பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஸ்ரீசைலம் ஆலயம் – ஜோதிர்லிங்கமும் சக்திபீடமும்

ஸ்ரீ ப்ரமராம்பா சமேத ஸ்ரீமல்லிகார்ஜுனர் பாரதத்தின் எல்லா பாகங்களிலும் பிரசித்தியான சிவாலயங்கள் உண்டு, அவ்வகையில் தக்காணத்தில் பிராதனமான ஆலயம் ஸ்ரீசைலம் ஸ்ரீ ப்ரமராம்பா சமேத ஸ்ரீமல்லிகார்ஜுன ஆலயம் ஆந்திர மாகாணத்தில் அமைந்துள்ள அந்த ஆலயம் தமிழக சிதம்பரம் திருவண்ணாமலை போல் தனித்துவமானது, மகா பிர்சித்தியானது. ஸ்ரீசைலம் 12 ஜோதிர்லிங்கத்தில் முக்கியமானது மட்டுமல்ல, அன்னை சக்திக்குரிய சக்திபீடங்களில் அது கழுத்துபகுதி விழுந்த இடத்துக்கானது, அவ்வகையில் அது பெரிய சக்திபீடம் ஜோதிலிங்கமும் சக்திபீடமும் இணைந்த மூன்றாம் அதுதான். காசியும் ஜார்கன்ட் […]

சப்த விடங்கர் ஆலயங்கள் 04 / 08 : திருகாராயில்

ஸ்ரீ கைலாச நாயகி சமேத கண்ணாயிரம் நாதர் – குக்குட நடனம் திருவாரூருக்கு தெற்கே சுமார் 15 கல் தொலைவில் உள்ளது அந்த திருகாராயில் ஆலயம், அதுதான் சப்த விடங்கர் ஆலயத்தின் நான்காம் ஆலயம். இந்த தலத்தின் சிவபெருமான் கண்ணாயிரம் நாதர் என அழைக்கபடுகின்றார், அன்னையின் பெயர் கைலாச நாயகி காரை மரங்களுடன் அகில் மரங்கள் நிறைந்திருந்த இடம் காரை அகில் என அழைக்கபட்டு காராயில், காரோயில் என மாறி, திருகாராயில் என்றாயிற்று இதனை திருகாரவாசல் என்றும் […]

வராக துவாதசி / வராஹ ஜயந்தி

இன்று இந்துக்களின் வராக துவாதசி, இந்நாள் வராஹ அவதாரத்துக்குரியது. இந்துக்களின் 12ம் புராணம் வராஹ புராணம். அது இந்த அவதாரத்தின் பெரும் சிறப்பினைச் சொல்கின்றது. மூன்றாம் அவதாரமாக வந்த அந்த அவதாரமே பூமியினை மீட்டெடுத்தது. இரணியாக்ஷன் எனும் அரக்கனை அழித்து பகவான் பூமியினை மீட்டெடுத்த புராணம் அது. அர்ஜூனக்கும் கண்ணனுக்கும் நடந்த உரையாடல் போல பூமாதேவிக்கும் வராக கோல பகவானுக்கும் நடந்த உரையாடலும் தத்வார்த்தமானது ஆழமான ஞானமானது. இன்று அந்த அவதாரத்தை இந்துக்கள் நோன்பிருந்து வழிபடுவார்கள். இந்துக்களின் […]

நாச்சியார் திருமொழி : 51

அன்றுல கம்மளந் தானையுகந்தடி… ஆண்டாளுக்கு கண்ணன் நினைவு மிகுந்து பெருகிற்று, அவன் நினைவிலே வாடிக் கிடந்தவள் அவனைத் தேடிக் கொண்டே இருந்தாள்; அவன் வரவில்லை. அவளுக்கு தூக்கம் வரவில்லை, அதிகாலை எழுந்தவள் வீட்டின் மாடத்தில் நின்று கொண்டிருந்தாள், மெல்லிய குளிர்காற்று பனியுடன் கலந்து வீசிக்கொண்டிருந்தது, சேலை முந்தானையினை கழுத்தை சுற்றி போர்த்திக் கொண்டே வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் நினைவெல்லாம் கண்ணனாய் இருந்தான். தூரத்தில் குயில் கூவத் தொடங்கிற்று, அது கூவமும் தொலைவில் அதன் ஜோடிக் குயில் […]

மாதவ சதாசிவ கோல்வால்கர்

காலத்தால் வரும் ஒரு சிலரே காலத்துக்கும் நிற்கும் அடிப்படை அஸ்திபாரங்களை இடுவார்கள், அவர்கள் வாழ்ந்த காலத்தில் செய்த போராட்டமெல்லாம் மறைக்கபடலாம், அவர்கள் முன்னெடுத்த காரியமெல்லாம் அன்று புறக்கணிக்கப் பட்டிருக்கலாம் ஆனால் அவர்கள் விதைத்த சத்தியவிதைகள் பெரும் மரமாகும் போது, அவர்கள் கட்டிவைத்த அஸ்திபாரம் பெரும் கோபுரமாகும் போது, அவர்கல் கைகாட்டிய வழிகள் பெரும் சாலைகளாகும்போது, அவர்கள் ஏற்றிய தீபம் பற்றி எரிந்து ஒளிகொடுக்கும் போது அவர்கள் எப்படியான பெரும் பிறப்பு என்பதும் அவர்கள் ஏற்றிவைத்த ஜோதி எப்படி […]

மரித்துவிட்டார் நவ்லோனி

சில நாடுகளின் தலைவிதி எக்காலத்திலும் மாறாது, ஜாதகமோ விதியோ இல்லை அவர்கள் சாபமோ எதுவோ என ஒன்றை நம்பித்தான் தீரவேண்டி இருக்கின்றது இந்தியாவின் மேற்கு பக்கமாக இருந்து பின் தனிநாடாக பிரிந்த இடம் பாகிஸ்தான். அங்கேதான் மொகஞ்சதாரோ ஹரப்பா என மண்மூடிபோன இடங்கள் உண்டு, அன்றில் இருந்தே ஒரு சாபம் அங்கே நிலவி பின்னாளில் அது ஆப்கானிய குழப்பமாகி பின் தனி இஸ்லாமிய நாடானார்கள் இந்த 75 வருட அவர்கள் வரலாற்றில் ஒரு அரசு கூட ஐந்துமுறை […]

சப்த விடங்கர் ஆலயங்கள் : 03 / 08 திருநாகை

நாகப்பட்டினம் நீலாயதாட்சி சமேத சுந்தர விடங்கர் சோழநாட்டின் கடற்கரையின் நாகப்பட்டினத்தில் அமர்ந்திருக்கும் அந்த சிவனுக்கு பெயர் காயாரோகணேசுவரர், அந்த ஆலயம் மிக மிகப் பழமையான ஒன்று. அன்னையின் பெயர் நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி. நாகப்பட்டினத்திற்கு பல பெயர்கள் உண்டு. காயாரோகணம், ஆதிபுராணம், சிவராசதானி, பார்ப்பதீச்சரம், அரவநகரம் என அக்காலத்தில் இருந்தே பலவகையான பெயர்கள் கொண்டு அந்த தலம் அழைக்கப்பட்டது. நாகர்கள் அங்கே வழிபாடு செய்த இடம் ஆகையால் நாகப்பட்டினம் எனப் பெயர் வந்தது என்றொரு காரணமும் உண்டு. அந்த […]

திருமுருகாற்றுப்படை : 09

திருமுருகாற்றுப்படை : 09 (126 முதல் 137 வரிகள்) சீரை தைஇய உடுக்கையர் சீரொடுவலம்புரி புரையும் வால்நரை முடியினர்மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல். பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடுசெற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடுகடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை யாவதும் அறியா இயல்பினர் மேவரத்துனியில் காட்சி முனிவர் முற்புக” இனி பாடலின் பொருளைக் காணலாம். நக்கீரர் திருப்பரங்குன்றம், திருச்செந்தூரை அடுத்து திருஆவினன்குடி […]

வசந்த பஞ்சமி

இன்று வசந்த பஞ்சமி வசந்த காலத்தில் வரும் நவராத்திரியின் பஞ்சமி திதி வசந்த பஞ்சமி என கொண்டாடபடும் என்றாலும் சில கணக்கீடுகள் அடிப்படையில் இந்த சியாமளா நவராத்திரியின் பஞ்சமி வசந்த பஞ்சமியாக கொண்டாடப்படுகின்றது. இந்தப் பண்டிகை சாதாரணம் அல்ல, மிக மிக முக்கிய பண்டிகையாக தேசமெங்கும் ஒரு காலத்தில் இருந்தது, பின் பவுத்த குழப்பம் அந்நிய படையெடுப்பு என பல குழப்பங்களால் சுருங்கிவிட்டாலும் இன்று மெல்ல மெல்ல அது மீண்டெழுந்து வருகின்றது. இந்தக் கொண்டாட்டம் முன்பு பாரதம் […]

சப்த விடங்கர் ஆலயங்கள் : 02 / 08 திருநள்ளாறு

ஸ்ரீ நாகவிடங்கர் திருநள்ளாறு நாகவிடங்கர் நள தமயந்தி சைவ தலங்களில் மிக முக்கியமான தலமான இந்த திருநள்ளாறு தலத்தில் தர்ப்பாரண்யேஸ்வரர் எனும் பெயருடன் சிவன் வீற்றிருக்கின்றார்,  அவரோடு வீற்றிருக்கும் அன்னைக்கு பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள் எனப் பல பெயர்கள் உண்டு. இந்த ஆலயம் காலப்போக்கில் திருநள்ளாறு என்றாலே சனீஸ்வரனுக்கானது என மாறிப்போனதெல்லாம் மிக தவறான நம்பிக்கை அல்லது பிரச்சாரம். அது மிக மிக சக்திவாய்ந்த சிவதலம். சிவனும் அன்னையும் அருள் வழங்கும் பெரும் சக்திமிக்க தலம். சனீஸ்வரனின் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications