருந்து தொடங்குகின்றது. இந்திரன் பவனிவரும்போது துர்வாசர் சிவனுக்கு அர்ச்சனை செய்த மலர்மாலை ஒன்றைக் கொடுத்தார். அதை மிக ஏளனமாக பெற்றுக்கொண்ட இந்திரன் அதைத் தன் வெள்ளையானை மேல் வைத்தான், அதுவும் அலட்சியமாக அந்த மாலையினை இழுத்துப்போட்டுவிட்டு தன் போக்கில் சென்றது, […]

அபிராமி ஆலயங்கள் 03 : கொழையூர் அகத்தீஸ்வரர் ஆலயம்.

அபிராமி ஆலயங்கள் 03 : கொழையூர் அகத்தீஸ்வரர் ஆலயம். “திண்டீச்சரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளிதேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறைகொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல்குருகாவூர் வெள்ளடை குமரி கொங்குஅண்டர் தொழும் அதிகைவீரட்டானம்ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும்கண்டியூர்வீரட்டம் கருகாவூரும்கயிலாயநாதனையே காணலாமே” இப்பாடல் அப்பர் சுவாமிகளால் பாடப்பட்டது, இங்குக் கூழையூர் கூடல் தலம் எனச் சொல்லப்படும் தலமே இந்தக் கொழையூர் அகத்திஸ்வரர் ஆலயம். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அமைந்திருக்கின்றது இந்த அபிராமி ஆலயம், தேவார வைப்பு தலமான இந்த ஆலயத்தின் வரலாறு அகத்திய […]

அபிராமி ஆலயம் 02 : இலந்துறை அபிராமி ஆலயம்.

அபிராமி ஆலயம் 02 : இலந்துறை அபிராமி ஆலயம். அபிராமி அன்னை ஆலயங்களில் அடுத்த ஆலயம் இலந்துறை அபிராமி ஆலயம், கும்பகோணம் திருநீலக்குடி அருகே அமைந்துள்ள இந்த ஆலயம் காலத்தால் மகா தொன்மையானது. இலந்தை மரங்கள் நிறைந்த வனத்தில் உருவான ஆலயம் இது, அதனால் இலந்துறை என்றானது. எவ்வளவுக்குத் தொன்மையானது என்றால் வியாச மகரிஷி வந்து வழிபட்ட இடம் இது, வியாச மகரிஷி காலம் யுகங்களைக் கடந்தது. அக்காலத்தில் மானுடரின் வாழ்வு பல்லாயிரம் வருடங்கள் இருந்தது, அந்நேரம் […]

அபிராமி ஆலயங்கள் 01 : திருமலைராயன் பட்டணம் அபிராமி ஆலயம்.

அபிராமி ஆலயங்கள் 01 : திருமலைராயன் பட்டணம் அபிராமி ஆலயம். அபிராமி அன்னை ஆலயங்களில் முதல் தலம் இது. சோழநாட்டின் மிக முக்கிய ஆலயமான இவ்வாலயம் நாகப்பட்டினம் காரைக்கால் இடையே அமைந்துள்ளது, யுகங்களைக் கடந்த இந்த ஆலயம் வேத காலம் எனும் ரிஷிகள் மாபெரும் சக்தியுடன் வலம் வந்த காலத்தில் இருந்து துவங்குகின்றது. சோழவளநாட்டின் அன்றைய வனப்பகுதியில் இந்த ஆலயம் லிங்க வழிபாடாக துவங்கிற்று, அகத்தியர் போன்ற மாமுனிகளால் ஸ்தாபிக்கப்பட்டு வணங்கப்பட்ட ஆலயம் இது. அகத்தியர் இங்கு […]

அபிராமி ஆலயங்கள் – முன்னுரை.

அபிராமி ஆலயங்கள் – முன்னுரை. இந்த சியாமளா நவராத்திரியில் அன்னை ராஜ சியாமளா, மீனாட்சி அம்மனை வழிபடுதல் நன்று. அப்படியே அபிராமி அன்னையினை வழிபடுதலும் கூடுதல் சிறப்பு. திருக்கடையூரில் அன்னை அபிராமி தலம் எல்லோரும் அறிந்த ஒன்று, அங்குதான் மார்கண்டேயன் எமனிடம் இருந்து சிவபெருமானால் காப்பாற்றப்பட்டான். இன்னும் மன்மதனை சிவன் எரித்துப்போட்ட மயானமும் அங்கேதான் உண்டு. அதே திருக்கடையூரில்தான் அபிராமி பட்டர் வாழ்ந்து அன்னையே கதி எனக் கிடந்து, அதனால் சரபோஜி மன்னனால் பெரும் ஆபத்துக்குள் தள்ளப்பட்டு […]

பண்டரிபுரம் பாண்டுரங்கன் ஆலய ஆஷாட ஏகாதசி.

பண்டரிபுரம் பாண்டுரங்கன் ஆலய ஆஷாட ஏகாதசி : 01 பாரதம் என்பது கோவில்களின் நாடு, இந்த நாட்டின் ஒரே அடையாளம் அந்த ஆன்மீக ஆலயங்கள், அவை வெறும் கற்பனை அல்ல, காரணமில்லாமல் உருவானவை அல்ல, அவை ஒவ்வொன்றும் இந்த பிரபஞ்ச சக்தியே அந்த மகா பரம்பொருளே தேர்ந்து கொண்ட ஆலயங்கள் மக்களுக்கும் நாட்டுக்கும் காலம் காலமாய் அருள் வழங்க அவை தாங்களே இவற்றை தேர்நதெடுத்து கொண்டன, அவைகள் இந்த மக்களுக்கும் நாட்டுக்கும் காலம் காலமாய் அருள்பாலித்து சூட்சுமமாய் […]

விநாயகர் அனுபூதி : 46 to 50

விநாயகர் அனுபூதி : 46 “திண்தோள் சதுரும் திகழ்ஐங் கரமும்,வண்டார் குழலார் மகிழ்ந்தே மருங்கில்பண்டே வளர்கோ லமதைப் பணிவாய்க்கண்டேன்: களித்தேன்: கவலை இலனே!” பாடல் இப்படிப் பிரிந்து வரும். “திண் தோள் சதுரும் திகழ் ஐங்கரமும்வண்டார் குழலார் மகிழ்ந்தே மருங்கில்பண்டே வளர் கோலம் அதைப் பணிவாய்கண்டேன் களித்தேன் கவலை இலனே” உறுதியான நான்கு தோள்களுடனும் ஐந்து கரத்துடனும் வண்டாடும் குழலைக் கொண்ட தேவியருடன் இருபுறமுமிருக்க மிகப் பழமையான ஆதிகால தோற்றத்துடன் விநாயகப் பெருமான் இருக்கும் கோலத்தைக் கண்டு […]

விநாயகர் அனுபூதி : 41 to 45

விநாயகர் அனுபூதி : 41 “ம‌ங்கை வலபை மணவா ளன்அருள்பொங்கும் புனல்போல் பொழிந்தே புவனம்எங்கும் நிறைந்தே இருக்கின் றதுகண்!துங்கக் குணத்தீர்! புசிமின் தொழுதே” பாடல் இப்படிப் பிரிந்து வரும். “மங்கை வலபை மணவாளன் அருள்பொங்கும் புனல் போல் பொழிந்தே புவனம்எங்கும் நிறைந்தே இருக்கின்றது கண்துங்க குணத்தீர் புசிமின் தொழுதே” “விநாயகப் பெருமான் வல்லபை தேவியின் கணவர், அவரின் அருளிலே இந்த உலகம் செழித்து நிற்கின்றது. எங்கும் அவரின் கருணை வெள்ளமே நிரம்பியிருக்கின்றது. மாந்தர்களே! அவரின் அருளை அனுபவித்து […]

விநாயகர் அனுபூதி : 36 to 40

விநாயகர் அனுபூதி : 36 “கத்தும் தரங்கக் கடல்சூழ் புவியில்தித்தித் திடும்செந் தமிழ்மா லைசெயும்வித்தர் களின்தீ வினையை விலக்கும்அத்தித் தலையன் அருட்பார் வையதே” பாடல் இப்படிப் பிரிந்து வரும். “கத்தும் தரங்கக் கடல் சூழ் புவியில்தித்தித்திடும் செந்தமிழ் மாலை செயும்வித்தர்களின் தீ வினையை விலக்கும்அத்தித் தலையன் அருட்பார் வையதே” “கத்தும் கடல் சூழ்ந்த இந்தப் பூமியில் இனித்திடும் தித்திப்பான கவிதைகளை மாலையாய்ச் விநாயகப் பெருமானுக்குச் சூடும் கவிஞர்களின் தீ வினை எல்லாம் விலகும், அத்தி மலர்களைச் சூடிய […]

விநாயகர் அனுபூதி : 31 to 35

விநாயகர் அனுபூதி : 31 “அயில்கை உளநம் அறுமா முகற்கேமயிலூர் திதனை மகிழ்ந்தே அளித்தான்செயிர்தீர் அடியார் சிறப்பாம் வகையில்ஒயிலாய் நலம்தந்(து) உயர்த்தும் அவனே” பாடல் இப்படிப் பிரிந்து வரும் “அயில் கை உள நம் அறுமா முகற்கேமயில் ஊர்தி தனை மகிழ்ந்தே அளித்தான்செயிர் தீர் அடியார் சிறப்பாம் வகையில்ஒயிலாய் நலம் தந்து உயர்த்தும் அவனே” அயில் என்றால் வேல் எனப் பொருள். வேல் ஏந்திய முருகனுக்கு தன் மயில் வாகனத்தைக் கொடுத்து மகிழ்ந்தவர் விநாயகப் பெருமான். அப்படியான […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications